சீரற்ற காலநிலை மண்சரிவு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

சீரற்ற காலநிலை மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை மண்சரிவு எச்சரிக்கை

சீரற்ற காலநிலை மண்சரிவு எச்சரிக்கை ,நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

காலி மற்றும் இரத்தினபுரி

அதன்படி, காலி மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களுக்கு முதலாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மற்றும் மாத்தறை மாவட்டங்களுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேருந்துமீது முறிந்து விழுந்த மரம்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்துமீது முறிந்து விழுந்த மரம்

பேருந்துமீது முறிந்து விழுந்த மரம்

பேருந்துமீது முறிந்து விழுந்த மரம் ,ஒல்கொட் மாவத்தையில்‌ பேருந்து மீது முறிந்து விழுந்த மரம்.

ஒல்கொட் மாவத்தையில் காலை பேருந்து

கொழும்பு – ஒல்கொட் மாவத்தையில் காலை பேருந்து ஒன்றின் மீது மரம் முறிந்து விழுந்ததில் விபத்து ஏற்பட்டது.

இதனால், அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து இலங்கை எங்கும் பேரூந்து விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன .
இந்த விபத்தை தடுக்க ஆளும் அரசு தவறி வருகின்றமை குறிப்பிட தக்கது .

கோழி லொறிமீது மோதிய காட்டுயானை
Posted in இலங்கை செய்திகள்

கோழி லொறிமீது மோதிய காட்டுயானை

கோழி லொறிமீது மோதிய காட்டுயானை

கோழி லொறிமீது மோதிய காட்டுயானை ,தம்புள்ளை ரிடியெல்ல பகுதியில் கோழிகளை ஏற்றிச் சென்ற லொறி மீது காட்டு யானை மோதியதில் லொறி

கவிழ்ந்து, ஏராளமான கோழிகள் சாலையில்

கவிழ்ந்து, ஏராளமான கோழிகள் சாலையில் இறந்து கிடந்ததாக வனவிலங்குத் துறை தெரிவித்துள்ளது.

லொறியின் ஓட்டுநர் காயமடைந்து தம்புள்ளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காட்டு யானை

லொறி தம்புள்ளையிலிருந்து பகமுன நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது காட்டு யானை ஒன்று சாலையைக்

கடக்கும்போது இந்த விபத்து ஏற்பட்டதாக லொறியில் பயணித்த ஒரு தொழிலாளி தெரிவித்தார்.

காட்டு யானை மோதியதில் வாகனம் கவிழ்ந்து சாலையை விட்டு விலகிச் சென்றதாகவும் அவர் கூறினார்.

விபத்தில் ஏராளமான கோழிகள் இறந்திருப்பது தெரிந்தது. உயிருடன் இருந்த மற்ற கோழிகளும் சாலையில் கிடந்தன

பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்

பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள்

பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள் ,நேற்று (24) மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது, ​​பாராளுமன்ற சமையலறைக்குள் எலிகள் அல்லது .

சுகாதாரமற்ற நிலைமைகள்

சுகாதாரமற்ற நிலைமைகள் இருப்பதற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன தெரிவித்தார்.

சேமிப்புப் பகுதிகள் கண்ணாடி மற்றும் வலைகளால் பாதுகாக்கப்பட்டதாகவும், ஊழியர்கள் தொடர்ந்து தூய்மையைப் பராமரித்து வருவதாகவும் சிறிவர்தன கூறினார்.

உணவின் தரம் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை

கடந்த 35 ஆண்டுகளில் பாராளுமன்றத்தில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து எந்த முறைப்பாடும் வரவில்லை என்றும், சபாநாயகரின் கருத்துக்கள்

ஊழியர்களின் கண்ணியம் மற்றும் மரியாதைக்கு தீங்கு விளைவிப்பதாகவும் அவர் கூறினார்.

இருப்பினும், வசதிகள் பழுதடைந்த நிலையில் இருப்பதாகவும் சிறிவர்தன சுட்டிக்காட்டினார். ஏழு அடுப்புகளில் ஆறு அடுப்புகள் செயலிழந்து,

உபகரணங்கள் உடைந்து, ஓடுகள் தேய்ந்து, வெளியேற்றும் மின்விசிறிகள் செயல்படவில்லை, கழிப்பறைகள் கூட மோசமான நிலையில் இருப்பதை அவர் கவனித்தார்.

