Category: சினிமா
தமிழ் சினிமா, சினிமா செய்திகள் ,இன்றைய சினிமா செய்திகள் ,
பிக்பாஸ் 4வது சீசன் – அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி
பிக்பாஸ் 4வது சீசன் – அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி
பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஆரி டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.
பிக்பாஸ் 4வது சீசன் – அதிக வாக்குகள் பெற்று டைட்டிலை ஜெயித்தார் ஆரி
கோப்பையுடன் ஆரி
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசன் கடந்த அக்டோபர் 4ந் தேதி தொடங்கியது. கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சி 16
போட்டியாளர்களுடன் தொடங்கியது. இதில் இறுதிப்போட்டிக்கு ஆரி, பாலா, சோம், ரியோ, ரம்யா ஆகிய 5 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.
இவர்களில் குறைந்த வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் சோம் 5வது இடம் பெற்றிருந்தார். இவரை கடந்த சீசன் டைட்டில்
வின்னரான முகின் வெளியே அழைத்து வந்தார். இதையடுத்து 4வது இடம் பிடித்த
ரம்யா பாண்டியனை நடிகரும் கடந்த சீசன் போட்டியாளருமான கவின் வெளியே அழைத்து வந்தார்.
ஆரி, பாலா
பின்னர் 3வது இடம் பிடித்த ரியோவை ஷெரின் வெளியே அழைத்து வந்தார். மீதமிருந்த பாலா, ஆரி ஆகியோரை கமல்ஹாசன் பிக்பாஸ்
வீட்டுக்குள் சென்று அழைத்து வந்தார். பின்னர் இவர்களில் அதிக வாக்குகள் பெற்றதன் அடிப்படையில் ஆரி வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
ஆரிக்கு பிக்பாஸ் டைட்டில் வின்னருக்கான கோப்பையும், ஐம்பது லட்சத்திற்கான
காசோலையும் கொடுக்கப்பட்டது. டைட்டில் ஜெயித்த ஆரிக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.
தீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா – வைரலாகும் வீடியோ
தீவிர ரசிகரை நேரில் சந்தித்து தாயைப் போல அரவணைத்த நடிகை ரச்சிதா – வைரலாகும் வீடியோ
சின்னத்திரை சீரியல்களில் நடித்து பிரபலமான ரச்சிதா, தனது
தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
சின்னத்திரை நடிகையான ரச்சிதா, பிரிவோம் சந்திப்போம், சரவணன் மீனாட்சி, நாம் இருவர் நமக்கு இருவர் போன்ற
சீரியல்களில் நடித்து பிரபலமானார். இதுதவிர உப்புக்கருவாடு
என்ற தமிழ் படத்திலும் நடித்துள்ளார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
இந்நிலையில், தன்னுடைய தீவிர ரசிகர் ஒருவரின் இல்லத்துக்கு சர்ப்ரைஸாக சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் ரச்சிதா.
மாற்றுத்திறனாளி இளைஞரான அந்த ரசிகருக்கு தான் வாங்கி வந்த இனிப்புகளை ஊட்டி விட்ட ரச்சிதா, அவருக்கு புத்தாடையை பரிசாக வழங்கினார்.
மேலும் அந்த ரசிகரை ஒரு தாயைப் போல ரச்சிதா அரவணைத்த காட்சி
காண்போரை நெகிழச் செய்தது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்
இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்
மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் ஆக உள்ள நிலையில், அதில் விஜய்
கதாபாத்திரத்தில் பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியில் ரீமேக் ஆகும் மாஸ்டர் – விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர்
விஜய்
லோகேஷ் கனகராஜ் – விஜய் கூட்டணியில் வெளியாகி உள்ள படம் மாஸ்டர். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்படம்
ரசிகர்களிடம் நல்ல வரவேற்பையும் பெற்று வருகிறது. இப்படம் தெலுங்கு, மலையாளம், இந்தி போன்ற மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டன.
மாஸ்டர் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளனர். இதன் இந்தி ரீமேக்
உரிமத்தை எண்டமால் ஷைன் இந்தியா நிறுவனம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது.
ஹிரித்திக் ரோஷன்
இந்நிலையில், மாஸ்டர் படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் ஹீரோவாக நடிக்க உள்ளதாக
கூறப்படுகிறது. இதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம். அதேபோல் வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்க
உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி… வைரலாகும் புகைப்படம்
மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி… வைரலாகும் புகைப்படம்
விஜய் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மாஸ்டர் படத்திற்காக ஆண்ட்ரியா எடுத்த பயிற்சி… வைரலாகும் புகைப்படம்
ஆண்ட்ரியா
பொங்கலை முன்னிட்டு வெளியான விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று
வருகிறது. மாஸ்டர் திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில்
ஓடி கொண்டிருக்கும் நிலையில்,படத்தின் வெற்றியை மாஸ்டர் படக்குழு கொண்டாடி வருகிறது.
இதில் வில்லனாக விஜய் சேதுபதியும், கதாநாயகியாக மாளவிகா
மோகனனும் நடித்திருந்தார்கள். மேலும் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆண்ட்ரியா
இந்நிலையில் மாஸ்டர் படத்திற்காக வில்வித்தை பயிற்சியில் ஈடுபட்ட வீடியோவையும், புகைப்படங்களையும் ஆண்ட்ரியா தனது
இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

வனிதா வீட்டில் மீண்டும் கும்மாளம்
வனிதா வீட்டில் மீண்டும் கும்மாளம்
மீண்டும் வனிதா வீட்டில் நடந்த விஷேசம்
வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற நடிகை வனிதா விஜயகுமார் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். வனிதா- பீட்டர் பால் திருமண விசேஷம் அவரது வீட்டில் பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது.
ஆனால் ஒரு சில மாதங்களிலேயே அந்த திருமணம் முடிவுக்கு வந்ததாகவும் பீட்டர்பாலை தான் பிரிந்து விட்டதாகவும் வனிதா அறிவித்தார். இந்த நிலையில் தற்போது வனிதாவின் வீட்டில் மீண்டும் ஒரு விசேஷ நிகழ்வு நடந்துள்ளது.
வனிதா
வனிதா விஜயகுமார் தனது மகள் ஜெனிதா பூப்படைந்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ளார். எனது மகள் பெரிய பெண்ணாகி விட்டதாகவும் எனது மகள்கள் உலகத்தில் விலை மதிப்பற்றவர்கள் என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்..
நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை
நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவின் வேடத்திற்கு பிரபல இந்தி நடிகை மாறி இருக்கிறார்.
நயன்தாரா வேடத்திற்கு மாறிய பிரபல நடிகை
நயன்தாரா
நெல்சன் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியாகி விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்ற
படம் கோலமாவு கோகிலா. இந்த படத்தில் கதாநாயகியாக நயன்தாரா நடித்திருந்தார்.
இந்த படத்திற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்ததை அடுத்து மற்ற மொழிகளிலும் இந்த படத்தை ரீமேக் செய்வதற்கான முயற்சிகள் நடைபெற்று வருகிறது. அதில் ஒன்றாக கன்னட ரீமேக்
படப்பிடிப்பு ஏற்கனவே தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தை இந்தியிலும் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
ஜான்வி கபூர்
இந்த படத்தை இயக்குனர் ஆனந்த் எல் ராய் இந்தியில் தயாரித்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் சித்தார்த் இயக்குகிறார்.
நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் நடிகை ஜான்வி கபூர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த படத்தின்
படப்பிடிப்புகள் தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இந்த படத்துக்கு இந்தியில் குட்லக் ஜெர்ரி என பெயரிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சிம்புவின் ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு, நிதி அகர்வால் நடித்துள்ள ‘ஈஸ்வரன்’ படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படம் பொங்கல் பண்டிகையையொட்டி நேற்று வெளியானது. இதில் நிதி அகர்வால், நந்திதா ஸ்வேதா,
இயக்குனர் பாரதிராஜா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்தை சுசீந்திரன்
இயக்கியுள்ளார். ஏற்கனவே சில சர்ச்சைகளில் சிக்கிய இந்த படம், அதையெல்லாம் கடந்து பொங்கலுக்கு வெளியானது.
இந்த படத்துக்கு சிம்பு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்துள்ளனர். மேலும் இந்த படத்துக்கு கலவையான விமர்சனங்களும்
கிடைத்துள்ளன. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ஈஸ்வரன் படம் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஈஸ்வரன் பட போஸ்டர்
ஈஸ்வரன் படம் வெளியான முதல் நாளிலேயே உலகம் முழுவதும் ரூ.5 கோடி முதல் ரூ.7 கோடி வரை வசூல் செய்து சாதனை
படைத்துள்ளது. சென்னையில் முதல் நாளில் மட்டும் ரூ.20 லட்சம் வசூல் கிடைத்துள்ளது..
