எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து: $250 மில்லியன் இலஞ்சம் குறித்து விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து: $250 மில்லியன் இலஞ்சம் குறித்து விசாரணை

எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து: $250 மில்லியன் இலஞ்சம் குறித்து விசாரணை

எக்ஸ்-பிரஸ் பேர்ள் விபத்து நட்டஈடு தொடர்பாக தற்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கும் கலந்துரையாடல்களில் பங்குகொண்ட குறித்த தரப்பொன்று 250 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களைப் பெற்றதாகவும், பணமானது

பிரித்தானிய வங்கியொன்றிலுள்ள கணக்கொன்றுக்கு அனுப்பட்டுள்ளதாக கூறப்படுவது குறித்து விசாரணை நடத்துமாறு பொலிஸ்மா அதிபர் சி.டி விக்ரமரத்னவை தான் கோரியுள்ளதாக நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்
Posted in இலங்கை செய்திகள்

யாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்

யாழ்ப்பாணத்தில் வீதியோர் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ்புரிந்த ஆராயகம் சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது .

சித்திர புத்தாண்டை முன்னிட்டு வீதியோர கடைகளில் மக்கள் ஆடைகளை
வாங்கிட கடைகள் முன்பாக குவிந்தனர் .

வியாபாரம் களை கட்டிய வேளையில் ,திடீரென நுழைந்த காவல்துறையினர் ,அங்கு வீதியோரபேமண்ட் கடைகளை ,அல்லது நடை பாதை கடைகளை நடத்த விடாது தடை விதித்தனர் .

இதனால் வியாபாரிகளுக்கும் போலீசாருக்கு இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டது .மேலும் வியாபரிகளின் பொருள்களையும் வீதியில் வீசி எறிந்து இலங்கை சிங்கள காவல்துறை யினர்ரகளை புரிந்தனர் .

மேற்படி சம்பவ காணொளிகள் வெளியாகிய நிலையில் ,
மக்கள் மத்தியில் அதிர்வலைகளை கிளப்பியுள்ளது

அமெரிக்கா உளவுத்துறையால் இராணுவ இரகசிய ஆவணத்தை விற்றவர் கைதுயாழ்ப்பாணத்தில் பேமண்ட் கடைகளை அடித்து நொறுக்கிய பொலிஸ் .
இஸ்ரேல் முற்றாக அழிப்போம் ஈரான் .
உக்ரைனுக்கு MiG-29 விமானங்களை வழங்கும் பொலந்து.

முட்டையால் பேக்கரி பொருட்கள் விலையேறும் அபாயம்
Posted in இலங்கை செய்திகள்

ஒரு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு

ஒரு மில்லியன் முட்டைகள் இலங்கைக்கு

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மேலும் ஒரு மில்லியன் முட்டைகள் இன்று இலங்கைக்கு வரவுள்ளன.

இந்த முட்டை இருப்பு தற்போது அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்று பிற்பகல் வேளையில் அது நாட்டை வந்தடையும் எனவும் அரச வர்த்தக பல்வேறு சட்ட ரீதியான கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட கடைசி முட்டை இருப்புக்கான அனுமதியை நேற்று வழங்கியது.

பேக்கரி உற்பத்தி நிறுவனங்களுக்கு குறித்த முட்டைகளை
விநியோகிக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இலஞ்சம் வாங்க மறுத்த பொலிஸ் உத்தியோகத்தருக்கு சன்மானம்
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது

இலஞ்சம் பெற்ற இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கைது செய்துள்ளது.

பொலன்னறுவை அலுவலகத்தில் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையத்தை நடத்துவதற்கு 9,000 ரூபா இந்த இலஞ்சம் கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொலன்னறுவை பகுதியில் உள்ள முறைப்பாட்டாளரின் வீட்டில் மின்னேரிய பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோர் லஞ்சம் பெற்றுள்ளனர்.

சந்தேகநபர்கள் பொலன்னறுவை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

செல் எரிபொருள் நிறுவனம் 115 வருடத்தின் பின்னர் அள்ளிய இலாபம்
Posted in இலங்கை செய்திகள்

எரிபொருள் விற்பனை அதிகரிப்பு

எரிபொருள் விற்பனை அதிகரிப்பு

நாட்டில் கடந்த 7 நாட்களின் தரவுகளுக்கமைய தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர கியூ.ஆர். அமைப்பின் மூலம் எரிபொருள் விற்பனை மற்றும் சாதாரண எரிபொருள் விற்பனையில் குறிப்பிடத் தக்க முன்னேற்றத்தைக் காட்டுவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் 60 வீதத்துக்கும் குறைவாக இருந்த விற்பனை தற்போது 80 வீதத்துக்கும் மேல் அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பண்டிகைக் காலங்களில் விநியோகிக்கப்படும் நாளொன்றுக்கான எரிபொருளின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்

இலங்கையில் கைதிகள் 50 பேர் தப்பி ஓட்டம்
Posted in இலங்கை செய்திகள்

புத்தாண்டில் சிறைக் கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம்

புத்தாண்டில் சிறைக்கைதிகளை சந்திக்க சந்தர்ப்பம்

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்று முதல் எதிர்வரும் 3 தினங்களுக்கு கைதிகளை, அவர்களது உறவினர்கள் சந்திப்பதற்கான வாய்ப்புகளை வழங்க சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி, கைதிகளை சந்திக்க பிரவேசிக்கும் உறவினர்கள், ஒருவருக்கு போதுமான உணவு பொதி மற்றும் இனிப்பு பண்டங்களை கொண்டு வர முடியும் என அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது

No posts found.
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
Posted in இலங்கை செய்திகள்

5 கோடி ரூபா வழங்கப்படவில்லை வெடித்த சர்ச்சை

5 கோடி ரூபா வழங்கப்படவில்லை வெடித்த சர்ச்சை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான தபால் மூல வாக்குச் சீட்டுகள் மற்றும் ஏனைய ஆவணங்களை அச்சிடும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த அரசாங்க அச்சக ஊழியர்களுக்கு கொடுப்பனவு வழங்குவதற்காக திறைசேரியிலிருந்து 5 கோடி ரூபாவுக்கும் அதிக பணம் இதுவரையில் கிடைக்கப்பெறவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனால் அச்சிடும் நடவடிக்கையில்ஈடுபட்டு வந்த 200 இற்கும் மேற்பட்ட அரசாங்க அச்சக ஊழியர்கள் உதவித்தொகை இல்லாமல் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்க அச்சகர் திருமதி கங்கானி லியனகே கருத்து தெரிவிக்கையில், ​​திறைசேரிக்கு நினைவூட்டல் ஒன்றை வழங்க உள்ளதாக குறிப்பிட்டார்

No posts found.
இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி
Posted in இலங்கை செய்திகள்

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது.

ஐ.பி.எல். தொடரின் 17வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற சென்னை அணி பந்துவீச முடிவு செய்தது.

இதையடுத்து ராஜஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர்களாக பட்லர் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகியோர் களம் இறங்கினர். இந்த ஜோடியில் ஜெய்ஸ்வால் 10 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து சிறப்பாக ஆடிவந்த

படிக்கல் 38 ஓட்டங்களுடனும், அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் சாம்சன் ஓட்டங்கள் எதுவும் எடுக்காமலும், அஷ்வின் 30 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இறுதி பந்து வரை போராடி தோற்றது சென்னை அணி

மறுபுறம் நிலைத்து நின்று ஆடி வந்த பட்லர் அரைசதம் அடித்த நிலையில் 52 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். முடிவில் ராஜஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களை எடுத்தது.

இதையடுத்து 176 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணியின் சார்பில் கெய்க்வாட் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களமிறங்கினர். இந்த ஜோடியில் கெய்க்வாட் 8 ஓட்டங்களில் ஆட்டமிழக்க

அவரைத் தொடர்ந்து களமிறங்கி அதிரடி காட்டிய ரகானே 31 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய ஷிவம் துபே 8 ஓட்டங்களும், மொயின் அலில் 7 ஓட்டங்களும், அம்பத்தி ராயுடு 1 ஓட்டமும் எடுத்து அடுத்தடுத்து வெளியேறினர்

மறுமுனையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கான்வே 37 பந்துகளில் 50 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். ஜடேஜாவுடன் அணித்தலைவர் தோனி ஜோடி சேர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது. ஆனால், 1 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.

