சுற்றி வளைக்க பட்ட இராணுவம் சிதறிய கவச வண்டிகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சுற்றி வளைக்க பட்ட இராணுவம் சிதறிய கவச வண்டிகள்


சுற்றி வளைக்க பட்ட இராணுவம் சிதறிய கவச வண்டிகள்

சுற்றி வளைக்க பட்ட இராணுவம் சிதறிய எதிரி கவச வண்டிகள் .


நவீனரக தாங்கி ரொக்கட் மூலம் நடத்த பட்ட அதிரடி தாக்குதல் .
வெடித்த கடும் மோதல்

வீடியோ

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி

சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது விபத்துக்குள்ளான இலங்கையர் ஒருவர் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த ரசிந்த என்ற நபரே இவ்வாறு விபத்தில் சிக்கியவராவார்.

பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் அவரது முள்ளந்தண்டு சேதமடைந்தது.

அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரசிந்த பணிபுரிந்த நிறுவனம் அவரை வைத்தியசாலையில் இருந்து எவ்வித வசதிகளும் அற்ற இடத்தில் தடுத்து வைத்துள்ளது.

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி

தற்போது ஒரே இடத்தில் இருக்கும் ரசிந்தவை கவனிப்பதற்கு அங்கு யாரும் இல்லை என இலங்கையில் இருக்கும் அவரது மனைவி கூறுகிறார்.

மேலும் இவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு இது தொடர்பில் அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ரசிந்தவை தற்போது ​வைத்துள்ள விதம் குறித்து, அங்குள்ள மற்றுமொரு இலங்கையர் ஔிப்பதிவு செய்த வீடியோ இது,

வீடியோ

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

களுத்துறையில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறையில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

ஹோட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, ஹோட்டலின் அறை எண் 324 இல் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணை நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ

இஸ்ரேல் 9 தளபதிகள் அவுட் கப்பல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் 9 தளபதிகள் அவுட் கப்பல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்


இஸ்ரேல் 9 தளபதிகள் அவுட் கப்பல் மீது ஹிஸ்புல்லா தாக்குதல்

இஸ்ரேல் 9 தளபதிகள் காசா எதிர் சமரில் அவுட்
கப்பல் மீது ஹிஸ்புல்லா விமானங்கள் கடும் தாக்குதல் .


உச்ச கட்ட தாக்குதல்கள் ஆரம்பம்

வீடியோ

கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்

கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்


முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட உடையார்கட்டு குரவில் கிராமத்தில் கிணற்றுக்குள் இருந்து கிணற்று நீருடன் மண்ணெண்ணைய் வெளியேறி வருகின்றமை நேற்று (07) கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குரவில் கிராமத்தில் வசிக்கும் குடும்பம் ஒன்று கடந்த மழை வெள்ளத்தினால் கிணறுக்குள் வெள்ள நீர் நிரம்பிய நிலையில் கிணற்றினை சுத்தம் செய்வதற்காக கிணற்றினை நீர் இறைக்கும் இயந்திரம் கொண்டு இறைத்துள்ளார்கள்.

இதன்போது கிணற்று நீருடன் மண்ணெண்ணை கலந்துகொண்டிருப்பது கண்டறியப்பபட்டுள்ளதுடன் இந்த சம்பவம் கிராமத்தில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் காணி உரிமையாளர்களை கேட்டபோது 2012 ஆம் ஆண்டு மீள்குடியேறிய பின்னர் 23 அடி ஆழம் கொண்ட கிணறு தோண்டி கட்டியுள்ளார்கள்.

தற்போது கிணற்றினை சுத்தம் செய்யும் போது முதல் கருநிறத்தில் காணப்பட்ட கிணற்று நீர் பின்னர் மண்ணெண்ணைய் மணக்கத் தொடங்கியுள்ளது. கிணற்று நீரின் மேற்படலம் மண்ணெண்ணையாக

தொடர்ச்சியாக காணப்பட்டுள்ளது இந்த நிலையில், வாளியால் தண்ணீரை அள்ளி அதில் ஒரு இலையினை நனைத்து அதனை பற்றவைத்தபோது அந்த இலை எரிந்துள்ளது.

கிணற்றுக்குள் இருந்து மண்ணெண்ணைய்

அதனை விட மண்ணெண்ணை மணம் வீசியுள்ளது.

இந்த நிலையில் வீட்டின் உரிமையாளர்கள் கிராம சேவையாளருக்கு தொடர்பினை ஏற்படுத்தி தெரியப்படுத்தியுள்ளதுடன் கிராம சேவையாளர் ஊடாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டு புதுக்குடியிருப்பு பொலிஸ்

நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான குழுவினர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து கிணற்றினை பார்வையிட்டுள்ளதுடன் கிணற்றின் எண்ணெய் கலந்த நீரின் மாதிரி எடுத்து சென்றுள்ளதுடன் இது தொடர்பில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு மேற்கொண்ட சட்ட நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, இது குறித்து மேலும் அயலவர்களை விசாரித்தபோது காணிக்கு அருகில் விடுதலைப்புலிகள் காலத்தில் விடுதலைப்புலிகளின் முகாம் ஒன்று காணப்பட்டுள்ளதாகவும் அந்த காலத்தில் நிலத்தில் புதைக்கப்பட்ட

மண்ணெண்ணைய் லீக்காகி தற்போது நிலத்தடி நீரில் கசிந்துள்ளதோ என்ற சந்தேகமும் எழுந்துள்ளது என தெரிவித்துள்ளார்கள்.

தற்போது நிலத்தடி நீர்மட்டம் உயரமாக காணப்படுவதால் தொடர்ச்சியாக இறைத்து நீர்வரத்து பகுதியினை கண்டறியமுடியாத நிலை காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

இதேவேளை, தங்கள் குடிநீர் மற்றும் வீட்டுதேவைக்காக பயன்படுத்தி வந்த கிணற்றில் மண்ணெண்ணெய் கலந்ததால் குடிநீரினை பெற்றுக்கொள்வதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெரும் சிரமங்களை

எதிர்கொண்டுள்ளதாக அந்த குடும்பம் தெரிவித்துள்ளார்கள். வீதிக்கு சென்று வீதியில் உள்ள பொதுக் கிணற்றில் இருந்தே குடிநீரினை பெற்றுக்கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளார்கள்

இஸ்ரேல் கட்டளை தலைமையகம் விமானங்கள் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் கட்டளை தலைமையகம் விமானங்கள் மீது தாக்குதல்


இஸ்ரேல் கட்டளை தலைமையகம் விமானங்கள் மீது தாக்குதல்

இஸ்ரேல் வடக்கு கட்டளை தலைமையகம் மீது
லெபனான் போர் படைகள் விமானங்கள் கடும் தாக்குதல் .


பேரிழப்பை இழப்பினை ஏற்படுத்தியுள்ளதாக லெபனான் போர் படைகள் அறிவிப்பு

வீடியோ

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

நடிகை ஒருவருக்கு தொல்லை கொடுத்த பொலிஸ் பரிசோதகர் கைது

நடிகை ஒருவருக்கு தொல்லை கொடுத்த பொலிஸ் பரிசோதகர் கைது

சிங்கள நடிகை ஒருவருக்கு பாலியல் தொல்லை செய்ததாக சந்தேகத்தின் பேரில் பொலிஸ் பரிசோதகர் ஒருவர் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் கடமையாற்றும் பொலிஸ் பரிசோதகர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான பொலிஸ் பரிசோதகர் 42 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட நடிகை நேற்றிரவு சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டியில் பயணம் செய்துள்ளார்.

சந்தேகநபர் பிலியந்தலை ஜாலியாகொட பிரதேசத்தில் முச்சக்கரவண்டியை நிறுத்தி நடிகையிடம் தவறாக நடந்துக் கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் குறித்த நடிகை பிலியந்தலை பொலிஸில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போதே சந்தேகத்திற்குரிய பொலிஸ் பரிசோதகர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிலியந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வீடியோ

ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்

ஆலய பூசகரிடம் 3 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஹெரோயின்

யுத்திய நடவடிக்கை காரணமாக தெஹிவளை மற்றும் இரத்மலானை பிரதேசங்களில் இருந்து தப்பிச் சென்ற ‘சோட்டா’ வலான ஊழல் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் ஹொரண சுனாமிவத்த பிரதேசத்தில் ஆலயமொன்றில் பூசகராக பணியாற்றி வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் குறித்த ஆலயத்தில், 1500 ரூபாவுக்கு ஜாதகம் பார்த்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபருடன் சுமார் 3 இலட்சம் ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை வலான ஊழல் தடுப்பு பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்

