கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை மரணம்

கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை மரணம்

கழிப்பறை குழியில் விழுந்து குழந்தை மரணம் ,ஆரச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியில் கட்டுமானப் பணி நடைபெற்று வரும் பாதுகாப்பற்ற கழிப்பறை குழியில் விழுந்து ஒரு மாத குழந்தை உயிரிழந்துள்ளதாக ஆரச்சிகட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஆராச்சிகட்டுவ, வைரங்கட்டுவ பகுதியைச் சேர்ந்த தெனஹண்டிகே வினுகி ஹன்சிமா என்ற பெண் குழந்தையே கழிப்பறை குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

வியாழக்கிழமை மாலை (06) உயிரிழந்த குழந்தையின் தந்தை வீட்டில் இல்லை, மேலும் அவரது தாயார் தேவைக்காக வீட்டை விட்டு வெளியே சென்றிருந்தபோது, ​​அவரது மூத்த சகோதரி மற்றும் சகோதரர், சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.

சுமார் 10 நிமிடங்களில் வீடு திரும்பியபோது, ​​தனது மகள் மற்ற குழந்தைகளுடன் இல்லை என்றும், நீர்த்தேக்கத்தில் விழுந்து, அதில் நிரம்பியிருந்த தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்ததாகவும், தாயார் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். குழந்தையை வெளியே இழுத்து, அண்டைய வீட்டாரின் உதவியுடன் உடனடியாக கிராமிய மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு

நின்றுகொண்டிருந்த சடலம் மீட்பு ,மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் உருக்குலைந்துள்ள சடலம் ஒன்று இருப்பதாக பொதுமக்கள் புதன்கிழமை (05) மாலை தகவல் வழங்கியதாக அக்கரைப்பற்று பொலிஸார்

தெரிவித்தனர். அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள அட்டாளைச்சேனை முள்ளிமலையடி பிரதேசத்தில் இந்த சடலம் தொங்கிய நிலையில் நின்று கொண்டிருந்தது.

குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு கிழமையாக துர்நாற்றம் வீசி வந்துள்ள நிலையில் சந்தேகம் கொண்ட அப்பகுதி மக்கள் அந்த பகுதியை சுற்றி

சோதனையிட்டபோது அங்கு மரம் ஒன்றில் தொங்கி உருக்குலைந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இருப்பதை கண்டு பொலிஸாருக்கு தெரிவித்தனர்

இதனையடுத்து குறித்த பகுதியில் யானைகள் நடமாடுவதால் அங்கு பொலிஸார் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் வியாழக்கிழமை (06)

காலையில் சென்று சடலத்தை மீட்பதற்கான அனைத்து நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள தாகவும் இதுவரை சடலம் அடைiயாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

சுமார் 35 முதல் 38 வரையான வயதுடையதாக மதிக்கப்படும் இச்சடலமானது கடும் நீல நிற ரீசேட் அணிந்து காணப்படுவதுடன் 5 அடி உயரம் கொண்டதாக

காணப்படுவதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

எதிர்கால சந்ததியை காப்பாற்றுக எம் பி ரவிகரன்கோரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

எதிர்கால சந்ததியை காப்பாற்றுக எம் பி ரவிகரன்கோரிக்கை

எதிர்கால சந்ததியை காப்பாற்றுக எம் பி ரவிகரன்கோரிக்கை

எதிர்கால சந்ததியை காப்பாற்றுக எம் பி ரவிகரன்கோரிக்கை ,வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒரு தொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத்

தொடங்கியுள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொது மக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றினை பாராளுமன்றில் புதன்கிழமை (05) முன்மொழிந்தார்.

இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணைதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

போதையினால் நாடு மட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கிறது.

இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன்.

இருப்பினும் சக பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

நிச்சயமாக மிகவும் பொருத்தமான ஒத்திவைப்பு வேளை பிரேரணையாகும்.

நாட்டின் அதியுயர் பீடமாகக் காணப்படும் பாராளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப்பொருட்களால் சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.

இந்த போதைப்பொருள் ஊடுருவல்கள் பாடசாலைகளில்கூட இடம்பெற்றுவருவதை தற்போதுநாம் அவதானித்துவருகின்றோம்.

போதைப்பொருள் பாவனையால் எமது சந்ததிகள், ஒருதொகுதி எதிர்கால தலைமுறையினர் அழிந்துவருகின்றனர்.

நான் கிராமந்தோறும் மக்கள் சந்திப்பிற்காக செல்கின்றபோது, போதைப்பொருள் பாவனையால் தமது கிராமத்தில் பலர் இறந்துவிட்டதாகவும், பலர் இறக்கும் நிலையில் பாதிக்கப்பட்டு தடுமாறிக்கொண்டிருப்பதாகவும் சில கிராமங்களில் மக்களால் என்னிடம் முறையிடப்பட்டன.

நாட்டில் இத்தகைய நிலை ஏற்படுவதற்கு காரணம்யார்? எமது நாட்டிலிருக்கும் பாதுகாப்புப் படையினர் சீராகச் செயற்பட்டால் இவ்வாறு போதைப்பொருள் பாவனையால் ஏற்படும் இறப்புக்களோ, பாதிப்புக்களோ இருக்காது.

இந்தப் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் பொலிசாருக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுத்துங்கள்.

இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் – என்றார்

துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர்

துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர்

துப்பாக்கி தயாரித்த இருவர் சிக்கினர் ,உள்ளூரில் தயாரிக்கப்பட்ட ரிவோல்வர் துப்பாக்கி ஒன்றுடன் புதன்கிழமை (05) அன்று இருவர் கைது செய்யப்பட்டதாக பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்ல தெரிவித்தார்.

குறித்த துப்பாக்கியை வைத்திருந்த மஹியங்கனை, 40 ஆம் இலக்க தொழில்துறை காலனியை சேர்ந்த 61 வயதுடைய ஒருவர் மற்றும் துப்பாக்கியை தயாரித்ததாக கூறப்படும் பதியதலாவ பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய நபரு​மே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

பதுளை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய மஹியங்கனை தொழில்துறை கொலனி பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது சந்தேக நபரின் வீட்டிற்கு

அருகிலுள்ள ஒரு தொழிற்சாலையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது குறித்த துப்பாக்கியை பதியதலாவ பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் தயாரித்தமை தெரியவந்துள்ளது.

