கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள்

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

கார்த்திகை இருபத்தாறுக்கு முதல் வணக்கம்.

முடிந்தால்
என் கவிதைகளையும்
இன்று இணைத்துக் கொள்ளுங்கள்
மிக்க நன்றி
அருள்நிலா வாசன் 🙏
தூண்டா மணிவிளக்காய்
ஆண்டாண்டு தோறும்
எரிகின்ற தீபத்தின் முன்
அண்ணாவின் குரல் ஒலிக்கும்

இன்று
வேண்டாத துயரை
விலத்தியே வைத்து நாம்
வீட்டிற்குள் வணங்குகின்றோம்

வரிக்குள் அடங்காத வலிகளை நாம்
வார்த்தைக்குள் ஒழித்து வைப்போம்

அடிமைகளா நாம் என்று மனம் அடிக்கடி எம்மைக்கேட்டாலும்
துடிக்கின்ற இதயத்தில்
வழிகின்ற குருதியும்
உடல் முழுவதும்
அண்ணாவின் பெயர்
எழுதும்

சிலிர்த்திடும் வேங்கையின் சிந்தனையில் சிக்குண்டு தவிப்பவர் நெஞ்சங்களில்
தீக்குச்சியாய் என்றும்
நீர் இருப்பீர்

வணங்கா மண்ணுக்காய்
அன்று கடலோரக் கவிதைகளாய்
காத்துக் கிடந்து
காய்ந்த
மக்களின் கண்ணீரை
இன்று
பிரபா கரத்தால்
நீர் துடைப்பீர்

காயாத விழிகளில்
கரையோரக் காட்சியாய்
நீர் அங்கு தோன்றினால்
உலகமே வியக்கும்
சிலருக்கு வியர்க்கும்

பாதையெல்லாம்
பூமலராய்
கார்த்திகை தந்த
செம்மலராய்
பூங்கதவே நீ
தாழ் திறவாய்

எழுவது இன்று
மேதகு என்று
தொழுவது நன்று

அகவை ஒன்று
நகர்ந்தது என்று
ஆர்பரிக்கின்றது
மக்கள் கூட்டம்
கடலாய் நின்று

பிறந்த நாள் வாழ்த்துகள்
26/11/2024

எனக்கொரு பதில் சொல்லாயோ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எனக்கொரு பதில் சொல்லாயோ

எனக்கொரு பதில் சொல்லாயோ

கொஞ்சி பேசும் மொழி தனையே
மனம் கெஞ்சி கேட்க துடிக்குதடி
வஞ்சி உந்தன் பேரழகை – உன்
வளையல் சத்தம் காட்டுதடி

அஞ்சி அஞ்சி பேசி விடும்
அச்ச நாணம் பிடிக்குதடி
கொள்ளை பிரியம் வைத்திடவே
கொடி கூந்தல் அழைக்குதடி

சிந்தி வழியும் புன்னகையில்
சிறைச்சாலை நொறுங்குதடி
வெட்டி பார்க்கும் விழி அசைவில்
வெடி குண்டு வெடிக்குதடி

சாலையில் ஓடும் வண்டிகளை – உன்
சலங்கை சத்தம் ஒதுக்குதடி
உலக போரை தணித்திடவே
உன் உள்ள அமைதி துடிக்குதடி

இத்தனை பேறு கொண்டவளே
இதயம் நுழைந்த மர்மம் என்ன
எத்தனை நாள் எனை தொடர்வாய்
எனக்கொரு பதில் சொல்லாயோ ..?

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 19-10-2024
0044 7536707793

உன்னால் தவிக்கிறேன்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உன்னால் தவிக்கிறேன்

உன்னால் தவிக்கிறேன்

எந்தன் வாழ்வு ஏன் சோகமானது
ஏனோ என் கண்கள் நீரானது
வலிகள் மட்டும் நெஞ்சில் தொடரானது
வாழ்வே இன்று மெல்ல இருளானது

எனக்கு மட்டும் ஏன் துயரானது
இது யார் விதித்த சாபமானது
இறந்து போகவே இன்று மனம் எண்ணுதே
இதயம் வேதனையில் இன்று கருகுதே

உந்தன் நினைவு உயிரே என்னை கொல்லுதே
உறக்கம் இன்றியே விழியும் துடிக்குதே
நினைத்த மனதை நினைவு மறக்குமோ
நீயும் மறந்தால் மனம் உன்னை ஒதுக்குமோ

காலம் இந்த காலம் பொய்யானது – உயிர்
காதல் இங்கு வீணானது
தொட முன்னரே தொடரும் முடியுமோ
தொட்டு விட்டால் தொல்லை யாகுமோ

என்ன விதியோ இதை யார் செய்ததோ
பன்மைக்குள்ளே இங்கே பல செயல்களோ
உண்மையானால் இங்கே உறவு வெறுக்குமோ
உயிரும் இங்கே வலியால் துடிக்குமோ ..?

வன்னி மைந்தன்
ஆக்கம் 01-10-2024
0044 7536707793

மன்னித்து விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

மன்னித்து விடு

மன்னித்து விடு

கண்ணிருந்தும் குருடானேன்
காதிருந்தும் செவிடானேன்
உன்னை எண்ணவே
உள்ளமே மறந்து போனேன்

விதியின் விளையாட்டில்
விளையாடல் நடக்குது
சதிகள் துரத்த
சாதனை தவிக்குது

என்ன நினைத்தாயோ
என்னை திட்டினாயோ
காலம் வரும் ஒரு நாள்
கண்ணே கலங்காதே

உள்ளம் வலிக்கும் போதினில்
உன் நினைவு வந்து போகும்
என் மனம் வலியாலே
ஏறி தணிந்து உருகும்

பேசமுடியா நிலையிலே
பேரிடர் தடுக்குது
வேலியுடைத்து வருவோம் -அந்த
வேளையிலே சந்திப்போம் .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 11-09-2024

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை நாங்கள் பின் தொடர்வோம்
எதுகை மோனைக்கு ஏன் சீற்றம்
ஏனோ உனக்கு தடு மாற்றம்

கத்தும் கடலே அமைதி கொள்
கரு வானமே இவரை பார்த்து கொள்
எத் துயர் நீ எறிந்தாலும்
எங்கள் வீரனை நாம் தொடர்வோம்

குரைக்கும் நாய்கள் வாசலிலே
கூவியே இன்று என் கண்டார்
அன்பு செலுத்தும் மக்கள் முன்
அகிலத்தில் எவர் முன் வருவார்

கொத்தி எறியும் கோடாரி
கொண்டை கழன்று விழுந்துவிடும்
அடுப்பில் எரியும் அவ்வேளை
அட டா சாம்பலாய் மாறிவிடும்

விட்டு களத்தை ஓடி விடு – நாம்
விடுதலை பெற்றிட விட்டு விடு
பற்றி எரியும் பார் முன்னால்
பகைவா இன்றே ஓடி விடு ..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 05-09-2024

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

ஏன் எம்மை தவிக்க வைத்தாய்

கடந்த இரவு காரிருள் சூழ
கண்கள் அழுதது காலம் துடித்தது
ஒருமுறைக உந்தன் திரு முகம் காண
ஓராயிரம் உறவு அர்ச்சுனா துடித்தது

ஏக்கத்தில் எண் திசையும் உறைந்தது
ஏராளம் சோகத்தில் ஏங்கி மனம் கொதித்தது
உன் மீது கொண்ட பாசம்
உண்மையானது உன்னாலே நேரம் இருண்டது

இத்தனை உறவை எப்படி இணைத்தாய்
இதயங்கள் ஏங்க ஏனடா வைத்தாய்
உண்ணாமல் உனக்காய் காத்திருந்த உறவு
உறங்காமல் உனக்காய் விழித்த உறவு

எண்ணி பார்க்கையில் என் மனம் வலிக்கிறது
எதுகை மோனையும் எகிறி குதிக்கிறது
தேடும் உறவை தேடி வைத்தவனே
தேசம் உன்னை தலையில் சுமக்கும்

தலைவன் தேடும் மக்கள் தலைவிதி மாற்று
தளராது சேனை பூட்டு தமிழுக்கு வழி காட்டு
வாழும் போதே வாழ்பவனே வையம் வணங்கு
வரலாறு நாட்டு வணங்கிறோம் விடுதலை நாட்டு .

