இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது

மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது

கலபட தோட்டத்திற்கும் மவ்ஜூன் தோட்டத்திற்கும் காணிகள் இந்த அரசாங்கத்தின் மறுசீரமைப்பின் கீழ் வேறு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த மறுசீரமைப்பிற்கு அந்த தோட்டத்தில் வாழும் மக்களின் குடியிருப்புகள் அவ்வாறே இருக்கிறது. அவர்களின் EPF,ETF நிலுவைகளும் அவ்வாறே இருக்கிறது.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் தோட்டத்தின் பெரும் பகுதி வெளியாட்களுக்கு வழங்குவதால் அந்த மக்களின் வாழ்வாதாரம், வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்

அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்

பிரதமர் பதவியை பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றிருந்தால் திருடர்களுடனயே காலம் கடத்த நேரிட்டிருக்கும்.வரும் தேர்தல்களில் கூட திருடர்களுடன் சேர்ந்தே வாக்கு கேட்க வேண்டியிருந்திருக்கும்.திருடர்களை சட்டத்தின் முன் பாதுகாத்திருந்திருக்க வேண்டியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திருடர்களை பிடிக்க அரச அதிகாரம் தேவையில்லை என்றும்,அரச அதிகாரம் இல்லாமலயே உயர் நீதிமன்றத்தால் நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வெளிக்கொண்டு வர முடிந்தது.தான்

ஜனாதிபதியாக பதவி ஏற்றிருந்தால் திருடர்கள் யார் என்று கண்டு பிடிக்க முடியாது போயிருக்கும் என்றும்,உயர் நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை

வழங்கினாலும் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியைப் போன்று கண்டும் காணாமலும் இருக்க நேரிட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்

இரண்டு நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் தரப்பு அமைச்சர்கள் துறைமுக அதிகா ரசபைக்கு சொந்தமான இரு கப்பல்களைப் பயன்படுத்தி கடல் நடுவில் விருந்துபசார கொண்டாட்டம் போட்டனர்.

வங்குரோத்தடைந்த நாட்டில் இவ்வாறானதொரு விடயம் இடம்பெற்றதாகவும்,தானும் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ இருந்திருந்தால், ரணில் விக்கிரமசிங்க போன்று இவ்வாறான சட்ட விரோத செயல்களை கண்டுகொள்ளாதது போன்று செயற்பட்டிருக்க நேரிட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 65 ஆவது கட்டமாக,மதுகம விதிய பண்டார வித்தியாலத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (11) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சோசலிசம் என்பது வார்த்தைக்கு மட்டுமே. எனவே அதற்கு ஏமாறாதீர்கள்,

சோசலிசம் என்ற பெயரில் வீதியில் இறங்கி போராடும் புரட்சியாளர்களின் பிள்ளைகள் கூட வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர்தர ஆடைகளை அணிந்து பயின்று வந்தாலும் அந்த வசதிகளை இந்நாட்டு மக்களுக்கு வழங்குதற்கு விருப்பம் இல்லாது செயற்பட்டு வருகின்றனர்.

சோசலிசம், சமத்துவம்,நீதி,நியாயம் என்று பேசினாலும் அவை வார்த்தைகளுடன் மாத்திரம் மட்டுப்பட்டவை என்றும், 2019 இல் கூட வெற்று கோஷங்களுக்கு செவி சாய்த்து ஏமாற்றியதாலும் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது.இம்முறையும் அதே போன்ற பரப்புரைகளை நம்பி ஏமாந்தால் நாடு இன்னும் ஆழமான பாதாளத்திற்குச் செல்லும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை
Posted in இலங்கை செய்திகள்

முறிகண்டியில் இடம் பெற்ற விபத்தில் மூவர்காயம்

முறிகண்டியில் இடம் பெற்ற விபத்தில் மூவர்காயம்

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் சிறுகாயங்களிற்குள்ளாகினர்.

குறித்த விபத்து நேற்று (11) இரவு 10 மணியளவில் முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்துள்ளது.

அதே திசையில் பயணித்த ரிப்பர் வாகனம் பேருந்தின் பின்னால் மோதியுள்ளது. சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான பயணிகள் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சீர் செய்தனர்.

பெயரளவில் மாத்திரம் முறிகண்டி பொலிஸ் காவலரண் காணப்படுவதாகவும், அதனால் எப்பயனும் மக்களுக்கு இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முறிகண்டியில் இடம் பெற்ற விபத்தில் மூவர்காயம்

மாங்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க கால தாமதம் ஆனதால், பெரும் அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டனர்.

மாங்குளம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரியின் அசமந்த போக்கு தொடர்பில் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை மக்களால் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எவ்வித மாற்றமும் இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

இடம்பெறவுள்ள மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

“எதிர்காலத்தில் நீர் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இதனூடாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயற்படபோவதில்லை. தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று.

எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் நிச்சயமாக நீர் கட்டணமும் குறைக்கப்படும்.

வீடியோ

மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

சைபர் மோசடிகளில் ஏராளமானோர் பணத்தை இழப்பது குறித்து நாம் ஏற்கெனவே ஏராளமான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற மோசடிகளில் இது மிகவும் விநோதமானது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் மங்கேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஃபேஸ்புக்கில் இருந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ​​”அனைத்திந்திய கர்ப்பிணி வேலை சேவை” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு விளம்பர வீடியோவைக் கண்டார். அது அவரை ஈர்த்ததால், அதைப் பார்க்க முடிவு செய்தார்.

அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வேலை உண்மையிலுமே ஒரு அருமையான வேலையாகத் தோன்றியது. அதில் நிறைய பணம் மற்றும் பல்வேறு கவர்ச்சியான பொருட்கள் கிடைக்கும்.

அது என்ன வேலை? ஒரு பெண்ணை கர்ப்பமாக்குவது தான் அந்த வேலை. ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கினால் ஏராளமான வசதி வாய்ப்புகள் வந்து சேரும் என அந்த விளம்பர வீடியோ கூறியது.

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

நிச்சயமாக, அது உண்மையாக இருக்கும் என்று அவர் நம்பினார். இதுவரை, ஒரு திருமண அலங்கார நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 15,000 ரூபாய் ($180; £142) சம்பாதிக்கும் 33 வயதான அவர், ஏற்கனவே இந்த மோசடி செய்பவர்களிடம் 16,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்கிறார்கள்.

ஆனால் வட இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த மங்கேஷ் என்பவர் மட்டும் இந்த மோசடியில் சிக்கவில்லை. இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கின்றனர்.

பிகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள சைபர் செல் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்த் பிபிசியிடம் இது குறித்துப் பேசியபோது, பெரிய அளவிலான ஒரு மோசடியில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கு ஏமாந்தவர்கள் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில் ஏமாற்றப்பட்டனர் என்றும் கூறினார்.

குழந்தை இல்லாத பெண்ணுடன் ஓட்டலில் இரவு நேரம் தங்கினால் பணம் தருவதாக அந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது.

இதுவரை, அந்தக் குழுவைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டரை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் 18 பேரை தேடி வருகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கிறது.

“இந்தக் கும்பல் ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. ஒருவேளை அவமானம் காரணமாக யாரும் புகாரளிக்காமல் இருக்கலாம்,” என்று கல்யாண் ஆனந்த் விளக்கினார்.

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

பருத்தித்துறை பஸ் நிலையத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ் உரிமையாளரும் சாரதியுமான தேவகுமார் என்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த சாரதி மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்

ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசி ஆன்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசி ஆன்

ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசி ஆன்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆனி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அன்புடன் வரவேற்றார்.

அதன் பின்னர் இளவரசி ஆனி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் இளவரசி ஆனியும் பதிவைச் செய்துள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி

மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி

இலங்கை துறைமுக அதிகார சபையினால் இரண்டு அகழ்வாராய்ச்சிக் கப்பல்களில் வரி செலுத்துவோரின் செலவில் ஆளும்கட்சி பாராளுமன்ற

உறுப்பினர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இலவசமாக சுற்றுப்பயணம் வழங்கப்பட்டுள்ளது.

25க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த இலவச களிப்பு சவாரியில் இணைந்துள்ளனர், இது

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு (SLPA) கிட்டத்தட்ட ரூ. 5 மில்லியன் செலவாகும் என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.

மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி

இருப்பினும், இரண்டு கப்பல்களுக்கான எரிபொருளுக்கான மொத்த செலவு சுமார் ரூ. 300, 000 எனவும் இந்த கப்பல்கள் வெளியில் இல்லாமல் துறைமுகப்

பகுதிக்குள் மட்டும் சவாரி சென்றதால் எரிபொருளுக்கான கட்டணத்தை மட்டுமே SLPA செலுத்தியது. எனவே செலவு குறைவாக இருந்தது, நம்பகமான SLPA வட்டாரங்கள் தெரிவித்தன.

50 எம் பிக்கள் கடலில் பார்ட்டி இன்ப சுற்றுலா
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

50 எம் பிக்கள் கடலில் பார்ட்டி இன்ப சுற்றுலா

50 எம் பிக்கள் கடலில் பார்ட்டி இன்ப சுற்றுலா

துறைமுக அதிகார சபைக்கு சொந்தமான ஹன்சகாவா மற்றும் தியகாவுல்லா என்ற இரண்டு சிறிய கப்பல்களில் 50க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் செவ்வாய்க்கிழமை (09) உல்லாசப் பயணத்தை மேற்கொண்டுள்ளனர் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ, பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (11) குற்றஞ்சாட்டினார்.

மக்கள் பெரும் துன்பப்பட்டு கொண்டிருக்கும் நிலையில், கடலில் பார்ட்டி வைத்துள்ளனர் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார். பாராளுமன்றத்தில் தற்போது நடைபெற்றுக்கொண்டிருக்கும் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை வழிமொழிந்து உரையாற்றிக்கொண்டிருக்கின்றார்.

முந்திய செய்தி..

இலங்கை துறைமுக அதிகாரசபை இந்த இரண்டு சிறிய இழுவைப் படகுகளையும் ஒதுக்கியுள்ளதுடன், இவற்றில் சுற்றுப்பயணத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான அனைத்து உணவு மற்றும் குளிர்பானங்களையும் அதிகார சபையினால் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

50 எம் பிக்கள் கடலில் பார்ட்டி இன்ப சுற்றுலா

பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த உல்லாசப் பயணத்திற்கு எடுத்துச் சென்ற இரண்டு கப்பல்களும் துறைமுகத்தில் குவிந்து கிடக்கும் மணலை அகற்றுவதற்கு பயன்படுத்தப்படும் இரண்டு காப்புக் கப்பல்கள் எனவும் துறைமுக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஐம்பது பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக தயாரிக்கப்பட்ட இந்த இன்ப பயணத்திற்காக துறைமுக அதிகாரசபை 25 இலட்சம் ரூபாவிற்கு மேல் செலவிட்டுள்ளதாக பத்திரிகைகள் தெரிவிக்கின்றன.

துறைமுக இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவினால் தயாரிக்கப்பட்ட இந்த இன்ப பயணத்திற்கு தேவையான உணவு மற்றும் பானங்கள் மற்றும் பொருட்களின் பட்டியலை வழங்குமாறு திங்கட்கிழமை (08) துறைமுக அதிகார சபையின் தலைவரிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

கடிதத்தின் படி, சீஸ் சாண்ட்விச்கள், வெண்ணெய் கேக், ரோல்ஸ், ஐஸ் காபி, பேப்பர் கப், சிறிய கண்ணாடி, கரண்டி மற்றும் முட்கரண்டி, சிறிய தட்டுகள், நாற்காலிகள் (கவர்களுடன்) ஒவ்வொரு வகையிலும் 55, 60 தண்ணீர் போத்தல்கள் , 5 டிஷ்யூ பாக்கெட்டுகள் , 10 நாற்காலிகள் மற்றும் மேசைகள் கொண்ட கூடாரமொன்று கோரப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அந்த கடிதத்தில் எம்.பி.க்களுக்கு உணவு வழங்க 5 துறைமுக ஊழியர்களை ஏற்பாடு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த பயணத்திற்கு பயன்படுத்தப்பட்ட துறைமுக அதிகாரசபைக்கு சொந்தமான இரண்டு கப்பல்களும் டிசம்பர் 13 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளன.

புத்தாண்டின் ஆரம்பத்திற்காக அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தயார்படுத்தப்பட்ட கொழும்பு துறைமுக வளாகத்தின் குறுகிய கடற்படை சுற்றுப்பயணத்தில் பங்குபற்றிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சர் பிரேமலால் ஜயசேகர தனித்தனியாக அழைப்பிதழ்களை வழங்கியுள்ளார் என தெரியவருகின்றது.

வீடியோ

உணவாக உரிமையாளர் சுட்டு கொலை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் மரணம்

நவகமுவ, துன்ஹந்தஹேன பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவத்தில் படுகாயமடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கஹதுடுவைக்கு அருகில் பெண்ணொருவர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் வெளிநாடுகளில் இயங்கி வரும் பெரும்

போதைப்பொருள் கடத்தல்காரரான எல்லாவல லியனகே தர்மசிறி பெரேரா என்றழைக்கப்படும் ‘தர்மசிறி’யின் மூத்த சகோதரர், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளார்.

47 வயதான எல்லாவல லியனகே டன்ஸ்டன் பிரசாத் பெரேரா, பாதிக்கப்பட்ட பெண்ணின் காதலன் ஆகியோர், செவ்வாய்க்கிழமை இரவு நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றபோது, ​​BIA இல் வைத்து கைது செய்யப்பட்டனர்.

41 வயதான சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபையின் ஊழியர் ஒருவர், செவ்வாய்க்கிழமை மாலை கஹதுடுவ இடைமாற்றுக்கு அருகில் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

பிலியந்தலை, மடபாத பிரதேசத்தில் வசிக்கும் பாதிக்கப்பட்ட நபர், வேலை முடிந்து வீடு திரும்பும் போது தாக்குதலுக்கு உள்ளானார்.

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, ​​இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது மனைவி நான்கு பிள்ளைகளையும் அவரையும் வேறொரு நபருடன் விட்டுச் சென்றதாக விசாரணை அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அதன் பின்னர், அவர் பாதிக்கப்பட்ட பெண்ணுடன் சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும், பல நாட்களில் கஹதுடுவ அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் காரில் வந்து, வேலை முடிந்து வீடு திரும்பும் போது அவரது வீட்டிற்கு அருகில் இறக்கிவிட்டுச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

விசாரணைகளின்படி, அவர் கொலை செய்யப்பட்ட நாள் காலை முதல் அவருடன் தொலைபேசியில் வாக்குவாதம் செய்துள்ளார்.

சந்தேக நபர் கொழும்பில் விசா ஆலோசனை அலுவலகம் ஒன்றையும் கட்டிட நிர்மாண நிறுவனம் ஒன்றையும் நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழமை போன்று செவ்வாய்கிழமை மதியம் அவளை அழைத்துச் செல்லச் சென்ற போதும், அவர் தன்னுடன் வர மறுத்து முச்சக்கர வண்டியில் செல்ல முற்பட்டதால் ஆத்திரம் காரணமாக தனது காரில் இருந்த கூரிய ஆயுதத்தை எடுத்து கழுத்தை அறுத்ததாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

அவளைக் கொல்லும் நோக்கத்தில் தான் தாக்கவில்லை என்றும், பின்னர் அவர் இறந்துவிட்டதாகத் தெரிய வந்ததாகவும், பின்னர் வெளிநாடு செல்வதற்காக விமான நிலையத்திற்கு வந்ததாகவும் அவர் பொலிஸாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பெண் படுகொலை சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவருக்கு சந்தேகநபர் பல தடவைகள் மிரட்டல் விடுத்துள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக சந்தேகநபருக்கும் குறித்த பெண்ணுக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரின் அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு குறித்த பெண் தனது கணவருடன் வெளிநாடு செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதேவேளை, கொலைச் சம்பவத்திற்காக சந்தேகநபர் வந்த காரை, சந்தேகநபரின் பெக்ககம வீட்டுக்கு முன்பாக நேற்று பிற்பகல் கஹதுடுவ பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.

சந்தேக நபர் கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

தற்போது எமது youtube செய்திகளை பார்வையிட விபரம்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

தற்போது எமது youtube செய்திகளை பார்வையிட விபரம்

தற்போது எமது youtube செய்திகளை பார்வையிட விபரம்

வணக்கம் உறவுகளே எமது youtube பக்கங்கள் இதில் பார்வை இடுக

கீழ் வரும் பக்கத்தின் ஊடாக வரும் நாட்களில் செய்திகள் பகிரப்படும் ,உங்கள் அன்பான மொழிகளுக்கும் இடைவிடாத தொடர்ச்சியான ஆதரவிற்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள் .

எமது இந்த இணைய பக்கத்தின் ஊடக அனைத்து

எமது வைபர் குழுவில் இணைந்து கொண்டு அனைத்து செய்திகளில் உடனுக்குடன் பெற்று கொள்ளுங்கள் வைபரில் இணைய இதில் அழுத்துங்க

youtube tamil news என்கின்ற எமது சணல் இனி இயங்காது .எமது பிரதான பக்கம் வாயிலாக இனைந்து கொள்ளுங்கள் மக்களே

மகிந்தா குடும்பம் விசாரிக்க படவேண்டும் ஸ்ரீதரன்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்

கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்


பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, விவாதத்துக்கு உட்படுத்தப்பட்டு கொண்டிருக்கும் பயங்கரவாத எதிர்ப்பு சட்டம், கொழுக்கட்டை, மோதகம் ​

போன்றது என்று வியாக்கியானம் செய்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், வடிவங்கள் மாறியுள்ளன எனத் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக்கொண்டிருக்கும் அவர்,பயங்கரவாத தடைச்சட்டத்தால், ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டனர்.

கொழுக்கட்டை மோதகம் என்கிறார் ஸ்ரீதரன்

ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். சரணடைந்த பல போராளிகள் காணாமல் போயுள்ளனர். ஒப்படைக்கப்பட்ட கணவன்,மனைவி மற்றும் பிள்ளைகள் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கத்தின் தலைவி சி.ஜெனிற்றா கைது செய்யப்பட்ட விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

வடகிழக்கு நீதிமன்றத்தின் ஊடாக பிரிக்கப்பட்டது. அதனூடாக நீங்கள் அடைந்த நன்மைகள் என்ன? சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்வதால் மட்டுமே போதாது என்றார்.

வீடியோ

பதுளையில் பாரிய மண்சரிவு 4 வாகனங்கள் சேதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பதுளையில் பாரிய மண்சரிவு 4 வாகனங்கள் சேதம்

பதுளையில் பாரிய மண்சரிவு 4 வாகனங்கள் சேதம்

இரு வாகனங்கள் முழுமையாக மண்ணுக்குள் புதையுண்டுள்ளதோடு இரு வாகனங்கள் பகுதியளவு சேதமடைந்துள்ளன.

இரு சொகுசு வாகனங்கள், வேன் மற்றும் ஆட்டோவொன்றே இவ்வாறு மண்சரிவில் சிக்குண்டு சேதமடைந்துள்ளன.

சேதமடைந்த வாகனங்களுள் மூன்று, அப்பகுதியில் உள்ள கராஜுக்கு வந்திருந்தவை எனவும், ஆட்டோ அவ்வழியாக பயணித்த வாகனம் எனவும் தெரியவந்துள்ளது.

மேலும் இவ்வனர்த்தத்தில் எவருக்கும் ஆபத்து ஏற்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீடியோ

வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்

வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்

நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) மேற்கொண்ட ஆய்வில், பெறுமதி சேர் வரி (VAT) அதிகரிப்பு சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது.

இன்றைய பாராளுமன்ற அமர்வில் பிரதமரின் கேள்வி நேரத்தில், SJB பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர் சியம்பலாபிட்டிய, VAT அதிகரிக்கப்பட்ட போதிலும்

தேங்காய் எண்ணெய், பருப்பு, கோதுமை மா மற்றும் சில அரிசி வகைகளின் விலையில் மாற்றம் ஏற்படவில்லை என தெரிவித்துள்ளார்.

ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் விலை வற் அதிகரிப்பிற்கு முன்னரும் தற்போதும் ரூ.600 ற்கே விற்பனையாகிறது.

வற் அதிகரிப்பால் பெருமளவு பாதிப்பில்லை அமைச்சர்

ஒரு கிலோ கிராம் பருப்பு ரூ. 320 ,ஒரு கிலோ கிராம் கோதுமை மா ரூ. 220 என அதே விலையில் விற்பனையாகிறது.

VAT அதிகரித்த பின்னல் ஒரு முட்டையின் விலை ரூ.60 இலிருந்து ரூ.51 ஆக குறைந்துள்ளது.

” VAT அதிகரிப்பு குறித்து எம்.பி.க்கள் மத்தியில் பரபரப்பு இருந்தாலும்,சந்தை பரபரப்படையவில்லை,” என்று இராஜாங்க அமைச்சர் மேலும் கூறினார்.

இந்தக் கருத்துக்களுக்குப் பதிலளித்த எம்.பி. மரிக்கார், நாட்டில் உள்ள பெரிய பல்பொருள் அங்காடியின் சுமார் 500 விற்பனை நிலையங்கள் புத்தாண்டு தொடக்கத்திற்குப் பிறகு தங்கள் விற்பனை வீழ்ச்சியின் விளைவாக மூடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.

டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் பலி

டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் பலி

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட, ஏழு புளியடி மீள்குடியேற்ற கிராமப் பகுதியில் இன்று (10) காலை 6.30 மணியளவில் டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

பெரிய கிண்ணியா கட்டையாறு பகுதியைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 58 வயதுடைய உனைதீன் ரபாய்தீன் என்பவரை இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.

ஏழுபுளிடியாளியில் வசித்து வந்த இவர், தனது மனைவி வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக குவைட்டுக்குச் சென்று ஒன்றரை வருடங்களின் பின் மீண்டும் வீடு திரும்பி உள்ளார்.

வெளிநாட்டில் இருந்து வந்து ஐந்து நாட்களேயான நிலையில் , இருவருக்கும் இடையிலான கருத்து முரண்பாடுகள், சில வாய் தர்க்கங்கள் ஏற்பட்டுள்ளன.

டைனமைன்ட் வெடித்ததில் ஒருவர் பலி

வெளிநாட்டில் இருந்து வந்த மனைவி தனது கணவனுடன் அன்புடன் வாழ விருப்பமில்லை என்ன கூறியுள்ளார்.

இதன் காரணமாக மனம் சோர்வடைந்த கணவன், வெடித்து செத்துப் போவேன் என பலரிடம் கூறியுள்ளார்.

கூறியபடியே இன்று (10) காலை 6.30க்கு தனது இடுப்பில் வெடிக்கும் டைனமைன்ட் வெடிப்பொருளைக் கட்டிக் கொண்டு வெடிக்கவைத்து உயிரிழந்துள்ளார்.

இறந்தவரின் சடலம், ஏழு புளியடி மேல் குடியேற்ற கிராமத்தில் வைக்கப்பட்டுள்ளன. மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சொர்க்கத்திற்கு செல்ல முயன்ற 30 பேர் மீட்பு

சொர்க்கத்திற்கு செல்ல முயன்ற 30 பேர் மீட்பு

சொர்க்கத்திற்கு செல்வதற்காக பூமியில் உயிர் துறக்க வேண்டும் என்ற மூட நம்பிக்கையை பரப்பி ஏழு பேரை தற்கொலைக்குத் தூண்டியதாக கூறப்படும்

ருவன் பிரசன்ன குணரத்ன என்ற நபரின் “மிசாதிடு” கும்ப லுடன் நேரடியாக தொடர்புக்கொண்ட 30 பேர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை மற்றும் அம்பலாங்கொடை பிரதேசங்களில் , பௌத்த தத்துவம் எனக் கூறி பத்து வருடங்களாக கட்டுக்கதைகளை பரப்பி வருவதாக

சொர்க்கத்திற்கு செல்ல முயன்ற 30 பேர் மீட்பு

கூறப்படும் ருவன் பிரசன்ன என்ற நபர் தொடர்பில் பொலிஸாரும் புலனாய்வுப் பிரிவினரும் இணைந்து ஆரம்பித்த விசாரணையின் போதே குறித்த 30 பேரும்

இனங்காணப்பட்டுள்ளதுடன், இக் குழுவில் சில பிக்குகளும் உள்ளடங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் குறித்த முப்பது பேரை அவர்களது மூட நம்பிக்கை தொடர்பிலான கருத்துக்களிலிருந்து மீட்பதற்காக பல திட்டங்களை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

வீடியோ

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான குற்றச்சாட்டில் இருந்து சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க, தேசிய பொலிஸ் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழுவினால் விடுவிக்கப்பட்டுள்ளார்.

குறித்த விடுவிப்பு தொடர்பில் தேசிய பொலிஸ் ஆணைக்குழு கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி பொலிஸ் தலைமையகத்திற்கு எழுத்து மூலம் உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இது தொடர்பான அறிக்கையின் பிரதிகள் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.

அன்றைய மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் நந்தன முனசிங்க, கொழும்பு மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த தேசபந்து தென்னகோன், லலித் பத்திநாயக்க மற்றும் நிலாந்த ஜயவர்தன

(முன்னாள் அரச புலனாய்வு தலைவர்) ஆகியோர் ஈஸ்டர் தாக்குதலைத் தடுக்கத தவறியதற்கான குற்றச்சாட்டை எதிர்கொண்டனர்.

ஈஸ்டர் தாக்குதல் குற்றச்சாட்டிலிருந்து DIG விடுவிப்பு

குற்றப்பத்திரிகைகள் வழங்கப்பட்டு, இடமாற்றங்கள் செய்யப்பட்டு, முதற்கட்ட விசாரணைகள் தொடங்கப்பட்ட நிலையில், விசாரணைகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. எவ்வாறாயினும், ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு, இந்த பொலிஸ் அதிகாரிகளை அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்து தனது நடவடிக்கைகளை தொடர்ந்தது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 24 ஆம் திகதி, ஈஸ்டர் தாக்குதலைத் தடுப்பதில் அலட்சியமாக இருந்ததாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க மீது ஜனாதிபதி ஆணைக்குழு மீண்டும் குற்றஞ்சாட்டியது.

சிவில் அதிகாரிகள் உட்பட மூவரடங்கிய குழு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலாளர் தாமர டி பெரேரா தெரிவித்துள்ளார்.

குறித்த அறிக்கையின்படி, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் லலித் பத்திநாயக்க விடுதலை செய்யப்பட்டுள்ளார். இவர் தற்போது மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றி வருகின்றார்.

விசாரணைகள் நிறைவடைந்தவுடன் குற்றச்சாட்டுகள் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மற்ற அதிகாரிகள் பற்றிய அறிக்கையை குழு சமர்ப்பிக்கும் என்று அவர் கூறினார்.

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி

சவூதி அரேபியாவில் பணிபுரியும் போது விபத்துக்குள்ளான இலங்கையர் ஒருவர் தற்போது மிகவும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பஸ்யால பிரதேசத்தை சேர்ந்த ரசிந்த என்ற நபரே இவ்வாறு விபத்தில் சிக்கியவராவார்.

பணியிடத்தில் ஏற்பட்ட விபத்தில் அவரது முள்ளந்தண்டு சேதமடைந்தது.

அவர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ரசிந்த பணிபுரிந்த நிறுவனம் அவரை வைத்தியசாலையில் இருந்து எவ்வித வசதிகளும் அற்ற இடத்தில் தடுத்து வைத்துள்ளது.

வறுமைக்காக வௌிநாடு சென்றவருக்கு நேர்ந்த கதி

தற்போது ஒரே இடத்தில் இருக்கும் ரசிந்தவை கவனிப்பதற்கு அங்கு யாரும் இல்லை என இலங்கையில் இருக்கும் அவரது மனைவி கூறுகிறார்.

மேலும் இவரை வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்ற வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையத்துக்கு இது தொடர்பில் அறிவித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

வைத்தியசாலையில் இருந்து அழைத்து வரப்பட்ட ரசிந்தவை தற்போது ​வைத்துள்ள விதம் குறித்து, அங்குள்ள மற்றுமொரு இலங்கையர் ஔிப்பதிவு செய்த வீடியோ இது,

வீடியோ

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

களுத்துறையில் உள்ள பிரபல சுற்றுலா ஹோட்டல் அறையில் அமெரிக்க சுற்றுலா பயணி ஒருவர் இன்று (09) அதிகாலை உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

67 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹோட்டல் அறையில் அமெரிக்கரின் சடலம்

ஹோட்டல் நிர்வாகம் பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து, ஹோட்டலின் அறை எண் 324 இல் அவரது சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை குற்றத்தடுப்பு விசாரணை நிலைய அதிகாரிகளும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

வீடியோ