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’… 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’… 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள மாஸ்டர் படத்தின் 2-ம் நாள் வசூல் நிலவரம் வெளியாகி உள்ளது.
வசூல் வேட்டை நடத்தும் ‘மாஸ்டர்’… 2-ம் நாள் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம்
விஜய்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா நடிப்பில் பொங்கலை முன்னிட்டு
நேற்று முன்தினம் மாஸ்டர் திரைப்படம் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் திரைக்கு வந்திருக்க வேண்டிய இந்தப் படம் கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போனது.
கொரோனா பரவலுக்கு பிறகு திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய படம் என்பதால், ரசிகர்களை கடந்து திரைத்துறையை
சேர்ந்தவர்களுக்கும், திரையரங்க உரிமையாளர்களுக்கும் மாஸ்டர் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. முன்பதிவு
தொடங்கிய சில மணி நேரங்களிலேயே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்தன.
பொதுவாகவே விஜய்யின் படங்கள் இந்திய அளவில் வசூலில் சாதனை படைக்கும். ஒவ்வொரு படமும் முந்தைய படத்தின் வசூல்
சாதனையை முறியடிக்கும். மாஸ்டர் படம் பெரிய எதிர்பார்ப்புடன் வெளியானதால்
2 நாட்களில் உலகம் முழுக்க ரூ. 80 கோடியை தாண்டி வசூல் சாதனை படைத்துள்ளது.
விஜய்
சென்னையில் மட்டும் முதல் நாளில் ரூ. 1.21 கோடியும் 2-ம் நாளில் ரூ.1.05 கோடியும் என மொத்தம் ரூ. 2.26 கோடி வசூல் ஆகி இருக்கிறது. தமிழ்நாடு முழுக்க முதல் நாள் ரூ.25 கோடியும் இரண்டாம் நாள் ரூ.18 கோடியும் தொட்டுள்ளது. 2 நாட்களில் வசூல் தொகை ரூ.43 கோடியை தாண்டியுள்ளது.
இந்த வசூல் தொடர்ந்தால் வரும் ஞாயிற்றுக்கிழமைக்குள் 5 நாட்களில் தமிழக வசூல் ரூ.100 கோடியை தொடும் என்று திரையரங்கு அதிபர்கள் கூறியுள்ளனர். விஜய்யின் படங்களுக்கு தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பெரும் வரவேற்பு இருக்கும். தெலுங்கில் வெளியான மாஸ்டர் படம் முதல் நாளே ரூ.5.74 கோடியை வசூலித்தது. அடுத்த வாரத்துக்குள் மாஸ்டர் படம் பெரிய வசூல் சாதனை படைக்கும் என்று திரையுலகம் எதிர்பார்க்கிறது
பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? – தீயாய் பரவும் தகவல்
பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? – தீயாய் பரவும் தகவல்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளர் ஒருவர் பிக்பாஸ் வழங்கும் பணப் பெட்டியுடன் வெளியேறி உள்ளதாக கூறப்படுகிறது.
‘பிக்பாஸ் 4’-ல் பணப் பெட்டியுடன் வெளியேறும் போட்டியாளர் இவரா? – தீயாய் பரவும் தகவல்
பிக்பாஸ் 4 போட்டியாளர்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. வழக்கமாக ஒவ்வொரு சீசனிலும் இறுதி வாரத்தில், ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கிக் கொண்டு போட்டியிலிருந்து விலக
போட்டியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை பிக்பாஸ் வழங்குவார். கடந்த சீசனில் டைட்டில் வின்னர் ஆவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின்,
பிக்பாஸ் வழங்கிய தொகையை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.
ரம்யா
அதேபோல் இந்த சீசனிலும் போட்டியாளர்களுக்கு அப்படி ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த சீசனில் ஆரி, பாலா, ரம்யா, சோம், கேபி, ரியோ ஆகியோர் இறுதிப்
போட்டிக்கு தகுதி பெற்றுள்ள நிலையில், அவர்களில் ரம்யா பாண்டியன் பிக்பாஸ் வழங்கும் தொகையை வாங்கிக் கொண்டு
வெளியேறியதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இருப்பினும் இது உண்மையா என்பதை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்

படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து பிரபல நடிகையாக இருப்பவர் படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்றுள்ளார்.
படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளில் சென்ற பிரபல நடிகை
ரகுல் பிரீத் சிங்
தமிழ் திரையுலகில் நடிகை ரகுல் பிரீத் சிங் என்னமோ ஏதோ, தீரன்
அதிகாரம் ஒன்று, என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை ரகுல் பிரீத் சிங் கொரோனாவால்
பாதிக்கப்பட்டு பின் குணமடைந்தார். தற்போது அவர் மீண்டும் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டுள்ளார். அந்த வகையில்
பாலிவுட்டில் மிக பிரம்மாண்டமாக தயாராகி வரும் ‘மே டே’ என்ற படத்தில் நடிகை ரகுல் நடித்து வருகிறார்.
இந்த படத்தில் கதாநாயகனாக அஜய் தேவ்கன் நடிக்கிறார். இந்நிலையில் நடிகை ரகுல் இந்த படத்தின் படப்பிடிப்புக்காக தான்
தங்கியிருக்கும் ஹோட்டலில் இருந்து படப்பிடிப்பு தளத்திற்கு சைக்கிளிலேயே சென்றுள்ளார்.
ரகுல் பிரீத் சிங்
அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 12 கிலோமீட்டர் சைக்கிளில் செல்வது தனக்கு நல்ல அனுபவமாக இருந்ததாக பதிவிட்டுள்ளார்.
மேலும் சைக்கிளில் சென்ற வீடியோவையும் அவர் வெளியிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது .

நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை
நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை
தேச துரோக வழக்கில் நடிகை கங்கனா மற்றும் அவரது சகோதரி ரங்கோலியை கைது செய்ய கோர்ட்டு தடை விதித்துள்ளது.
நடிகை கங்கனாவை கைது செய்ய கோர்ட்டு தடை
கங்கனா ரணாவத்
நடிகை கங்கனா ரணாவத் தொடர்ந்து சர்ச்சை கருதுக்களை வெளியிட்டு வருகிறார். ஏற்கனவே இந்தி பட உலகில் போதை
பொருள் புழக்கம் உள்ளது என்றும் போலீஸ் விசாரணை நடத்தினால் முன்னணி நடிகர்கள் சிக்குவார்கள் என்றும் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தார். மராட்டிய அரசையும், மும்பை
போலீசையும் சாடினார். இதையடுத்து அவரது அலுவலகம் இடிக்கப்பட்டது. இதனால் மும்பையில் பாதுகாப்பு இல்லை என்று
வெளியேறிய அவர் பல மாதங்களுக்கு பின்பு மீண்டும் மும்பை திரும்பி இருக்கிறார்.
கங்கனா ரணாவத்
இந்த நிலையில் கங்கனாவும் அவரது சகோதரி ரங்கோலியும் இரு சமூகத்தினர் இடையே மோதலை தூண்டும் வகையில் பேசியதாக போலீசார் தேச துரோக வழக்கு பதிவு செய்து நேரில் அழைத்து 2
மணிநேரம் விசாரித்தனர். இதையடுத்து தங்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்யக்கோரி கங்கனாவும், ரங்கோலியும் மும்பை
கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி 25-ந்தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்தார். அதுவரை கங்கனா மற்றும்
ரங்கோலியை விசாரிக்கவும், கைது நடவடிக்கை எடுக்கவும் தடைவிதித்து உத்தரவிட்டார்
காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு
காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு
பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கராவின் உடல் கிணற்றில் பிணமாக மீட்கப்பட்டது குறித்து போலீசார் நடத்தி வருகின்றனர்.
காணாமல் போன பிரபல நடிகர் கிணற்றில் பிணமாக மீட்பு…. போலீஸ் தீவிர விசாரணை
ஜனார்த்தனன் மூழிக்கரா
பிரபல மலையாள நடிகர் ஜனார்த்தனன் மூழிக்கரா. இவர் இங்கிலீஸ் மீடியம், காக்ஷி அம்மினி பில்லா, மழமேகப்ரவுள், ரமணம் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். முத்தப்பன்
என்ற மலையாள தொலைக்காட்சி தொடரிலும் நடித்து புகழ் பெற்றார். 50-க்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து இருக்கிறார்.