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 03-09-2024

அழும் நீதி
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அழும் நீதி

அழும் நீதி

உளம் உடைந்து நோகிறான்
ஊருக்காக வாழ்கிறான்
எவன் உணர்ந்து கொள்கிறான்
ஏனோ இவன் ஏற்க மறுக்கிறான்

கரை முட்டி அலையும்
களைத்து நோகிறது
எழுந்தேற முடியாது
ஏனோ தட்டி தவிக்கிறது

வேகம் தரும் காற்று
வேகம் மாறி வீசிட
தோற்று போனதாய்
தொலைவில் இருந்து அழுகிறது

வேர்த்து போன உடலுடன்
வேங்கை இன்று தூங்கிறது
வேலை வரும் இலக்கிற்காய்
வேடன் அழிக்க பதுங்கிறது …

காலம் ஒரு நாள் – உன்
கால் தடம் தழுவும் – அன்று
கண்ணீரால் கண்கள் நனையும்
கரிகாலன் தேசம் உன்னை பேசும் ….

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

அர்ச்சுனா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா

அர்ச்சுனா

நான் உன் உறவு நம்படா
நான் கூட வருவேன் எண்ணடா
தோல்வி கண்டு தளராதே
தோற்று நீ போகாதே

வழி வரும் தடை கண்டு வாடாதே
வலி எல்லாம் வெற்றி தான் கலங்காதே
எதிரே பகை வரின் தளராதே
என்றும் நாம் இருப்போம் சோராதே ..

திடல் இருக்கு விளையாடு
திட்டம் இருக்கு அடி போடு
வீர மகன் நீ தானே
விளையாடு விவேகம் நாட்டு

எவன் வருவான் எழு பார்ப்போம்
எழுவாய் பயனிலை முன் காப்போம்
தடை போட்டார் தடை உடை
தரணியில் உன் புகழ் விதை..

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

ஏன் அழுகின்றாய்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஏன் அழுகின்றாய்

ஏன் அழுகின்றாய்

தனிமையில் நீ இருந்து
தங்கமே ஏன் அழுகின்றாய்
அங்கமெல்லாம் தினம் வாட
ஆர் உயிரே ஏன் நோகிறாய் ,,

உண்ணாமல் நீ இருந்து
உயிரே தினம் வாடலாமோ
என் நாளும் நான் வாட
என் உயிரே வைக்கலாமா

இன்பம் துன்பம் இரு பாதி
இதயமே புரிந்து விடு
வாழும் போதே
வசந்தமாய் வாழ்ந்து விடு

கண் இருந்து நீர் வடிய
கண்ணே இதயம் நோகுதே
மண்ணை விட்டு போக தானே
மனமே எண்ணுதே

உள்ளம் நீ வாட
உறங்க முடியலையே
என் மனதை
ஏ மனமே புரிந்து விடு…..!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-09-2024

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்

அர்ச்சுனா எங்கள் அவதாரம்
அவனை எவர் இங்கு தொடுவாராம்
முடிந்தால் எம் முன் எவர் வருவார்
முடிவுரை தருவோம் மோதி பார்

பகையா பக்கம் வந்து பார்
பாமர மக்கள் நோதல் பார்
நீதியை விற்ற கூட்டங்களே
நீதவான் எங்கள் அர்ச்சுனா பார் ..

இவனை இழிவதை முதல் நிறுத்து -உன்
இதயத்தை முதலில் நீ கழட்டு
உரிமைக்காய் உன்னை முதல் சுழட்டு
உதவா மனிதனா நீ ஓடு

எதுகை மோனை அலறுவதோ
ஏறி சந்தம் உரிப்பதுவோ
உன்நிலை மறந்திட முன்னாலே
உன்னை கொஞ்சம் நீ திருத்து

ஆக்கம் 11-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

ஆறுதல் கூறி விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

ஆறுதல் கூறி விடு

ஆறுதல் கூறி விடு

உள்ளம் தந்தேன் உனக்காக
உதைத்தாய் என்னை எதற்காக
வஞ்சம் உன்னில் கொண்டதோ
வலி நெஞ்சம் பதிக்க எண்ணியதோ

விட்டு விலகிடா யானி
விசாலம் தந்த ஏணி
எட்டி உதைத்தாய் ஏனோ
என்னை ஏங்க வைத்தாய் ஏனோ

நம்பி நின்றேன் நானே
நாளும் மகிழ்ந்தேன் தேனே
வீனே உன்னை தொடர்ந்தேனோ
விதியால் இன்று நொந்தேனே

ஆளும் அதிகாரமாய்
ஆழ நெஞ்சு கொண்டதோ
வழி வந்தான் என்றோ
வழி விட்டதோ

என் செய்வேன் நானோ
ஏதும் தெரியவில்லை
ஆண்டவனே எனக்கு
ஆறுதல் கூறி விடு ..!

ஆக்கம் 09-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

வீர மகன் அர்ச்சுனா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

வீர மகன் அர்ச்சுனா

வீர மகன் அர்ச்சுனா

சிறை பிடித்து என்னை மிரட்டுகிறார்
சிரித்த படி செல்கிறேன்
வலைவிரித்து என்னை அடக்குகிறார்
வாய் பேசியே செல்கிறேன்

குறை பிடித்து என்னை மடக்கிறார்
குரல் வளை மெல்ல முறிக்கிறார்
ஏது செய்தும் இன்றென்ன
எங்கள் மக்கள் துடிக்கிறார்

கறை படிந்த வாய்கள் சில
கரை ஏறி கரைகிறார்
சுய நல வாதிகளாய்
சுற்றியே அலைகின்றார்

வீர மகன் அர்ச்சுனா
விடுதலை பெறுவான்
கந்தக துகளாய் – அவன்
கட்டாயம் வெடிப்பான் .

ஆக்கம் 06-08-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு
Posted in இலங்கை செய்திகள் கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு

அர்ச்சுனாவை இழிந்த வாய்க்காலுக்கு இதோ வெடி குண்டு.காதுகளை கொஞ்ச தாருங்கள் ,இதோ கேட்டு பாருங்கள் .

வீடியோ

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

அர்ச்சுனா எழுச்சி பாடல் கவிதை

சிந்தை தளரா சிரித்து நடப்பவன்
சிகரம் உயர எழுந்து வெடித்தவன்
கள்ளம் இல்லா பேசி நடப்பவன்
கயவர் சூழ்ச்சி தோலுரிப்பவன்

விந்தை செய்திட விண்ணை அளப்பவன்
விடியல் பெற்றிட புரட்சி செய்பவன்
என்ன கேட்டாலும் எடுத்து உரைப்பவன்
எதற்கும் அஞ்சா எங்கும் நடப்பவன்

வெள்ளை வேட்டியை கதற வைத்தவன்
வெருட்டி வந்தாரை வாயில் அடித்தவன்
தோட்டா துளைக்க தலையை தந்தவன்
தோடுகள் பொங்கிட விதையை எறிந்தவன்

அண்ணன் பெயரை சொல்லி நடப்பவன்
அந்த வரலாறு மீட்டி படிப்பவன்
காலம் அறிந்து களம் திறந்தவன்
கரிகாலனாய் ஆகி நிற்பவன்

எட்டு திசையும் அலற வைத்தவன்
எரிமலையாய் பொங்கி வெடிப்பவன்
பாட்டன் பேரனை படைக்கு அழைத்தவன்
பாமர மக்களை நெஞ்சில் தரித்தவன்

அந்த மனிதன் இன்று யாராடா
அவன் எங்கள் அர்ச்சுனா காணடா
வீரம் விளைந்த மண்ணில் உதிர்த்தவன்
அவனை பாடடா அகிலம் போற்ரடா

இன்றைய மண்ணின் எழுச்சி இவனடா
எடுத்து கொஞ்சம் உலகம் பரப்படா
அடித்து புரட்டி எழுதினேன் நானடா
அணல் வரி வன்னி மைந்தண்டா !


போற்ரடா

வீடியோ

என்னை அழைப்பாயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைப்பாயா

என்னை அழைப்பாயா

கொண்டையில மல்லிகை பூ
கொலிசாட்டம் ஆடுதடி
தண்டவாள ரயில் போல
தாவணியோ ஓடுதடி

கண்டாவளை சந்தையில
கண்ணுக்குள்ள வீழ்ந்தவளே
இரணைமடு அருவி போல
இதயத்துள் ஓடுறியே

பரந்தன் வீதியில
பாவை நீ போகையில
பார்க்காமல் இருப்பேனோ
பாவி நான் துடிக்கேனோ

உன்னை தொடர்ந்திடவா
உள்ளத்திலே இருந்திடவா
என்னை நீ எண்ணாம
எக்காலம் இருப்பாயோ

ஒத்தையில நீ இருந்து
ஓரமா அழுகிறியோ
வித்தைகளை நான் காட்ட
வித்தகனை அழைக்காயோ .!

ஆக்கம் 21-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

என்னை அழைக்காயா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை அழைக்காயா

என்னை அழைக்காயா

கன்னத்தில் கை வைத்து
காதோரம் நிற்பவளே
கண்ணாடி சீண்டுதடி
காதலதை தூண்டுதடி

முன்னாடி உனை பார்க்க
முத்தமிட தூண்டுதடி
மூவேளை உனை தானே
முழு நாளும் நினைக்குதடி

கன்னக் குழி சிரிப்பழகில்
கதை சொல்லி நிற்பவளே
எண்ணத்தை தூண்டிடவே
எடுத்து கதை சொல்லிடடி

உன்னோடு நான் வாழும்
உயர்வான நாளதனை
என்று நீ சொல்வாயோ
ஏக்கத்தில் தவிக்கின்றேன்

வாலாட்டும் நாய்போல
வாசலில நான் நிற்க
வாய் பேசா நிற்கிறியே
வாவென்று அழைக்காயோ ..?

ஆக்கம் 14-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,

எழுந்து வா
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எழுந்து வா

எழுந்து வா

எழுந்து வெடிக்கும் ஏவுகணையாய்
ஏன் வெடிக்க மறுக்கின்றாய்
ஏக்கமதை மனம் வைத்து
ஏன் நொந்து அழுகின்றாய்

தூக்கமதை நீ தொலைத்து
துயரில் ஏன் வாடுகின்றாய்
பாவி என்றேன் உன்னை
பாழ் படுத்தி கொள்கின்றாய்

நீதி வென்றிட வா
நீளம் பாய வா
உன் தகைமை எடுத்துரைக்க
உரு வேற்றி ஆட வா

சதிகள் புரிந்தாரை
சாகடிக்க வா
வந்த வழி தடத்தை
வரலாறாய் எழுத வா

உறங்கி கிடந்து
உறுமி அழுவதால்
ஏதும் நடக்காது
எழுந்து வா ..

ஆக்கம் 10-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

உயிராயுதம்
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

உயிராயுதம்

உயிராயுதம்

உடலோடு வெடிசுமந்த
உயிரான ஆயுதம்
உலகத்தின் தலைசிறந்த
உன்னத காவியம்

அலையோடு படகேறிய
அசையாத ஓவியம்
அஞ்சாது பகைமுடித்த
அண்ணனின் வீரம்

நெஞ்சொடு வெடி சுமந்த
நெருப்பான போரியம்
நிழலாக தொடரும்
நினைவழியா காவியம்

ஆடியில் ஆடிய
அழியாத ஆழியம்
அந்நியன் ஓடிட
அனல் கக்கிய வீரியம்

அங்கையர் கன்னியும் மில்லரும்
அவருடன் கூடிய தோழரும்
நெஞ்சில் வாழும் ஆலயம்
நினைவில் உருகும் ஊழியம் .

ஆக்கம் 05-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )

ஈழச்சுடர்கள்
Posted in கவிதைகள் நிலா தமிழ்

ஈழச்சுடர்கள்

ஈழச்சுடர்கள்

கொஞ்சு மன்னைத் தமிழீன்ற
ஒளிச் சுடர்கள்
மிஞ்சு கவி தந்தெமக்கு உயிரீன்ற விழிச் சுடர்கள்
மஞ்சு உளங் கொண்டு தமையீன்ற
ஈழச் சுடர்கள்

நஞ்சு மதை மஞ்சமென மமதையுடன் அணிந்திருந்த தனிச்சுடர்கள்
வெஞ் சமரில் வடுவேந்தி
வீறுடனே வாழ்ந்திருந்த
பெருஞ் சுடர்கள்

நெஞ்ச மதில் உறுதியுடன் ஈழமெங்கும் நடை புரிந்த
புயற் சுடர்கள்
தஞ்ச மென பெருந்தலைவன் அணி சேர்ந்து கைகோர்த்து பலம் சேர்த்த
கருஞ் சுடர்கள்

வஞ்ச மிலா அன்பு கொண்டு உறவாடி மகிழ்ந்திருந்த பூஞ்சுடர்கள்
துஞ்ச லிலே தூயதொரு வித்தான
தூய சுடர்கள்
எஞ்ச மிலா வார்த்தைகளுக்குள் அடக்க முடியா நெருப்புச் சுடர்கள்

கஞ்ச மிலா தீரங் கொண்டு வெடி சுமந்து பகை முடித்த உயிராயுத சுடர்கள்
பஞ்ச மிலா வாழ்வுதனை தம் மக்கள் வாழ வழி செய்து
காலத்தை வென்ற தியாகச் சுடர்கள்

காற்றுங் கூட புகா இடம் புகுந்த கரும்புலிகள்
மாற்றங் கொண்டு ஈழம் அமைக்க வழி சமைத்த அத்திவாரக் கற்கள்
சீற்றங் கொண்ட மாற்றானை வேரறுத்த கந்தகங்கள்
ஏற்றங் கொண்ட உம் ஈழக் கனவு பலித்திடும் ஓர் நாள்
அந்நாளே எமக்குத் திருநாள்!

-நிலாதமிழ்(ஒருத்தி)
05.07.2024.

யார் நீ
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

யார் நீ

யார் நீ

கல்லறை மேனியர் கண் திறப்பாரோ
கயவரை இங்கே கால் நசிப்பாரோ
நெஞ்சத்து ஊழ் வினை வந்தழிப்பாரோ
நேயத்தை இங்கே நட்டு வைப்பாரோ

கொடியான பகைவரை கொன்றிடுவாரோ
கொள்ளை புறத்தில் நின்றிடுவாரோ
எல்லை தாண்டி வந்தவர் யாரோ
ஏரி தணலாய் கொதிப்பவர் யாரோ

வந்து படையில் இணைந்தவரை
வழி வஞ்சித்தல் இங்கு முறையோ
கொஞ்சி தமிழ் கவி பேசினாலே -அவர்
கொள்ளையர் என்று நீ சொல்வதோ

எந்த தமிழ் நீ பாடினாய்
ஏனடா எம்மவர் இழித்தாய்
நஞ்சுடல் கொண்டவர் நீயோ
நக்கி பிழைக்கின்ற நாயோ

அஞ்சுதல் பெண் இங்கு முறையோ
அடக்கிட நினைப்பது சரியோ
இழித்தல் இன்று உந்தன் விதியோ
இடர் சுடுகாட்டு நீயென்ன நரியோ ..!

ஆக்கம் 04-07-2024
வன்னி மைந்தன் ( ஜெகன் )
கவிதை ,kavithai ,kavithaigal ,கவிதைகள்,