200 பில்லியன் ரூபாய் நகைகள் அடகு வைப்பு
Posted in இலங்கை செய்திகள்

அரச வங்கியில் ரூ2கோடி பெறுமதியான நகைகள் மாயம்

அரச வங்கியில் ரூ2கோடி பெறுமதியான நகைகள் மாயம்

அரச வங்கியொன்றில் இருந்து 2 கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள் காணாமற்போயுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு முறைப்பாடு கிடைத்துள்ளது.

மட்டக்களப்பு ஓட்டமாவடியில் உள்ள அரச வங்கியொன்றில் அடகு வைக்கப்பட்டிருந்த தங்க நகைகளே இவ்வாறு மாயமாகியுள்ளன.

கடனைப் பெறுவதற்காக அடகு வைக்கப்பட்ட தங்கப் நகைகளுக்கான வட்டியை புதுப்பிக்க வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்குச் சென்றபோது, ​​அவர் அடகு வைத்திருந்த தங்க நகை காணாமல் போயுள்ளமை தெரியவந்துள்ளது.

அந்த வங்கியின் முகாமையாளர் தலைமைக் காரியாலயத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் அரச வங்கியின் மட்டக்களப்பு தலைமை அலுவலக அதிகாரிகள் மேற்கொண்ட ஆரம்பக்கட்ட உள்ளகப் பரிசோதனையினை மேற்கொண்டனர்.

​​அடகு வைக்கப்பட்டுள்ள தங்கப் பொருட்களைத் தவிர, வாடிக்கையாளர், மற்ற 12 வாடிக்கையாளர்களின் தங்க நகைகள் அடங்கிய பொதிகளையும் காணவில்லை என கண்டறியப்பட்டது.

2022 ஜனவரி முதல் டிசெம்பர் வரை அடகு வைக்கப்பட்ட தங்க நகைகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

வாடிக்கையாளர்கள் அடகு வைத்துள்ள தங்க நகை வைக்கப்பட்டிருந்த பெட்டகத்தின் இரண்டு சாவிகள் வங்கியின் இரண்டு அதிகாரிகளின் வசம் இருந்ததாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிகமான பெறுமதியான தங்க நகைகள்
காணாமல் போனமை தொடர்பில் விசேட விசாரணைகளை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் ஆரம்பித்துள்ளனர்.

No posts found.
குடிபோதையில் மக்களுக்குள்க் புகுந்த வண்டி ஏற்பட்ட விபத்து
Posted in இலங்கை செய்திகள்

வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

நேற்று (25) இடம்பெற்ற மூன்று வீதி விபத்துக்களில் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

செட்டிகுளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூவரசங்குளம் வீதியில் நேற்று பிற்பகல் விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

பூவரசங்குளம் வீதியில் பயணித்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதில் 41 வயதுடைய மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் உயிரிழந்துள்ளார்.

இதற்கிடையில், ஹொரணை – கொழும்பு வீதி, பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜாலியகொட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

வீதி விபத்துக்களில் நான்கு பேர் பலி

வீதியில் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் கவிழ்ந்ததில் பின்னால் வந்த பஸ்ஸின் சக்கரத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் சிக்கி விபத்துக்குள்ளாகியுள்ளார்.

யக்கமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 33 வயதுடைய நபரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, மரதன்கடவல – வாழைச்சேனை வீதியில் ஹபரணை பகுதியில் இருந்து மரதன்கடவல நோக்கி பயணித்த லொறி ஒன்று வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் மற்றும் பின்னால் சென்றவர் படுகாயமடைந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இருவரும் உயிரிழந்துள்ளனர்.

கணேவல்பொல பிரதேசத்தில் வசிக்கும் 65 மற்றும் 46 வயதுடையவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் மொரகொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்

No posts found.
வீட்டில் இறந்த காட்டு யானை
Posted in இலங்கை செய்திகள்

வீட்டில் இறந்த வீட்டில் இறந்த

வீட்டில் இறந்த காட்டு யானை

காட்டு யானையொன்று வீட்டு முற்றம் ஒன்றில் உயிரிழந்தமை தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது..

அம்பாறை மாவட்டம் பொத்துவில் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட இன்ஸ்பெக்டர் ஏற்றம் பிரதேசத்தில் காட்டு யானையொன்று கடந்த புதன்கிழமை (25) உயிரிழந்திருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

குறித்த காட்டு யானை உட்பட சில யானைகள் அப்பகுதிகளில் நடமாடி திரிந்ததை அவதானித்ததாக அப்பகுதி மக்கள் குறிப்பிட்டனர்.

இவ்விடயம் தொடர்பில் தற்போது வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளும் பொத்துவில் பொலிஸார் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மைக்காலமாக இப்பகுதிகளில் நூற்றுக்கணக்கான யானைகள் வருகை தந்த வண்ணம் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

No posts found.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்
Posted in இலங்கை செய்திகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன.

பரீட்சை பெறுபேறுகளை பரீட்சை திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான

www.doenets.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக் கொள்ள முடியும் என்று பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமீத் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

No posts found.
ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்
Posted in இலங்கை செய்திகள்

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தலை அடுத்து ,ஒட்டு கேட்க மட்டும் மக்களின் வேலிகளை எட்டி தட்டி பார்க்கும் ,அரசியல் வியாபாரிகளின் கேடுகெட்ட செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

மக்களின் சேவகர் என கூறும் , இந்த அரசியல் வியாபாரிகள் ,தேர்தல் முடிவுற்றதும் காணாமல் போய்விடுகின்றனர் .

ஒட்டு கேட்க மட்டும் வேலிகளை எட்டி பார்க்கும் வெள்ளை வேட்டிகள்


தேர்தல் வரும் பொழுது பிரபாகரனும் ,புலிகளும் மீளவும் உயிர்ப்பிக்க பட்டு
மேடைகளில் புலிகளின் பரப்புரைகள் அவர் தம் பாடல்கள் ஒளிபரப்ப பட்டு ,புலிகளாக மாற்றம் பெறுகின்றனர் .

தேர்தலில் வென்றிட புலிகளை தேடும் இந்த அரசியல் கோமாளிகள் ,தேர்தல் முடிந்ததும் ,புலிகள் மற்றும் ,மக்களை மறந்து விடுவது தொடரத்தான் செய்கிறது .

இவர்களை இவ்வேளை விரட்டியடிக்க வேண்டியது மக்கள் பொறுப்பாகும் .

No posts found.
ஆற்றில் மிதந்த ஆணின் சடலம் இலங்கையில் எகிறும் கொலைகள்
Posted in இலங்கை செய்திகள்

சிசு ஒன்று சடலமாக மீட்பு – 15 வயது சிறுமி கைது

சிசு ஒன்று சடலமாக மீட்பு – 15 வயது சிறுமி கைது

ஏறாவூர் பிரதேசத்தில் பாழடைந்த காணியில் உயிரிழந்த நிலையில் சிசு ஒன்றை நேற்று (24) காலையில் மீட்டதுடன் சிசிவை பிரசவித்த 15 சிறுமி

ஒருவரையும் அந்த சிறுமியை கர்ப்பமாக்கிய சுகாதார டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றும் ஆண் ஒருவரையும் கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுகாதாரதுறையில் டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றிவரும் ஆண் ஒருவர் அந்த பகுதியிலுள்ள வீடுகளை சோதனை நடவடிக்கைக்காக சென்ற

நிலையில் புதிய காட்டுப்பள்ளி வீதியில் உள்ள 15 வயதுடைய சிறுமியின் வீட்டை சோதனை நடவடிக்கையின் போது சிறுமியுடன் தொடர்பு ஏற்பட்டதையடுத்து சிறுமியை கர்ப்பமாக்கியுள்ளார்.

சிசு ஒன்று சடலமாக மீட்பு – 15 வயது சிறுமி கைது

கர்ப்பமாடைந்த சிறுமி பாடசாலை செல்வதை நிறுத்திய நிலையில் சம்பவதினமான நேற்று காலை 9 மணியளவில் சிறுமி தனது வீட்டில்

குழந்தையை பிரசவித்துள்ளதையடுத்து பிறந்த சிசுவை சிறுமியின் வீட்டின் முன்னாள் உள்ள பாழடைந்த காணியில் வீசி எறிந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து குறித்த சிறுமியையும் சிறுமியை கர்ப்பமாக்கிய டெங்கு ஒழிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த அதே பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவரையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்ததுடன் சடலமாக மீட்ப்பட்ட சிசுவை பிரேத பரிசோதனைக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
ATM கொள்ளைவெளியான புதிய தகவல்
Posted in இலங்கை செய்திகள்

ATM கொள்ளைவெளியான புதிய தகவல்

ATM கொள்ளைவெளியான புதிய தகவல்

கம்பளை பகுதியில் இருந்த ATM இயந்திரத்தை தூக்கிக்கொண்டு முகமூடி அணிந்த திருடர்கள் தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பளை – கண்டி வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் சந்தேக நபர்கள் நால்வர் ATM இயந்திரத்தை முழுமையாக அகற்றி அங்கிருந்து கொண்டு சென்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.

