Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு
உழவு இயந்திரத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு ,யாழ்ப்பாணம், கொடிகாமம் பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி நபர் ஒருவர் செலுத்திச் சென்ற உழவு இயந்திரம் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் கட்டளை
குறித்த உழவு இயந்திரத்தை நிறுத்துமாறு பொலிஸ் அதிகாரிகள் கட்டளையிட்ட போதிலும், அதன் சாரதி பொலிஸ் அதிகாரிகளை மோதி
ஆபத்தை ஏற்படுத்த முயற்சித்ததாக கொடிகாமம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு
இதனையடுத்து, பொலிஸார் உழவு இயந்திரத்தின் சக்கரத்தை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்த பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி குறிப்பிட்டார்.
கடந்த 24 ஆம் திகதி இச்சம்பவம் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துப்பாக்கிச் சூட்டினால் உழவு இயந்திரத்தின் சக்கரம் சேதமடைந்துள்ளது.
குறித்த உழவு இயந்திரத்தை செலுத்திய 18 வயதுடைய இளைஞனும் காயமடைந்ததாக கூறப்படும் நிலையில் யாழ்ப்பாணம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இலங்கை இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்
இலங்கை இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம்
இலங்கை இந்திய கப்பல் சேவை இடைநிறுத்தம் ,இந்தியாவின் நாகப்பட்டினத்துக்கும் – இலங்கையின் காங்கேசன்துறைக்கும் இடையிலான கப்பல் போக்குவரத்து சேவை இன்று (26) இடைநிறுத்தப்பட்டுள்ளது.
கப்பல் போக்குவரத்து சேவையானது
குறித்த கப்பல் போக்குவரத்து சேவையானது கடந்த 2023-ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 14-ஆம் திகதி முதல் ஆரம்பமான நிலையில் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வந்தது.
இந்த கப்பலில் நாள்தோறும் இலங்கையில் இருந்தும், இந்தியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகள், வியாபாரிகள்,
வெளிநாட்டினர் என ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர்.
வடகிழக்கு பருவமழை
இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததாலும், வானிலை மாற்றத்தின் காரணமாகவும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் எதிர்வரும்
டிசம்பர் மாதம் வரையில் நாகை – இலங்கை இடையிலான பயணிகள் கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என்று கப்பல் நிறுவனம் அறிவித்து உள்ளது.
இதனால் கப்பலில் செல்ல இரு மார்க்கத்திலும் முன்பதிவு செய்த பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு
வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு
வேன் மீது பொலிஸார் நடத்திய துப்பாக்கி சூடு ,ரத்மலானையில் நேற்று (25) பிற்பகல், கட்டளையை மீறிச் சென்ற வேன் ஒன்றை பொலிஸ் அதிகாரிகள் துரத்திச் சென்று துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.
குறித்த வேன் பிற்பகல் 5.25 மணியளவில்
குறித்த வேன் பிற்பகல் 5.25 மணியளவில் பிலியந்தலை, சுவாரபொல பகுதியில் இருந்து மொரட்டுவ, கட்டுபெத்த ஊடாக சென்று கொண்டிருந்த போது, மேல்
மாகாண தெற்கு போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த போக்குவரத்து அதிகாரிகள் வாகனத்தை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.
எவ்வாறாயினும், அந்த வாகனம் கட்டளையை மீறி முன்னோக்கிச் சென்றுள்ளது, இதன் காரணமாக பொலிஸ் அதிகாரிகள் மோட்டார் சைக்கிளில் அதனைப் பின்தொடர்ந்து துரத்திச் சென்றுள்ளனர்.
இதன்போது, ரத்மலானை, பெலெக்கடை சந்திப் பகுதியில் வைத்து வாகனத்தின் முன் சக்கரத்திற்கும் பின் சக்கரம் ஒன்றிற்கும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.
வாகனம் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட்டுள்ளது
அப்போதும் வாகனம் நிறுத்தப்படாமல் செலுத்தப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ரத்மலானை ரயில் நிலையத்திற்கு முன்பாக வேனின் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டு தப்பிச் செல்ல முயற்சித்துள்ளார்.
அப்போது அவர் கீழே விழுந்ததில் வாய் அருகே காயம் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் 1990 நோயாளர் காவு வண்டி சேவை மூலம் அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாரால் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணைகளில் அவர் கல்கிரியாகம பகுதியைச் சேர்ந்த சுற்றுலாப் போக்குவரத்து வாடகை வாகன சாரதி என்பது தெரியவந்துள்ளது.
இந்த வாகனம் பிலியந்தலையில் இருந்து ரத்மலானை ரயில் நிலையம் வரை பயணிக்கும் போது, வீதியில் பயணித்த பல வாகனங்களையும்
விபத்துக்குள்ளாக்கி வந்துள்ளதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேற்படி வாகனத்தின் பதிவுசெய்யப்பட்ட உரிமையாளர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண தெற்கு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த வாகனத்தை பொலிஸார் துரத்தி செல்லும் வீடியோ தற்போது வௌியாகியுள்ள நிலையில், அதனை கீழ பார்வையிடலாம்,
AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து
AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து
AI பயன்பாட்டால் இலங்கை தொழிலாளர்களுக்கு ஆபத்து ,இலங்கை உட்பட தெற்காசியாவில் செயற்கை நுண்ணறிவு (AI) பயன்பாடு வேகமாக
அதிகரித்துள்ளதாக உலக வங்கி தனது அறிக்கையொன்றில் சுட்டிக்காட்டியுள்ளது.
AI பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம்
தெற்காசியாவின் AI பயன்பாடு தொழிலாளர் சந்தையில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையின்படி, தெற்காசியாவில் நேபாளம் மற்றும் இந்தியாவுடன் ஒப்பிடும்போது, அதிக AI பயன்படுத்துவோர்
கொண்ட தொழிலாளர் சக்தியைக் கொண்ட நாடுகளாக பூட்டானும் இலங்கையும் மாறியுள்ளன.
எனினும், தெற்காசிய நாடுகளில் AI மனித நிரப்பியாக அதாவது மனித திறன்களுடன் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதில் இலங்கை குறைந்த இடத்தில்
உள்ளது என்றும், திறன்களை மேம்படுத்தாமல் AI பயன்பாடு விரைவுபடுத்தப்பட்டால் வேலை இழப்புகள் ஏற்படும் என்றும் அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
இலங்கையில் AI தொடர்பான வேலைவாய்ப்புச் சந்தை, தெற்காசியாவில் உள்ள மற்ற நாடுகளை விட வேகமாக விரிவடைந்து வருகிறது, மேலும் 2025
ஆம் ஆண்டில் இலங்கையில் உள்ள அனைத்து தொழில்முறை மற்றும் நிர்வாக வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் 7.3 சதவீதத்திற்கு AI தொடர்பான திறன்கள் தேவைப்பட்டுள்ளன.
இது பிராந்தியத்திலேயே அதிகபட்ச பங்கு என்றும், இந்தியாவில் இது 5.8% ஐத் தாண்டுகிறது என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தகவல் தொடர்பு
இந்த வேலைவாய்ப்புகள் நகர்ப்புறப் பகுதிகளில் பரவி, தொழில்முறை மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப (ICT) சேவைத் துறைகளில் குவிந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இலங்கையின் நிதித் துறை, தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்முறை சேவைகளுக்கு AI பயன்பாடு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
என்றும், இலங்கையில் வலுவான AI வேலைவாய்ப்புச் சந்தை இருக்க வேண்டும் என்றும் உலக வங்கி அறிக்கை கூறுகிறது.
இதற்கிடையில், AI பயன்பாடு காரணமாக தெற்காசியா முழுவதும் உள்ள வேலைவாய்ப்புகளில் சுமார் 7% அதிக ஆபத்தில் உள்ளதாகவும், அழைப்பு மைய அதிகாரிகள், கணக்காளர்கள், ஒப்பு நோக்குபவர்கள், கணினி
மென்பொருள் போன்ற பணிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் ஏற்கனவே சரிவு காணப்படுவதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், ChatGPT பயன்பாடு குறித்து உலக வங்கி தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளதுடன், தெற்காசியாவில் இரண்டாவது அதிக தனிநபர்
ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இலங்கை தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளது.
இதில் மாலைத்தீவு முதலிடத்தில் உள்ளதுடன், இலங்கைக்கு அடுத்தபடியாக அதிக ChatGPT பயன்பாடு கொண்ட நாடாக இந்தியா உள்ளது.
அத்துடன், இந்த AI பயன்பாட்டினால் அதிகப் பலன்களைப் பெறக்கூடிய கொள்கை ரீதியான வாய்ப்புகள் குறித்தும் உலக வங்கி வெளியிட்டுள்ள
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், இது AI கண்டுபிடிப்பாளர்களைத் தக்கவைத்துக் கொள்ளவும் உதவும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, டிஜிட்டல் திறன்களை மேம்படுத்துதல், STEM கல்வியை விரிவுபடுத்துதல், நம்பகமான மின்சாரம் மற்றும் இணைய உட்கட்டமைப்பில்
முதலீடு செய்தல், அத்துடன் தொழிலாளர் நகர்வு மற்றும் வேலைவாய்ப்பு வசதி அமைப்புகளை மேம்படுத்துதல் ஆகியவை முக்கியம் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்
கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ்
கைது செய்ய பொதுமக்கள் உதவிய நாடும் பொலிஸ் ,வெலிகம பிரதேச சபை தலைவர் கொலை சம்பவம் தொடர்பில் தேடப்படும் சந்தேகநபரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளது.
வெலிகம பிரதேச சபை
கடந்த 22ஆம் திகதி வெலிகம பிரதேச சபை தலைவரை இனந்தெரியாத துப்பாக்கிதாரி ஒருவர் சுட்டுக் கொன்ற
சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளைக் கைது செய்வதற்காக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் (குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு) மற்றும் தென் மாகாணத்திற்குப் பொறுப்பான
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், பல பொலிஸ் குழுக்கள் இணைந்து துரித விசாரணைகளை ஆரம்பித்தன.
அதன்படி, நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவின் திட்டமிட்ட நடவடிக்கையின் பின்னர், அநுராதபுரம் – கெகிராவ பொலிஸ் பிரிவின் 50 வீட்டு தொகுதியில், இக்
குற்றத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மறைந்திருப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்தப் பிரிவின் அதிகாரிகள், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன், இன்று (26) அதிகாலையில், கைவிடப்பட்டிருந்த ஒரு வீட்டைச் சோதனையிட்டனர்.
இதன்போது, பெண் ஒருவர் உட்பட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டபோது, அவர்களுடன் இருந்த மேலும் சில நபர்கள் பொலிஸாருடன் முரண்பட்ட நிலையில் அதில் காயமடைந்த பொலிஸ்
அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில்
அதிகாரி ஒருவர் சிகிச்சைகளுக்கான வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அங்கு சந்தேகநபர்கள் குற்றத்திற்குப் பயன்படுத்திய ஒரு மோட்டார் சைக்கிள்,12 இலட்சத்துக்கும் அதிகமான பணம், ஹெரோயின் மற்றும் ஐஸ்
போதைப்பொருள் மற்றும் போதைப்பொருள் பாவனைக்காக பயன்படுத்தப்படும் உபகரணங்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதேவேளை, சந்தேகநபர்களுக்கு அடைக்கலம் கொடுத்த அப்பகுதியைச் சேர்ந்த மேலும் ஒரு சந்தேகநபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸ் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொலிஸ் அதிகாரிகளுடன் சண்டையிட்டு தப்பிச் சென்ற, அங்குலுகம பகுதியைச் சேர்ந்த ஹக்மன பரநலியனகே நுவன் தாரக
என்பவரைக் கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
இந்த சந்தேகநபர் சுமார் 5 அடி 6 அங்குலம் உயரமானவர் மற்றும் வலது கையின் மேல் பகுதியில் ஆங்கிலத்தில் “ANURADA” என்றும், இடது கையில் “හිතුමතේ ජීවිතේ” (சுயாதீன வாழ்க்கை) என்றும் பச்சை குத்தியுள்ளார்.
இந்த சந்தேகநபரின் புகைப்படங்கள் உங்களுடன் பகிரப்படுகின்றன.
இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால், பின்வரும் தொலைபேசி இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு பொலிஸார் கோரியுள்ளனர்.
பொலிஸ் மா அதிபருக்கு தெரிவிக்க (WhatsApp) – 071 859 8888 நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு – 011 233 7162 / 071 859 2087
நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுப் திணைக்களம், தென் மாகாணப் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், மாத்தறை மற்றும்
அநுராதபுரம் பிரிவுக் குற்றப் புலனாய்வுப் பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவ அதிகாரிகள் இணைந்து
சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கையில் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்
இலங்கையில் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம்
இலங்கையில் பேருந்துகள் சேவையில் இருந்து விலகும் அபாயம் ,அடுத்த ஆண்டுக்குள் சுமார் 3,000 குறுகிய தூரப் பேருந்துகள் சேவையில் இருந்து
இலங்கை தனியார் பேருந்து
விலகும் அபாயம் உள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
திட்டமிடப்படாத வாகன இறக்குமதியால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்துள்ளது.
எரிபொருள் செலவு
இந்த நெரிசல் காரணமாக பேருந்துகளின் எரிபொருள் செலவு உயருவதுடன், ஒரு நாளைக்கு இயக்கப்படும் பயணங்களின் எண்ணிக்கையும் வெகுவாகக் குறைந்துள்ளது.
இதன் விளைவாக, பேருந்து உரிமையாளர்கள் தொழிலில் இருந்து வெளியேறி வருவதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்
பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்
பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம்
பருத்தித்துறையில் வர்த்தகர்கள் போராட்டம் ,யாழ்ப்பாணம் வடமராட்சி பருத்தித்துறை மரக்கறி சந்தையை முன்னர் இயங்கிய. இடத்திற்கு
மாற்றக்கோரி பருத்தித்துறை வர்த்தக சமூகம் இணைந்து கவனயீர்ப்பு போராட்டத்தை வெள்ளிக்கிழமை (24) காலை 9:00. மணியளவில் முன்னெடுத்தனர்.
பருத்தித்துறை நவீன சந்தையில் இருந்து
பருத்தித்துறை நவீன சந்தையில் இருந்து பருத்தித்துறை நகரசபை வரை சென்று அங்கு தவிசாளர் மற்றும் செயலாளரிடம் மகஜர் ஒன்றும் கையளிக்கப்பட்டது.
பருத்தித்துறை நகரில் அனைத்து வர்த்தக நிலையங்களும் சில மணி நேரம் மூடப்பட்டே குறித்த பேரணி. இடம்பெற்றது.
சுமார் 200 வரையானோர் கலந்து கொண்ட குறித்த கவனயீர்ப்பு போராட்டத்தில் புதிய இடத்திற்கு மாற்றப்பட்ட மரக்கறி சந்தையை மீண்டும், நவீன சந்தை தொகுதிக்கு மாற்றித்தருமாறு கோஷம் எழுப்பினர்
சந்தையை பழைய இடத்திற்கு மாற்றி தருமாறு
இதேவேளை குறித்த சந்தையை பழைய இடத்திற்கு மாற்றி தருமாறு மகஜரை வழங்குவதற்கு செயலாளரையும், தவிசாளரையும் நகரசபைக்கு வெளியே
வருமாறு வர்த்தகர்களால் கோரப்பட்ட நிலையில் சுமார் நாற்பது நிமிடம் வரை செயலாளர் வெளியே வந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக்கொள்ள மறுத்திருந்தார்.
வர்த்தகர்கள் விடாப்பிடியாக செயலாளர் வெளியே வரவில்லை எனில் தாம் நகரசபை வாயிலை விட்டு எழுந்திருக்கமாட்டோம் என போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் பருத்தித்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமை பொலிஸ் பரிசோதகர் பிரியந்த அமரசிங்க நகர சபை செயலாளர் வெளியே
வந்து மகஜரை தவிசாளருடன் இணைந்து பெற்றுக் கொள்ள வருமாறு சமரசத்திம் ஈடுபட்ட நிலையில் இணங்கிய செயலாளர் தவிசாளருடன் இணைந்து மகஜரை பெற்றுக்கொண்டார்.
மகஜரை பெற்றுக்கொண்ட பருத்தித்துறை நகரசபை தவிசாளர் வர்த்தகர்களின் கோரிக்கையை மதித்து தாம் விரைவில் சந்தையை பழைய
இடத்திற்கு மாற்றுவதற்குரிய ஆய்வுக்குழு அறிக்கை கிடைக்கப்பெற்றதும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்த நிலையில் போராட்டம் நிறைவு பெற்றது.
பதக்கங்களை குவித்த இலங்கை வீர வீராங்கனைகள்
பதக்கங்களை குவித்த இலங்கை வீர வீராங்கனைகள்
பதக்கங்களை குவித்த இலங்கை வீர வீராங்கனைகள் ,இந்தியாவின் ராஞ்சியில் நடைபெற்றுவரும் 4ஆவது தெற்காசிய மெய்வல்லுநர்
சாம்பியன்ஷிப் 2025க்கான போட்டியில் இலங்கை வீர, வீராங்கனைகள் பல பதக்கங்களை வென்றுள்ளனர்.
தங்கப் பதக்கங்கள்
தங்கப் பதக்கங்கள் மற்றும் சாதனைகள்:
முப்பாய்ச்சல் (Triple Jump): பசிந்து மல்ஷான் (Pasindu Malshan) 16.19 மீற்றர் தூரத்தைப் பாய்ந்து தங்கப் பதக்கத்தை வென்றார். இது இலங்கையின் முதல் தங்கப் பதக்கமாகும்.
ஆண்கள் 100 மீ ஓட்டம்: சமோத் யோதசிங்க (Chamod Yodasinghe) 10.30 வினாடிகளில் ஓடி, தங்கப் பதக்கம் வென்றதுடன், “வேகமான மனிதன்” (Fastest
Man) என்ற பட்டத்தையும் பெற்றார். இவரது இந்தச் சாதனை சாம்பியன்ஷிப் போட்டி சாதனையை முறியடித்துள்ளது.
பெண்கள் 100 மீ ஓட்டம்
பெண்கள் 100 மீ ஓட்டம்: சஃபியா யாமிக் (Safiya Yamic) 11.53 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றதுடன், புதிய போட்டி சாதனையையும் நிலைநாட்டினார்.
வெள்ளிப் பதக்கங்கள்:
பெண்கள் 100 மீ ஓட்டம்: சஃபியா யாமிக் இனைத் தொடர்ந்து, அமஷா டி சில்வா (Amasha de Silva) 11.72 வினாடிகளில் ஓடி வெள்ளிப் பதக்கத்தை வென்றதன்
மூலம், பெண்கள் 100 மீ ஓட்டத்தில் இலங்கைக்கு முதல் இரண்டு இடங்களை உறுதி செய்தார்.
ஆண்கள் 5,000 மீ ஓட்டம்: முன்னதாக, விக்னராஜ் வக்ஷன் (Viknaraj Vakshan) 14:23.21 வினாடிகளில் ஓடி இலங்கையின் முதல் வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றிருந்தார்.
இந்த வெற்றியின் மூலம், ஆண்களுக்கான 100 மீ மற்றும் பெண்களுக்கான 100 மீ ஆகிய இரண்டு பிரிவுகளிலும் இலங்கை தங்கப் பதக்கங்களை வென்று ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
திடீரென தீப்பற்றி எரிந்த ரஜரட்ட குயின் ரயில்
திடீரென தீப்பற்றி எரிந்த ரஜரட்ட குயின் ரயில்
திடீரென தீப்பற்றி எரிந்த ரஜரட்ட குயின் ரயில் ,அனுராதபுரத்தில் இருந்து பெலியத்தை நோக்கிப் பயணித்த ரஜரட்ட குயின் ரயிலின் என்ஜினில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது
தீ விபத்து ரயிலின் என்ஜினில் ஏற்பட்டுள்ளது என்றும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை என்றும் ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ரயில் மீண்டும் அனுராதபுரம் ரயில் நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, அதற்கு வேறு ஒரு
என்ஜின் பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத்திணைக்களம் தெரிவித்தது.
தீ விபத்து
இன்று (25) காலை 5 மணிக்கு அனுராதபுரத்தில் இருந்து புறப்படவிருந்த ரஜரட்ட ரெஜிண ரயிலிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, அந்த ரயில் புறப்படுவது 2 மணித்தியாலங்களுக்கு மேல் தாமதமானதுடன், காலை 7.30 மணியளவில் மீண்டும் பெலியத்தையை நோக்கிப் பயணத்தைத் தொடங்கியதாக ரயில்வே திணைக்களம் கூறியுள்ளது.
தென்மராட்சியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு
தென்மராட்சியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு
தென்மராட்சியில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு ,யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (24) இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.
தென்மராட்சி கெற்போலி பகுதி
தென்மராட்சி கெற்போலி பகுதியில் சட்டவிரோதமாக அகழ்ந்த மணலை ஏற்றி வந்த உழவு இயந்திரத்தை கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் இடைமறித்தனர்.
உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு
இதன்போது பொலிஸாரின் கட்டளையை மீறிப் பயணித்த உழவு இயந்திரத்தின் மீது துப்பாக்கி சூடு நடாத்தப்பட்டுள்ளது. இதன்போது உழவு இயந்திரத்தின் சாரதி படுகாயமடைந்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்
சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் மரணம்
சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் மரணம்
சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் மரணம் ,ஈரல் மற்றும் சிறுநீரகம் செயலிழந்ததால் இளம் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பிள்ளை
இவ்வாறு உயிரிழந்தவர் யாழ். பருத்தித்துறையைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான குணசேகரம் மரியதாஸ் (வயது 30) என்ற இளம் குடும்பஸ்தராவார்.
உடல் நலக்குறைவு காரணமாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் 14 ஆம் திகதி யாழ். போதனா
வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில், நேற்று முன்தினம் வியாழக்கிழமை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
யாழ். போதனா வைத்தியசாலை
இந்த மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் விசாரணைகளை மேற்கொண்டார். சாட்சிகளை பருத்தித்துறை பொலிஸார் நெறிப்படுத்தினர்
உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு
உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு
உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு ,உத்தரபிரதேச மாநிலம் ஷ்ரவஸ்தியில் உள்ள ஒரு ஹோட்டலுக்குள் 71 வயது இலங்கை பெண் ஒருவர்
இறந்து கிடந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை (22) தெரிவித்தனர். இறந்த பெண் சுனில் சாந்தி டி சில்வாவின்
மனைவி கோத்தாகொட
மனைவி கோத்தாகொட என அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதிகாரிகளின் கூற்றுப்படி, இலங்கையைச் சேர்ந்த 46 சுற்றுலாப் பயணிகள் குழு மாநிலத்தில் உள்ள ஷ்ரவஸ்தியில் உள்ள புத்த மத தலத்தைப் பார்வையிட
வந்திருந்தனர். கோத்தாகொட தனது அறையை விட்டு செவ்வாய்க்கிழமை(21), வெளியே வராததால், சுற்றுலாப் பயணிகள், ஹோட்டல் ஊழியர்களின் உதவியுடன் கதவைத் திறந்து, பெண்ணின் உடலைக் கண்டனர்.
இதைத் தொடர்ந்து, ஹோட்டல் ஊழியர்கள் மேலாளரை அழைத்தனர், அவர் சம்பவம் குறித்து பொலிஸாருக்குத் தெரிவித்தார்.
பொலிஸ் அதிகாரிகள்
தகவல் கிடைத்ததும், பொலிஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததாக ஸ்டேஷன் ஹவுஸ் அதிகாரி
(SHO) லால் சாஹேப் சிங் தெரிவித்தார். இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அவர் கூறினார்.
பெண்ணின் மரணம் குறித்து தகவல் கிடைத்தவுடன் இலங்கை தூதரகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாக காவல் கண்காணிப்பாளர் (SP) ராகுல் பாட்டி தெரிவித்தார்.
பிரேத பரிசோதனை அறிக்கை சாதாரணமாக இருந்தது, மேலும் உடலை இலங்கைக்கு திருப்பி அனுப்புவதற்கு வசதியாக தூதரகத்திற்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது.
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு
இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு ,கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான இஷாரா
கொழும்பு குற்றப் பிரிவினர்
செவ்வந்தி இந்தியாவிற்குத் தப்பிச் செல்லப் பயன்படுத்திய படகை கொழும்பு குற்றப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
யாழ்ப்பாணம் – அராலித்துறை கடற்கரைப் பகுதியில் இருந்தே இந்தப் படகு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்தப் படகு, இஷாரா இந்தியாவிற்குத் தப்பிச் செல்ல உதவிய ஏ. ஆனந்தன் என்பவருக்குச் சொந்தமான 400 குதிரைத் திறன் கொண்ட எஞ்சின் பொருத்தப்பட்ட படகு எனத் தெரியவந்துள்ளது
தேங்காய்திருடியவர் அடித்து கொலை
தேங்காய்திருடியவர் அடித்து கொலை
தேங்காய்திருடியவர் அடித்து கொலை ,இரண்டு தேங்காய்களைத் திருடியதற்காக ஒருவரை தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக்
நீதிமன்ற நீதிபதி நவரட்ண
கொன்றதற்காக, பிரதிவாதிக்கு ஹோமாகம மேல் நீதிமன்ற நீதிபதி நவரட்ண மாரசிங்க மரண தண்டனை விதித்தார்.
2001 ஒக்டோபர் 30 அன்று நியதகல நெல் வயலில் தேங்காய் உமி இரும்புக் கருவியால் அடித்துக் கொன்றதற்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த
குற்றப்பத்திரிகையின் மீதான நீண்ட விசாரணைக்குப் பிறகு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டது.
ரஞ்சித் தர்மசேனவுக்கு மரண தண்டனை
வழக்கில் முதல் குற்றவாளியான ரஞ்சித் தர்மசேனவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு, இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியால்
தீர்மானிக்கப்படும் திகதியில் இறக்கும் வரை வெலிக்கடை சிறையில் தூக்கிலிட உத்தரவிடப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.
திடீர் கோபம் அல்லது இயற்கைக்கு மாறான சூழ்நிலைகளால் மரணம் ஏற்படவில்லை என்றும் மேல் நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்தார்.
வட கிழக்கில் 700 ஏக்கர் விடுவிப்பு
வட கிழக்கில் 700 ஏக்கர் விடுவிப்பு
வட கிழக்கில் 700 ஏக்கர் விடுவிப்பு ,வடக்கு மற்றும் கிழக்கில் 700 ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பொதுமக்களிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக
பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜெயசேகர
பாதுகாப்பு துணை அமைச்சர் அருணா ஜெயசேகர இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் பத்மநாதன் சத்தியலிங்கம் எழுப்பிய வாய்மொழி கேள்விக்கு பதிலளித்த துணை அமைச்சர், ஜனவரி 1, 2025 நிலவரப்படி
வடக்கில் மொத்தம் 672.24 ஏக்கர் நிலம் பொதுமக்களிடம் திருப்பித் தரப்பட்டுள்ளதாகக் கூறினார்.
இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட நிலங்களும் அடங்கும்
அந்த நிலங்களில் 86.24 ஏக்கர் தனியார் நிலங்களும், 586 ஏக்கர் இராணுவத்தால் பயன்படுத்தப்பட்ட நிலங்களும் அடங்கும் என்று அவர் கூறினார்.
கிழக்கு மாகாணத்தில் 34.58 ஏக்கர் அரசாங்க நிலங்களும் விடுவிக்கப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ஜெயசேகர தெரிவித்தார்.
வவுனியா இராணுவ விமான நிலையத்தை சுற்றியுள்ள காணிகள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து குறிப்பிட்ட அவர், அது விரைவில் தீர்க்கப்படும் என்றார்.
சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்
சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்
சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்.நாம் தமிழர் கட்சி தலைவர் செந்தமிழன் சீமானை அவதூறு பேசி வந்த வெளிநாட்டு விடுதலை
புலிகள் கட்டமைப்பு
புலிகள் கட்டமைப்பு மற்றும் முக மூடி கூட்டங்களை வன்னி மைந்தன் அவர்கள் ,தனது வன்னி மைந்தன் டிக் டாக் பகுதியில் வைத்தது கிழித்து தொங்க விட்டுள்ளார் .
சீமான் தொடர்பாக இந்த கூட்டங்கள் முன் வைக்கும் அவதூறுகளுக்கு செருப்படி பதிலை வழங்கியுள்ளார் .
வன்னி மைந்தன் எழுப்பிய கேள்வி
வன்னி மைந்தன் எழுப்பிய எந்த கேள்விகளுக்கும் பதில் இன்றி வெளிநாட்டு விடுதலை புலிகள் கட்டமைப்பு திணறி வருகிறது .
மான ரோசம் ,நேர்மை ,நெஞ்சுரம் இருந்தால் வன்னி மைந்தன் எழுப்புகின்ற கேள்விகளுக்கு வெளிநாட்டு கட்டமைப்பு பதில் வழங்குங்கள் என் வன்னி மைந்தன் சவால் விட்டுளளார் .
நம் தமிழருக்கே நமது பரிபூரணமான ஆதரவு என அவர் முழங்கியுள்ளார்.
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை

- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்
சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்
சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்,சீமானை திட்டிய முகமூடி கூட்டம் வைச்சு செய்த வன்னி மைந்தன் சம்பவ காணொளி வைரலாகி வருகிறது .
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அவர்கள் தளபதி சூசை அவர்கள் வேண்டுகோளை அடுத்து நாம தமிழர் என்கின்ற பெரும் படையை கட்டி மிக பெரும் போராட்டம் நடத்தி வருகிறார் .
இவரது இந்த போராட்டமே ஈழ தமிழர் விடுதலையை தூக்கி நிறுத்தியுள்ளது .
ஈழ தமிழர்கள் முதல் உலக தமிழர்கள்
இதன் காரணமாக ஈழ தமிழர்கள் முதல் உலக தமிழர்கள் அண்ணன் சீமான் மற்றும், நாம் தமிழர் கட்சிக்கு தமது ஆதரவு வழங்கி வருகிறார்கள் .
இதனை ஜீரணித்து கொள்ள முடியாதவர்கள் தற்போது சீமானுக்கு எதிராக அவதூறு பேசி வருகிறார்கள் .
இவ்வாறான நிலையில் வன்னி மைந்தன் தனது வன்னி மைந்தன் டிக் டாக் நேரலையில் வைத்து இந்த மூக மூடிகளை கிழித்து தொங்க விட்டுள்ளார்.
- டிரம்ப் நெதன்யாகு திடீர் சந்திப்பு

- வடக்கு ஈராக்கில் ஆளில்லா விமானத் தாக்குதல்கள்

- சவூதி ஓமன் ஈரானுடன் பேச்சு

- சவுதி எண்ணெய் வயல்கள் மீது ஈராக் தாக்குதல்

- டெங்கு நோய் அதிகரிப்பு மருத்துவ மனைகளில் இடமில்லை

- ஸ்ரீலங்கன் 17 மாலத்தீவு இடங்களுடன் இணைகிறது

- யானை தாக்குதல் முடிவு சீனா அமைக்கும் மூங்கில் வேலி

- மனித யானை மோதலில் பலர் உயிரிழப்பு

- SJB எம் பி சமிந்த விஜேசிரிக்கு 18 மாத சிறைத்தண்டனை

- தனது பாதுகாப்பிற்கு தீங்கு விளைவிக்க ஹோர்முஸ் ஜலசந்தியைப் பயன்படுத்த முடியாது என ஈரான்

மருத்துவமனை உதவியாளரிடம் ஆயுதங்கள் மீட்பு
மருத்துவமனை உதவியாளரிடம் ஆயுதங்கள் மீட்பு
மருத்துவமனை உதவியாளரிடம் ஆயுதங்கள் மீட்பு ,கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவரின் மோட்டார்.
மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டா
சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து T-56 தோட்டாக்களையும் மூன்று 9mm தோட்டாக்களையும் கண்டுபிடித்ததாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பு தேசிய மருத்துவமனையின் மருத்துவமனை உதவியாளர் ஒருவர் போதைப்பொருள் வைத்திருப்பதாக மருதானை பொலிஸாருக்கு கிடைத்த
தகவலின் பேரில் மருதானை பொலிஸார் நடத்திய விசாரணையில், கொழும்பு தேசிய மருத்துவமனையின் பழைய வெளிநோயாளர் பிரிவின் வாகன
நிறுத்துமிடத்தில் நிறுத்தப்பட்டிருந்த மருத்துவமனை உதவியாளருக்குச் சொந்தமான மோட்டார் சைக்கிளை சோதனை செய்தபோது இந்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
மோட்டார் சைக்கிளில் வெள்ளைப் பொடி அடங்கிய பொதியும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மருதானை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர்
இந்த விவகாரம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்த நபர் மீதான வெறுப்பு காரணமாக யாராவது இந்த
தோட்டாக்களை மோட்டார் சைக்கிளின் வைத்தனரா அல்லது அவர் தோட்டாக்களை கொண்டு வந்தாரா என்பது குறித்தும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
செவ்வந்திக்கு படகு வழங்கிய ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு
செவ்வந்திக்கு படகு வழங்கிய ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு
செவ்வந்திக்கு படகு வழங்கிய ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு ,திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவை புதுக்கடை நீதிமன்ற வளாகத்திற்குள் சுட்டுக் கொன்ற வழக்கில் முக்கிய சந்தேக நபருக்கு
கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல்
படகுகளை வழங்கிய நபரின் கிளிநொச்சி வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பிஸ்டல் ரக துப்பாக்கிகள் மற்றும்
வெடிமருந்துகள் மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.
கொழும்பு-கண்டி சாலையில் உள்ள திஹாரியவின் ஓகோடபொல பகுதியில் தங்கியிருந்தபோது கைது
செய்யப்பட்ட சந்தேக நபர் அந்தோணிப்பிள்ளை ஆனந்தன் 72 மணி நேர தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் விசாரணைக்கு
துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
உட்படுத்தப்பட்டார்., மேலும் சந்தேக நபர் விசாரணையின் போது சுட்டிக்காட்டியதன் பேரில் துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சந்தேக நபர் 19.04.2019 அன்று நடத்தப்பட்ட ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் தொடர்புடைய பல சந்தேக நபர்களுடன் கடல் வழியாகத் தப்பிச் செல்ல
நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தற்போது வெளிநாட்டில் இருக்கும் சிலோன் பாய் எனப்படும் முகமது ரிஸ்வி என்ற நபரின் ஆலோசனையின் பேரில் சந்தேக நபரான இஷாரா
செவ்வந்திக்கு கடல் வழியாக இந்தியாவுக்குத் தப்பிச் செல்ல படகு வசதிகள் வழங்கப்பட்டதாக மேலும் தெரியவந்துள்ளது.
பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த சூரன்
பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த சூரன்
பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த சூரன் ,பிரான்சில் பல்வேறு நாடுகளுடன் துவிச்சக்கர வண்டியில் சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை
சூரனின் என்ற இளைஞன் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.
கடந்து செவ்வாய்க்கிழமை (22) அன்று பிற்பகல் சூரனின் என்ற இளைஞன் யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நல்லூர் பூர்வீகமாகக் கொண்ட குறித்த 28 வயதுடைய சூரன் என்ற இளைஞன் இலங்கையின் மகத்துவத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும்
ஒரு பொறிமுறையாகவே இந்த துவிச்சக்கர வண்டி பயணத்தை முன்னெடுத்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்ததாக குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களை சந்தித்து தனது பயணம் குறித்து இவ்வாறு கூறிய அவர் மேலும் தெரிவிக்கையில்
“நான் பாரிஸில் இருந்து குறித்த பயணத்தை கடந்த செப்டம்பர் 01, 2025 அன்று ஆரம்பித்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, செர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜார்ஜியா, கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான்,
ஆப்கானிஸ்தான் மற்றும் இந்தியா போன்ற பல நாடுகள் வழியாக சுமார் 10 ஆயிரம் கிலோ மீற்றர் தூரத்தை துவிச்சக்கர வண்டியில் பயணித்து
பூர்வீக இடமன நல்லூரை வந்தடைத்தேன்.
செவ்வாய்க்கிழமை (22) அன்று தனது பூர்வீக இடமன நல்லூரை வந்தடைத்தேன்.“
யாழ்ப்பாணம் தனது பெற்றோரின் சொந்த ஊர் என்பதால் தாம் எனது பயணத்தின் இறுதி இலக்காக யாழ்ப்பாணத்தின் நல்லூர் கோயிலைத் தேர்ந்தெடுத்திருந்தேன்.
அத்துடன் இலங்கை ஒரு நாடு மட்டுமல்ல, என் பூர்வீகத்துடன் தொடர்புபட்ட என் உன்னத உணர்வு.” எனது நோக்கம் தனது குடும்பத்துடன் மீண்டும்
இணைவது மட்டுமல்லாமல் யாழ்ப்பாணத்தின் கலாசார முக்கியத்துவத்தை உலகிற்கு வெளிப்படுத்துவதும் ஆகும்.
மேலும் யாழ்ப்பாண தீபகற்பத்தில் சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, பிராந்தியத்துடன் வலுவான உணர்வு மற்றும் கலாசார உறவுகளைப்
பேணுகின்ற உலகளாவிய தமிழ் புலம்பெயர்ந்த சமூகத்தை ஊக்குவிப்பதற்கும் ஒரு மதிப்புமிக்க வாய்ப்பை உருவாக்குவதுமாகும்.
நான் பாகிஸ்தானுக்கு சென்று வர முயற்சித்தேன்.ஆனால் அந்நாடு அனுமதி மறுத்திருந்தது. அதன்பின் இந்தியா சென்று கப்பல் மூலம் தனது இறுதி
இலக்கான யாழ்ப்பாணம் வந்தடைந்துள்ளேன் இங்கு எனக்கு சிறப்பான வரவேற்பு கிடைக்கப்பெற்றது.
அத்துடன் நான் இந்த பயணத்தில் கரடுமுரடான சவால்களை எதிர் கொண்டாலும் அந்நாடுகளின் அரசுகளும் மக்களும் எனக்கு மிகுந்த வரவேற்பையும் ஒத்துழைப்பு களையும் தந்திருந்தனர்.
அவர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் நன்றிகளை கூறுகின்றேன் என தெரிவித்திருந்தார். அதே நேரம் சுமார் 40 வருடங்களுக்கு முன்னர் பெற்றோர்
பிரான்சில் குடியேறிய நிலையில் சூரனின் சரளமாக தமிழில் தனது உணர்வுகளை பகிர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது .













































