தீயில் எரிந்த கடை,வாகனங்கள் -கண்ணீரில் முதலாளி

Spread the love

லிந்துலை, பாமஸ்டன் பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் வன்பொருள் கடை (ஹாட்வெயார்), மரத் தளபாட கடை,

கடைக்கு முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி மற்றும் வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளதாக

லிந்துலை பொலிஸார் தெரிவித்தனர்.

இத்தீ விபத்து நேற்று (26) இரவு 10 மணி அளவில் ஏற்பட்டுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்தனர்.

லிந்துலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் லிந்துலை பாமஸ்டன்

பகுதியில் வீதிக்கு அருகாமையில் உள்ள ஒரே கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள வன்பொருள் கடை (ஹாட்வெயார்),

மரத் தளபாட கடை, வீடு ஆகியன முற்றாக எரிந்து சாம்பலாகியதுடன், கடைக்கு முன்பாக நிறுத்தி

வைக்கப்பட்டிருந்த லொறியும் தீக்கிரையாகியுள்ளது.

லிந்துலை பொலிஸார், மற்றும் பிரதேச பொது மக்கள், நுவரெலியா மாநகர சபையினரின் தீயணைப்பு பிரிவினர்,

தலவாக்கலை மற்றும் நுவரெலியா இராணுவத்தினர், இராணுவத்தின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் தீயை

தீயில் எரிந்த கடை,வாகனங்கள் -கண்ணீரில் முதலாளி

கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 6 மணித்தியாலயங்களுக்கு பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

எனினும் பொருட்கள் மற்றும் ஆவணங்கள் என அனைத்தும் தீக்கிரையாகியுள்ளன.

தீக்கிரையாகிய இவை அனைத்தும் ஒரே உரிமையாளருக்கு சொந்தமானதாகவும், சம்பவம் இடம்பெற்ற வேளை

உரிமையாளர் இல்லை எனவும், அவரின் மனைவி மற்றும் பிள்ளைகள் இருந்ததாகவும், எனினும் அவர்களை எந்தவித

காயங்களும் ஏற்படாமல் காப்பாற்றியுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.accident video

தீயில் எரிந்த கடை
தீயில் எரிந்த கடை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *