காலம் உன்னில் காறி உமிழும் ..!

Spread the love

காலம் உன்னில் காறி உமிழும் ..!

ஓடி நடந்தவனின்
ஒரு கால் உடைத்தவரே
வலியோடு துடிக்கையில
வாழ்வு கொடுக்கலையே

ஏதொன்றும் கேளாது
ஏளனம் செய்பவரே
காரணம் புரிந்தது
கரிகாலன் இல்லையோ …?

உடல் தாங்கும் கால் ஒன்றின்
உயர்வு புரியாது
விலங்கிட்டு நடப்பவரே
விடியல் வெடிக்கும்

சிறையிட்டு வதையிட்டார்
சிறை படும் காலத்தில்
முளை விட்டு வான் எழும்
முன்னைய பரம்பரை

கிளை விட்டு நிழல் இட்டு
கீழான வாழ்வியலை
பூகோள அரசியல்
புதிதாக மாற்றும்

விதைகள் இப்போதே
வீழ்ந்து முளைக்கிறது
முளைகள் கண்விழிக்க
முன்னேறி கால் வைக்க

நடந்தவன் ஓடுவான்
நானிலம் நமதாகும்
அகவை இருபது
அரியணை பகிரும்

எழுந்திடார் என்றே
ஏளனம் செய்தவர்
வீழ்ந்திடும் காலத்தில்
விடுகதை உமிழும் .!

வன்னி மைந்தன்
ஆக்கம் -12-10-2020

Home » காலம் உன்னில் காறி உமிழும் ..!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *