Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என் மனதை பறித்தவள்…!

என் மனதை பறித்தவள்…!

கிளிநொச்சி சந்தையில
கிளியே உன்னை கண்டேனே …
மாம்பழத்தை உண்ணையிலே
மனதை தொலைத்தேனே ..

செவந்த உதட்டினிலே
செந்தமிழ் உதிரையில …
பார்த்து வியந்தேனே
பைங்கிளியே மகிழ்ந்தேனே ….

கூவி தமிழ் பாட
குலைந்து தோகையாட…
மெலிந்த பூவழகே
மெல்ல எனை இழந்தேனே …

கண்ணால மணியடித்து
காதல் தூது விட்டாய் …
பேரழகே வாடுகிறேன்
பேரன்பை தேடுகிறேன் ….

ஒரு நாளு மணவறையில்
ஒண்ணாகும் வேளையில் …
சொல்லத்தானே போறேன் – அடி
சொர்க்கத்தானே போறாய் ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -07/04/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

மனிதா காப்பாற்று ….!

மனிதா காப்பாற்று ….!

மரங்களின் வியர்வையில்
மழை வர கண்டேன் …
மனித சிந்தை
மரக்கொலை அதிர்ந்தேன் ….

வாழ காற்றை
வழி தரும் மரத்தை
கொன்ற மனிதா – உன்
கொலையை எதிர்த்தேன் ….

கொஞ்சம் எண்ணாய் .?
கொள்கை கொள்ளாய் …?
இயற்கை அழித்து
இன்றென்ன காண்பாய் …?

மலைகளின் உயர்வில்
முகில்களின் உரசல் …
பனி தர கண்டேன்
பளிங்கு நீர் உண்டேன் ….

என்னை காக்கும்
என் வளம் அழித்து …
உன் உயிர் கொல்லும்
ஊழியம் அகற்று ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -06/04/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

வழி கொடு இறைவா ….!

வழி கொடு இறைவா ….!

கண்ணீர் உதிர
கைகள் தொழுதேன் …
கடவுள் என்றால்
கருணை காட்டு …

விந்தை உலகில்
வீசி எழ …
சிந்தை புகுந்து
சிறகு கட்டு …

நோதல் தாங்கி
நொந்து வெந்தேன் …
கிண்டல் செய்தார்
கிலி கொள்ள வை …

கந்தல் கிழிய
கருணை காட்டு …
கண்ணீர் துளியை
கையால் தட்டு …

உன்னில் வெறியன்
உந்தன் மறவன் …
இன்று நிமிர
இறைவா காட்டு …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -04/04/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னை மறந்தேன் ஓடிவிடு …!

உன்னை மறந்தேன் ஓடிவிடு …!

பள்ளி வந்த பருவத்தில
பார்த்த உந்தன் பூ முகத்தை …
நெஞ்சை விட்டு பறித்ததென்ன..?-என்
நெஞ்சை வெட்டி கிழித்ததென்ன …?

கலரு பார்த்து ஆளை பார்த்தா
காதல் நிலைக்காது ….
மனசு பார்த்து ஆளை கோர்த்தா
மகிழ்வு குறையாது ….

இதயம் கிழித்து
இன்முகம் பறித்து …
கண்டாய் என்ன
கருங் குயிலே …?

முன்னே உள்ள கண்ணாடியில் – உன்
முகம் பார்க்கலையா ..?
என்ன வந்து இன்று உரைத்தாய்
ஏளனங்கள் நீயா செய்தாய் …?

பக்கம் இருக்கையில
பாசம் புரிவதில்லை ….
விட்டு பிரிந்த பின்ன
விடயம் புரிந்து பயணில்லை…

அறியாத சிந்தையில
ஆள் மனதை அறுத்தவளே ….
அதை எண்ணி இன்றென்ன
அழுது களைத்தவளே ….?

ஆயிரமாய் கனவு வளர்த்து
ஆசைகளை தேக்கி வைத்து …
உனை தாங்கி நடந்தவன்
உள்ளம் வதைத்தவளே ….

நீயழுது பயனில்லை -என்
நினைவில் நீயில்லை …
பெரும் வலிகள் தந்தவளே -உன்
பேய் மனம் நெஞ்சில் இல்லை ….!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -03/04/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

என் மனதில் நீ இல்லை ….!

என் மனதில் நீ இல்லை ….!

தொடர் வண்டி வேகத்திலே
தொட்டு பார்க்க வருபவளே …
மிதி வண்டி சாலையிலே
மிதித்து போக எண்ணுறியோ …?

கூடை பந்தாய் எனை எறிய
குயிலே என்ன கூடாது …
மயிலை போல தோகை விரித்தா
மயங்கி வீழ மாட்டாது ….

புல்லை மேயும் பனித்துளியாய்
புன்னகை வீச கூடாது ….
பல்லை காட்டி நீயும் வந்தா
பாவை நானும் மடிவேனோ …?

உன் எண்ணத்தில் மாற்றமில்லை
உன்னை எண்ண மாட்டேனே …
தங்க தேர் உடல் அழகில்
தங்கமே மயங்கிட மாட்டேனே …

என்ன செய்தால் நான் வருவேன் – உன்
எண்ணத்தில கண்டு பிடி …..
கண்ண குழி சிரிப்பழகே
கண்டு பிடி – நல்ல நண்டு பிடி ….

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -01/04/2019

Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

அழுகின்ற காதலி

அழுகின்ற காதலி

இரவின். மறைப்பினிலே
இணைவோமா ஓரத்திலே ..?..
வாலிப தேவைகளை
வா தனிப்போம் மோகத்திலே ..

ஆழம் நீயும் பார்க்க
அடி வயிறு நோக ….
வலியால் நானும் துடிப்பேன்
வாந்தி நானும் எடுப்பேன் ….

வேணாம் என்னை விட்டு விடு
வேக வைத்து கொன்று விடு ….
சத்தமில்லா செத்து விட்டால்
சங்கதிகள் தெரியாதே ….

அக்கம் பக்கம் கேலியாக
அன்பே பேசாதே ….
பெற்றவங்க நெஞ்சங்களும்
பெரும் தீயாய் ஏரியாதே ….

உன் மேலே நேசம் வைத்தேன்
உருண்டு அழுதிடவா ..?
என் உயிர் மன்னவனே
என்னை கொஞ்சம் புரிந்து விடு …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -29/03/2019

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நீ வந்தால் போதும் …!

    நீ வந்தால் போதும் …!

    சிங்கராஜா வனமா நீ
    சிக்கெடுக்க வரவா நான் ..?
    பாய் விரிக்கும் புல்வெளியை
    பாவை சுருட்டி தரவா …?

    ஆளை உண்ணும் சிறுத்தை கூட
    அக்கம் ,பக்கம் இருக்குது ….
    அதை அறியா வந்து இங்க
    ஆடும் மயில் சிக்கி தவிக்குது ….

    தோகை இல்லா பெண் மயிலே
    தோகை நானும் தந்திடவா …?
    ஆவி . உடல் அத்தனையும்
    அடியே உன்னில் வைத்திடவா ..?

    என்ன மானே கலக்கம்
    ஏனிந்த தயக்கம் …?
    ஊரை தூக்கி தூர வீசு
    உறவே என்னில் ஏறி மூசு ….

    வந்தவர் ஆயிரம் வழியில் சொல்வார்
    வலிகளை அள்ளியே மேனியில் எறிவார் …
    நின்று கேட்டால் நீயும் அழிவாய்
    நிலை குலைந்து உயிர் விடுவாய் ….

    ஊர் பேச்சு வீண் பேச்சு
    உள்ளம் தட்டு வரும் வீச்சு ….
    உன்னை நீயே நம்பு
    உயிர் தரும் தென்பு ….!

