Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

அழுகின்ற காதலி

அழுகின்ற காதலி

இரவின். மறைப்பினிலே
இணைவோமா ஓரத்திலே ..?..
வாலிப தேவைகளை
வா தனிப்போம் மோகத்திலே ..

ஆழம் நீயும் பார்க்க
அடி வயிறு நோக ….
வலியால் நானும் துடிப்பேன்
வாந்தி நானும் எடுப்பேன் ….

வேணாம் என்னை விட்டு விடு
வேக வைத்து கொன்று விடு ….
சத்தமில்லா செத்து விட்டால்
சங்கதிகள் தெரியாதே ….

அக்கம் பக்கம் கேலியாக
அன்பே பேசாதே ….
பெற்றவங்க நெஞ்சங்களும்
பெரும் தீயாய் ஏரியாதே ….

உன் மேலே நேசம் வைத்தேன்
உருண்டு அழுதிடவா ..?
என் உயிர் மன்னவனே
என்னை கொஞ்சம் புரிந்து விடு …!

வன்னி மைந்தன் – ( ஜெகன் )
ஆக்கம் -29/03/2019

Home » அழுகின்ற காதலி