சிதறும் பகை
தோளில் வேங்கையர் கருவி தாங்கியே
வீதி வந்திடுவார்
மண் பறி கயவரை கொன்றே
மணி ஈழம் தந்திடுவார்
வீழ்ந்தனர் என்றே
வீதி வந்தவர்
ஆக்கினை அறுத்திடுவார்
அனலிலே எரித்திடுவார்
மண்ணில் புதைந்த வேரினை காண
மறந்த சிங்களவா
கிளையினை வெட்டி மகிழ்ந்தாய்
மடையன் நீயல்லவா
நாளினில் ஆயிரம் கொன்றே வீசிய
நாடு உனதல்லவா
நாடோடியாய் பறந்தவர்
நாடே வந்தனர் இது புதிதல்லவா ?
முப்படை தாங்கியே வந்தனர் புலிகள்
இப்படை காணலையா ?
இது தான் பதியடா செய்த சதியடா
இலங்கா இரண்டா உடையுதடா …!
வன்னி மைந்தன்
ஆக்கம் 21-01-2021