Posted in மருத்துவம்

பெண்கள் கருவுறாமைக்கான காரணங்கள்

பெண்கள் கருவுறாமைக்கான காரணங்கள்

குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..

திருமணமான தம்பதிக்கு குறிப்பிட்ட கால அளவை தாண்டியும் குழந்தை பேறு ஏற்படாத பட்சத்தில் உரிய மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்படுகிறது.

அத்தகைய ஆய்வின் முடிவில் பெண்ணுக்கு குறைபாடு உள்ள சூழலில் அது பெண் கருவுறாமை என்று அழைக்கப்படுகிறது.

கருவுறாமை என்றால் என்ன?

கருவுறாமை என்றால் பெண்களால் இயற்கையாக கருவுற முடியாததை குறிக்கும். அதாவது ஒரு குறிப்பிட்ட குறைபாட்டால் பெண்ணின் உடலில் கருவுறுதல் நிகழாமல் தடைப்பட்டிருக்கும். இது

பொதுவாக 35 வயதுக்கு மேல் உள்ள பெண்களுக்கு அதிகம் ஏற்படக்கூடும். மேலும் சில சமயங்களில் பெண்கள் கருவுற்றாலும், கரு வளர்ச்சி ஏற்படாமல் ஒரு கால கட்டத்தில் கருச்சிதைவு

ஏற்பட்டு விடுவது மற்றுமொரு காரணம். இந்த கருவுறாமை பிரச்சினை ஆண் மற்றும் பெண் என்று இரு பாலருக்கும் வெவ்வேறு காரணங்களால் ஏற்படுகி்ன்றன.

இந்த கருவுறாமைக்கான காரணங்களை கண்டறிந்து, அதற்கு ஏற்ற சிகிச்சையை டாக்டர்கள் பரிந்துரைக்கின்றனர். இந்த வகையில் பெண்கள் கருவுறுவதற்கான வாய்ப்புகள் 90 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்து உள்ளன என்றால் அது மிகையில்லை.

ஏன் ஏற்படுகிறது?

அண்ட விடுப்பின் போது ஏற்படும் சிக்கல். கர்ப்பப்பை குழாய் அல்லது கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சினைகள், கர்ப்பப்பை வாயில் பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் தொந்தரவும் காரணம் ஆகும்.

இப்படிப்பட்டவர்கள் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.

அதிக வயதானாலும் பெண்களுக்கு கருத்தரிப்பது சற்று கடினமாகிறது. வழக்கமாக 35 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் குழந்தைப்பேறு அடைய முயலுகையில் கருத்தரித்தல் சற்று சிரமமாகவே

பெண்கள் கருவுறாமைக்கான காரணங்கள்

உள்ளது. ஆகவே குழந்தைப்பேறுவை தள்ளிப்போடாமல் பெண் உடல் வளமான முட்டைகளை உற்பத்தி செய்யும் கால கட்டத்திலேயே குழந்தையை பெற்று கொள்வது பிற்கால மன உளைச்சல்களை தவிர்க்கும்..

இது தவிர ஒரு பெண்ணுக்கு உடல் எடை அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அவர்களுக்கும் இந்த கருவுறாமை பிரச்சினை ஏற்படுகின்றது. எனவே பெண்கள் பொதுவாக

அவர்களின் உடல் எடையை சரியான நிலையில் வைத்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகும். மேலும் பாலியல் ரீதியான உறவுகள் மூலம் சில நோய் தொற்றுகள் ஏற்பட்டு

இருக்கும் பட்சத்திலும் கருவுறாமை நிகழ வாய்ப்புள்ளது. அதனால் உரிய நேரத்தில் இதற்கான சிகிச்சை மேற்கொள்வது சால சிறந்தது. இதையெல்லாம் விட கருவுறுதல் நிகழ சுரப்பிகளின்

பங்கு மிகவும் முக்கியமானது. சுரப்பிகள் சீரான வகையில் செயல்படாத போது, கருவுறுதலுக்கு தேவையான சுரப்பிகள் ரத்தத்தில் கலந்திருக்காது.

அதுவும் கருவுறாமையை ஏற்படுத்தி விடும். இந்த பிரச்சினை தீர மாத்திரைகள் பரிந்துரைக்கப்படுகிறது.

இவ்வாறு டாக்டர் சுதா கூறினார்.

    Posted in மருத்துவம்

    ஆபத்தை ஏற்படுத்தும் பிரியாணி

    ஆபத்தை ஏற்படுத்தும் பிரியாணி

    இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள்.

    ஐ.டி.கலாசாரம், பெரும்பாலானோரின் வாழ்க்கை முறையையும், பழக்க வழக்கங்களையும் அடியோடு புரட்டிப்போட்டிருக்கிறது. ஐ.டி.துறையில் பணியாற்றுபவர்கள், மேலை நாட்டு

    கலாசாரத்திற்கு இணையாக உடை அணிகிறார்கள். பகலில் தூங்கி, இரவில் கண்விழித்து பணியாற்றுகிறார்கள். மாத இறுதியில் ‘டீம் அவுட்டிங்’ என சுற்றித்திரிந்து, குதூகலிக்கிறார்கள்.

    இப்படி ஐ.டி.கலாசாரம் நம்மிடம் மேலை நாட்டு பழக்கங்களை, புகுத்தி வருகிறது. இதில் புதிதாக இணைந்திருப்பது, ‘நள்ளிரவு பிரியாணி’.

    இரவில் பணியாற்றும் ஐ.டி.துறையினருக்காகவே, நள்ளிரவில் நிறைய ஓட்டல்கள் இயங்குகின்றன.

    நள்ளிரவு ஓட்டல்கள் என்றவுடன், டீ-காபி, சாண்ட்விச் மற்றும் பன் ரொட்டிகளை தயாரிக்கும் ஓட்டல்கள் என்று நினைத்துவிடாதீர்கள்.

    இந்த ஓட்டல்களில், அதிகாலை 3 மணிக்கு கூட, சூடான

    பிரியாணி கிடைக்கும். அதுவும் வாடிக்கையாளர்களின் விருப்பப்படி, சிக்கன், மட்டன், இறால், மீன் என வகைவகையான பிரியாணிகள் சூடாக பரிமாறப்படுகின்றன. பிரியாணி மட்டுமல்ல, சிக்கன்

    65, சிக்கன் தந்தூரி, சிக்கன் கபாப் போன்ற காரசார உணவுகளும் பரிமாறப்படுகின்றன.

    அதனால் நள்ளிரவு ஓட்டல்களில், அதிகபடியான ஐ.டி.ஊழியர்களை பார்க்கமுடிகிறது.

    இரவு பணியில் அலுப்பு ஏற்படும்போதும், பசியை உணரும்போதும், இதுபோன்ற ஓட்டல்களுக்கு சென்று, நேரம் காலம் பார்க்காமல், பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள். இதையே

    ஆபத்தை ஏற்படுத்தும் பிரியாணி

    வழக்கமாக்கி, தினமும் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இப்படி நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது, உடல்நலத்திற்கு கெடுதியாக அமையும் என்கிறார்கள்,

    மருத்துவர்கள். ஏனெனில் இறைச்சியும், பிரியாணியை சுவையூட்டும் எண்ணெய் பொருட்களும், செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடுமாம்.

    நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும் என்றும் எச்சரிக்கிறார்கள். சில ஓட்டல்களில்,

    பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு. அப்படி என்றால், பாதிப்பு மிக அதிகம் என பதற வைக்கிறார்கள், மருத்துவர்கள்.

    அதனால் நள்ளிரவில், இதுபோன்ற ‘ஹெவி’ உணவுகளை தவிர்க்கும்படி கூறுகிறார்கள்.

    பிரியாணி மட்டுமின்றி, நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, சோடா பானங்களையும் தவிர்க்க சொல்கிறார்கள்

    . நள்ளிரவில் கண்விழித்து பணியாற்ற, டீ-காபி

    மட்டும் போதுமானது என்பவர்கள், இரவு பசிக்கு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவதுதான் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.

      Posted in மருத்துவம்

      தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சிக்கான – மனநிலை

      தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சிக்கான – மனநிலை

      குளிர்காலத்தில் தம்பதிகள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும், கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது

      . அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.


      தம்பதிகளுக்கு இடையேயான தாம்பத்திய வாழ்க்கையில் சீதோஷ்ணநிலை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. குளிர்காலத்தில் அவர்கள் தாம்பத்தியத்தில் அதிக நெருக்கம் காட்டுவதும்,

      கோடைகாலத்தில் விலகியிருப்பதும் வழக்கமாக இருக்கிறது. அதனால் காலநிலையை புரிந்துகொண்டு தம்பதிகள் தாம்பத்திய செயல்பாடுகளை அமைத்துக்கொள்வது அவர்களுக்குள் அதிக இணக்கத்தையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும்.

      தென்னிந்தியாவில் ஜூலை முதல் ஜனவரி வரையிலான காலகட்டம் தாம்பத்தியத்திற்கு அதிக சவுகரியமானது என்று பாலியல் நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள்

      . ஜூலை மாதத்தில் பெரும்பாலும் மழை இருந்துகொண்டிருக்கும். அதனால் கணவனும், மனைவியும் மனோரீதியாக அதிக

      உற்சாகத்துடன் காணப்படுவார்கள். மேகம் சூழ்ந்திருக்கும் சூழல் மனதில் எப்போதும் மகிழ்ச்சியை நிரப்பும். அது தாம்பத்திய இன்பத்திற்கு துணைபுரிவதாக அமையும்.

      பிப்ரவரி முதல் ஜூன் வரையிலான காலகட்டம் உஷ்ணம் நிறைந்தது. அப்போது உடல் எளிதாக சோர்ந்துவிடும். அது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும். அதே நேரத்தில்

      கோடைகாலத்தில் குளிர்பிரதேசங்களை நோக்கி பயணப்படுவதும், அங்கு ஜோடியாக தங்கியிருப்பதும் தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும் விதத்தில் அமையும். குளிர் பிரதேசங்களில்

      உள்ள அறைகளில் இரண்டு மூன்று நாட்கள் வெளியே வராமலே இருந்தால், தம்பதிகளிடம் இணக்கமும் புரிதலும் அதிகரிக்கும்.

      அவர்கள் உடலில் புத்துணர்ச்சியும், சக்தியும் அதிகரிக்கும். அது அவர்களது தாம்பத்தியத்திலும் எதிரொலிக்கும்.

      சீதோஷ்ண நிலைக்கு ஏற்ப ஆண்களின் மனநிலையிலும் வித்தியாசம் காணப்படும். ஆனாலும் பெரும்பாலும் ஆண்களின் மனநிலை சீராகத்தான் இருக்கும்.

      அதே நேரத்தில் பெண்களுக்கு மாதந்தோறும் ஹார்மோன் சுரப்பதில் சமச்சீரற்ற நிலை தோன்றும். அதற்கு தக்கபடி அவர்களது

      தாம்பத்தியத்திற்கு மகிழ்ச்சிக்கான – மனநிலை

      மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருக்கும். குறிப்பாக பெண்களுக்கு மாதவிலக்குக்கு முந்தைய நாட்களில் ஏற்படும் ஹார்மோன் சுரப்பு வித்தியாசங்களால்

      அவர்களுக்கு எரிச்சல் கலந்த மனநிலை தோன்றிவிடும். அதனால் அமைதியற்றவர்களாக நடந்துகொள்வார்கள்.

      அது அவர்களது தாம்பத்திய ஆர்வத்தை வெகுவாக குறைத்துவிடும்.

      சில தருணங்களில் ஹார்மோன் மாற்றங்களால் பாலியல் உறுப்புகளுக்கு செல்லும் ரத்த ஓட்டம் அதிகரித்து தாம்பத்திய ஆர்வத்தை தூண்டும்.

      ஆனால் அதை செயல்படுத்தும் விதத்தில்

      அவர்களது உடல்நிலை இருக்காது. அதனாலும் தாம்பத்திய உறவில் இருந்து விலகியிருக்க விரும்புவார்கள்.

      மாதவிலக்கு நாட்கள் முடிந்த பின்பு பொதுவாகவே பெண்களுக்கு தாம்பத்திய ஆர்வம் அதிகரிக்கும்.

      அதை கணவர் புரிந்துகொண்டு, மனைவியின் மனநோக்கம் அறிந்து செயல்பட்டு ஆர்வத்தை மேம்படுத்தும் விதத்தில் நடந்துகொண்டால் மகிழ்ச்சி நீடிக்கும். தாம்பத்திய

      தொடர்பை சிறப்பாக அமைத்துக்கொள்ள கணவரின் மனநிலையையும், உடல்நிலையையும் அறிந்து மனைவி நடந்துகொள்ளவேண்டும்.

      அதுபோல் மனைவியின் நிலை அறிந்து கணவரும் நடந்துகொள்வது அவசியம்.

        Posted in மருத்துவம்

        பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

        பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

        குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம்.

        பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா? அப்போ இந்த சிற்றுண்டிகளை சாப்பிடாதீங்க…
        பெண்கள் உடல் எடையை குறைக்க மாலை சிற்றுண்டியில் தவிர்க்க வேண்டியவை
        நம்முடைய உணவுமுறையில் ஒரு நாளுக்கு மூன்று வேளை உண்பதை வழக்கமாக

        கொண்டிருக்கிறோம். மூன்று வேளை உணவை 5 அல்லது வேளையாக பிரித்து சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதுஎன்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். இதனால் உடலில் சேரும்

        கலோரிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியும். இந்த வழிமுறை குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

        பலருக்கும் 3 வேளையும் வயிறு நிறைய சாப்பிட்டாலும் மாலை நேரத்தில் நொறுக்குத்தீனி சாப்பிடவில்லை என்றால் அந்த நாளே முழுடையடையாதது போல் இருக்கும்.

        மாலை மேகங்களை பார்க்கும் போது குளிர்ந்த காற்றை உணரும் போது காரசாரமாக பஜ்ஜி சாப்பிட்டால் நன்றாக

        பெண்களே உடல் எடையை குறைக்க வேண்டுமா?

        இருக்கும் வேலைக்கு நடுவே ஏலக்காய் சேர்ந்த சூடான டீ குடித்தால் நன்றாக இருக்கும் என்ற எண்ணம் தோன்றும்.

        குழந்தைகள் பாக்கெட்டில் அடைத்திருக்கும் நொறுக்குத்தீனிகளை கேட்டு

        அடம் பிடிக்கும் போது வேறு வழியில்லாமல் வாங்கி கொடுத்து விட்டு நாமும் அதையே மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவோம்.

        இவற்றை தவிர்த்து மாலை நேர சிற்றுண்டியை ஆரோக்கியமானதாக மாற்றி கொண்டால் உடல் எடையை குறைக்க முடியும்.

        மாலையில் டீ, காபிக்கு பதிலாக மோர், கிரீன் டீ, முலிகை டீ, பாதாம் பால் குடிக்கலாம். நார்ச்சத்துள்ள பழங்கள் சாப்பிடலாம்.

        புரதச்சத்து நிறைந்த நட்ஸ், உலர்பழங்கள் சாப்பிடலாம்.

        காய்கறி சாண்ட்விச், காய்கறி சாலட் உடன் அக்ரூட் பருப்பு, பேரீச்சம் பழம் சேர்த்து கொள்ளலாம்.

        பழங்கள் சேர்த்த ஸ்மூர்த்தி, லஸ்ஸி பருகலாம்.

        சிறுதானிய புட்டு, பணியாரம், காய்கறி சூப் குடிக்கலாம்.

        இந்திய உணவு கலாசாரத்தை பொறுத்தவரை வீட்டில் சமைக்கும் உணவுகளுக்க உடல் உடையை குறைக்கும் தன்மை உள்ளது, காரணம், ஆரோக்கியமான சமையல் முறை மற்றும் சமையல் பொருட்கள்.

        கடைகளில் தயாரிக்கும் உணவுகளில் இடம் பெறும் கொழுப்பு பொருட்கள், சோடா, கார்பனேட்டட் பானங்கள், அதிக கலோரி, சர்க்கரை சேர்த்த உணவுகள் உடலில் எடையை அதிகரிக்க செய்யும்.

        மேலும் சர்க்கரைநோய், இதய நோய், உடல்பருமன் போன்ற நோய்களை உண்டாக்கும். ஆகையால் மாலை சிற்றுண்டி பட்டியலில் நீக்க வேண்டியசில உணவுகள் இதோ…

        சோடா, கார்பனேட்டட்பானங்கள் அதிக சர்க்கரை மற்றும் நிறமிகள் சேர்த்த குளிர்பானங்கள்

        சாக்லேட், ஐஸ்கிரீம், மைதாவில் செய்த கேக், குக்கீஸ்,

        எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகள் மற்றும் இறைச்சி.

        வனஸ்பதி, வெண்ணெய், கனோலா எண்ணெய், சோயாபீன் எண்ணெய், கிராஸ்பீத் எண்ணெய் போன்றவற்றால் செய்யப்பட்ட உணவுகள்.

        இந்த சிற்றுண்டிகளின் பெயரை கேட்டவுடனேயே சுவைப்பதற்கு தூண்டும். ஆனால் மனதை கட்டுப்படுத்தி இவற்றை தவிர்த்தால் உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

          Posted in மருத்துவம்

          கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் இன்னல்கள்

          கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் இன்னல்கள்

          கொரோனாவுக்கு தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் சிலருக்கு பாதிப்பு உண்டாகலாம். அதற்கான காரணங்கள் குறித்தும், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.

          கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் பாதிப்புகள்
          சருமம், கூந்தலில் ஏற்படும் பாதிப்புகள்


          நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகி பூரண குணமடைந்தவர்களில் சிலர் உடல் சோர்வு, தசை வலி, மூளை சோர்வு போன்ற பாதிப்புகளை எதிர்கொள்கிறார்கள். இவை தவிர

          கூந்தல் மற்றும் சருமம் சார்ந்த பிரச்சினைகளும் அதிகரிக்க தொடங்கி இருக்கின்றன. இந்த பாதிப்புகள் 6 முதல் 9 மாதங்கள் வரை கூட நீடிக்கக்கூடும். அதற்கான காரணங்கள் குறித்தும், அதில் இருந்து மீள்வதற்கான வழிமுறைகள் குறித்தும் பார்ப்போம்.

          கொப்புளம்: கொரோனா தொற்றின்போது தடிப்பு, கொப்புளம் போன்றவை ஏற்படுவது பொதுவானது. சிலருக்கு நோய்த்தொற்றில் இருந்து குணமடைந்த பிறகும் பாதிப்பு உண்டாகலாம்.

          கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் இன்னல்கள்

          முடி உதிர்தல்: கொரோனா தொற்றில் இருந்து மீண்ட 2 முதல் 3 மாதங்களுக்கு பிறகு முடி உதிர்தல் பிரச்சினையை எதிர்கொள்வதாக பலர் புகார் அளித்திருக்கிறார்கள். கூந்தலை அலசும் போது,

          தலை சீவும்போது, குளிக்கும்போது அடர்த்தியாக முடி உதிர்வதை கண்கூடாக காண நேரிடும். இந்த வகையான முடி உதிர்தல் ‘டெலோஜென் எபுவியம்’ என்று அழைக்கப்படுகிறது.

          கொரோனாவில் இருந்து குணமடைந்த ஒன்றரை மாதங்களில் இந்த பிரச்சினை தொடங்கலாம். கடுமையான மன அழுத்தத்தில் இருந்து மீண்டு வரும்போது இந்த பாதிப்பு நிகழும்.

          பொதுவாக பிரசவம், மஞ்சள் காமாலை, மலேரியா போன்ற நோய் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் ‘டெலோஜென் எபுவியம்’ பிரச்சினையை எதிர்கொள்வார்கள். அந்த வரிசையில் கொரோனாவும்

          கொரோனா தொற்றில் இருந்து மீண்டவர்கள் சந்திக்கும் இன்னல்கள்

          இணைந்திருக்கிறது. கடுமையான நோய் பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் சமயத்தில் மன அழுத்தம் அதிகரிக்கும். அதனை தவிர்க்க இயலாதது.

          கொரோனாவும் தொற்றும், கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அதில் இருந்து மீள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படும். பிற வகையான டெலோஜன் எபுவியத்துடன் கொரோனா

          பாதிப்பை ஒப்பிடும்போது இந்த வகையான முடி உதிர்தல் தீவிரமாக இருக்கும். சிலருக்கு வழுக்கை தலை பிரச்சினை ஏற்படக்கூடும்.

          புண்கள்: ‘கோவிட் பீட்’ எனப்படும் இது பொதுவாக கைகளிலும், கால்களிலும் காணப்படும். இந்த பிரச்சினையை எதிர்கொள்பவர்களின் விரல்கள் நீலம் அல்லது சிவப்பு கலந்த நீல நிறத்தில்

          காணப்படும். பெரும்பாலும் வெளி நாடுகளில் இத்தகைய அறிகுறிகள் தென்படுகிறது. இந்தியாவில் இத்தகைய அறிகுறிகள் இல்லை.

          வறட்சி: தைராய்டு அல்லது நீரிழிவு நோய் பாதிப்பு கொண்டவர்கள் ஏற்கனவே சில சரும பிரச்சினைகளால் அவதிப்படுவார்கள். சரும வறட்சியும் எட்டிப்பார்க்கும். நோய்த்தாக்குதலின் போது சாப்பிடும் மருந்து, மாத்திரைகளும் சரும வறட்சிக்கு வித்திடலாம்.

          சரும அரிப்பு: கொரோனா நோய் பாதிப்புக்குள்ளான சமயத்தில் இந்த பிரச்சினையை அனுபவிக்கக்கூடும். நமைச்சல், அரிப்பு போன்றவை உடலின் எந்த பகுதியிலும், எந்த நேரத்திலும்

          தோன்றும். சில நேரங்களில் சிவப்பு நிறத்தில் தடிப்பு, சரும ஒவ்வாமை பிரச்சினைகள் உண்டாகும். கொரோனா தொற்றில் இருந்து மீண்ட பிறகும் இத்தகைய பாதிப்புகள் நீடிக்கலாம்.

          இத்தகைய சருமம், முடி சார்ந்த பிரச்சினைகளை தடுப்பதற்கான வாய்ப்புகள் மிகவும் குறை

          பராமரிப்பதும் பாதிப்பின் வீரியத்தை தடுக்க உதவும். குறிப்பிட்ட இடைவெளியில் மருத்துவ ஆலோசனை பெறுவது பலன் தரும்.

          நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலமும், ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலமும் பிரச்சினைகளை களையலாம்.

            Posted in மருத்துவம்

            குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

            குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

            குளிக்கும் முன்னர் நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.

            நல்லெண்ணெய் குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
            நலம் காக்கும் நல்லெண்ணெய் குளியல்


            இன்றைய நாகரிக உலகில் நாம் மறந்து விட்ட பாரம்பரிய பழக்கங்களில் ஒன்று நல்லெண்ணெய் தேய்த்து குளிப்பதாகும்.

            உடலுக்கு பல நன்மைகளை அளிக்கக்கூடிய தன்மை கொண்டதால் அதை நல்ல எண்ணெய் என்றே முன்னோர்கள் குறிப்பிட்டார்கள்.

            தீபாவளி பண்டிகையன்று அதிகாலையில் உச்சி முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து குளிக்கும் வழக்கம் இன்றளவும் கடைப்பிடிக்கப்படுகிறது. குளிக்கும் முன்னர்

            நல்லெண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து சூடுநீரில் குளிப்பது தான் முறையான பழக்கம்.

            குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

            அதன் மூலம் உடலின் வெப்பநிலை சீராக பராமரிக்கப்பட்டு நாடி நரம்புகள் வலுவடைந்து ஆரோக்கியம் மேம்படும் என்பது அனுபவ ரீதியான உண்மையாகும்.

            எண்ணெய் தேய்க்கும் முறை

            சுத்தமான நல்லெண்ணெய்யை உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நன்றாக மசாஜ் செய்வது போல் தேய்க்க வேண்டும்.

            முக்கியமாக தொப்புள், கை, கால் விரல் நகக்கண்களில் நன்றாக

            படியும் படி அழுத்தி தடவ வேண்டும். அதன் பின்னர் அரை மணிநேரம் ஊற விட்டு அரைத்த வெந்தயத்துடன் சிகைக்காய் கலந்து தேய்த்து சுடுநீரில் குளிக்க வேண்டும்.

            கண்களில் எண்ணெய் விடுதல்

            உடலுக்கு எண்ணெய் தேய்த்த பிறகு கண்களிலும் இரு துளிகள் நல்லெண்ணெய்யை விட்டு மேலிருந்து கீழாகவும். இடமிருந்து வலமாகவும் (பிளஸ் வடிவில்) தலா ஐந்து முறை கண்களை

            சுழற்ற வேண்டும். இதே போல் எக்ஸ் வடிவிலும் சுழற்றிய பின்னர் வட்ட வடிவத்தில் 5 முறை கடிகார சுற்றாகவும் அதற்கு எதிர்ப்புறமாகவும் சுழற்ற வேண்டும்.

            10 மில்லி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி தொண்டையில் படும்படி கொப்பளிக்க வேண்டும். அதை உடனடியாக துப்பி விடாமல் கைகளால் பற்களை துலக்கிய பின்னர் மீண்டும் சில

            குளியல் உடலில் ஏற்படுத்தும் மாற்றங்கள்

            நிமிடங்கள் வாய் கொப்பளிக்க வேண்டும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிசுபிசுப்பு குறைந்து தண்ணீர் போல மாறியவுடன் அதை கீழே துப்பி விட வேண்டும். இதன் மூலம் பற்கள் ஆரோக்கியமாக இருக்கும்.

            அருந்தும் முறை

            இரண்டு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்யை சிறிது சிறிதாக வாய்க்குள் உறிஞ்சி உமிழ் நீருடன் நன்றாக கலந்து விழுங்க வேண்டும். அதன் மூலம் மலம் எளிதாக வெளியேறி குடல் சுத்தமாகும்.

            உடலையும் கண்களையும் குளிர்ச்சியடைய செய்து பார்வை திறனை கூர்மையாக்குகிறது. இதில் உள்ள சத்துக்கள் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும், சீரான செரிமானத்துக்கும், நீரிழிவுநோயை

            கட்டுப்படுத்தவும் உதவுகிறது. சருமத்தை மிருதுவாக மாற்றுகிறது. ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பை அதிகரிக்கிறது. மன அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது.

              Posted in மருத்துவம்

              பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க

              பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க

              பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள். சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.


              பெண்கள் தங்களை கவனித்து கொள்வதில்லை என்ற குற்றாச்சட்டு இருக்கிறது. குடும்பம் வீடு, குழந்தை என அவர்கள் தங்களை ஒரு கூட்டுக்குள் அடைத்துகொண்டு தங்களையே மறந்து குடும்பத்துக்காக உழைத்து கொண்டிருப்பார்கள்.

              இன்றைய நிலைமை கொஞ்சம் மாறியுள்ளது. பல பெண்கள் தங்களது உடல் நலன்மீது அக்கறை செலுத்த ஆரம்பித்திருக்கிறார்கள்.

              பெண்கள் 40 வயதிலும் 20 போல் இருக்க இதை பண்ணுங்க

              சிலருக்கு ஆசை இருந்தாலும் எப்படி பின்பற்றுவது என்ற குழப்பம் இருக்கிறது. அவர்களுக்கான சில டிப்ஸ்.

              மனநிலை முக்கியம்

              ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மகிழ்ச்சியான அமைதியான மனநிலை அவசியம். இந்த உலகில் பிரச்சனைகள் இல்லாத மனிதர்களே கிடையாது. நாம் அனைவரும் எத்தனையோ பிரச்சனைகளை

              கடந்தே வந்திருப்போம். அதனால் இனிமேல் புதிதாக ஏதும் பிரச்சனை வந்தால் அட நாம் பார்க்காததா? என்று நினைத்து கொண்டு திடமா அவற்றை கடக்க முயற்சி செய்யுங்கள். இது

              உங்கள் மனதுக்கும், முகத்துக்கும் புதுப்பொலிவை தரும். அடிக்கடி நீங்கள் ஆரோக்கியமானவராகவும், மகிழ்ச்சியானவராகவும் இருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள்.

              உடல் மேல் கவனம்

              நாம் வாழ்வதே இந்த உடலின் மூலம் தான் ஆகவே உடல் மீது நமக்கு மிகுந்த அக்கறை வேண்டும். எனவே முதலில் கவனிக்க வேண்டியது தூக்கம், வாரத்துக்கு 4 முதல் 6 தடவையாவது சின்ன சின்ன

              உடற்பயிற்சிகளை செய்வது அவசியம். நிம்மதியானதூக்கம் உங்கள் உடலின் செல்களை புத்துணர்வு அடைய செய்யும்.

              உடற்பயிற்சி செய்வது தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவும். இவை இரண்டும் நீங்கள் எப்போதும் நல்ல உடல் நிலையை தக்க வைக்க உதவும்.

              பொழுதுபோக்கு

              டிவி பார்ப்பதே பெரும்பாலானோரின் பொழுது போக்காக இருக்கிறது. இன்னும் சிலருக்கு அதற்கு நேரம் கூட கிடைப்பதில்லை. தையல், எம்ப்ராய்டரி அல்லது உங்களுக்கு பிடித்த வேறு ஏதாவது

              ஒன்றை தேர்ந்தெடுத்து கொள்ளவும். ஒரு நாளில் குறைந்தது 5 நிமிடங்களாவது உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கை செய்வதென்று முடிவு செய்து தொடங்குங்கள். அப்புறம் பாருங்கள் உங்கள் மனநிலையின் மாற்றத்தை…

              ஆரோக்கியமான உணவு

              நல்ல உடல் ஆரோக்கியத்துக்கு நல்ல உணவு முக்கியம். உங்கள் உடல் நலத்துக்கு ஏற்றவாறு உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிடுவது அவசியம்.

              வீணாகப்போகிறது என்பதற்காக வயிற்றுக்குள் கொட்டினால் வீணாவது உங்கள் உடல்தான் என்பதை புரிந்து நடந்து கொள்ள வேண்டும்.

              நல்ல நட்பு

              எப்போதுமே நம்மை சுற்றியிருப்பவர்களின் செயல்களே நம்மை பாதிக்கும். அதனால் சரியான நபர்களை தேர்ந்தெடுத்து நட்பு கொள்வது மிக முக்கியமானது.

              நல்ல நண்பர்களே உங்களுக்கு பெரிய ஊக்க சக்தி

              இவற்றையெல்லாம் தொடர்ந்து பின்பற்றினால் நீங்கள் எப்போதும் 20 தான்.

                Posted in மருத்துவம்

                முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

                முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

                முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

                சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.


                முடி கருகருவென அடர்த்தியாக நீளமாக இருக்கவே எல்லோரும் விரும்புவார்கள். இந்த விஷயத்தில் ஆண்களை விட பெண்களுக்கு அதிக அக்கறை உண்டு

                . சில பெண்களுக்கு இடுப்பு வரை கூந்தல் நீண்டு வளர்ந்திருக்கும். இதை கண்டு சிலர் புருவத்தை உயர்த்துவதுடன்

                பொறாமைப்படுவதும் உண்டு. உதாரணமாக நீண்ட கூந்தலுடைய பெண் ஒருநாள் பாப் கட்டிங் செய்தாலோ அல்லது முடியின் அளவை குறைத்துக் கொண்டாலோ அது பற்றி ஊரே பேசும்.

                அந்த அளவுக்கு முடி விஷயத்தில் பெண்களுக்கு அதிக ஆர்வமும், அக்கறையும் உண்டு.

                இன்றைய காலகட்டத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் தவறான உணவுப்பழககம், ரசாயனக்கலவைகளை தலையில் பூசி அழகூட்டுவது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால்

                பெண்களின் தலைமுடியில் பாதிப்பு ஏற்படுகிறது. ஆண்களில் பலரும் வழுக்கை தலை பிரச்சனையை எதிர்கொள்கிறார்கள்.

                முடி உதிர்தலை பெரிய பிரச்சனையாக நினைக்காமல் அதை சரிசெய்வதற்கு தேவையான நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

                சிகிச்சை என்றில்லாமல் உண்ணும் உணவின் மூலம் அதை சரி செய்ய நிறைய வழிகள் இருக்கின்றன.

                உலகிலேயே வழுக்கை தலையர்கள் குறைவாக உள்ள நாடு சீனா என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. அங்கு வசிப்பவர்கள் சோயா பீன்ஸ் அதிகம் சாப்பிடுவது தான் அதற்கு

                முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

                காரணம்என்பதும் அந்த ஆய்வில் சுட்டிக்காட்டப்படுள்ளது. நம் ஊரில் சிலர் ஒரு கைப்பிடி கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் வாயில் போட்டு மென்று சாப்பிடுவார்கள்.

                இன்னும் சிலர் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினாவை சேர்த்து அரைத்து ஜூஸாக்கி நாட்டு சர்க்கரை சேர்த்து குடிப்பார்கள். கறிவேப்பிலையை தனியாகவோ, ஜூஸாவோ சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவுவதுடன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும் உதவும்.

                இட்லி தோசை போன்ற காலை உணவுக்கு வழக்கமான தேங்காய் சட்னி, தக்காளி சட்னிக்கு பதில் கறிவேப்பிலை, மல்லித்தழை, புதினா சேர்த்து அரைத்த சட்னி சாப்பிடலாம். இதுவும் முடி

                வளர்ச்சிக்கு உதவக்கூடியதே. இதுபோன்ற எளிய உணவுகளை அன்றாடம் சாப்பிட்டு வந்தாலே தலைமுடி பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. அதேபோல் முருங்கைக்கீரை,

                பொன்னாங்கண்ணி கீரை, அரைக்கீரை போன்றவற்றை மதிய உணவில் அடிக்கடி சேர்த்து கொள்வது நல்லது. முருங்கைக்கீரையில் சூப் தயார் செய்து அருந்தலாம்.

                கரிசலாங்கண்ணிக்கீரை, வெந்தயக்கீரை, மணத்ததக்காளி கீரை, தக்காளி கீரை, வல்லாரை கீரை நெல்லிக்காய் சின்ன வெங்காயம் போன்றவற்றை அவ்வப்போது உணவில் சேர்த்து கொண்டால் தலைமுடி செழித்து வளரும்.

                தேங்காய் அல்லது தேங்காய்ப்பால், கேரட், பச்சை பட்டாணி போன்றவற்றை பச்சையாக சாப்பிடலாம்.

                முடி உதிர்வு பிரச்சனைக்கு உணவே மருந்து

                பேரீச்சம் பழம், அத்திப்பழம் சாப்பிடுவது முடி வளர்ச்சிக்கு உதவும். தக்காளிப்பழம் மயிர்க்கால்களை உறுதிப்பெற செய்வதுடன் முடி கருமையடைய உதவும்.

                உணவில் புளிப்பு அதிகம் சேர்த்தால் முடி வளர்ச்சி பாதிக்கப்படும்.

                கம்பு, கேழ்வரகு, சோளம், பட்டாணி, போன்றவற்றில் சிலிக்கான் சத்து அதிகமாக உள்ளதால் அவை முடி வளர்ச்சிக்கு உதவும்.

                வைட்டமின் ஏ சத்துள்ள காய்கறிகள், வைட்டமின் பி சத்து நிறைந்த

                பருப்பு வகைகள், வைட்டமின் சி சத்துள்ள பழங்களை சாப்பிடுவதும் நல்லது. இவை தவிர மீன், முட்டை, பாதாம் பருப்பு முந்திரி பருப்பு போன்றவற்றை உணவில் சேர்த்து கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.

                  Posted in மருத்துவம்

                  உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

                  உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

                  வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது. அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.

                  பெண்கள் பெரும்பாலும் ஆடைகளை தேர்வு செய்யும் விஷயத்தில் காண்பிக்கும் அக்கறையை உள்ளாடை வாங்கும் விஷயத்தில் பின்பற்றுவதில்லை. இறுக்கமான, தடிமனான, தவறான அளவு

                  கொண்ட பிராவை தேர்ந்தெடுத்தால் தேவையற்ற உடல்நல பிரச்சினைகளை எதிர்கொள்ள நேரிடும்.

                  குறிப்பாக அடிப்பகுதியில் ஒயர் கொண்ட இறுக்கமான பிராவை அணிந்து தூங்கும்போது பாதிப்புகள் அதிகமாகும்.

                  தவறான பிரா தேர்வால் ஏற்படும் இன்னல்கள் பற்றி பார்ப்போம்.

                  இறுக்கமான பிரா அணியும்போது ரத்த ஓட்டம் தடைபடக்கூடும். அதிலும் எலாஸ்டிக் அல்லது ஒயர் பதிக்கப்பட்ட பிராவை அணியும்போது பாதிப்பு அதிகமாகும். அவை இயல்பாகவே இறுக்கத்தை

                  ஏற்படுத்திவிடும். தூங்கும்போது இத்தகைய பிராவை அணிவது அசவுகரியத்தை உண்டாக்கும்.

                  உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

                  இறுக்கமான பிரா அணிவது தூக்கத்திற்கு இடையூறாக அமைந்துவிடும். சவுகரியமாக தூங்க முடியாது.

                  இறுக்கமான பிரா அணிவது உடல் பகுதியில் எரிச்சல், தடிப்பு போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இரவில் தூக்கமும் தடைப்பட்டு போகும். தூங்கும்போது அடிப்பகுதியில் ஒயர்கள்,

                  பட்டைகள் இல்லாத பிராவை உபயோகிப்பது நல்லது. வீராங்கனைகள் அணியும் ‘ஸ்போர்ட்ஸ் பிரா’க்களை இரவில் அணிந்து கொள்வது சிறப்பானது.

                  அவை அணிவதற்கு இதமாகவும், தூங்குவதற்கு சவுகரியமாகவும் இருக்கும்.

                  எலாஸ்டிக் தன்மை கொண்ட பிராக்கள் இறுக்கத்தை உண்டாக்கும்போது அவை உடலில் பதியும் பகுதிகளில் நிறமிகள் பாதிப்புக்குள்ளாகும்.

                  தூங்கும்போது இந்த பிராக்களை அணியும்போது

                  நிறமிகள் அதிகமாகும். அதன் மூலம் தேவையற்ற பக்கவிளைவுகள் உண்டாகும். மென்மையான அல்லது உடலமைப்புக்கு பொருந்தும் தளர்வான பிராவை அணிந்து கொள்வது நல்லது.

                  உள்ளாடைகள் தரும் இன்னல்கள்

                  தொடர்ந்து இறுக்கமான பிரா அணிந்தால் நிணநீர் அடைப்பு பிரச்சினையும் உண்டாகும். இது பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படும்.

                  மார்பகங்களில் நீர் வீக்கம் பிரச்சினையும் ஏற்படும். வலியற்ற கட்டிகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.

                  கோடை காலங்களில் இறுக்கமான பிரா அணிந்து தூங்கும்போது வியர்வை வெளியேறும் அளவு அதிகரிக்கும்.

                  செயற்கை இழைகளால் உருவாக்கப்படும் பிராக்களை அணியும்போது இந்த பிரச்சினை அதிகரிக்கும். காட்டன் பிராக்களை தேர்வு செய்வதுதான் நல்லது.

                    Posted in மருத்துவம்

                    வேகமாக சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

                    வேகமாக சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

                    காலையில் எழுந்தவுடன் எத்தனை மணிநேரத்தில் சாப்பிட வேண்டும் என்றும் உணவை வேகமாக சாப்பிட்டால் எந்த மாதிரியான பிரச்சனைகள் வரும் என்றும் அறிந்து கொள்ளலாம்.

                    காலை உணவினால் வைட்டமின், மினரல்ஸ், கார்போ ஹைட்ரேட் சத்துக்கள் உடலுக்கு கிடைக்கும். டிபன், சாப்பாடு, பழங்களை சாப்பிடலாம். எழுந்ததில் இருந்து 2 மணி நேரத்துக்குள்ளாக சாப்பிட வேண்டும்.

                    காய்கறிகளை பொரியலாகவோ, குழம்புடனோ சாப்பிடலாம். குறிப்பாக, காய்கறிகளை நறுக்கி இட்லி, தோசை மாவுகளில் கலந்து, வேகவைத்து சாப்பிடலாம்.

                    நீரிழிவு நோயாளிகள் நெல்லி ஜூஸ் எடுத்துக்கொள்ளுங்கள். இயற்கையாக கிடைக்கும் பழச்சாறு, உளுந்து, முளைகட்டி வேகவைத்த தானியங்களை எடுத்துக் கொள்ளலாம்.

                    வேகமாக சாப்பிட்டால் இந்த பிரச்சனைகள் வரும்

                    அரக்கப்பறக்க அரைகுறையாக சில நிமிடங்களில் சாப்பிடுபவர்கள்தான் அதிகம். அப்படி செய்வதால் செரிமானக்கோளாறுகள் ஏற்பட அதிக வாய்ப்புகள் உண்டு.

                    சராசரியாக ஒவ்வொரு வேளையும் குறைந்தபட்சம் 10 முதல் 20 நிமிடங்கள் வரை நன்றாக மென்று சாப்பிட வேண்டும்.

                    தினம் ஒரு பழம், காய்கறி, கீரை ஆகியவை உணவில் இருந்தால் உங்கள் ஆரோக்கியம் மேம்படு

                      Posted in மருத்துவம்

                      இதை சாப்பிட்டால் இந்த நோய்கள் குணமாகும்

                      இதை சாப்பிட்டால் இந்த நோய்கள் குணமாகும்

                      கேரட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள்

                      கரையும். உடலுக்கு நன்மை சேர்க்கும் பல்வேறு சத்துக்கள் கேரட்டில் நிறைந்துள்ளதால் கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடுவது மிகவும் சிறந்தது.

                      கேரட்டில் அதிக அளவில் நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற சத்துகள் அடங்கி உள்ளது. கேரட்டை

                      உணவுடன் அடிக்கடி சாப்பிடுவதன் மூலம் கண்கள் ஆரோக்கியம் அடையும், மாலைக் கண் நோய் வராமல் தடுக்கும் சக்தி கொண்டது கேரட்.

                      கேரட் சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்

                      • கேரட்டில் வைட்டமின் ஏ சத்து அதிக அளவில் நிறைந்துள்ளதால் கண்களுக்கு பார்வை திறனை அளிக்கிறது.

                      *. கேரட்டில் உள்ள சத்துக்கள் தோலிற்கு புதுப் பொலிவை கொடுக்கிறது.

                      *. உடலை புத்துணர்ச்சியாக வைத்துக்கொள்ள கேரட் மிகவும் பயன்படுகிறது.

                      *. தினமும் ஒரு கேரட் சாப்பிடுவதன் மூலம், உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து குடல் புண் வராமல் தடுக்கலாம்.

                      இதை சாப்பிட்டால் இந்த நோய்கள் குணமாகும்

                      • நெஞ்சு எரிச்சலுக்கு தினமும் கேரட் சாறு பருகுவது நல்லது.

                      கேரட்

                      • கேரட் சாருடன் சிறிதளவு இஞ்சி சாறு சேர்த்து குடித்து வந்தால் வாய்வு தொல்லை நீங்கும்.
                      • வயிற்றில் கற்கள், புண்கள், கட்டிகள் இருப்பவர்களுக்கு கேரட் ஜூஸ் ஒரு சிறந்த மருந்தாகும்.
                      • மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து சீக்கிரம் குணமாக தினமும் கேரட் சாறு அருந்துவது நல்லது.
                      • கேரட் சாறுடன், எலுமிச்சை சாறு கலந்து சாப்பிட்டால் பித்த கோளாறுகள் நீங்கும்.
                      • சிறுநீர் கழிக்கும் போது உண்டாகும் எரிச்சலை குணமாக்க, கேரட்டை பச்சடி போல செய்து சாப்பிடலாம்.
                      • வாரத்திற்கு மூன்று முறை கேரட் சாப்பிட்டால் மாலைக்கண் நோய் ஏற்படாது.
                      • கேரட்டை தொடர்ந்து சாப்பிடும் ஆண்களுக்கு விந்தணுவின் அளவை அதிகரிப்பதோடு,
                      • விந்தணுவின் அடர்த்தியும் அதிகரிக்கும். எனவே குழந்தைப் பெற்றுக் கொள்ள நினைப்பவர்கள் தினமும் கேரட்டை தவறாமல் உணவில் சேர்த்து கொள்வது நல்லது.
                      • மனித உடல் நலம் ஆரோக்கியத்துடன் செயல் ஆற்ற இதனை செய்யுங்கள்
                        Posted in மருத்துவம்

                        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

                        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

                        ஒழுங்கற்ற மாதவிடாய், அடி வயிறு அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

                        அல்லது இடுப்பு பகுதியில் கடும் வலி, வீக்கம், சோர்வு, திடீர் எடை இழப்பு, வயிற்றுப்போக்கு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் கவனமாக இருக்க வேண்டும்.

                        அவை கருப்பை வாய் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம்.

                        மாதவிடாய் சுழற்சி முடிவடைந்து மெனோபாஸ் காலகட்டத்தை அடையும் பெண்களுக்குத்தான் கருப்பை வாய் புற்றுநோய் தோன்று வதற்கான வாய்ப்பு அதிகம் இருக்கிறது. வழக்கமாக

                        மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்களுக்கும் இத்தகைய பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

                        மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது ஹார்மோன்களின் செயல்பாட்டில் பாதிப்பு நேரும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கு காரணமாகிறது.

                        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

                        உயரத்திற்கு ஏற்ப உடல் எடையும் இருக்க வேண்டும். அதைவிட 10 சதவீதம் அதிகமாக இருந்தாலே அதுவும் ஹார்மோன் மாற்றங்களுக்கு உள்ளாகி ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கும்

                        காரணமாகிவிடும். தைராய்டு பாதிப்பு, பெண்களின் ஹார்மோனில் சீரற்ற தன்மையை உண்டாக்கிவிடும். அதுவும் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களுக்கு வழி வகுத்துவிடும். தொடர்ந்து

                        மாதவிடாய் சுழற்சிக்கு இடையூறு ஏற்பட்டுகொண்டிருந்தால் அது கருப்பை வாய் புற்றுநோய்க்கு அடித்தளம் அமைத்துவிடும்.

                        மேலும் தாய்ப்பால் கொடுக்காத பெண்கள், சிறு வயதிலேயே மாதவிடாய் சுழற்சியை எதிர்கொண்ட பெண்கள், புற்றுநோய் பாதிப்புக்குள்ளான குடும்பத்தில் பிறந்தவர்கள்

                        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம்

                        போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை.

                        உடல் இயக்கம் சீராக செயல்படுவதையும் அது

                        உறுதி செய்கிறது. ஆதலால் ஆரம்ப நிலையிலேயே மாதவிடாய் சிக்கல்களுக்கு சரியான சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்…

                        ஒழுங்கற்ற மாதவிடாய்… புற்றுநோயாக இருக்கலாம் போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை போன்றவர்களும் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடும். மாதவிடாய் சுழற்சி தாய்மைக்கு மட்டும் காரணமாக இருப்பதில்லை

                          Posted in மருத்துவம்

                          ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் குறைவது பற்றிய அறிகுறிகள்

                          கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற அறிகுறிகளை உணரலாம்.


                          கொரோனா நோய்த்தொற்று பாதிப்புக்குள்ளாகுபவர்களில் பலர் ஆக்சிஜன்பற்றாக்குறையால் உயிரிழக்கும் சூழல் நிலவுகிறது

                          . கொரோனாவின் சுவாச நோயாக இருப்பதால் சுவாச மண்டலத்தின் ஆரோக்கியமான செயல்பாடுகளை சீர்குலைக்கிறது.

                          அதன் காரணமாக ரத்தத்தில் கலந்திருக்கும் ஆக்சிஜன் அளவும் குறைய தொடங்குகிறது.

                          வைரஸ் தொற்று காரணமாக உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது உடல் இயக்க செயல்பாடுகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காது.

                          அப்படி ஆக்சிஜன் அளவு தொடர்ந்து குறைந்து கொண்டிருந்தால் உடல் உள் உறுப்புகள் செயலிழக்கும் அபாயம் உண்டாகும். தக்க

                          ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் குறைவது பற்றிய அறிகுறிகள்

                          சமயத்தில் சிகிச்சை மேற்கொள்ளாவிட்டால் கடும் ஆபத்தை எதிர்கொள்ள நேரிடும். இந்த காலகட்டத்தில் உடலில் ஆக்சிஜன் அளவை கண்காணிப்பது அவசியம்.

                          உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகள்:

                          சுவாசிப்பதில் சிரமம்: கொரோனா தொற்றின் ஆரம்ப கட்டத்தில் ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் வெளிப்படாது. காய்ச்சல், இருமல், வாசனை இழப்பு, சுவை இழப்பு போன்ற

                          அறிகுறிகளை உணரலாம். எனினும் சுவாசிப்பதற்கு சிரமம், மூச்சுத்திணறல் போன்ற பாதிப்புகளை சிலர் உணரக்கூடும்.

                          உடலில் போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதபோது ஒருவரால் இயல்பாக செயல்பட முடியாது. சுவாசிக்க முடியாமல் அவதிப்படுவார்.

                          அப்படிப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.

                          மார்பு வலி: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மார்பு வலி உண்டாகக்கூடும். என மார்பு நெரிசல் பிரச்சினையும் எட்டிப்பார்க்கும்.

                          நுரையீரல் மற்றும் சுவாசக்குழாய்களில் சளி படர்வது மார்பு

                          நெரிசலுக்கு காரணமாக அமையும். இருமலும் சேர்ந்து அடர்த்தியான சளியை வெளியே கொண்டு வரும்.

                          சுவாசிக்கும்போது ஒருவிதமான ஒலியும் வெளிப்படக்கூடும். மூச்சுத்திணறலையும் உணரக்கூடும்.

                          இத்தகைய அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. மருத்துவ சிகிச்சை பெறுவது அவசியமானது.

                          ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் குறைவது பற்றிய அறிகுறிகள்

                          மனக்குழப்பம்: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது எதிலும் போதிய கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்படும்.

                          சிந்தனை திறனும் பலவீனமடையும். மன குழப்பமும், தலைவலியும் ஒருசேர வாட்டிவதைக்கும். இவை ஆக்சிஜன் அளவு குறைந்து கொண்டிருப்பதை தீர்மானிக்கும் அடையாளமாக இருக்கலாம்.

                          நீல நிற உதடு: உதடுகள் நீல நிறமாகவோ அல்லது நிற மாற்றமாகவோ காட்சியளிப்பதும் உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்து இருப்பதை குறிக்கும். இந்த மாற்றம், சயனோசிஸ் என்றும்

                          அழைக்கப்படுகிறது. போதுமான அளவு ஆக்சிஜன் இல்லாதவர்கள், நாளங்களுக்குள் அதிக அளவு ஆக்சிஜனேற்றப்பட்ட ஹீமோகுளோபின் கொண்டிருப்பவர்களுக்கு நீல நிறத்தில் உதடுகள் காட்சியளிக்கலாம்.

                          மூக்கு விரிவடைதல்: உடலில் ஆக்சிஜன் அளவு குறையும்போது மூச்சு விடுவதில் பாதிப்பு நேரும். வழக்கமாக சுவாசிக்கும்போது மூக்கு இயல்பாக இருக்கும். ஆனால் சுவாசத்தில் பிரச்சினை

                          ஏற்படும்போது மூக்கின் முனைப்பகுதிகள் இரண்டும் விரிவடையும். நாசிப்பாதையின் திறப்பும் வழக்கத்தை விட விரிவடைந்திருக்கும். இத்தகைய அறிகுறிகள் உடலில் ஆக்சிஜன் அளவு

                          குறைந்திருப்பதையும், சுவாசிப்பதில் இருக்கும் சிரமத்தையும் வெளிப்படுத்தக்கூடியவை. அதனால் இதனை சாதாரணமாக கருதக்கூடாது. மருத்துவ சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

                          மூச்சு பயிற்சி: மூச்சு பயிற்சி மேற்கொள்வது நுரையீரலின் ஆரோக்கியத்தையும், ஆக்சிஜன்அளவையும் மேம்படுத்த உதவும். பல சுவாசப்பயிற்சிகள் இருக்கின்றன. அவற்றுள் 4-7-8

                          என்ற சுவாசப்பயிற்சி எளிமையானது, சிறப்பானது. தரையில் நேராக அமர்ந்து கொள்ள வேண்டும். வாயை நன்றாக மூடிவிட்டு, மூக்கு வழியாக 4 விநாடிகள் வரை மூச்சை நன்றாக உள்ளிழுக்க

                          ஆக்சிஜன் அளவு குறைவது பற்றிய அறிகுறிகள் குறைவது பற்றிய அறிகுறிகள்

                          வேண்டும். அப்போது மனதிற்குள் நான்கு வரை எண்ணிக் கொள்ள வேண்டும். பின்பு 7 வினாடிகள் வரை அப்படியே மூச்சை நிறுத்தி வைக்க வேண்டும். பின்பு வாய் வழியாக 8 வினாடிகள் வரை

                          மூச்சை வெளியே விடவேண்டும். தொடர்ந்து மூன்று முறை இந்தப் பயிற்சியை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் 7 வினாடிகள் வரை மூச்சை நிறுத்தி வைத்திருப்பது கடினமாக இருக்கும். ஆனால்

                          நாளடைவில் எளிதாகிவிடும். நான்கு வினாடிகள் மூச்சை உள்ளிழுத்து 7 விநாடிகள் வைத்திருந்து 8 விநாடிகள் வெளியேற்றுவதால் இது 4-7-8 சுவாசப் பயிற்சி எனப்படுகிறது

                            Posted in மருத்துவம்

                            அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்

                            அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்

                            முகக்கவசம் வாழ்க்கை முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.

                            சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.

                            முகக்கவச ‘அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்
                            முகக்கவச ‘அலர்ஜி’


                            கொரோனா நோய் தொற்றில் இருந்து பாதுகாத்துக்கொள்வதற்கு வீட்டை விட்டு வெளியே செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. முகக்கவசம் வாழ்க்கை

                            முறையின் முக்கிய அங்கமாக மாறி இருக்கிறது. இப்போதைய சூழலில் சில நிமிடங்களோ, சில மணி நேரங்களோ வெளியே செல்ல நேர்ந்தாலும் முகக்கவசம் அணிந்தாக வேண்டும்.

                            சிலருக்கு முகக்கவசம் அணிவது ஒத்துக்கொள்ளாது.

                            https://www.youtube.com/user/ethiricom1

                            சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். சருமம் சிவத்தல், தடிப்புகள் உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். வெப்பமும், ஈரப்பதமும் அதற்கு காரணமாக அமையும். முகக்கவசம்

                            அணிவது அழுக்கு, சுற்றுச்சூழல் மாசுபாட்டில் இருந்து சருமத்தை காக்க உதவும். அதே வேளையில் வியர்வைக்கு வழிவகுக்கும்.

                            முகத்தை இறுக்கமாக மூடும்போது கண்ணுக்கு புலப்படாத அளவுக்கு வியர்வை உருவாகும்.

                            வீட்டிற்கு சென்றதும் முகக்கவசத்தை கழற்றிவிட்டு சருமத்தை நன்றாக சுத்தம் செய்துவிட வேண்டும்.

                            அதன் மூலம் சரும துளைகள் அடைக்கப்படுவதை தடுக்கலாம். வறண்ட சருமம் கொண்டவர்கள் முகத்தை சுத்தம் செய்ததும் ஈரப்பதத்தை தக்கவைக்க உதவும் கிரீமை

                            பயன்படுத்தலாம். அது எண்ணெய் தன்மை இல்லாததாக இருக்க வேண்டும். ஏனெனில் அது சரும துளைகளை அடைக்காமல் ஈரப்பதத்தை ஏற்படுத்தி கொடுக்கும். சரும எரிச்சலையும் போக்கும்.

                            அலர்ஜி’… தடுக்கும் வழிமுறைகள்

                            சன்ஸ்கிரீன் பயன்படுத்துவது சூரியனிடம் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு மட்டும் அல்ல. வெளிப்புற வெப்பநிலையுடன் கலந்திருக்கும் வறட்சியை எதிர்த்து போராடுவதற்கும் உதவும்.

                            புற ஊதாக்கதிர்கள் படிவதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாகும். அவை சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி வறட்சியை ஏற்படுத்திவிடும். ஆதலால் உங்கள் சருமத்தின் தன்மைக்கு ஏற்ற சன்ஸ்கிரீனை பயன்படுத்துவது நல்லது.

                            ‘எலாஸ்டிக்’ பிணைக்கப்பட்டிருக்கும் முகக்கவசத்தை தவிர்ப்பது நல்லது. அதுதான் சரும எரிச்சலுக்கு முக்கிய காரணமாக அமையும். முகக்கவசம் அணியும்போது மூக்கு மற்றும் வாய் பகுதியை நன்றாக மறைக்க வேண்டும். அதேவேளையில் சுவாசிப்பதற்கு ஏதுவாக முகக்கவசம்

                            சற்று தளர்வாகவும் இருக்க வேண்டும். அதிக தளர்வும் கூடாது. எலாஸ்டிக் பதித்த முகக்கவசம் அணியும்போது இறுக்கம் அதிகமானால் ரத்த ஓட்டத்தை பாதிக்கச்செய்துவிடும். அதனால் சருமம்

                            சிவத்தல், வீக்கம் ஏற்படுதல், அரிப்பு உண்டாகுதல் போன்ற பிரச்சினைகள் தோன்றும். சருமத்தின் மென்மையை பாதிக்கும் வகையில் முகக்கவசம் அமைந்துவிடக்கூடாது.

                            பெண்கள் வெளியே செல்லும்போது ஒப்பனை செய்து கொள்வதற்கு மறக்கமாட்டார்கள். முகக்கவசம் அணியும்போது அதனை தவிர்ப்பதுதான் நல்லது. ஏற்கனவே முகத்தை

                            மூடியிருக்கும்பட்சத்தில் ஒப்பனை பொருட்களும் ஆக்கிரமித்தால் சருமத்திற்கு தேவையான காற்று கிடைக்காது. அதன் காரணமாக சருமத்தில் நோய் தொற்றுகள் ஏற்பட வாய்ப்பு உருவாகிவிடும்.

                              Posted in மருத்துவம்

                              இரத்த சோகையை குணமாக்க இதை சாப்பிடுங்க

                              இரத்த சோகையை குணமாக்க இதை சாப்பிடுங்க

                              கறிவேப்பிலை இலைகளையோ அல்லது அந்த இலைகளின் பொடிகளையோ அதிகம் சாப்பிட்டு வர இரத்த சோகை நீங்கி சிவப்பு இரத்த அணுக்கள் விருத்தி உண்டாகும்.

                              இரத்த சோகையை குணமாக்கும் கறிவேப்பிலை இடிச்ச பொடி
                              கறிவேப்பிலை இடிச்ச பொடி
                              தேவையான பொருட்கள்

                              கறிவேப்பிலை – 1 கப்,

                              மைசூர் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
                              உளுத்தம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன்,
                              வெந்தயம் – 1/2 டேபிள்ஸ்பூன்,
                              புளி – சிறிது,
                              பெருங்காயம் – 1 சிட்டிகை,
                              சிவப்பு மிளகாய் – 7,
                              உப்பு – தேவைக்கு,
                              எண்ணெய் – 1 டேபிள்ஸ்பூன்,
                              பச்சரிசி – 1 டேபிள்ஸ்பூன்.

