Posted in இலங்கை செய்திகள்

கடலுக்கு சென்ற மூவரை காணவில்லை

புத்தளம் கற்பிட்டி பகுதியிலிருந்து இயந்திரப் படகு ஒன்றில் மீன்பிடிக்கச் சென்ற 3 மீனவர்கள் இதுவரை கரைதிரும்பவில்லை என குடும்பத்தினர் தெரிவித்தனர்.

கடந்த வெள்ளிக்கிழமை (09) கற்பிட்டியிலிருந்து குறித்த படகில் சென்ற நிலையில் 10 நாட்களாக எவ்வித தொடர்புகளும் இன்றி தாங்கள் உள்ளதாக அவர்களின் குடும்பத்தினர் கவலை தெரிவிக்கின்றனர்.

கற்பிட்டி வன்னிமுந்தல் பகுதியைச் சேர்ந்த எம்.எஸ்.முஹம்மட் அலிகான் (வயது 26), முஹம்மட் நபீல் (வயது 45) மற்றும் கற்பிட்டி மணல்தோட்டம் பகுதியைச் சேர்ந்த நிசங்க (வயது 21)

திருமணமான மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக அந்த மீனவர்களின் குடும்பத்தினர் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மீன்பிடித் தொழிலுக்காக கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவரும் இதுவரை கரைதிரும்பவில்லை என கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும், கற்பிட்டி கடற்படை முகாமிலும் மூன்று மீனவர்களின் குடும்பத்தினர்களும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறினர்.

அத்துடன் கற்பிட்டி மீனவர்கள், பொதுமக்கள் ஆகியோரின் உதவியில் காணாமல் போன மூன்று மீனவர்களையும் தேடி வருவதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை, குறித்த மீனவர்கள் பயணித்ததாக கூறப்படும் 7088 இலக்கமுடைய இயந்திப்படகு ஒன்று மன்னார் மாவட்டத்தின் பியர் பிரதேசத்திலுள்ள தீட தீவு பகுதியில் ஒதுங்கியுள்ளதாக

மன்னார் பொலிஸ் ஊடாக நேற்று (17) இரவு தகவல் கிடைத்துள்ளது என மீனவர்களின் உறவினர்கள் குறிப்பிட்டனர்.

எனினும் படகு மாத்திரமே இவ்வாறு கரையொதிங்கியுள்ளது எனவும் மீனவர்கள் தொடர்பில் தகவல் எதுவும் கிடைக்கவில்லை என்றும் உறவினர்கள் மேலும் குறிப்பிட்டனர்.

இவ்வாறு மூன்று மீனவர்களும் காணாமல் போயுள்ளமை கற்பிட்டி பிரதேசத்தில் மீனவர்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியிருப்பதுடன், கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது

    நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது

    நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்துகின்றது

    அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் தலைமையில் 2021 ஜூலை 15ஆந் திகதி நடைபெற்ற பங்குதாரர் சந்திப்பொன்றில், நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பை இலங்கை அறிமுகப்படுத்தியது.

    ஆசியாவில் இதுபோன்ற ஒரு கட்டமைப்பைக் கொண்டுவந்த முதல் நாடாக இலங்கை அமைவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் – உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் மூலம் ஜப்பான் அரசாங்கத்தின் தாராள ஆதரவைப் பெறாவிட்டால் அது சாத்தியமானதாக அமைந்திருக்க முடியாது.

    முடக்கநிலை, தொலைநிலை வேலை மற்றும் மெய்நிகர் மாநாடுகளின் மயமான இந்த புதிய யுகத்தில், உலகளாவிய டிஜிட்டல் தகவல் தொடர்புகளை நம்பியிருக்கின்றமை வியத்தகு வகையில் வளர்ந்துள்ளது, எனினும் அந்தத் தரவுகளை அனுப்புவதற்கு செயற்கைக்கோள்கள் தான் காரணம் என பெரும்பாலான மக்கள் இன்னும் தவறாகக் கருதுகின்றனர். உண்மையில், அனைத்து சர்வதேச டிஜிட்டல் தரவு மற்றும் தகவல் தொடர்புகளில் 99% க்கும் மேற்பட்டவை உலக சமுத்திரங்களில் 1.8 மில்லியன் கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்தைக் கொண்டுள்ள 400 க்கும் மேற்பட்ட கேபிள்களின் வலையமைப்பினுடாக பரிமாற்றப்படுகின்றன.

    2019 நவம்பர் மற்றும் 2020 ஏப்ரல் மாதத்தில் முடக்கநிலை ஆரம்பமான காலப்பகுதிக்கு இடையில் இணையப் பாவனை நெரிசல் 25% முதல் 50% வரை அதிகரித்துள்ளதுடன், இது ‘புதிய இயல்பு’ நிலைக்கு ஏற்ப மேலும் தொடரும் என சர்வதேச கேபிள் பாதுகாப்புக் குழு மதிப்பிடுகின்றது. 2020 ஜூலை 31 உடன் நிறைவடைந்த காலாண்டில் ஸூம் வீடியோ தொடர்பாடல் மூலமான வருமானம் முந்தைய ஆண்டை விடவும் 355% ஆல் அதிகரித்துள்ளது. பரவலான தொலைநிலை வேலை, தொலைநிலைக் கல்வி மற்றும் தொலைநிலை தனிப்பட்ட வீடியோ தகவல் தொடர்புகளின் விளைவாக அதிகரித்துள்ள வீடியோ மாநாட்டு நிலையின் அறிகுறியொன்றே இதுவாகும்.

    இந்த உலகளாவிய வலையமைப்பில் எமது நம்பகத்தன்மையைப் பொறுத்தவரை, அது முடிந்தவரை நெகிழ்ச்சியுடன் இருப்பது மிகவும் முக்கியமானதாகும்.

    தொடக்கக் கருத்துக்களை வழங்கிய வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே, இலங்கையின் நியாயாதிக்கத்தில் பல கேபிள்களைக் கொண்டிருப்பதன் அச்சுறுத்தல்கள் மற்றும் பொறுப்புகளைப் புரிந்து கொண்டதன் மூலம், இலங்கைக்கு பாதுகாப்பு மற்றும் விரிதிறனை வழங்குவதற்காக நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்கள் குறித்த தேசிய திட்டத்தை உருவாக்குவதற்காக, போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டம் மற்றும் குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் போன்ற சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து இலங்கை பணியாற்றி வருவதாக எடுத்துரைத்தார்.

    சர்வதேச சட்டத்தின் கீழ், கேபிள்களின் பாதுகாப்பிற்கு பங்களிப்பதற்காக பொருளாதாரங்கள் மற்றும் சமூகங்களுக்கு இந்த கேபிள்களால் சேவை செய்வதற்கான அரசுகளின் பொறுப்பை எடுத்துக்காட்டும் ஐ.நா. பொதுச் சபைத் தீர்மானத்தை (A/RES/73/124, 2018 டிசம்பர் 13) போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபை – உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் திருமதி. கைட்லின் மெரிடித் குறிப்பிட்டார். ‘இலங்கையின் தேசியக் கட்டமைப்பின் அபிவிருத்தியிலும், கடல்சார் பாதுகாப்புத் துறையிலும் இன்னும் விரிவாக இலங்கையின் தொடர்ச்சியான தலைமைத்துவத்தை போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகளின் அலுவலகம் மதிப்பிடுவதுடன், போதைப்பொருள் மற்றும் குற்றம் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகம் இலங்கையுடனான தொடர்ச்சியான கூட்டாட்சியை எதிர்நோக்கியுள்ளதுடன், சிறந்த சில நடைமுறைகள் மற்றும் பாடங்களை பரந்த பிராந்தியத்திற்கு பரப்புவதற்குத் தொடங்குகின்றது’ என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

    இலங்கையில் குறித்த கட்டமைப்பை உருவாக்கும் பணிகள், குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையம் மற்றும் போதைப்பொருள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தின் உலகளாவிய கடல்சார் குற்றத் திட்டத்தின் தொழில்நுட்ப உதவியுடன், இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சமுத்திர விவகாரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவு ஆகியவற்றால் கூட்டாக மேற்கொள்ளப்பட்டது.

    தொடர்ச்சியான மெய்நிகர் ஆலோசனைகளினாலான பங்குதாரர்களின் ஈடுபாட்டைத் தொடர்ந்து, இந்த செயன்முறை 2020 செப்டம்பரில் தொடங்கியது. குற்றத் தடுப்புக்கான சர்வதேச மையத்தால் பரிந்துரைக்கப்பட்ட சர்வதேச சிறந்த நடைமுறைகளை இந்தக் கட்டமைப்பு உள்ளடக்கியுள்ளது.

    கட்டமைப்பின் தொடக்கத்தில், கொழும்பில் உள்ள ஜப்பானியத் தூதரகத்தின் தூதரகப் பொறுப்பாளரும், பிரதி தூதரகத் தலைவருமான திரு. கிடமுரா தோஷிஹிரோ, ‘வணிக மற்றும் நிதி மையமாக அபிவிருத்தியடைவதற்கான இலங்கையின் அபிலாஷைகளை தேசிய் கட்டமைப்பானது நிச்சயமாக ஒருங்கிணைக்கும் அதே வேளை, ‘நாட்டைக் கட்டியெழுப்பும் செழிப்பான பார்வை’ இல் திட்டமிடப்பட்டுள்ள உலகளாவிய கண்டுபிடிப்பு மையமாகவும் இருக்கும்’ எனக் குறிப்பிட்டார். ‘போதைப்பொருள் மற்றும் குற்றவியல் உலகளாவிய கடல்சார் குற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் அலுவலகத்துடன் நெருங்கிய கூட்டுறவில், தேசியக் கட்டமைப்பை உருவாக்குவது இலங்கைக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பிராந்தியத்திற்கும் ஒரு பெரிய திருப்புமுனையாகக் கருதப்படுவதுடன், இந்து சமுத்திரத்தில் இது ஒரு பிரகாசமான கலங்கரை விளக்கமாக அமைகின்றது’ என மேலும் சுட்டிக்காட்டப்பட்டது.

    ஃபைபர்-ஒப்டிக் நீர்மூழ்கிக் கப்பலைப் பாதுகாப்பதற்காக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியதன் அவசியம் குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைத் தீர்மானத்திற்கு இணங்க இலங்கையில் ஒரு வலுவான மற்றும் நெகிழக்கூடிய நீர்மூழ்கிக் கப்பல் கேபிள் சுற்றுச்சூழல் அமைப்பை உறுதி செய்வதன் முக்கியத்துவத்தை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஓஷத சேனநாயக்க மீண்டும் வலியுறுத்தினார். ‘முற்போக்கான தேசிய நீர்மூழ்கிக் கப்பல் பாதுகாப்பு மற்றும் விரிதிறன் கட்டமைப்பொன்றை செயற்படுத்துவதற்காக இந்த முயற்சி இப்போது உதவும் அதே வேளை இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் குறித்த பார்வையை மேலும் வலுப்படுத்துவதோடு, தொழில்நுட்ப சேவைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கான மையமாக இலங்கையை நிலைநிறுத்தும்’ என அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

    இந்து சமுத்திரத்தில் ஒரு கடல் மற்றும் கப்பல் பரிமாற்ற மையமாக இலங்கையைக் காட்டும் வகையில், கட்டமைப்பில் மற்றும் செயற்பாட்டில் உள்ள சட்டங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த உருவத்திற்கு மேலும் பங்களிக்கும்.

    இந்த செயற்பாட்டில் வெளிநாட்டு அமைச்சின் வகிபாகம் அனைத்து பங்குதாரர்களையும் ஒன்றிணைப்பதும், சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புக்களை இலங்கை நிறுவனங்களுடன் இணைப்பதும் இலங்கை கவனம் செலுத்த வேண்டிய ஒரு முக்கிய அம்சமாகும் என வெளிநாட்டு அமைச்சின் சமுத்திரங்கள், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க விளக்கினார். நீர்மூழ்கிக் கப்பல் கேபிள்களை ‘சிக்கலான உட்கட்டமைப்பாக’ அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் எடுத்துரைத்தார்.

    இந்த செயற்பாட்டில் இலங்கை பெற்ற அனுபவம் இந்து சமுத்திர விளிம்பு சங்கத்தின் உறுப்பு நாடுகளுடன் பகிர்ந்து கொள்ளப்படுவதுடன், அதில் இலங்கை இந்த ஆண்டின் துணைத் தலைமையாக பொறுப்பேற்பதுடன், பின்னர் 2023 முதல் 2025 வரை தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றது.

    அதிமேதகு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி. பி.பி. ஜயசுந்தரவின் பரிந்துரைகளுடன் வெளியீடு நிறைவடைந்தது.

    Posted in இலங்கை செய்திகள்

    வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தல்

    வட்டக்கச்சி கட்சன் வீதி தனிமைப்படுத்தல்

    கிளிநொச்சி வட்டக்கச்சி கட்சன் வீதி பகுதி தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    வட்டக்கச்சி கட்சன் வீதியில் 4 நாட்களில் 15 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன்,

    நேற்றைய தினம் மேலும் 10 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், தனிமைப்படுத்தப்பட்டள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

    இந்நிலையில் குறித்த பகுதி நேற்று (16) இரவு முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

    தனிமைப்படுத்தல் 14 நாட்களுக்கு இருக்கும் எனவும், மக்கள் நடமாடுவதை தவிர்க்குமாறும்,

    வர்த்தக செயற்பாடுகளை நிறுத்துமாறும் சுகாதார தரப்பினால் அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

      கத்தியால் வெட்டி ஒருவர் படுகொலை – எகிறும் வன்முறைகள்

      வெலிகம, கப்பரதொட்ட பகுதியில் இருவர் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

      நேற்று (16) இரவு 10.45 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ரெிவிக்கப்படுகின்றது.

      50 வயதுடைய ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

      காயங்களுக்கு உள்ளான நபர் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

      சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

        Posted in Uncategorized இலங்கை செய்திகள்

        வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

        வடக்கு கிழக்கிற்கு விசேட கொவிட் தடுப்பூசி திட்டம்: அமைச்சர் நாமல்

        வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக் கொடுப்பதற்கு விசேட

        நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கௌரவ இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார்.

        வடக்கு – கிழக்கு மாகாண மக்களுக்கான தடுப்பூசி ஏற்றும் செயற்பாட்டை விரைவுபடுத்துவது தொடர்பில் கௌரவ

        அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவர்கள், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் கலந்துரையாடி இவ்விசேட திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளார்.

        அதற்கமைய வடக்கு கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்

        எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

          Posted in இலங்கை செய்திகள்

          இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

          இலங்கையில் கொரோனா- 41பேர் உயிரிழப்பு

          இலங்கையில் நேற்றைய தினம் (15) மேலும் 41 பேர் கொரோனா வைரசு தொற்றின் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

          சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்

          திணைக்களம் இன்று (16) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

            மாகாணங்களுக்கு இடையிலான பஸ், ரயில் சேவைகள் இடைநிறுத்தம்

            மாகாணங்களுக்கு இடையில் மேற்கொள்ளப்பட்ட பஸ் மற்றும் ரயில் சேவைகளை ஆகஸ்ட் மாதம்

            முதலாம் திகதி வரை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம தெரிவித்தார்.

            இன்று(16) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில்,


            இதனடிப்படையில், நாளை (17) முதல் எதிர்வரும் ஆகஸ்ட் முதலாம் திகதி வரை மாகாணங்களுக்கிடையிலான பஸ் மற்றும் ரயில் சேவைகள் இடைநிறுத்தப்படும்.

            இருப்பினும் ஆகஸ்ட் மாதம் முதலாம் திகதி முதல் வரையறுக்கப்பட்ட வகையில் பஸ் மற்றும்

            ரயில் களை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கi மேற்கொள்ளப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் திலும் அமனுகம மேலும் தெரிவித்தார்

              Posted in இலங்கை செய்திகள்

              புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

              புதுக்குடியிருப்பு பாடசாலையில் 24 மாணவர்களை துரத்தி குற்றிய குளவி

              முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு, பாரதி மகா வித்தியாலயத்தில் கல்வி கற்க சென்ற மாணவர்கள் 24 பேரை குளவி துரத்தி குற்றியுள்ளது

              இதில் பாதிக்க பட்ட மாணவர்களை மூங்கிலாறு மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்

              சிலர் மேலதிக சிகிச்சைக்கு அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்ற பட்டுள்ளனர் ,மேற்படி சம்பவம் மாணவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து

              Posted in இலங்கை செய்திகள்

              பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

              பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல்

              மருதானை பொலிஸ் நிலையத்தில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

              தீயணைக்கும் பணிகளில் 3 தீயணைப்பு வாகனங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு சேவை திணைக்களம் கூறியுள்ளது.

              தீப்பரவலுக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.

              தீப்பரவல் தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

              Posted in இலங்கை செய்திகள்

              கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம்

              கொரனோ தாக்குதல் 10 குழந்தைகள் மரணம்

              இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ தாக்குதலில் சிக்கி


              பத்து சிறுவர்கள் பலியாகியுள்ளனர்


              மேலும் 490 சிறுவர்கள் பாதிக்க பட்டுள்ளதாக மருத்துவனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்

              Posted in இலங்கை செய்திகள்

              உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

              உளவுத்துறை போல மக்களை ஏமாற்றிய நால்வர் கைது

              இலங்கை குற்ற புலனாய்வு துறையினர் என தம்மை கூறி மக்களிடம் பண மோசடியில் ஈடுபட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்

              பொலிசாருக்கு கிடைக்க பெற்ற தகவலை அடுத்து இந்த கைது இடம்பெற்றுள்ளது

              ,கைதானவர்களிடம் தொடர் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                Posted in இலங்கை செய்திகள்

                யாழ்ப்பாணம் மாவட்டத்தில் -சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

                யாழ்ப்பாணம் மாவட்டத்தில் -சில கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

                யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் பிரிவொன்றும் புத்தளம் மாவட்டத்தில்

                பிரதேசமொன்றும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத்

                தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் பிராதானியும் இராணுவ தளபதியுமாக

                ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

                  1.5 மில்லியன் மொடர்னா தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

                  அமெரிக்காவில் உற்பத்தி செய்யப்படும் மொடர்னா தடுப்பூசி 1.5 மில்லியன் டோஸ்கள் சற்றுமுன்னர் நாட்டை வந்தடைந்துள்ளன.

                  கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் குறித்த தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.

                  இதேவேளை, நாட்டிற்கு இதுவரை 71 இலட்சம் சினோபார்ம் தடுப்பூசி டோஸ்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

                  அதேபோல், இந்நாட்டில் 30 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 13.5 சதவீதமானவர்களுக்கு தற்போதைய நிலையில் தடுப்பூசி டோஸ்கள் இரண்டும் செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன மேலும் தெரிவித்தார்.

                  இலங்கையில் தற்போது 4 விதமான கொவிட் 19 தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் 16 வயது முதல் திருமண செய்து கொள்ள சட்டம் அமூல்

                  இலங்கையில் 16 வயது முதல் திருமண செய்து கொள்ள சட்டம் அமூல்

                  இலங்கையில் விசேட சந்தர்ப்பங்களில் 16 முதல் 18 வயதினர் திருமணம் செய்து கொள்ள சட்ட

                  திருத்தத்தில் மாற்றங்கள் மேற்கொள்ள பட்டுள்ளன

                  இதனால் 16 வயது முதலானவர்கள் வாலிபர்கள் என்ற அடெல் என்ற பிரிவுக்குள் அடக்க படுகின்றனர் என தெரிவிக்க படுகிறது

                    Posted in இலங்கை செய்திகள்

                    100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி – மகிந்தா உத்தரவு

                    100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி – மகிந்தா உத்தரவு

                    இலங்கையில் இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத நூறு நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் புதிய உத்தரவுகளை பிரதமர் மகிந்த பிறப்பித்துள்ளார்

                    இவ்வாறு செய்வதன் ஊடக பல மில்லியன் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்பது மகிந்த கூட்டத்தின் கனவு

                    எனினும் உரிய முறையில் இந்த நகரங்கள் அபிவிருத்தி செய்ய படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    மக்களுக்கான திட்டங்கள் தொடரும்- அமைச்சர் டக்ளஸ்

                    மக்களுக்கான திட்டங்கள் தொடரும்- அமைச்சர் டக்ளஸ்

                    வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

                    கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால் அமைக்கப்பட்டுள்ள கடலட்டை குஞ்சு வளர்க்கும் நிலையத்தினை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.

                    அங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

                    கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதன் மூலம் எமது பிரதேச மக்களுக்கு ஏராளமான வேலை வாய்ப்புக்களையும் பொருளாதார நன்மைகளையும் பெற்றுக்கொள்ள முடியும் என்ற

                    அடிப்படையில், ஆய்வு ரீதியாகப் பொருத்தமான இடங்களை தெரிவு செய்து பண்ணைகளை அமைக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

                    கடலட்டைப் பண்ணைகள் தொடர்பாக மக்களுக்கு ஏற்பட்டுள்ள புரிதல் காரணமாக ஏராளமானோர் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதில் ஆர்வம் செலுத்தி வருகின்றனர். கடந்த

                    ஒன்றரை வருடங்களில் நூற்றுக்கணக்கான பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன. எதிர்காலத்திலும் ஆயிரக்கணக்கான பண்ணைகளை உருவாக்க திட்டமிடப்பட்டு வருகின்றன.

                    இவ்வாறான பண்ணைகளுக்கு இலட்சக்கணக்கான கடலட்டை குஞ்சுகளை இனப்பெருக்கம் செய்து வளர்க்க வேண்டிய தேவையுள்ளது.

                    இந்நிலையிலேயே, 2016, 2017 காலப் பகுதியில் அப்போதைய அரசாங்கத்திடம் அனுமதிகளை பெற்று, அரியாலையில் கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையத்தினை அமைத்த இலங்கை சீனக்

                    கூட்டு நிறுவனம், கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்துள்ளனர். இதற்கு தேவையான சட்ட ரீதியான அனுமதிகளை இதுவரை பெற்றுக்கொள்ளவில்லை.

                    கடலட்டைப் பண்ணையைப் பொறுத்தவரையில் அவசியமான அனுமதிகளைப் பெற்று செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டுமாயின் நீண்ட காலம் காத்திருக்க வேண்டியேற்படும்.

                    எனவே, நாரா – நக்டா – கடற்றொழில் திணைக்களம் மற்றும் பிரதேச செயலகம் ஆகியவற்றின் ஆலோசனைகளைப் பெற்று மக்களுக்கு பாதிப்புக்கள் ஏற்படாது என்று

                    அடையாளப்படுத்தப்படுகின்ற இடங்களில் கடலட்டைப் பண்ணைகளை அமைப்பதற்கு தழுவல் அடிப்படையிலான அனுமதிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

                    அதேவேளை, எமது மக்களின் பொருளாதார நலன்களையும் நாட்டிற்கான அந்நியச் செலாவணியையும் பெற்றுத் தரக்கூடிய முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

                    இவ்வாறான ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக இநதியா, மாலைதீவு, பங்களாதேஸ், நோர்வே, அமெரிக்கா போன்ற நாடுகளுடன் கலந்துரையாடி இருக்கின்றேன்.

                    அண்மையில்கூட இந்தியத் தூதுவரை சந்தித்து எமது கடற்றொழிலாளர்களுக்கான வாழ்வாதார ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியிருக்கின்றேன். அதேபோன்று முதலீடுகளையும் தொழில்நுட்ப உதவிகளையும் கோரியுள்ளேன்

                    இவ்வாறான நிலையில்தான், கடந்த அரசாங்கத்தினால் நாட்டினுள் செயற்பட அனுமதி அளிக்கப்பட்ட குயிலான் நிறுவனம் கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையத்தினை கௌதாரிமுனையில் அமைத்திருக்கின்றது.

                    இதுதொடர்பாக நேரடியாக நிலைமைகள் ஆராயப்பட்டுள்ளன. சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடனும் கௌதாரிமுனை கடற்றொழிலாளர்களுடனும் கலந்துரையாடி எமது மக்களுக்கும் நாட்டிற்கும் பாதிப்பில்லாத தீர்மானம் மேற்கொள்ளப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

                    மேலும், கௌதாரிமுனை கடலட்டை குஞ்சு வளர்ப்பு நிலையம் தொடர்பாக அரசியல் நோக்கத்தோடு மக்களைக் குழப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்த கடற்றொழில் அமைச்சர், இவ்வாறான சுயநலப் பூச்சாண்டிகளினால் தன்னுடைய மக்கள் நலச்

                    செயற்பாடுகளை தடுக்க முடியாது எனவும் மக்களுக்கு தேவையானதையும் சரியானதையும் செய்வதற்கு எதிராக எத்தகைய எதிர்ப்புக்கள் ஏற்பட்டாலும் எதிர்கொள்ளத் தயங்கப்

                    போவதில்லை. கடந்த காலங்களில் இவ்வாறான பல சலசலப்புக்களையும் சவாடல்களையும் எதிர்கொண்டு வெற்றி பெற்றமையை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      டொலரை அரசாங்கம் விழுங்கிவிட்டது- ரணில்

                      டொலரை அரசாங்கம் விழுங்கிவிட்டது- ரணில்

                      ஐக்கிய அமெரிக்க டொலர், பிரச்சினையிலிருந்து இருந்து அரசாங்கத்தால் தலையை தூக்கிக்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப்

                      பட்டியல் எம்.பியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம்
                      டொலரை விழுங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.

                      “டொலர், கைவசம் இன்மையால், கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கும் எரிபொருள் அடங்கிய கப்பலும் சிக்கிக்கொண்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடன் வந்திருக்கும்

                      அந்தக் கப்பலுக்கு டொலரை செலுத்தாவிடின், எரிபொருள்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.

                      இலங்கை தற்போது அந்நிய செலாவணி பற்றாக்குறையை மையமாகக் கொண்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது நமது அந்நிய செலாவணி இருப்பு 4 பில்லியன்

                      டொலர்களாகும். ஆண்டின் நடுப்பகுதியில் 1 பில்லியன் டொலர் பத்திரக் கடனை
                      செலுத்தவேண்டும். அதனை செலுத்திய பின்னர், கருவூலத்தில் 3 பில்லியன் டொலர் இருப்பு மட்டுமே உள்ளது என்றார்.

                      Posted in இலங்கை செய்திகள்

                      சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

                      சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு

                      பைஷல் இஸ்மாயில் –

                      சம்மாந்துறை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வைத்திய உபகரணங்களுடன் கணினி உள்ளிட்ட வைத்தியசாலைக்கு தேவையான பல உபகரணங்களை கிழக்கு மாகாண சுதேச

                      மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி திருமதி இ.ஸ்ரீதர் வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் திருமதி எம்.எஸ்.றிஸ்க்காவிடம் கையளித்து வைத்தார்.


                      இதன்போது, வைத்தியசாலையில் நிலவிவரும் குறைபாடுகள் தொடர்பான விடயங்கள் பற்றிய தகவல்களை வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் திருமதி

                      எம்.எஸ்.றிஸ்க்காவிடம் கேட்டறிந்துகொண்டார். இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய ஆயுர்வேத இணைப்பாளர் டொக்டர் எம்.ஏ.நபீல், வைத்தியர்களான ஏ.எல்.நஸ்றின் ஜஹான், எம்.ரீ.சாக்கிரா

                      பானு, சுதேச மருத்துவ திணைக்கள கணக்காளர் என்.பாலநந்தன், பிரதம முகாமைத்துவ உத்தியோகத்தர் திருமதி சி.ரி.நிர்மலநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்

                      .

                        Posted in இலங்கை செய்திகள்

                        பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது

                        பறக்கும் படை வேட்டையில் 164 பேர் கைது

                        இலங்கையில் தொடர்ந்து பரவி வரும் கொரனோ நோயின் கட்டுப்பாட்டு விதிகளை மீறி செயல்

                        பட்ட 164 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்


                        இவ்விதம் கைது செய்ய பட்டவர்கள் முக கவசம் அணியாது சென்றதுடன் ,மாகாண எல்லைகளை தாண்டிய குற்ற செயல்களில் கைதாகியுள்ளனர்

                          Posted in இலங்கை செய்திகள்

                          காவல்துறை வேடமிட்டு கொள்ளையடித்த திருடர்கள்

                          காவல்துறை வேடமிட்டு கொள்ளையடித்த திருடர்கள்

                          இலங்கையில் சிங்கள காவல்துறை அதிகாரிகள் என கூறி வீடுகளுக்குள் நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்

                          போலீஸ் அதிகாரிகளாக வேடமிட்டு திடீர் சோதனை என்ற பெயரில் இந்த கொள்ளை சம்பவம் இடம்பெற்றுள்ளது

                          மேற்படி கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது செய்ய பட்டுள்ளனர்