Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்
பெண் போன்று நடித்து மாணவன் துஷ்பிரயோகம்
பேஸ்புக்கில் பெண் போன்று நடித்து 14 வயது சிறுவனை கம்பஹா பிரதேசத்திற்கு வரவழைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவத்துடன்,
தொடர்புடைய சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கம்பஹா பொலிஸார் தெரிவித்தனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவன் ருவன்வெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 10 ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் எனவும், பெண்ணாக தன்னை
காட்டிக்கொண்ட சந்தேக நபர், பேஸ்புக் ஊடாக அவருடன் உரையாடி பின்னர் கம்பஹாவுக்கு அழைத்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
துஷ்பிரயோகத்துக்கு உள்ளான சிறுவனின் தந்தை கம்பஹா பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து, சிறுவனிடம் வாக்குமூலம் பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு, கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
யாழில் மனித சடலம் – வீடு அத்திவராம வெட்டிய பொழுது நடந்த பயங்கரம்
யாழில் மனித சடலம் – வீடு அத்திவராம வெட்டிய பொழுது நடந்த பயங்கரம்
யாழ்ப்பாணம் அல்லப்பிட்டி பகுதியில் வீட்டுக்கு அத்திவாரம் வெட்டும் பொழுது மனித சடலம் ஒன்று கண்டு பிடிக்க பட்டதால் பெரும் பர பரப்பு நிலவியது .
சடலம் கண்டு பிடிக்க பட்ட பகுதிக்கு நீதிபதி அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு ,அகழ்வு பணியை கண்காணித்தார் .
இது யார் சடலம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பிலும் ,எத்தனை ஆண்டுகளாக சடலம் இங்கே புதைக்க பட்டது என்பது தொடர்பிலான மண் ஆய்வு ,என பல விடயங்கள் முடுக்கி விட பட்டுள்ளன .
மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் ,
பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு
அடையாளம் காண முடியாதவாறு சடலம் மீட்பு
யாழ். வல்லை – தொண்டைமானாறு வீதியில் அடையாளம் காணப்படாத சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இன்று (22) காலை குறித்த சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனினும் சடலம் அடையாளம் காண முடியாதவாறு சிதைந்துள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலைசாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை சமீப காலமாக லண்டனில் உள்ள,கேரளாவை சேர்ந்த சாமியார் ஒருவரின் ,
காம லீலைகள் மற்றும் பணமோசடி
காம லீலைகள் மற்றும் பணமோசடி சம்பந்தமான செய்திகளை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.
பாலியல் குற்ற சாட்டு
அவர் மீது சிலர் கொடுத்த பாலியல் குற்ற சாட்டு முறமை காரணமாக ,
நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
அவரை லண்டன் போலீசார் கைது செய்து விசாரித்த பின்னர் ,நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த பட்ட பொழுதும் ,
நீதிமன்றத்தினால் பிணை வழங்க மறுக்கப்பட்டு ,
தற்போது நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தடுப்புக்காவலில் வைக்க பட்டுள்ளார் .
போலி பரப்புரை
இவருடைய கைதுக்கு பின்னால் ,சிவப்ரியன் என்பவர் உள்ளார் ,
அவர் சாமியாரின் பழைய பக்தகோடி என்றும் ,
போலியான பரப்புரைகள் ,
அவர் சாமியாரை உள்ளே தள்ளி விட்டு ,ஆலயத்தை அபகரிக்க திட்டமிட்டு ,
செயல்பபடுவதாக போலியான பரப்புரைகள் ,
சாமியாரின் ஆதரவு கூலிகளினால் மேற்கொள்ள படுகிறது .
இந்த ஆலய அபகரிப்புக்கு ,சிவப்ரியனுடன் சில பெண்களும் இணைந்து ,
செயல்படுவதாகவும், மக்களை குழப்பும் போலியான ,பொய்யான உண்மைக்கு புறம்பான ,ஆதாரமற்ற கதைகள் பரப்ப பட்டு வருகின்றன .
இந்த செய்தி காணொளி குறிப்பு காணொளியில் பார்க்க அழுத்துங்கள்
மக்களை ஏமாற்றியும் ,மந்திரத்தால் வாய் கட்டு போட்டு விடுவார் என்ற ,
பயமுறுத்தல் ஊடாகவும் , சாமியார் ஏமாற்றி சுருட்டும் பணத்தில்,
சொகுசு வாழ்க்கை வாழ்பவர்கள் ,போலி சாமியாரை ,மனித புனிதனாக்க
இவ்வாறு பரப்ப படுகின்றன .
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
அதற்கு காரணம் ,அது யாதெனில் சாட்சிகள் பலமாக, மன திடத்துடன் உள்ளனர் ,இவ்வாறு சாமியாருக்கு எதிராக மாறிய பெண்களை,சாட்சிகளை ,
மக்கள் முன்பாக கலங்க படுத்துவதன் ஊடாக ,அவர்களுக்கு மன,
உளைச்சலை வழங்க முயற்சிகள் மேற்கொள்ள படுகின்றன .
அவ்வாறு புரிந்தால் சாட்சிகள் போலியானவர்கள் என்ற ,
தோற்றத்தை ஏற்படுத்தி சாமியாரை ,
தப்பிக்க வைக்கும் தந்திர குள்ள நரி திட்டமாக இது பார்க்க படுகிறது .
இவ்வாறு தரம் தாழ்தி செய்தி வெளியிட்டு ,சிவப்ரியனை மிரட்டுவதன் மூலம் ,
வழக்கு தொடுத்தவர்களை வாபஸ் வாங்க வைக்கலாம் என, ரூம் போட்டு ,
யோசித்தவர்களின், சில்மிஷங்கள் வெளியே கசிந்துவிட்டதை அவர்கள் அறியவில்லை.
யார் இந்த சிவப்ரியன்? இங்கிலாந்து சட்டத்துக்கு தலை வணங்கி ,
பலரின் வாழ்க்கைக்கு விளக்கேற்றி வைக்கும் இலங்கை ,
தமிழருக்கான ஒரு பொக்கிசம்.
இலங்கை தமிழர்களை குறிப்பாக இளம் பெண்களை ,
சாமியாரிடம் இருந்து காப்பற்ற வேண்டும் என்று,
தனது சொந்த உயிரை பணயம் வைத்த, தனது மக்களுக்காக அயராது உழைத்து வருபவர் ,பிரிட்டன் தமிழர் மத்தியில் தனக்கென இடம் பிடித்தவர் .
சிவப்ரியனைப்பற்றி அவதூறு பரப்புவதன் மூலம் ,
அவரின் தர்ம யுத்தத்துக்கும் ,இலங்கை தமிழருக்கான சேவைகளையும் ,
தடுத்து நிறுத்தலாம் என சாமியாரின் அடியாட்கள் ,அல்லது ஆதரவாளர்கள் பகல் கனவு காண்கிறார்கள்.
இலங்கை தமிழரின் கற்பை சூறையாட நினைக்கும் ,
இந்த போலி மோசடி சாமியாருக்கு சிவப்ரியன் போன்றவர்கள்
சிம்மசொற்பனமே.
லண்டன் காம லீலை சாமியார் பிணையின்றி சிறையில் அடைப்பு -சாட்சிகளை குழப்ப நடவடிக்கை
குறிப்பாக அனைத்து ஈழத்தமிழர்களும் அவரின் பின்னால் அணிதி ரள்வார்கள்,என்பதனை சாமியாருக்கு வக்காளத்து வாங்கும் ,குழுவுக்கு
ஆணித்தரமாக கூறுவதோடு ,இலங்கை மக்களை ஏமாற்றுபவர்களை தமிழர்கள், சட்டத்தின் முன் நிறுத்துவார்கள்.
சாமியார் மீது சுமத்த பட்ட குற்ற சாட்டுக்கள் ,மற்றும் சாட்சிகளினால் வழங்க பட்ட ஆதாரங்கள் யாவையும் ,நீதிமன்றம் குற்றத்தின் தன்மையை ஆராய்ந்து ,முடிவெடுத்து தீர்ப்பினை வழங்கும் .
சிறை சாலையில் பலத்த கண்காணிப்பு
மேலும் பிணை இன்றி ஒருவர் நீதிமன்றின் உத்தரவின் பேரில் அடைக்க படுகிறார் எனின் ,அவர் சிறை சாலையில் பலத்த கண்காணிப்புக்கு உள்ளாக்க
படலாம் ,மேலும்,குற்றத்தின் விடயம் உச்சமாக அமைய பெற்றால் மட்டுமே இந்த பிணை மறுப்பு உத்தரவிட படும் .
அப்படி என்றால் இந்த வழக்கின் தன்மையை இபோழுதே ,
மக்கள் எளிதாக விளங்கி கொள்ள முடியும் .
மேலும் வழக்கு இடம்பெறும் பொழுது வழக்கை முன்னெடுத்து செல்பவர்களுக்கு எதிராக,இவ்வாறான போலிகளால் பரப்ப படும், இவ்வாறான
போலி செய்திகள் ,கவனத்திற்கு உள்வாங்க பட்டு ,அவர்கள் மீதும் ,நடவடிக்கை மேற்கொள்ள வாய்ப்புக்கள் ஏற்படலாம் என்பதாக விடயம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .
சாமியார், ஆலயத்துடன் தொடர்பு கொண்ட பொழுதும் அழைப்புக்கு பதில் ,இல்லை
உங்கள் கருத்துக்களை தெரிவிக்க விரும்பினால் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் ,
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
துப்பாக்கி தவறுதலாக வெடித்ததில் அம்பன்பொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 16 வயதுடைய சிறுவன் ஒருவன் நேற்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அம்பன்வெல கெத்பஹூவ பிரதேசத்தைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தையடுத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய சிறுவன் கல்கமுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் மரணம்
வயல்வெளியிலிருக்கும் குடிசையில் தனித்திருக்கும் போது குறித்த சிறுவன் துப்பாக்கியைக் கையாண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதையடுத்து, வயலில் அன்றாட வேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்த சிறுவனின் பெற்றோர், குடிசைக்கு விரைந்து வந்து பார்த்த போது சிறுவன் காயமடைந்து கிடந்துள்ளான்.
சம்பவம் தொடர்பில் அம்பன்பொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னேடுத்து வருகின்றனர்.
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவீர்களா என்று என்னிடம் தொடர்ந்து கேட்டு என்னை அசௌகரியத்திற்கு உள்ளாக்காதீர்கள் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா ஊடகவியலாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
என்னை சங்கடப்படுத்தாதீர்கள்; பொன்சேகா
”இங்கிருக்கும் யாரைக் கேட்டாலும் அவர்கள் வேட்பாளராக போட்டியிட விரும்புவதாக தான் கூறுவார்கள்.
அதனால் மீண்டும் அதே கேள்வியை என்னிடம் கேட்டு என்னை சங்கடத்திற்கு ஆளாக்காதீர்கள்” என அவர் ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அத்துடன் தம்மீது நம்பிக்கை வைத்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி வாக்காளர்களுக்கு கட்சியில் இருந்து பிரிந்து சென்று துரோகம் செய்ய மாட்டேன் என பொன்சேகா வலியுறுத்தினா
மகளுக்கு ஏன் இந்த அநீதி நீதிக் கேட்டு தாய் மன்றாட்டம்
மகளுக்கு ஏன் இந்த அநீதி நீதிக் கேட்டு தாய் மன்றாட்டம்
எனது பிள்ளையை பாடசாலையில் இணைத்தால் தங்களது பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் என அந்த பாடசாலையில் உள்ள மாணவர்களின் தாய்மார்கள் கூறுகிறார்கள், ஆகையால் என் மகளை சிறிய
பாடசாலையில் சேர்த்துக்கொள்ளுமாறு தாயொருவர், தனது பிள்ளையை தோளில் சுமந்தவாறு ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
அங்கு வந்த பொலிஸார், அப்பெண்ணை அங்கிருந்து செல்லுமாறு வலியுறுத்தினர். எனினும், தாய் தனது வயிற்றில் பிள்ளையை சுமக்க முடியும்
என்றால், தாயால் ஏன்? தோளில் சுமக்க முடியாது என்றும் அப்பெண் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இந்த காணொளி, சமூக வலைத்தளங்களில் பெரும்பாலானவர்களின் கவனத்தை ஈர்த்தது.
எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துகொள்ள வேண்டாம் ஒரு சிறிய பாடசாலையிலாவது சேர்த்துக்கொண்டால் போதும் என்றும் மன்றாடினார்.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ராஜாங்கனை பிரதேசத்தைச் சேர்ந்த தாய் நாட்டில் இயற்றப்பட்ட சட்டமொன்றைக் காரணங்காட்டி எனது பிள்ளையை பெரிய பாடசாலைகளில் இணைத்துக்கொள்ள மறுக்கிறார்கள் என்றார்.
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கியத் தலைவர்களில் ஒருவரான செல்வபாக்கியம் சுதாகரன், கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் தலைமறைவாகி இருந்தபோது, இலங்கையால் விடுக்கப்பட்ட உத்தியோகபூர்வ அறிவித்தலின் பிரகாரம், சர்வதேச பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, நாடுக்கு அனுப்பிவைக்கப்பட்ட செல்வபாக்கியம் சுதாகரன் தொடர்பில் சட்டமா அதிபர் விடுத்திருந்த ஆலோசனைக்கு அமையவே அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டதன் பின்னர், தங்களுடைய பிரிவில் 90 நாட்கள் தடுத்துவைத்து விசாரணைக்கு உட்படுத்தியதாக பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
புலிகளின் முக்கிய தலைவருக்கு விளக்கமறியல்
எல்.ரி.ரி.ஈ அமைப்பு தொடர்பில் இந்நாட்டு படையினருக்கு தகவல்களை வழங்கிய நபர்களை படுகொலைச் செய்தல் உள்ளிட்டவை இந்த சந்தேகநபர் உள்ளிட்ட குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது.
அதற்கான திட்டங்களை இக்குழுவினர் தீட்டி வந்ததாக விசாரணைகளின் ஊடாக தகவல்கள் கிடைத்துள்ளன என்றும் விசாரணைப் பிரிவினர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.
மூதூர் பிரதேசத்தை வசிப்பிடமாகக் கொண்ட மேற்படி நபர், 2019 ஆம் ஆண்டு நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண பிரபல தலைவரான “இலங்கீத் மாஸ்டர்” என்பவருடனேயே இவர் தப்பியோடியுள்ளார் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
இவ்விருவம் இந்நாட்டுக்குள் புலிகள் அமைப்பை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நிதி சேகரித்தல் உள்ளிட்ட செயற்பாடுகளில் ஈடுபட்டிருந்துள்ளனர் என்பதும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது என்றும் நீதிமன்றத்தில் அறிக்கையிடப்பட்டுள்ளது.
லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
பிரிட்டன் லண்டன் புறநகர் பகுதியில் முருகனின் பெயரால் ஆலயம் ஒன்றை அமைத்து ,தன்னை தெய்வ புனிதன் என காண்பித்த காம சாமியாரை காப்பாற்றும் நகர்வில்,சில கூலிகளை செயல்பட்டு வருகின்றன .
பெண்களுடன் ஆபாசமாக பேசி நித்தியானந்தா பாணியில் ,சித்து விளையாட்டு ஆடிய, ஓம் ஓம் சர சவண பாலியல் சாமியார் ,தன்னை மனித புனிதாக்க ,பலத்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார் .
லண்டன் மலையாள பாலியல் சாமியாரால் ஓடும் பக்தர்கள்
அதற்காக பல ஆயிரம் பவுண்டுகளை வாரி இறைத்து ,கூலிகள் ஊடக தன்னை புனிதனாக காண்பிக்க முயல்கிறார் என முன்னால் பக்த கோடிகள் தெரிவிக்கின்றன .
காணொளியில் பெண்ணுக்கு நாக்கை காட்டுவதும் ,மேலும் அந்தரங்க லீலையில் ஈடுபட்ட்தும் ,பல மக்களிடம் மிரட்டி பணம் பறித்தார் என ,பல பிரதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க பட்டதாக ,
கருத்துக்கள் ,காணொளிகளாக சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன .
இவ்வாறான நிலையில் காவல்துறையால் கைது செய்யப்பட்டு ,
விசாரணைகளை எதிர்கொண்டு வரும் சாமியார் செயலினால் ,குறித்த ஆலயத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டுள்ளது .
மேலும் சாட்சிகளை மிரட்டி அதில் இருந்து பின்வாங்க வைக்கும் நடவடிக்கையில் ,விஷமிகள் ஈடுபட்டு வருகின்றனர் ..
மேலும் வழக்கை நடத்தி வரும் நபர்களின் பேருக்கு களங்கத்தை ஏற்படுத்தி ,மனசோர்வை உண்டாக்கும் நடவடிக்கையை திட்டம் இட்டு செய்து வருகின்றனர் .
மேலும் பக்த கோடிகள் வரவு வீழ்ச்சியடைந்து விட்டது .அதனால் அந்த ஆலயத்தின் வியாபாரம் தெட்ஷனை வீழ்ச்சியடைந்து விட்டது .
மேலும் தனது வழக்கை திசை திருப்பவுவதில் இருந்து தப்பபிக்கும் நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்க படுகிறது .
அதனால் இந்த புனித புதிய கவர்ச்சி விளம்பரத்தில் ,லண்டன் ஓம் ஓம் புடி நித்தியானந்தா சாமியார் ஈடுபட்டுள்ளார் என மக்கள் பேசி கொள்கின்றனர்
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளதாக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார்.
இன்று (21.06) கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவிலே பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
வெற்றிடம் என்ற விடயம் கனகராயன்குளம் மகாவித்தியாலத்திற்கு மட்டுமான பிரச்சனை இல்லை. வடக்கு, கிழக்கில் பல இடங்களிலும் காணப்படுகின்ற ஒரு பிரச்சனையாகும்.
வடக்கில் பிறப்பு வீதம் குறைவடைந்து விட்டதால் புலம்பெயர் உறவுகளுக்கு வடக்கு ஆளுனர் விட்ட கோரிக்கை
வடக்கை பொறுத்தவரை சுமார் 194 பாடசாலைகள் மாணவர்கள் இல்லாமையினால் மூடப்பட்டிருக்கின்றது. இதற்கு காரணம் கிராமப்புறங்களில் இருந்து நகரங்களை நோக்கி மாணவர்கள் நகரத் தொடங்கியிருக்கின்றமையும், பிறப்பு வீதம் குறைந்து செல்வதுமே ஆகும்.
இதே நிலை மட்டக்களப்பில் 07 வருடங்கள் அரச அதிபராக கடைமையாற்றும் போதும் ஏற்பட்டது. இதற்கும் காரணமாக பிறப்பு வீதம் குறைவடைந்து வருகின்றமை மற்றும் 01ம் வகுப்பிலே மாணவர்களை அனுமதிப்பதில் சில பாடசாலைகளில் பூச்சிய மட்டத்தில் காணப்படுகின்றதாகவும் பிரதேச செயலாளர்களால் அப்போது தெரிவித்தனர்.
எனவே இந்த விடயங்கள் புலம்பெயர்ந்த சமூகத்தினாலும் இங்கே வாழ்ந்து கொண்டிருக்கின்ற சமூகத்தினாலும் கருத்தில் எடுக்கப்பட வேண்டும். நாங்கள் வாழ வைக்க வேண்டும் என எண்ணுகின்ற எங்களது சமூகம், இந்த பிரதேசம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் உணர வேண்டும் என்பதுடன் இச்சமூகத்தை வாழவைக்கின்ற வழிவகைகளை செய்கின்றவர்களாக நீங்கள் இருக்க வேண்டும்.
இதேவேளை, சில விடயங்களின் புள்ளிவிபரங்கள் இச்சமூகத்திலே அதிகரித்து காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இச்சமூகத்திலே விவாகரத்து அதிகரித்தல், குழந்தை பேறு குறைவடைந்தமை, வயது சென்ற திருமணங்கள் அதிகரித்து காணப்படுதல் மற்றும் குடிபோதை, போதைவஸ்து, தற்கொலை போன்ற பல்வேறு சமூக பிரச்சனைகள் அதிகரித்து காணப்படுகின்றன.
எனவே இவற்றை எல்லாம் கடந்து இச் சமூகம் வாழ வேண்டும் என்றால் புலம்பெயர்ந்த சமூகம் ஆற்ற வேண்டிய பணி நிறைய இருக்கின்றது. அதேபோன்று சிறிய பணிகளோடு மட்டும் நின்று விடாது இச்சமூகத்திலே புரையோடிப்போயிருக்கின்ற பல்வேறு உளநல பிரச்சினைகளிற்கும் தீர்வு தேட வேண்டிய காலம் தற்போது நிலவுகிறது.
வெறுமனே உரிமை பிரச்சனையோ, அரசியல் பிரச்சனையோ அல்லாமல் எங்களது பிரச்சனைகள் எது என உணர்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இளைய சமூகத்திடமும், மாணவர்களிடையேயும், சிறுவர்களிடையேயும், குடும்பங்களிடையேயும் புரையோடிப்போயிருக்கின்ற சமூக உளநல பிரச்சினைகளிற்கு தீர்வு காண வேண்டிய தேவையும் அவசரமும் இன்று எங்களிடம் காணப்படுகின்றது.
அதை இங்கே கூடியிருக்கின்ற புலம்பெயர் சமூகங்களும், உள்ளூர் சமூகங்களும் இணைந்து செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு
வவுனியா கனகராயன்குளம் மகாவித்தியாலயத்தின் நூற்றாண்டு விழாவில் இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் வன்னி மன்னன் பண்டாரவன்னியன் ஆகியோரின் சிலைகளும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக வடமாகாண ஆளுனர் பீ.எஸ்.எம். சாள்ஸ் கலந்து கொண்டு புதிதாக அமைக்கப்பட்ட பாடசாலையின் பிரதான நூழைவாயிலினை திறந்து வைத்ததுடன், கௌரவ விருந்தினர்களான வவுனியா வடக்கு வலயக்கல்வி பணிப்பாளர் லெனின் அறிவழகன், மற்றும் பாடசாலையின் பழைய மாணவர் த.இராசரத்தினம் ஆகியோரால் திருவள்ளுவர், பண்டாரவன்னியன் மற்றும் இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி மறைந்த கலாநிதி அப்துல்கலாம் ஆகியோரின் சிலைகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தது.
இந்திய முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் மற்றும் பண்டாரவன்னியன் ஆகியோரும் சிலைகள் வவுனியாவில் திறந்து வைப்பு

இதன்போது சாதாரண தரம், உயர்தரம் மற்றும் விளையாட்டுக்களில் சிறந்த பெறுபேறுகளை பெற்றவர்களிற்கான கௌரவிப்புகளும் இடம்பெற்றிருந்தது.

பாடசாலை அதிபர் கோ.குலேந்திரகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பாடாசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
யாழ்ப்பாண வீதியில் 2 வைத்தியர்கள் வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்
யாழ்ப்பாண வீதியில் 2 வைத்தியர்கள் வீடுகளின் மீது குண்டுத்தாக்குதல்
யாழ்ப்பாணம் கந்தர்மடம் பழம் வீதியில் இரு மருத்துவர் வீடுகள் மீது குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது .
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காணிப்பிணக்கு காரணமாக இந்த பெட்ரோல் குண்டு தாக்குதல் இடம் ம்பெற்றுள்ளது .
குறித்த சம்பவத்தை அடுத்து போலீசாரை விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் ,
கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்
கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுநருமான செந்தில் தொண்டமான், மியாசாகி பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே
மட்ஷிதாவை சந்தித்து கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தில் சுற்றுலாத்துறையை ஊக்குவிப்பது குறித்து கலந்துரையாடினார்.
இலங்கையின் நீண்டகால நண்பரான மியாசாகியின் பாராளுமன்ற உறுப்பினர் ஷிம்பே மட்ஷிதாவின் அழைப்பின் பேரில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஜப்பான் பாராளுமன்றத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.
ஜப்பான் பாராளுமன்றத்திற்கு விஜயம் மேற்கொண்ட ஆளுநர் செந்தில் தொண்டமான், இலங்கை மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தல் மற்றும் இரு தரப்பு சுற்றுலாத்துறையை ஊக்குவித்தல் குறித்தும் கலந்துரையாடினார்.
கிழக்கு மாகாண ஆளுநர் ஜப்பானுக்கு விஜயம்
ஜப்பானில் உள்ள மியாசாகி கடற்கரைக்கு வருகை தரும் உலாவர்கள் (sufers) ஊடாக இலங்கையில் கிழக்கு மாகாணத்தில் அமைந்துள்ள உலகத் தரம் வாய்ந்த உலாவல் இடங்களில் (surf-spot) ஒன்றாக அருகம்பே கடற்கரையை ஊக்குவிக்க கடற்கரை அதிகாரிகள் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையையும் முன்வைத்தார்.
அத்துடன், அருகம்பே போன்ற உலாவல் இடங்களில் (surf-spot) சமமான ஆற்றலைக் கொண்ட ஜப்பானின் மியாசாகி கடற்கரையை ஊக்குவிப்பது போல், அருகம்பே கடற்கரையை உள்ளூர் அதிகாரிகளால் சர்வதேச உலாவர்களுக்காக (Surfers) ஊக்குவிக்கப்படும் எனவும் ஷிம்பேய் மட்ஷிதாவிடம் கூறினார்.
அருகம்பே கடற்கரையை சர்வதேச உலாவர்களுக்கு (Surfers) ஊக்குவிப்பதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்வதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஷிம்பேய் மட்ஷிதா ஆளுநரிடம் உறுதியளித்தார்.
மேலும் ஜப்பானிய சுற்றுலாப் பயணிகளுக்காக கிழக்கு மாகாணம் மற்றும் மலையகத்தின் சுற்றுலாத் தளங்களை மேம்படுத்துவது குறித்தும் ஆளுநர் கலந்துரையாடினார். அதற்கும் ஷிம்பேய் மட்ஷிதா தனது பூரண ஒத்துழைப்பை வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளார்.
ஒருவர் சுட்டு கொலை
கொட்டாவை தர்மபால கல்லூரிக்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கி சூடடில் ஒருவர் படுகொலை செய்ய பட்டுள்ளார் .
பலியானவர் 33 வயதுடைய இளம் வாலிபர் என அடையாளம் காணப்பட்டுள்ளது ,இந்த துப்பாக்கி சூட்டு படுகொலைக்கான காரணம் உடனடியாக தெரியவாவில்லை .
போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
இந்த நாட்டில் ஒட்டு மொத்தமாக மலையக மக்களின் 17 இலட்சம் வாக்குகள் இருப்பதாகவும்இந்த வாக்குகள் இல்லாமல் எதிர்காலத்தில் யாரும் ஆட்சியமைக்கவோ அல்லது ஜனாதிபதி
ஆகவோ முடியாது என்றும் தெரிவித்த பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல்சுரேஷ் இந்த வாக்குகளை எதிர்காலத்தில் எவரும் ஏலம் போட இடமளிக்க மாட்டேன் என்று தெரிவித்தார்.
மத்துரட்ட பெருந்தோட்ட நிர்வாகத்தை பொறுப்பேற்று முகாமைத்துவம் செய்யும் ஹைபொரஸ்ட் தோட்ட நிர்வாகம் அத் தோட்ட தொழிலாளர்களுக்கு
இழைத்து வரும் பல்வேறு அநீதிகளுக்கு தீர்வு காணும் வகையில் நுவரெலியா மாவட்ட தொழில் திணைக்களத்தில் திங்கட்கிழமை (19) காலை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
இதையடுத்து இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,
“இன்று இந்த நாட்டில் வாழும் எமது ஒட்டு மொத்த மலையக மக்கள் பொருளாதார சிக்கலுக்கு முகம் கொடுத்துள்ள அதேநேரத்தில் கல்வியில் சிறந்தவர்களாக, சிந்தித்து செயலாற்றக்கூடிய சக்தியுள்ளவர்களாகவும் இருக்கின்றனர்.
இந்த நிலையில் கடந்த காலங்களைப் போல எமது மலையக மக்களின் வாக்குகளை யாரும் விலை பேசிட முடியாது. குறிப்பாக மலையக மக்களின் வாக்குகளை விலை பேசிட இடம் கொடுக்க மாட்டேன்.
ஆகவே மலையக மக்களுடைய இந்த 17 இலட்சம் வாக்குகள் இல்லாமல் யாரும் இந்த நாட்டில் அரசாங்கத்தை அமைக்கவோ அல்லது ஜனாதிபதி ஆகவோ முடியாது என்று நாம் ஒரு தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்போம்.
அதேநேரத்தில் எம்மிடத்திலும் சில குறை நிறைகள் உள்ளது. அவற்றை நிவர்த்தி செய்து கொண்டு எமது பிரதநிதித்துவத்தை அதிகரிக்க வேண்டும்.
அத்துடன் எமது மலையக மக்களுக்கும், மலையகம் சார்ந்த ஏனைய மக்களுக்கும் வாழ்வாதாரம் உட்பட பொருளாதார பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ள இந்த நிலையில் தேர்தல் ஒன்று பற்றி சிந்திக்க முடியாதுள்ளது.
மலையக மக்களின் வாக்குகளை ஏலம் போட இடமளியேன்
அதேநேரத்தில் பெருந்தோட்ட மலையக மக்களுக்கும் மலையகத்தை சார்ந்த ஏனைய மக்களுக்கும் சமுர்த்தி உதவிகள், உலக வங்கியால் வழங்கப்படும் விசேட கொடுப்பனவுகள், வருமானம் குறைந்தவர்களாக வழங்கப்படும் சலுகைகள் எமது மக்களுக்கு வழங்குவது அரிதாக உள்ளது.
ஆகவே மலையக மக்கள் யாவரும் வறுமை காட்டுக்கு கீழ் உள்ளவர்களாக காணப்படுவதால் நாட்டில் ஏனைய மக்களுக்கு வழங்கப்படும் உதவு பட்டியலில் இவர்களும் உள்ளாக்கப்பட்ட வேண்டும் என ஜனாதிபதியிடம் வேண்டுகோள் முன் வைத்துள்ளேன்.
அதேநேரம் ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக அதிகாரிகளை நியமித்துள்ளார்.
எனவே எதிர்காலத்தில் மலையகத்தை சார்ந்த மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி அதிகாரிகள் மற்றும் கிராம உத்தியோகஸ்தர்கள் பொறுப்புடன் செயலாற்றுவார்கள் என நம்புகிறேன்.
இவ்வாறு நியமிக்கப்படுவோர் தமது பொறுப்புகளை மீறும் பட்சத்தில் அது ஒரு பாரிய பாதிப்பை இந்த நாட்டில் ஏற்படுத்தும். அது தேர்தலிலும் இருக்கலாம் அல்லது வேறு ஏதேனும் விடயங்களில் இருக்கலாம்.
எனவே எமது மக்களின் வாழ்வாதார பிரச்சினை பொருளாதாரம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரச்சின்களுக்கு சிறந்த தீர்வு காணப்படாமல் தேர்தல் ஒன்றுக்கு சிந்திக்க முடியாது” என்றார்
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யும். ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு
மாவட்டங்களிலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாடெங்கும் மழை மக்களுக்கு எச்சரிக்கை
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் புத்தளம், அம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி
பிரித்தானிய தமிழர்களுக்கு பெருமை சேர்த்த சிறுமி
ஜோர்ஜியாவில் நடைபெற்ற 8 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான பிரிவில் வாகையாளராக பிரித்தானியா வாழ் தமிழ் சிறுமி முதலாவது இடம் பிடித்துள்ளார்.
லண்டன் கரோ பகுதியை சேர்ந்த போதனா சிவானந்தன் பெண்களுக்கான பிரிவில் வாகையாளராக முதலாவது இடம் பிடித்துள்ளார்.
உலகளவில் நடைபெற்ற இத் தொடரின் Rapid chess மற்றும் Blitz chess ஆகிய இரு வகையான போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளார்.
போதனா கலந்து கொண்ட அனைத்துப் போட்டிகளிலுமே வென்றுள்ளார்.தமிழ்நாட்டை சேர்ந்த சிவானந்தன் தம்பதியின் மகளான
போதனா பல அபார திறமைகளை வெளிக்காட்டி வருவதாக பலரும் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
நன்றி ஈழம் ரஞ்சன்
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
இலங்கையில் உள்ள வங்கிகள் நிதி சீராக உள்ளது ,அவற்ற்றுக்கு பாதிப்பு ஏற்பாடாது எனவும் ,வங்கிகள் நாட்டை விட்டு ஓடாது என,ஆளும் அரசின் முக்கிய அமைச்சர் ஒருவர் முழங்கியுளளார் .
இவரது இந்த உத்தரவாத கருத்தின் மூலம் ,இலங்கையில் வாங்கி ஒன்று மிக மோசமான நிதி நெருக்கடிக்கு ,உள்ளாகி போவதாக மறைபொருளில் கூறியுள்ளார் .
வங்கிகள் ஓடாது பணத்தை வைப்பு செய்யுங்கள் அரசு
மக்கள் வங்கிகளில் இருந்து பணத்தை மீள பெற்று வருவதால் ,வங்கிகள் நெருக்கடியை சந்தித்து வருகின்றன .
வட்டி வீதங்கள் அதிகமாக வழங்க படுகின்ற பொழுதும் ,மக்கள் அச்ச நிலை காரணமாக பணத்தினை மீள பெற்று வருகின்றமை ,நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது .
மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
இலங்கை அனுராதபுரம் மருத்துவ மனையில் மூத்த மருத்துவர்கள் இவருக்கு இடையில் , ஏற்பட்ட மோதல் சம்பவம் கை கலப்பில் முடிந்துள்ளது .
இரு மருத்துவர்களுக்கு இடையில் நீண்டகாலமாக உள்ளக பனிப்போர் இடம்பெற்ற வண்ணம் இருந்துள்ளது ,அதுவே ஒருநாள் வெடித்து கிளம்பி அடிதடியில் முடிந்துள்ளது,.
மருத்துவர்கள் அடிதடி உடைந்த மண்டை
பொறுப்பதிகரியாக விளங்கும் மருத்துவர் , நேரம் ,மற்றும் மேலதிக வேலை நேரம் என்பனவற்றை எல்லாமே வெட்டியுளளார் ,மேலும் பல நெருக்கடிகளை வழங்கியுள்ளார் .
இதனால் ஆத்திரம் உற்ற அவர் தாக்குதலை நடாத்தியுள்ளார் ,தற்போது இருவரும் விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டு வருகின்றனர் .
ஒருவருக்கு சுகாதார அமைச்சர் நெருக்கமாக உள்ளதால் ,மற்றவர் பழிவாங்க படலாம் என எதிர் பார்க்க பாடுகிறது .
பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பு புதிய ஓடுபாதை
பலாலி விமான நிலையம் விஸ்தரிப்பு புதிய ஓடுபாதை
யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஓடுபாதைகள் ,புனரமைக்க பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது .
அதற்கு ஏற்ப புதிய ஓடுபாதை மற்றும் ,900 ஈட்டர் ஓடுபாதை புனரமைப்பு என்பன இடம்பெற் உள்ளதாக அறிவித்துள்ளது .
உல்லாச பயணிகள் வருகை அதிகரிப்பும் ,அதனால் ஏற்படும் சிரமங்களை தவிர்க்கும் நோக்குடன் இந்த விஸ்தரிப்பு இடம்பெறுகிறது .
இந்த புதிய அபிவிருத்திக்கு என 168 மில்லியன் ஒதுக்க பட்டுள்ளது .இதில் பல மில்லியன் பொறுப்புள்ளவர்களினாலே ஒதுக்க படும் என எதிர் பார்க்க படுகிறது .




