அதற்கமைய துப்பாக்கியை தயாரித்த சந்தேக நபர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

காட்டு விலங்குகளை வேட்டையாடுவதற்காக வேட்டையாடும் துப்பாக்கிகள் தான் தயாரிப்பதாகவும், யூடியூப் தளத்தில் இருந்த ஒரு காணொளியை பார்த்து குறித்த துப்பாக்கியை தயாரித்ததாகவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை, மேலதிக விசாரணைகளுக்காக மஹியங்கனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இரு சந்தேக நபர்களும் மஹியங்கனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

பாடசாலை மாணவி கடத்தல்
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவி கடத்தல்

பாடசாலை மாணவி கடத்தல்

பாடசாலை மாணவி கடத்தல் ,பாடசாலை மாணவியை, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிவித்து, கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வு உட்படுத்தி விட்டு, 42 நாட்களுக்கு பின்னர், பர்தாவை அணிந்து நடுவீதியில் விட்டு சென்ற இளைஞனை தேடி பொலிஸார் வலை விரித்துள்ளனர்.

இந்த சம்பவம், பிபில பொலிஸ் பிரிவில் இடம்பெற்றுள்ளது. அங்குள்ள பாடசாலையில் தரம் 10 இல் கல்விப்பயிலும் கணுல்வெல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது 04 மாதங்களுமான பாடசாலை மாணவியை, அவருடைய சட்டரீதியான பொறுப்பானவர்களிடமிருந்து கடத்திச் சென்று இவ்வாறு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்.

யாயபார கணுல்வெல முஸ்லிம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞனை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிபில பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட யுவதி, 2024 மே மாதம் முதல் அந்த இளைஞனுடன் காதல் உறவில் இருந்துள்ளார். இதற்கு அந்த யுவதியின் தாய் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், 2025 ஜனவரி 22 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் யுவதியின் வீட்டுக்கு வந்த அந்த இளைஞன், மஹியங்கனையில் உள்ள முஸ்லிம் கிராமத்துக்கு கடத்திச் சென்றுள்ளார். அவ்வாறு கடத்திச் செல்லும் போது அந்த யுவதிக்கு, முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தாவை அணிந்து அழைத்துச் சென்றுள்ளார்.

ஜனவரி 22ஆம் திகதி முதல் மார்ச் 04 ஆம் திகதி வரையிலும், அந்த யுவதியை அவ்விளைஞன் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி உள்ளார்.

இந்நிலையில், தான் கொழும்புக்கு கூலி வேலைக்குச் செல்வதாக கூறி, அந்த யுவதிக்கு புர்கா அணிந்து, மஹியங்கனை நகருக்கு மார்ச் 05 ஆம் திகதியன்று அழைத்துவந்து, ஆட்டோவில் ஏற்றி, அந்த யுவதியின் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

தனக்கு ஏற்பட்ட இந்த நிலைமை தொடர்பில், தன்னுடைய தாயிடம் விபரித்த யுவதி, தாயுடன் சென்று பொலிஸில், மார்ச் 5 ஆம் திகதியன்று முறையிட்டுள்ளார். எனினும், தன்னை தடுத்து வைத்திருந்த வீடு ஞாபகத்தில் இல்லை என்றும் எனினும், சுற்றி முஸ்லிம் மட்டுமே இருந்தனர் என முறைப்பாட்டில் அந்த யுவதி தெரிவித்துள்ளார்.

முறைபாட்டை ஏற்றுக்கொண்ட பிபில பொலிஸார், சந்தேகநபரான அந்த இளைஞனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.

வயதான மக்கள் தொகை அதிகரிப்பு
Posted in இலங்கை செய்திகள்

வயதான மக்கள் தொகை அதிகரிப்பு

வயதான மக்கள் தொகை அதிகரிப்பு

வயதான மக்கள் தொகை அதிகரிப்பு ,தொற்றா நோய்கள் பரவுதல் மற்றும் வயதான மக்கள் தொகை அதிகரிப்பு காரணமாக இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீற்றருக்கும் இடையில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும் என்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (06) இடம்பெற்ற 2025ஆம் ஆண்டு பட்ஜெட் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இது தொடர்பில் மேலும் அவர் கூறியுள்ளதாவது, “இலங்கை மக்கள் தொகையில் சுமார் 14 சதவீதம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில், 34 சதவீதமானோர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கூடுதலாக, இலங்கையின் வயதான மக்கள் தொகை, எதிர்வரும் 2032ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 20.8 ஆகவும், 2037ஆம் ஆண்டுக்குள் மொத்த மக்கள் தொகையில் 22 சதவீதமாகவும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொடுக்கப்பட்ட சூழ்நிலை காரணமாக ஆரம்ப சுகாதார சேவையில் நாம் மேலும் மேலும் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.

இலங்கையில் ஒவ்வொரு 2 கி.மீ.க்கும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தேவைப்படும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் இஸ்லாமிய தீவிரவாதம்
Posted in இலங்கை செய்திகள்

பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் இஸ்லாமிய தீவிரவாதம்

பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் இஸ்லாமிய தீவிரவாதம்

பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் இஸ்லாமிய தீவிரவாதம் ,பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம் .

இஸ்லாமிய தீவிரவாதம் என்ற பதம் இஸ்லாமிய கொள்கைகளுக்கு முரண்பட்டது என்பதை உறுதியாக குறிப்பிட்டுக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் நிசாம் காரியப்பர் வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (05) இடம் பெற்ற 2025 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர், தொடர்ந்து உரையாற்றுகையில்…

.கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீயசக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும்.

இவ்வாறான கூற்றுக்களை கொண்டு பேரினவாதிகள் எங்களை முடக்க முயற்சிக்கலாம்.எனவே இந்தக்கூற்றின் உண்மை தன்மையை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ ஆகியோர் குறிப்பிட்டுள்ள விடயம் தேசிய பத்திரிகைகளில் பிரதான செய்தியாக, புதன்கிழமை (05) வெளிவந்துள்ளன.

குறிப்பாக ‘ கல்முனை பகுதிகளில் மத அமைப்புக்களினால் பிள்ளைகள் தீவிரவாத கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படுகிறார்கள் என்றும் அதன் காரணமாக உளவுத்துறையினர் கண்காணிப்புக்களை அதிகரிக்க

வேண்டியுள்ளது’ என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த கூற்றினால் எமது பிரதேச மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது என்றார்..

கூற்றுக்களில் பொதுவாக குறிப்பிடப்பட்டுள்ளதே தவிர அமைப்புக்களின் பெயர்கள் எதுவும் குறிப்பிடப்படவில்லை.கல்முனை ஜும்மா பள்ளிவாசல், பள்ளிவாசல் சம்மேளனம்,

ஜம் இய்யதுல் உலமா சபை உட்பட இஸ்லாமிய அமைப்புகள் உட்பட இஸ்லாமிய மக்கள் தீவிரவாதத்துக்கு எதிராகவும், தீவிரவாதம் தொடர்பான விசாரணைகளுக்கும், தொடர்புடைய அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து செயற்பட தயாராகவுள்ளனர் என்றார்..

இவ்வாறான அடிப்படைவாத போக்குகள் உள்ள குழுக்களின் பின்னணியையும், அவர்களுக்கு யார் நிதி வழங்குகிறார்கள் என்பதையும் அறிந்து கொள்ள எமது மக்கள் ஆர்வமாக உள்ளனர் .

எனவே புலனாய்வு விசாரணைகள் சட்டத்துக்கு அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்..

இதற்கு முன்னரும் முஸ்லிம் சமூகம் பல விடயங்கள் தொடர்பில் முன்னெச்சரிக்கை விடுத்தும் உரிய அதிகாரிகள் பொறுப்புடன் செயற்படாதவில்லை.

இதனால் சஹ்ரானின் குண்டுத்தாக்குதல்கள் இடம்பெற்றன . இன்னொரு சஹ்ரானின் சம்பவம் இந்த நாட்டில் இனி ஒருபோதும் இடம் பெறக் கூடாது என்றார்.

கிழக்கில் அடிப்படைவாதம் என்ற கூற்றின் ஊடாக எம்மீது பழி சுமத்த பல தீய சக்திகள் முயற்சிக்கலாம். அமைச்சர்களின் கூற்றுக்களை தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள இந்த சக்திகள் நிச்சயம் முயற்சிக்கும்.

அதிகாரபூர்மற்ற அறிவிப்புக்கள் வீண் அச்சம் மற்றும் சந்தேகங்களை ஏற்படுத்தும். இவ்வாறான நிலையை அரசாங்கம் ஏற்படுத்தக் கூடாது. இவ்வாறான பொதுவான கூற்றுக்களினால் சமூகத்தில் இஸ்லாமிய

அடிப்படைவாதம் செயல்படுகிறது என்ற பழைய தவறான அபிப்பிராயம் மீண்டும் தோற்றுவிக்கப்படலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

எனவே, கிழக்கில் அடிப்படைவாதம் என்றஅமைச்சர்களின் கூற்றுக்களை தெளிவுப்படுத்தி அரசாங்கம் பொதுவான நிலைப்பாட்டை வெளிப்படுத்த

வேண்டும். புலனாய்வு தகவல்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னவென்பதையும் அறிந்து கொள்ள விரும்புகிறேன் என்றும் கேட்டுக்கொண்டார்.

அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்
Posted in இலங்கை செய்திகள்

அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்

அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல்

அஞ்சல் மூலம் வாக்களிப்பு தொடர்பாக அறிவித்தல் ,அஞ்சல் மூலம் வாக்களிக்க எதிர்பார்க்கின்ற அதற்கு தகைமை பெற்ற அரச அலுவலர்களுக்கு ஃ பாதுகாப்பு பிரிவு அலுவலர்களுக்கு தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான அறிவித்தல் பின்வருமாறு:

  1. 2025.03.03 ஆம் திகதி பெயர் குறித்த நியமனங்களைக் கோருவதற்கான அறிவித்தல் வெளியிடப்பட்ட 336 பிரதேச சபைகளுக்கான தேர்தலுக்கு அஞ்சல் மூலம் வாக்களிக்க தகைமை பெற்றுள்ளவர்களின் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் காலப்பகுதி, 2025.03.03 ஆம் திகதியிலிருந்து 2025.03.12 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்கு முடிவடையுள்ளது. எவ்விதத்திலும் இத்திகதி நீடிக்கப்பட மாட்டாது.

அதேபோல், அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களிலிருந்து பெற்றுக் கொள்ளலாம். அல்லது தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் (www.elections.gov.lk) சஞ்சரிப்பதன் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

  1. இத்தேர்தலின் போது குறித்த உள்ளுர் அதிகார சபை அதிகார இடப்பரப்பில் தேருநர்களாகப் பதிவுசெய்யப்பட்டிருக்கின்ற அத்துடன் தேர்தல் கடமைகளுக்காக ஈடுபடுத்தப்படவிருக்கின்ற அனைத்து அரச அலுவலர்கள்/ ஊழியர்கள், பாடசாலை அதிபர்களும் ஆசிரியர்களும்,
  2. இலங்கை போக்குவரத்துச் சபை அலுவலர்கள்/ ஊழியர்கள், அஞ்சல் திணைக்கள் அலுவலர்கள்/ ஊழியர்கள், புகையிரதத் திணைக்கள அலுவலர்கள்/ ஊழியர்கள், முப்படைகளின், பொலிஸ் திணைக்களத்தின் முனைப்பான பாதுகாப்புச் சேவைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சிவில் பாதுகாப்புப் படையணியின் அங்கத்தவர்கள், வேட்பாண்மை காரணமாக தனக்கு ஒதுக்கப்பட்ட வாக்கெடுப்பு நிலையத்திற்குச் சென்று வாக்களிக்க முடியாதிருக்குமென்று அல்லது அவ்வாறு செய்வதற்கு வாய்ப்புள்ள வேட்பாளர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பிக்கத் தகைமை பெறுவதுடன், அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் காலப்பகுதி முடிவடையும் வரை காத்திருக்காமல் தாமதமின்றி தமது விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்குமாறு அஞ்சல் மூலம் வாக்களிப்பதற்காக விண்ணப்பிக்கத் தகைமை பெறுகின்ற அனைவரும் தயவுடன் வேண்டிக் கொள்ளப்படுகின்றனர்.

மேலும், இத்தேர்தலின் போது அஞ்சல்மூலம் வாக்களிப்பதற்கு விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கும் போது அதற்கான தகவல்கள் 2024 உள்ளூர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்பிலிருந்து சரியான முறையில் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பதும் வலியுறுத்தப்படுகிறது.

  1. அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்கள் அஞ்சல்மூலம் வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை தனிப்பட்ட முறையில் பரீட்சித்து விண்ணப்பதாரரின் ஆளடையாளம் குறித்து உறுதிசெய்துகொண்டு அத்தாட்சிப்படுத்த வேண்டுமென்றும், அத்தாட்சிப்படுத்திய விண்ணப்பங்களை இயன்றளவு விரைவாக குறித்த விண்ணப்பதாரர் தேருநராக பதிவுசெய்து கொண்டுள்ள மாவட்டத்தின் தெரிவத்தாட்சி அலுவலருக்கு 2025.03.12 ஆம் திகதி அல்லது அத்திகதிக்கு முன்னர் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு கிடைக்கக்கூடியவாறு அனுப்பிவைக்க வேண்டுமென்றும், அத்திகதி மீண்டும் நீடிக்கப்பட மாட்டாதென்றும், உரிய திகதி பிந்திக் கிடைக்கின்ற விண்ணப்பங்களும் பூரணமற்ற விண்ணப்பங்களும் நிராகரிக்கப்படுமென்றும் அனைத்து அத்தாட்சிப்படுத்தும் அலுவலர்களுக்கும் தயவுடன் அறிவிக்கப்படுகிறது. அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி இரு நாட்களுக்குள் அத்தாட்சிப்படுத்தப்படும் விண்ணப்பங்கள் அஞ்சலுக்கு ஒப்படைப்பதற்குப் பதிலாக மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைப்பது மிகவும் உகந்ததென்று கருதப்படுகிறது.
  2. அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களை பூரணப்படுத்துவதற்கு அவசியமான 2024 தேருநர் இடாப்புத் தகவல்களை தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளத்தில் பிரவேசிப்பதன் மூலம் பெற்றுக் கொள்ளலாம். இதுதவிர தேவைப்படும் தகவல்களைப் பெற்றுக் கொள்வதற்கு 2024 உள்ளுர் அதிகாரசபைகளுக்கான தேருநர் இடாப்புக்கள் பின்வரும் இடங்களிலும் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும்.
    i. அனைத்து மாவட்ட செயலகங்கள் (கச்சேரிகள்)
    (சம்பந்தப்பட்ட மாவட்டத்திற்கு)
    ii. அனைத்து மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்கள்
    (உரிய இடாப்புக்கள்)
    iii. அனைத்து உள்ளூர் அதிகாரசபைகள்
    (ஒவ்வோர் உள்ளூர் அதிகார இடப்பரப்புக்குரிய இடாப்புக்கள்)
    iv. அனைத்து கிராம அலுவலர் அலுவலகங்கள்
    (ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவுக்குரிய இடாப்புக்கள்)
  3. தேர்தல் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக நிகழ்நிலை முறையில் அஞ்சல் வாக்கு விண்ணப்பங்களைப் பூரணப்படுத்திக் கொள்வதற்கான வசதி செய்துகொடுக்கப்பட்டுள்ளது.

தேருநர் இடாப்பில் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைக் குறிப்பிட்டிருக்காத விண்ணப்பதாரர்கள் மேற்படி இல. 04 இல் குறிப்பிடப்பட்டுள்ள இடமொன்றிலிருந்து தமது பதிவுக்குரிய தகவலகளைப் பெற்றுக் கொண்டு விண்ணப்பப்படினங்களைப் பூரணப்படுத்த வேண்டும்.

அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Posted in இலங்கை செய்திகள்

அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு

அரியாலை மயான விவகாரம் நீதிமன்றம் அதிரடி உத்தரவு ,யாழ்ப்பாணம், அரியாலை பகுதியில் உள்ள சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட பகுதிக்கு பொலிஸ் பாதுகாப்புக்கு

மேலதிகமான கண்காணிப்பு பணிக்கு மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் ஐவரை நியமிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்டமை தொடர்பான வழக்கினுடைய கலந்தாய்வு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா தலைமையில், செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்றது

குறித்த கலந்துரையாடலில் காணாமல் ஆக்கப்பட்டோர் சார்பில் சட்டத்தரணி தற்பரனும் முறைப்பாட்டாளர் சார்பில் சட்டத்தரணி சுகாசும், நல்லூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மயான அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குறித்த எலும்புகள் கண்டுபிடிக்கப்பட்ட மயானத்திற்கு பொலிஸ் பாதுகாப்பு உரிய வகையில் வழங்கப்பட வேண்டும் என்றும் பொலிஸ் பாதுகாப்புக்கு மேலதிகமாக குறித்த மயானத்தினுடைய அபிவிருத்தி சங்கத்தின்

உறுப்பினர்களுக்கும் பாதுகாப்பு பணியை மேற்பார்வை செய்வதற்கான அனுமதி வழங்கப்பட வேண்டும் என சட்டத்தரணிகளால் கோரப்பட்டது.

இதனை ஆராய்ந்த நீதவான், மயான அபிவிருத்தி சங்கத்தின் சார்பில் ஐந்து உறுப்பினர்களை பணியில் ஈடுபடுத்த அனுமதி வழங்கினார். வழக்கு தொடர் விசாரணைக்காக திகதியிடப்பட்டது

14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்த‌த நடிகை
Posted in இலங்கை செய்திகள்

14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்த‌த நடிகை

14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்த‌த நடிகை

14 8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்த‌த நடிகை ,டுபாயில் இருந்து 14.8 கிலோ கிராம் தங்க நகைகளை கடத்தி வந்த‌தாக நடிகை ரன்யா ராவ் பெங்களூரு சர்வதேச‌ விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கர்நாடக மாநிலம் சிக்கமகளூருவை சேர்ந்த ரன்யா ராவ் (32) கன்னடம், தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் நடிகர் விக்ரம் பிரபு நடித்த ‛வாகா’ திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக ந‌டித்துள்ளார்.

இந்நிலையில் திங்கட்கிழமை (03) இரவு ரன்யா ராவ் டுபாயில் இருந்து பெங்களூருக்கு எமிரேட்ஸ் விமானத்தில் வந்துள்ளார்.

அவர் அனுமதிக்கப்பட்ட அளவை காட்டிலும் அதிக தங்க நகைகளை அணிந்திருந்தார்.

அவரது உடைமைகளை சோதித்தபோது 25 தங்க கட்டிகள் இருந்துள்ளன. இதனால் சந்தேகம் அடைந்த வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

கர்நாடக பொலி டிஜிபி அந்தஸ்தில் இருக்கும் ஐபிஎஸ் அதிகாரியின் மகள் எனவும், பெங்களூரு மாநகர பொலிஸார் என்னை வீட்டுக்கு அழைத்துச் செல்வார்கள் எனவும் ரன்யா ராவ் கூறியுள்ளார்.

இருப்பினும் சந்தேகம் அடைந்த அதிகாரிகள், அவரை வருவாய் புலனாய்வு இயக்குநரக அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அதில் ரன்யா ராவ் க‌டந்த 15 நாட்களில் 4 முறை டுபாய்க்கு பயணம் செய்தது தெரியவந்துள்ளது.

ஒவ்வொரு முறையும் தங்கம் கடத்தி வந்திருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து சட்ட விரோதமாக தங்கம் கடத்தியதாக ரன்யா ராவ் மீது அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அவரிடம் இருந்த 14.8 கிலோ கிராம் தங்கத்தையும் பறிமுதல் செய்தனர். அவரை நேற்று பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, 3 நாள் காவலில் எடுத்துள்ளனர்.

நடிகை ரன்யா ராவ் தங்கம் கடத்திய வழக்கின் பின்னணியில் முக்கிய புள்ளிகள் சிலர் இருக்கலாம் என வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அந்த கும்பல், அவரை தங்கம் கடத்த பயன்படுத்தி இருக்கலாம் என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.

வாகனம் இறக்குமதி செய்த மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வாகனம் இறக்குமதி செய்த மூவர் கைது

வாகனம் இறக்குமதி செய்த மூவர் கைது

வாகனம் இறக்குமதி செய்த மூவர் கைது ,சட்டவிரோதமாக ஒரு SUV மற்றும் ஒரு காரை இறக்குமதி செய்து போலி இலக்கத் தகடுகளுடன் பயன்படுத்தியதற்காக மூன்று பேரை பெல்மதுல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒரு ரகசிய தகவலின் அடிப்படையில், பெல்மதுல்ல பொலிஸ் அதிகாரிகள் 2024 ஒக்டோபரில் அந்தப் பகுதியில் உள்ள ஒரு கராஜுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு வாகனங்களைக் கண்டுபிடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலதிக விசாரணைகளின் விளைவாக நேற்று மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 49, 59 மற்றும் 61 வயதுடைய, எம்பிலிப்பிட்டிய மற்றும் மமடல பகுதியைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்கள் நேற்று பெல்மதுல்ல நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், 2025 மார்ச் 11 வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்

பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை
Posted in இலங்கை செய்திகள்

பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை

பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை

பொருத்தமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை ,மனித நுகர்வுக்குப் பொருத்தமற்ற அசுத்தமான தேங்காய் எண்ணெய் உள்ளூர் சந்தையில் நுழைந்துள்ளதாக வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

“சுத்திகரிக்கப்படாத தேங்காய் எண்ணெயைப் பெற்று உள்ளூர் சந்தையில் விற்பனை செய்வதில் இறக்குமதியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்” என்று பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி சபையில் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் கூறினார்.

“சில இறக்குமதி நிறுவனங்கள் கணிசமான வருவாய் ஈட்டிய பின்னர் 11 மாதங்களில் செயல்படாமல் போய்விட்டன” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் திருத்தப்படும் என்றும், மோசடிகளைத் தடுக்க வலுவான விதிகள் மற்றும் விதிமுறைகள் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறினார்.

செவ்வந்தியின் தலைக்கு ரூ1 2 மில்லியன் ரொக்கம்
Posted in இலங்கை செய்திகள்

செவ்வந்தியின் தலைக்கு ரூ1 2 மில்லியன் ரொக்கம்

செவ்வந்தியின் தலைக்கு ரூ1 2 மில்லியன் ரொக்கம்

செவ்வந்தியின் தலைக்கு ரூ1 2 மில்லியன் ரொக்கம ,.பாதாள உலகக் குழுத் தலைவர் ‘கணேமுல்ல சஞ்சீவ’வின் கொலையுடன் தொடர்புடைய காணாமல் போன பெண் சந்தேக நபரைக் கைது செய்வதற்கு உதவியான தகவல்களுக்கு அறிவிக்கப்பட்ட வெகுமதியை இலங்கை பொலிஸ் அதிகரித்துள்ளது.

அதன்படி, பொலிஸ் தற்போது அந்தத் தொகையை முந்தைய ரூ.1 மில்லியனில் இருந்து ரூ.1.2 மில்லியனாக அதிகரித்துள்ளது.

நீர்கொழும்பு, கட்டுவெல்லகமவைச் சேர்ந்த 25 வயதான இஷாரா செவ்வந்தி என அடையாளம் காணப்பட்ட சந்தேக நபர், பிப்ரவரி மாதம் கொழும்பு நீதிமன்ற வளாகத்திற்குள் சஞ்சீவவைக் கொன்ற துப்பாக்கிதாரருக்கு உதவியதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார், எனவே அவரைக் கண்டுபிடிக்க பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

இந்தக் கொலை தொடர்பாக செவ்வந்தியின் தம்பி மற்றும் தாயார் உட்பட மேலும் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தகவல் தெரிவிப்பவர்களின் ரகசியத்தன்மை பாதுகாக்கப்படுவதை பொலிஸ் திணைக்களம் உறுதி செய்துள்ளது. மேலும், தகவல் தெரிந்தவர்கள் 071-8591727

அல்லது 071-8591735 என்ற அவசர அழைப்புகள் மூலம் அவர்களைத் தொடர்பு கொள்ளுமாறு பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

வாழைத்தோட்டம் பொலிஸ் பிரிவில் உள்ள எண் 05 நீதவான் நீதிமன்றத்தில் திட்டமிட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன அல்லது கணேமுல்ல சஞ்சீவ 19.02.2025 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார்.

தேடியும் கிடைக்காத தேசபந்து
Posted in இலங்கை செய்திகள்

தேடியும் கிடைக்காத தேசபந்து

தேடியும் கிடைக்காத தேசபந்து

தேடியும் கிடைக்காத தேசபந்து ,முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தங்கியிருந்ததாகக் கூறப்படும் 5 வீடுகளையும் குற்றப் புலனாய்வு பிரிவினர் சுற்றிவளைத்தும் அவர் குறித்து எந்த தகவலும் கிடைக்கவில்லைஎன கூறியுள்ளனர்.

கொழும்புக்கு அருகிலுள்ள இரண்டு சொகுசு குடியிருப்பு வளாகங்களில் இரண்டு வீடுகளும், கொழும்பு மற்றும் குருநாகல் பகுதிகளிலுள்ள மூன்று வீடுகளும் இவ்வாறு சோதனைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், இந்த சுற்றிவளைப்பின் மூலம் முன்னாள் பொலிஸ் மா அதிபர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2023 ஆம் ஆண்டு, மாத்தறை வெலிகம, பெலேன பகுதியிலுள்ள W15 உணவகமொன்றுக்கருகில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாகவே முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தேடப்பட்டு வருகின்றார்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில், கொழும்பு குற்றப்பிரிவின் சார்ஜென்ட் ஒருவர் கொல்லப்பட்டு மற்றொரு அதிகாரி ஒருவரும் காயமடைந்திருந்தார்.

வெலிகம W15 ஹோட்டல் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முசம்மிலின் மகனான முகமது இஷாம் ஜமால்தீனுக்கு சொந்தமானது என்று தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில், முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் உட்பட எட்டு பேரைக் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய, முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்து வருகின்றனர்.

குற்றப்புலனாய்வு பிரிவினரின் சோதனை நடவடிக்கையில், தேசபந்து தென்னகோன் தொடர்பாக இதுவரை எந்த தகவலும் கிடைக்காத நிலையில், மாத்தறை நீதவான் நீதிமன்றம் அவர் வெளிநாடுகளுக்குச் செல்வதை தடுக்கும் வகையிலான பயணத்தடையையும் விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வீதி ஓர வியாபரிகள் மோதல் ஒருவர் பலி 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீதி ஓர வியாபரிகள் மோதல் ஒருவர் பலி 4 பேர் கைது

வீதி ஓர வியாபரிகள் மோதல் ஒருவர் பலி 4 பேர் கைது

வீதி ஓர வியாபரிகள் மோதல் ஒருவர் பலி 4 பேர் கைது ,மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அருகாமையில் ஹோட்டல் ஒன்றிற்கு முன்னால் வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனத்தில் மரக்கறி வியாபாரம் செய்வோருக்கிடையே

வியாபாரத்தில் ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து இடம்பெற்ற சண்டையில் வர்த்தகர் ஒருவர் மீது கத்தி மற்றும் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் அவர் உயிரிழந்த சம்பவம் நேற்று திங்கட்கிழமை (03) இரவு இடம்பெற்றள்ளது.

இந்த தாக்குதல் மேற்கொண்டவர்கள் என்ற சந்தேகத்தில் 4 பேரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 31 வயதுடைய வர்த்தகரான டிலக்ஷன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு அரசடி பகுதிக்கும் கல்லடி பாலத்துக்கும் இடையிலுள்ள வீதி ஓரத்தில் பட்டா ரக வாகனங்களில் மரக்கறிகளை கொண்டுவந்து வியாபாரிகள் வியாபாரத்தில் ஈடுபட்டுவருவது வழமை .

இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு சுமார் 7.00 மணியளவில் சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரரான வியாபாரி தனது பட்டா ரக வாகனததை நிறுத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.

இந்த நிலையில் அந்த வாகனத்துக்கு அருகாமையில் இன்னொரு வர்த்தகர் தனது வாகனத்தை நிறுத்தி வியாபாரம் செய்த நிலையில் இருவருக்கும் இடையே வர்த்தக போட்டி காரணமாக வாய்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து சம்பவத்தில் உயிரிழந்தவரின் சகோதரர் உயிரிழந்த அண்ணாவுக்கு கையடக்க தொலைபேசி ஊடாக அழைப்பு விடுத்து வரவழைத்தார் அவர் அங்குவந்து சகோதரனுடன் வாய்தர்கத்தில் ஈடுபட்ட

வர்த்தகர் மீது தாக்குல் மேற்கொண்டதை யடுத்து அங்கு இருவருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டதையடுத்து அவர் மீது 4 பேர் கத்தி மற்றும் கூரிய ஆயுதங்களால் தாக்குதல் மேற்கொண்டதையடுத்து அவர் படுகாயமடைந்த

நிலையில் மட்டு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனிடையே தாக்குதலை மேற்கொண்டு அங்கிருந்து தப்பி ஓடிய கொக்குவில் பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு வர்தகர்களும் பொலிசாரிடம் சரணடைந்ததையடுத்து அவர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்துக்கு தடவியல் பிரிவு பொலிசார் வரவழைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளை மட்டு. தலைமையக பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்

வடைக்குள் சட்டை ஊசி
Posted in இலங்கை செய்திகள்

வடைக்குள் சட்டை ஊசி

வடைக்குள் சட்டை ஊசி

வடைக்குள் சட்டை ஊசி ,வவுனியாவில் உள்ள சைவ உணவகம் ஒன்றில் நேற்று விற்பனை செய்யப்பட்ட உளுந்து வடை ஒன்றிற்குள் சட்டை ஊசி ஒன்று காணப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த வடை வாங்கிய நபர் உணவக முகாமையாளரிடம் தெரிவித்துள்ளார்.

எனினும், இது தவறுதலாக இடம்பெற்றுள்ளதாகவும், இனிவரும் காலத்தில் இவ்வாறு நடைபெறாது எனவும் கூறி வடையை வாங்கியவரிடம் சைவ உணவக முகாமையாளர் மன்னிப்பு கோரியுள்ளார்

இலங்கைக்கு மிகப்பெரிய வருமானம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு மிகப்பெரிய வருமானம்

இலங்கைக்கு மிகப்பெரிய வருமானம்

இலங்கைக்கு மிகப்பெரிய வருமானம் ,தொடர்ச்சியான நெருக்கடிகளை சந்திது வந்த இலங்கை, கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் சுற்றுலாத்துறையின் வருமானம் 400 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதாக சமீபத்திய தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய தரவுகளின்படி, சுற்றுலா வர்த்தகம் ஜனவரி மாதத்தில் 252,761 வருகைகளில் 400.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்டியுள்ளது. இது எந்த ஜனவரி மாதத்திலும் இல்லாத அதிகபட்சமாகும்.

ஜனவரி 2025 வருவாய், டிசெம்பர் 2024இல் இருந்து இந்தத் துறை ஈட்டியதை விட 10.7 சதவீதம் அதிகரிப்பைக் குறித்தது, மேலும் 2023ஆம் ஆண்டின் அதே காலகட்டத்தை விட 17.2 சதவீதம் அதிகரிப்பையும் பதிவு செய்தது.

ஜனவரி 2025இல் சுற்றுலாவிலிருந்து கிடைத்த வருவாய், டிசம்பர் 2019க்குப் பிறகு மிக உயர்ந்ததாகும். ஏனெனில் இந்தத் துறை 455.5 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாயைப் பதிவு செய்தது, அந்த ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களால் ஏற்பட்ட சரிவிலிருந்து அது வேகமாக மீண்டு வந்தது.

ஆனால், 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தொற்றுநோய் தொடர்பான எல்லை மூடல்கள் மற்றும் பிற கட்டுப்பாடுகள் காரணமாக நீடித்த சரிவு ஏற்பட்டது.

தற்போதைய போக்கைத் தடுக்கும் எந்தவொரு வெளிப்புற நிகழ்வுகளும் இல்லாத நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறை 2025ஆம் ஆண்டில் சாதனை எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளை வரவேற்பதன் மூலமும், சாதனை வருமானத்தைப் பெறுவதன் மூலமும் வரலாற்றை உருவாக்க விரும்புகிறது.

உதாரணமாக, 2024ஆம் ஆண்டில், தொடர்ச்சியான நெருக்கடிகளுக்கு மத்தியில் ஐந்து ஆண்டுகள் தடுமாறி வந்த பிறகு முழு மீட்சி ஏற்பட்டபோது, இந்தத் துறை 3,168.6 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்டியது.

இது 2023ஐ விட 53.2 சதவீதம் அதிகமாகும். இது அந்த ஆண்டிற்கான மொத்த வருகையான 2.1 மில்லியனிலிருந்து சற்று அதிகமாகும்.

இலங்கை 2025 ஆம் ஆண்டில் 3.0 மில்லியன் வருகையாளர்களை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் வர்த்தகத்திலிருந்து மொத்த வருமானத்தில் 3.0 பில்லியன் அமெரிக்க டொலர்களை ஈட்ட முடியும், இது 2018க்குப் பிறகு மிக உயர்ந்ததாக இருக்கும்.

தொடர்ச்சியான பின்னடைவுகள் இலங்கை இந்த மைல்கல்லை அடைவதை ஆறு நீண்ட ஆண்டுகள் தாமதப்படுத்தின, இல்லையெனில் 2019இல் இது அடையக்கூடியதாக இருந்திருக்கும்.

2020 முதல் 2022 வரை இந்தத் துறையின் சரிவு, உண்மையில், 2021 முதல் இலங்கை எதிர்கொள்ள வேண்டிய பொருளாதார சிக்கல்களை ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்தது.

வருகையால் தைரியமடைந்த இலங்கை அதிகாரிகள், இந்த ஆண்டிற்கான புதிய இலக்கை அடைய இலக்கு வைக்கப்பட்ட விளம்பர பிரசாரங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

அதன் மூல சந்தைகள் மற்றும் புதிய சந்தைகளில், இலங்கை அதன் பார்வையாளர்களுக்கு மாறுபட்ட அனுபவத்தை வழங்க முடியும்.

மாத்தறை துப்பாக்கிதாரிகள் சிக்கினர்
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிதாரி தொடர்பில் புதிய தகவல்

துப்பாக்கிதாரி தொடர்பில் புதிய தகவல்

துப்பாக்கிதாரி தொடர்பில் புதிய தகவல் ,பாதாள உலகக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரி, கடந்த ஆண்டு டிசம்பரில் கந்தானையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட துப்பாக்கிதாரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டிசம்பர் 13, 2024 அன்று கந்தானையில் உள்ள ஒரு வீட்டில் சமிந்து தில்ஷான் பியுமாங்க கந்தானாராச்சி துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு அப்பகுதியை விட்டு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் வசிக்கும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியால் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

90 நாள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CCD) சந்தேக நபரை விசாரித்த பின்னர் இந்த தகவல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

27 வயதான சந்தேக நபர், பிப்ரவரி மாதம் கொழும்பு நீதிமன்றத்திற்குள் இருந்தபோது, ​​ஒரு சட்டத்தரணி போல் மாறுவேடமிட்டு கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் மே முதல் வாரத்தில்
Posted in இலங்கை செய்திகள்

ஐந்து சபைகளுக்கு தேர்தல் நடக்காது

ஐந்து சபைகளுக்கு தேர்தல் நடக்காது

ஐந்து சபைகளுக்கு தேர்தல் நடக்காது ,எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்புமனுக்கள் 2025 மார்ச் 17 முதல் 2025 மார்ச் 20 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இறுதி நாளான மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் திங்கள் கிழமை (03) அறிவித்துள்ளது. இதேவேளை கட்டுப்பணம் ஏற்கும் நடவடிக்கை முதல் நாளான மார்ச் 19 ஆம் திகதி நண்பகல் 12 மணிக்கு நிறைவடையும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

இந்நிலையில், மே மாதம் முதல் வாரத்தில் உள்ளூராட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன.

எமது சகோதர பத்திரிகையான டெய்லி மிரருக்கு பேட்டியளித்த தேர்தல் ஆணைக்குழுவின்‌ தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, வாக்களிப்புக்கான திகதி குறித்து விவாதித்து இந்த வாரத்திற்குள் இறுதி முடிவை எட்ட சிறப்புக் கூட்டம் கூட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.

“அந்தந்த அரசியல் கட்சிகளால் முன்வைக்கப்படும் அனைத்து திட்டங்களையும் பரிசீலித்த பிறகு முடிவு எடுக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

“நாங்கள் அனைத்து பரிந்துரைகளையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறோம். இருப்பினும், ஒரு சுயாதீன அமைப்பாக, உள்ளூராட்சித் தேர்தல் சட்டத்திற்கு ஏற்ப தொடர்புடைய திகதி அறிவிக்கப்படும்,” என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் தெரிவித்தார்.

2025 பட்ஜெட் விவாதம் முடியும் வரை வேட்புமனுக்களை கோருவதில் தாமதம் செய்ய எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ள, அதே நேரத்தில் அரசாங்கம் முந்தைய அறிவிப்பை வலியுறுத்தி வருகிறது.

தேசிய மக்கள் சக்தி (NPP) இந்த செயல்முறையை விரைவுபடுத்துவது குறித்து குறிப்பாக குரல் கொடுத்து வருகிறது.

2023 ஆம் ஆண்டுக்கு முதலில் திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சித் தேர்தல், வேட்புமனுக்கள் ஏற்கனவே தொடங்கிய பின்னர் ஒத்திவைக்கப்பட்டது. பல அரசியல் கட்சிகள் இந்த தாமதத்தை நீதிமன்றத்தில் எதிர்த்தன, 2025 தேர்தலுக்கு அதே வேட்புமனு பட்டியலைப் பயன்படுத்துவது நியாயமற்றது என்று வாதிட்டன.