ஜனார்த்தனன் கேரள மாநிலம் தலச்சேரியில் வசித்து வந்தார். ஜனார்த்தனனை திடீரென்று காணவில்லை. குடும்பத்தினர் அவரை தேடினார்கள். அப்போது வீட்டின் அருகே உள்ள கிணற்றில்
மூடப்பட்டு இருந்த வலை திறந்து இருந்தது. உள்ளே எட்டிப்பார்த்தபோது ஜனார்த்தனன் பிணமாக மிதந்தது கண்டு
அதிர்ச்சியானார்கள். இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து ஜனார்த்தனன் உடலை கிணற்றில் இருந்து மீட்டு வெளியே கொண்டு வந்தனர். அவர் எப்படி இறந்தார்? கொலையா? தற்கொலையா? என்று போலீசார்
விசாரிக்கிறார்கள். மரணம் அடைந்த ஜனார்த்தனத்துக்கு வயது 60. திருமணம் ஆகவில்லை. அவரது மறைவு மலையாள பட உலகினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
நடிகைக்கு கொரோனா
நடிகைக்கு கொரோனா
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாம்.
காஞ்சனா பட நடிகைக்கு கொரோனா
ராய் லட்சுமி
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருப்பவர் ராய் லட்சுமி. இவர் தமிழில் லாரன்ஸ் இயக்கத்தில் வெளியான காஞ்சனா படத்தில்
நடித்ததன் மூலம் பிரபலமானார். இவர் தற்போது சிண்ட்ரெல்லா படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராய் லட்சுமிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் கடந்த ஒரு வாரமாக அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளாராம்.
தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், இன்னும் சில தினங்களில் பூரண குணமடைந்து விடுவார் என்றும் கூறப்படுகிறது.
ராய் லட்சுமி
நேற்று இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை பதிவிட்டிருந்த ராய் லட்சுமி, “காலம் மாறிவிட்டது. நாம் அனைவரும் பாசிடிவ்-க்கு
பதிலாக நெகட்டிவ் முடிவுகளை தான் எதிர்பார்க்கிறோம்” என குறிப்பிட்டிருந்தார். கொரோனா பரிசோதனை முடிவுக்காக
காத்திருப்பதை தான் அவர் இவ்வாறு சூசகமாக பதிவிட்டுள்ளார் போல தெரிகிறது.
ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி… பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி… பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி இருவரும் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூகவலைதளங்களில் பரபரப்பாகி உள்ளது.
ஒரே சட்டைக்குள் நாயகன் – நாயகி… பரபரப்பை ஏற்படுத்திய போஸ்டர்
மீரான், மேகனா
தமிழ் சினிமாவில் சில படங்கள் போஸ்டரிலேயே பரபரப்பை ஏற்படுத்தும். அப்படி நாயகன் – நாயகி இருவரும் ஒரே சட்டைக்குள் இருக்கும் படம் வெளியாகி அது சமூகவலைதளங்களில்
பரபரப்பாகி உள்ளது. பழகிய நாட்கள் என்ற படத்தின் போஸ்டர் அது.
மீரான் என்ற புதுமுகம் இப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். அவருக்கு ஜோடியாக மேகனா நடித்துள்ளார்.
மேலும் இப்படத்தில் பிரபல நாட்டுப்புற பாடகர் செந்தில் கணேஷ், இயக்குனர் ஸ்ரீநாத், வின்சென்ட் ராய், சுஜாதா, நெல்லை சிவா,
சிவக்குமார், மங்கி ரவி ஆகியோர் நடித்து உள்ளனர்.இளம் வயதில் ஏற்படும் காதல் எவ்வாறு முடிவுறுகிறது. அதே பக்குவப்பட்ட காதல்
அவர்களின் வாழ்வியலை எவ்வாறு உறுதிப்படுத்துகிறது என்பதை கூறும் காதல் கதை இந்த படம்.
மீரான், மேகனா
இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி ராம்தேவ் இயக்கி உள்ளார். ஜான் ஏ. அலெக்ஸிஸ் – ஷேக் மீரா இசையமைத்துள்ள
இப்படத்திற்கு பிலிப் விஜயக்குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரே சட்டைக்குள்
இருவரும் இருக்கும் படத்தை பார்த்த ரசிகர்கள் ‘யார் அந்த தையல்காரர்?’ என்று கேட்டு கிண்டல் செய்து வருகிறார்கள்.

சினிமா டிக்கெட் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? – அரவிந்த்சாமி
சினிமா டிக்கெட் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? – அரவிந்த்சாமி
டிக்கெட்டின் விலை ஏன் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது
எனக்கு எப்போதும் புரிந்தது இல்லை என நடிகர் அரவிந்த் சாமி டுவிட் செய்துள்ளார்.
