Posted in இலங்கை செய்திகள்

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மூன்றாவது ஊசி

இலங்கையில் அறுபது வயதுக்கு மேற்பட்ட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும்

மூன்றாவது தடுப்பூசி செலுத்த படவுள்ளது என அறிவிக்க பட்டுள்ளது


பரவி வரும் நோயின் பரவலை தடுக்கவும் ,உயிர்களை காப்பாற்றவும் இந்த நடவடிக்கை

முன்னெடுக்க பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது

    Posted in இலங்கை செய்திகள்

    இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

    இலங்கையில் கொரனோ தாக்குதலில் சிக்கி 13,821 பேர் மரணம்

    இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இது வரை
    13,821 பேர் மரணமாகியுள்ளனர்

    மேலும் 544,013 பேர் பாதிக்க பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

    Posted in இலங்கை செய்திகள்

    பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

    பொல்லால் அடித்து பெண் ஒருவ படு கொலை

    வட்டவளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மவுன்ஜீன் தோட்டத்தில் பொல்லால் அடித்து மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

    இச் சம்பவம் நேற்று (04.11.2021) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

    அயல் குடும்பத்திற்கும் தனது குடும்பத்திற்கும் ஏற்பட்ட சண்டையை விலக்குவதற்கு சென்ற தாயே இவ்வாறு பொல்லால் அடிப்பட்டு இறந்துள்ளார்.

    இவ்வாறு உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சந்திரசேகரன் கலாதேவி வயது 57 என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

    சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்தனர்.

    உயிரிழந்த பெண்ணின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

    ஹட்டன் நீதிமன்றத்தின் நீதவானின் மரண விசாரணைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

    கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

    இச்சம்பவம் குறித்து அட்டன் கைரேகை அடையாள பிரிவு மற்றும் வட்டவளை பொலிஸார் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

      பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றிற்கு தயாராகும் ஆசிரியர்கள்

      அனைத்து தொழிற்சங்கங்களும் ஒன்றிணைந்து எதிர்வரும் 9 ஆம் திகதி பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக ஆசிரியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

      அதிபர் – ஆசிரியர்கள் சங்கங்களினால் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நேரத்திற்கு வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என குறித்த சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

      எமது அனைத்து போராட்டங்களும் ஒன்றிணையும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அரசு புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

      Posted in இலங்கை செய்திகள்

      ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

      ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

      தீபாவளி தினத்தன்று ரஜனி நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது
      இதில் ரஜனி அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து பேசுவது வழமை


      அதில் ஹிட்லர் ,முசோலின் ,இடிஅமீன் போல நீயும் சாவாய் என்கிறார் ,அது இலங்கையில் பெரும் தமிழ் இனப்படுகொலைகளை நடத்திய மகிந்தாவுக்கு தெரிவிக்க பட்ட சொல்லாக உள்ளது

      இதே ரஜனி இலங்கை சென்று மகிந்தாவுடன் குலாவி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

        Posted in இலங்கை செய்திகள்

        கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்

        கொரனோவுக்கு இலங்கையில் 15 பேர் மரணம்

        இலங்கையில் நேற்றைய (03) தினம் மேலும் 15 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

        சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

        திணைக்களம் இன்று (04) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது:

          Posted in இலங்கை செய்திகள்

          மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

          மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை

          நாட்டில் 8 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.

          கண்டி, நுவரெலியா. மாத்தளை, பதுளை, இரத்தினபுரி, களுத்துறைஇ காலி மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் இததொடர்பில் அவதானத்துடன் செயல்பட வேண்டுமென்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைம் மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

          தற்சமயம் நிலவும் சீரற்ற காலநிலையினால் மலையக பகுதிகளில் மண்சரிவு, மண்மேடுகள் சரிவு போன்ற அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கான அறிகுறிகள் பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

          இவ்வாறான அறிகுறிகள் தென்பட்டால் உரிய பகுதியை விட்டு பாதுகாப்பான பகுதிகளுக்குச் செல்வது அவசியமாகும் என்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

          பொலிசாரும் முப்படையினரும் மாவட்ட பிரதேச செயலகங்களும் அனர்த்த நிலையை எதிர்கொள்ள தயார் நிலையிலுள்ளன

          Posted in இலங்கை செய்திகள்

          வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்

          வெடித்து சிதறிய கடை – ஓடிய மக்கள்

          வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் உள்ள சிற்றூண்டிச்சாலை ஒன்றில் வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

          சம்பவத்தில் இருவர் காயமடைந்து மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          சிற்றூண்டிச்சாலையின் எரிபொருள் சிலிண்டர் வெடித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

          சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்

            வாகனத்தால் மக்களை இடித்து கொன்ற சிறுவன்


            இன்று காலை வெலிசர பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

            கொழும்பில் இருந்து நீர்கொழும்பு நோக்கி, குறித்த சிறுவனால் செலுத்தப்பட்ட அதிசொகுசு வாகனம், வீதியை விட்டு விலகி எதிர் திசையில் பயணித்த கார், ஓட்டோ மற்றும் இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

            ‍வேகக்கட்டுப்பாட்டை இழந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

            விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவரே உயிரிழந்துள்ளதுடன், இந்த விபத்து தொடர்பில் மஹபாகே பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

              Posted in இலங்கை செய்திகள்

              தீபாவளியை புறக்கணித்த மக்கள்

              தீபாவளியை புறக்கணித்த மக்கள்

              நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாகவும் பொருள்களின் விலை ஏற்றம் மற்றும் கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், மன்னார் மாவட்டத்தில், தீபாவளி கொண்டாட்டங்களில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

              குறிப்பாக, பொருள்கள் மற்றும் ஆடைகளின் விலைகள் அதிகரித்துள்ளமையால், பொருள்களின் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

              மேலும், தொடர்ச்சியாக மன்னாரில் சீரற்ற காலநிலை நிலவி வருகின்றமையால், இம்முறை தீபாவளி திருநாள் கொண்டாட்டங்களில், மக்கள் அதிகம் ஆர்வம் காட்டவில்லை.

              அதேநேரம், கொரோனா தொற்று பரவல் காரணமாக, கோவில்களில் சிறிய அளவிலான விசேட

              வழிபாடுகள் இடம்பெற்றதுடன், மக்கள் குறைந்த அளவிலேயே கோவில்களுக்குச் சென்று பூஜை வழிபாடுகளில் ஈடுபடுவதை அவதானிக்கக் கூடியதாக உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

              பொருட்களின் கட்டுப்பாட்டு விலை நீக்கம்

              அத்தியாவசிய பொருட்கள் சிலவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த அதிகபட்ச சில்லறை விலை நீக்கப்பட்டுள்ளது.

              அத்துடன், அது தொடர்பான அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

              இதன்படி, சீனி, பருப்பு, பாசிப்பயறு, நெத்தலி, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், ரின் மீன்,

              கடலை, கோதுமை மா, கருவாடு, தேங்காய், கோழி இறைச்சி, பால்மா மற்றும் சோளம் ஆகியவற்றின் அதிகபட்ச சில்லைறை விலைகளே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளன.

                Posted in இலங்கை செய்திகள்

                தமிழன் இறந்த நாளை கொண்டாடும் தமிழர்கள்

                தமிழன் இறந்த நாளை கொண்டாடும் தமிழர்கள்

                இலங்கையில் தமிழர்கள் சிங்களவர்கள் ஆகிய இரண்டு தேசிய இனங்கள் மோதல் நிலையில் இருந்து வருகின்றனர் .

                ஆனால் இவர்கள் இருவரும் தீபாவளி பண்டிகையை ஒன்றாக இணைந்து கொண்டாடி

                வருகின்றனர்,இது எவ்வாறு சாத்தியம் என்பதை கூட அறியாது தமிழர்கள் தமது தமிழ் அரசனை

                அழித்த அதே நாளில் சிங்களவர்கள் போல கொண்டாடி வருகின்றனர்

                அதற்கு ஆளும் இனவெறி அரசு தமிழர் பாடசாலைகளிற்கு விடுமுறை அளித்து ஊக்கமளித்துள்ளது குறிப்பிட தக்கது

                  Posted in இலங்கை செய்திகள்

                  முகமலையில் 316 ஏக்கர் காணிவிடுவிப்பாம் – இராணுவம்

                  முகமலையில் 316 ஏக்கர் காணி விடுவிப்பாம் – இராணுவம்

                  சிங்கள அரச பயங்கரவாத இராணுவத்தால் ஆக்கிரமிக்க பட்ட தமிழர் பகுதிகளில் உள்ள 316 ஏக்கர் காணியினை தாம் விடுத்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

                  முகமாலை கிராமசேவர் பிரிவில் உள்ள காணிகள் இவ்வித விடுவிக்க பட்டுள்ளனவாம்

                  இந்த பகுதியில் இராணுவத்தின் முன்னரங்க வேலிகள் அமைக்க பட்டு உக்கிர சமர் இடம்பெற்ற பகுதி என்பது இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in இலங்கை செய்திகள்

                    தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ

                    தமிழீழத்தை கண்ட பின்னரே நான் மரணிப்பேன் செல்லப்பா உருக்கம் – வீடியோ

                    தமிழீழத்தின் தேசிய பாடல்களில் முதல்வராக விளங்கி வரும் செல்லப்பா அவர்கள்

                    மரணமானதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பட்டு வந்தன ,ஆனால் தற்போது அவர்

                    உயிருடன் உள்ளேன் என நேரலையில் தோன்றி செய்தியை வெளியிட்டுள்ளார்

                    தமிழீழத்தை கண்டே பின்னரே நான் மரணிப்பேன் என செல்லப்பா உருக்கம்

                    click here watch full video

                    video

                      Posted in Uncategorized

                      சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்

                      சாரதியை அடித்து துன்புறுத்தி நிர்வாணமாக்கிய சிங்கள பொலிஸ்

                      இலங்கையில் ஆளும் கோட்டபாய அரசில் சாரதி ஒருவர் கைது செய்ய பட்டு துன்புறுத்த பட்டு நிர்வாணமாக்க பட்ட விடயம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      மேற்படி சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் .

                        Posted in Uncategorized

                        வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

                        வேகமாக பரவும் நோய் – மக்களுக்கு எச்சரிக்கை

                        கிழக்கு மாகாணத்தின் சில இடங்களில் குறிப்பாக ஓட்டமாவடி, வாழைச்சேனை மற்றும் ஏறாவூர் பகுதிகளில் இருந்து வயிற்றோட்டம் காரணமாக அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

                        சிறுவர்கள் மாத்திரம் இன்றி பெரியவர்களும் இதனால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இது தொடர்பில் அவதானம் தேவை என கிழக்கு பல்கலைக்கழக மருத்துவ பீட சிரேஷ்ட

                        விரிவுரையாளரும் மட்டு. போதனா வைத்தியசாலையின் விசேட குழந்தை நல வைத்திய நிபுணருமான டொக்டர் விஜி திருக்குமார் தெரிவித்தார்.

                        அவர் மேலும் தெரிவிக்கையில்: “இதன் அறிகுறிகளாக காய்ச்சல், வாந்தி மற்றும் வயிற்றோட்டம்

                        காணப்படும். சில சமயம் இரத்தம் கலந்த சளியுடன் வயிற்றோட்டம் காணப்படும். இது ஒருவகை பற்றீரியா தொற்றினால் ஏற்படுகிறது.

                        “சில சமயம் வயிற்றோட்டம் இல்லாமல் அல்லது குறைவான வாந்தி, வயிற்று வலி மற்றும் வயிறு ஊதுதல் போன்ற குணங்குறிகளுடன் தோன்றலாம்.

                        “சிறுவர்கள், உணவு மற்றும் நீர் அருந்துவது குறைவாகவும் நீர் இழப்பு அதிகமாகவும் இருப்பதால் சோர்வு மற்றும் மயக்க நிலை ஏற்படும்.

                        “எனவே, இவ்வாறான அறிகுறிகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் வைத்தியசாலையை நாடுவது அவசியம்.

                        “மேலும், கொரோனா தொற்றின் பின் சிறுவர்களுக்கு ஏற்படுகின்ற Miss-C எனப்படும் பல்தொகுதி அழற்சி நோய் நிலையின் போதும் காய்ச்சல் மற்றும் வயிற்றோட்டம் போன்ற அறிகுறிகள்

                        தோன்றும். எனவே, உங்கள் குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கு காணப்படுமாயின் விரைவாக வைத்தியசாலையை நாடுதல் சாலச்சிறந்தது” என்றார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை

                          செல்லப்பா மரணமானதாக போலியான செய்தி பரப்பல் – குடும்பத்தினர் கவலை

                          தமிழத்தின் தேசிய குரலாக ஒலித்து வரும் பாசறைப்பானார் செல்லப்பா அவர்கள்


                          மரணமானதாக போலியான செய்திகள் பரப்ப பட்டு வருகின்றன


                          அவர் உடல் நலம் குன்றி இருந்தமைஉண்மை தான் ஆனால் தற்போது அல்ல எனவும் ,வேண்டும்

                          என விஷமிகள் திட்டமிட்டு இவ்வாறான செய்திகள் பரப்ப பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் நமக்கு
                          தெரிவித்தனர்

                          நலமுடன் ஐயா அவர்கள் உள்ளது மிக பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,விரைவில் பல

                          பாடல்களை அவர் நமக்கு வழங்குவார் என எதிர்பார்க்கலாம்

                            Posted in Uncategorized

                            கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள் – பறந்த புலிக்கொடி

                            கோட்டாவை ஓடவைத்த தமிழர்கள் – பறந்த புலிக்கொடி

                            பிரிட்டன் ஸ்கொட்லாந்து கிளாஸ்க்கோ பகுதிக்கு வருகை தந்த இலங்கை அதிபரும் தமிழ் இன


                            படுகொலையாளியுமான கோட்டாயாவுக்கு எதிராக ஆயிரக்கணக்கில் தமிழர்கள் திரண்டு தமது எதிர்ப்பினை தெரிவித்தனர்

                            இவ்வேளை அவரை தூக்கில் போடு என கோஷங்கள் முழங்கின ,இது கோட்டாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது ,


                            புலிகளின் செயல் திறன்களை மழுங்கடித்து விட்டதாக ஏப்பம் இட்ட இவருக்கு இந்த மக்கள் ஒன்று கூடல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                            அங்கு திரண்ட மக்களை சிங்கள உளவுத்துறை படம் பிடித்து சென்றுள்ளதாம்

                              Posted in இலங்கை செய்திகள்

                              இரண்டு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல் – பெரும் விபத்து

                              இரண்டு ரெயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதல் – பெரும் விபத்து

                              இரண்டு புகையிரதங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              ராகம மற்றும் பேரலந்த புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

                              பாரிய அளவில் எந்தவொரு விபத்தும் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

                                மாட்டு திருடர்களை மடக்கிய காவல்துறை

                                திருகோணமலை, உப்புவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சர்தாபுர பிரதேசத்தில் சிறிய

                                லொறியொன்றில் நேற்று (31) அதிகாலை 4.30 மணியளவில் இறைச்சிக்காக கடத்திச் செல்லப்பட்ட 16 மாடுகளை தாம் மீட்டுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

                                அத்தோடு, மாடுகளை ஏற்றிச் சென்ற லொறி பரிமுதல் செய்யப்பட்டு, லொறியின் ஓட்டுநரையும் உதவியாளரையும் கைதுசெய்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

                                மீட்கப்பட்ட 16 மாடுகளில் 10 ஆண் மாடுகளும் 6 பசுக்களும் அடங்குவதாகவும் கைது

                                செய்யப்பட்டவர்களையும் மீட்கப்பட்ட மாடுகளையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் உப்புவெளி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்