புதிய நியமன செயல்முறைக்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஒப்புதல் தேவைப்படும் என்று நீதிமன்றம் பின்னர் தீர்ப்பளித்தது குறிப்பிடத்தக்கது.

2025 வரவு -செலவு திட்டத்தின் மீதான இறுதி வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் மார்ச் 21 ஆம் திகதி மாலை 6 மணிக்கு நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அரசாங்க தகவல் திணைக்களத்தின் ஊடாக, திங்கட்கிழமை (03) மாலை அனுப்பிவைக்கப்பட்டுள்ள காணொளியில், உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் விளக்கமளித்துள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க,உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களுக்கான விண்ணப்பங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் 25 மாவட்டங்களிலும் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

336 உள்ளூராட்சி மன்றங்களுக்கு மட்டுமே தேர்தல் நடைபெறும். கல்முனை மாநகர சபை, தெஹியத்த கண்டிய பிரதேச சபை , மன்னார் பிரதேச சபை, பூநகரி பிரதேச சபை மற்றும் எல்பிட்டிய பிரதேச சபை ஆகியவற்றுக்கு தேர்தல் நடைபெறாது என்றார்

அவற்றை தவிர்த்து, 28 மாநகர சபைகள், 36 நகர சபைகள் மற்றும் 272 பிரதேச சபைகளுக்கு தேர்தல் நடைபெறும். மார்ச் 17ஆம் திகதி முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

கட்டுப்பணம் முதல் நாளான 19ஆம் திகதி நண்பகல் 12 மணி வரைக்கும் ஏற்றுக்கொள்ளப்படும்.

அத்துடன், அந்த நாட்களுக்குள் வரும் போயா, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பான எந்தவொரு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படாது.

இந்நிலையில், கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்திய வேட்பாளர்களுக்கான கட்டுப்பணம் மீள செலுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதுவரையிலும் 93 மில்லியன் ரூபாய் மீள கையளிக்கப்பட்டுள்ளது. இன்னும் பெற்றுக் கொள்ளாதவர்கள் இருந்தால், அதற்கான விண்ணப்பத்துடன், மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகத்துக்கு செல்ல வேண்டும்.

இம்முறை தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் கட்டுப்பணமாக 5000 ரூபாயையும் அரசியல் கட்சியில் இருந்து போட்டியிடும் வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் தலா 1500 ரூபாவையும் செலுத்த வேண்டும். அந்தந்த பிரதேச, நகர மற்றும் மாநகர சபைகளுக்கு தேர்ந்தெடுக்க வேண்டிய உறுப்பினர்களின் எண்ணிக்கை வேறுபடும்.

இதேவேளை, புதிய அரசியல் கட்சிகளை பதியும் நடவடிக்கை பெப்ரவரி 28ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. மார்ச் 28ஆம் திகதி வரையிலும் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலும் அரசியல் கட்சி பதிவும் வெவ்வேறான செயற்பாடுகளாகும். இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்ள தேவையில்லை என்று தெரிவித்த தேர்தல்கள் ஆணைக்குழுவின் தவிசாளர், உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நிறைவடைந்த பின்னரே, புதிய அரசியல் கட்சிகளுக்கான பதிவு இடம் பெறும் என்றார்.

400 000 ரிசர்வ் வீரர்களை அழைக்க இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
Posted in இலங்கை செய்திகள்

400 000 ரிசர்வ் வீரர்களை அழைக்க இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

400 000 ரிசர்வ் வீரர்களை அழைக்க இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது

400 000 ரிசர்வ் வீரர்களை அழைக்க இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது காசா போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள

நிலையில், கூடுதலாக 400,000 ரிசர்வ் வீரர்களை வரவழைக்க இராணுவத்தை அனுமதிக்கும் மசோதாவுக்கு இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இஸ்ரேலிய சேனல் 14, காசா பகுதியில் மீண்டும் சண்டை ஏற்படும் என்ற அச்சத்தின் மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறியது.

புதிய முடிவின் கீழ், இஸ்ரேலிய இராணுவம் மே 29 க்குள் 400,000 ரிசர்வ் வீரர்களை அணிதிரட்ட முடியும், இது முந்தைய உத்தரவை விட 80,000

வீரர்களின் அதிகரிப்பைக் குறிக்கும், இது அதிகபட்சமாக 320,000 ரிசர்வ் வீரர்களை அணிதிரட்ட ஒப்புதல் அளித்துள்ளது என்று ஒளிபரப்பாளர் கூறினார்.

“ரிசர்வ் கடமைக்காக மனித வளங்களை ஆட்சேர்ப்பு செய்வதில் உள்ள சவால்களுக்கு மத்தியில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று சேனல் தெரிவித்துள்ளது.

ஜனவரி 19ஆம் தேதி முதல் ஆறு வார கால போர் நிறுத்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக சனிக்கிழமை நள்ளிரவுடன் முடிவடைந்தது.

எவ்வாறாயினும், காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்டத்திற்கு முன்னேற இஸ்ரேல் ஒப்புக் கொள்ளவில்லை.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெதன்யாகு, முடிந்தவரை பல இஸ்ரேலிய கைதிகளை விடுவிக்கும் ஆரம்ப பரிமாற்ற கட்டத்தை நீட்டிக்க

முயன்றார், பதிலுக்கு எதையும் வழங்காமல் அல்லது ஒப்பந்தத்தின் இராணுவ மற்றும் மனிதாபிமான கடமைகளை நிறைவேற்றவில்லை

பாலஸ்தீனிய எதிர்ப்புக் குழுவான ஹமாஸ் இந்த நிபந்தனைகளின் கீழ் தொடர மறுத்துவிட்டது, இஸ்ரேல் போர்நிறுத்த விதிமுறைகளுக்குக்

கட்டுப்பட்டு, காசாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக வெளியேறுவது மற்றும் போரை முழுமையாக நிறுத்துவது உள்ளிட்ட இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகளை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது.

போர்நிறுத்த ஒப்பந்தம் காசா மீதான இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரை நிறுத்தியுள்ளது, இது 48,380 க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்டவர்களைக்

கொன்றது, பெரும்பாலும் பெண்கள் மற்றும் குழந்தைகளைக் கொன்றது மற்றும் என்கிலேவை இடிபாடுகளில் விட்டுச் சென்றது.