சினிமா டிக்கெட் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? – அரவிந்த்சாமி டுவிட்
அரவிந்த்சாமி
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 13-ந்தேதி வெளியாகவுள்ளது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு,
பின்னர் அதை ரத்து செய்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். அதே வேளையில்,
வழக்கம்போல் டிக்கெட்கள் அதிக விலைக்கு விற்கத் தொடங்கியுள்ளனர்.
டிக்கெட் விற்பனை விவகாரம் தொடர்பாக, முதன் முறையாக ஆதரவு தெரிவித்துள்ளார் நடிகர் அரவிந்த் சாமி.
மம்முட்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த மோகன்லால்
மம்முட்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த மோகன்லால்
ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் மோதிக் கொண்டு இருக்கும் நிலையில் நடிகர் மோகன்லால், மம்முட்டியை நேரில் சந்தித்து இருக்கிறார்.
மம்முட்டி வீட்டுக்கு திடீர் விசிட் அடித்த மோகன்லால்
மோகன்லால் – மம்முட்டி
மலையாளத்தில் முன்னணி கதாநாயகர்களாக வலம் வரும் மம்முட்டியின் ரசிகர்களும், மோகன்லால் ரசிகர்களும் சமூக
வலைத்தளத்தில் அடிக்கடி மோதிக் கொள்வது உண்டு. மோகன்லால் படங்கள் ரிலீசாகும்போது மம்முட்டி ரசிகர்களும், மம்முட்டி படங்க
வரும்போது மோகன்லால் ரசிகர்களும் மோசமான விமர்சனங்கள் பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
மலையாள நடிகர் சங்கத்துக்கு நிதி திரட்டுவதற்காக தயாரான படத்தில் முதல் பாதியில் வரும் மம்முட்டிக்கு முக்கியத்துவம்
அளித்துள்ளதாகவும், இடைவேளைக்கு பிறகு முக்கியத்துவம் இல்லாத காட்சியில் மோகன்லாலை நடிக்க வைத்து
அவமதித்துவிட்டதாகவும் மோகன்லால் ரசிகர்கள் பொங்கினர். அந்த படத்தை புறக்கணிப்பதாக அறிவித்தும் பரபரப்பு ஏற்படுத்தினர்.
மம்மூட்டி – மோகன்லால்
ஆனால் மம்முட்டி, மோகன்லால் இடையே நல்ல நட்பு இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இதை நிரூபிக்கும் வகையில் கொச்சியில்
மம்முட்டி புதிதாக கட்டி உள்ள வீட்டுக்கு மோகன்லால் திடீரென்று சென்று
அவரை சந்தித்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் வைரலாகிறது.

திடீர் திருமணம் ஏன்? – நடிகை விளக்கம்
திடீர் திருமணம் ஏன்? – நடிகை விளக்கம்
சினிமா உதவி இயக்குனரை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது குறித்து நடிகை ஆனந்தி விளக்கம் அளித்துள்ளார்.
திடீர் திருமணம் ஏன்? – நடிகை ஆனந்தி விளக்கம்
சாக்ரடீஸ், ஆனந்தி
உதவி இயக்குனர் சாக்ரடீசை திடீர் திருமணம் செய்து கொண்டது ஏன்? என்பது பற்றி ஆனந்தி பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
‘‘நானும், சாக்ரடீசும் 4 வருடங்களாக காதலித்து வந்தோம். இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்வது என்று முடிவு
எடுத்திருந்தோம். அந்த நாளுக்காக இருவரும் காத்திருந்தோம். அந்த நாள் சமீபத்தில் அமைந்தது.
ஆனந்தி
பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டோம். திருமணம் செய்து கொண்டதால் சினிமாவில் இருந்து விலக
மாட்டேன். தொடர்ந்து நடிப்பேன். என் கைவசம் 4 படங்கள் உள்ளன. அந்த நான்கு படங்களிலும் முதலில் நடித்துக்கொடுப்பேன். அதன்
பிறகு புதிய படங்களை ஒப்புக்கொள்வேன்.’’ இவ்வாறு ஆனந்தி கூறினார்.
ஹீரோவாக நடிக்கும் செந்தில்
ஹீரோவாக நடிக்கும் செந்தில்
கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளாராம்.
முதல்முறையாக ஹீரோவாக நடிக்கும் செந்தில்
செந்தில்
தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள்
பட்டாளமே உள்ளது. தற்போதும் அவர்களது காமெடியை ரசிப்பவர்கள் ஏராளம் உள்ளனர். நடிகர் கவுண்டமணி கூட சில
படங்களில் ஹீரோவாக நடித்துவிட்டார். ஆனால் செந்தில் இதுவரை ஹீரோவாக நடித்ததில்லை.
செந்தில்
இந்நிலையில், செந்தில் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி கிடாயின் கருணை மனு படத்தை
இயக்கிய சுரேஷ் சங்கையா அடுத்ததாக இயக்கும் படத்தில் செந்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். இப்படத்தில் செந்தில் ஆயுள்
தண்டனை கைதியாக நடிக்க உள்ளாராம். மேலும் இதில் செந்திலுக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எளிமையாக நடைபெற்ற கயல் ஆனந்தி திருமணம்
எளிமையாக நடைபெற்ற கயல் ஆனந்தி திருமணம்
கயல் படம் மூலம் பிரபலமான நடிகை ஆனந்தியின் திருமணம் மிகவும் எளிமையாக நடைபெற்றுள்ளது.
எளிமையாக நடைபெற்ற கயல் ஆனந்தி திருமணம்
ஆனந்தி திருமணம்
தமிழில் 2014 ஆம் ஆண்டு வெளியான பொறியாளன் படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆனந்தி. இதைத் தொடர்ந்து பிரபு
சாலமன் இயக்கிய கயல் படத்தில் இவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. இதனால் இவர் ‘கயல்’ ஆனந்தி ஆனார்.
இவர் தற்போது டைட்டானிக் காதலும் கவிழ்ந்து போகும், ஏஞ்சல், அலாவுதீனின் அற்புத கேமரா, ராவணக் கூட்டம், கமலி ஃப்ரம்
நடுக்காவேரி, தெலுங்கில், ஜாம்பி ரெட்டி போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.
நடிகை ஆனந்திக்கும் தெலங்கானாவை சேர்ந்த சாக்ரடீஸ் என்பவருக்கும் திருமணம் பேசி முடிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியானது.
இந்நிலையில் ஆனந்தி திருமணம் இன்று இரவு எளிமையாக நடைபெற்றது. இந்த திருமணத்துக்கு, குறிப்பிட்ட சிலருக்கு மட்டுமே
அழைப்பு விடுத்துள்ளதாக கூறப்பட்டது. தற்போது தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ஜே எஸ் கே சதீஷ், இயக்குனர் நவீன் ஆகியோர் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது

சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை
சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை
சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நடிகை சித்ராவின் நடிப்பில் உருவாகியிருக்கும் கால்ஸ் பட டீசர் சாதனை படைத்துள்ளது.
மறைந்த சித்ராவின் பட டீசர் படைத்த சாதனை
சித்ரா
சின்னத்திரையில் நாயகியாக ஜொலித்தவர் சித்ரா. இவர் கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் 9-ம் தேதி நசரத்பேட்டையில் உள்ள தனியார்
விடுதியில் சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது கணவர் ஹேம்நாத் தான் தற்கொலைக்கு தூண்டியதாக போலீசார்
விசாரணையில் தெரிய வந்தது. பின்னர் அவரைக் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.
சித்ராவின் மரணத்தை அடுத்து அவர் நடித்த ‘கால்ஸ்’ திரைப்படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. இயக்குநர் ஜெ.சபரிஸ் இயக்கியிருக்கும் இத்திரைப்படத்தில் சித்ராவுடன்
டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலர்
நடித்துள்ளனர். இன்ஃபினிட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இத்திரைப்படத்துக்கு தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார்.
சித்ரா
டிசம்பர் 13-ம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட படக்குழு டிசம்பர் 31-ம் தேதி டீசரை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் டீசர்
வீடியோ தற்போது 1 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இதுகுறித்து படத்தின் இயக்குநர் சபரிஷ் கூறுகையில்
“நம்மிடையே விஜே சித்து தற்போது இல்லையென்றாலும். அவர் இருந்திருந்தால் எத்தகைய அன்பையும் ஆதரவையும் மக்கள்
தந்திருப்பார்களோ அதே ஆதரவையும் அன்பையும் தந்துள்ளார்கள்”. என மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.






