ஏன் மறந்தாய் பதில் சொல்லு
சின்ன வயதில
சிறகடிக்கும் பருவத்தில
என் அழகி நீயானாய்
ஏன் உனக்கு தெரியலையா …?
தரிசா கிடந்த மண்ணை
தரமா உயர்த்தியவள்
மறந்து விலகையில
மனமேடு கொதிப்பாச்சு
போர் பிடித்த மண்ணில்
வேர் பிடித்த உன்னை
தேடி அலைந்தேனே
தேவதை நீ கிடைக்கலையே
முடியும் என நினைத்து
முன்னேற்றம் பல செய்தேன்
இறுதிவரை சிக்கவில்லை
இதயத்தில தங்கவில்லை
இன்று நினைத்தாலும்
இதயம் வலிக்கிறது
ஒன்றி நடந்தவளே
ஓரமா சென்றதென்ன …?
பூவான நாள் முதலா
முன் வர மறுத்தவளே
ஏன் அச்சம் கொண்டாயோ
என் அன்பே கூறாயோ …?
வன்னி மைந்தன்
ஆக்கம் 18-01-2021