கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது
Posted in இலங்கை செய்திகள்

கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது

கரு ஜயசூரியவுக்கு உயரிய விருது

சுதந்திர தினத்தை முன்னிட்டு முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ‘ஸ்ரீலங்காபிமன்ய’ விருது வழங்கப்படவுள்ளது.

இது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்ட ஜனாதிபதியின் செயலாளர், 2023 பெப்ரவரி 03 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ள முதலீட்டு விழாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த விருதை வழங்குவார் என தெரிவித்துள்ளார்.

2018 ஆம் ஆண்டு அரசியலமைப்பு நெருக்கடி சந்தர்ப்பத்தில் கரு ஜயசூர்ய முக்கிய பங்கு வகித்தார்.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச, முன்னாள் ஜனாதிபதி டிங்கிரி பண்டா விஜேதுங்க, சேர் ஆர்தர் சி. கிளார்க், லக்ஷ்மன் கதிர்காமர், லெஸ்டர் ஜேம்ஸ் பீரிஸ்,
கிறிஸ்டோபர் கிரிகோரி வீரமந்திரி மற்றும் அஹங்கமகே டியூடர் ஆரியரத்ன ஆகியோர் இந்த கௌரவத்தைப் பெற்றுள்ளனர்.

No posts found.