Category: வன்னி மைந்தன் கவிதைகள்
வன்னி மைந்தன் கவிதைகள் , காதல் கவிதைகள் வன்னி மைந்தன் ,மனித உணர்வின் பிரதியாக நடைமுறை வாழ்வியலில் ஒன்றாக கலந்துள்ளது .
சிதறும் பகை
சிதறும் பகை
தோளில் வேங்கையர் கருவி தாங்கியே
வீதி வந்திடுவார்
மண் பறி கயவரை கொன்றே
மணி ஈழம் தந்திடுவார்
வீழ்ந்தனர் என்றே
வீதி வந்தவர்
ஆக்கினை அறுத்திடுவார்
அனலிலே எரித்திடுவார்
மண்ணில் புதைந்த வேரினை காண
மறந்த சிங்களவா
கிளையினை வெட்டி மகிழ்ந்தாய்
மடையன் நீயல்லவா
நாளினில் ஆயிரம் கொன்றே வீசிய
நாடு உனதல்லவா
நாடோடியாய் பறந்தவர்
நாடே வந்தனர் இது புதிதல்லவா ?
முப்படை தாங்கியே வந்தனர் புலிகள்
இப்படை காணலையா ?
இது தான் பதியடா செய்த சதியடா
இலங்கா இரண்டா உடையுதடா …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 21-01-2021
புலி பாயும் பொறுத்திரு
புலி பாயும் பொறுத்திரு
படை விட்டு ஓடியவா
பகலவனை கொன்றாயா ..?
இறந்தான் உடலை இழுத்து
வீதி உலா வந்தாயா …?
பிரபாகரன் பிரம்மனடா
பிறப்பான் நாளையடா
வதம் செய்ய வருவாண்டா
வரி புலியை தருவாண்டா
பத்தாண்டு மேல் கடக்க
பாரெங்கும் புலி பாயும்
பூகோள அரசியலில்
பூகம்பம் இதுவாகும்
புதை குழியை தோண்டி வைத்து
புத்த பிரான் ஆட்டுகிறார்
செய்த கொலை பழிதீர்க்க
இலங்கை துண்டாகுமடா
அண்ணன் தம்பி ஆட்சியில
அடிதடி வீதி வர
பார் ஓடி பாய்ந்து வரும்
படை நடத்தி தமிழ் வீடு தரும்
காடையராம் சிங்களவர்
காலடியில் கதறுகின்ற
நாள் ஒன்று நாளை வரும்
நம்பி இரு சேதி தரும் …!
பிரபாகரனை கொன்று இழுத்து வந்ததாக கோ….ட் …டா..கூறிய போது
வன்னி மைந்தன்
ஆக்கம் 20-01-2021
சொல்லிவிடு இதுவா காரணம்
சொல்லிவிடு இதுவா காரணம்
முதன் முதலாய் உன் வீடு
முன் பாதம் நான் பாதிக்க
ஓடி வந்து விழியாலே
ஒடிந்து விட அனைத்தவளே
காற்றில் இடையாட
கரைந்து போனேண்டி
மெல்ல நீ சிரிக்க
வீழ்ந்து இரசித்தேண்டி
உன் பார்வை ஏக்கம்
உள்ளத்தை தழுவ
கண்ணே உன் நினைப்பால்
கசங்கி போனேண்டி
விடை பெற முடியா
விட்டு நான் பிரிய
கலங்கிய விழி நீர்
கண்ணில் தெரியுதடி
நெஞ்சுக்குள் நேசத்தை
நெருக்கமாய் வைத்தவளே
கொஞ்சி பேச – உன்
கொள்கை மறுத்ததென்ன …?
பொல்லா சாதி
வேலியாய் நிற்க
நம்ப மறுத்தாயோ
நாராய் கிழிந்தாயோ …?
ஆதியில் இல்லை சாதியடி
அவனில் இல்லை பிளவடி
பிந்திய மனிதர் கேடாச்சு
பிரளய சாதி செய்தாச்சு
ஒத்தையில நான் தவிக்க
ஓரமா விட்டவளே
தவறான முடிவொன்றால்
தவறிடிச்சே நல் வாழ்வு ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 19-01-2021
ஏன் மறந்தாய் பதில் சொல்லு
ஏன் மறந்தாய் பதில் சொல்லு
சின்ன வயதில
சிறகடிக்கும் பருவத்தில
என் அழகி நீயானாய்
ஏன் உனக்கு தெரியலையா …?
தரிசா கிடந்த மண்ணை
தரமா உயர்த்தியவள்
மறந்து விலகையில
மனமேடு கொதிப்பாச்சு
போர் பிடித்த மண்ணில்
வேர் பிடித்த உன்னை
தேடி அலைந்தேனே
தேவதை நீ கிடைக்கலையே
முடியும் என நினைத்து
முன்னேற்றம் பல செய்தேன்
இறுதிவரை சிக்கவில்லை
இதயத்தில தங்கவில்லை
இன்று நினைத்தாலும்
இதயம் வலிக்கிறது
ஒன்றி நடந்தவளே
ஓரமா சென்றதென்ன …?
பூவான நாள் முதலா
முன் வர மறுத்தவளே
ஏன் அச்சம் கொண்டாயோ
என் அன்பே கூறாயோ …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 18-01-2021
உன்னை தா உயிரே
உன்னை தா உயிரே
ஏக்கம் வந்து மனதை தாக்க
ஏனோ உன்னை தேடுது
ஆக்கம் வந்து உன்னில் வாங்க
அன்பை தானே பொழியுது
உந்தன் மொழி காதில் வீழ்ந்தால்
உள்ளம் ஏறி ஆடும்
உலகாளும் கோமகனாய்
உள்ளம் ஏறி பாடும்
அருகினில நீ இருந்தால்
அந்தி வானம் சிரிக்கும்
ஆடை எடுத்து வான் மறைத்து
அது உறக்கம் போடும்
வாழ்க்கை என்ற வட்டத்திலே
வாழ்வு ஒரு சருகு
ஆக்கம் பெற்று முடிந்து விட்டால்
அன்று பொழுது மகிழ்வு
கொஞ்ச நேரம் தழுவையில
கொடும் துயரும் பறக்கும்
அந்த நேரம் மட்டும் தானே
ஆனந்தமே சிறக்கும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 16-01-2021
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
ஓடி நடந்த காற்று
ஓய்ந்து வீழ்ந்தது
உயிர் குடித்து கொரனோ
உடலை தந்தது
காதில் வந்த செய்தி
கண்ணீர் தந்தது
காயப்பட்டு நெஞ்சு
கதறி துடித்தது
நேற்று வரை
நெஞ்சில் ஏறி நின்றவன்
நேரில் பல கதை
சொல்லி மகிழ்பவன்
முக நூலில் வந்து
முகம் தந்தவன்
முன் வரும் செய்தி
முன் பகிர்ந்து செல்பவன்
மலை போல் உடல்
கட்டு கொண்டவன்
மாயம் என்னவோ – நீ
மண்ணில் வீழ்ந்தது …?
நீயா வீழ்ந்தாய் நம்ப முடியவில்லை
உன்னை கொன்ற கொரனோ
என்னை விடுமோ ..?
உயிரில் அச்சம் இன்று
தொற்றி கொண்டது
பிறந்த நாளில் முந்தி
வாழ்த்து சொல்பவன்
பிரியமுடன் மொழி
எழுதி வைப்பவன்
நாளை வாழ்த்த என்னை
நீயும் இல்லையே
நண்பா உறங்கு
ஆத்ம சாந்தியே ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 15-01-2021
லண்டனில் கொரனோ நோயினால் 14-01.2021 அன்று உயிர் பிரிந்த நண்பன் இராயரூபன் துயரில் …!

ஏன் என்னை ஏமாற்றினாய்
ஏன் என்னை ஏமாற்றினாய்
நீ எறிந்த வெடிகுண்டு
என் மனதை உடைக்கலையே
என் மீது காதல் கொண்டு
அது வீழ்ந்தும் வெடிக்கலையே
குண்டுக்கே என் மீது
கொலை வெறி காதலடி
உங்ககேனோ என் மீது
இல்லையது பிரியமடி …?
வாய் எல்லாம் பொய்வைத்து
வழி யோரம் நடப்பவளே
விழியிரண்டு நீர் கொட்ட
வீழ்ந்தழுவாய் காத்திரு
பாவை உன்னை நான் தேடி
பாதணிகள் தேய்ந்திருச்சு
அது கூடி என்னோட
அரை உடல் இழந்திருச்சு
என்னை காத்த அது இன்று
எமன் வாயில் சிக்கிருச்சு
அதுக்குள்ள பாசம் கூட
உனக்கில்லா ஏன் போச்சு …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 13-01-2021

பேசும் காதல்
பேசும் காதல்
ஏங்க வைத்து ஏங்க வைத்து
ஏன் கிளியே போனாய்
எந்த நாட்டு செய்மதியில்
என்னை தேடி அலைந்தாய்
உலக நாட்டு உளவுத்துறை
உன்னை தேடுதோ …?- என்
உள்ளத்திலே நீ இருந்தாய்
காணவில்லையே …?
வானிருக்கும் காலம் மட்டும்
நீ இருப்பாய்
வாழும் வரை எந்தன் நெஞ்சில்
நீ உயிர்ப்பாய்
நீ தந்த நினைவுகளை
நான் மறவேன்
நீ இட்ட முத்தங்களை
நான் சுவைப்பேன்
உந்தன் மடி இன்றுவரை
நெஞ்சம் தேடும்
அந்த மடி உறங்கிவிட
ஆயூள் வேண்டும்
நீ இருக்கும் காலத்திலே
நான் இறக்க வேண்டும் – உன்
நீர் விழியை பார்க்க முன்னே
நான் மறைய வேண்டும்
நான் இல்லா காலத்திலே
என் செய்வாயோ ..?
நீ அழைத்தும் வரமாட்டேன்
என் செய்வாயோ …?
உடல் மட்டும் விழி
முன்னே காண மாட்டேன்
உள்ளத்திலே நீ இருக்க
கலங்க மாட்டேன்
இறக்கும் வரை உன்னுடனே
நான் வாழ்வேன்
இது தானே என் காதல்
புனிதம் என்றேன்
வன்னி மைந்தன்
ஆக்கம் 12-01-2021

ஏன் இறந்தாய் …?
ஏன் இறந்தாய் …?
பூத்தவளும் பார்த்ததினால்
பூவொன்று பூத்ததம்மா
பூங்கொடியும் வீழ்ந்ததினால்
பூவென்ன செய்யுமம்மா
பாதி வாழ்வு முடியுமுன்ன
பார் கடந்து போனதென்ன
ஏன் இந்த அவசரமோ
ஏ மனமே கூறாயோ ….?
விழியெல்லாம் நீர் வைத்து
விடை பெற்று போனதென்ன …?
ஆகமங்கள் முடியுமுன்ன
ஆவி உடல் பிரித்ததென்ன …?
பெற்றவளே உன்னை தேடி
பிள்ளை இன்று கதறுதம்மா
தூக்கினில தொங்க முன்ன
துளி கூட என்னலையோ …?
உன்கவலை துளி போக்க
உற்றாரும் முனையலையோ ..?
நட்பான நட்புக்களும்
நங்கை உன்னை காக்கலையோ ..?
கல கலத்த உன் பேச்சு
காதில் இன்னும் ஒலிக்குதடி
உன் மரணம் பொய் தானோ
உள்ளம் ஏற்க மறுக்குதடி
விழியெல்லாம் நீர் வைத்து
விடை பெற்று போனவளே
எழுந்து வாராயோ
எம் துயர் போக்காயோ ,…..!
கண்ணீர் அஞ்சலி ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-01-2021
கொலண்டில் தூக்கில் தொங்கிய தங்கை துயரில் ….
ஏன் இறந்தாய்
ஏன் இறந்தாய்
பூத்தவளும் பார்த்ததினால்
பூவொன்று பூத்ததம்மா
பூங்கொடியும் வீழ்ந்ததினால்
பூவென்ன செய்யுமம்மா
பாதி வாழ்வு முடியுமுன்ன
பார் கடந்து போனதென்ன
ஏன் இந்த அவசரமோ
ஏ மனமே கூறாயோ ….?
விழியெல்லாம் நீர் வைத்து
விடை பெற்று போனதென்ன …?
ஆகமங்கள் முடியுமுன்ன
ஆவி உடல் பிரித்ததென்ன …?
பெற்றவளே உன்னை தேடி
பிள்ளை இன்று கதறுதம்மா
தூக்கினில தொங்க முன்ன
துளி கூட என்னலையோ …?
உன்கவலை துளி போக்க
உற்றாரும் முனையலையோ ..?
நட்பான நட்புக்களும்
நங்கை உன்னை காக்கலையோ ..?
கல கலத்த உன் பேச்சு
காதில் இன்னும் ஒலிக்குதடி
உன் மரணம் பொய் தானோ
உள்ளம் ஏற்க மறுக்குதடி
விழியெல்லாம் நீர் வைத்து
விடை பெற்று போனவளே
எழுந்து வாராயோ
எம் துயர் போக்காயோ ,…..!
கண்ணீர் அஞ்சலி ….!
வன்னி மைந்தன்
ஆக்கம் 11-01-2021
கொலண்டில் தூக்கில் தொங்கிய தங்கை துயரில் ….
என்னை நீ மறந்து விடு
என்னை நீ மறந்து விடு
உடைந்து போன உன் நினைவுகளை
கடந்து போக நினைக்கிறேன்
மறந்து போய் ஏனோ
மனதில் வந்து முளைக்கிறாய் …?
என் மனதை நீயன்று
எடுத்தெறிந்து போகையில
உன் நினைவால் நானன்று
உருவிழந்து தவித்தேனே
உன் பதிப்பில் பிழை வைத்து
என் படைப்பை அழித்தவளே
என் மனதை வெட்டையில
ஏன் மனமே துடிக்கலையோ ..?
சில காலம் உன் நினைவால்
சிறைபட்ட என் வாழ்வு
மறு வாழ்வு தேடியின்று
மறுபடி முளைக்குதடி
இவ்வேளை நீ வந்து
இதயத்தை தட்டுறியே
தந்தவன் தாலியதை
தாமரையே என் செய்வாய் ..?
மாறாத நினைவுகளை
மனதில் புதைத்து விட்டு
ஆறான விழி நீரை
அன்பே துடைத்து விடு
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-01-2021

காதல் வந்தது எப்படி
காதல் வந்தது எப்படி
நான் நடந்த வீதியில
நீ வந்த வேளையில
நான் தொலைந்து போனேனே
நாயகியை நினைந்தேனே
நீ பேசும் போதெல்லாம்
நித்தம் நான் இரசிக்கிறேன்
நிகழ் காலம் உன் மடியில்
நீண்டுறங்க துடிக்கிறேன்
நாளை என்ற நாளதனை
நான் எண்ண மறுக்கிறேன்
நாடி வந்து உன்னடியில்
நான் கூட துடிக்கிறேன்
சிரிப்பாலே கதை பேசி
சிறை வைத்து போபவளே
என்ன உந்தன் மந்திரமோ
என்னை சுற்ற வைத்த தந்திரமோ …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 01-02-2021

உனக்காக காத்திருக்கேன்
உனக்காக காத்திருக்கேன்
காந்த கண் பேரழகி
என்னை கவரந்தாய் நீ அழகி
உன் உதட்டை நான் மெழுக
உரிமத்தை தாராயா …?
அம்மியில நீ அரைக்க
ஆடி இடுப்பாட
என் மனசு கரையுதடி
என் வயது கொதிக்குதடி
குதிரை நடை பிடித்து
குமரி நீ போகையில
ஆகாயம் இடியுதடி
அகிலம் நடுங்குதடி
தொடை காட்டி நீ போக
தெரு நாய்கள் வழிமறிக்க
சிரித்து போறவளே
சிங்காரி நீ தாண்டி
உண்மை சொல்லிடவா
உள்ளத்தை தொலைத்தேண்டி
தேதி ஒன்று தருவாயா
தேறி நான் உறங்க …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் -27-10-2020
எட்டப்பரே உமக்கு எச்சரிக்கை …!
எட்டப்பரே உமக்கு எச்சரிக்கை …!
குண்டெறிந்து வீடழித்து
குடி மகிழ்ந்த குடியரசு
தந்திடுமா தமிழருக்கு
தனி வீடாம் தனி யரசு …?
புலி என்று தமிழ் அழித்து
புலிவேட்டை முடித்தவர்கள்
காலடியில் நசுங்கும் தமிழ்
கண்டிடுமா கல் வீடு …?
கோவணத்தை இழந்து விட்டு
கோடியிலே நிற்கும் தமிழ்
ஆவணத்தை காட்டி விடின்
அலரி மாளிகை கொஞ்சிடுமா …?
கடப்பையில நின்றவர்கள்
காலாட்டி நடக்கையில
கோல் ஊன்றி நின்றவர்கள்
கொதிக்காரா வெடிக்காரா …?
காற்சட்டை நனைந்தவர்கள்
காரிலே ஊர்வலமாம்
நாளை அவர் வருவார்கள்
நன்றாக சுற்றி வா
ஏளனம் விதைப்பவரே
எண்ணி சில ஆண்டுக்குள்
முன்னேறி வருவார்கள்
முதுகெலும்பு உடைப்பார்கள்
தப்பி ஓட நாடின்றி
தம்பிகளா தவிப்பீர்
கல் வீட்டு கண்ணீர்
காலடி கழுவும்
ஆறடி இன்றி
அடையாளம் தொலைப்பீர்
வேரடி இன்றி
வேளைக்கு முடிவீர்
காலம் சில காலம்
காவடிகளே ஆடும்
கார்த்திகை பூக்கும்
கனரகம் கொதிக்கும் …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் -11-10-2020
நல்லதை செய் …!
நல்லதை செய் …!
கம்பெடுத்து வம்பளந்து
கண்டதென்ன கரிகாலா …?
செம்பெடுத்து நீர் கொடுத்து
செவந்து போனாய் பேரழகா
உன் படைப்பை நீ படைத்து
உலகை ஆளு நீ எடுத்து
செம்படையை நீ அமைத்து
சென்று வா போரெடுத்து
அண்டமெல்லாம் உன்னை கண்டு
அஞ்சும் படி செய்
ஆகாய பந்தலிலே
அறத்தை நாட்டி வை
நீ செய்த சேவைகளை
நீள் அடுக்கி வை
நீண்ட சீன பெரும் சுவராய்
நீ பெருக்கி வை
எவன் தருவான் உன் ஆட்சி
என்று சொல்ல வை
இது தானே வேண்டும்
இன்றெழுதி வை …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -10-10-2020
காலம் உன்னில் காறி உமிழும் ..!
காலம் உன்னில் காறி உமிழும் ..!
ஓடி நடந்தவனின்
ஒரு கால் உடைத்தவரே
வலியோடு துடிக்கையில
வாழ்வு கொடுக்கலையே
ஏதொன்றும் கேளாது
ஏளனம் செய்பவரே
காரணம் புரிந்தது
கரிகாலன் இல்லையோ …?
உடல் தாங்கும் கால் ஒன்றின்
உயர்வு புரியாது
விலங்கிட்டு நடப்பவரே
விடியல் வெடிக்கும்
சிறையிட்டு வதையிட்டார்
சிறை படும் காலத்தில்
முளை விட்டு வான் எழும்
முன்னைய பரம்பரை
கிளை விட்டு நிழல் இட்டு
கீழான வாழ்வியலை
பூகோள அரசியல்
புதிதாக மாற்றும்
விதைகள் இப்போதே
வீழ்ந்து முளைக்கிறது
முளைகள் கண்விழிக்க
முன்னேறி கால் வைக்க
நடந்தவன் ஓடுவான்
நானிலம் நமதாகும்
அகவை இருபது
அரியணை பகிரும்
எழுந்திடார் என்றே
ஏளனம் செய்தவர்
வீழ்ந்திடும் காலத்தில்
விடுகதை உமிழும் .!
வன்னி மைந்தன்
ஆக்கம் -12-10-2020
துரோகம் …!
துரோகம் …!
பூமி அதிர்வொன்று
புகுந்தது நெஞ்சுக்குள்
இதய மாளிகை
இடிந்து போனது
சுனாமி அலையாய்
சுற்றியது நினைவு
கடல் அலையாய்
கத்தியது மனது
அத்தி வாரம்
அசைந்த போது
கார் மேகமாய்
கண்ணீர் கொட்டியது
வினாக்கள் வெடித்தன
விடைகள் கொதித்தன
அணு குண்டு
அகோரமாய் வெடித்தது
கணனி மூளைக்குள்
கறை படிந்த வைரஸ்
கொத்திய போது
கோபம் கொதித்தது
விரலின் நுனியில்
விஷம் உள்ளதை
நாவின் அசைவில்
நாடே அறிந்தது
அறுவடை நாளிற்காய்
அருகில் முளைத்ததை
காணாமல் இருந்தது
காதலின் தப்பு …..!
வன்னி மைந்தன்
ஆக்கம் -09-10-2020
நீ எந்தன் சாமி
நீ எந்தன் சாமி
நான் வணங்கும் ஆலயத்தில்
நீ எந்தன் சாமியடி
துயர் கறையை துடைக்கின்ற
தூரிகை நீயடி
கறை படியா ஓவியமே
கலங்காத காவியமே
நீயே எந்தன் மூச்சு
நிழல் காட்டும் பேச்சு
எதை மறந்து போனாலும்
உனை மறந்து போவேனோ ..?
விதி மிதித்து போனாலும்
மதியிழந்து தாழ்வேனோ …?
முகம் இழந்து போனாலும்
அகம் மறந்து வாழ்வேனோ ..?
நிலம் இழந்து போனாலும்
வானில் உன்னை பாரேனோ …?
சீனா பெரும் சுவராய்
சிறை பட்டு போனானே
நாளை உனை பார்க்க
நான் ஏங்கி நின்றேனே
பார்க்க மறந்து போனால் – இந்த
பார் அழிந்து போகும்
நினைவிழந்து போனால் – இந்த
நிகழ் காலம் சாகும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -08-10-2020
நினைத்தது நடந்தது ….!
நினைத்தது நடந்தது ….!
நீ தொடுக்க வா
நான் முடிக்க வா
நிழல் தூங்க வா
நீர் ஓட வா ..?
பூமி வறண்டது
பூவும் உலர்ந்தது
வேரும் செழிக்கவே
வேண்டுதல் செய்ய வா ..?
இடி இடிக்க வா
இடர் மறைய வா
காற் றுதைக்க வா
கன மழை கொட்ட வா ..?
வெட்கை தனியவே
வீழ்ந்த மழையே
கால் தழுவியே
கடந்த வெள்ளமே
ஊரு சிரித்தது
உதடு மலர்ந்தது
வேரும் வைத்தது
வேண்டுதல் நிலைத்தது
வன்னி மைந்தன்
ஆக்கம் -07-10-2020
( சிலோடை சிணுங்கல்- இரட்டை அர்த்தம் )
தெரிந்து பேசு …!
தெரிந்து பேசு …!
மேடை ஏறி பேசிட வேண்டும்
மேனி வளையா நின்றிட வேண்டும்
வார்த்தை குலையா வந்திட வேண்டும்
வஞ்சம் இல்லா மொழிந்திட வேண்டும்
ஒட்டா உதடு பார்த்திட வேண்டும்
ஓட்டை இல்லா பேசிட வேண்டும்
ஒழுகுதல் இல்லா கரைந்திட வேண்டும்
ஒழுக்கம் அதனில் உரிந்திட வேண்டும்
இத்தனை திறன்கள்
இதனில் இருக்கு
இதனை மொழிந்தால்
உயிர்ப்பு உனக்கு
தெரிந்து வைத்து
தெழிதல் கணக்கு
தெரியா நின்று
தெளித்தல் விலக்கு
உலக விதியில்
உழலும் தவறை
உரித்து எடுத்து
உயிராய் பேசு
வாசல் வந்து
வையம் தட்டும்
வாழும் வரை
வான் புகழோ முட்டும் …!
வன்னி மைந்தன்
ஆக்கம் -06-10-2020
மேடை பேச்சின் அடிப்படை கூறுகள் -தெரிந்து கொள்ளுங்கள்