இதனால், 6 விக்கெட்டுகளை இழந்து 172 ஓட்டங்களை எடுத்த சென்னை சூப்பர் கிங்ஸ் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. ஜடேஜா 25 ஓட்டங்களையும் , தோனி 32 ஓட்டங்களையும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பீ பீ சி செய்தியாளர் மாணிக்க வாசகர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

பீ பீ சி செய்தியாளர் மாணிக்க வாசகர் மரணம்

பீ பீ சி செய்தியாளர் மாணிக்க வாசகர் மரணம்

பிபிசி செய்தியாளர் ஐயா மாணிக்க வாசகர் அவர்கள் மரணமடைந்துள்ளார் .
ஊடகத்துறையை தேர்ந்தெடுத்து அதில் சிறப்பான பங்களிப்பை ஆற்றி வந்தவர் .

இலங்கையில் புரையோடி போன யுத்த காலத்தில் ,துல்லியமான செய்திகளை வழங்கியவர் .


சுருங்க சொல்ல போனால் புலிகளையும் ,இலங்கை அரசையும்,
துணிந்து எதிர் கொண்டவர் அல்லது ,
பக்க சார்பு இன்றி தன்னை வடிவமைத்து பயணித்தவர் எனலாம் .

அவ்வாறான துணிச்சல் மிகுந்த பொறுப்புணர்வோடு செயலாற்றிய ,
மூத்த ஊடக யாம்பவன் மறைவு,ஊடக துறை வட்டாரத்தில் பெரும் தாக்கத்தை ,அல்லது இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது எனலாம் .

அன்னாரின் துயரில் தவிக்கும் குடும்பத்தாருடன் நாமும் பங்கெடுத்து கொள்கிறோம் .கண்ணீர் அஞ்சலி .

மூழ்கிய கப்பல் பலரை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியாவில் தந்தை மகன் நீரில் மூழ்கி பலி

அவுஸ்திரேலியாவில் தந்தை மகன் நீரில் மூழ்கி பலி

அவுஸ்திரேலியா, குயின்ஸ்லாந்து வடக்கு பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியொன்றுக்கு விடுமுறையை கழிப்பதற்கு சென்ற இரண்டு இலங்கையர்கள், நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

59 மற்றும் 21 வயதுடைய தந்தை மற்றும் மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

எட்டு வருடங்களுக்கும் மேலாக மெல்போர்னில் உள்ள போக்குவரத்து நிறுவனத்தில், உயிரிழந்த தந்தை பணிபுரிந்து வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவர்கள், குயின்ஸ்லாந்தில் கிரிஸ்டல் கேஸ்கேட்ஸ் நீர்வீழ்ச்சியை பார்வையிட்டதுடன், அங்கு நீராடியுள்ளனர்.

தண்ணீரில் நீந்திக் கொண்டிருந்த தந்தை முதலில் பலத்த நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அவரது மகனும் மகளும் அவரை மீட்க முயன்று நீரோட்டத்தில் சிக்கியுள்ளனர்.

தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
Posted in இலங்கை செய்திகள்

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

கிளிநொச்சி – அக்கராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கரிதாஸ் குடியிருப்புபகுதியில் காதலித்து திருமணம் முடித்த, மனைவியை இடியன் துப்பாக்கியால் சுட்டு காயப்பபடுத்திய கணவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்று மாலை (11) இடம்பெற்றுள்ளதாக அக்கராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணி மனைவியை துப்பாக்கியால் சுட்ட கணவன்

இதன் போது காயமடைந்த ஐந்து மாத கர்ப்பிணியான பெண் உடனடியாக அக்கராயன்குளம் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குறித்த சம்பவத்தில் 33 வயதான இரண்டு பிள்ளைகளின் தாயாரே
படுகாயங்களுக்குள்ளாகியுள்ளார்.

கணவன் மது போதைக்கு அதிகம் பழக்கப்பட்டவர் என்பதனால் அடிக்கடி குடும்பத்தில் சண்டைகள் இடம்பெறும் எனவும் இதன் விளைவாகவே மனைவி மீதான துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 40 வயதுடைய நபர் அக்கராயன்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல்
Posted in இலங்கை செய்திகள்

புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல்

புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல்

பரந்தன் புகையிரத நிலையத்திற்குள் புகுந்த குண்டர்கள் தாக்குதல் காரணமாக ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், உடமைகளுக்கும் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று (11) இரவு இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி பொலிஸ் பரிவுக்குட்பட்ட பரந்தன் புகையிரத நிலைய பகுதியில் நேற்று மாலை மதுபானம் அருந்திய குழுவினரிடம் அப்பகுதியில் மதுபானம் அருந்த வேண்டாம் என ஊழியர்களால் கூறப்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த குண்டர் கும்பல் பரந்தன் ரயில் நிலைய ஊழியர்களை தாக்கி காயப்படுத்தியதுடன், புகையிரத நிலைய உடைமைகளையும் சேதப்படுத்தியுள்ளனர்.

சந்தேக நபர்களை கைது செய்ய விசேட பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவத்தில் புகையிரத நிலைய அதிபர் உட்பட இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறுமியை கொடுமை படுத்திய பேயோட்டி கைது
Posted in இலங்கை செய்திகள்

யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது

யாழில் போதைப்பொருளுடன் பெண் கைது

யாழ்ப்பாணம் ஓட்டுமடம் – பொம்மைவெளியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 5.5 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் 70 ஆயிரம் ரூபாய் பணம் என்பன கைப்பற்றப்பட்டன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம் பொம்மைவெளி 5 ஆம் குறுக்குத்தெருவைச் சேர்ந்த 32 வயது பெண்ணே கைது செய்யப்பட்டார்.

உயிர்க்கொல்லி போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவதாக நீண்ட நாள்களாக தேடப்பட்டு வந்த பெண்ணே கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் கூறினர்.

யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் மேனன் தலைமையிலான குழுவினரே இந்தக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் பணத்தை காணவில்லை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் பணத்தை காணவில்லை

இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் பணத்தை காணவில்லை

இலங்கை மத்திய வங்கியில் ஐம்பது லட்சம் ரூபா
பணம் காணமல் போயுள்ளது .
இந்த பணமா காணாமல் போனதை அடுத்து ,
காவல்துறைக்கு தெரிய படுத்திய நிலையில் விசாரணைகள்
இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

மத்திய வங்கியில் பணம் திருட்டு போனது தொடர்பில் ,
விசாரணைகள் இடம் பெற்ற வண்ணம் உள்ளது .

இந்த விடயம் இலங்கையில் லஞ்ச ஊழல் திருடர்கள் ,
மற்றும் கொள்ளையர்கள் அதிகரித்துள்ளதையும் ,
நாடு மிக மோசமான நிலைக்கு செல்ல போவதை,
எடுத்து காண்பிக்கின்றன .

இரும்பு கம்பியால் வாலிபர் அடித்து கொலை
Posted in இலங்கை செய்திகள்

யாழில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை

யாழில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை

யாழ்.சாவகச்சேரி மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் ஒருவர் அலவாங்கால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று பிற்பகல் 4.30 மணியளவில் இடம் பெற்றுள்ளதாக சாவகச்சேரி தெரிவித்தனர்.

மீசாலை புத்தூர் சந்திப் பகுதியில் வசித்துவரும் 20 வயதான இளைஞர் ஒருவர் தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் மனநல சிகிச்சைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் நேற்றைய தினம் (10) குறித்த இளைஞர் வைத்தியசாலையில் இருந்து தப்பி ஓடி புத்தூர் சந்தியிலுள்ள தனது வீட்டுக்கு வந்துள்ளார்.

இதனால், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் இளைஞரைப் பராமரித்துவந்த நோயாளர் நலன்புரிச் சங்கத்தைச் சேர்ந்த நி.நாகச்செல்வன் என்பவரும், இளைஞரின் உறவினர் ஒருவருமாக இளைஞரை மீண்டும் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வதற்காக வந்திருந்தனர்.

அப்போது, புகையிரதக் கடவையில் அமர்ந்திருந்த குறித்த இளைஞரோடு நோயாளர் நலன்புரிச்சங்க பராமரிப்பாளர் உரையாடியதோடு, இளைஞரின் வீட்டுக்கும் அவரோடு சென்றுள்ளார்.

இதன்போது இளைஞரின் உறவினர் முச்சக்கர வண்டியோடு வீதியோரத்தில் காத்திருந்தார்.

இந்நிலையில் வீட்டுக்குள் இருந்து இளைஞர் மட்டும் வெளியே வந்து மீண்டும் புகையிரதக் கடவையில் அமர்ந்து கொண்டார்.

யாழில் நபர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை

வீட்டுக்குள் சென்ற நோயாளர் நலன்புரிச் சங்க பராமரிப்பாளரை காணாத இளைஞரின் உறவினர் அவரது தொலைபேசிக்கு அழைப்பெடுத்தார்.

நீண்ட நேரமாக அழைத்தும் பதில் கிடைக்காத்தால், புகையிரத வீதியில் அமர்ந்திருந்த இளைஞரிடம் சென்று வினவியுள்ளார்.

இதன்போது, “பராமரிப்பாளரை வீட்டு முற்றத்தில் வைத்து அலவாங்கால் குத்தி கொலை செய்துவிட்டேன்” என இளைஞர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து வீட்டு முற்றத்திற்கு சென்று பார்த்தபோது குறித்த நலன்புரிச் சங்க பராமரிப்பாளர் முகத்தில் பலத்த காயங்களோடு சடலமாகக் கிடந்துள்ளார்.

இதையடுத்து சாவகச்சேரி பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் இளைஞரை கைது செய்துள்ளனர்.

சடலமாக மீட்க்கப்பட்டவர் ஆனைக்கோட்டை தெற்கு கூழாவடியைச் சேர்ந்த குடும்பஸ்தரான நி.நாகச்செல்வன் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை

இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை மேல், சப்ரகமுவ, மத்திய, தென், ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக, இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5 ஆம் திகதியிலிருந்து 15 ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

அதற்கிணங்க இன்று (11ஆம் திகதி) நண்பகல் 12.11 அளவில் கல்பிட்டி, துனுபொத்தகம, நிக்கவெவ, சோமாவதி விகாரை மற்றும் வெருகல் ஆகிய பிரதேசங்களுக்கு மேலாக சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

மழை நிலைமை : புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் சில இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இலங்கையில் வெப்பம் உச்சம் மக்களுக்கு எச்சரிக்கை

காற்று : நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது கிழக்கு திசையிலிருந்து அல்லது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக் கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

காங்கேசந்துறையிலிருந்து கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 45 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கடல் நிலை : காங்கேசந்துறையிலிருந்து கல்பிட்டி வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகள் அவ்வப்போது மிதமான அலையுடன் காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் சாதாரண அலையுடன் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற் பிரதேசங்கள் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

No posts found.
புத்தரை காணவில்லை - தமிழர் முறைப்பாடு
Posted in இலங்கை செய்திகள்

புத்தரை காணவில்லை – தமிழர் முறைப்பாடு

புத்தரை காணவில்லை – தமிழர் முறைப்பாடு

வவுனியா, செட்டிகுளம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த புத்தரை காணவில்லை என அப் பகுதியில் தற்போது வசித்து வரும் தமிழர் ஒருவர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

வவுனியா, செட்டிகுளம், பழைய புகையிரத நிலையத்திற்கு முன்பாக 09 ஆம் திகதி புத்தர் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. அது அன்று மாலையே அகற்றப்பட்டிருந்ததுடன் அப்பகுதியை சேர்ந்த ஒருவர் வைத்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் நேற்று (10) குறித்த நபர் தானே தனது காணியில் புத்தர் சிலையை வைத்ததாகவும், அதனை காணவில்லை எனவும் செட்டிகுளம் பொலிசில் முறையிட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2022 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நோர்வேயில் இருந்து இலங்கைக்கு வருகை தந்து நொச்சியாகம பகுதியைச் சேர்ந்த பெரும்பான்மையின பெண் ஒருவரை திருமணம் செய்திருந்ததுடன், கடந்த பெப்ரவரி மாதமளவில் செட்டிகுளத்திற்கு வந்து தங்கியுள்ளார்.

இந்நிலையிலேயே குறித்த புத்தர் சிலையை அவர் தனது காணிக்கு முன்னால் உள்ள அரச காணியில் வைத்துள்ளார்.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் செட்டிகுளம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து
Posted in இலங்கை செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பத்தேகம நுழைவாயிலுக்கு அருகில் இன்று (11) காலை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர்.

சீமெந்து ஏற்றிச் சென்ற டேங்கர் ஒன்று வீதியை விட்டு விலகி பாதுகாப்பு வேலியில் மோதி கவிழ்ந்ததில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சாரதி தூங்கியதால் விபத்து ஏற்பட்டதாகவும், சாரதி மற்றும் உதவி சாரதிக்கு சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

இராணுவ வாகனம் மோதி ஒருவர் பலி

மொரட்டுவ பிரதேசத்தில் இராணுவ வாகனம் மோதியதில் சைக்கிளில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பாணந்துறை ஹொரேதுடுவ பிரதேசத்தில் வசிக்கும் 58 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்துக்குள்ளான வாகனம் சைக்கிளில் பயணித்தவர் மீது மோதிய பின்னர் வீதியில் பயணித்த பெண்ணின் மீது மோதியிருந்தது.

பலத்த காயம் அடைந்த 3 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பில் வாகனத்தை ஓட்டிச் சென்ற இராணுவ சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் மொரட்டுவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மொரட்டுவ பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்
Posted in இலங்கை செய்திகள்

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

காதலனுடன் சமனல வாவியை பார்வையிட வந்த யுவதியை அச்சுறுத்தி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபரான கான்ஸ்டபிளை கடந்த 8 ஆம் திகதி சமனல வாவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

கைது செய்யப்பட்ட கான்ஸ்டபிளை நேற்று பலாங்கொடை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது விபத்து தொடர்பில் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, சந்தேகத்திற்குரிய பொலிஸ் கான்ஸ்டபிள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரிடம் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

காதலனை அச்சுறுத்தி யுவதியை நிர்வாணப்படுத்திய பொலிஸ் கான்ஸ்டபிள்

சமனல வாவி பிரதேசத்தை அண்டிய பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதுடைய யுவதியொருவர் கடந்த 8ஆம் திகதி தனது காதலனுடன் சமனல வாவி பகுதிக்கு வந்துள்ளார்.

அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர், காதலனிடம் போதைப்பொருள் இருப்பதாகக் கூறி அவர் வைத்திருந்த பைகள் மற்றும் பணப்பையை சோதனை செய்துள்ளார்.

பின்னர் காதலரின் ஒரு கையில் கைவிலங்கு இட்டு, கைவிலங்கின் மற்றப் பகுதியை மோட்டார் சைக்கிளில் இணைத்து சிறுமியை வலுக்கட்டாயமாக காட்டுப் பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

இது தொடர்பில் அந்த பகுதியில் இருந்த நபர் ஒருவர் சமனல வாவி பொலிஸாருக்கு அறிவித்ததையடுத்து பொலிசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

பொலிஸ் கான்ஸ்டபிள் ஏற்கனவே யுவதியின் ஆடைகளை அகற்றி நிர்வாணப்படுத்தி இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் வெலிஓயா பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் அவர் மொனராகலை பிரிவில் ஹம்பேகமுவ பொலிஸ் பிரிவில் கடமையாற்றுபவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.