Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஜனாதிபதி பல்லு பிடுங்கும் -21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு
ஜனாதிபதி பல்லு பிடுங்கும் -21 ஆவது திருத்தம் சமர்ப்பிப்பு
நிறைவேற்று அதிகார ஜனாதிபதியின் அதிகாரங்களை கட்டுப்படுத்தும்
அரசியலமைப்பின் 21ஆவது திருத்தம், இன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, வீடியோ மூலம் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றக் கட்சித் தலைவர்களின் அவதானிப்புகளுக்காக திருத்தத்தின் பிரதிகளை விநியோகிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது
இது தொடர்பில் வெள்ளிக்கிழமை (27) கலந்துரையாடப்படும் என்றும் இந்த திருத்தம் இறுதி அனுமதிக்காக அமைச்சரவைக்கு
அனுப்பி வைக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ஆறு மைல் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
ஆறு மைல் தூரத்திற்கு வரிசையில் காத்திருக்கும் மக்கள்
இலங்கை மாத்தே கொட பகுதியில் இருந்து ஆறு மைல் தூரத்திற்கு மக்கள் எரிபொருள் கொள்வனவு
செய்திட வரிசையில் காத்துள்ள அதிர்ச்சி காணொளி வெளியாகியுள்ளது
நாட்டில் நிலவும் பொருளாத நெருக்கடி நிலை காரணமாக இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது
போராட்ட காலத்தில் தமிழர்கள் வன்னி யாழ் பகுதியெங்கும் மெழுகுவர்த்தியில்
வாழ்ந்த வரலாற்றை சிங்களவர்கள் அனுபவிக்க வேண்டும் என்பதே பாதிக்க பட்ட தமிழர்கள் விருப்பமாக உள்ளது
பால்மா இன்றி இறந்த சிசு – கொதிப்பில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்ட எரிபொருள் நெருக்கடி காரணமாக பிறந்தே இரண்டே நாளான பச்சிளம் குழந்தை உயிரிழந்த சம்பவம் நாட்டு மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஹல்தும்முல்லை பகுதியில் இந்த துயர சம்பவம் பதிவாகி உள்ளது. தாய்ப்பால் சரிவர கிடைக்காத காரணத்தினால் குறித்த குழந்தையின் குருதியில் சீனி அளவு குறைந்து உடல் மஞ்சள் நிறமாக மாறத் தொடங்கியுள்ளது.
உடனடியாக வைத்தியசாலை கொண்டு செல்ல முயன்ற பெற்றோருக்கு, சரியான நேரத்தில் போக்குவரத்து வசதி கிடைக்காவில்லை.
குழந்தையை வைத்தியசாலை எடுத்துச் செல்ல ஆட்டோ ஒன்றைத் தேட ஒரு மணிநேரத்துக்கும் அதிகமான நேரம் கழிந்துவிட்டது. அவர்களின் வீட்டிலிருந்து
ஹல்தும்முல்லை வைத்தியசாலைக்கு செல்ல அரைமணிநேரம் தான் பயணிக்க வேண்டும். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று
குழந்தை அம்புலன்ஸ் ஊடாக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
எனினும் இரத்தத்தில் சீனியின் அளவு கடுமையாக குறைவடைந்த காரணத்தினால் குழந்தை இறந்துவிட்டது.
வாலிபனை அடித்து இழுத்து சென்ற கொடூரம்
நாவலப்பிட்டி நகரிலுள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளைப் பெற்றுக்கொள்ள வருகைத் தந்த இளைஞர் ஒருவர், எரிபொருள் நிரப்பு நிலைய
உரிமையாளர், அவரது மகன் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் தாக்கப்பட்ட சம்பவம் ஒன்று, நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளது.
இத்தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது ஓட்டோவுக்கு பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்த போது, குறித்த எரிபொருள்
நிரப்பு நிலைய உரிமையாளரின் நண்பர் ஒருவர் வரிசையில் நிற்காமல் எரிபொருளை பெற முயற்சித்துள்ளார்.
இதன்போது இந்த விடயம் தொடர்பில் குறித்த இளைஞன், எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இந்த நிலையிலேயே குறித்த இளைஞன் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன், எரிபொருள் நிரப்பு நிலைய பணியாளர்களால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டு நாவலப்பிட்டி ரயில் நிலையத்துக்கு அருகில் வீசப்பட்டுள்ளான்.
இதனையடுத்து, 1990 அம்பியூலன்ஸ் ஊடாக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இளைஞன், மேலதிக சிசிச்சைக்காக கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்,
குறித்த இளைஞனுக்கு எதிராக நாவலப்பிட்டி பொலிஸ்
நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள நிலையில், இச்சம்பவம் இடம்பெற்ற போது,
பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல்
அமைதியாக இருந்ததாக வரிசையில் நின்ற நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
வீடுகளை எரிச்சிட்டாங்க – எம்பிக்கள் முறைப்பாடு
வீடுகளை எரித்தமை உட்பட தமக்கு ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் தனித்தனியாக முறைப்பாடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்றும் ஆணைக்குழுவில் மேலும் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் முறைப்பாடு செய்ய தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறான முறைப்பாடுகள் அனைத்தும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருவதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், வீடுகளை எரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஜனநாயக நாடு என்ற வகையில் அனைத்து தரப்பினரும் கருத்து வேறுபாடுகளை மதிக்க வேண்டும் என்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
முறைப்பாடு செய்த சில பாராளுமன்ற உறுப்பினர்கள்,
அவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என சுட்டிக்காட்டியுள்ளனர்.
10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு
10 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்பு
இலங்கையில் இன்று மேலும் பத்து அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆளும் ஜனாதிபதி கோட்டா பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்
மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது கோட்டா பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது
பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்
பளையில் வெடித்த குண்டு – சிறுமி காயம்
பளை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கிளாலிப் பகுதியில் மர்மப் பொருள் வெடித்ததில் சிறுமி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
குறித்த சம்பவம் இன்று மாலை இடம்பெற்றுள்ளது.
கிளாலி பாடசாலைக்கு அருகில் உள்ள காணி ஒன்றினை தாயாருடன் இணைந்து துப்புரவு செய்தபோதே குறித்த அனர்த்தம் இடம்பெற்றிருப்பதாக தெரியவந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த சிறுமிக்கு 16 வயது எனவும், நாளை சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள மாணவி எனவும் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
காயமடைந்த சிறுமி யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முன்னாள் TGTE சபாநாயகர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்
முன்னாள் TGTE சபாநாயகர் நாகலிங்கம் பாலசந்திரனுக்கு டாக்ட்டர் பட்டம்
பிரான்சில் வசித்து வரும் தொழில் அதிபரும் ,சமூக சேவகருமாக விளங்கி வரும்
நாகலிங்கம் பால சந்திரன் அவர்களுக்கு உலக தமிழர் பல்கலைக்கழகம் அமெரிக்காவினால்எதிர்வரும் 28 ஆம் திகதி ,முனைவர் எனும் டாக்ட்டர் பட்டம் வழங்கி கவுரவிக்க படுகிறார்
முப்பது வருடங்களாக தமிழீழ போராட்டத்தின் பலமாக தன்னை அர்ப்பணித்து செயல்
முன்னாள் TGTE சபாநாயகர்
பட்டவரும் ,பிரான்ஸ் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் செயல் பட்டு தனது பணியினை திறம்பட ஆற்றியவர்
மேலும் தனி நபராக போராடி பல மக்களுக்கு உதவிகளை வழங்கி வருபவரும் ,நாடு
கடந்த தமிழீழ அரசாங்கத்தின் சபாநாயக்காராக விளங்கி அந்த அமைப்பை சிறந்த முறையில் வழிநடத்திய பெருமையும் இவரை சாரும்
தன் இனம் ,தன் மக்கள் என தன்னை நாட்டுக்கு அர்ப்பணித்த பண்பாளன்,அளப்பெரும்
சமூக சேவகனுக்கு உரிய கவுரவத்தை உலகத் தமிழர் பல்கலைக்கழகம் ,அமெரிக்கா வழங்கியுள்ளது பெருமை தருகிறது
ஈழ மண்ணில் புலிகள் ஆளுகை காலத்தில் தமிழ் மண் வீரியம் பெறவும் ,அந்த போராட்டம் வெல்லவும் பல்வேறு பட்ட உதவிகளை ஒன்று திரட்டி வழங்கிய அளப்பெரும் சேவகர்
தவிர பிரான்சில் கலைபண்பாடடு கழகம் உயிர்பெறவும் ,தமிழர் தேசத்தில்
பொருண்மிய மேம்பாடு சிறக்கவும் தன் பங்களிப்பை ,தனது சக்திக்கு மீறிய வகையில் அளித்தவர்
பல்வேறு பட்ட இராயத்தந்திர உறவுகளை பேணி அதன் மூலம் ஈழ பிரச்சனையை சர்வதேச அரங்கில் உரக்க ஒளிக்க வைத்தவர் ,இவ்வாறன பல்முக ஆற்றல் கொண்ட ஒருவருக்கு இந்த விருது கிடைப்பது மகிழ்வை தருகிறது
இவருடன் மேலும் மூன்று தமிழர்களும் அடக்கம் பெறுகின்றனர்
அவருக்கும் ,மேலும் இங்கே பட்டம் பெறும் அணைத்து உறவுகளுக்கும் எமது வாழ்த்துக்களையும்
பாராட்டையும் தெரிவித்து கொள்கிறோம்


தமிழ் நாட்டு உணவு கப்பல் – இலங்கை வந்தது
இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் இருந்து கொண்டுவரப்பட்ட 2 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்கள், கொழும்பு துறைமுகத்தை இன்று (22) வந்தடைந்தது.
அவை, கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயினால் இலங்கை பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன.
இதில், வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், கப்பல் துறை அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் மற்றும் பிரதமர் பணிக்குழாம் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் கலந்துகொண்டனர்.
9,000 மெற்றிக் தொன் அரிசி, 50 மெற்றிக் தொன் பால்மா மற்றும் 25 மெற்றிக் தொன் மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்களும் நிவாரண தொகையில் அடங்குகின்றன.
கடந்த 18 ஆம் திகதி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் குறித்த நிவாரணக் கப்பல் பச்சைக் கொடி அசைத்து அனுப்பி வைக்கப்பட்டது.
40,000 மெற்றிக் தொன் அரிசி, 500 மெற்றிக் தொன் பால் மா மற்றும் மருந்துகள் உட்பட 5.5 பில்லியன் ரூபாய் பெறுமதியான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு வழங்க தமிழக அரசாங்கம் ஒப்புக்கொண்ட நிலையில், அதன் முதல் தொகுதி, நாட்டை வந்தடைந்தது.
இந்தப் பொருட்கள் வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் மேல் மாகாணங்களில் உள்ள ஆதரவற்ற மக்களுக்கு விநியோகிக்கப்படும் என கொழும்பில் உள்ள
இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்
இலங்கையில் தீ வைத்த பெண்ணைதேடும் பொலிஸ்
மே 9ஆம் திகதி இடம்பெற்ற வன்முறையின் போது திவுலப்பிட்டிய பிரதேசத்திலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் அலுவலகம் தாக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட
சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
அதற்கமைய சமூக ஊடகங்களில் வெளியான வீடியோ மற்றும் புகைப்படங்களில்
இருந்து பெண்ணொருவர், எம்.பியின் அலுவலகத்தை தாக்கி தீ வைத்தமை கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணைக் கைது செய்வதற்கு பொது மக்களின்
உதவியை நாடியுள்ள குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர்,
கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்
- பிரதமரிடம் ரணிலிடம், மனோ கணேசன் கோரிக்கை
குறைவருமான கொழும்பு தொடர்மாடி மக்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்
- பிரதமரிடம் ரணிலிடம், மனோ கணேசன் கோரிக்கை
உணவு இல்லை. காஸ் இல்லை. மின்சாரம் இல்லை. இவற்றால் நாட்டிலேயே மிகவும் துன்புறுவது கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள்தான்.
மாநகரத்தில் நாளாந்த வருமானம் பெற்று வந்த குடும்பங்கள், ஒருவேளை உணவுமின்றியும், உணவு சமைக்க வழியுன்றியும் தவிக்கிறார்கள்.
குறிப்பாக, வடகொழும்பின் பின்தங்கிய நகர தோட்ட குடியிருப்புகளில் வாழ்ந்த மக்கள், எமது ஆட்சிகாலத்தில் சுமார் 13,000 தொடர்மாடி இல்லங்களில்
குடியமர்த்தப்பட்டார்கள். இந்த குடும்பங்களை அடையாளம் கண்டு, இவர்களுக்கும், கொழுப்பு நகரின் பின்தங்கிய குடியிருப்புகளில் வாழும் மக்களுக்கும், பங்கீட்டு அட்டைகள் வழங்கி, அவர்களுக்கு சமைத்த உணவு வழங்குங்கள்.
இதற்காக, கொழும்பு துறைமுகத்தில் அமைந்துள்ள பாரிய சமையலறை மற்றும் கொழும்பு மாநகரசபைக்கு சொந்தமான பயன்படுத்தபடாத சமையலறைகள்
ஆகியவை பயன்படுத்தலாம். இராணுவ சமையல் பணியாளர்களை பணியில் அமர்த்தி இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை முன்னெடுங்கள் என பிரதமர் ரணில்
விக்கிரமசிங்கவுக்கு, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் கொழும்பு எம்பி மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பில் பிரதமருக்கு நேரடியாக கடிதம் அனுப்பியுள்ள மனோ எம்பி, ஊடகங்களிடம் மேலும் கூறியுள்ளதாவது,
நாடு முழுக்க வாழ்வாதார பிரச்சினைகள், மக்களின் கழுத்துகளை நெரிக்கின்றன. இவற்றில் மிகவும் துன்பங்களை நகரங்களில் வாழும் குடும்பங்கள் சந்திக்கிறார்கள். கிராமிய பகுதிகளில் இருக்கும் இயற்கை வளங்கள், மரம், செடி, கொடி, தண்ணீர்
என்பன நகரங்களில் இல்லை. ஒரு கிண்ணம் நீரும் பணம் கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. அதிலும் கொழும்பு தொடர்மாடி குடியிருப்புகளில் வாழும் மக்கள் படும்பாடு சொல்லும்தரமன்று.
இந்த கொழும்பு மாநகர பின்தங்கிய மக்களை, விசேட தேவை உள்ள பிரிவினராக அறிவித்து, பங்கீட்டு குடும்ப அட்டைகளை வழங்கி அவர்களுக்கு முதற்கட்டமாக சமைத்த உணவு வழங்குங்கள். இதன்மூலம் இங்கு வாழும் பள்ளி பிள்ளைகள்,
குழந்தைகள், பெண்கள், வயோதிபர்களின் பசியை ஓரளவாவது போக்கலாம். மீண்டும் நாட்டில் இயல்பு நிலைமை திரும்பும்வரை இந்த திட்டத்தை நடைமுறை செய்யுங்கள்.
கொழும்பு மாவட்ட எம்பி என்ற முறையில், எதிரணியில் இருந்தபடி கட்சி பேதமின்றி,
இது தொடர்பில் நாம் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க தயார்.
இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது
இலங்கையில் வன்முறையில் ஈடுபட்ட குற்ற சாட்டில் 1500 அப்பாவிகள் போலீசாரால் கைது
இலங்கையில் ஆளுமா அரசுக்கு எதிராக இடம்பெற்று வரும் போராட்டத்தில் கலந்து
கொண்ட மக்களில் ஆயிரத்து ஐநூறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்விதம் கைது செய்ய பட்டவர்களில் 677 பேர் விளக்கமறியலில் தடுத்து வைக்க பட்டுள்ளனர்
மக்களை அச்சுறுத்தும் முகமாக இந்த கைதுகள் இடம்பெற்றுள்ளது என சமூக நல ஆர்வளர்கள் தெரிவித்துள்ளனர்
இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு
இலங்கையின் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்த – விளையாட போகிறோம் சீனா அறிவிப்பு
இலங்கையில் நிகழ் காலத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து அந்த
நாட்டை மீள தூக்கி நிறுத்திட தாம் அதறகான விளையாட்டை ஆரம்பிக்க போவதாக சீனா அறிவித்துள்ளது
சீனா கடன்வழங்கிய நிலையில் இந்த நிலைக்கு இலங்கை சென்றமை குறிப்பிட தக்கது
நாடெங்கும் போலீசார் சுற்றிவளைப்பு தேடுதல்
நாடெங்கும் போலீசார் சுற்றிவளைப்பு தேடுதல்
இலங்கையில் நாடளாவிய ரீதியில் போலீசார் திடீர் சுற்றிவளைப்பு தேடுதலை நடத்தி வருகின்றனர்
குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த
நடவடிக்கை முன்னெடுக்க படவுள்ளது என போலீசார் தெரிவித்துள்ளனர்
அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்ற நிலையில் அதனை தடுக்கும்
முகமாக இந்த் சுற்றிவளைப்பு நடத்த படுகிறதாம்
எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்
எரிபொருள் விற்பனை நிலைய முதலாளி வீட்டுக்கு தீ வைத்த மக்கள்
இலங்கை கொக்கிராவ பகுதியில் எரி பொருள் நிலையம் வைத்து நடத்தி வந்த
உரிமையாளர் ஒருவரது வீட்டிற்கு சென்ற குழுவொன்று அவரது வீட்டிற்கு தீ வைத்துள்ளனர்
எரி பொருள் கிடைக்காத நிலையியல் சீற்றம் கொண்ட மக்களில் சிலர் இந்த தீ
வைத்தலை புரிந்திருக்கலாம் என போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை
மூன்று மாதத்தில் இலங்கையில் உணவு பஞ்சம் ஏற்படும் – அபாய எச்சரிக்கை
இலங்கையில் எதிர் வரும் மூன்று மாதத்திற்குள் நாடெங்கும் . உணவு பற்றாக்குறை
ஏற்பட்டு ,உணவு பஞ்சம் ஏற்படும் எனவும் ,இதனால் பல ஆயிரம் மக்கள் பட்டியணியால் தவிக்கும் நிலை ஏற்பட போகிறது என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது
மத்திய வங்கியின் கயானாவை காலி செய்த, பசில் தலைமையிலான குழுவினரின்
செயல் பாட்டினால் இவ்விம்மன நெருக்கடிக்குள் இலங்கை சிக்கியுள்ளது
தற்கால நெருக்கடி நிலை தொடர்ந்து பயணித்தால் ,இலங்கை சோமாலிய போன்ற நாடாக மாற்றம் பெறும்
என எதிர் பார்க்க படுகிறது
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
115 மில்லியன் ரூபா பெறுமதியான மருந்துகள் அன்பளிப்பு செய்த பிரான்ஸ்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து பிரான்ஸ் நாடு
இலங்கைக்கு பதின் ஐந்து மில்லியன் ரூபா பெறுமதியான மருந்து பொருட்களை அன்பளிப்பு செய்துள்ளது
தமது நாட்டின் தற்கால நிலை கருதி பல நாடுகளிடம்
இலங்கை பிச்சை கேட்டு வருகின்ற நிலையில் இந்த உதவிகள் வழங்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு
தமிழக செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடு
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தின் முக்கிய
செல்வந்தர்கள் இலங்கையில் பல கோடி ரூபாவுக்கு முதலீடு செய்துள்ளனர்
இதன் மூலம் இலங்கையின் பொருளாதாரம் முன்னோக்கி செல்லும் நிலை ஏற்படும் என எதிர்க்க படுகிறது
முதன் முதலாக வெளிப்படையான அறிவிப்புடன் தமிழக செல்வந்தர்கள் இலங்கையில்
முதலீடு செய்துள்ளமை குறிப்பிட தக்கது
இந்தியாவில் முதன்முறையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !!
இந்தியாவில் முதன்முறையாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை அமர்வு !!
இந்தியாவில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுகளை தீவிரப்படுத்தும் வகையில், தனது அரசவை அமர்வின் தொடக்க நிகழ்வினை தமிழ்நாட்டின் சென்னைப் பெருநகரில் நா.தமிழீழ அரசாங்கம் நடாத்துகின்றது.
Hotel Benzz Park(Hall Volvo) N62, Thirumalai Pillai Road, T.Nagar, Chennai – 600 017 at 5 PM
கொரோனா பொதுமுடக்கத்திற்கு பின்னராக நடைபெறுகின்ற நேரடி பொதுநிகழ்வாக இது அமைவதோடு, மூன்றாவது தவணைக்காலத்தின் ஏழாவது அமர்வாக மே21ம் நாள் சனிக்கிழமை இடம்பெறுகின்றது.
அரசியல் தலைவர்கள், பிரமுகர்கள், தமிழீழ ஆதரவாளர்கள் என பேராளர்கள் பலரும் பங்கெடுக்கும் இந்நிகழ்வில் ‘ஈழவிடுதலைப் போராட்டத்தில் தமிழ்நாட்டின் பங்கு’
‘சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடியும் ஈழத்தமிழர்களின் எதிர்காலமும்’ ஆகிய தொனிப்பொருட்களில் கருத்தமர்வுகள் இடம்பெறுகின்றன.
மூத்த ஊடகர் திரு.அய்யநாதன், தோழர் தியாகு, தோழர் பாமரன், பேராசிரியர் ஹாஜா கனி, மூத்த ஊடகர் தோழர் தெ.சி.சு.மணி, முனைவர் பேராசிரியர் நாகநாதன்,
முனைவர் பேராசிரியர் மணிவண்ணன், தோழர் ச.அ.சௌரிராசன் ஆகியோர் இக்கருத்தமர்வுகளில் பங்கெடுக்கின்றனர்.
கனடா, பிரித்தானியா, ஒஸ்றேலியா ஆகிய நாடுகளில் இருந்து அந்நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களது வாழ்த்துரைகளும் இடம்பெற இருக்கின்றன.
மதிமுக பொதுச்செயலர் வைகோ அவர்கள் வாழ்த்துரை வழங்க, மலேசிய பினாங்கு மாநில துணை முதல்வர் இராமசாமி அவர்கள் சிறப்புரை வழங்கவுள்ளார் என
தெரிவிக்கப்பட்டுள்ளது. நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தலைமையுரையினை வழங்குகின்றார்.
இந்திய நேரம் மாலை 5 மணிக்கு இடம்பெறுகின்ற இந்த நேரடி நிகழ்வினை நா.தமிழீழ அரசாங்கத்தின் www.tgte.tv வலைக்காட்சி வழியாகவும் காணலாம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் காஸ் எரிபொருள் விலை அதிகரிக்க படுகிறது அதிர்ச்சியில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,நலிந்துபோயுள்ள
நாட்டின் பொருளாதாரத்தை கட்டி எழுப்ப இலங்கையில் வரி வீதம் அதிகரிக்க வேண்டிய நிலைக்கு இலங்கை சென்றுள்ளது
இதனால் இலங்கை மத்திய வங்கி காஸ்,மற்றும் எரிபொருள்கள் விலையை அதிகரிக்கும் படி அரசிடம் பரிந்துரை செய்துள்ளது
இதனால் மக்கள் மேலும் கொதிப்பில் உறைந்துள்ளனர்
இலங்கை குடி மக்கள் தலைகள் ஒவ்வொன்றுக்கும் பல ஆயிரம் ரூபா நாள் தோறும்
வரியாக செலுத்த வேண்டிய நிலைக்கு அரசு தள்ளியுள்ளது என்ற குற்ற சாட்டு வலுத்து வருகிறது
இவை மேலும் ஆளும் அரசுகளுக்கு எதிராக மக்கள் கொதித்தெழும் நிலை ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது







