Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பிரிட்டன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை – வீடியோ
பிரிட்டன் மக்களுக்கு அவசர எச்சரிக்கை – வீடியோ
இன்று பிரிட்டனில் நிகழ போகும் இந்த கால நிலை சீற்றத்தில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் எனவும் விழிப்பாக
இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
மேலதிக செய்திகளை காண காணொளியை பாருங்கள் full video
இராணுவ சோதனை சாவடிகள் தேவை; கோட்டாவின் நடவடிக்கைக்கு சித்தார்த்தன் பச்சைகொடி
இராணுவ சோதனை சாவடிகள் தேவை;
கோட்டாவின் நடவடிக்கைக்கு சித்தார்த்தன் பச்சைகொடி
இராணுவ சோதனை சாவடிகள் தேவை என புளொட் அமைப்பின் தலைவரும், யாழ்மாவட்ட பாராளுமன்ற
உறுப்பினருமான த.சித்தார்த்தன் தெரிவித்து ஜனாதிபதி கோட்டாவின் நடவடிக்கைக்கு பச்சை கொடி காட்டியுள்ளார்.
புளொட்டின் வவுனியா மாவட்ட தலைமை அலுவலகம் கோவில்குளத்தில் இன்று திறந்துவைக்கபட்டது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்…
வருகின்ற தேர்தல் முக்கியத்துவமானதாகவே இருக்கிறது. எனவே தமிழ்மக்கள் ஒற்றுமையாக வாகளித்து அவர்களின்
பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.
கடந்த ஜனாதிபதி தேர்தலிற்கு பின்னர் சிங்கள தேசிய வாதம் பேசப்படுவதுடன் தமிழ் மக்களின் அபிலாசைகள்
புறக்கணிக்கப்படுகின்ற நிலமையை பார்கின்றோம்.
எனவே நாம் அனைவரும் பிரிந்து நிற்கின்ற போது தமிழ் மக்களின் பலத்தை பாதிக்கும்.
வன்னிமாவட்டத்தில் முல்லைதீவு மற்றும் வவுனியாவில் எமது கட்சி சார்பில் இரு வேட்பாளர்களை களம் இறக்கவுள்ளோம். இன்னும் ஓரிரு வாரங்களில் மாவட்டகுழு
திர்மானித்து அந்த வேட்பாளர்கள் யார் என்பதை இறுதி செய்து அறிவிப்போம். எமது வேட்பாளர்கள் வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் இருக்கிறது.
தேர்தலின்போது கூட்டமைப்பை விட்டு பலர் சென்றிருக்கின்றார்கள்.சிலர் கட்சியாகவே
போயிருக்கிறார்கள் ரெலோவில் இருந்து கூட யாழில் இருந்து சிலர் சென்றிருப்பதாக
அறிவித்துள்ளார்கள்.கூடுதலாக டெலோவின் செல்வாக்கு வன்னிமாவட்டத்திலும், கிழக்கிலும் இருக்கிறது. எனவே அந்த உடைவு இங்கு எப்படி ஆதிக்கம் செலுத்தும் என்று
தெரியவில்லை.செலுத்தமுடியும் என்று நினைக்கவில்லை.அந்த கட்சியை சேர்ந்த முக்கிய இருவர்
பிரிந்துள்ளனர், பெரும்பாண்மையானவர்கள் டெலோவுடன் தான் நிக்கிறார்கள்.எனவே பலமாக இருக்கிறார்கள் என்பதை நம்புகிறேன்.
புதிய அரசில் நாம் எதிர்பார்த்ததை போலவே பல்வேறு செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. தேர்தலை மையப்படுத்தியோஅல்லது தேர்தலிற்கு பின்னரோ
1மாற்றங்கள் ஏற்பட்டலாம். கோட்டாவை பொறுத்தவரை மாற்றங்கள் ஏற்படும் என்று கருதாவிட்டாலும் மாற்றம் வரவேண்டும் என்று விரும்புகிறோம்.
தற்போது குற்றசெயல்கள் கூடுதலாக இருக்கிறது. எனவே இங்கு உருவாக்கப்பட்டுள்ள இராணுவ சோதனை சாவடிகள்
மற்றும் நடவடிக்கைகள் தேவை என்ற அபிப்பிராயம் சில மக்கள் மத்தியிலே இருக்கிறது.