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -28/03/2019
    ( சிங்கராஜா வனம் இலங்கையின் மிக பெரும் முதல் காடு )

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    உன்னை தேடுதே உள்ளம் …!

    உன்னை தேடுதே உள்ளம் …!

    பொங்கு கடலென தங்கு தடையின்றி
    எங்கும் அலைந்தவன் – பகை
    தங்கு தடையின்றி வந்த வழிகளை
    நெஞ்சு நேர் நின்று அறைந்தவன் …..

    கொன்று பகை உடல் தாங்கியே – வந்து
    வெற்றி சொன்னவன் -பகை
    தாங்கியே வந்த கனரகம் அள்ளியே
    ஆடி மகிழ்ந்தவன் …

    லீமா என்றால் களமும் அதிரும்
    இலைகள் கூட எழுந்து தாக்கும் ….
    புல்லு கூட புலியாகி மிரட்டும்
    புன்னகை சிந்தி போர் களம் ஆடும் …

    குண்டு கூட கொல்ல அஞ்சி
    ஓடி திரிந்தவன் – இன்று
    கொடிய நோய் தாக்கி
    வீழ்ந்து மடிந்தவன் ……

    அண்ணன் அழைக்கும் வீர தளபதி – பகை
    அஞ்சி நடுங்கும் மூத்த தளபதி …
    பால்றாஜ் அண்ணா நீயும் வீழ்ந்தாய்
    பாதியிலே ஈழம் இழந்தாச்சு …….!

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -26/03/2019

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    பகை சிதற களம் வெடிக்கும் ….!

    பகை சிதற களம் வெடிக்கும் ….!

    மீசை முறுக்கி கொடியை தூக்கு
    மீள் எழுவோம் பகையை தாக்கு ….
    வந்தேறி மண்ணை ஆள்வதா …?
    வரிப்புலி சும்மா இருப்பதா …?

    வேவு எடுப்போம்
    விரைவாய் தடுப்போம் ….
    ஆண்ட மண்ணை மீட்டு வருவோம்
    ஆடு தமிழா பாடு தமிழா ….

    உரிமைக்காகவே உயிர்கள் ஆயிரம்
    உறைந்த மண்ணடா …
    உயிர் தந்தவர் நெறிகள் வாழ
    உயிர்த்தே வருவோம் வாழ ….

    இடர்கள் ஆயிரம் கண்டவர் நாங்கள்
    இதையும் தாண்டி நிமிர்ந்தவர் நாங்கள் …
    சோதனை ஆயிரம் வேதனையாகலாம்
    சோடனை கதைகளும் கூடி ஆழலாம் ..

    வென்றே தீருவோம் – ஈழம்
    கண்டே தீருவோம் ….
    இடையில் பெரும் அமைதி
    இல்லையடா வீழ்ச்சி …..!

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -24/03/2019

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நான் வாழ -நீ வந்தா போதும் …..!

    நான் வாழ -நீ வந்தா போதும் …..!

    ஆழி பேரலையா
    அடி மனசு சுத்துதடி …
    ஆளு மிரளும் பேயா
    அடி உன் நினைவு கத்துதடி …

    பக்கம் வந்தா போதும் – நான்
    பளிங்கா மிளிருவேன் …
    தூக்கதில ஒழுகும் நிலவா – உன்னை
    துரத்தி வருவேன் ….

    வெட்கமில்லை சொல்ல எனக்கு – அடி
    வேணும் நீ எனக்கு ….
    என்ன விலை சொல்லு
    எண்ணி கட்டிடுவேன் பில்லு ….

    காற்று போல தட்ட
    கரைகிறேன் பனியா …
    மூச்சு முட்ட பேச
    முன்னே தவிக்கிறேன் தனியா …

    என்ன வேணும் சொல்லு
    ஏற்று வாங்கி தருவேன் நானு …
    நீ வந்தா போதும்
    நிலவே நீ என் தேனு ….

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -22/03/2019

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நான் ஆட நீ வா …!

