Category: முக்கிய செய்திகள்
முக்கிய செய்திகள் ,இன்றைய இலங்கை உலக முக்கிய செய்திகள் பக்கத்தில் முதன்மை இடம்பிடித்துள்ளன .
நாள்தோறும் இடம்பெறும் நிகழ்வுகளில் பகுதியாக இவை அமைய பெற்றுள்ளன.
பிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி
பிரான்சில் கொரனோ தாக்குதலில் சிக்கி 298 பேர் பலி
பிரான்சில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
42032 பேர் பாதிக்க பட்டுள்ளனர் மேலும் – 298 பேர் பலியாகியுள்ளனர்
இரண்டாம் அலையாக பரவி வரும் நோயின் தாக்குதலில் சிக்கி இந்த உயிரிழப்பு அதிகரித்துள்ளது
மேலும் பிரிட்டனில் இதேபோல 20530 பேர் பாதிக்க பட்டுள்ளனர் -224 பலியாகியுள்ளனர்
தொடர்ந்து குளிர்காலம் ஆரம்பிக்க பட்டுள்ளதால் இந்த நோயின் தாக்குதல் அதிகம் பரவும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
பிரிட்டன் பிரான்ஸ் என்பன முழு லொக்கடவுனுக்கு செல்லும் அபாயம் ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மேலும் பிரிட்டனில் நான்கு மாநகரணங்கள் சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்க
பட்டு அடித்து பூட்ட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது ,லண்டன் மாநகரம்
அதிக நோயாளர்களை கொண்ட பகுதியாக அறிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
துருக்கிய கடற்படை ஆக்கிரமிப்பு – கிரேக்க போர்க் கப்பல்கள் படையெடுப்பு
துருக்கிய கடற்படை ஆக்கிரமிப்பு – கிரேக்க போர்க் கப்பல்கள் படையெடுப்பு
துருக்கி ,கிரேக்க மற்றும் ,சிரியா ,லிபியா மீது கடும் போரை தொடுத்து
வருவதுடன் ,ஆக்கிரமிக்க முற்பட்டு வருகிறது ,இவ்விதமான பலத்தை
துருக்கி ஏற்படுத்த அதற்கு பதிலடியாக கிரேக்க நாடானது போர்க் கப்பல்களை
தமது கடற்பரப்பு மற்றும் Aegean கடல்பகுதியில் சுற்றுக் காவல்
நடவடிகையை தீவிர படுத்தியுள்ளதுடன் ,பயிற்சிகளிலும் ஈடுபட்டு வருகின்றன
தூக்கி நாடாது இராணுவம் சிரியாவில் இருந்து உடனடியாக விலக வேண்டும்
என ஐரோப்பிய யூனியன் வேண்டுதல் விடுத்த நிலையில் இந்த
நகர்வுகள் இந்த பிராந்திய கடல் பகுதிகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video
அமெரிக்கா விமானத்தை துரத்திய ரசியா விமானம் – வானில் நடந்த பர பரப்பு video
அமெரிக்கா இராணுவ விமானம் ஒன்றை ரசியா மிகையொலி
விமானங்களை துரத்தி சென்றன
இந்த பின் தொடர்ந்தல் மற்றும் தூரத்தி சென்ற காட்சிகள் தற்போது
வைரலாகி வருகிறது
இரு நாடுகளுக்கு இடையில் இவ்விதம் இடைவிடாத பின் தொடர்தல்
மற்றும் வழி மறித்து திசை திருப்புதல் என்பன இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இதுவே விரைவில் பெரும் போர் ஒன்றை தோற்றுவிக்கும் என நம்ப படுகிறது
ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா video
ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல் ,அமெரிக்கா
ஈரான் தனது நாட்டின் பாதுகாப்பிற்கு என தற்போது ,மிக நீண்ட தூர வான் தடுப்பு ஏவுகணையை தயாரித்து சோதனை செய்து வெற்றியை பறித்துள்ளது
இந்த ஏவுகணையானது கைபிரட் முறையில் தயாரிக்க பட்ட ஏவுகணைகளை விட துல்லியமாக சுட்டு வீழ்த்த கூடிய ஒன்றாகும்
ஈரானிடம் உள்ள அதிக சக்தி வாய்ந்த ஏவுகணையாக பவர் -373 எனப்படும் இந்த ஏவுகணை முன்னிலை பிடித்துள்ளது .
அமெரிக்கா இராணுவ தளத்தில் வீழ்ந்து வெடித்த ஏவுகணையை விட இது பல மடங்கு சக்தி வாய்ந்தது
எதிரிகளின் அடக்குமுறை ஆக்கிரமிப்பை உடைத்தெறிய இந்த ஏவுகணை
சோதனைகள் எமக்கு அவசியமான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது எனவும் ,மேலும் பல
புதிய வடிவமைப்பில் நாம் தொடர்ந்து சோதனைகளை மேற் கொள்வோம் என புரட்சி காவல் படையினர் வீர முழக்கமிட்டுள்ளனர்
சொலை மானி கொலை செய்ய பட்டதன் பின்னர் ஈரான் அதிவேகமாக
தனது அணு குண்டு சோதனை மற்றும் ,ஏவுகணை சோதனையில் தீவிரமாக செயல் பட்டு வருகின்றது
இந்த் சோதனைகள் அமெரிக்கா ஏமாற்றும் ஸ்ரேலுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
Clip has some old footage in it, however the Bavar-373 scene is reportedly new and from today’s exercise. pic.twitter.com/aNorclv74Y
— Aurora Intel (@AuroraIntel) October 21, 2020
இலங்கையில் 20 தாவது சட்ட மூலம் நிறைவேற்றம் – குடும்ப ஆட்சி நீடிப்பு
இலங்கையில் 20 தாவது சட்ட மூலம் நிறைவேற்றம் – குடும்ப ஆட்சி நீடிப்பு
இலங்கையில் ஆளும் மகிந்த சகோதர ஆட்சியில் கொண்டு
வரப்பட்ட இருபதாவது சட்ட மூலம் பெரும்பான்மை வாக்குகளுடன் நிறை வேற்ற பட்டுள்ளது
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற 20ஆவது அரசியல் யாப்பு திருத்தச்
சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்ப மீதான வாக்கெடுப்பில்
மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகள் அளிக்கப்பட்டன.
திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதத்தையடுத்து நடைபெற்ற வாக்கெடுப்பின் போது சட்ட
மூலத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 65 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன் மூலம் நல்லாட்சி அரசு கொண்டு வந்த அதிகாரங்கள் செயல் இழக்க பட்டுள்ளன .
பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
பிரான்சில் முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல்
பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உள்ள உலக அதிசயங்களில் ஒன்றான Eiffel Tower
அருகில் வைத்து இரு முஸ்லீம் பெண்கள் மீது கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
இந்த தாக்குதலில் சிக்கி இரு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
ஊத்தை அரபியர்கள் என பேசியவாறே இந்த கத்தி வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது
கடந்த வாரம் ஆசிரியர் ஒருவர் குத்தி கொலை செய்ய பட்டமைக்கு
பழிவாங்கும் இனவாத தாக்குதலாக இது இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது

பிரிட்டனில் மக்கள் மீது கெமிக்கல் தாக்குதல் – 15 பேர் பாதிப்பு – மர்ம நபர் தப்பி ஓட்டம்
பிரிட்டனில் மக்கள் மீது கெமிக்கல் தாக்குதல் – 15 பேர் பாதிப்பு – மர்ம நபர் தப்பி ஓட்டம்
பிரிட்டனில் முகமூடி அணிந்த மர்ம மனிதர் ஒருவர் திடீரென Pizza Hut,
McDonald’s then Tesco கடைக்குள் புகுந்து அங்கு கெமிக்கல்
தாக்குதலை நடாத்தியுள்ளார் ,இதனால் இதுவரை பதின் ஐந்து பேர் பாதிக்க பட்டுள்ளனர் .
தொடர்ந்து அந்த பகுதிய அடித்து பூட்ட பட்டு மக்கள் அங்கிருந்து அப்புற
படுத்த பட்டுள்ளனர் ,தொடர்ந்து ஆயுத போலீசாரை குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
Upper Gornal, West Mids இது தீவிரவாத தாக்குதலா என தெரியவரவில்லை ,
போலீசார் தொடர் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

பிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி
பிரிட்டனில் போதையில் அணுகுண்டு கப்பலுக்கு பணிக்கு வந்த உயர் அதிகாரி
பிருத்தானியாவில் மிக உயர் ரகத்தை சேர்ந்த அணுகுண்டுகளை காவி
செல்லும் நீர்மூழ்கி கப்பலுக்கு பொறுப்பான உயர் அதிகாரி ஒருவர் அதிக
போதையில் அந்த கப்பலுக்கு பணிக்கு வந்துள்ள செயல் பெரும்
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது
மேற்படி அதிகாரியின் செயல் தொடர்பாக தொடர் விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இது மிக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்
பிரிட்டனில் பாட்டி வைத்த வாலிபருக்கு £10,000 தண்டம்
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்
தாக்குதலை அடுத்து சட்டங்களில் மாறுதல் ஏற்பட்டு புதிய
நடைமுறை விதிமுறைகள் பிறப்பிக்க பட்டுள்ளன
சுமார் நூறு பேர் வரை பாட்டியின் கலந்து கொண்டனர் ,மேற்படி பாட்டியை
ஏற்பாடு செய்து நடத்திய வாலிபருக்கு பத்து ஆயிரம் பவுண்டுகள்
தண்டம் அறவிட பட்டுள்ளது
இவ்வாறு சில தமிழர்களுக்கும் அறவிட பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்
ஆயுத முனையில் பிரிட்டனில் வீடு புகுந்து நாயை திருடி சென்ற திருடர்கள்
பிரிட்டன் புறநகர் பகுதியான Liverpool பகுதியில் இன்று மதியம் 12,15
மணியளவில் வீட்டின் பின்புறவழியாக ஆயுதங்கள் மற்றும் கத்தியுடன்
நுழைந்த திருடர்கள் அங்கிருந்த அமெரிக்கா இனத்தை சேர்ந்த விலை உயர்ந்த நாய்களை திருடி சென்றுள்ளனர்
மேற்படி சம்பவம் பொலிசாருக்கு தெரிவிக்க பட்டதை அடுத்து
பறந்து வந்த போலீசார் திருடர்களுடன் சண்டையிட்டனர்
எனினும் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார்
மேற்படி
சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற் படுத்தியுள்ளதுடன் ,போலீசார் குறித்த நபர்கள் மீது துப்பாக்கி சூட்டு தாக்குதலையும் நடத்தினர்

பிரான்சில் ஆசியர் கழுத்து வெட்டி கொலை – தீவிரவாதிகள் வெறியாட்டம்
பிரான்சில் ஆசியர் கழுத்து வெட்டி கொலை – தீவிரவாதிகள் வெறியாட்டம்
பிரான்சில் மிக புகழ் பெற்ற பாடசாலை ஒன்றில் வரலாற்று ஆரியர் ஒருவர்
மாணவர்கள் முன்பாக மிக கொடூரமாக கழுத்துவெட்டி படுகொலை
செய்ய பட்டுள்ளார் ,இந்த தாக்குதலை மேற்கொண்ட தீவிரவாதி சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
மேற்படி சம்பவம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது ,
தற்போது குறித்த பகுதிகள் எங்கும் பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
,மேலும் முக்கிய நகரங்கள் எங்கு இரகசிய போலீசார் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ளது
நத்தார் தினத்தை முன்னிட்டு பெரும் தாக்குதல்களை தீவிரவாதிகள் நடத்த
கூடும் என்பதால் இந்த திடீர் நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளது குறிப்பிட தக்கது
ஈரான் அணு உலைகள் மீது சைபர் தாக்குதல் – இஸ்ரல் ,அமெரிக்கா கைவரிசை
ஈரான் அணு உலைகள் மீது சைபர் தாக்குதல் – இஸ்ரல் ,அமெரிக்கா கைவரிசை
ஈரானின் அணு உலைகளை இலக்கு வைத்து கடந்த மாதம் இரு வேறு
சைபர் தாக்குதல்கள் நடத்த பட்டுள்ளன ,இந்த சைபர் தாக்குதல் மூலம்
ஈரானின் அணு உலையில் பாதிப்பு ஏற்பட்டதாக ஈரானிய தொழில் நுட்ப பிரிவினர் தெரிவித்துள்ளனர்
இதனால அந்த பகுதியில் இணைய வலையமைப்பு முற்றாக தடை செய்ய பட்டுள்ளது
தொடர்ந்து தமது எதிரி நாடுகளான இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா
இவ்விதமான தாக்குதல்களை தொடுத்து வருவதாக ஈரான் குற்றம் சுமத்தியுள்ளது
இதற்கு சில மாதங்களுக்கு முன்னராக அமெரிக்கா இராணுவ தலைமையகத்திற்குள்
ஈரான் ,வடகொரியா புகுந்து தாக்குதலை நடத்தியுடன் அவர்கள் ஆயுத உற்பத்தி விபரங்களை அபகரித்து சென்றது
அதற்கு பதிலடியாக இந்த தாக்குதல்கள் இடம்பெற்று இருக்க கூடும் என அஞ்ச படுகிறது
ஈரானுக்குள் வீழ்ந்து வெடித்த 50 ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு
ஈரானுக்குள் வீழ்ந்து வெடித்த 50 ஏவுகணைகள் – பதட்டம் அதிகரிப்பு
ஆர்மேனியா மற்றும் அசேர்பியன் படைகளிற்கு எதிராக கடும் மோதல்கள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இவ்வேளை ஈரானின் கிழக்கு பகுதியில்
Karabakh அண்மித்த எல்லை பகுதியில் சுமார் ஐம்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
உளவு விமானங்கள் தகவல்கள் வழங்க அவ்விடத்தை நோக்கி ஏவுகணைகள்
தொடராக ஏவி விடப்பட்டன ,மேற்படி உளவு பார்த்தலில் ஈடுபட்டு கொண்டிருந்த
அசேர்பியன் உளவு விமானங்களை தாம் சுட்டு வீழ்த்தியுள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது
இந்த ஏவுகணை தாக்குதல் அமெரிக்கா ,இஸ்ரேல் படைகள் ஆதரவுடன்
தாக்குதலை நடத்தும் நாட்டு படைகளிற்கு ஈரான் விரைவில் தாக்குதல் தொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது
போருக்கு தயாராகுங்கள்-இராணுவத்திற்கு கட்டளை -பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்
போருக்கு தயாராகுங்கள்-இராணுவத்திற்கு கட்டளை -பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்
போருக்கு தயாராக இருக்கும்படி சீன வீரர்களை (பி.எல்,ஏ) அதிபர்
ஷி ஜின்பிங் கேட்டுக்கொண்டுள்ளதாக சீன ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
போருக்கு தயாராகுங்கள்: வீரர்களுக்கு அழைப்பு விடுத்து பரபரப்பை உண்டாக்கிய சீன அதிபர்
ஷென்ஜென் சிறப்பு பொருளாதார மண்டலத்தின் 40-வது ஆண்டு நிறைவை
நினைவையொட்டி சீன அதிபர் ஷி ஜின்பிங் குவாங்டாங் மாகாணத்தில்
உள்ள ராணுவ தளத்திற்கு சென்றார். அங்கு இருந்த வீரர்களிடம் மனதையும்
சக்தியையும் போருக்கு தயார்படுத்துங்கள் என அழைப்பு விடுத்துள்ளதாக சீன செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மேற்கோள் காட்டி ஆங்கில டி.வி.ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த 12-ம்தேதி (திங்கட்கிழமை) இந்தியா சீனா இடையேயான பதற்றத்தை
குறைக்கும் வகையில் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை
நடைபெற்றுள்ளது. இந்நிலையில் 13-ம் தேதி சீன அதிபர் இவ்வாறு கூறியிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பல ஆண்டுகளாக மோதல் போக்கு இருந்து வருகிறது.
தைவான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. தைவான் சீனாவின் கட்டுப்பாட்டில்
இருந்த விலக விரும்புகிறது. அமெரிக்கா தைவானுக்கு நவீன ஆயுதங்கள் வழங்க இருப்பதாக செய்திகள் வெளியாகின.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த சீனா, ஆயுதங்கள் வழங்கக் கூடாது என்று
தெரிவித்துள்ளது. இதனை மனதில் வைத்துதான் ஜின்பிங் பேசியிருப்பார் என கருதப்படுகிறது.
லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்
லண்டனில் 14 நாள் வீட்டில் தனிமை படுத்த மறுத்த தமிழ் பெண்ணுக்கு 10 ஆயிரம் தண்டம்
இலங்கையில் இருந்து லண்டனுக்கு ஸ்பான்சர் மூலம் வருகை தந்த தமிழ்
இளம் பெண் ஒருவர் ,கணவருடன் இணைந்து 14 நாட்களுக்கு வீட்டில் சுயதனிமை படுத்தி தங்கி இருக்க மறுத்து ,வெளியில் நடமாடியுள்ளார் .
இதனை அவதானித்த அதிகாரிகள் அவருக்கு பத்தாயிரம் பவுண்டுகள்
தண்டம் அறவிட்டுள்ளனர் .இவர்களை கண்காணித்து வந்தவர்களினாலே இந்த அபராத தொகை விதிக்க பட்டுள்ளது ,.
தற்பொழுது அமூல் படுத்த பட்ட சட்ட பிரகாரம் ஆறு பேருக்கு மேல் விழாக்களில் நபர்கள் கூட முடியாது ,மேலும் அயலவர்கள்
,அயல் வீட்டாருடன் உறவாடவோ ,செல்லவோ முடியாது என்ற விதிகள் ,
உள்ளது ,இதனை அலட்சியம் செய்து உலாவும் நம்ம தமிழர்கள் இவ்விதம் சிக்கி தவித்து வருகின்றனர்
அதுபோலவே பத்துமணிக்கு பின்னர்உணவகத்தை திறந்து வியாபாரம் செய்த தமிழர் கடை ஒன்றுக்கும் தண்டம் அறவிட பட்டுள்ளது .
இக்காலத்தில் அரசு விதித்துள்ள விதிகளை மீறி செயல்படின் அது கிரிமினல்
குற்றமாகிறது ,அவ்விதம் பாதிக்க பட்ட சில தமிழர்கள் கருத்துக்கள் இவ்விதமாக உள்ளனவாம் .
கடந்த தினம் நோயின் தாக்குதலில் சிக்கி 141 பேர் பலியாகியுள்ளனர் ,
ஆபத்தின் அபாயத்தை உணர மறுப்பவர்கள் ,..இவ்விதம் சிக்கிதவித்து வருகின்றமை குறிப்பிடதக்கது ,
மக்களே எச்சரிக்கை ,அரசு கூறும் விதிகளை பின் பற்றுங்கள் ,குளிர்காலத்தில்
நோயின் தாக்குதல் நாள் ஒன்றுக்கு நாற்பது ஆயிரத்தை கடக்கும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
நத்தார் தினத்திற்கு முன்பாக நாடு முழுமையாக அடித்து பூட்டும் நிகழ்வு இடம்பெறும் என்றே எதிர் பார்க்க படுகிறது ,
லண்டன் மாநகரம் அதிக நோயாளர்களை கொண்ட இரண்டாவது புள்ளியில்
நிற்கிறது ,இதனை அடுத்து சில சிட்டிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்க
பட்டு அடித்து மூட படவுள்ளதாக லண்டன் மேயர் அறிவித்துள்ளமை இங்கே கவனிக்க தக்கது,வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்
தாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா
தாய்வானுக்கு ஆயுதங்களை அள்ளி விற்கும் அமெரிக்கா – கொதிக்கும் சீனா
சீனாவுக்கும் தாய்வானுக்கும் இடையில் முறுகல் உக்கிரம் பெற்றுள்ள
இவ்வேளை ,ஏவுகணைகள் டாங்கிகள் ,விமனக்கல் , போன்ற
முக்கிய ஆயுத தளபாடங்களை அமெரிக்கா அவிற்பனை செய்ய உள்ளது
இதற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளித்துள்ளது ,மேற்படி மில்லியன் டொலர்
ஆயுத விற்பனை விவகாரம் சீனாவுக்கு பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது ,
சீனாவை அடக்கவும் ,சீண்டவுமே அமெரிக்கா இவ்விதமான வலிந்து
தாக்குதல் உத்தி செயல் பாடாக இவ்விதமான நகர்வில் ஈடுபட்டு வருகிறது கவனிக்க தக்கது
21 இஸ்ரேல் இராணுவம் காயம் – உண்மையில் நடந்தது என்ன ..?
21 இஸ்ரேல் இராணுவம் காயம் – உண்மையில் நடந்தது என்ன ..?
இஸ்ரேல் இராணுவத்தினர் மேற்கொண்ட இரண்டு இராணுவ பயிற்சிகளின்
பொழுது சுமார் 21 இராணுவத்தினர் படுகாயமடைந்துள்ளதாக
இஸ்ரேல் பாதுகாப்பபு அமைச்சு அறிவித்துள்ளது
அமெரிக்காவில் இடம்பெற்ற அதே போலான பாதிப்பும் இங்கும் இடம்பெற்றுள்ளது
உண்மையில் இங்கு இடம்பெற்ற பயிற்சிகளில் தான் காயமடைந்தனரா
அல்லது எதிரி நாடுகளின் தாக்குதலில் படுகாயமடைந்தனரா
சென்ற சந்தேகம் வலுத்துள்ளது குறிப்பிட தக்கது

ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இராணுவம் – தொடரும் உக்கிர மோதல்
ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இராணுவம் – தொடரும் உக்கிர மோதல்
ஆர்மேனிய இராணுவத்தின் எஸ் 300 ரக ஏவுகணை தளத்தை
அசேர்பியன் இராணுவத்தினர் விமான மூல ஏவுகணை தாக்குதல் மூலம் அழித்துள்ளன
அந்த துடைத்தழிப்பு காட்சிகள் தற்போது இணையங்களில் வைரலாகி வருகிறது .
இதுவரை பதின் ஐந்தும் அசேர்பியன் இராணுவ விமானங்களை சுட்டு
வீழ்த்திய ஆர்மேனிய இராணுவம் பலத்த இழப்பை சந்தித்து
வருவதாக களமுனை தகவல்கள் வெளியீடுகள் குறிப்பிடுகின்றன
தொடர்ந்து இரு பகுதிக்கும் இடையில் மோதல்கள் உக்கிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

புதிய ஏவுகணையை பார்வைக்கு வைத்து உலகை மிரள வைத்த வடகொரியா video
புதிய ஏவுகணையை பார்வைக்கு வைத்து உலகை மிரள வைத்த வடகொரியா
வட கொரியா தனது ஆண்டின் எழுபத்தி ஐந்தாவது ஆண்டு விழாவை
மிக சிறப்பாப் கொண்டாடியது இதன் பொழுது 11 வகையான ஏவுகணைகளை
தனது அணிவகுப்பில் காட்சிக்கு வைத்து உலக நாடுகளுக்கு மிரட்டலை விடுத்துள்ளது
இதில் இராணுவ வல்லுனர்களை வியக்கவும் ,அதிர்ச்சியில் உறைய வைத்த விடயம் எதுவெனில்
இதுவரை சோதனை செய்ய படாத ஒரு புதிய ஏவுகணையையும் அது காட்சிக்கு வைத்து மிரட்டியுள்ளது தான் .
இதுவரை குறித்த ஏவுகணை சோதனைக்கு உள்ளாக்க பட்டதாக அறியப்படவிலை என ஆயுத தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன
இதுவே அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன்
,குறித்த ஏவுகணையின் தூரா வீச்சு எதுவரை என தெரிய வரவில்லை ,இதுவே எதிரி நாடுகளுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரிட்டனில் பொலிஸ் காரை திருடி சென்ற திருடர்கள் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை
பிரிட்டன் மன்ஸிஸ்டர் பகுதியில் காவல்துறை சிப்பாய் ஒருவர் நபர் ஒருவரை
பின் தொடர்ந்து துரத்தி சென்றனர் ,அவ்வேளை அவரை மடக்கி பிடிக்க
தமது காரினை வீதியில் விட்டு விட்டு குறித்த நபரை துரதியுள்ளனர் ,ஆனால்
திருடன் ஒருவன் போலீஸ் காரை திருடி கொண்டு தப்பி சென்றுள்ளார்
காவல்துறை காரை திருடிய செயல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
,தொடர்ந்து திருடர்கள் எதாவது வில்லங்க தனம் செய்ய கூடும் என்பதால் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மக்களே யாக்கிரதை ,தொடர்ந்து இது தொடர்பான விடயத்தை தம் அறிய
தந்த வண்ணம் இருப்போம் என தெரிவிக்க பட்டுள்ளது ,இவர்கள் சிலவேளை
இந்த காரினை தீவிரவாத செயலுக்கும் பயன் படுத்த கூடலாம் ,காரில்
காவல்துறை உடை இல்லாது யாராவது அந்த காரில் இருந்தால் உடனே பொலிசாருக்கு தெரிய படுத்துங்கள் ,போலீசுக்கே ஆப்பா ..? செம திருடன்யா