ஊழியர்கள் மேலும் சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, இந்தக் குறைபாடுகளை உடனடியாக நிவர்த்தி செய்யுமாறு அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார்.

பத்தரமுல்ல சுகாதார மருத்துவ அதிகாரியின் ஆய்வில், பாராளுமன்ற உணவகத்தில் எலிகள் மற்றும் கரப்பான் பூச்சிகளின் தடயங்கள், சேதமடைந்த சமையல் பாத்திரங்கள், உடைந்த தரை மற்றும் மனித நுகர்வுக்கு

பொருத்தமற்ற உணவு சேர்க்கைகள் கண்டுபிடிக்கப்பட்டதாக சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன சமீபத்தில் வெளியிட்ட தகவலைத் தொடர்ந்து அவரது கருத்துக்கள் வெளியாகியுள்ளன.

பொது சுகாதார ஆய்வாளர்களின் அறிக்கை இன்னும் பகிரங்கமாக வெளியிடப்படவில்லை என்றும், ஆனால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு

பங்கு வாக்கெடுப்பு போன்ற ஒரு முக்கியமான நாளில் உணவு விஷம் ஏற்பட்டால் எம்.பி.க்களுக்கு ஏற்படும் ஆபத்துகள் குறித்து எச்சரித்ததாகவும் சபாநாயகர் கூறினார்.

போதையில் வாகனம் செலுத்திய சாரதி
Posted in இலங்கை செய்திகள்

போதையில் வாகனம் செலுத்திய சாரதி

போதையில் வாகனம் செலுத்திய சாரதி

போதையில் வாகனம் செலுத்திய சாரதி ,மது போதையில் பேருந்து செலுத்தியதாக கூறப்படும் சாரதி ஒருவர் நுவரெலியா கந்தப்பளை பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை

உடபுஸ்சல்லாவையிலிருந்து, நுவரெலியா நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தை செலுத்திய சாரதியே கைது செய்யப்பட்டுள்ளார்.

சாரதியை கைது செய்யும் போது

சாரதியை கைது செய்யும் போது, அவர் செலுத்திச்சென்ற பேருந்தில் சுமார் 30 பேர் பயணித்ததாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

உடபுஸ்சல்லாவை பகுதியை சேர்ந்த 55 வயதான சாரதி ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

கோர விபத்து நால்வர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

கோர விபத்து நால்வர் மரணம்

கோர விபத்து நால்வர் மரணம்

கோர விபத்து நால்வர் மரணம் ,குருநாகல் – அநுராதபுரம் பிரதான வீதியில், தலாவ, மீரிகம பகுதியில் இன்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர்.

லொறியும் மோதியதால் இவ் விபத்து

குருணாகலிலிருந்து அநுராதபுரம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த வேனும் எதிர்த்திசையில் பயணித்த லொறியும் மோதியதால் இவ் விபத்து ஏற்பட்டுள்ளது.

அநுராதபுரம் வைத்தியசாலை

விபத்தில் காயமடைந்தவர்கள் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது
Posted in இலங்கை செய்திகள்

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது

நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதிக்க முடியாது ,துணை பாதுகாப்பு அமைச்சர் அருண ஜெயசேகராவுக்கு எதிரான நம்பிக்கையில்லா

சர்வதேச பாராளுமன்ற நடைமுறை

பிரேரணையை நிலையியற் கட்டளைகள், அரசியலமைப்பு மற்றும் சர்வதேச பாராளுமன்ற நடைமுறைகளின்படி

விவாதிக்க முடியாது என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இன்று மீண்டும் வலியுறுத்தினார்.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு

ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்கில் நம்பிக்கையில்லா பிரேரணை எந்த சட்ட விளைவையும் ஏற்படுத்தாது என்று

கூறி செயலாளர்கள் குழு சமரப்பித்த அறிக்கையையும் மற்றும் சட்டமா அதிபர் தன்னிடம் சமர்ப்பித்த அறிக்கையையும் சபாநாயகர் சுட்டிக்காட்டினார்.

