Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

உனக்காக காத்திருக்கேன்

உனக்காக காத்திருக்கேன்

காந்த கண் பேரழகி
என்னை கவரந்தாய் நீ அழகி
உன் உதட்டை நான் மெழுக
உரிமத்தை தாராயா …?

அம்மியில நீ அரைக்க
ஆடி இடுப்பாட
என் மனசு கரையுதடி
என் வயது கொதிக்குதடி

குதிரை நடை பிடித்து
குமரி நீ போகையில
ஆகாயம் இடியுதடி
அகிலம் நடுங்குதடி

தொடை காட்டி நீ போக
தெரு நாய்கள் வழிமறிக்க
சிரித்து போறவளே
சிங்காரி நீ தாண்டி

உண்மை சொல்லிடவா
உள்ளத்தை தொலைத்தேண்டி
தேதி ஒன்று தருவாயா
தேறி நான் உறங்க …..!

வன்னி மைந்தன்
ஆக்கம் -27-10-2020

வன்னி மைந்தன் கவிதைகள்