சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி
Posted in இலங்கை செய்திகள்

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி

சீனாவை சென்றடைந்தார் ஜனாதிபதி ,சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் சீனாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, இன்று (14) சீன நேரப்படி காலை 10.25

மணியளவில் சீனாவின் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

அங்கு, சீன பிரதி வெளியுறவு அமைச்சர் சென் சியாடொன் வரவேற்றதோடு சீன இராணுவத்தின் முழு இராணுவ மரியாதையுடன் ஜனாதிபதிக்கு வரவேற்பளிக்கப்பட்டது.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பயணித்த பாதையின் இருமருங்கும் இரு நாடுகளின் தேசியக் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, தொழில்நுட்பம் மற்றும் விவசாய மேம்பாடு, வறுமை ஒழிப்பு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட பல களப் பயணங்களிலும் பல உயர் மட்ட வணிகக் கூட்டங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.

video

இந்தப் விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையே பல புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திட திட்டமிடப்பட்டுள்ளன.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத், போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் ,துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க,இலங்கைக்கான

சீன தூதுவர் சீ ஜென்ஹொன்ங், சீனாவுக்கான இலங்கை தூதுவர் மஜிந்த ஜயசிங்க ஆகியோரும் இந்த விஜயத்தில் பங்கேற்றனர்.

அம்பியூலன்ஸ் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

அம்பியூலன்ஸ் விபத்து

அம்பியூலன்ஸ் விபத்து

அம்பியூலன்ஸ் விபத்து வனாத்தவில்லுவ பிரதேச மருத்துவமனைக்குச் சொந்தமான அம்பியூலன்ஸ் ஒன்று வீதியை விட்டு விலகி மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த அம்பியூலன்ஸ் சாரதி புத்தளம் ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிலாபம் பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.

புத்தளம் – வனாத்தவில்லுவ வீதியில் 10ஆவது தூண் பகுதியில் நேற்று (13) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

video

வனாத்தவில்லுவ மருத்துவமனையில் நடைபெற்ற மருத்துவ சிகிச்சைக்காக புத்தளம் ஆதார மருத்துவமனையிலிருந்து மருத்துவர் ஒருவரை அழைத்துச் சென்றுவிட்டு, மீண்டும் சிகிச்சை முடிந்து

மருத்துவரை புத்தளம் மருத்துவமனையில் விட்டுவிட்டு வனாத்தவில்லுவ மருத்துவமனைக்கு திருப்பிக்கொண்டிருந்த போதே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் வனாத்தவில்லுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு
Posted in இலங்கை செய்திகள்

மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு

மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு

மதுபானம் மற்றும் சிகரெட் விலை உயர்வு ,2023 ஆம் ஆண்டில் மதுபான வரிகளில் 20% அதிகரிப்பு காரணமாக, மது அருந்துதல் 8.3 மில்லியன் லீற்றர்கள் வரையில் குறைந்துள்ளதாகவும், அரசாங்கத்திற்கு மதுபானம்

ஊடாக வரி வருமானம் 11.6 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும் மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வீடியோ

சிகரெட்டுகள் மூலம் அரசாங்கத்திற்குக் கிடைத்த வரி வருமானம் 7.7 பில்லியன் அதிகரித்துள்ளதாகவும், சிகரெட் விற்பனை 521.5 மில்லியன் ரூபா வரையில் குறைந்துள்ளதாகவும் மேற்படித் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாட்டுடனான வரி அதிகரிப்பு தொடர்பான விசேட அறிவிப்பை வெளியிட்டு மதுவரித் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி

கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் அனுமதி ,கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன் விடுவிப்பில் ஏற்படும் தாமதங்களை முடிவுக்குக் கொண்டுவர இலங்கை சுங்கம் ஒரு விசேட திட்டத்தை தொடங்கியுள்ளது.

ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் இந்த திட்டம் தொடங்கப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் சீவலி அருக்கொட அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்தார்.

நேற்றைய (13) நாளின் நிலவரப்படி, கொழும்பு துறைமுகத்திலிருந்து 459 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, RCT, கிரேலைன் 1 மற்றும் 2 பிரிவுகளில் இருந்து 242 கொள்கலன்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டன.

சுங்கத்துறை நாளொன்றுக்கு சுமார் 500 கொள்கலன்களை சோதனை செய்து விடுவிக்க முடியும் என்றாலும், அனுமதி வழங்கும் முகவர்கள் மற்றும் கொள்கலன் லொறி சாரதிகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால் விடுவிக்கக்கூடிய கொள்கலன்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளதாக சுங்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

video

இன்று (14) காலை நிலவரப்படி, நுழைவாயில் அனுமதி வழங்கப்பட்ட போதிலும், 496 கொள்கலன்கள் துறைமுகத்தில் உள்ளன, ஆனால் இன்னும் சரக்கு சோதனை நிறைவடைந்து அவைகள் விடுவிக்கப்படவில்லை.

இன்று விடுமுறை நாளாக இருந்தாலும், சுங்கம் மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்கள் கொள்கலன்களை விடுவிக்கும் பணியில் ஈடுபடும் என்று சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

டிஜிட்டல் அடையாள அட்டை
Posted in இலங்கை செய்திகள்

டிஜிட்டல் அடையாள அட்டை

டிஜிட்டல் அட்டை

டிஜிட்டல் அடையாள அட்டை,இந்த மாதம் முதல் டிஜிட்டல் அடையாள அட்டையை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன தெரிவித்தார்.

இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அவர், புதிதாக வழங்கப்படும் அனைத்து அடையாள அட்டைகளும் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்தார்.

அடையாள அட்டைகளைப் பெறுவதில் ஏற்கனவே குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டுள்ளதால், அதனை நிவர்த்தி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் அடையாள அட்டை முறையை உருவாக்குவதற்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும் என்பதால், அதில் பாதியை இந்தியாவின் உதவி மூலம் பெற எதிர்பார்ப்பதாகவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

மக்கள் மத்தியில் மிக பெரும் வரவேற்பையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளதாக்கி மக்கள் தமது எண்ண கருத்துக்களை தெறிவித்து வருகின்றனர்

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை
Posted in இலங்கை செய்திகள்

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை

கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயது பெண் குழந்தை ,மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மக்காமடி குறுக்கு வீதியில் திங்கட்கிழமை (13) மாலை வீட்டின் கிணற்றில் தவறி வீழ்ந்து 2 வயதான முகம்மது சாஜித் மெஹ்ரிஸ் அய்ரா எனும் பெண் குழந்தை மரணமடைந்துள்ளது .

குழந்தையின் தந்தை கல்முனையில் உணவகம் ஒன்றில் பணியாற்றி வரும் நிலையில் வீட்டில் தாயுடன் இருந்த 2 வயதான பெண் குழந்தையே வெளியில் விளையாடிக்

கொண்டிருந்த தருணம் கிணற்றுக்கு அருகில் இருந்த கதிரையில் ஏறி கிணற்றினுள் தவறி வீழ்ந்து மரணமடைந்துள்ளது.

வீடீயோ

அயலவர்களின் துணையுடன் உயிரிழந்த நிலையில் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட குழந்தையின் ஜனாசா ஏறாவூர் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதுடன் ,

ஏறாவூர் பொலிஸாரின் விசாரணைகளை அடுத்து பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம்.நசீரினால் மரண விசாரணை நடத்தப்பட்டு கிணற்று நீரில் வீழ்ந்து

ஏற்பட்ட விபத்து மரணம் என உறுதி செய்யப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஜனாஸா ஒப்படைக்கப்பட்டு பின்னர் நல்லடக்கம் செய்யப்பட்டது.

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி

துமிந்த சில்வா மீண்டும் வைத்தியசாலையில் அனுமதி மரண தண்டனை கைதியான துமிந்த சில்வா மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சில்வா கடந்த ஜனவரி 10 ஆம் திகதி வெலிக்கடை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.

எனினும் வெலிக்கடை பொது வார்டில் இருந்த போது ஏற்பட்ட திடீர் உபாதை காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவரின் பரிந்துரையின் அடிப்படையில் சில்வா சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். அவரது சிகிச்சை தொடர்வது தொடர்பாக

சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சுகாதார பணிப்பாளர் நாயகத்திடம் எழுத்துமூலம் வினவியதை அடுத்து, 18 விசேட வைத்தியர்கள் குழு நியமிக்கப்பட்டது.

சில்வாவுக்கு சிறைச்சாலை மருத்துவமனையிலோ அல்லது வேறு எந்த வசதியிலோ தொடர்ந்து சிகிச்சை தேவையில்லை என்று மருத்துவக் குழு முடிவு செய்ததுடன், அவசரச் சிக்கல்

ஏற்பட்டால் மட்டுமே உடனடி சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று பரிந்துரைத்தது.

சில்வா வெலிக்கடையில் இருந்தபோது எதிர்பாராத வகையில் ஏற்பட்ட உபாதை காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலை வைத்தியரின்

பரிந்துரையின் பேரில் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.

சில்வா தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை முடிந்து ஞாயிற்றுக்கிழமை மீண்டும் சிறைச்சாலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார்.

சில்வாவை சிறைச்சாலை வைத்தியசாலையில் மேலதிக சிகிச்சை பெற்றுக்கொள்ளுமாறு சிறைச்சாலை வைத்தியசாலையின் பிரதான வைத்திய அதிகாரி பரிந்துரைத்துள்ளார் என திஸாநாயக்க தெரிவித்தார்.

சில்வா தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் வசிப்பவராக சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை குறித்த மேலதிக தகவல்கள் ஜனவரி 15 ஆம் திகதி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தேவாலயத்திற்குள் கைக்குண்டு
Posted in இலங்கை செய்திகள்

தேவாலயத்திற்குள் கைக்குண்டு

தேவாலயத்திற்குள் கைக்குண்டு

தேவாலயத்திற்குள் கைக்குண்டு சரியாக மூன்று வருடங்களுக்கு முன்னர் பொரளை அனைத்து புனிதர்கள் தேவாலயத்தில் இடம்பெற்ற வெடிகுண்டு நாடகம் தொடர்பில் புதிய விசாரணைகளை

மேற்கொண்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறு இலங்கை கத்தோலிக்க திருச்சபை அரசாங்கத்தை இன்று வலியுறுத்தியுள்ளது.

ஜனவரி 11, 2022 அன்று தேவாலயத்திற்குள் கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தின் மூன்றாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று காலை போராட்டம் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக தேவாலயத்தின் பராமரிப்பாளர் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார். இந்தச் செயல்களால் அவர் துன்புறுத்தப்பட்டதாகவும், அவரது மனித உரிமைகள் மீறப்பட்டதாகவும் திருச்சபை தெரிவிக்கிறது.

தேசிய கத்தோலிக்க தொடர்பு இயக்குனர் அருட்சகோதரர் ஜூட் கிரிசாந்த இந்த சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க, அரசாங்கம் மற்றும் பொலிஸ் மா அதிபர் ஆகியோரை திருச்சபை வலியுறுத்தவுள்ளதாக ஆர்ப்பாட்டத்தின் போது ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

கடந்த ஆட்சியின் போது சந்தேக நபர் ஒருவர் பிடிபட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

இந்த சந்தேக நபர் தொடர்பில் தற்போதைய அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க விரும்புகின்றோம்.

அரசாங்கம் இது தொடர்பில் ஆராய வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அத்துடன், இந்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்குரியதாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாலையில் பதிவாகிய சிசிடிவி காணொளிகளை மாத்திரம் ஆராய்ந்தால் போதுமானது என தேசபந்து கூறினார்.

ஆனால் காலையில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு கிளிப்பில் தேவாலயத்திற்குள் வெடிகுண்டை வைப்பது பதிவாகியது” என Fr. ஜூட் மேலும் கூறினார்.

உடையும் நிலையில் 27 நீர்த்தேக்கங்கள்
Posted in இலங்கை செய்திகள்

உடையும் நிலையில் 27 நீர்த்தேக்கங்கள்

உடையும் நிலையில் 27 நீர்த்தேக்கங்கள்

உடையும் நிலையில் 27 நீர்த்தேக்கங்கள்73 பிரதான நீர்த்தேக்கங்களில் 27 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள 10 பிரதான நீர்த்தேக்கங்களில் 7 நீர்த்தேக்கங்கள் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் பொறியாளர் பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.

அம்பாறையில் உள்ள மூன்று முக்கிய நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏழு நீர்த்தேக்கங்களில் மூன்று நீர்த்தேக்கங்களும் தற்போது கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் 3 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளதுடன், ஹம்பாந்தோட்டையில் உள்ள 10 முக்கிய நீர்த்தேக்கங்களில் இரண்டு நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழியும் அளவை எட்டியுள்ளன.

காலி மாவட்டத்தில் உள்ள இரண்டு முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று நிரம்பி வழியும் நிலையில் உள்ளதுடன், கண்டி மாவட்டத்தில் உள்ள 3 முக்கிய நீர்த்தேக்கங்களில் 2 நீர்த்தேக்கங்கள் கொள்ளளவை எட்டியுள்ளன.

இதற்கிடையில், குருநாகல் மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களில் ஒன்று கொள்ளளவை எட்டியுள்ளதுடன் , மொனராகலை மாவட்டத்தில் உள்ள 3 நீர்த்தேக்கங்களில் இரண்டு நிரம்பி வழியும் நிலையை அண்மித்துள்ளது.

அத்துடன் பொலன்னறுவையில் உள்ள 4 முக்கிய நீர்த்தேக்கங்களில் ஒன்று கொள்ளளவை எட்டியுள்ளதாகவும் அவர் கூறினார்.

புத்தளம் மாவட்டத்தில் எந்த நீர்த்தேக்கங்களும் கொள்ளவை எட்டாத நிலையில், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 05 நீர்த்தேக்கங்களில் இரண்டு தற்போது கொள்ளளவை எட்டியுள்ளன.

இதற்கிடையில், தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவுகள் குறித்த முன்கூட்டிய எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு நேற்று (12) இரவு 8.30 மணி முதல் இன்று (13) இரவு 8.30 மணி வரை 24 மணி நேரத்திற்கு செல்லுபடியாகும்.

அதன்படி, பின்வரும் பகுதிகளுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு
Posted in இலங்கை செய்திகள்

அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு

அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு

அடையாளம் தெரியாதவர் துப்பாக்கிச் சூடு மாத்தறை – தெவினுவர, தல்பாவில பகுதியில் உள்ள கருவாடு வர்த்தகர் ஒருவரின் வீட்டின் முன்னால் அடையாளம் தெரியாத இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூடு நேற்று (12) மாலை 4.45 மணியளவில் நடந்ததாகவும், இந்த துப்பாக்கிச் சூட்டால் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

சிவப்பு நிற மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளனர்.

கருவாடை வாங்க விரும்புவதாகக் கூறிய நிலையில, வாயில் காதவை திறந்த போது இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது வாயிலுக்கு அருகிலுள்ள சுவரில் துப்பாக்கிச் சூடு பாய்ந்ததுடன், துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் காலியான தோட்ட உறையையும் எடுத்துச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் அருகிலிருந்த சி.சி.டி.வி கெமராவில் பதிவாகியுள்ளது.

துப்பாக்கிச் சூட்டை நடத்தியவர்கள் பிரவேசித்த மோட்டார் சைக்கிள்
அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கந்தர பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

வாகன விபத்தில் இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் இருவர் பலி

வெல்லாவெளி வாகன விபத்தில் பலி

வாகன விபத்தில் இருவர் பலி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்துறை சவலக்கடை வீதியில் பிலாலி வெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று (12) மாலை விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மண்டூர், சங்கர்புரத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் களுவாஞ்சிகுடி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் இருவர் பலி

விபத்தையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி தப்பி ஓடிய நிலையில், வாகனத்தை பொலிஸார் பொறுப்பேற்றனர்.

பின்னர் தப்பிச் சென்றிருந்த சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பின்னவல பொலிஸ் பிரிவின் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமுபிட்டிய பகுதியில் பாதுக்க திசையிலிருந்து சீலகம நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கொங்ரீட் தூணில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி, பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெலிஹுல்ஓயாவைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் பலாங்கொடை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி
Posted in இலங்கை செய்திகள்

கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி

கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி

கண்டுபிடிப்பு கடத்த பட்ட மாணவி.கண்டி தவுலகல பகுதியில் வேனில் கடத்திச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி அம்பாறை பேருந்து தரிப்பிடத்தில் பேருந்தில் இருந்த போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

இன்று (13) காலை கண்டிக்கு புறப்படவிருந்த சொகுசு பேருந்தில் இருந்த போது, ​​கடத்திச் சென்ற நபரையும், குறித்த மாணவியையும் பொலிஸார் கண்டுபிடித்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்றிரவு (12) அம்பாறை பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் இருவரும் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவியிடம் பொலிஸார் விசாரணை செய்து வருகின்றார்.

