Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இலங்கையில் கொரனோ பரவல் – மறைக்கும் கோட்டா அரசு
இலங்கையில் கொரனோ பரவல் – மறைக்கும் கோட்டா அரசு
உலக நாடுகளை ஆட்டி படைத்தது வரும் கொரனோ வைரஸ் இலங்கையிலும் அதிகம் பரவியுள்ளது ,எனினும் அதனை ஆளும் அரசு திட்டமிட்டு மூடி மறைத்து வருகிறது .
தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் மக்கள் ஒன்று கூடி வாக்களிக்க மாட்டார்கள் என்ற நிலையிலும் இதனால் ஆளும் அரசுக்கு
நெருக்கடி ஏற்படும் என்ற வகையிலும் இதன் தாக்குதல்கள் மறைக்க படுகிறது
இலங்கையின் பல முக்கிய மருத்துவ மனைகளில் பணிசெய்யும் முக்கிய மருத்துவர்கள் ஊடக இந்த தகவல்கள் கசிந்துள்ளது
இலங்கையில் சீனா நாட்டவர்கள் 42 ஆயிரம் பேர் உள்ளனர் ,இவர்கள் அனைவரும் இலங்கையில் பல்வேறு பட்ட கட்டுமான பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்
சீனர்கள் உள்ள நாடுகளில் அதிகம் இந்த நோய் பரவியுள்ளது ,ஆனால் தொடர்ந்தும் இலங்கை இதனை மறைத்து வருகிறது ,இதன்
தாக்கம் விரைவில் தெரியவரும் ,அப்பொழுது ஆளும் அரசு அதே சிங்கள மக்களினால் வெறுத்து ஒதுக்க படும் நிலை ஏற்படலாம் என்பதை இதன் மூலம் கண்டு கொள்ள முடியும் .
இந்த நோய் தாக்கத்தை முஸ்லீம்கள் ,மற்றும் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் பரப்பும் நகர்வில் சிங்களம் ஈடுபடும் என்ற அச்சம் மக்கள் மத்தியில் மேலோங்கியுள்ளது
தமிழர்களே உஷாராகுங்கள் ,விடயம் திசை மாறுகிறது ,ஆபத்து உங்களை நெருங்கிவருகிறது ,

முட்டாள் வேலை பார்த்த கூட்டமைப்பு – போட்டு தாக்கும் விக்கியார்
முட்டாள் வேலை பார்த்த கூட்டமைப்பு – போட்டு தாக்கும் விக்கியார்
இலங்கையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழர் கட்சிகள் கண்மூடித்தனமாக ரணில் கட்சியை ஆதரித்து செயல்
பட்டதன் விளைவே இன்று இலங்கையில் இரத்த காட்டேறிகள்
ஆட்சியில் அமர்ந்துள்ளதற்கான காரணம் என விக்கியார் முழங்கியுள்ளார்
இவர் தலைமையில் கூட்டமைப்பிற்கு எதிராக புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்து அதன் ஊடாக தேர்தலில் களம் இறங்க உள்ள
நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இழிநிலை செயல்களை விரிவாக படம் பிடித்து காட்டியுளளார்
இவரது இந்த பேச்சுக்கள் நியாமான அரசியல் தெளிந்த பார்வையுள்ள கருத்தாக அவதானிகள் தெரிவித்து வருகின்றனர்

இலங்கை வந்தடைந்த அவுஸ்ரேலியா போர்க் கப்பல்
இலங்கைவந்தடைந்த அவுஸ்ரேலியா போர்க் கப்பல்
அவுஸ்ரேலியா நாட்டின் HMAS Parramatta என்ற போர்க் கப்பல் இலங்கையை வந்தடைந்துள்ளது .
இரு நாடுகளுக்கு இடையிலான போர் பயிற்சிகளில் ஈடுபடவே இந்த கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துளளது
இலங்கையில் உள் நாட்டு போர்முடிவடைந்த நிலையில் பல் நாட்டு கடற்படை கப்பல்கள் தொடராக இலங்கை வந்து செல்வது வழமையான ஒன்றாக மாறியுள்ளமை குறிப்பிட தக்கது

பிரிட்டனில் கொரனோ 206 பேர்பாதிப்பு -21,460 பேர் சோதனை
பிரிட்டனில் கொரனோ 206 பேர்பாதிப்பு -21,460 பேர் சோதனை
பிரிட்டனில் தற்போது பறவை வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கு இதுவரை 206 பேர் பாதிக்க பட்டுள்ளனர் .ஒரே
நாளில் சுமார் 43 பேர் இந்த நோயால் பாதிக்க பட்டுள்ளனர் .
மொத்தம் 21,460 பேர் மீது இந்த சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர் .குறித்த நாட்டு அரசு மக்கள் பீதியடைந்து
விடுவார்கள் என தகவலை மறைப்பதாக மக்கள் மத்தியில் பரவலாக பேச படுகிறது ,இதன் எண்ணிக்கை இரண்டாயிரத்தை எட்டி பிடிக்கும் என நம்ப படுகிறது
இவர்கள் வெளி விடும் எண்ணிக்கை போன்றே சீனாவிலும் அறிவிக்க பட்டு இன்று பல ஆயிரம் பேரை அது எட்டி தொட்டுள்ளது
.வடகிழக்கு ,மற்றும் வட தெற்கு பகுதியில் அதிகம் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது

குவைத் இலங்கைக்கு இடையில் விமான சேவை திடீர் இரத்து – பயணிகள் அவதி
குவைத் இலங்கைக்கு இடையில் விமான சேவை திடீர் இரத்து –
பயணிகள் அவதி
இலங்கைக்கும் குவைத் நாட்டுக்கும் இடையிலான பயணிகள்
விமான போக்குவரத்து திடீரென
இரத்து செய்ய பட்டுள்ளது ,இந்த விமான பயணங்கள் திடீரென
இரத்து செய்ய பட்ட நிலையில்
பயணிகள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர் .
கொரனோ வைரஸ் நோய் பரவல் அதிகரித்துள்ள நிலையில் இந்த
விமான பயணங்கள் திடீர் இரத்து
செய்யப் பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

தமிழ் வேட்பாளர்கள் வெல்லபோவதில்லை: முன்னாள் எம்.பி வினோ
தமிழ் வேட்பாளர்கள் வெல்லபோவதில்லை: முன்னாள் எம்.பி வினோ
வன்னியில் தேசியகட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் நிச்சயம் வெல்லபோவதில்லை. அது அவர்களிற்கும் நன்கு தெரியும்
என்று முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்களுக்காக உருவாக்கப்பட்ட ஒரு மக்கள் இயக்கம். அந்த இயக்கம் மக்களின் ஆதரவினால் இன்று வரை கட்டிகாக்கபட்டு வருகின்றது. நிச்சயமாக தமிழ் தேசிய
கூட்டமைப்பு தமிழ் மக்களுக்கு துரோகம் செய்யாது. தமிழ் மக்களுக்கு சரியான ஒரு தீர்வினை காணுவதற்கு அவர்களின்
வழிகாட்டியாக அது என்றும் இருக்கும். அதிலிருந்து சிலர் விலகி சென்றிருக்கிறார்கள். அது என்ன நோக்கத்திற்காக என்பது
அனைவருக்கும் தெரியும். அரசியல் காரணங்களுக்காக நிச்சயமாக அவர்கள் செல்லவில்லை. தேர்தல் ஆசனபங்கீட்டு
பிரச்சினையினாலேயே கயேந்திரகுமார் அன்று பிரிந்து சென்றிருந்தார்.
அதுபோல ஆனந்தசங்கரி ஈபிஆர்எல்எப் போன்ற கட்சிகள் பல காரணங்களுக்காக பிரிந்து சென்றிருக்கின்றார்கள். ஆனால்
கூட்டமைப்பு தற்போதும் பலமான ஒரு சக்தியாக மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் பயணித்துக்கொண்டு வருகிறது.
நாம் தெற்கின் சக்திகளுக்கோ அல்லது சர்வதேசத்திற்கோ எமது பலத்தை நிரூபித்துகொண்டே இருக்க வேண்டும். அப்போது தான்
எமது பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அவர்கள் முயற்சி எடுத்துக்கொண்டு இருப்பார்கள். எமது பலம் அற்று போனால்
பிரச்சினைகளை தீர்பதற்கு அவர்கள் முன்வரப்போவதில்லை. எனவே வரப்போகும் தேர்தலில் உங்களின் பலத்தை முழுமையாக
பயன்படுத்த வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கின்றேன். முன்னைய காலங்களிலும் மக்கள் எம்மோடு
பயணித்திருக்கின்றீர்கள். அது தொடரவேண்டும் என்பது தான் எமது அன்பான வேண்டுகோள்.
இந்த தேர்தலில் பல சுயேட்சைகுழுக்கள் தேசியகட்சிகள் உங்களின் வாக்கை கவருவதற்காக வருவார்கள். உதாரணமாக பிரபா
கணேசனுக்கும் வன்னி மாவட்டத்திற்கும் என்ன சம்மந்தம் அவர் கொழும்பிலே அரசியல் செய்தவர். அவர் இங்கு போட்டி இடுவதற்கு
தயாராகின்றார். அது போல முன்னாள் முதலமைச்சர் தலைமையிலான அணி இங்கு போட்டியிட இருக்கிறது. அவருக்கு ஒரு கட்சிதேவையில்லை. இங்கே கட்சி ஆரம்பிக்க வேண்டிய
அவசியம் அவருக்கு நிச்சயம் இல்லை. அவர்களை ஏன் நாங்கள் புறக்கணிக்ககூடாது. அவர்கள் கொள்கை இல்லாத நிலையிலேயே
பயணிக்கின்றார்கள். அதனாலேயே அவர்களிற்குள்ளேயே ஒற்றுமை இல்லாமல் புதிய புதிய அணிகளை
உருவாக்குகின்றார்கள். அதுபோல சிங்கள கட்சிகள் தமிழ்வேட்பாளர்களை களம் இறக்குகின்றார்கள்.
தேசிய கட்சிகளில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர்கள் வெல்லபோவதில்லை. அது அவர்களிற்கும் தெரியும். இதுவெல்லாம்
எமது வாக்குகளை சிதறடிப்பதற்காகவே. எனவே மக்கள் நிதானமாக சிந்திக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