பொதுவாக இது ஒரு இராணுவ மயமாக்கலின் ஆரம்பமாக இருந்தால் அது பாதகமானவிடயமாகவே இருக்கும்.
மக்களின் பாதுகாப்பு என்பது முக்கிய விடயம். அது பொலிஸ் துறையின் கண்காணிப்பாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
ஜனாதிபதியும் இராணுவ பின்புலத்தில் இருந்து வந்தவர் என்றவகையில் சிங்களமக்கள் மத்தியிலும் அந்த அச்சம் இருக்கிறது. காணாமல் போனோர் விடயம் தொடர்பாக
என்னைவிட ஜனாதிபதிக்கு அதிகம் தெரியும்.அதற்கு அவர் காரணமாக இருந்திருக்கின்றார்.எனினும் காணாமல்
போனவர்கள் இல்லை என்ற கூற்றை நம்பி நாம் விட்டுவிட முடியாது.அவர்கள் இறந்தால் அது எப்படி எங்கு நடந்தது என்பதை கூறுவது அவர்களது கடமை என்றார்.
நிகழ்வில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன், கட்சியின் முக்கியஸ்தர்களான க.
சந்திரகுலசிங்கம்,சு.ஜகதீஸ்வரன், உத்தரியநாதன்,யோகன்,கட்சி தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
நிருபர் வெடியரசன்


கொரனோ வைரஸ் – வீழ்ந்து இறக்கும் மக்கள் video
கொரனோ வைரஸ் – வீழ்ந்து இறக்கும் மக்கள் video
கொரனோ வைரஸ் – வீழ்ந்து இறக்கும் மக்கள்
சீனாவில் இருந்து பரவிய கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி மக்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு அவ்விடத்தேலேயே
வீழ்ந்து இறக்கும் காணொளிகள் வெளியாகி பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளன
அவ்வாறான காட்சிகள் இதோ full video
மருத்துவ மனையில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
மருத்துவ மனையில் இருந்து குதித்து நோயாளி தற்கொலை
இலங்கை -புற்றுநோய் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மருத்துவ மனையின்
மாடியில் இருந்து குதித்து தற்கொலை புரிந்துள்ளார்
ஒன்பது வருடங்களாக இவர் சிகிச்சை பெற்று வந்த பொழுதும் நோயின் தாக்கத்தினால் மன விரத்தி அடைந்த
இவர் இந்த தற்கொலையினை புரிந்துள்ளார் என தெ ரிவிக்க பட்டுள்ளது
விமான நிலையம் செல்ல மக்களுக்கு தடை
விமான நிலையம் செல்ல மக்களுக்கு தடை
விமான நிலையம் செல்ல மக்களுக்கு தடை
இலங்கை கட்டுநாயக்க விமான நிலையம் செல்வதற்கு பொது மக்களுக்கும் தடை விதிக்க பட்டுள்ளது ,
நோயாளர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ள நிலையில் இந்த அவசர தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .
கோர்னோ வைரஸ் தாக்குதலில் சிக்கி இதுவரை சீனாவில் 108 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது
சீனா சென்ற இலங்கை மாணவர்கள்இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் இராணுவம்
சீனா சென்ற இலங்கை மாணவர்கள்இராணுவ முகாமிற்கு அழைத்து செல்லும் இராணுவம்
இலங்கையில் இருந்து சீனாவுக்கு கற்கை நெறிக்கு சென்ற 200 க்கு மேற்பட்ட மாணவர்கள் வெளிநாட்டு அமைச்சின்
ஊடக மீள இலங்கைக்கு திருப்பி அழைக்க பட்டனர் ,இவ்வாறு அழைக்க பட்ட மாணவர்கள் தியத்தலாவ இராணுவ முகாமிற்கு அழைத்து செல்ல படுகின்றனர்
இவ்வாறு அழைத்து செல்ல படும் மாணவர்கள் தீவிர சோதனைக்கு உள்ளாக்க படவுள்ளனர் .
அதன் பின்னரே அவர்கள் தமது குடும்பத்துடன் மீள் இணைய அனுமதிக்க படுவார்கள் என தெரிவிக்க படுகிறது
இராணுவ தளபதிகள் வழக்கை மூடிவிட உத்தரவிட்ட கோட்டா
இராணுவ தளபதிகள் வழக்கை மூடிவிட உத்தரவிட்ட கோட்டா
அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க ஆகியோருக்கு எதிராக மேல்
நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகளால் விசாரிக்கப்படும் வழக்கை இடைநிறுத்துமாறு அரசியல்
பழிவாங்கல்கள் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழு, சட்டமா அதிபருக்கு அறிவித்துள்ளது.
அரசியல் பழிவாங்கல்கள் காரணமாக தமக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளால் பல் வேறு
அசௌகரியர்களை எதிர்நோக்கியுள்ளதாக அட்மிரல் வசந்த கரன்னாகொட மற்றும் ரியர் அட்மிரல் டி.கே.பி. தசநாயக்க
ஆகியோர் முன்வைத்த முறைப்பாடு குறித்து கவனம் செலுத்திய பின்னர் இந்த உத்தரவை பிறப்பித்தாக ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
சீனாவில் இருந்து இலங்கை திரும்பிய 200 மாணவர்கள்
சீனாவில் இருந்து இலங்கை திரும்பிய 200 மாணவர்கள்
சீனாவில் கற்கை நெறி மேற்கொள்ள சென்றிருந்த சுமார் 200 மாணவர்கள் அங்கிருந்து தற்போது தாய் நாட்டுக்கு மீள
திருப்தி அழைக்க பட்டுள்ளனர் .
இந்த கொர்ன வைரஸ் தாக்குதலில் சிக்கி சீனாவில் இதுவரை நூற்றி ஆறு பேர் பலியாகியுள்ளனர் .
இதனை அடுத்தே இந்த மாணவர்கள் அவசர அவசரமாக நாட்டுக்கு மீள் அழைக்க பட்டுள்ளனர்
விபத்தில் சிக்கிய வாகனம் – சாரதி தப்பி ஓட்டம்
விபத்தில் சிக்கிய வாகனம் – சாரதி தப்பி ஓட்டம்
ஹட்டன், பொகவந்தலா பிரதான வீதியில் டிக்கோயா நகரை அண்மித்த வனராஜா பகுதியில் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து
கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
அக்கரபத்தனையில் இருந்து நோர்வூட் பகுதியை நோக்கி பயணித்த கனரக வாகனமே இவ்வாறு நேற்று இரவு 09 மணி
அளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
வாகனத்தை செலுத்திய சாரதி தலைமறைவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்ததுடன், அதிக வேகமே விபத்துக்கான
காரணம் எனவும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்தும் 20வது சலங்கை பரதவிழா 16.02.2020
தமிழர் புனர்வாழ்வுக் கழகம் பிரான்ஸ் நடாத்தும் 20வது சலங்கை பரதவிழா 16.02.2020 நடைபெற ஏற்பாடாகியுள்ளது.
சலங்கை பரதவிழா 16.02.2020 அன்று பகல் பன்னிரெண்டு மணிக்கு ஒல்னே சுபுவா ( Aulnay-sous-Bois ) நகரசபை
விளையாட்டரங்க மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெறவுள்ளது. இவ்விழாவில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
இந்நிகழ்வின் விளம்பர பிரசுரத்தைஇ தமது இணையத்தளத்தில் பிரசுரித்து உதவுவதோடு தமது ஊடக
நண்பர்களுக்கும் அறியத்தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
தங்களின் சேவையினை மதித்து தங்கள் கரங்களை இறுகப்பற்றிக்கொள்கின்றோம்.
நன்றி
செ.சுந்தரவேல்
ஒன்றிணைவோம் சேவை செய்வோம்
தமிழர் புனர்வாழ்வுக்கழகம் பிரான்ஸ் full video


வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர்-கோட்டபாயவின் தொடரும் வேட்டை photo
வவுனியா மாவட்ட அரசாங்க அதிபராக மீண்டும் சிங்களவர்-கோட்டபாயவின் தொடரும் வேட்டை photo
வவுனியா மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக
சிங்களவர் ஓருவர் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த வகையில்
எஸ்.எம்.சமன்பந்துலசேன இன்று பதவியேற்றுக்கொண்டார்.
வவுனியா முன்னாள் அரசாங்க அதிபர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் மாலை
அணிவித்து புதிய அரசாங்க அதிபர் வரவேற்கப்பட்டிருந்தார்.
தேசியக்கொடியேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வுகளில் நான்கு மதங்களையும் சேர்ந்த மதகுருமார் ஆசிகளை
வழங்கியிருந்தனர். இதனையடுத்து முன்னாள் அரசாங்க அதிபரின் வரவேற்புடன் புதிய அரசாங்க அதிபர் தனது
கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆவணங்களில் கையொப்பமிட்டு ஆரம்பித்திருந்தார்.
இதன் போது முன்னாள் அரசாங்க அதிபருடன் ஐ.எம் கனீபா வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.
திரேஸ்குமார், உட்பட மாவட்ட செயலக அதிகாரிகள், புதிய அரசாங்க அதிபரின் உறவினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.video
நிருபர் – வெடியரசன்



வவுனியாவில் இராணுவத்தால் 11 பேர் கைது- பீதியில் மக்கள் photo
வவுனியாவில் இராணுவத்தால் 11 பேர் கைது- பீதியில் மக்கள் photo
வவுனியாவில் ஏ9 வீதியில் இராணுவமும், பொலிஸாரும் இணைந்து மோப்பநாய் சகிதம் சோதனை
நடவடிக்கையினை கடந்த இரு தினங்களாக மேற்கொண்டிருந்தனர்.
வவுனியா புளியங்குளம், ஓமந்தை மற்றும் அதனையண்டிய பகுதிகளிலேயே இவ்வாறு அதிகளவான பொலிஸாரும்
இராணுவமும் இணைந்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளதுடன் சந்தேகத்திற்கிடமான வீதியால் செல்லும் பேரூந்துகள்
மற்றும் வாகனங்களும் நிறுத்தி சோதனை செய்யப்பட்டிருந்ததுடன் மோப்ப நாயின் மூலமும்
சோதனையினை மேற்கொண்டிருந்தனர்.
இவ் நடவடிக்கையில் 33கிலோகிராம் கஞ்சா, 35 முதிரை பலகைகள் அத்தோடு பதினொரு பேர் கைது
செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரு தினங்களாக புளியங்குளம், ஓமந்தை அண்மித்து பகுதியில் இரவு பகலாக இராணுவத்தினரும் பொலிஸாரும்
இணைந்து மேற்கொண்ட சோதனையிலே பதினொரு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நிருபர் – வெடியரசன்






மருத்துவர் மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிவமோகன் MP video
மருத்துவர் மோகனுக்கு இறுதி அஞ்சலி செலுத்திய சிவமோகன் MP video
லண்டனில் மரணமடைந்த மருத்துவர் மோகனின் மரண இறுதி நிகழ்வில் வைத்திய கலாநிதியும் ,தமிழ் தேசிய
கூட்டமைப்பின் பாராளும்னற உறுப்பினருமான வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு தனது இறுதி அஞ்சலியை செலுத்தினார்
இந்த இறுதி நிகழ்வில் நூற்றுக்கணக்கான மாக்கள் கலந்து கொண்டு மலர் தூவி தமது அஞ்சலியை செலுத்தினர்
அதன் காணொளிகள் கீழ் video
நன்றி – சிவா
பிலிப்பைன்ஸ் போர் கப்பல்கள் 2 இலங்கை வந்தன,
பிலிப்பைன்ஸ் போர் கப்பல்கள் 2 இலங்கை வந்தன,
பிலிப்பைன்ஸ் நடத்துக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் தரித்து
நிற்கின்றன
இரு நாடுகளுக்கு இடையிலான பாதுகாப்பது ,மற்றும் ஒத்துழைப்பும் தொடர்பிலும் ,இரு நாட்டு கடல்
படைகளுக்கு இடையிலான பயிற்சிகளிலும் இவர்கள் ஈடுபடவுள்ளனர்
மேலும் விசேட ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விளையாட்டு கலாச்சார நிகழ்விலும் இவர்கள் பங்கு பெற்றவுள்ளார்
என தெரிவிக்க படுகிறது acciden video
கொழும்பு நோக்கி பயணித்த யாழ் பேரூந்து இராணுவத்தால் திடீர் சோதனை
கொழும்பு நோக்கி பயணித்த யாழ் பேரூந்து இராணுவத்தால் திடீர் சோதனை
வடக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேரூந்துகள் அனைத்தும் விசேட
காவல்த்துறை மற்றும் ,இராணுவத்தால் வவுனியா புளியங்குளம், ஓமந்தை, நொச்சிமோட்டை மற்றும் இரட்டை
பெரியகுளம் ஆகிய பகுதிகளில் வீத தடைகளை ஏற்படுத்தி இந்த சோதனை நடவடிக்கை நடைபெற்றன
இதில் போதைவஸ்துக்கள் கடத்தப்படுவதாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே இந்த சோதனை
இடம்பெற்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்த்துள்ளனர் .
பலமணி நேரமாக இந்த சோதனை இடம்பெற்றது ,. பயணிகள் இதனால் பீதியில் உறைந்தனர் .fire video
முன்னாள் போராளியை கைது செய்ய விடமாட்டேன் கருணா முழக்கம்
முன்னாள் போராளியை கைது செய்ய விடமாட்டேன் கருணா முழக்கம்
இலங்கையில் -இலங்கை அரசுக்கு எதிராக விடுதலை வேண்டி போராடி வந்த தமிழீழ விடுதலை புலிகளை காட்டி
கொடுத்து அந்த அமைப்பை முற்றாக அழித்த தேச துரோகி கருணா ,தற்போது தான் முன்னாள் போராளிகளை
இலங்கை அரச படைகள் கைது செய்து சிறையில் அடைக்க விடுவேனா என முழங்கியுள்ளார் .
போராளிகளை மீளவும் ம் தனது படையில் இணைகிறார் என தெரிவித்ததை அடுத்து மேற்படி குற்ற சட்டடை
கருணா முன் வைத்துள்ளார்
தேர்தலில் வென்றிடவும் ,கூட்டமைப்பிற்கு களங்கத்தை உருவாக்கவும் கருணா இவ்வாறான செயலில் ஈடுபட்டு
வருகின்றமை குறிப்பிட தக்கது video
மோசடி குற்ற சாட்டில் -விமல் மீது நீதிமன்ற விசாரனை
மோசடி குற்ற சாட்டில் -விமல் மீது நீதிமன்ற விசாரனை
இலங்கையில் ஆளும் கோட்டபாயவின் செல்வாக்கு மிக்க ஒருவராக விளங்கி வரும் விமல் வீரவன்சா மீது
சட்டவிரோதமாக சொத்து சேர்த்த ,மற்றும் மோசடி செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கும் வரும் மாதம் 12 ம்
திகதி இடம்பெற உள்ளது .
இந்த நீதிமன்றில் இவர் முன்னிலையாகும் பொழுது கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
அதன் பின்னர் உரிய முறையில் குற்ற சாட்டுக்கள் சமர்ப்பிக்க படவில்லை என கோரி வழக்கு தள்ளுப்படி
செய்ய பட்டு அதன் ஊடக இவர் விடுதலை செய்யப்படும் வாய்ப்பு உள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளனர் video
தீயில் எரிந்த கடை,வாகனங்கள் -கண்ணீரில் முதலாளி
லிந்துலை, பாமஸ்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வன்பொருள் கடை (ஹாட்வெயார்), மரத் தளபாட கடை,
கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக
லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.
இத்தீ விபத்து நேற்று (26) இரவு 10 மணி அளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பாமஸ்டன்
பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள வன்பொருள் கடை (ஹாட்வெயார்),
மரத் தளபாட கடை, வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன், கடைக்கு முன்பாக நிறுத்தி
வைக்கப்பட்டிருந்த லொறியும் தீக்கிரையாகியுள்ளது.
லிந்துலை பொலிஸார், மற்றும் பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர்,
தலவாக்கலை மற்றும் நுவரெலியா இராணுவத்தினர், இராணுவத்தின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் தீயை
தீயில் எரிந்த கடை,வாகனங்கள் -கண்ணீரில் முதலாளி
கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 6 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.
எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.
தீக்கிரையாகிய இவை அனைத்தும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானதாகவும், சம்பவம் இடம்பெற்ற வேளை
உரிமையாளர் இல்லை எனவும், அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்ததாகவும், எனினும் அவர்களை எந்தவித
காயங்களும் ஏற்படாமல் காப்பாற்றியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.accident video

புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ படங்கள் உள்
புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ
புஸ்ஸல்லாவில் கடைதொகுதியில் தீ மக்களின் உதவியுடன்
கட்டுப்பாடு தீ அணைக்கும் வாகனம் வரவில்லை
கண்டி மாவட்டம் உடபளாத்த பிரதேசத்திற்கு உட்பட்ட புஸ்ஸல்லாவயில் கடைதொகுதி ஒன்றில் ஏற்பட்ட தீ
காரணமாக கடை ஒன்று முற்றாக தீக்கு இறையாகி உள்ளது இன்று (25) மாலை ஏற்பட்ட இந்த சம்பவத்தை தொடர்ந்து பொது மக்களின் உதவியுடன் இந்த தீ கட்டுபாட்டுக்கு
கொண்டு வரப்பட்டது. தீயனைக்கும் வாகனம் இந்த பிரதேசத்தில் இல்லை கண்டியில் இருந்தே வரவேண்டும்.
தகவல் கொடுத்தும் அதுவும் வரவி;ல்லை. அங்குராங்கெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ வீபத்து காரணமாக அங்கு சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இருந்தும்
புஸ்ஸல்லாவ பொது மக்களும் இளைஞர்களும் ஒன்றினைந்து தீயை கட்டுபாட்டக்குள் கொண்டு வந்த அதே நேரம் ஏனைய கடைகளுக்கும் தீ பரவாமல்
தடுத்துவிட்டனர். இவர்களின் துரித சேவை பாராட்டுக்குரியது. தீக்கு இறையான கடையின்
பெறு மதிமிக்க பொருட்களும் தீக்கு இறையானது வேதனைக்குரிய ஒன்றாகும்.





லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video
லண்டனில் புதுக்குடியிருப்பு பழைய மாணவர் கலை விழா – video
நேற்று சனிக்கிளை பிரிட்டன் -லண்டன் லூசியம் சிவன் ஆலய மண்படத்தில் புதுக்குடியிருப்பு மகாவித்தியாலய
பழையமாணவர் ஐக்கியராச்சியம் ,என்ற அமைப்பினரால் ஏற்பாடு செய்ய பட்ட கலை விழா நிகழ்வுகள் இடம்பெற்றன .
இதில் ஆடல் ,பாடல் ,பேச்சு,கவிதை,என தமிழர் கலாச்சார விழுமியங்களை தொட்டு இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன .
மேற்படி நிகழ்வில் சிறப்பு விருந்தினராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாரளுமன்ற உறுப்பினரும் ,வைத்திய
கலாநிதியுமான சிவமோகன் அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார் .
மண்டபம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் மேற்படி நிகழ்வு இடம்பெற்றது ,மிகவும் ஒன்றுபட்ட நிலையில் ,தமதுகுடும்ப
நிகழ்வு போன்று ஒவொரு மக்களும் கலந்து கொண்டு சிறப்பித்ததை கண்டு வியந்தோம் .
கடல் கடந்து வந்த பொழுதும் ,மொழியையையும் ,அதன் கலாச்சாரத்தையும் மறவாது தொடர்ந்து பேணி காக்கும்
செயலில் இங்கு பிறந்து வளர்ந்த எமது சிறுவர்கள் ,இளையவர்கள் ஈடு பட்டதை காண முடிந்தது .
தலைவர் ,செயலர் சிறப்புரைகளை தொடர்ந்து சிறப்பு விருந்தினரும் தமது உரையினை ஆற்றினார் ,
அதில் சங்கத்தின் தோற்றம், நலன் ,மக்கள் ஒருமைப்பாடு,மற்றும் தேசிய அரசியல் தொடர்பாகவும் அவரது பேச்சு விரிந்து பரந்து சென்றது .
மிக ஆளுமைகள் கூடிய நெறிப்படுத்திய நிகழ்வு இனிதே மறு மலர்ச்சியுடன் நிறைவு பெற்றது .
அங்கு நிகழந்த நிகழ்வுகளின் காட்சி தொகுப்புகளில் சில ….
- வன்னி மைந்தன் –

