வீடியோ

வரி அதிகரிக்க படும் - வரி அதிகரிக்கா விட்டால் இது நடக்கும் ரணில்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஜனாதிபதியின் முடிவில் தான் இருக்கிறது

ஜனாதிபதியின் முடிவில் தான் இருக்கிறது

நாட்டில் தேர்தலை நடத்துவதற்கு ஜனாதிபதி முடிவு செய்ய வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் ஊடகங்களுக்கு நேற்று (08) கருத்துத் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் தேர்தல் ஒன்றை நடாத்துவதற்கு ஜனாதிபதியின் முடிவில் தான் இருக்கிறது. முதலில் பாராளுமன்ற தேர்தல் நடக்கலாம் இல்லை எள்றால் ஜனாதிபதி தேர்தல் நடக்கலாம் எதுவாக இருந்தாலும் ஜனாதிபதியின் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

வீடியோ

வடக்கில் கரையொதுங்கிய மிதவை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வடக்கில் கரையொதுங்கிய மிதவை

வடக்கில் கரையொதுங்கிய மிதவை

யாழ்ப்பாணம் – வடமராட்சி கிழக்கு குடாரப்பு பகுதியில் புத்த பெருமானின் உருவ சிலையுடன் அலங்கரிக்கப்பட்ட மிதவை ஒன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை கரை ஒதுக்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக வடமராட்சி கிழக்கில் வத்திராயன் , உடுத்துறை மற்றும் நாகர்கோவில் ஆகிய கடற்கரைகளில் படகு , மிதவை உள்ளிட்டவை கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

இஸ்ரேல் லெபனான் எல்லையில் கடும் மோதல் பாயும் ஏவுகணைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் லெபனான் எல்லையில் கடும் மோதல் பாயும் ஏவுகணைகள்


இஸ்ரேல் லெபனான் எல்லையில் கடும் மோதல் பாயும் ஏவுகணைகள்

இஸ்ரேல் லெபனான் எல்லையில் கடும் மோதல் சீறி
பாயும் ஏவுகணைகள் ,தளபதி இழப்பிற்கு பதிலடி நடத்தும்
லெபனான் போர் படைகள்

வீடியோ

எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்

எல்லாம் போச்சு ஏமாந்து போனேன்

சத்தம் என்ன சத்தம் என்ன
சங்கதிகள் பாட முன்ன
கட்டுடைத்து பாய்ந்ததோ – வெள்ளம்
கரை உடைத்து ஓடியதோ

முட்டி மோதும் அலையிலே
முழுவதும் நனையுதே
என்ன இது என்ன இது
ஏதும் புரியலையே

சூறாவளி அடியிலே
சுற்று வட்டம் உடைந்ததோ
சுற்று மதில் இல்லா – வீடு
சுழற்சி இழந்ததோ

புத்தம் புது குளத்திலே
பூகம்பம் நடந்ததோ
வான் கதவு உடைந்து
வையம் அழிந்ததோ

சேதி சொல்லு முன்னே
சேதமான தென்ன
வாழ்வு துயரமாச்சே
வாழ வழியில்லா போச்சே ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 09-01-2024

அலறும் இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

அலறும் இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்


அலறும் இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல்

அலறும் இஸ்ரேல் எங்கும் ஏவுகணை தாக்குதல் ,
காசா போர் படைகள் இஸ்ரேல் தலைநகர் டெலவி
,மத்திய இசுரேல் .

வடக்கு பகுதிகள் எங்கும் பரவலாக ராக்கெட்
தாக்குதல் நடத்தியுள்ளனர்

வீடியோ

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு
Posted in YouTube Tamil News இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

வவுனியாவில் ஜனாதிபதி வருகைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வவுனியாவிற்கு கடந்த வெள்ளிக்கிழமை காலை வருகை தந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மாநகரசபை கலாச்சார மண்டபத்தில் அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுடான கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.

ஜனாதிபதியின் விஜயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கலந்துரையாடல் இடம்பெற்ற மண்டபத்திற்கு செல்லும் பாதையில் வட கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் கறுப்புக் கொடிகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவுக்கு போராட்டம் எதனையும் முன்னெடுப்பதற்கு நீதவான் நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையிலும் அவரும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார்.

காணாமல் ஆக்கப்பட்ட சங்கத் தலைவிக்கு விளக்கமறியல் நீடிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடுவதற்காக நிகழ்வு இடம்பெற்ற மண்டபத்திற்குள் செல்ல முற்பட்ட போராட்டகாரர்களை

தடுத்து நிறுத்திய பொலிசார் ஜனாதிபதியை சந்திப்பதற்கு அனைவருக்கும் அனுமதி வழங்க முடியாது என்றும் ஒருவருக்கு மாத்திரம் அனுமதி வழங்கமுடியும் என்றும் தெரிவித்தனர்.

இதனை மறுத்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அனைவரையும் அனுமதிக்குமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பொலிஸாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்ப்பட்டது.

இதனை அடுத்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றா மற்றும் போராட்டத்தினை காணொளி எடுத்த மீரா ஜாஸ்மின் ஆகிய இருவரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் நீதிமன்ற கட்டளையினை அவமதித்தமை, பொலிஸாரின் கடமைக்கு இடையூறு ஏற்படுத்தியமை, அமைதிக்கு பங்கம் விளைவித்தமை போன்ற பல்வேறு குற்றச்சாட்டுக்களில் வவுனியா பொலிஸார்

அவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவியான சி. ஜெனிற்றாவை எதிர்வரும் 8 ஆம்

திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறும் போராட்டத்தினை காணொளி எடுத்த பெண்ணிற்கு பிணை வழங்கியும் வவுனியா நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இன்று (08) மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்க தலைவி சி. ஜெனிற்றாவுக்கு எதிர்வரும் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வீடியோ

மின்னல் தாக்கி இளைஞன் பலி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மின்னல் தாக்கி இளைஞன் பலி

மின்னல் தாக்கி இளைஞன் பலி

மின்சாரம் தாக்கி இளைஞன் ஒருவர் பலியான சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது

குறித்த சம்பவம் இன்றைய தினம் (08) கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டக்கச்சி ஸ்ரீரங்கநாத பெருமாள் ஆலய தேர் திருப்பணி வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 29 வயதுடைய ஜேகதீஸ்வரன் பவித்திரன் என்ற வவுனியா பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த இளைஞனே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

மின்னல் தாக்கி இளைஞன் பலி

உயிரிழந்த இளைஞனின் சடலம் கிளிநொச்சி நிதிமன்ற நீதவான் பார்வையிட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டு, பின்னர் உறவினரிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராமநாதபுரம் பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிசார் விசரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வீடியோ

வெடித்து பறக்கும் ஏவுகணைகள் திண்டாடும் எதிரி கோட்டைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வெடித்து பறக்கும் ஏவுகணைகள் திண்டாடும் எதிரி கோட்டைகள்


வெடித்து பறக்கும் ஏவுகணைகள் திண்டாடும் எதிரி கோட்டைகள்

வெடித்து பறக்கும் லெபனான் போர் படை
ஏவுகணைகள் திண்டாடும் எதிரி கோட்டைகள்

வீடியோ

https://www.youtube.com/watch?v=UF9krputtLs
நீ வேண்டும் எனக்கு
Posted in எதிரி செய்திகள் எதிரி நியூஸ் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

நீ வேண்டும் எனக்கு

நீ வேண்டும் எனக்கு

எழுத படிக்க
தெரியா எனக்கு
எழுதி கொடுத்தாய்
காதல் கடிதம்

படித்து முடிப்பதற்குள்
பட்டம் பெற்று விட்டேன்
உன்னால் தானே முடிந்தது
உனக்கு நன்றி

நெஞ்சோரம் ஆலயமாய்
நீ தானே உறைந்தாய்
கண் வடிந்த கண்ணீரை
கண்ணே நீதானே துடைத்தாய்

உன்னை தொழுதே
உயிராய் எழுகிறேன்
நீ வேண்டும் எனக்கு
நீ தானே என் வாழ்வு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 08-01-2024

இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்காது வெடித்த நவீன ஏவுகணைகள்
Posted in YouTube Tamil News இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்காது வெடித்த நவீன ஏவுகணைகள்


இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்காது வெடித்த நவீன ஏவுகணைகள்

இஸ்ரேலில் சைரன்கள் ஒலிக்காது வெடித்தலெபனான்
நவீன ஏவுகணைகள் , திசைமாறும் போர் களம் .

வீடியோ

https://www.youtube.com/watch?v=8pnbWvia3GU
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்

பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்

மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் பொலிஸார் மீது இளைஞன் ஒருவர் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த 4 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து சம்பவத்தில் ஒரேகுடும்பத்தைச் சேர்ந்த இளைஞன் அவரது தாயார், சகோதரி உள்ளிட்ட மூவரும் கைது செய்யப்பட்டனர்.

அவர்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்தப்பட்டபோது, எதிர்வரும் 17 ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்

கொக்குவில் 2ம் குறுக்கு வீதியைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் சம்பவதினமான வெள்ளிக்கிழமை 5ஆம் திகதி மாலை 6 மணிக்கு மதுபோதையில் இருந்துள்ளார்.

அந்த பகுதி வீதியில் நிறுத்திவைத்திருந்த முச்சக்கரவண்டி ஒன்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதையடுத்து முச்சக்கரவண்டி சேதமடைந்துள்ளது. இந்நிலையில், அதன் உரிமையாளர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தார்.

இதனையடுத்து மதுபோதையில் இருந்த இளைஞனை அவரது தாயார் சகோதரி தமது தோல்களில் சுமந்தவாறு பொலிஸ் நிலையத்துக்கு கொண்டு

சென்ற போது அங்கிருந்த பொலிஸ் சாஜன் ஒருவர் கதிரையில் இருக்குமாறு தெரிவித்துள்ளார். அப்போது குறித்த இளைஞன் அந்த கதிரையை தூக்கி பொலிஸ் மீது தாக்குதல் மேற்கொண்டதில் அவர் படுகாயமடைந்தார்.

இந்த நிலையில் பொலிஸ் நிலையத்தில் இருந்த ஏனைய பொலிஸார் குறித்த இளைஞனை மடக்கிபிடித்து கைவிலங்கிட்டு பொலிஸ் நிலைய கைதி கூட்டின் வெளிபகுதில் வைத்திருந்த நிலையில் அந்த இளைஞன் தனது தலையை கூண்டின் கதவில் அடித்துக்கொண்டார்.

மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் அதனை தடுக்க முற்பட்டபோது அவரை வாயால் கடித்து அவரது சீருடையை கிழித்துள்ளார்.

அந்த பொலிஸ் உத்தியோகத்தரை காப்பாற்ற சென்ற இரு பொலிஸார் மீதும், இளைஞனுடன் அவரது தாயார், சகோதரிகள் இணைந்து தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

பொலிஸார் மீது குடும்பமே தாக்குதல்

காயமடைந்த 4 பொலிஸார் மற்றும் பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய இளைஞன் உட்பட 5 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இச் சம்பவத்தில் இளைஞன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்திய போது அவர்களை எதிர்வரும் 17ம் திகதிவரை விளக்கமறியல் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, கைது செய்யப்பட இளைஞன் பல்வேறு குற்றச் செயல்கள் மற்றும் வீதியல் செல்வோர் மீது தாக்குதல் நடாத்திய சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது

300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது

விவசாய தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த இலீக்சில், சுமார் 300 கிலோ கிராம் இலீக்சை திருடிச்சென்று விற்பனைச் செய்தனர் என்றக் குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சாமிமலை ஹோல்டன் தோட்டத்தில் சனிக்கிழமை (06) இடம்பெற்றுள்ளது.

300 கிலோ கிராம் லீக்ஸ் திருட்டு இருவர் கைது

விவசாய தோட்டத்தின் உரிமையாள செய்த முறைப்பாட்டை அடுத்து களவாடிய இலீக்சை நோர்வூட் நகரில் விற்பனை செய்தனர் என்றக்

குற்றச்சாட்டின் கீழ் இருவரை மஸ்கெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார தெரிவித்தார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இருவரும், ஹட்டன் நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் விநாயகமூர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 10 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வீடியோ