சுமந்திரனுக்காக இரு பெண்கள்
சுமந்திரனுக்காக இரு பெண்கள்
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு சவால் மிக்கதாக மாறியுள்ளது. தமிழ் தேசியக்
கூட்டமைப்பின் செயற்பட்டால் தமிழ் மக்கள் அக் கட்சி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த நிலையில் கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னனியும், முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
தலைமையிலான தமிழ் மக்கள் கூடடனியும் கூட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக மாறியுள்ளது.
அதிலும் தமிழழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து வரும் எம்.ஏ.சுமந்திரன் அவர்களின் வெற்றியுனள்
கேள்விக்குள்ளாகியுள்ள நிலையில் தனது இருப்பை தக்க வைக்க இரு பெண்களை யாழில் சுமந்திரன் களமிறக்கியுள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் அவர்களின் மனைவி ஒருவர். மற்றவர் இலங்கை மனிதவுரிமை ஆணைக்குழுவின்
உறுப்பினர்களில் ஒருவரான அம்பிகா சற்குணநாதன். இவர்கள் இருவரும் சுமந்திரனின் வெற்றிக்காபக பயன்படுத்தப்படவுள்ளதாக
யாழ் வாக்காளர்கள் தெரிவிக்கின்றனர். ரவிராஜ் அவர்களின் மனைவி புரியாது பலிகடாவாகியுளளார்.
இரண்டாவது அம்பிகா சற்குணநாதன் ஒரு மாதட கூட யாழில் வசிக்காத நிலையில் சுமந்திரனின் நெருக்கம் காரணமாக
இடம்பிடித்துள்ளார். அவரை வைத்து சுமந்த்pரன் என்ன செய்யளப் போகின்றார் என்பதை வாக்களார்கள் பார்த்து பரிந்து கொள்வார்கள் என்கின்றனர் அவதானிகள்.
வவுனியா பிரதேச செயலாளர் மடைத் தனப் பேச்சு என போர்க்கொடி தூக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள்
வவுனியா பிரதேச செயலாளர் மடைத் தனப் பேச்சு என போர்க்கொடி தூக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள்
வவுனியா பிரதேச செயலாளரின் கருத்தால் வவுனியா தெற்கு வலய உடற்கல்வி ஆசிரியர்கள் விசனத்திற்குள்ளாகியுள்ளனர்.
வவுனியா கோட்ட மட்ட விளையாட்டுப்போட்டி இடம்பெற்ற போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு வவுனியா பிரதேச செயலாளர்
வெளியிட்ட கருத்தினாலேயே உடற்கல்வி ஆசிரியர்கள் இந் நிலைக்குள்ளாகியுள்ளதாக உடற்கல்வி ஆசிரியர்கள் சிலர் தெரிவித்தனர்.
வவுனியா நகரசபை மைதானத்தில் வவுனியா பாடசாலைகளுக்கிடையிலான கோட்ட விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றது.
இதன்போது பிரதம அதிதியாக கலந்துகொண்டு வவனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன் விளையாட்டு ஆசிரியர்கள்
விளையாட்டு துறையில் அக்கறை காட்டுவதில்லை எனவும் பாடசாலை விளையாட்டுப்போட்டிகள் முடிவடைந்ததன் பின்னர்
உடற்கல்வி ஆசிரியர்களையும், மாணவர்களையும் மைதானத்தில் காணக்கிடைப்பதில்லை என தெரிவித்ததுடன் இதன்
காரணமாகவே விளையாட்டு துறை வளர்ச்சி அடையாது காணப்படுவதாகவும் தெரிவித்ததாக விளையாட்டு துறை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
இந் நிலையில் பிரதேச விளையாட்டுப்போட்டிகளுக்கு பாடசாலை மாணவர்களை வைத்தே போட்டிகளை நடத்தும் பிரதேச
செயலகங்கள் விளையாட்டுத்துறை ஆசிரியர்களின் உதவியையும் பெறுகின்ற நிலையில் பிரதேச செயலாளரின் கருத்தை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்ததுடன் இனி
வருங்காலத்தில் பிரதேச மட்ட போட்டிகளுக்கு தமது ஆதரவை வழங்குவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை
அவுஸ்ரேலியாவில் வசிக்கும் தமிழர்களுக்கு அவசர எச்சரிக்கை
உலகின் 91 நாடுகளில் கொரனோ வைரஸ் பரவியுள்ள நிலையில் அவுஸ்ரேலியாவில் வசிக்கும் இலங்கையர்களை
அங்குள்ள இலங்கை தூதரகத்தில் தமது பெயர்களை பதிவு செய்து கொள்ளும் படி இலங்கை அரசு அவசர வேண்டுதல் விடுத்துள்ளது
இந்த நோயின் தாக்கம் அதிகரித்தால் அவர்களை இலங்கைகைக்கு பாதுகாப்பபாக அழைத்து வரும்
முன்மாதிரி நடவடிக்கை திட்டம் இதுவென தெரிவிக்க பட்டுள்ளது
இந்த சந்தர்ப்பத்தில் அங்குள்ள தமிழர்களை தரவுகளை பெற்று கொள்வதும் ,அவர்களை நாடு கடத்தும் முயற்சியில் இலங்கை ஈடுபட்டுள்ளதை இது காண்பிக்கிறது

மரங்கடத்தும் கும்பல்; மடக்கிய பொலிசார்
மரங்கடத்தும் கும்பல்; மடக்கிய பொலிசார்
வவுனியா புதூர் பகுதியில் சட்டவிரோதமாக முதிரை மரகுற்றிகளை கடத்த முற்பட்ட இருவர் தப்பித்து சென்றுள்ளதாகவும் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
புதூர் காட்டு பகுதியில் முதிரைமரக்குற்றிகள் கடத்த இருப்பதாக புளியங்குளம் பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து புளியங்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி பேர்ணான்டு தலைமையிலான பொலிஸ் குழுவினர் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது கடத்த தயாராக இருந்த 15 முதிரை மரக்குற்றிகளும், மரம் அறுக்கும் இயந்திரம், கோடரி, கத்தி மற்றும் பஜாஜ் ரக மோட்டார் சைக்கிள் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளன.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் பொலிசாரின் வருகையையடுத்து அங்கிருந்து தப்பியிருந்ததாகவும் ஒருவரை கைது செய்துள்ளதாகவும் தப்பிச் சென்ற இருவரையும் கைது செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றத்தில் முற்படுத்தவுள்ளதாகவும் புளியங்குளம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
புலிகள் தாக்குதல் நடத்த திட்டமாம் – வட,கிழக்கில் இராணுவம் குவிப்பு
புலிகள் தாக்குதல் நடத்த திட்டமாம் – வட,கிழக்கில் இராணுவம் குவிப்பு
இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் இலங்கை இராணுவத்தினர் பெரும் தொகையில் குவிக்க பட்டுள்ளனர்
.தமிழீழ விடுதலை புலிகள் மீண்டும் தாக்குதல் நடத்த கூடும் என்ற அச்சத்தின் காரணமாக இந்த படை குவிப்பு இடம்பெற்றுள்ளதாம் .
முன்னாள் போராளிகள் சிலர் கைது செய்ய பட்ட நிலையில் கிடைக்க பெற்ற தகவலை அடுத்தே இந்த இராணுவ குவிப்பு இடம்பெற்றுள்ளது
ஆளும் மகிந்த சகோதரர்கள் ஆட்சியில் ஆண்டு தோறும் இவ்வாறான செயல் பாடுகள் தமிழர் பகுதிகள் மீது சிங்கள அரச பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடுவது குறிப்பிட தக்கது

600 கிலோ போதைவஸ்தை கடத்திய மாஸ்ட்டர் மைண்ட் சரண்
600 கிலோ போதைவஸ்தை கடத்திய மாஸ்ட்டர் மைண்ட் சரண்
இலங்கை கடற்படையால் படகிலம் கடத்தி வரப்பட்ட அறுநூறு கிலோ போதைவஸ்துடன் படகு ஒன்று மடக்கி
பிடிக்க பட்டது ,மேற்படி படகில் போதைவஸ்து கடத்தலை மேற்கொண்ட நபரை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டனர் .
இவர்கள விடுத்த வேண்டுதலுக்கு இணங்க அதன் முக்கிய மூளையாக செயல் பட்ட நபர் ஒருவர் காவல்துறையில்
சரண் அடைந்துள்ளார் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
இவ்வாறு சரண் அடைந்தவரிடம் தீவிர விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகிறது .
இந்த கடத்தல் பின்புலத்தில் செயல் பட்ட யாவரும் கைது செய்ய படலாம் என நம்ப படுகிறது

கொரோனா வைரஸ் பரவாது தடுக்க நடவடிக்கை எடுக்க – கோட்டா உத்தரவு
கொரோனா வைரஸ் பரவாது தடுக்க நடவடிக்கை எடுக்க – கோட்டா உத்தரவு
கொரோனா வைரஸ் தொற்று நாட்டினுள் பரவாதவாறு தவிர்ப்பதற்கு உரிய விஞ்ஞானபூர்வமான முறைமை
ஒன்றை பின்பற்றுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கொரோனா ஒழிப்பு விசேட செயலணிக்கு பணிப்புரை விடுத்தார்.
அரசாங்கமும் சுகாதாரத்துறை நிபுணர்களும் ஆரம்பம் முதலே மேற்கொண்ட நடவடிக்கையின் காரணமாக
பிராந்தியத்தில் கொரோனா வைரசிற்கு வெற்றிகரமாக முகங்கொடுத்த நாடாக இலங்கை உள்ளது என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்தும் இந்த நிலைமையை பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து
கண்டறியுமாறும் நேற்று (06) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போது ஜனாதிபதி தெரிவித்தார்.
ஈரான், தென்கொரியா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகின்றது. அந் நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருகை
தருகின்றவர்களை 14 நாட்களுக்கு நோய்த்தொற்று தடைகாப்பு செய்ய வேண்டும் என்று செயலணி, ஜனாதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளது.
இதன்மூலம் கொரோனா வைரஸ் பரவும் அபாயமற்ற நாடாக இலங்கையை தொடர்ந்தும் வைத்திருக்க முடியும் என்றும் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
தற்போது முழு நாட்டையும் உள்ளடக்கிய வகையில் பல்வேறு வைத்தியசாலைகளில் சந்தேகத்திற்கிடமான
நோயாளிகள் வெற்றிகரமாக நோய்த்தொற்று தடைகாப்பு நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். கொரோனா
தொற்றுக்குள்ளான எந்தவொரு இலங்கையரும் நாட்டிற்குள் கண்டறியப்படவில்லை. வெளிநாடுகளில் இருந்து வருகை
தருகின்றவர்களுக்கு ஏதேனும் நோய் அறிகுறிகள் இருக்குமானால் அதனை மறைத்துக் கொண்டிருக்காது
சமூகப் பொறுப்புடன் செயற்பட வேண்டியது அவசியமாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
நோய்த் தொற்றுவதை தவிர்ப்பதற்கு மேற்கொள்ளப்படும் சுகாதார நடவடிக்கைகள் குறித்து ஊடகங்களின் வாயிலாக
தொடர்ச்சியாக பிரச்சாரம் செய்ய வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
எதிர்காலத்தில் நோய்த்தொற்று தடைகாப்பு நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டியிருந்தால் அதற்குத்
தேவையான இடங்கள், வளவாளர்கள், வசதிகள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்கு தயாராக இருக்குமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.
மேல் மாகாண ஆளுநர் வைத்தியர் சீத்தா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பீ. ஜயசுந்தர,
சுகாதார அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர்
அணில் ஜாசிங்க ஆகியோரும் கொரோனா ஒழிப்பு விசேட செயலணியின் உறுப்பினர்களும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றினர்.

ரயிலுக்குள் பாய்ந்து யாழில் நபர் தற்கொலை
ரயிலுக்குள் பாய்ந்து யாழில் நபர் தற்கொலை
காங்கேசன்துறையில் இருந்து, கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் புகையிரதத்தின் முன் படுத்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (06) மாலை 6.45 மணியளவில், ஸ்ரான்லி வீதிக்கும், பலாலி வீதி ஆரியகுளம் பகுதிக்குமான
இடையில், யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு அண்மித்த புகையிரத கடவையில் இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் சங்கானை பகுதியைச் சேர்ந்த சுரேஸ் வயது (35) என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,
உயிரிழந்தவர் இலங்கை போக்குவரத்து சேவை (சி.ரி.பி) பஸ் நிலையத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்துள்ளார்.
கடந்த வாரம், மது போதையில் வேலைக்கு சென்ற போது, நிர்வாகத்தினரால் பணி நீக்கம் செய்யப்பட்டதாகவும்,
கடந்த 05 ஆம் திகதியும் தற்கொலை செய்யப் போவதாக முயற்சித்த போது, நண்பர்கள் அவரை தடுத்து காப்பாற்றியதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மது போதையில் தண்டவாளத்தில் படுத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இவ்வாறு ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக கிடைத்த தகவலின் பிரகாரம், ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்தி அறிந்த உறவினர்கள்,
யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்திற்கு வருகை தந்ததுடன், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கும் சென்றுள்ளனர்.

உடைந்தது யனை கட்சி – இரண்டாக போட்டி -வெல்ல போவது யார் ..?
உடைந்தது யனை கட்சி – இரண்டாக போட்டி -வெல்ல போவது யார் ..?
இலங்கை அரசியலில் மிக பெரும் கட்சிகளாகி விவிளங்கி வந்த ஐக்கிய தேசிய கட்சிக்குள் ஏற்பட்ட பதவி போட்டி
காரணமாக அந்த கட்சி இரண்டாக உடைந்த்துள்ளது .
இதில் சஜிதா ,மற்றும் ரணில் தலைமையில் தேர்தல் போட்டி இடம்பெறுகிறது .
இந்த பாராளுமன்ற தேர்தலில் 22 இடஙக்ளில் ஐக்கிய தேசிய கட்சி போட்டியிடும் என ரணில் அணியினர் அறிவித்துள்ளனர் .
அவ்வாறு நோக்கின் ஆசனங்கள் மிக குறைந்த நிலையிலேயே ரணில் கட்சி பெறும் ,இந்த தேர்தலில் பிரிந்து சென்று இரு கட்சிகளாக போட்டியிடும் நபர்களின் பலம்
தெரிய வரும் எனவும் ஒருவேளை சஜித் அணியினர் வெற்றி பெற்றால் ரணில் இருந்த இடம் இல்லாது காணாமல் போகும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது

பிரிட்டனில் கொரனோ வைரஸ் 163 பேர் பாதிப்பு -20,000 பேர் சோதனை
பிரிட்டனில் கொரனோ வைரஸ் 163 பேர் பாதிப்பு -20,000 பேர் சோதனை
பிரிட்டனில் இதுவரை சுமார் 163 பேர் கொரனோ வைரசால் பாதிக்க பட்டுள்ளனர் .
மேலும் இருபதயிரம் பேருக்கு இதன் சோதனை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து இன்று மட்டும் 48 பேர் அடையாளம் காண பட்டுள்ளனர்
எனினும் சீனாவை போல பிரிட்டனில் இரண்டாயிரம் பேர் வரை பாதிக்க பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
தொடர்ந்து தமது எண்ணிக்கையை அதிகரித்து செல்வதும் ,இவ்வளவு பெரும் தொகையில் சோதனை இடம் பெற்றுள்ளதாகக் பிரிட்டன் அறிவித்துள்ளது சநதேகத்தை வலுப்படுத்தியுள்ளது
லூசியம் பகுதி மருத்துவமனையில் இருந்து இவ்வாறு பாத்திக்க பட்டவர்கள் சென்றுள்ளதாக நம்ப படுகிறது
பிரிட்டீஸ் எயார் வைஸ் விமான சிப்பந்திகள் ,ஊழியர்களுக்கும் கொரானோ வைரஸ் உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
மக்களே உசார் ,சீனாவை போல பிரிட்டனும் தற்போது லாக் டவுன் ஆகும் நிலை ஏற்படும் போல் உள்ளது மேற்படி நோயின் புள்ளி விபர தகவல் இதனையே காண்பிக்கிறது

சீனாவுக்கான விமான பயணங்களை இரத்து செய்த்த இலங்கை
சீனாவுக்கான விமான பயணங்களை இரத்து செய்த்த இலங்கை
உலகை பதற வைத்து வரும் கொரனோ வைரஸ் தாக்குதல்
எதிரொலியை அடுத்து இலங்கையில் இருந்து சீனாவுக்கு செல்லும்
அணைத்து விமான சேவைகையும் திடிரென இலங்கை இரத்து
செய்துள்ளது
இது போல மேலும் பல நாடுகள் இரத்து செய்துள்ளன .நோயின்
வேகமெடுக்கும் பரவலை அடுத்தே இந்த பயண தடையை
இலங்கை புரிந்துள்ளது ,வரவேற்க தக்க செயல் என அவதானிகள்
கருத்துரைத்த வருகின்றனர்

பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து விட்டு ஓடிய பெண் – பிரிட்டனில் பயங்கரம்
பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து விட்டு ஓடிய பெண் – பிரிட்டனில் பயங்கரம்
பிரிட்டன் woodland in Hampshire.Southampton பகுதியில் தாயோ
ஒருவர் பிள்ளையை பெற்று பற்றைக்குள் எறிந்து விட்டு சென்ற சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது ,
சிசு சடலமாக மீட்க பட்டுள்ளது ,மேற்படி பெண்ணை
காவல்துறையினர் வலைவிரித்து தேடி வருகின்றனர்
இது போன்ற சம்பவங்கள் பிரிட்டனில் நடப்பது அபூர்வம் .
மிகவும் பிரசவ துறையில் தேர்ச்சி பெற்றே பெண்ணே இந்த சிசுவை
எறிந்து விட்டு சென்றுள்ளார் ,இவர் முன்னர் குழந்தை பெற்ற
அனுபவம் கொண்டவர் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
எனினும் இதுவரை குறித்த பெண் கைது செய்ய படவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்னம் உள்ளது
,மக்களின் உதவியை காவல்துறையினர் நாடியுள்ளனர்

மிரட்டி வரும் கொரோனா வைரஸ்… தமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா!
மிரட்டி வரும் கொரோனா வைரஸ்… தமிழ் மருத்துவரை அழைத்துள்ள சீனா! !
உலக நாடுகளை மிரட்டி வரும் கொரோனா வைரஸ் சிங்கப்பூரையும் அச்சுறுத்தி வருகிறது. அங்குள்ள மக்கள் நோய்
தடுப்புக்காக தமிழர்களின் உணவான ரசம் சமைப்பது குறித்து அங்குள்ள தமிழ் மக்களிடம் கேட்டறிந்து உணவுடன் சேர்த்து வருகிறார்கள்.
நோய்களை கட்டுப்படுத்தும் மிளகு, சீரகம், பூண்டு உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய பொருட்களைக் கொண்டு தயாரிக்கப் படும்
ரசம் அங்குள்ள மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பல நிறுவனங்கள், உணவுடன் ரசத்தை சேர்த்துசாப்பிடுங்கள் என்று அறிவிப்பு பலகைகள் வைத்துள்ளன.
கொரோனா வைரஸ் சித்தமருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என சித்த மருத்துவர்கள் கூறி வருகிறார்கள். இது தொடர்பாக
தமிழகத்தைச் சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தை சீனா வர அந்நாடு அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பான ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
அலோபதி மருந்துகளை விட சித்தா மற்றும் ஆயுர்வேத, ஓமியோபதி மருந்துகள் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதாக பல்வேறு
தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பல்வேறு ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகின்றன.
நோயாளிகளிடையே நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் சித்த மருத்துவ மருந்துகள் முன்னிலை வகிக்கின்றன.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமாக, வைரஸ் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாய்ப்பு உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியர்களின் உணவு வகையில் ஒன்றான ரசம் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக கூறப்படுகிறது. அதில் பூண்டு,
மிளகு, சீரகம் உள்பட பல்வேறு மருத்துவ குணமுடைய மசாலா பொருட்கள் சேர்க்கப்படுவதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை கொடுப்பதாக சிங்கப்பூர் மக்களிடையே நம்பிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து அறிந்த அங்குள்ள உணவுபொருட்கள் விற்பனை நிறுவனங்கள், பொதுமக்கள் உணவில் ரசம் அதிக அளவில்
சேர்க்குமாறு விளம்பரப்படுத்தி வருகின்றன.பல இடங்களில் விளம்பர பதாகைகளும் வைக்கப்பட்டு உள்ளன.
அதுபோன்ற விளம்பர பதாதைகளில், ‘இந்தியர்கள் ஐந்தாயிரம் ஆண்டுகளாக பயன்படுத்தும் ரசத்துக்கு நோய் களை குணமாக்கும் சக்தி உள்ளது.
குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரசம் சாதமே வழங்கி வந்துள்ளனர். இதில் நல்ல பலன் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது.
பொதுவாக ரசத்தில் சேர்க்கப்படும் பூண்டு, மிளகு, சீரகம் போன்ற மசாலா பொருட்களுக்கு மருத்துவ குணம் உள்ள நிலையில், உணவுடன்ரசம் சேர்த்துக் கொள்ளவும்” என அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த அறிவிப்புகள் காரணமாக, சிங்கப்பூர் மக்கள் அங்கு வசிக்கும் தமிழர்களிடம் ரசம் எப்படி சமைப்பது என்பதையும் கேட்டு
அறிந்துகொண்டு, அதனை அருந்தி வருகின்றனர். பலசரக்கு அங்காடிகளில் ரசப்பொடிகள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
பெரும்பாலோனோர் அசைவ உணவுகளை தவிர்த்து காய்கறிளையே சமைத்து உணவருந்தி வருகின்றனர். தங்களின்
உணவுகளுடன் அன்றாடம் ரசம் சாப்பிடுவதையும் வாடிக்கையாகி வருகின்றனர்.
யுடியூப் வலைதளங்களிலும் பல்வேறு வகையான ரசம் வைப்பது எப்படி என தேடி வருவதும் அதிகரித்து வருகிறது.

கரு – ரணில் திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?
கரு – ரணில் திடீர் சந்திப்பு – பேசியது என்ன ..?
இலங்கையின் யானை கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஏமாற்றும் கரு ஜெயசூரியா ஆகியோருக்கு இடையில் திடீர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது
இது கட்சிக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகளை சமரச படுத்தும் நோக்கம் கொண்ட பேச்சாக இவை உள்ளதாக அவதானிகள் தெரிவித்துள்ளன
சஜித் பிரிந்து சென்று கட்சி ஆரம்பித்து தேர்தலை சந்திக்கிறார் இவ்வாறான நிலையில் பெரும் பன்மை பலம் இன்றி யானை கட்சி தவிக்கும் நிலை தோற்றம் பெற்றுள்ளது









