அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்

அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம்

அர்ச்சுனாவை விரட்டிய தேர்தல் ஆணையம் .இடம்பெறவுள்ள உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட வேட்பு மனுதாக்கல் செய்திட சென்ற ஊசி கட்சி வேட்பு மனு தாக்கல் இரத்து செய்ய பட்டுள்ளது

எனினும் அதற்கு செலுத்த பட்ட பணம் மீள் கையளிக்க படும் என தெரிவித்துள்ளது .


இந்த தேர்தலுக்கு 46 லட்சம் வழங்க படும் . எனவே அந்த பணத்தை எடுத்து அவர் என்ன செய்ய போகிறார் என்பதே நமது கேள்வியாக உள்ளது .

மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை
Posted in இலங்கை செய்திகள்

மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை

மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை

மிருசுவில் படுகொலை கோட்டா மன்னிப்பு வழங்கிய குற்றவாளிக்கு பயணத்தடை ,யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் எட்டு தமிழர்களை படுகொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் மரணதண்டனை விதிக்கப்பட்டு

பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பொதுமன்னிப்பு வழங்கப்பட்ட குற்றாவளி சுனில் ரத்நாயக்கவிற்கு உயர்நீதிமன்றம் வெளிநாட்டு பயணத்தடையை வியாழக்கிழமை (20) விதித்துள்ளது.

குற்றவாளியான சுனில் ரத்நாயக்கவிற்கு மார்ச் 2020 இல் ஜனாதிபதியாக பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ச பொதுமன்னிப்பு வழங்கியமைக்கு எதிராக

தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை பூர்த்தியாகியுள்ள நிலையிலேயே நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ச வழங்கிய பொதுமன்னிப்பிற்கு எதிராக மாற்றுக்கொள்கைகளிற்கான நிலையத்தின் நிறைவேற்று பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

மிருசுவிலில் இருந்து இடம்பெயர்ந்த 9 பேர், 2000ம் ஆண்டு டிசம்பர் 19ம் திகதி தங்கள் வீடுகளை பார்ப்பதற்காக மீண்டும் மிருசுவில் பகுதிக்கு

சென்றனர்.இவர்களில் பதின்மவயதினரும்,ஐந்து வயது சிறுவனும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அவர்கள் தங்கள் பகுதிக்கு திரும்பிவந்தவேளை இரண்டு இராணுவத்தினர் அவர்களின் கண்களை கட்டி மோசமாக தாக்கியுள்ளனர்.

ஒரு இளைஞன் அவர்களின் பிடியிலிருந்து தப்பினான்.எனினும் ஏனைய 8 பேரும் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களின் உடல்கள் அருகில் உள்ள பகுதியில் புதைக்கப்பட்டிருந்த பகுதியில் மீட்கப்பட்டன

லண்டனில் கார் விபதில்தமிழர் பலி
Posted in இலங்கை செய்திகள்

லண்டனில் கார் விபதில்தமிழர் பலி

லண்டனில் கார் விபதில்தமிழர் பலி

லண்டனில் கார் விபதில்தமிழர் பலி .லண்டன் மாநகரசபைக்கு உள்ளிட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தமிழ் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார் .

கார் ஒன்றில் மோதுண்டு அவர் பலியான கோர காட்சிகள் வெளியாகியுள்ளன ..வேகமாக வந்த கார் இவ்வாறு மோதி தள்ளியது .

அதில் காரின் கீழே அவர் தலையில் பலமான அடி காயங்களுக்கு உள்ளான நிலையில் பலியாகியுள்ளார் .

சம்பவ இடத்திற்கு வருகை தந்த மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சையை மேற்கொண்ட பொழுதும் ,சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார் என அவரது நட்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன .

கலகலப்பாக அன்பாக பழக்க கூடிய அற்புத நண்பனை பிரிந்து துயரில் வாடுவதாக அவரது நண்பர்கள் தெரிவிக்கின்றனர் .

வெளிநாடுகளில் வீதி விபத்துக்களில் சிக்கி நம்மவர்கள் அதிகம் பலியாகி வருகின்றமை குறிப்பிட தக்கது

அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்
Posted in இலங்கை செய்திகள்

அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்

அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்


அமெரிக்க இந்தோ பசிபிக் கட்டளைத் தளபதி இலங்கை விஜயம்அமெரிக்க இந்தோ – பசிபிக் கட்டளைப் பீடத்தின் (INDOPACOM) கட்டளைத் தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோ புதன்கிழமை (19) அன்று இலங்கைஙை வந்தடைந்துள்ளார்.

இவர் எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நாட்டில் தங்கி இருப்பார் என அமெரிக்கத் தூதரகம் மேலும் குறிப்பிட்டுள்ளது.

கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோவின் விஜயம் தொடர்பில் மேலும் அமெரிக்கத் தூதரகம் குறிப்பிடுகையில்,

நீண்டகாலமாக நீடிக்கும் அமெரிக்க – இலங்கை பாதுகாப்புப் பங்காண்மையினை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும், இந்தோ-பசிபிக் பகுதியில் பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு தொடர்பான

அமெரிக்காவின் தொலைநோக்குப் பார்வையினைப் பகிர்ந்து கொள்வதற்காகவும் இலங்கையின் சிரேஷ்ட அரச அதிகாரிகளுடனும், இராணுவத் தலைவர்களுடனும் அட்மிரல் பப்பாரோ பல சந்திப்புகளை மேற்கொள்வார்.

அத்துடன், இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கும், மற்றும் இந்தோ-பசிபிக் பகுதியில் காணப்படும்

பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்குமான அமெரிக்காவின் தொடர்ச்சியான உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என கூறப்பட்டுள்ளது.

மேலும், இலங்கை- அமெரிக்க இருதரப்பு பாதுகாப்பு உறவை மீண்டும் உறுதிப்படுத்தவும், அமெரிக்க இந்தோ – பசிபிக் முழுவதும் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த பார்வையைப் பகிர்ந்து கொள்ளவும்

கட்டளைத்தளபதி அட்மிரல் சாமுவேல் பப்பாரோவை வரவேற்பதில் மகிழ்ச்சி அளிப்பதாக இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம்
Posted in இலங்கை செய்திகள்

எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம்

எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம்

எம்.பிக்களுக்கு இலத்திரனியல் உபகரணங்கள் வழங்க திட்டம் ,பாராளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான மின்னணு உபகரணங்களை அவர்களின் பதவிக் காலத்தில் பயன்படுத்துவதற்கும் உரிமையளிப்பதற்கும் ஒரு திட்டத்தின் கீழ் வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

பாராளுமன்ற விவகார அமைச்சகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்திற்கு கணினிகள், நகல் இயந்திரங்கள், தொலைநகல் இயந்திரங்கள் மற்றும் மொபைல் போன்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சுற்றறிக்கையின்படி, பொருட்களின் மதிப்பு வாங்கிய பிறகு தவணை அடிப்படையில் வசூலிக்கப்படும்.

பணம் வசூலிக்கப்பட்ட பிறகு, பொருட்களின் உரிமை பாராளுமன்ற உறுப்பினருக்கு மாற்றப்படும்.

எனவே, இந்த நோக்கத்திற்காக ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் பதவிக் காலத்தில் ரூ. 800,000 ஒதுக்க அமைச்சகம் முன்மொழிந்துள்ளது.

முன்னதாக, பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக் காலத்தில், ரூ. 500,000 என்ற இரண்டு தவணைகளின் கீழ் ரூ. 1 மில்லியன் பெற முடிந்தது

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம்

முல்லைத்தீவில் ஐந்து லட்சம் ஏக்கர் காணியை அபகரித்த இராணுவம், என முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .

கடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழர்கள் தொண்ணூறு ஆயிரம் ஏக்கரில் மட்டும் குடி கொண்டுள்ளார்கள் எனவும் ,ஏனைய பகுதிகள் யாவும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதாக ரவிகரன் தெரிவித்தார் .

தொடர்ந்தும் தமிழர் பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தி ,சிங்கள பவுத்த பேரினவாத இராணுவம் நிலை கொண்டுள்ளது .

இறுதி போர் முடிவடைந்ததை அடுத்து தமிழர் முதன்மையான பகுதிகளை ஆக்கிரமித்து சிங்கள இராணுவம் அகல கால் ஊன்றியுள்ளது குறிப்பிட தக்கது .

யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி

யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி

யாழில் காவல்துறை மீது தாக்குதல் அனுரா ஆட்சியின் அடாவடி ,தமிழர் பகுதியில் சிங்கள இனவாத அரசு தமிழருக்கு எதிரான நய வஞ்ச தாக்குதலை நடத்தி வருகிறது .

அதன் ஒரு எதிரொலியாக இந்த சம்பவம் பார்க்க படுகிறது .

ஆளுகின்ற அனுரா ஆட்சியில் தமிழர்கள் மீது வன்மம் கொண்டு தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன .

யாழ்ப்பாணத்தில் போலீசாரை தாக்கிய அந்த வீர தமிழ் மகன் தற்போது தலை மறைவாகியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

மேற்படி காட்சி தற்போது சமூக வலைத்தலங்களில் வைரலாகி வருகிறது .

பெண்கள் மீது தாக்குதல் நடத்தும் அனுரா ஆட்சியின் வண்டவாளம் தமிழர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் ,அனுராவுக்கு எதிரான கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது .

click here video

https://vm.tiktok.com/ZNddxAHvB

21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
Posted in இலங்கை செய்திகள்

21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா

21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா

21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா . அர்ச்சுனா இராமநாதன் தற்போது வயாவிலான் பகுதியில் ,பிரதான வீதிக்கு அருகில் மூன்று மாடியில் ஆடம்பர மாடி வீடு ஒன்றை 21 கோடியில் அமைத்து வருகிறாராம்.

இந்த வீட்டில் ,மொட்டை மாடியில் உலங்குவானூர்தி இறங்கும் வசதி மற்றும் நீச்சல் குளம் என்பன அமைக்க பட்டு வருகிறது .
கிரனைட் கற்கள் பாதிக்க பட்ட வீடாக இது நவீன முறையில் அமைக்க அமைக்க படுகிறதாம்.

உண்ண பணம் இல்லை என தெரிவித்த அர்ச்சுனா இராமநாதன் ,தற்போது திடீரென மூன்று மாடியில் ஆடம்பர வீடு அமைத்து வருவது மக்கள் மத்தியில் தற்போது பெரும் அதிர்ச்சியைஏற்படுத்தியுள்ளது .

கீழ் உள்ள கார் ஒன்றை கோடியில் கொள்வனவு செய்துள்ளாராம்

21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா
21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா

கடந்த மூன்று நாட்களில் மூன்றரை மில்லியன் இலங்கை ரூபாய்கள் அர்ச்சுனா இராமநாதன் பெற்றுள்ளதாக சமூக வலைத்தளங்கள் ஊடாக பரவி வருகிறது .

வெளிநாட்டு தமிழர்கள் கொட்டி கொடுத்த பணத்தில் ஆடம்பரமாக வாழ்ந்து வருகிறார் அர்ச்சுனா .

21 கோடியில் வீடு கட்டும் அர்ச்சுனா

இதேவேளையில் ஒன்றை கோடி ரூபாவுக்கு பென்ஸ் கார் ஒன்றை கொள்வனவு செய்து அதில் தற்போது உலாவி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது .

full video click here

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது
Posted in இலங்கை செய்திகள்

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது

தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று நிறைவடைகிறது ,உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் காலம் இன்று புதன்கிழமை (19) நண்பகல் 12 மணியுடன் நிறைவடைகிறது.

மாவட்ட தேர்தல் அலுவலகத்தில் வைப்புத்தொகை செலுத்தலாம் என்று தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் வைப்புத்தொகை ஏற்றுக்கொள்ளல் கடந்த 3ஆம் திகதி தொடங்கியது.

இதற்கிடையில், உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்வது நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடையவுள்ளது.

அத்துடன், மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டு வருவதாகவும், திங்கட்கிழமை (17) நிலைவரப்படி, உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட அங்கீகரிக்கப்பட்ட பல அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் வைப்புத்தொகை செலுத்தியுள்ளதாகவும் தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது

பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது

பல துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது ,பல துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்ட 31 வயது நபர் ஒருவர் ஹோமாகமவில் உள்ள மேல் மாகாண (தெற்கு) பிரிவு குற்றப்பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் கூற்றுப்படி, ஹோமாகம, கலாவிலவத்தையில் 5 கிராம் ஹெரோயினுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

விசாரணையில், கோணபால பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்தது.

அவர் மே 12, 2023 அன்று அவிசாவெல்லவில் இரண்டு நபர்களைத் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டிருந்தார்.

2023 மே 26 அன்று அவிசாவெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என்றும், அதில் ஒருவர் காயமடைந்தார் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

2023 செப்டம்பரில் அவிசாவெல்லையில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சந்தேக நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும், இதன் விளைவாக இரண்டு பேர் கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு
Posted in இலங்கை செய்திகள்

அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு

அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு

அர்ச்சுனாவுக்கு ஊடகத் தடை விதிப்பு ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாவுக்கு நாளை வியாழக்கிழமை (20) முதல் மே 8 ஆம் திகதி வரை ஊடகத் தடை விதிக்கப்படும் என்று சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன புதன்கிழமை (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

இந்தக் காலகட்டத்தில் பாராளுமன்றத்தில் எம்.பி. கூறும் எந்தவொரு கருத்தும் ஹன்சாட்டில் இருந்து நீக்கப்படும் என்றும் சபாநாயகர் கூறினார்.

பல்வேறு தனிநபர்கள் மற்றும் சமூகங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்த அறிக்கைகள் தொடர்பாக தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து வந்த ஏராளமான புகார்களைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

“அவதூறான கருத்துக்களைத் தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்ற எனது கோரிக்கைகளை எம்.பி. பலமுறை புறக்கணித்து வருவதால், நாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம்” என்று சபாநாயகர் கூறினார்.

யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு

யாழ் வடமராட்சியில் ஆணின் சடலம் மீட்பு

யாழ். வடமராட்சியில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது.

நெல்லியடி, புறாப்பொறுக்கி, ஆலடி எரிபொருள் நிலையத்துக்கு அண்மையாக உள்ள வெற்றுக் காணி ஒன்றிலிருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

அந்தப் பகுதியில் 65 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டமை தொடர்பில் வல்வெட்டித்துறைப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டது.

பொலிஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்தனர்

காதலியை கொன்று சரணடைந்த காதலன்
Posted in இலங்கை செய்திகள்

காதலியை கொன்று சரணடைந்த காதலன்

காதலியை கொன்று சரணடைந்த காதலன்

காதலியை கொன்று சரணடைந்த காதலன் ,தனது காதலியை கத்தியால் குத்தி கொலை செய்ததாக கூறி வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த இளைஞன், இது தொடர்பான ஆரம்பக்கட்ட விசாரணைகளின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வென்னப்புவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வைக்கால் பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றில் செவ்வாய்க்கிழமை(18) மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பிரதேசத்தை சேர்ந்த 19 வயதுடைய விமல்கா துஷாரி என்ற யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண், மாரவில வீரஹேன பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞன் ஒருவருடன் சுமார் ஒன்றரை வருட காலமாக காதல் உறவில் இருந்த நிலையில் அண்மையில் , இந்த உறவை முறித்துக் கொள்ளலாம் என தனது காதலனிடம் கூறியுள்ளார்.

இது தொடர்பாக குறித்த பெண்ணின் வீட்டில் வைத்து இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து இந்த கத்திக்குத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்
Posted in இலங்கை செய்திகள்

தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்

தென்னகோன் நீதிமன்றத்தில் சரண்

தென்னகோன் நீதிமன்றத்தில் சரண் ,முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

பல நாட்களாக தேடப்பட்டு வந்த நிலையில் இன்று சரண் அடைந்துள்ளார் .அப்படி என்றால் இதுவரை இவருக்கு அடைக்கலம் வழங்கியது யார் என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது

எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க
Posted in இலங்கை செய்திகள்

எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க

எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க

எனது வயிறு தெய்வம் தந்த வயிறு சாமர சம்பத் தசாநாயக்க ,நானும், எனது வயிற்றை குறைப்பதற்காக நடக்கின்றேன். குறையவில்லை. அதற்காக நான் என்ன செய்வது, எனது வயிறு இங்குள்ளவர்களுக்கு பிரச்சினை என்றால்,

என்னதான் செய்து. இந்த வயிறு தெய்வம் தந்த வயிறு என்று, பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசாநாயக்க தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் சிறப்புரிமை பிரச்சினையை செவ்வாய்க்கிழமை (18) எழுப்பிய அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முன்னதாக சிறப்புரிமை பிரச்சினையை முன்வைத்த எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க, சமீபத்தில் நடைபெற்ற

கோப் குழுக் கூட்டத்தின் போது, ​​தன்னை ‘பதுல்லே படா’ என்று குறிப்பிட்ட கோப் உறுப்பினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் வலியுறுத்தினார்.

“பதுல்லே படா’ என்று கோப் உறுப்பினர் குறிப்பிட்டது தெளிவாகத் தெரிகிறது, ஏனெனில் பதுளை மாவட்டத்தில் பெரிய வயிறு கொண்ட வேறு எந்த பாராளுமன்ற உறுப்பினரும் இல்லை. அமைச்சர் சமந்த வித்யாரத்ன உட்பட

பதுளையில் உள்ள மற்றவர்களுக்கு வயிறு இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றும் சாமர சம்பத் தசநாயக்க கூறினார்.

“கோப் உறுப்பினர்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்க வேண்டும், கூட்டங்களின் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென சொல்விக்கொடுக்க வேண்டும்,” என்று அவர் மேலும் கூறினார்.

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு

சுகாதார தொழிற்சங்கங்கள் பணிப் புறக்கணிப்பு ,சுகாதார நிபுணர்களின் கூட்டமைப்பு, நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர் ஒன்றியம் உள்ளிட்ட 19 சுகாதார தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து, தமக்கான கொடுப்பனவுகள்

குறைக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து செவ்வாய்க்கிழமை (18) காலை 7 மணிமுதல் நாளை புதன்கிழமை (19) காலை 7 மணி வரை அடையாள பணிப் புறக்கணிப்பை முன்னெடுத்துள்ளது.

அடையாள பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டாலும் அத்தியாவசிய மற்றும் அவசர சேவைகள் தொடர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார தொழிற்சங்கங்களின் சம்மேளனத்தின் பிரதிநிதிகளான சமன் ரத்னபிரிய மற்றும் ரவி குமுதேஷ் ஆகியோர் திங்கட்கிழமை (17) நிதி அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாடியுள்ளனர்.

நிதி அமைச்சினூடாக பிரச்சினையைத் தொழில்நுட்ப ரீதியில் தீர்க்க முயன்ற முயற்சிகள் தோல்வியில் முடிந்ததை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

வரவு – செலவுத் திட்டத்தால் ஏற்பட்ட அநீதிக்கு அதிகாரிகளிடம் சரியான பதில்களில்லை, மேலதிக நேரக் கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை, அரச விடுமுறை கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளமை, பதவி உயர்வுகள்

குறைக்கப்பட்டுள்ளமை, சலுகைகள் தொடர்பாக எவ்வித பதில்களும் கிடைக்காமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து இந்த வேலைநிறுத்தம் முன்னெடுக்கப்படுகின்றது

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன்

யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் ,யாழில் இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரியின் மகன் திங்கட்கிழமை (17) நீதிமன்றத்தில் ஆஜராகிய நிலையில் 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது

வழக்கு ஒன்றை இல்லாது செய்வதாக கூறி, யாழ். தலைமை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக கடமையாற்றியவரின் மகன் ஒருவர்

20 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்றுள்ளார். இந்நிலையில் இலஞ்சம் வழங்கியவர் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

அந்த வகையில் குறித்த பொலிஸ் அதிகாரி முல்லைத்தீவு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் இலஞ்சம் பெற்ற நபரை கைது செய்யுமாறு யாழ். நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்நிலையில் குறித்த சந்தேகநபர், சட்டத்தரணி ஊடாக நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (17) முன்னிலையாகினர்.

இதன்போது குறித்த சந்தேக நபரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

பொருட்களின் விலைகள் குறைப்பு
Posted in இலங்கை செய்திகள்

பொருட்களின் விலைகள் குறைப்பு

பொருட்களின் விலைகள் குறைப்பு

பொருட்களின் விலைகள் குறைப்பு ,சில அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலைகளை லங்கா சதொச நிறுவனம் குறைத்துள்ளது.

அதன்படி, ஒரு கிலோ கிராம் சிவப்பு சீனியின் விலை 8 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 277 ரூபாய் ஆகும்.

ஒரு கிலோ கிராம் சிவப்பு பருப்பு 4 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 279 ரூபாய் ஆகும்.

ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலை 2 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 162 ரூபாய் ஆகும்.

ரின் மீன் ஒன்றின் விலை 10 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 490 ரூபாய் ஆகும்.

அத்துடன், ஒரு கிலோ கிராம் உருளைக்கிழங்கின் விலை 13 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 185 ரூபாவாக உள்ளது.

ஒரு கிலோ கிராம் வெள்ளை கௌப்பியின் விலை 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 750 ரூபாய் உள்ளது.

ஒரு கிலோ கிராம் பெரிய வெங்காயத்தின் விலை 25 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 160 ரூபாய் என பதிகாகியுள்ளது.

ஒரு கிலோ கிராம் வெள்ளைப்பூண்டின் விலை 20 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் புதிய விலை 575 ரூபாவாகவும் காணப்படுகின்றது.

வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்
Posted in இலங்கை செய்திகள்

வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்

வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்

வடக்கு கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம் ,பட்டலந்த சித்திரவதை முகாம் போல, வடக்கு, கிழக்கில் இயங்கிய மிக பயங்கரமான சித்திரவதை முகாம்களை அம்பலப்படுத்த வேண்டும் என தேசிய மக்கள் சக்தி

அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், தமிழ் மக்கள் என்பதற்காக அதை மூடிமறைத்துவிடவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.

மட்டு. ஊடக மையத்தில் திங்கட்கிழமை(17) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கும் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

1988 ஆம் ஆண்டு இயங்கிய இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் இப்போது அம்பலத்துக்கு வந்துள்ளது. ஜே.வி.பியின் இரண்டாம் கட்ட போராட்டத்தை

மேற்கொண்ட போது அவர்களை அடக்குவதற்காக சட்டவிரோதமாக இந்த முகாம் செயற்பட்டு வந்திருக்கிறது.

1994 சந்திரிக்கா ஆட்சிக்கு வந்தபோது இந்த பட்டலந்த முகாம் தொடர்பாக விசாரணை நடைபெற்றது.

ஆனால் விசாரிக்கப்பட்ட கோவை திறக்கப்படாமல் இருட்டில் புதைத்து வைக்கப்பட்டிருக்கின்றது உண்மைகள் புதைக்கப்பட்டுள்ளன.

37 ஆண்டுகளுக்கு பின்னர் ஜே.வி.பி யினர் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் புதைக்கப்பட்ட உண்மைகள் புதைகுழியில் இருந்து வெளியில் வந்துள்ளது.

தேசிய மக்கள் கட்சி ஆட்சிக்கு வந்திராவிட்டால் இந்த பட்டலந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்காது

ஆகவே பாதிக்கப்பட்டவர்கள் இப்போது ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளியில் வந்திருக்கிறது. எனவே, இது போன்ற வடக்கு, கிழக்கில் பல சட்டவிரோத முகாங்கள் காணப்பட்டன.

1990 ம் ஆண்டு காலப்பகுதியில் இயங்கிய மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் படை முகாமில் 4 கிராமங்களைச் சேர்ந்த குழந்தைகள், முதியவர்கள் தறடறுதட பெண்கள் உட்பட 186 பொதுமக்களை சித்திரவதை செய்து

பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து ஒரே இரவில் படுகொலை செய்து குழிகளில் போட்டு நிரப்பினார்கள். அதில் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் தப்பி வெளிவந்து உண்மைகளை தெரிவித்தார்

இந்த சத்திருக் கொண்டான் முகாம் சித்திரவதை படுகொலை காணாமல் ஆக்கப்படுவதற்கான முக்கியமான முகாமாக இயங்கியது.

அவ்வாறே பல முகாங்கள் இயங்கியதுடன் கொண்டு செல்லப்படுபவர்கள் திரும்பிவராதளவுக்கு கல்லடி, கரடியனாறு, கொண்டை வெட்டுவான், உட்பட பல முகாம்கள் காணப்பட்டன

சித்திரவதை என்பது சாதாரண விடயமல்ல: அமிலத் தொட்டிகளில் இளைஞர்களை போட்டு கொலை செய்துள்ளனர். எங்களைப் பொறுத்தமட்டில் வடக்கு, கிழக்கில் தமிழர்கள் சார்பாக செயற்படுகின்ற தமிழ் தேசிய கட்சிகள்

ஆட்சிக்கு வருவதற்கான வாய்ப்பே இல்லை எண்ணிக்கை ரீதியாக சிறுபான்மையாக இருக்கின்றதால் அதிகாரத்தை கைப்பற்ற முடியாது.

எனவே, எங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்கள் மற்றும் இராணுவத்தினரிடம் சரணடைந்தவர்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களது நீதியை வெளியில் கொண்டு வர முடியாது.

ஆனால் 37 வருடத்திற்கு பின்னர் ஆட்சியை கைப்பற்றியதால் தான் இந்த சித்திரவதை முகாம் வெளி உலகத்துக்கு வந்துள்ளது

உங்கள் தோழர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்பதற்காக பட்டலந்த சித்திரவதை முகாமை கொண்டு வந்திருப்பதாக மற்றவர்களுக்கு கூறாமல் வடக்கு, கிழக்கு

பிரதேசத்திலும் இவ்வாறான படுகொலைகள் சித்திரவதைகள் நடந்துள்ளது போன்ற விஷயங்களை நீங்கள் வெளிக் கொண்டு வாருங்கள் எனக் கேட்டுக்கொண்டார்.

கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு

கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு

கணவன் மனைவியின் சடலங்கள் மீட்பு பொகவந்தலாவ தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று (16) ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றத்தை இனங்கண்ட பொதுக்கள் இரண்டு பேரின் சடலங்கள் கிடப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இரண்டு சடலங்களுக்கு அருகாமையில் நஞ்சு போத்தல் இருப்பதாகவும் சிறிது காலம் சடலமாக மீட்கப்பட்ட பெண் கொழும்பு பகுதியில் கூலி தொழில் செய்து வந்ததாகவும் கொழும்பில் இருந்து தனது வீட்டுக்கு வருகை தந்து நான்கு நாட்கள் கடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததோடு இந்த இரண்டு சடலங்கள் தொடர்பாக சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38 வயதுடைய சின்னையா விஜயகுமார் எனவும் மனைவி 37வயதுடைய பெருமாள் கௌரி என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

இருவரின் சடலங்களும் சட்ட வைத்திய அதிகாரியின் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதோடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரனைகளை பொகவந்தலாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.