    நான் ஆட நீ வா …!

    உடையாதே பூவே
    உன்னை சூடவா …?
    உள்ளத்தில கோயில் கட்டி
    உன்னை வணங்கவா …?

    ஒழுகும் நிலவொளியில்
    ஓடி பாடவா ..?
    உன்னை நான் விரட்ட
    என்னை நீ மிரட்ட …

    கோயில் மணி ஓசையில
    கொழுந்து காற்றினிலே …..
    ஆனந்தம் பிறக்குமே
    அதிகாலை உதிக்குமே ….

    தேன் சிந்தும் இனிமையில
    தேகம் குளிர மனம் மகிழ ….
    தந்தனா பாட்டு தான்
    தாளமிடும் நேரம் தான் ….

    கண்ணே கவலை விடு
    காதலே உயிர் கொடு ..
    நாளுமே ஊர்கோலம் தான்
    நாள் திசையும் எம் வசம் தான் ….!

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -18/03/2019

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

    பெண்ணே கொஞ்சம் திருந்து …..!

    ஆடை குறைத்து
    அரை உடல் நிறுத்து …
    போகும் பெண்ணே
    போக்கிடம் மாற்று ….

    தீங்கை விதைத்து
    தீயாய் கசிந்து …
    ஊரை எரிக்கும்
    ஊனம் மாற்று ….

    நக்கி குலைக்கும்
    நாய்கள் கூட….
    வாலை ஆட்டும்
    வாழ்தல் மாற்று …..

    தொப்பை நீட்டி
    தொடையும் காட்டி …
    வன்முறை தூவும்
    வாழ்க் கை மாற்று ….

    ஆடை குறைத்து
    அங்கம் காட்டும் ,,,
    அழிவே உந்தன்
    அடி எண்ணம் மாற்று ….

    கண்ணில் காமம்
    கசியும் நிலையை
    தூவும் பெண்ணே – உன்
    தூரிகை மாற்று ….

    கண்டவன் நின்றவன்
    கன்னியில் ஏறியே
    காமம் புணர்தல்
    கழிவே நிறுத்து ….

    பொல்லா உடலை
    பொருத்தி உயிரில்
    நடக்கும் நிலவே
    நாயாய் வேண்டாம் …

    தப்பை விதைத்து
    தண்டனை அறுக்கும் …
    குற்ற மன்றாய்
    குந்த வேண்டாம் …

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -16/03/2019

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நிச்சயம் நீ அழுவாய் ….!

    நிச்சயம் நீ அழுவாய் ….!

    நானும் இன்று தொழிலாளி
    நாளை ஒரு முதலாளி …
    நயாகராவாய் நீளுவேன்
    நாள் திசையும் ஓடுவேன் ….

    கண்டபடி வார்த்தைகளை
    நெஞ்சுக்குள்ளே எறிந்தவனே …..
    கெஞ்சுகின்ற காலம் ஒன்று
    கொஞ்சி வரும் காத்திரு …..

    பஞ்சு போல பிய்த்தவனே
    படு பாதகங்கள் செய்தவனே …..
    கொடுங்கோல் உடைத்தெறிய
    கொட்டும் தேளாய் நான் மலர்வேன் …

    உப்பு கண்ணீர் உடல் படிய
    உள்ளம் தீயாய் எரிய ….
    பற்றும் தீயாய் நான் வருவேன்
    பாதகனே நீ அழிவாய் ……

    முற்றுகையில் நீ அமிழ
    முட்டாள் சிந்தை இன்றொழிய ….
    கத்துகின்ற நாள் வரும் பார்
    கை கட்டும் நிலை தரும் பார் ….!

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -14/03/2019

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    நாம் வாழ்வோம் ஓடி வா

    நாம் வாழ்வோம் ஓடி வா

    துளை போடும் பார்வைக்குள்ள
    துடுப்பாட்டம் ஈடுப்பாட …
    மனது மயங்குதடி – விழி
    மத்தாளம் கொட்டுதடி …

    காற்று பட்டு சேலை நுனி
    கன்னம் வருட …
    அடி உள்ளம் துள்ளுதடி
    ஆசை காதல் கொல்லுதடி …

    அச்சப்பட்டு வெக்கப்பட்டு
    அடி மேனி வேர்க்குதடி …
    காத்திருந்த போதுமடி
    கண்ணே நீ வந்திடடி . …

    வயதான வேளையில
    வாலிபம் சாக முன்ன …
    வாழ வேணுமடி
    வாழ்க்கை பட வேணுமடி …

    தினம் தோறும் தேவைகளோ
    தீராது கூடுமடி …
    அயராது உழைத்து கொட்ட – இந்த
    ஆயூள் போதாதடி …

    வன்னி மைந்தன் – ( ஜெகன் )
    ஆக்கம் -10/03/2019

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நினைவில் துடிக்கும் காதல் …!

      நினைவில் துடிக்கும் காதல் …!

      இன்று வந்து உன் நினைப்பு
      இதயத்தை வாட்டுதடி ..
      தூக்கம் இன்றி விழி
      துடி துடித்து சாகுதடி …

      பாண் மேலே பட்டரிட்டு
      பாசமுடன் நீயளித்த ….
      உணவு பரிமாறல்
      உள்ளத்திலே இனிக்குதடி …

      கையிலே காசு இன்றி
      காகிதம் தூது விட்ட ….
      உன் பணி எண்ணையில
      உள்ளம் துடிக்குதடி …

      தனிமையில நான் தவிக்க
      தாலாட்டு நீ பாட …
      உள்ளத்தில சிறு மகிழ்வு
      ஊட்டினாய் மறவேனே ….

      முகில் முட்டும் மலையோரம்
      முடங்கி நீ மறைந்தாலும் …
      நினைவுக்குள் நீ இருப்பாய்
      நீங்காது மலர்வாய் ….

      நான் உனை பார்த்திடத்தான்
      நாள் ஒன்று வந்திடுமா ..?
      நான் தொழும் என்னிறைவா
      நாள் ஒன்று தந்திடுமா ..?

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -12/03/2019

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      இது தான் வாழ்வு …!

      இது தான் வாழ்வு …!

      தோளுக்கு மாலையா
      தோட்ட பூவே வாறியா ..?
      வாழை நாரில
      வந்து சிக்கிறியா …?

      கல்யாண பந்தலிலே
      காட்சிக்கு நிக்கிறியா ..?
      கூந்தல் மேவியே
      குலவி ஆடுறியா ..?

      அழகாய் பூத்தாய்
      ஆயூளை பறித்தான் …
      உயிரு போகுமுன்னே
      உலவுறாய் அழகாய் தான் …

      சிரித்து மலர்ந்து
      சிறகு உடைந்து …
      வீழ்ந்து கருகி
      வீழ்ந்தாய் நொந்து ….

      வாசல் பூவே
      வாழ்வு இதுவாச்சு …
      அழகாய் பூத்தென்ன
      ஆயூள் முடிந்தாச்சு …!

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -11/03/2019

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      நாம் வாழ்வோம் ஓடி வா …!

      நாம் வாழ்வோம் ஓடி வா …!

      துளை போடும் பார்வைக்குள்ள
      துடுப்பாட்டம் ஈடுப்பாட …
      மனது மயங்குதடி – விழி
      மத்தாளம் கொட்டுதடி …

      காற்று பட்டு சேலை நுனி
      கன்னம் வருட …
      அடி உள்ளம் துள்ளுதடி
      ஆசை காதல் கொல்லுதடி …

      அச்சப்பட்டு வெக்கப்பட்டு
      அடி மேனி வேர்க்குதடி …
      காத்திருந்த போதுமடி
      கண்ணே நீ வந்திடடி . …

      வயதான வேளையில
      வாலிபம் சாக முன்ன …
      வாழ வேணுமடி
      வாழ்க்கை பட வேணுமடி …

      தினம் தோறும் தேவைகளோ
      தீராது கூடுமடி …
      அயராது உழைத்து கொட்ட – இந்த
      ஆயூள் போதாதடி …

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -10/03/2019

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      காலம் வரும் காத்திரு …..!

      காலம் வரும் காத்திரு …..!

      நதி வீழ்ந்த ஏரியில
      நான் போறேன் அழுகையில ….
      கை கொடுப்பார் யாருமில்ல
      கண் துடைப்பார் எவருமில்லை …

      கூடி வந்த உறவெல்லாம்
      கூடி தினம் நகைக்குதே ….
      கேலிகள் கூத்தாக
      கேவலமாய் போனேனே …..

      தேடிவந்த வேளையிலே
      தேவைகளை தீர்த்தவனை
      கால் பந்தாய் அடிப்பதுவோ …?
      கடதாசியாய் வீசுவதோ ..?

      ஒத்த ரூபா இல்லாம
      ஒடிந்து நான் நிக்கையிலே
      நித்தம் பல கையேந்தி
      நிர்கதியாய் போனானே ….

      நாளை ஒரு காலம் ஒன்று
      நாடி வரும் வேளை அன்று
      காத்திருப்பீர் நல்லவரே
      கால் துடைப்பீர் வல்லவரே …

      நிகழ்காலம் கூறி விடும்
      நிகழ்வுகள் மாறி விடும் …
      வாய் எறிந்த சொல்லடிகள்
      வாயில் வந்து வாலாட்டும் ….!

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -05/03/2019

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      தூக்கம் பறித்த கொடியவன் ….!

      தூக்கம் பறித்த கொடியவன் ….!

      காலையில ஓடிவந்து
      கண்திறக்கும் கதிரவனே ..
      கண்ணான கனவை
      காண்பறித்த கொடியவனே

      மஞ்சம் விட்டு எழவே
      மஞ்சள் வெயில் எறிந்தவனே ..
      கெஞ்சினேன் நானே
      கொஞ்சம் உறங்கிட தானே ….

      வாரத்தில இரண்டு நாளு
      வாங்கி வந்த விடுமுறையை …
      வீணடித்து போனவனே
      வேலைக்கு நான் போறேனே ….

      அஞ்சாத சூரியனே
      அக்கினி தேவனே ….
      நஞ்சாகி ஏன் போனாய்
      நான் அழுதேன் பேயாய் ……!

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -08/03/2019

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      பிறந்த நாளில் இறக்க வேண்டும் …!

      பிறந்த நாளில் இறக்க வேண்டும் …!

      நான் பிறந்த நாளு – அட
      ஏன் பிறந்தன் சாமி …?
      நாளுமே கோடி துன்பம்
      நட்டு படைத்த சாமி …

      வலியெடுக்க நெஞ்சுக்குள்ள – நீர்
      வழிந்தோட கண்ணுக்குள்ள …
      செத்து செத்து பிழைக்கிறேன்
      சொகம் இன்றி தவிக்கிறேன் ….

      கலரு என்ன கறுப்பா …
      கண்ணை மூடி படைத்தவா …
      தொல்லை வேணாம் விட்டு விடு
      தொலைய வேணும் எடுத்து விடு …

      வெறுப்பான உலகத்தில
      வெந்து வாழ முடியல …
      தப்பான மனிதத்தில
      தாழ நிதம் முடியல ….

      ஆண்டென்ன நாப்பதாச்சு
      ஆயுல் வாசலாச்சு …
      வந்து விட்டேன் இது போதும்
      வாழ்ந்து விட்டேன் அது போதும் …

      நான் பிறந்த நாளினிலே
      நான் மடிய வேண்டுகிறேன் …
      என் ஆசை வேண்டுதலை
      என்னிறைவா தந்து விடு ….!

      வன்னி மைந்தன் – ( ஜெகன் )
      ஆக்கம் -07/03/2019