வேனில் வந்த முகமூடி அணிந்த நபர்கள், அங்கு பணியில் இருந்த காவலாளியை கட்டி போட்டுள்ளனர்.

பின்னர் ஏடிஎம் இயந்திரத்தை அகற்றி அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இந்த கொள்ளைக்கு பயன்படுத்தப்பட்ட வேன்,
பேராதனையில் கைவிடப்பட்ட நிலையில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அத்துடன், வேனின் சாரதி வேனுக்குள் கட்டப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார்

No posts found.
கிழக்கில் கன மழை 150 M ஆக பதிவு
Posted in இலங்கை செய்திகள்

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

இலங்கைக்கான பொதுவான வானிலை முன்னறிவிப்பு,
தேசிய வளிமண்டலவியல்நிலையத்தின்முன்னறிவிப்பு பிரிவால் வெளியிடப்பட்டது.

2023 ஜனவரி25ஆம் திகதிக்கான வானிலை முன்னறிவிப்பு

2023 ஜனவரி25ஆம் திகதிஅதிகாலை 05.30 மணிக்கு வெளியிடப்பட்டது

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,
காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் தென்கரையோரப் பிரதேசங்களிலும் காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில்
தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால்
ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

No posts found.
கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது
Posted in இலங்கை செய்திகள்

கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது

கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ‘ஸ்ரீலங்காபிமன்ய’ விருது வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதியின் செயலாளர், 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விருதை வழங்குவார் என தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி சந்தர்ப்பத்தில் கரு ஜயசூர்ய முக்கிய பங்கு வகித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க, சேர் ஆர்தர் சி. கிளார்க், லக்ஷ்மன் கதிர்காமர், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்,
கிறிஸ்டோபர் கிரிகோரி வீரமந்திரி மற்றும் அஹங்கமகே டியூடர் ஆரியரத்ன ஆகியோர் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

No posts found.
பேரூந்துக்கு அடியில் சிக்கிய குடும்பம் - பேரூந்து சாரதி கைது
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

கொழும்பு கண்டி பிரதான வீதியில் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான வாகன போக்குவரத்து இன்று (24) முதல் ஒரு நிரலுக்கு (ஒரு வழி போக்குவரத்து)வரையறுக்கப்பட்டிருப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த பிரிவு வீதி காபட் இடப்பட்டு சீர்செய்யப்படவுள்ளதால் இன்று (24) தொடக்கம் பெப்ரவரி மாதம் 1 ஆம் திகதி வரையில் வாகன போக்குவரத்தை ஒரு நிரலுக்கு வரையறுக்கப்பட்டிருப்பதாக அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இந்த வீதியில் கடுமையான வாகன நெரிசல் ஏற்படக்கூடும் என்பதினால் வரக்காபொலயில் இருந்து அம்பேபுஸ்ஸ வரையிலான பாதை

ஊடாக பயணிப்பதற்கு எதிர்பார்க்கும் வாகன சாரதிகள் மற்றும் பொது மக்கள் முடிந்த வரையில் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிசார் அறிவித்துள்ளனர்.

சாரதிகளுக்கு விசேட அறிவிப்பு

இதேபோன்று கண்டியில் இருந்து கொழும்பு நோக்கி வரும் வாகனங்கள் ,மாவனல்லை ரம்புக்கணை வீதியின் ஊடாக குருநாகல் வரையில் பயணித்து அதிவேக நெடுஞ்சாலை அல்லது பொதுவான வீதியூடாக மீரிகம ஊடாக பஸ்யால சந்தியில் பிரவேசித்து அல்லது கேகாலைக்கு வந்த பின்னர்

பொல்காவல, அலவ்வ, மீரிகம ஊடாக பஸ்யால சந்திக்கு பிரவேசித்து கொழும்பை நோக்கி பயணிக்க முடியும் என்று பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று கொழும்பில் இருந்து கண்டி நோக்கி செல்லும் வாகனங்கள் பஸ்யால சந்தியில் மீரிகம ஊடாக அதிவேக நெடுஞ்சாலை அல்லது பொதுவான வீதி ஊடாக குருநாகலை அண்மித்த பின்னர்


கண்டியை நோக்கி பயணிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No posts found.
ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்

ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்

புத்தளம் – கொழும்பு பிரதான வீதியின் பத்துளுஓயா பகுதியில் உள்ள பாலத்தினுள் எரிபொருள் பௌசர் ஒன்று இன்று (24) அதிகாலை 3.30

மணியளவில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.

சபுகஸ்கந்தையில் இருந்து பாலாவி சீமேந்து தொழிற்சாலையில் எரிபொருளை இறக்கி விட்டு மீண்டும் கொழும்பு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த சமயம் பத்துளுஓயாப் பகுதியில் பௌசர் சாரதிக்கு ஏற்பட்ட

நித்திரைக் கலக்கத்தினால் பாலத்தின் பாதுகாப்பு வேலியை உடைத்துக் கொண்டு பத்துளுஓயா நீர்த் தேக்கத்தினுள் வீழ்ந்து சாரதி காயமடைந்து

ஆற்றுக்குள் வீழ்ந்த எண்ணெய் பவுசர்

சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துக்குள்ளான எரிபொருள் பௌசரில் இருந்து சாரதியை பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து மீட்டெடுத்து வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பாலத்தினுள் விழுந்துள்ள எரிபொருள் பௌசர் விழுந்த இடத்தில் இருந்து சுமார் 60 மீற்றர் தூரம் வரை சென்று புகையிரத பாலத்தை அண்டிய பகுதியில் தொடர்ந்தும் காணப்படுகின்றது.

விபத்துக்குள்ளான பௌசரை மீட்கும் பணியையும் மேலதிக விசாரனையும் முந்தல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No posts found.
தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்

தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்

யாழ்ப்பாணம், தெல்லிப்பளை பிரதான வீதியில் சுன்னாக பகுதியில் காரில் பயணித்த விக்டர் எனப்படும் நபருக்கு பட்டா ரக வாகனத்தில் வந்த ஜெகன் குழுவினர் மோதி விபத்துக்குள்ளாக்கி வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் செயற்படும் இரண்டு வாள்வெட்டு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக இன்றைய தினம் பட்டப் பகலில்

தெல்லிப்பளை பிரதான வீதியில் வாள்வெட்டு தாக்குதல்

அனைவரும் பார்த்திருக்க தக்க வகையில் திரைப்பட பாணியில் பட்டா ரக வாகனத்தினால் காரொன்றில் பயணித்தவரை மோதி விபத்துக்குள்ளாக்கி வாள் வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.

குறித்த வாள்வெட்டு தாக்குதலில் நால்வர் காயமடைந்து யாழ் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.

குறித்த இடத்தில் பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு யாழ்ப்பாணம்
மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் களம் இறக்கப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுகிறது.

No posts found.
தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வருபவர்களை விரட்டியடிப்போம்
Posted in இலங்கை செய்திகள்

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வருபவர்களை விரட்டியடிப்போம்

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வருபவர்களை விரட்டியடிப்போம்

கடந்த தேர்தல் காலங்களில் மக்களின் பல பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுத்தருவதாக பொய்யான உறுதிமொழிகளை வழங்கிவிட்டு வெற்றிபெற்றுச் சென்ற பல கட்சிகளின் வேட்பாளர்களும், அக்கட்சிகளின் தலைமைகள் மீதும் பொதுமக்கள் பெரும் எதிர்ப்புக்களைக் காட்டி

அதிருப்தியையும் வெளியிட்டு வருவதை நாம் எல்லோரும் காணக்கூடியதாக இருக்கின்றது என்று தேச விடுதலை மக்கள் கட்சியின் அட்டாளைச்சேனை பிரதேச சபை புறத்தோட்ட வட்டார வேட்பாளர் அமீன் ஹம்சாக் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை புறத்தோட்ட வட்டார பிரதேச மக்களுடனான கலந்துரையாடல் இன்று காலை (24) மீனோடைக்கட்டில் இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தேர்தல் காலங்களில் வாக்கு கேட்டு வருபவர்களை விரட்டியடிப்போம்

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் தேச விடுதலை மக்கள் கட்சியில் போட்டியிடுகின்ற அனைத்து வேட்பாளர்களும் இளம் வேட்பாளர்களாகவே இருக்கின்றனர்.

அவர்களுக்கு விளையாட்டுக் கழகங்கள், மகளிர் அமைப்புக்கள், கிராம அபிவிருத்திச் சங்கங்கள், பல சமூக சேவைகள் அமைப்புக்கள் போன்ற பல்வேறுபட்ட நிறுவனங்கள் ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். அதனால் அம்பாறை மாவட்ட மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், ஆதரவைப்பெற்று வருகின்றோம்.

“மக்களுக்கான விடிவு – இளம் தலைமுறையினர்” என்று மக்கள் மத்தியில் பாரியதொரு ஆதரவு வரவேற்பலையைப்பெற்று வருகின்ற இக்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.எம்.முஷாரப் என்றும் மக்களின் விடிவுக்காக களத்தில் நின்று போராடி அவர்களின் பிரச்சினைகளை உடனுக்குடன் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கின்றவராக இருக்கின்றார்.

எமது இளம் தலைவரின் கரத்தைப் பலப்படுத்த தேச விடுதலை மக்கள் கட்சிக்கு தங்களின் ஆதரவுகளை வழங்க பொதுமக்கள் தாமாகவே முன்வந்துகொண்டிருக்கின்றனர்.

மக்களின் நலனை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் கட்சியாகவும்,
வாக்குறுதிகளை நிறைவேற்றும் உறுப்பினர்களாகவும் நாங்கள் என்றும் செயற்படுவோம்.

மக்களின் திருப்தியைப்பெற்று, அவர்களுக்கு தீர்வினை பெற்றுக்கொடுப்பதே எங்களுடைய இலக்காகும்.
இதில் வெற்றிகொள்ள நாம் அனைவரும் ஒற்றுமையாக
பயணிப்பதன் மூலமே எல்லா விதமான பிரச்சினைகளுக்கும் தீர்வு காணமுடியும் என்றார்.

(அபு அலா)

No posts found.
சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது

மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது

போதைப்பொருள் குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் ஒருவர் தலைமறைவாகியிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

2000 ஆம் ஆண்டு ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டவர்.

பின்னர், அவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதன்போது, ​​சந்தேகநபருக்கு பிணை வழங்கப்பட்டு பின்னர் அவர் வழக்குக்கு ஆஜராகவில்லை.

மரண தண்டனை கைதி 10 ஆண்டுகளின் பின் கைது

அதன்படி, அவரை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

குற்றம் சாட்டப்பட்டவர் இல்லாத நிலையில் வழக்கு விசாரணை நடத்தப்பட்டு, அதன் பிரகாரம் 08 மே 2012 அன்று உயர் நீதிமன்றம் அவருக்கு மரண தண்டனை விதித்து திறந்த பிடியாணை பிறப்பித்தது.

இதேவேளை, சந்தேகநபர் நேற்று (23) அத்தனகல்ல
கஹடோவிட்ட பகுதியில் பதுங்கியிருந்த போது பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவின்
அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதுடன்,
அவரை நாளை கொழும்பு மேல் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

No posts found.
அரைத்த மாவை மீள அரைக்கும் செயற்பாட்டில் தமிழ்க் கட்சிகள்
Posted in இலங்கை செய்திகள்

டக்ளஸ் கொலைக்கு உதவி புரிந்த பெண்ணுக்கு மரண தண்டனை

டக்ளஸ் கொலைக்கு உதவி புரிந்த பெண்ணுக்கு மரண தண்டனை

இலங்கையில் சிங்கள ஒட்டு குழு தலைவராக விளங்கி வரும் டக்கிளஸ் தேவானந்தா மீது ,
மர்ம நபர்கள் நடத்திய தற்கொலை தாக்குதலில் சிக்கி காவல்துறையில் உள்ளிட்ட நால்வர் பலியாகினர் .

ஆனால அந்த தாக்குதலில் டக்ளஸ் தேவானந்தா உயிர் தப்பினார் .

அந்த கொலை குற்ற சட்டு தொடர்பிலான விசாரணைகளில் ,
பெண் ஒருவர் உடைந்த புரிந்தார் என தெரிவது,
அவருக்கு மரண தண்டனை விதிக்க பட்டுள்ளது .

No posts found.
இலங்கையர் தமிழகத்தில் சாவு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையர் தமிழகத்தில் சாவு

இலங்கையர் தமிழகத்தில் சாவு

இலங்கையில் இருந்து தமிழக சுற்றுலா சென்ற தமிழர் ஒருவர் சாவடைந்துள்ளார் .

தனது உறவினர் வீட்டுக்கு பயணித்த 45 வயது நபர் அங்கு மயங்கி வீழ்ந்து சாவடைந்துள்ளார் .

இவரது இந்த மரணத்ற்குரிய காரணம் தெரியவரவில்லை .

இவரது சடலத்தை இலங்கை எடுத்து செல்லும் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது.

No posts found.
வவுனியா காட்டுக்குள் ஆண் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

எட்டியாந்தோட்டையில் சடலமொன்று மீட்பு

எட்டியாந்தோட்டையில் சடலமொன்று மீட்பு

எட்டியாந்தோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேரகஸ் சந்தி பகுதியிலுள்ள வீஓயாவுக்கு அருகில் அழுகிய நிலையிலிருந்த சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.

நேற்று (23 மாலை குறித்த பகுதியில் நடந்துச் சென்ற நபர் ஒருவர், சடலமொன்று கிடப்பதை அவதானித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டதுடன், சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்துள்ளதுடன்,
சடலம் கரவனெல்ல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனர்.

No posts found.
450 000 பேருக்கு வேலையில்லை
Posted in இலங்கை செய்திகள்

450 000 பேருக்கு வேலையில்லை

450 000 பேருக்கு வேலையில்லை

நாட்டில் இதுவரை 450,000 வேலையற்றோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
மனித வள மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் சிசிர குமார தெரிவித்துள்ளார்.

இவர்களுக்கான வேலைவாய்ப்புகளை பெற்றுக்கொடுக்கும் நோக்கில்
திட்டமொன்று செயற்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No posts found.
நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில், குற்றவாளியாக அடையாளம் காணப்பட்ட ஓய்வுபெற்ற மேஜர் அஜித் பிரசன்னவுக்கு 04 வருட கடூழிய சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.

அத்துடன், 3 லட்சம் ரூபாய் அபராதத்தை செலுத்துமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அபராத தொகையை செலுத்த தவறும் பட்சத்தில், மேலும் 6 மாத கால சிறைத் தண்டனையை அனுபவிக்க நேரும் என நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது

No posts found.
தமிழர் பகுதிக்குள் சீனா இந்தியாவுக்கு ஆப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா

இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா

கடன் சுமையிலுள்ள இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் கடனைப் பெறுவதற்குத் தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாக இந்தியா உத்தியோகபூர்வமாக அறிவித்த சில நாட்களுக்குள், சீனாவும் நிதி உத்தரவாதம் அளிக்கும் என்று அறியமுடிகிறது.

இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்துவதை இரண்டு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் 2.9 பில்லியன் அமெரிக்க டொலர்கள் நீட்டிக்கப்பட்ட கடன் தொகையை இலங்கை பெறுவதற்குத்

தேவையான நிதி உத்தரவாதங்களை வழங்குவதாகவும் தெரிவித்து சீனா இலங்கைக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளதாக சில நம்பத்தகுந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு இந்தியா உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்கும் என சர்வதேச நாணய நிதியத்திற்கு கடந்த 16ஆம் திகதி எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது.

இலங்கைக்கு உத்தரவாதம் வழங்கும் சீனா

இலங்கை சீனாவுக்கு செலுத்த வேண்டிய கடனை குறுகிய காலத்தில் முடக்குவதற்கு சீனா தீர்மானித்துள்ளதாகவும், இலங்கை கடனாளர்கள் ஒன்றிணைந்து நடுத்தர மற்றும் நீண்ட கால திட்டத்தை அமுல்படுத்த

வேண்டுமென, சீனா எதிர்பார்ப்பதாகவும் இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த செப்டம்பரில், உள்ளூர் அதிகாரிகளும் சர்வதேச நாணய நிதிய குழுவும் 48 மாத விரிவாக்கப்பட்ட நிதி வசதியுடன் இலங்கையின் பொருளாதார சீர்திருத்தம் மற்றும் சீர்திருத்தக் கொள்கைகளை ஆதரிப்பதற்கு ஊழியர்கள் அளவிலான உடன்பாட்டை எட்டியது.

அதன்படி, இலங்கை பாரிஸ் கிளப் உறுப்பினர்கள், இந்தியா, ஜப்பான் மற்றும் சீனாவுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தன.

கடன் மறுசீரமைப்பு செயல்முறையை இறுதி செய்ய அடுத்த வாரம் பாரிஸ் கிளப் உறுப்பினர்களுடன் ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று நிதி அமைச்சு உறுதிப்படுத்தியது.

ஜப்பானுடன் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை முடித்துவிட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்த அதேவேளை, நாணய நிதியத்துடனான
இலங்கையின் வேலைத்திட்டத்துக்கு ஆதரவளிப்பதற்கும் தயாராக இருப்பதாக பாரிஸ் கிளப் ஏற்கெனவே சுட்டிக்காட்டியுள்ளது.

No posts found.