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு
Posted in இலங்கை செய்திகள்

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு

அதிவிசேட வர்த்தமானி வெளியீடு ,பொது பாதுகாப்பைப் பேணுவதற்காக நாடு முழுவதும் ஆயுதப்படைகளை வரவழைத்து ஜனாதிபதி அனுர குமார

அதிவிசேட வர்த்தமானி

திசாநாயக்க ஒரு அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டுள்ளதாக சபாநாயகர் கலாநிதி ஜகத் விக்ரமரத்ன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

செப்டம்பர் 27, 2025 முதல் அமலுக்கு வரும் இந்த உத்தரவு, பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 12ன் மூலம்

ஜனாதிபதிக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களின் கீழ் உருவாக்கப்பட்டது.

பொதுப் பாதுகாப்பைப் பராமரிக்க முப்படை

இருப்பினும், ஜனாதிபதி ஒரு அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பின் மூலம் பொதுப் பாதுகாப்பைப் பராமரிக்க முப்படைகளையும் அழைக்கும்

நடைமுறை, அடுத்தடுத்த அரசாங்கங்களால் மீண்டும் மீண்டும் செய்யப்படும் நடைமுறையாக மாறியுள்ளது

கேபிள்கார் அறுந்து 7பிக்குகள்
Posted in இலங்கை செய்திகள்

கேபிள்கார் அறுந்து 7பிக்குகள்

கேபிள்கார் அறுந்து 7பிக்குகள்

கேபிள் கார் அறுந்து விழுந்ததில் 7பிக்குகள் மரணம்,குருநாகலை – மெல்சிரிபுர நா உயன பகுதியில், நேற்று மதகுருமார்களை ஏற்றிச் சென்ற கேபிள் கார் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

இரண்டு ரஷ்ய துறவி

உயிரிழந்தவர்களில் இரண்டு ரஷ்ய துறவிகளும், கம்போடிய துறவி ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அத்துடன், இந்த சம்பவத்தில் காயமடைந்த 6 பேர் குருநாகலை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து நேர்ந்த சந்தர்ப்பத்தில் குறித்த கேபிள் காரில் 13 மதகுருமார்கள் பயணித்துள்ளன

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும்இடையில் புதிய விமானசேவை
Posted in இலங்கை செய்திகள்

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும்இடையில் புதிய விமானசேவை

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும்இடையில் புதிய விமானசேவை

இஸ்ரேலுக்கும் இலங்கைக்கும்இடையில் புதிய விமானசேவை ,இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான புதிய விமானம் ஒன்று

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகை

கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வருகைத் தர உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதுவர் நிமல் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேலிருந்து கட்டுநாயக்க வரை ஆரம்பிக்கப்பட உள்ள புதிய விமான சேவை தொடர்பில் செவ்வாய்க்கிழமை (23) தனது உத்தியோகபூர்வ முகபுத்தக

தளத்தில் பதிவொன்றையிட்டு இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியுள்ளார்.

இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவை

இஸ்ரேலின் எரிக்கா ஏர்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான (IZ) – 639 என்ற விமானம் இன்று முதல் செவ்வாய்க்கிழமை தோறும் பிற்பகல் 6.30

மணிக்கு டெல் அவிவ் விமான நிலையத்திலிருந்து கொழும்பு கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி பயணிக்க உள்ளது.

அதற்கமைய இன்று பயணமான விமானம் புதன்கிழமை காலை 6.15 மணியளவில் நாட்டை வந்தடைய உள்ளது.

இந்திய கடற்படைத்தளபதி பிரதமரைச் சந்தித்தார்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய கடற்படைத்தளபதி பிரதமரைச் சந்தித்தார்

இந்திய கடற்படைத்தளபதி பிரதமரைச் சந்தித்தார்

இந்திய கடற்படைத்தளபதி பிரதமரைச் சந்தித்தார் ,நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு 2025 செப்டம்பர் மாதம் 21ஆம்

இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி

திகதி இலங்கைக்கு வருகை தந்த இந்திய கடற்படைத் தளபதி, Admiral Dinesh K Tripathi, பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை செவ்வாய்க்கிழமை (23) சந்தித்தார்.

இந்திய கடற்படைத் தளபதி மற்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், இரு

நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துதல் மற்றும் நீண்டகால நட்புறவை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இரு தரப்பினருக்கும் முக்கியமான பல விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

அத்துடன், கடல்சார் பாதுகாப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத

மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்ட சவால்களுக்கு முகம்

மீன்பிடி நடவடிக்கைகள் உள்ளிட்ட சவால்களுக்கு முகம் கொடுக்கும் வகையில் கூட்டு அணுகுமுறையுடன் செயற்படுவதன் முக்கியத்துவமும் பற்றி

வலியுறுத்தப்பட்டது. மேலும், இந்நாட்டு கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை இந்திய அரசாங்கத்தினால் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

இலங்கை கடற்படை 12ஆவது தடவையாகவும் ஏற்பாடு செய்யும் காலி கலந்துரையாடல் சர்வதேச கடல்சார் மாநாடு – 2025 இல் கலந்துகொண்டதன்

பின்னர், 2025 செப்டம்பர் 25ஆம் திகதி இந்திய கடற்படைத் தலைவர் Admiral Dinesh K Tripathi மீண்டும் நாடு திரும்ப இருக்கின்றார்.

இச்சந்திப்பில் இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா

போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் தெற்காசிய மற்றும் SARCC பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பத்திரண ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

மீனவர்களின் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ,திருகோணமலை,உட்துறைமுகம் கடலில்கட்டுவலை மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களின் வலைகளில் இருந்து மீன்கள் திருடப்படுவதை தடுத்து நிறுத்தக் கோரியும்,திருடர்களை சட்டரீதியாக தண்டிக்குமாறு கோரியும் புதன்கிழமை

தமிழ் மற்றும் சிங்களமீனவர்சங்கங்கள்

(24) அன்று தமிழ் மற்றும் சிங்களமீனவர்சங்கங்கள் இணைந்து, உட்துறைமுகம் வீதியில் அமைந்துள்ள மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசடி​ புனிதசூசையப்பர் கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் நடந்த இப்போராட்டத்தை தொடர்ந்து தமது கோரிக்கைகள்

அடங்கிய மனுவை,மீனவர் சங்கப் பிரதிநிதிகள் திருகோணமலை மாவட்ட கடற்றொழில் உதவிப்பணிப்பாளரிடம் கையளித்தனர்.

இப்போராட்டத்தின் போது கருத்து தெரிவித்த சங்கத்தின் முன்னாள் தலைவரும்,தற்போதைய ஆலோசகருமான இ.பாக்கியராசா கூறுகையில் “உட்

துறைமுக கடற்பரப்பில் எம்மால் மேற்கொள்ளப்படும் கட்டுவலை தொழிலுக்கு,இப்பகுதியைச் சேர்ந்த ஒரு சிலரால் பின்வரும் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

1.எமது மீனவர்சங்கஅங்கத்தவர்களால் 56 இடங்களில் கட்டுவலை அமைக்கப்பட்டு மீன்பிடி நடைபெறுகிறது.

கட்டுவலைகளில் உள்ளகூடுகளில் நிற்கும்

2.மேற்படி கட்டுவலைகளில் உள்ளகூடுகளில் நிற்கும் கணவாய்மீன்களை சிலர்திருடுகின்றனர்.

3.கணவாய்களை பிடிப்பதற்கான அவர்கள் பயன்படுத்தும் விசேடதூண்டிலினால் எமதுகட்டுவலைகள் சேதமடைகின்றது.

4.வலைகள் சேதமடையும் போதுகூட்டில் உள்ளமீன்கள் வெளியேறி விடுகின்றன.

5.இதனால் வலைகள்சேதமடைவது டன்,மீன்கள் வெளியேறுவதால் வருமானம் முழுவதும் இழக்கப்படுகின்றது.

எனவேஇவ்வாறு திருட்டில் ஈடுபடுபவர்களை சட்டரீதியாக தடுக்கவும் ,திருடர்களுக்கு உரிய தண்டனை வழங்கி திருட்டுக்கள் தொடராது இருப்பதை உறுதிப்படுத்துமாறும் நாங்கள் உரிய அதிகாரிகளை வேண்டுகின்றோம்.

இந்த உட் துறைமுக கடற்பரப்பில் 1935 ம்ஆண்டு முதல் நான்கு தலைமுறையாக இந்த கட்டுவலைத் தொழில் எம்மால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஆரம்பத்தில் பிளான் ரன் பொயின்ட் முகாமையை அண்மித்த கடற்பரப்பில் இருந்து கடற்படை முகாம் வரையிலான கடல் பகுதியில் 64 இடங்களில் கட்டுவலை அமைக்கப்பட்டு மீன்பிடி நடைபெற்று வந்தது.

உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்தில் பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம்,கட்டு வலைகளின் எண்ணிக்கை 56 ஆக குறைவடைந்தது.கடற்படை முகாமை அண்மித்த கட்டுவலைகள் அகற்றப்பட்டது.

1935 ம் ஆண்டு முதல் இக்கட்டுவலைத் தொழில் இப்பகுதியில் செய்யப்பட்டு வந்த போதும்,1993ம்ஆண்டில் முதல் முறையாக இத்தொழிலுக்கென அனுமதிப்பத்திரம் கடற்றொழில் அமைச்சு வழங்கப்பட்டது.

அது வருடாந்தம் புதிப்பிக்கப்பட்டு வருகின்றது.ஆழம் குறைந்த கடற்ப்பரப்பில் மட்டுமே இக்கட்டு வலைத் தொழில் செய்ய முடியும்.2019 ம் ஆண்டின் பின்னர் சிலர் எமது கட்டுவலைகளில் கணவாய்களைத் திருட தொடங்கினர்.

இதனால் முரண்பாடுகள் ஏற்படத் தொடங்கியது. உட் துறை முகப்பகுதியில் தூண்டில் மீன்பிடி,வலையை பயன்படுத்தி மீன் பிடித்தல்,கரைவலைமீன்பிடி என்ற மேலும் மூன்று வேறு மீன்பிடித் தொழில்களும் நடைபெற்று வருகின்றது.

கட்டுவலைத் தொழில் மேற்படி மூன்று தொழில்முறைகளுக்கு இடையூறு எதுவும் ஏற்படுத்தாது நடைபெற்று வருகின்றது.

அதே வேளை மேற்படி மூன்று மீன்பிடியாளர்களால் கட்டுவலைத் தொழிலுக்கு இதுவரை எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

இந்த நிலையில் எமது கட்டுவலைகளில் மீன்களை(கணவாய்)திருடும் சிலரை பலமுறைகையும் களவுமாக பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளோம்.

ஆனால் அடுத்த நாளே அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டு வெளியில் வந்து மீண்டும் திருட்டில் ஈடுபடுகின்றார்கள்.

இது பற்றி கஸ்தூரி நகர் மீனவர் கூட்டுறவுச் சங்கத்திற்கு அறிவித்தோம்.

ஆனால்திருடர்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது உள்ளது.நீங்கள் சட்ட ரீதியாக அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுங்கள்.

அதற்கு நாங்கள் தடையில்லை என்றுஅந்த சங்க நிர்வாகிகள் எழுத்து மூலம் எமக்குஅறிவித்துள்ளனர்.

இம் முரண்பாடுகள் தொடரும் நிலையில் அது இரு பகுதியினருக்கும் இடையில் பெரும் மோதல் நிலையை ஏற்படுத்தக்கூடும் என்றும் நாங்கள் அஞ்சுகின்றோம்.

எனவே மேற்படி நிலைமைகளை கருத்தில் கொண்டு பின்வரும் தீர்வுகளை எமக்கு வழங்கி இவ்முரண்பாட்டு நிலையை முடிவுக்கு கொண்டு வர உதவுமாறு வேண்டுகிறோம்.

உரிய அரச அதிகாரிகளை வேண்டி நிற்கின்றோம். தீர்வுகள்

1.ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் முதல் செப்டெம்பர் மாதம் வரையான காலத்தில் கணவாய் மீன்கள் கரையை நோக்கி வரும்.

இக்காலப்பகுதியில் தான் கணவாய் திருட்டு அதிகளவில் இடம் பெறும்.எனவே இது முற்றாக தடுக்கப்படல் வேண்டும்.

2.திருட்டில் ஈடுபடுபவர்களுக்கு சட்டரீதியாக உச்சபட்சத் தண்டனை வழங்கப்படல் வேண்டும்

.3.திருட்டின் போதுகட்டுவலை சேதமாக்கப்பட்டால் அதற்குரிய முழுமையான நட்டஈடும் திருட்டில் ஈடுபட்டவரால் உரிய கட்டுவலை உரிமையாளருக்கு வழங்கப்படல் வேண்டும்.

4.உட்துறைமுக கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் கட்டுவலை,தூண்டில் முறை,வலைத்தொழில்,கரைவலைத் தொழில் என்பவற்றை

சுதந்திரமாகவும்,எவருக்கும் மற்றைய தொழில்செய்பவரால் எவ்வித பாதிப்பும் ஏற்படுத்தப்படாமலும் இருப்பதற்கேற்ற ஒழங்குவிதிகளை ஏற்படுத்தலும்,அதனை நடைமுறைப்படுத்தி கண்காணிப்பதும்.

இறுதியாக எமது பாதிப்புக்களையும் அவற்றிற்கான தீர்வுகளையும் முன்வைத்து நடக்கும் இப்போராட்டம் மூலம் வெற்றி கிடைக்காவிட்டால்

அடுத்து நீதித்துறையிடம் நேரடியாக முறையிட எண்ணியுள்ளோம் “என்று அவர் கூறினார்.

இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு

இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு

இந்தியா-இலங்கை வெளிவிகார அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபை (UNGA) அமர்வின் ஒரு பகுதியாக, இலங்கை

வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர்

வெளிவிகார அமைச்சர் விஜித ஹேரத்துக்கும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கும் இடையிலான சந்திப்பு அமெரிக்காவில் நடைபெற்றது.

அமைச்சர் விஜித ஹேரத் தனது அதிகாரப்பூர்வ X தளத்தில் ஒரு பதிவில், இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையிலான வலுவான நட்பு மற்றும்

நெருக்கமான ஒத்துழைப்பை இந்த விவாதம் மீண்டும் உறுதிப்படுத்தியதாக கூறினார்.

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க உடன் விஜித ஹேரத் நியூயார்க்குக்கு செல்கின்றார், அங்கு ஜனாதிபதி புதன்கிழமை (24) அன்று இலங்கை நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு (UNGA) இல் உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதி தனது விஜயத்தின் போது ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு

பேச்சுவார்த்தை களையும் நடத்துவார் என்று ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்,அமைச்சர் ஹேரத் அமெரிக்க துணை வெளியுறவு செயலாளர் அலிசன் ஹூக்கரையும் சந்தித்தார்.இருதரப்புஒத்துழைப்பை வலுப்படுத்துவது

மற்றும் இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான பகிரப்பட்ட முன்னுரிமைகளை முன்னேற்றுவது குறித்து இந்த கலந்துரையாடல் கவனம் செலுத்தியது

அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி

அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி

அல்வா பூரிதின்றதால் 20பசுக்கள் பலி ,ஹரியானாவில், தெருவில் சுற்றித்திரிந்த 20 பசுக்கள் திடீரென இறந்த சம்பவம் அதிர்ச்சியை

ஜீரணிக்க முடியாத உணவை தின்று பசுக்கள் உயிரிழந்தது

ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விசாரணையில் அல்வா, பூரி போன்ற ஜீரணிக்க முடியாத உணவை தின்று பசுக்கள் உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

ஹரியானாவின் ஹிசாரில், ‘கோ சேவா ஹெல்ப் லைன் சமிதி’ என்ற தன்னார்வ அமைப்பு செயல்படுகிறது. தெருக்களில் சுற்றித்திரியும் பசுக்களை மீட்டு

பராமரிக்கும் பணியில், இந்த அமைப்பு

பராமரிக்கும் பணியில், இந்த அமைப்பு ஈடுபடுகிறது. இந்நிலையில், கடந்த மூன்று நாட்களில் இங்குள்ள தெருக்களில் சுற்றித்திரிந்த, 20க்கும் மேற்பட்ட

பசுக்கள் பலியாகியுள்ளதாக, இந்த அமைப்பின் நிறுவனரும், இயக்குநருமான சீதா ராம் சிங்கால் தெரிவித்தார்.

ஹிசாரில் தினமும் சராசரியாக இரண்டு தெரு பசுக்கள் இறக்கின்றன. இது இயற்கையாகவோ, நோய் பாதிப்பு காரணமாகவோ, விபத்தினாலோ

பலியாகின்றன. நகரில் பல்வேறு பகுதிகளில் கடந்த மூன்று நாட்களில் மட்டும் 20 பசுக்கள் இறந்துள்ளன. இவை பெரும்பாலும் மக்கள் தரும் அல்வா, பூரி,

வறுத்த தின்பண்டங்கள் போன்ற உணவுகளை தின்று, அதனால் அமிலத்தன்மை அதிகரித்து இறக்கின்றன இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு

ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு

ஜனாதிபதி வோல்கர்டர்க் இடையே சந்திப்பு ,ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் (Volker Türk) இடையிலான சந்திப்பு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்

செயலாளர் அலுவலகத்தில் அமெரிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் நடைபெற்றது.

இதன்போது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் ஜனாதிபதியை அமோகமாக வரவேற்றதுடன் கடந்த வருடத்தில் மனித

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள்

உரிமை தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான விடயங்கள் இதன் போது ஆராயப்பட்டது.

வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கை

நிரந்தர பிரதிநிதியும் முன்னாள் பிரதம நீதியரசருமான ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரியவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்
Posted in இலங்கை செய்திகள்

பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்

பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய்

பிரபாகரன் ஒருதாயைப் போன்றவர் விஜய் ,விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், இலங்கை தமிழ் மக்களுக்கு “ஒரு

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய்

தாயைப் போன்றவர்” என்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்தில் நடந்த தேர்தல் பேரணியில் தெரிவித்துள்ளார்.

“உலகின் எந்த மூலையில் இருந்தாலும், எங்கள் உறவினர்களான ஈழத் தமிழ் மக்கள், தாய் பாசத்தைக் காட்டிய ஒரு தலைவரை இழந்து தவிக்கின்றனர்.

எனவே, அவர்களுக்காகப் பேசுவது எங்கள் கடமை.”எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாகப்பட்டினம் போன்ற பெரிய கடற்றொழில் சமூகம் உள்ள பகுதிகளில் இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை ஓர் உணர்ச்சிகரமான பிரச்சினையாகக் கருதப்படுகிறது.

இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய்

2008 ஆம் ஆண்டில், இலங்கைத் தமிழர்களின் சார்பாக விஜய் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டார். இருப்பினும், அரசியல்

விமர்சகர்கள் இலங்கைத் தமிழர்களை ஆதரிப்பதும், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட விடுதலைப் புலிகளை ஆதரிப்பதும் ஒன்றல்ல என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

பிரபாகரனைப் புகழ்வதைத் தவிர, கடற்றொழில் சமூகத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பது தனது கட்சியின் முக்கிய குறிக்கோள் என்று விஜய் கூறினார். மேலும், எம்.கே. ஸ்டாலின் அரசாங்கத்தையும் விமர்சித்த அவர்,

மீன்பிடிப் பிரச்சினைகளைத் தீர்க்க தனது கட்சி நீண்ட கடிதங்களை எழுதாது, மாறாக தீர்வுகளைத் தேடும் என்றும் கூறினார்.

“கடற்றொழிலார்களின் உயிர்கள் முக்கியம். ஆனால் ஈழத் தமிழர்களின் உயிர்களும் எங்களுக்கு சமமாக முக்கியம்” என்று கூறி முடித்தார்.

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு 7 – 8 மணியளவில் புதுக்குடியிருப்பு கிராமத்துக்குள் புகுந்த இராணுவத்தினரும் அவர்களுடன் இணைந்து ஊர்காவல் படையினரும் வீடுகளின் உறங்கிக்

அப்பாவி தமிழ் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணை

கொண்டிருந்தவர்களின் 45 அப்பாவி தமிழ் மக்களை தூக்கத்திலிருந்து எழுப்பி விசாரணைக்கென கடற்கரை பகுதிக்கு ஒதுக்கிக் சென்றுள்ளனர்.

விசாரணக்கொன அழைத்துச் சென்றவர்களில் சிலர் உயிர் தப்பிய உள்ள போதிலும் நள்ளிரவு வேளை பெண்கள் சிறுவர்கள் உட்பட 17 பேர் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன்

இவர்களது சடலங்கள் துப்பாக்கி காயம் மற்றும் வெட்டுக் காயங்களுடன் பிரதேச மக்களால் மீட்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.

உயிரிழந்தவர்களின் நினைவாக புதுக்குடியிருப்புபில் அமைக்கப்பட்டநினைவுத் தூபி முன்றலில்

உறவினர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நினைவேந்தல் நிகழ்வில் ஈகை சுடர் ஏற்றப்பட்டு,மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இந்தப் படுகொலையில் 09 ஆண்கள் 08 பெண்கள் சிறுவர்கள் என17 படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.

குறித்த படுகொலைச் சம்பவம் நடைபெற்று 35 ஆண்டுகள் கடந்த போதிலும் இதுவரை நீதி கிடைக்கவில்லை என இறந்தவர்களின் உறவினர்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

புலிகளுடன் தொடர்பு இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி
Posted in இலங்கை செய்திகள்

புலிகளுடன் தொடர்பு இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

புலிகளுடன் தொடர்பு இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

புலிகளுடன் தொடர்பு இலங்கைப் பெண்ணை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி ,தற்போது சிறையில் உள்ள இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணொருவரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்துடன் .

சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு

தொடர்புடையதென கூறப்படும் பணச்சலவை குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க சென்னையில் உள்ள விசேட தேசிய புலனாய்வு முகவரக நீதிமன்றம் அமுலாக்க துறைக்கு அனுமதி அளித்துள்ளது.

மேரி பிரான்சிஸ்கா லெட்சுமணன் என்ற குறித்த பெண் தமிழ்நாட்டின் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

அவர் விடுதலைப் புலிகள் அமைப்புடன் தொடர்பை கொண்டிருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் ஏற்கனவே தேசிய புலனாய்வு முகவரத்தினால் அவர் விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறார்.

இது அந்த முகவரத்தினால் 2022 ஆம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட பணச்சலவை வழக்குடன் தொடர்புடையது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையிலுள்ள வங்கிக் கணக்கொன்றிலிருந்து பணம் எடுப்பதறகு போலி இந்திய அடையாள ஆவணங்களைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

விடுதலைப்புலிகளின் மீளுருவாக்க செயற்பாடு

இந்த நிதி, விடுதலைப்புலிகளின் மீளுருவாக்க செயற்பாடுகளுக்கானதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

இந்தநிலையில், சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டுள்ள நபர்கள் மற்றும் வலையமைப்புகளை அடையாளம் காண்பதற்கு குறித்த பெண்ணை விசாரிப்பது அவசியம் என்று அமுலாக்க துறை அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

நீதிமன்றம் அதை ஏற்றுக்கொண்டு இரண்டு நாட்கள் சிறையில் அவரை விசாரிக்க அதிகாரிகளுக்கு அனுமதியளித்தது.

சிறை விசாரணையின் போது மடிக்கணினிகள், அச்சுப்பொறிகள் மற்றும் பிற இலத்திரனியல் சாதனங்களைப் பயன்படுத்தவும் நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

சசீந்திர ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிப்பு, மகிந்தவின் சகோதரரான தெரிவிக்கப்பட்டுள்ளது .

முன்னாள் ராஜாங்க அமைச்சராக

முன்னாள் ராஜாங்க அமைச்சராக செயல்பட்ட சசீந்திர ராஜபக்ஷவுக்கு இந்து இவ்வாறு தொடர்ந்து பிணைவழங்க மறுக்கப்பட்டு விளக்கமறையில் நீடிக்கப்பட்டுள்ளது .

இதன்படி ராஜபக்ஷவை எதிர்வரும் 30 ஆம் தேதி வரை விளக்கமரில் வைக்குமாறு கொழும்பு நீதவா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

லஞ்ச ஊழல் மோசடி

லஞ்ச ஊழல் மோசடி செய்த நபர்களுக்கு எதிரான போட்டியை ஆரம்பித்து உள்ளதான தோற்றப்பாட்டை ஏற்படுத்திவிடுகிறது.

அவ்விதிகமான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகிறது.

ஆனால் அவர்கள் ஏதோ ஒரு வகையில் பின்னர் குற்றங்கள் அற்றவராக பிணையில் விடுவிக்கப்படுவது தான் ஏமாற்று நாடகத்தின் உச்சகட்ட திருவிழா கோலமாக காணப்படுகிறது

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம்

மன்னாரில் தீப்பந்த ஆர்ப்பாட்டம் ,மன்னாரில் காற்றாலை மற்றும் கணிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுத்து வரும் ஆர்ப்பாட்டம் .

தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை(21) 50 ஆவது நாளை எட்டிய நிலையில் இரவு தீப்பந்த ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக மன்னார் பிரஜைகள் குழுவின் ஏற்பாட்டில்,

மன்னார் மக்கள் இணைந்து தீ

இளைஞர் மற்றும் மன்னார் மக்கள் இணைந்து தீ பந்தத்தை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதில் மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்தந்தை மாக்கஸ் அடிகளார்,இளையோர், பொது மக்கள் என நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது