Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

சிதறும் பகை

சிதறும் பகை

தோளில் வேங்கையர் கருவி தாங்கியே
வீதி வந்திடுவார்
மண் பறி கயவரை கொன்றே
மணி ஈழம் தந்திடுவார்

வீழ்ந்தனர் என்றே
வீதி வந்தவர்
ஆக்கினை அறுத்திடுவார்
அனலிலே எரித்திடுவார்

மண்ணில் புதைந்த வேரினை காண
மறந்த சிங்களவா
கிளையினை வெட்டி மகிழ்ந்தாய்
மடையன் நீயல்லவா

நாளினில் ஆயிரம் கொன்றே வீசிய
நாடு உனதல்லவா
நாடோடியாய் பறந்தவர்
நாடே வந்தனர் இது புதிதல்லவா ?

முப்படை தாங்கியே வந்தனர் புலிகள்
இப்படை காணலையா ?
இது தான் பதியடா செய்த சதியடா
இலங்கா இரண்டா உடையுதடா …!

வன்னி மைந்தன்
ஆக்கம் 21-01-2021

வன்னி மைந்தன் கவிதைகள்

    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

    புலி பாயும் பொறுத்திரு

    புலி பாயும் பொறுத்திரு

    படை விட்டு ஓடியவா
    பகலவனை கொன்றாயா ..?
    இறந்தான் உடலை இழுத்து
    வீதி உலா வந்தாயா …?

    பிரபாகரன் பிரம்மனடா
    பிறப்பான் நாளையடா
    வதம் செய்ய வருவாண்டா
    வரி புலியை தருவாண்டா

    பத்தாண்டு மேல் கடக்க
    பாரெங்கும் புலி பாயும்
    பூகோள அரசியலில்
    பூகம்பம் இதுவாகும்

    புதை குழியை தோண்டி வைத்து
    புத்த பிரான் ஆட்டுகிறார்
    செய்த கொலை பழிதீர்க்க
    இலங்கை துண்டாகுமடா

    அண்ணன் தம்பி ஆட்சியில
    அடிதடி வீதி வர
    பார் ஓடி பாய்ந்து வரும்
    படை நடத்தி தமிழ் வீடு தரும்

    காடையராம் சிங்களவர்
    காலடியில் கதறுகின்ற
    நாள் ஒன்று நாளை வரும்
    நம்பி இரு சேதி தரும் …!

    பிரபாகரனை கொன்று இழுத்து வந்ததாக கோ….ட் …டா..கூறிய போது
    வன்னி மைந்தன்
    ஆக்கம் 20-01-2021

    வன்னி மைந்தன் கவிதைகள்

      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

      சொல்லிவிடு இதுவா காரணம்

      சொல்லிவிடு இதுவா காரணம்

      முதன் முதலாய் உன் வீடு
      முன் பாதம் நான் பாதிக்க
      ஓடி வந்து விழியாலே
      ஒடிந்து விட அனைத்தவளே

      காற்றில் இடையாட
      கரைந்து போனேண்டி
      மெல்ல நீ சிரிக்க
      வீழ்ந்து இரசித்தேண்டி

      உன் பார்வை ஏக்கம்
      உள்ளத்தை தழுவ
      கண்ணே உன் நினைப்பால்
      கசங்கி போனேண்டி

      விடை பெற முடியா
      விட்டு நான் பிரிய
      கலங்கிய விழி நீர்
      கண்ணில் தெரியுதடி

      நெஞ்சுக்குள் நேசத்தை
      நெருக்கமாய் வைத்தவளே
      கொஞ்சி பேச – உன்
      கொள்கை மறுத்ததென்ன …?

      பொல்லா சாதி
      வேலியாய் நிற்க
      நம்ப மறுத்தாயோ
      நாராய் கிழிந்தாயோ …?

      ஆதியில் இல்லை சாதியடி
      அவனில் இல்லை பிளவடி
      பிந்திய மனிதர் கேடாச்சு
      பிரளய சாதி செய்தாச்சு

      ஒத்தையில நான் தவிக்க
      ஓரமா விட்டவளே
      தவறான முடிவொன்றால்
      தவறிடிச்சே நல் வாழ்வு ….!

      வன்னி மைந்தன்
      ஆக்கம் 19-01-2021

      வன்னி மைந்தன் கவிதைகள்

        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        ஏன் மறந்தாய் பதில் சொல்லு

        ஏன் மறந்தாய் பதில் சொல்லு

        சின்ன வயதில
        சிறகடிக்கும் பருவத்தில
        என் அழகி நீயானாய்
        ஏன் உனக்கு தெரியலையா …?

        தரிசா கிடந்த மண்ணை
        தரமா உயர்த்தியவள்
        மறந்து விலகையில
        மனமேடு கொதிப்பாச்சு

        போர் பிடித்த மண்ணில்
        வேர் பிடித்த உன்னை
        தேடி அலைந்தேனே
        தேவதை நீ கிடைக்கலையே

        முடியும் என நினைத்து
        முன்னேற்றம் பல செய்தேன்
        இறுதிவரை சிக்கவில்லை
        இதயத்தில தங்கவில்லை

        இன்று நினைத்தாலும்
        இதயம் வலிக்கிறது
        ஒன்றி நடந்தவளே
        ஓரமா சென்றதென்ன …?

        பூவான நாள் முதலா
        முன் வர மறுத்தவளே
        ஏன் அச்சம் கொண்டாயோ
        என் அன்பே கூறாயோ …?

        வன்னி மைந்தன்
        ஆக்கம் 18-01-2021

        வன்னி மைந்தன் கவிதைகள்

          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

          உன்னை தா உயிரே

          உன்னை தா உயிரே

          ஏக்கம் வந்து மனதை தாக்க
          ஏனோ உன்னை தேடுது
          ஆக்கம் வந்து உன்னில் வாங்க
          அன்பை தானே பொழியுது

          உந்தன் மொழி காதில் வீழ்ந்தால்
          உள்ளம் ஏறி ஆடும்
          உலகாளும் கோமகனாய்
          உள்ளம் ஏறி பாடும்

          அருகினில நீ இருந்தால்
          அந்தி வானம் சிரிக்கும்
          ஆடை எடுத்து வான் மறைத்து
          அது உறக்கம் போடும்

          வாழ்க்கை என்ற வட்டத்திலே
          வாழ்வு ஒரு சருகு
          ஆக்கம் பெற்று முடிந்து விட்டால்
          அன்று பொழுது மகிழ்வு

          கொஞ்ச நேரம் தழுவையில
          கொடும் துயரும் பறக்கும்
          அந்த நேரம் மட்டும் தானே
          ஆனந்தமே சிறக்கும் …!

          வன்னி மைந்தன்
          ஆக்கம் 16-01-2021

          வன்னி மைந்தன் கவிதைகள்

            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

            நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை

            நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை

            ஓடி நடந்த காற்று
            ஓய்ந்து வீழ்ந்தது
            உயிர் குடித்து கொரனோ
            உடலை தந்தது

            காதில் வந்த செய்தி
            கண்ணீர் தந்தது
            காயப்பட்டு நெஞ்சு
            கதறி துடித்தது

            நேற்று வரை
            நெஞ்சில் ஏறி நின்றவன்
            நேரில் பல கதை
            சொல்லி மகிழ்பவன்

            முக நூலில் வந்து
            முகம் தந்தவன்
            முன் வரும் செய்தி
            முன் பகிர்ந்து செல்பவன்

            மலை போல் உடல்
            கட்டு கொண்டவன்
            மாயம் என்னவோ – நீ
            மண்ணில் வீழ்ந்தது …?

            நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை

            உன்னை கொன்ற கொரனோ
            என்னை விடுமோ ..?
            உயிரில் அச்சம் இன்று
            தொற்றி கொண்டது

            பிறந்த நாளில் முந்தி
            வாழ்த்து சொல்பவன்
            பிரியமுடன் மொழி
            எழுதி வைப்பவன்

            நாளை வாழ்த்த என்னை
            நீயும் இல்லையே
            நண்பா உறங்கு
            ஆத்ம சாந்தியே ….!

            வன்னி மைந்தன்
            ஆக்கம் 15-01-2021
            லண்டனில் கொரனோ நோயினால் 14-01.2021 அன்று உயிர் பிரிந்த நண்பன் இராயரூபன் துயரில் …!

            வன்னி மைந்தன் கவிதைகள்

            நீயா வீழ்ந்தாய்
            நீயா வீழ்ந்தாய்
              Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

              ஏன் என்னை ஏமாற்றினாய்

              ஏன் என்னை ஏமாற்றினாய்

              நீ எறிந்த வெடிகுண்டு
              என் மனதை உடைக்கலையே
              என் மீது காதல் கொண்டு
              அது வீழ்ந்தும் வெடிக்கலையே

              குண்டுக்கே என் மீது
              கொலை வெறி காதலடி
              உங்ககேனோ என் மீது
              இல்லையது பிரியமடி …?

              வாய் எல்லாம் பொய்வைத்து
              வழி யோரம் நடப்பவளே
              விழியிரண்டு நீர் கொட்ட
              வீழ்ந்தழுவாய் காத்திரு

              பாவை உன்னை நான் தேடி
              பாதணிகள் தேய்ந்திருச்சு
              அது கூடி என்னோட
              அரை உடல் இழந்திருச்சு

              என்னை காத்த அது இன்று
              எமன் வாயில் சிக்கிருச்சு
              அதுக்குள்ள பாசம் கூட
              உனக்கில்லா ஏன் போச்சு …?

              வன்னி மைந்தன்
              ஆக்கம் 13-01-2021

              வன்னி மைந்தன் கவிதைகள்

              ஏன் என்னை ஏமாற்றினாய்
              ஏன் என்னை ஏமாற்றினாய்
                Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                பேசும் காதல்

                பேசும் காதல்

                ஏங்க வைத்து ஏங்க வைத்து
                ஏன் கிளியே போனாய்
                எந்த நாட்டு செய்மதியில்
                என்னை தேடி அலைந்தாய்

                உலக நாட்டு உளவுத்துறை
                உன்னை தேடுதோ …?- என்
                உள்ளத்திலே நீ இருந்தாய்
                காணவில்லையே …?

                வானிருக்கும் காலம் மட்டும்
                நீ இருப்பாய்
                வாழும் வரை எந்தன் நெஞ்சில்
                நீ உயிர்ப்பாய்

                நீ தந்த நினைவுகளை
                நான் மறவேன்
                நீ இட்ட முத்தங்களை
                நான் சுவைப்பேன்

                உந்தன் மடி இன்றுவரை
                நெஞ்சம் தேடும்
                அந்த மடி உறங்கிவிட
                ஆயூள் வேண்டும்

                நீ இருக்கும் காலத்திலே
                நான் இறக்க வேண்டும் – உன்
                நீர் விழியை பார்க்க முன்னே
                நான் மறைய வேண்டும்

                நான் இல்லா காலத்திலே
                என் செய்வாயோ ..?
                நீ அழைத்தும் வரமாட்டேன்
                என் செய்வாயோ …?

                உடல் மட்டும் விழி
                முன்னே காண மாட்டேன்
                உள்ளத்திலே நீ இருக்க
                கலங்க மாட்டேன்

                இறக்கும் வரை உன்னுடனே
                நான் வாழ்வேன்
                இது தானே என் காதல்
                புனிதம் என்றேன்

                வன்னி மைந்தன்
                ஆக்கம் 12-01-2021

                வன்னி மைந்தன் கவிதைகள்

                பேசும் காதல்
                பேசும் காதல்
                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  ஏன் இறந்தாய் …?

                  ஏன் இறந்தாய் …?

                  பூத்தவளும் பார்த்ததினால்
                  பூவொன்று பூத்ததம்மா
                  பூங்கொடியும் வீழ்ந்ததினால்
                  பூவென்ன செய்யுமம்மா

                  பாதி வாழ்வு முடியுமுன்ன
                  பார் கடந்து போனதென்ன
                  ஏன் இந்த அவசரமோ
                  ஏ மனமே கூறாயோ ….?

                  விழியெல்லாம் நீர் வைத்து
                  விடை பெற்று போனதென்ன …?
                  ஆகமங்கள் முடியுமுன்ன
                  ஆவி உடல் பிரித்ததென்ன …?

                  பெற்றவளே உன்னை தேடி
                  பிள்ளை இன்று கதறுதம்மா
                  தூக்கினில தொங்க முன்ன
                  துளி கூட என்னலையோ …?

                  உன்கவலை துளி போக்க
                  உற்றாரும் முனையலையோ ..?
                  நட்பான நட்புக்களும்
                  நங்கை உன்னை காக்கலையோ ..?

                  கல கலத்த உன் பேச்சு
                  காதில் இன்னும் ஒலிக்குதடி
                  உன் மரணம் பொய் தானோ
                  உள்ளம் ஏற்க மறுக்குதடி

                  விழியெல்லாம் நீர் வைத்து
                  விடை பெற்று போனவளே
                  எழுந்து வாராயோ
                  எம் துயர் போக்காயோ ,…..!

                  கண்ணீர் அஞ்சலி ….!
                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 11-01-2021
                  கொலண்டில் தூக்கில் தொங்கிய தங்கை துயரில் ….

                  Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                  ஏன் இறந்தாய்

                  ஏன் இறந்தாய்

                  பூத்தவளும் பார்த்ததினால்
                  பூவொன்று பூத்ததம்மா
                  பூங்கொடியும் வீழ்ந்ததினால்
                  பூவென்ன செய்யுமம்மா

                  பாதி வாழ்வு முடியுமுன்ன
                  பார் கடந்து போனதென்ன
                  ஏன் இந்த அவசரமோ
                  ஏ மனமே கூறாயோ ….?

                  விழியெல்லாம் நீர் வைத்து
                  விடை பெற்று போனதென்ன …?
                  ஆகமங்கள் முடியுமுன்ன
                  ஆவி உடல் பிரித்ததென்ன …?

                  பெற்றவளே உன்னை தேடி
                  பிள்ளை இன்று கதறுதம்மா
                  தூக்கினில தொங்க முன்ன
                  துளி கூட என்னலையோ …?

                  உன்கவலை துளி போக்க
                  உற்றாரும் முனையலையோ ..?
                  நட்பான நட்புக்களும்
                  நங்கை உன்னை காக்கலையோ ..?

                  கல கலத்த உன் பேச்சு
                  காதில் இன்னும் ஒலிக்குதடி
                  உன் மரணம் பொய் தானோ
                  உள்ளம் ஏற்க மறுக்குதடி

                  விழியெல்லாம் நீர் வைத்து
                  விடை பெற்று போனவளே
                  எழுந்து வாராயோ
                  எம் துயர் போக்காயோ ,…..!

                  கண்ணீர் அஞ்சலி ….!
                  வன்னி மைந்தன்
                  ஆக்கம் 11-01-2021
                  கொலண்டில் தூக்கில் தொங்கிய தங்கை துயரில் ….

                  வன்னி மைந்தன் கவிதைகள்

                    Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                    என்னை நீ மறந்து விடு

                    என்னை நீ மறந்து விடு

                    உடைந்து போன உன் நினைவுகளை
                    கடந்து போக நினைக்கிறேன்
                    மறந்து போய் ஏனோ
                    மனதில் வந்து முளைக்கிறாய் …?

                    என் மனதை நீயன்று
                    எடுத்தெறிந்து போகையில
                    உன் நினைவால் நானன்று
                    உருவிழந்து தவித்தேனே

                    உன் பதிப்பில் பிழை வைத்து
                    என் படைப்பை அழித்தவளே
                    என் மனதை வெட்டையில
                    ஏன் மனமே துடிக்கலையோ ..?

                    சில காலம் உன் நினைவால்
                    சிறைபட்ட என் வாழ்வு
                    மறு வாழ்வு தேடியின்று
                    மறுபடி முளைக்குதடி

                    இவ்வேளை நீ வந்து
                    இதயத்தை தட்டுறியே
                    தந்தவன் தாலியதை
                    தாமரையே என் செய்வாய் ..?

                    மாறாத நினைவுகளை
                    மனதில் புதைத்து விட்டு
                    ஆறான விழி நீரை
                    அன்பே துடைத்து விடு

                    வன்னி மைந்தன்
                    ஆக்கம் 01-01-2021

                    வன்னி மைந்தன் கவிதைகள்

                    என்னை நீ மறந்து விடு
                    என்னை நீ மறந்து விடு
                      Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                      காதல் வந்தது எப்படி

                      காதல் வந்தது எப்படி

                      நான் நடந்த வீதியில
                      நீ வந்த வேளையில
                      நான் தொலைந்து போனேனே
                      நாயகியை நினைந்தேனே

                      நீ பேசும் போதெல்லாம்
                      நித்தம் நான் இரசிக்கிறேன்
                      நிகழ் காலம் உன் மடியில்
                      நீண்டுறங்க துடிக்கிறேன்

                      நாளை என்ற நாளதனை
                      நான் எண்ண மறுக்கிறேன்
                      நாடி வந்து உன்னடியில்
                      நான் கூட துடிக்கிறேன்

                      சிரிப்பாலே கதை பேசி
                      சிறை வைத்து போபவளே
                      என்ன உந்தன் மந்திரமோ
                      என்னை சுற்ற வைத்த தந்திரமோ …?

                      வன்னி மைந்தன்
                      ஆக்கம் 01-02-2021

                      வன்னி மைந்தன் கவிதைகள்

                      காதல் வந்தது எப்படி
                      காதல் வந்தது எப்படி
                        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                        உனக்காக காத்திருக்கேன்

                        உனக்காக காத்திருக்கேன்

                        காந்த கண் பேரழகி
                        என்னை கவரந்தாய் நீ அழகி
                        உன் உதட்டை நான் மெழுக
                        உரிமத்தை தாராயா …?

                        அம்மியில நீ அரைக்க
                        ஆடி இடுப்பாட
                        என் மனசு கரையுதடி
                        என் வயது கொதிக்குதடி

                        குதிரை நடை பிடித்து
                        குமரி நீ போகையில
                        ஆகாயம் இடியுதடி
                        அகிலம் நடுங்குதடி

                        தொடை காட்டி நீ போக
                        தெரு நாய்கள் வழிமறிக்க
                        சிரித்து போறவளே
                        சிங்காரி நீ தாண்டி

                        உண்மை சொல்லிடவா
                        உள்ளத்தை தொலைத்தேண்டி
                        தேதி ஒன்று தருவாயா
                        தேறி நான் உறங்க …..!

                        வன்னி மைந்தன்
                        ஆக்கம் -27-10-2020

                        வன்னி மைந்தன் கவிதைகள்

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          எட்டப்பரே உமக்கு எச்சரிக்கை …!

                          எட்டப்பரே உமக்கு எச்சரிக்கை …!

                          குண்டெறிந்து வீடழித்து
                          குடி மகிழ்ந்த குடியரசு
                          தந்திடுமா தமிழருக்கு
                          தனி வீடாம் தனி யரசு …?

                          புலி என்று தமிழ் அழித்து
                          புலிவேட்டை முடித்தவர்கள்
                          காலடியில் நசுங்கும் தமிழ்
                          கண்டிடுமா கல் வீடு …?

                          கோவணத்தை இழந்து விட்டு
                          கோடியிலே நிற்கும் தமிழ்
                          ஆவணத்தை காட்டி விடின்
                          அலரி மாளிகை கொஞ்சிடுமா …?

                          கடப்பையில நின்றவர்கள்
                          காலாட்டி நடக்கையில
                          கோல் ஊன்றி நின்றவர்கள்
                          கொதிக்காரா வெடிக்காரா …?

                          காற்சட்டை நனைந்தவர்கள்
                          காரிலே ஊர்வலமாம்
                          நாளை அவர் வருவார்கள்
                          நன்றாக சுற்றி வா

                          ஏளனம் விதைப்பவரே
                          எண்ணி சில ஆண்டுக்குள்
                          முன்னேறி வருவார்கள்
                          முதுகெலும்பு உடைப்பார்கள்

                          தப்பி ஓட நாடின்றி
                          தம்பிகளா தவிப்பீர்
                          கல் வீட்டு கண்ணீர்
                          காலடி கழுவும்

                          ஆறடி இன்றி
                          அடையாளம் தொலைப்பீர்
                          வேரடி இன்றி
                          வேளைக்கு முடிவீர்

                          காலம் சில காலம்
                          காவடிகளே ஆடும்
                          கார்த்திகை பூக்கும்
                          கனரகம் கொதிக்கும் …..!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் -11-10-2020

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          நல்லதை செய் …!

                          நல்லதை செய் …!

                          கம்பெடுத்து வம்பளந்து
                          கண்டதென்ன கரிகாலா …?
                          செம்பெடுத்து நீர் கொடுத்து
                          செவந்து போனாய் பேரழகா

                          உன் படைப்பை நீ படைத்து
                          உலகை ஆளு நீ எடுத்து
                          செம்படையை நீ அமைத்து
                          சென்று வா போரெடுத்து

                          அண்டமெல்லாம் உன்னை கண்டு
                          அஞ்சும் படி செய்
                          ஆகாய பந்தலிலே
                          அறத்தை நாட்டி வை

                          நீ செய்த சேவைகளை
                          நீள் அடுக்கி வை
                          நீண்ட சீன பெரும் சுவராய்
                          நீ பெருக்கி வை

                          எவன் தருவான் உன் ஆட்சி
                          என்று சொல்ல வை
                          இது தானே வேண்டும்
                          இன்றெழுதி வை …!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் -10-10-2020

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          காலம் உன்னில் காறி உமிழும் ..!

                          காலம் உன்னில் காறி உமிழும் ..!

                          ஓடி நடந்தவனின்
                          ஒரு கால் உடைத்தவரே
                          வலியோடு துடிக்கையில
                          வாழ்வு கொடுக்கலையே

                          ஏதொன்றும் கேளாது
                          ஏளனம் செய்பவரே
                          காரணம் புரிந்தது
                          கரிகாலன் இல்லையோ …?

                          உடல் தாங்கும் கால் ஒன்றின்
                          உயர்வு புரியாது
                          விலங்கிட்டு நடப்பவரே
                          விடியல் வெடிக்கும்

                          சிறையிட்டு வதையிட்டார்
                          சிறை படும் காலத்தில்
                          முளை விட்டு வான் எழும்
                          முன்னைய பரம்பரை

                          கிளை விட்டு நிழல் இட்டு
                          கீழான வாழ்வியலை
                          பூகோள அரசியல்
                          புதிதாக மாற்றும்

                          விதைகள் இப்போதே
                          வீழ்ந்து முளைக்கிறது
                          முளைகள் கண்விழிக்க
                          முன்னேறி கால் வைக்க

                          நடந்தவன் ஓடுவான்
                          நானிலம் நமதாகும்
                          அகவை இருபது
                          அரியணை பகிரும்

                          எழுந்திடார் என்றே
                          ஏளனம் செய்தவர்
                          வீழ்ந்திடும் காலத்தில்
                          விடுகதை உமிழும் .!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் -12-10-2020

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          துரோகம் …!

                          துரோகம் …!

                          பூமி அதிர்வொன்று
                          புகுந்தது நெஞ்சுக்குள்
                          இதய மாளிகை
                          இடிந்து போனது

                          சுனாமி அலையாய்
                          சுற்றியது நினைவு
                          கடல் அலையாய்
                          கத்தியது மனது

                          அத்தி வாரம்
                          அசைந்த போது
                          கார் மேகமாய்
                          கண்ணீர் கொட்டியது

                          வினாக்கள் வெடித்தன
                          விடைகள் கொதித்தன
                          அணு குண்டு
                          அகோரமாய் வெடித்தது

                          கணனி மூளைக்குள்
                          கறை படிந்த வைரஸ்
                          கொத்திய போது
                          கோபம் கொதித்தது

                          விரலின் நுனியில்
                          விஷம் உள்ளதை
                          நாவின் அசைவில்
                          நாடே அறிந்தது

                          அறுவடை நாளிற்காய்
                          அருகில் முளைத்ததை
                          காணாமல் இருந்தது
                          காதலின் தப்பு …..!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் -09-10-2020

                          Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                          நீ எந்தன் சாமி

                          நீ எந்தன் சாமி

                          நான் வணங்கும் ஆலயத்தில்
                          நீ எந்தன் சாமியடி
                          துயர் கறையை துடைக்கின்ற
                          தூரிகை நீயடி

                          கறை படியா ஓவியமே
                          கலங்காத காவியமே
                          நீயே எந்தன் மூச்சு
                          நிழல் காட்டும் பேச்சு

                          எதை மறந்து போனாலும்
                          உனை மறந்து போவேனோ ..?
                          விதி மிதித்து போனாலும்
                          மதியிழந்து தாழ்வேனோ …?

                          முகம் இழந்து போனாலும்
                          அகம் மறந்து வாழ்வேனோ ..?
                          நிலம் இழந்து போனாலும்
                          வானில் உன்னை பாரேனோ …?

                          சீனா பெரும் சுவராய்
                          சிறை பட்டு போனானே
                          நாளை உனை பார்க்க
                          நான் ஏங்கி நின்றேனே

                          பார்க்க மறந்து போனால் – இந்த
                          பார் அழிந்து போகும்
                          நினைவிழந்து போனால் – இந்த
                          நிகழ் காலம் சாகும் …!

                          வன்னி மைந்தன்
                          ஆக்கம் -08-10-2020

                          வன்னி மைந்தன் கவிதைகள்

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            நினைத்தது நடந்தது ….!

                            நினைத்தது நடந்தது ….!

                            நீ தொடுக்க வா
                            நான் முடிக்க வா
                            நிழல் தூங்க வா
                            நீர் ஓட வா ..?

                            பூமி வறண்டது
                            பூவும் உலர்ந்தது
                            வேரும் செழிக்கவே
                            வேண்டுதல் செய்ய வா ..?

                            இடி இடிக்க வா
                            இடர் மறைய வா
                            காற் றுதைக்க வா
                            கன மழை கொட்ட வா ..?

                            வெட்கை தனியவே
                            வீழ்ந்த மழையே
                            கால் தழுவியே
                            கடந்த வெள்ளமே

                            ஊரு சிரித்தது
                            உதடு மலர்ந்தது
                            வேரும் வைத்தது
                            வேண்டுதல் நிலைத்தது

                            வன்னி மைந்தன்
                            ஆக்கம் -07-10-2020
                            ( சிலோடை சிணுங்கல்- இரட்டை அர்த்தம் )

                            Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

                            தெரிந்து பேசு …!

                            தெரிந்து பேசு …!

                            மேடை ஏறி பேசிட வேண்டும்
                            மேனி வளையா நின்றிட வேண்டும்
                            வார்த்தை குலையா வந்திட வேண்டும்
                            வஞ்சம் இல்லா மொழிந்திட வேண்டும்

                            ஒட்டா உதடு பார்த்திட வேண்டும்
                            ஓட்டை இல்லா பேசிட வேண்டும்
                            ஒழுகுதல் இல்லா கரைந்திட வேண்டும்
                            ஒழுக்கம் அதனில் உரிந்திட வேண்டும்

                            இத்தனை திறன்கள்
                            இதனில் இருக்கு
                            இதனை மொழிந்தால்
                            உயிர்ப்பு உனக்கு

                            தெரிந்து வைத்து
                            தெழிதல் கணக்கு
                            தெரியா நின்று
                            தெளித்தல் விலக்கு

                            உலக விதியில்
                            உழலும் தவறை
                            உரித்து எடுத்து
                            உயிராய் பேசு

                            வாசல் வந்து
                            வையம் தட்டும்
                            வாழும் வரை
                            வான் புகழோ முட்டும் …!

                            வன்னி மைந்தன்
                            ஆக்கம் -06-10-2020
                            மேடை பேச்சின் அடிப்படை கூறுகள் -தெரிந்து கொள்ளுங்கள்