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி
Posted in இலங்கை செய்திகள்

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி

அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி,தமிழ் திரை உலகின் முதலாவது நட்சத்திரமாக விளங்கி வரும் வேளையில் கார் பந்தயத்தில் துபாயில் போட்டியிட்டு அவரது அணி மூன்றாம் இடத்தை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

துபாயில் இடம்பெற்ற பரபரப்பான கார் போட்டோ ஓட்டப்பந்தயத்தில் அவர் வெற்றியை பெற்றுள்ளார்.

நடிகர் அஜித் குமார் ஓட்டிச் சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையிலும் அவரது அணி மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது வரலாற்று சாதனையாக பார்க்கப்படுகிறது.

கண்கள் கலங்கிய நிலையில் இந்திய கொடியை தாங்கி பிடித்தவாறு மூன்றாம் பரிசை அவர் தட்டிச் சென்று இருக்கின்றார்.

வீடியோ

அவரது நீண்ட நாள் கார் பந்தய போட்டியின் உடைய கனவு இன்று நனவாகி உள்ளதாகவே பார்க்கப்படுகிறது.

தல வெற்றி பெற்றதை அடுத்து தலையின் உடைய ரசிகர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.

அந்தக் காட்சிப் பலன்கள் கீழே உள்ள படத்தில் காணலாம்

வெற்றி
அஜித்குமார் கார் போட்டியில் வெற்றி
மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்
Posted in இலங்கை செய்திகள்

மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்

மாணவி கடத்தல் பெற்றோர் கதறல்

மாணவி கடத்தல் பெற்றோர் கதறல் ,பாடசாலை முடிந்து வீட்டுக்கு பயணித்துக் கொண்டிருந்த மாணவிகளில் ஒருவர் கடத்தப்பட்டுள்ள செய்தி தற்பொழுது பதிவாகியுள்ளது.

பாடசாலை முடிவடைந்து வீதியால் பயணித்துக் கொண்டிருந்த இரு மாணவர்களில் ஒரு மாணவியை அந்த வழியால் பயணித்த கருப்பு வான் ஒன்று கடத்திச் சென்றுள்ளது.

எனினும் ஒரு மாணவி வாகனத்தின் எதிர் திசையில் தப்பி ஓடியதால் அவர் தப்பிவிட்டார் எனவும் மேலும் ஒரு மாணவி கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட்டப்பகலில் நடந்த இந்த கடத்தல் சம்பவத்தை கண்ணுற்ற சிலர் அதனை தடுக்க முற்பட்ட பொழுது அந்த காப்பாற்று நடவடிக்கை தோல்வியில் முடிவடைந்துள்ளது.

வீடியோ

மோட்டார் சைக்கிள் வந்தவர்கள் தெரிவித்த தகவலை அடுத்து தற்பொழுது அந்த மாணவியைக் கடத்திச் சென்ற வாரம் கண்டுபிடிக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பொழுது வீட்டுக்கு முன்பாக இருந்த கமராவில் அந்த கடத்தல் பதிவாகியுள்ளதாகவும் அதனை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவிக்கின்றனர்.

4 நீதிபதிகள் புதிதாக நியமனம்
Posted in இலங்கை செய்திகள்

4 நீதிபதிகள் புதிதாக நியமனம்

4 நீதிபதிகள் புதிதாக நியமனம்

4 நீதிபதிகள் புதிதாக நியமனம் ,இலங்கையில் ஆளுகின்ற அனுரா குமர திசை நாயக்காவினுடைய ஆட்சி பதவிக்கு வந்ததன் பின்னர் ,தற்போது 4 புதிய நீதி அரசர்கள் பதவிப்பிரமாணம் செய்துள்ளனர் .

அதன்படி மேல்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் கௌரவ ஆர்எம்எஸ் ராஜகருணா கௌரவ மேனகா விஜய சுந்தர ,கௌரவ சம்பத் பி அபயகோன் , மற்றும் கௌரவ எம் எஸ் கே பி விஜயரத்தின . ஆகியோரை ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிகழ்வு உத்திய புறமாக இடம்பெற்று இருக்கின்றது இந்த நிகழ்வில் பல முக்கியத்துவர்கள் கலந்து கொண்டு தமது ஆதரவை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

இலங்கையில் நீதிபதிகள் நீதிகளை நிலைநாட்டு கின்றனரா அல்லது நீதிக்கு எதிராக செயல்படுகின்றனரா என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த நீதியரசர்கள் நியமிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சட்டம் என்பது ஒரு இருட்டறை என்பதோ அல்லது சட்டம் ஒரு நீதி தேவதையா என்பதுதான் இன்றுள்ள கேள்வியாக மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு

மோட்டார் சைக்கிள் திருடன் போலீசாரால் மடக்கிப் பிடிப்பு,பல மோட்டார் சைக்கிளை திருடி விற்று வந்த திருடன் ஒருவன் போலீசாரின் சிறப்பு குழுவினரால் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இவரால் திருடப்பட்ட 4-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள் உள்ளிட்டவர்களுடன் போதை வஸ்து பயன்படுத்தி விற்பனையில் ஈடுபட்ட வந்த பொழுதே போலீசாரின் சிறப்பு குழுவினால் இவர் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளார்.

மேற்கொண்ட விசாரணையில் அவர் மோட்டார் சைக்கிளை திருடி குற்றவாளிகள் மற்றும் போதை போல் கடத்தல் கடத்தலுக்கு விட்டு வந்துள்ளது அந்த செயலுடன் செயல்பட்டு வந்துள்ளது என்றும் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு இந்த திருட்டில் ஈடுபட்டிருந்தவர் 28 வயதுடைய இளம் வாலிபர் எனவும் இவரால் எவ்வாறு இந்த மோட்டார் சைக்கிள் திருடப்படுகிறது என்ற வித்தையும் போலீசாருக்கு கற்றுக் கொடுத்தார்.

வீடியோ

இலங்கையில் நாடாளாவிய ரீதியில் நாளுக்கு நாள் பல மோட்டார் சைக்கிள் திருடப்பட்டு வருகின்ற அவ்வாறான திருடர்களில் ஒருவரை இப்பொழுது வசமாக மாட்டி.

அவ்வாறு திருடப்படும் மோட்டார் சைக்கிள் எவ்வாறு திருடப்படுகின்றன என்கின்ற வித்தையை காட்டிக் கொடுத்துள்ளார்.

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு

காயங்களுடன் பெண்ணின் சடலம் மீட்பு,இலங்கை மதவாச்சி மயானத்தின் அருகில் 30 வயதுக்கு உள்ளிட்ட பெண் ஒருவருடைய சடலம் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இவர் கொழும்பில் இருந்து இலவச பேருந்து ஊடாக வருகை தந்துள்ளது அதனுடைய பற்றி சீட்டுகள் மற்றும் அவரது உடைகள் பைகள் என்பன கொலை செய்யப்பட்ட இடத்தில் காணப்படுகின்றன.

உடலில் பலத்த காயங்கள் காணப்படுவதால் இவள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் படுகொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

சடலம் எடுக்கப்பட்டு மரண பரிசோதனைக்கு வைக்கப்பட்டுள்ள பொழுது இவர் யார் என்பது தொடர்பாக இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இந்த இளம் பெண் அடுத்த படுகொலை செய்யப்பட்ட நிலையில் மயானத்துக்கு அருகில் உள்ள குழி தோண்டிக் அருகிலே இந்த சடலம் கைவிடப்பட்ட நிலையில்

வீடியோ

செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த கொலையை செய்தவர்கள் யார் என்பது தொடர்பாக கண்டுபிடிக்க நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ

இலங்கையில் 2000ரூபாய் புளி கிலோ ,இலங்கையில் புலி ஒரு கிலோ 2000 தற்பொழுது சந்தைகளில் விற்பனை செய்யப்பட்டு வருவதால் புதிய தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இலங்கையில் ஏற்பட்டுள்ள திடீர் தட்டுப்பாடு காரணமாகவே உள்ளூர் சந்தைகளில் 2000 ரூபாய்க்கு புளி விற்பனையாகி வருகிறது.

தொடர்ந்தும் இலங்கையில் பொருளாதாரம் பலத்த வீழ்ச்சி நிலையை சென்று வருவதாலும் உள்ளூர் உற்பத்திகள் தடுக்கப்பட்டுள்ள காரணத்தினாலேயே உள்ளூர் சந்தையில் இதனுடைய விலை உச்சம் பெறுகின்றது.

இவ்வாறு நாள்தோறும் பொருட்களின் விலை நாளுக்கு ஒவ்வொரு விலையாக காணப்பட்டால் அது மக்களுக்கு பெரும் இடர்களை ஏற்படுத்தும் என்பதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றன.

ஆனால் மக்களுடைய வாழ்வாதாரம் பொருளாதாரம் விலை வாசிகளை கட்டுப்படுத்தும் நோக்கில் ஆளுகின்ற அனுரா ஆட்சி செயல்படவில்லை என்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

வீடியோ

சீனாவின் உடைய நோயானது தற்போது உலகளாவிய ரீதியில் பரவி விறகு கொண்ட நிலையில் அந்த நோய் இலங்கையில் வந்தால் இந்த விலைவாசிகள் இரண்டு மடங்கு அதிகரித்தால் இலங்கை நிலை என்பது தான் இப்பொழுதுள்ள கேள்வியாகும் .

சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று
Posted in இலங்கை செய்திகள்

சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று

சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று

சீனா வைரஸ் தமிழகத்தில் தொற்று,தமிழகத்தில் சீனாவின் வைரஸ் தற்பொழுது தோன்றியுள்ள நிலையில் அங்கு பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நோயானது கொரோனா போன்ற நோய் தாக்கத்தை ஏற்படுத்த விரும்பும் இதனால் மீளவும் அடித்து பூட்டும் நிகழ்வுகள் இடம்பெறக் கூடும் என மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.

உலக நாடுகளில் இவ்வளவு இந்த நோயானது வேகமாக பரவி வருகின்ற நிலையிலேயே உலக நாடுகளில் உள்ள மக்களும் பதட்டத்தில் உறைந்திருக்கின்றன.

மீளவும் நாடு முடக்கப்பட்டு விட்டால் தமது பொருளாதாரத்தில் பெரும் சிதைவுகள் ஏற்படும் மிகுந்த நிலையில் தற்பொழுது நாடுகள் இதை மூடி மறைத்து வருவதற்கான குற்றச்சாட்டு மக்களால் முன்வைக்கப்படுகிறது.

சீனாவில் தொற்றிய நோயானது தமிழகம் வந்திருப்பதால் இவை வரவில்லை இலங்கைக்கும் நாடு கடத்தப்படும் எனவும் ,அவ்வேளை இலங்கையும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும் என்ற அச்சம் இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது

ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது

ஜெர்மன்செல்ல முற்பட்டவர் விமானத்தளத்தில் கைது,போலி விசாவை பயன்படுத்தி இலங்கை கட்டுநாயக்க வான்தளம் ஊடாக ஊடாக ஜெர்மன் செல்ல முற்பட்ட யாழ்ப்பாணம் வாலிபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் யாழ்ப்பாணம் இளவாலை பகுதியை சேர்ந்த வாலிபர் எனவும் தற்பொழுது போலீசார் நாள் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டு நீதிமன்றத்தில் பாரப் படுத்தப்பட்டுள்ளார் .

வெளிநாடுகளுக்குச் சென்றால் ஆடம்பரமாக வாழலாம் எனவும் அதிகம் சம்பாதிக்கலாம் என நினைத்து வருகின்ற வாலிபர்கள் பலர் வேலையிழந்து தற்பொழுது நாடு திரும்பி சென்றுள்ள நிலையும் காணப்படுகிறது.

பல கோடி ரூபாய்களை கட்டி வெளிநாடுகளுக்கு மோகத்தில் வருகின்ற இவர்கள் இவ்வாறு விமானத்தில் சிக்கியுள்ளது சட்டவிரோத குடியேற்ற வாசிகளாக நாடுகளுக்கு இவர்கள் கடத்தப்படுவது தொடர்கிறது.

வீடியோ

சமீபத்திய மாதங்களுக்கு முன்பதாக வெளிநாடு வர ஆசைப்பட்டு ,தற்போது ரஷ்யா இராணுவத்தில் பல இளைஞர்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், இவ்வாறு இவர் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.