                              செய்முறை

                              இரத்த சோகையை குணமாக்க இதை சாப்பிடுங்க

                              கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் மைசூர் பருப்பு, உளுத்தம் பருப்பு, வெந்தயம் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

                              அத்துடன் கறிவேப்பிலை, புளி, பெருங்காயம், மிளகாய், பச்சரிசி சேர்த்து வதக்கவும்.

                              ஆறியதும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.

                              சூடான சாதத்தில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி, இந்தப் பொடியை தேவைக்கு சேர்த்துக் கலந்து சாப்பிடலாம்.

                                Posted in மருத்துவம்

                                கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

                                கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

                                கொரோனா நோய்த்தொற்றை தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள் குறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி சித்த மருத்துவ அதிகாரி விளக்கமளித்துள்ளார்.


                                கொரோனாவின் நோய்த்தொற்று பரவலை தடுப்பதில் தமிழகத்தின் பாரம்பரிய சித்த மருத்துவம் முக்கிய பங்காற்றுகிறது.

                                இதையடுத்து, தற்போது புதிதாக தமிழகம் முழுவதும் முற்றிலும் சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையங்கள் திறக்கப்பட்டு வருகின்றன.

                                இது குறித்து, மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரியின் மாவட்ட சித்த மருத்துவ அதிகாரி டாக்டர் சைரா பானு கூறியதாவது:-

                                கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

                                கொரோனா நோய்த்தொற்றை ஆரம்ப நிலையில் கண்டறிந்தால், சித்த மருந்துகள் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்தலாம்.

                                பெரும்பாலானோர் நோய் முற்றிய நிலையில் ஆஸ்பத்திரிகளுக்கு வருகின்றனர்.

                                முன்னெச்சரிக்கை

                                அவர்களுக்கு சுவாசிக்க ஆக்சிசன் உதவி தேவைப்படுகிறது. ஆனால், நோய்த்தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க முடியும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க, வீட்டின்

                                சுற்றுப்புறத்தில் வேப்பிலை, மஞ்சள் கலந்த நீர் தெளிக்க வேண்டும். தினமும் காலையில் மிதமான சூட்டில் கல் உப்பால் வாய் கொப்பளிக்க வேண்டும்.

                                தொண்டை வறண்டு போகாமல் இருக்க 2 வேளை வெந்நீர் குடிக்க வேண்டும். வேப்பிலை, நொச்சி இலை மற்றும் மஞ்சள் சேர்த்து தினமும் சுவாசத்துக்கான நீராவி பிடிக்க வேண்டும். மஞ்சள்,

                                வேப்பிலை, கற்றாழை மற்றும் படிகாரம் கலந்த நீரை கைகழுவ பயன்படுத்தலாம். காலையில் தோல் சீவிய இஞ்சி, எலுமிச்சை தோலுடன் மிளகு சேர்த்து காய்ச்சி தேன் கலந்து குடிக்க வேண்டும்.

                                தினமும் மாலை சுக்கு, கொத்தமல்லி கலந்த பானம் தேனில் கலந்து அருந்த வேண்டும். இரவில் சூடான பாலில் மஞ்சள், மிளகு சேர்த்து குடிக்க வேண்டும். சுண்டைக்காய், பாகற்காய், திணை,

                                கொரோனா நோய்த்-தடுப்பதற்கான சித்த மருத்துவ முறைகள்

                                சாமை, கேழ்வரகு, குதிரைவாலி, வேப்பம் பூ, தூதுவளை ரசம் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும்.

                                நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நெல்லிக்காய், கொய்யாப்பழம், பப்பாளி, ஆரஞ்சு, சாத்துக்குடி உள்ளிட்ட பழங்களை தினமும் சாப்பிட வேண்டும்.

                                சித்த மருத்துவம்

                                அலர்ஜி, ஆஸ்துமா, சைனஸ் நோயாளிகள், வயதானவர்கள் முள்ளங்கி, சுரைக்காய், பூசணி, வெள்ளரிக்காய் ஆகியவற்றையும், எலுமிச்சை, தயிர், மாதுளை, திராட்சை போன்ற உணவு

                                வகைகளை தவிர்க்க வேண்டும். கொண்டைக்கடலை, பாதாம்பருப்பு, நிலக்கடலை ஆகியவற்றை சுண்டல் செய்து சாப்பிடலாம். தினமும் காலை 10 மணிக்குள்ளும், மாலை 4 மணிக்கு பிறகும் உடம்பில் வெயில்படுமாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

                                இதன் மூலம் நோய்த்தொற்று பரவாமல் நம்மை நாமே பாதுகாத்துக்கொள்ள முடியும். கபம் தொடர்பான நோய்களுக்கு சித்தர்களின் ஓலைச்சுவடிகளில் பலதரப்பட்ட மருந்து குறிப்புகள்

                                சொல்லப்பட்டுள்ளன. அதன்படியே, தற்போது சித்த மருந்துகள் கொரோனா நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு வருகிறது.

                                கொரோனா நோயாளிகளை அறிகுறிகள் இல்லாதவர்கள், மிதமான பாதிப்பு, சாதாரண பாதிப்பு மற்றும் தீவிர பாதிப்பு என 4 வகையினராக பிரிக்கின்றனர்.

                                ஆய்வு

                                இதில், மிதமான மற்றும் சாதாரண பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு சித்த மருந்துகள் மட்டும் நோய்த்தொற்றை குணப்படுத்த போதுமானது. பிற பிரிவினருக்கு ஆங்கில மருந்துகளுடன், சித்த

                                மருத்துவமும் சேர்ந்து கிடைக்கும் போது விரைவில் குணமடைகின்றனர் என்பது இந்திய மருத்துவத்துறை இயக்குனர் கணேஷ் ஐ.ஏ.எஸ். உத்தரவின் பேரில், தமிழத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெளிவாகியுள்ளது.

                                இந்த ஆய்வறிக்கை ஜே.ஏ.ஐ.எம். என்ற சர்வதேச நாளேட்டில் பிரசுரமானது. தற்போது நோய் அதிதீவிரமான நிலையில் இருப்பதால் சித்த மருத்துவத்தையும் சேர்த்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

                                இவ்வாறு அவர் கூறினார்.

                                நீராவி பிடிக்கும் வழிமுறைகள்

                                காலை, மாலை நேரங்களில் தொடர்ந்து சுவாசத்துக்கான நீராவி பிடித்தால் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பில் இருந்து நிவாரணம் பெற முடியும். இதற்கு கல் உப்பு, விரலி மஞ்சள்தூள்,

                                வேப்பிலை, நொச்சி இலை, துளசி இலை மற்றும் ஓமவள்ளி இலை ஆகியவற்றை சுத்தமான தண்ணீரில் நன்றாக கொதிக்க வைத்து வாய் மற்றும் மூக்கு பகுதியில் நீராவி படும்வகையில் 3

                                நிமிடம் ஆவி பிடிக்க வேண்டும். அப்போது, காற்றை இழுத்து சுவாசிக்க வேண்டும். இவ்வாறு செய்யும் போது, அவ்வப்போது தொற்றிக்கொள்ளும் வைரஸ் கிருமிகள் அழிக்கப்படும்.

                                  Posted in மருத்துவம்

                                  குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?

                                  குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?

                                  ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான்.

                                  அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்று பலரும் கருகிறார்கள்.


                                  ஈப்போதெல்லாம் என்ன குழந்தை பிறந்துள்ளது? என்பதற்கு அடுத்த கேள்வியாக குழந்தை என்ன நிறத்தில் பிறந்துள்ளது? என்று தான் பலரும் கேட்கிறார்கள்.

                                  அந்த அளவுக்கு நிறத்தின் மீதான

                                  ஆர்வம் எல்லோருக்கும் அதிகரித்துள்ளது. நிறம் பற்றிய கேள்வி வரும் போது தான் சிவப்பு தங்கம் என்று அழைக்கப்படும் குங்குமப்பூ பற்றிய பேச்சும் எழுகிறது.

                                  குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என நம்பப்படுகிறது.

                                  குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?

                                  ஒரு பெண் கர்ப்பமானதும் சுற்றி இருப்பவர்கள் கொடுக்கும் முதல் டிப்ஸ் குங்குமப்பூ கலந்த பாலை தினமும் குடிக்க வேண்டும் என்பதுதான்.

                                  அப்படி குடித்தால் தான் குழந்தை சிவப்பாக

                                  பிறக்கும் என்று பலரும் கருகிறார்கள். சீமந்த விழாவில் குங்குமப்பூவை கொடுக்கும் அளவிற்கு இந்த நம்பிக்கை ஆழமாக பதிந்துள்ளது.

                                  உண்மையில் குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை

                                  சிவப்பாக பிறக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்விதான். இதற்கு மருத்துவர்களின் பதில் நோ என்பதே.

                                  உண்மையில் குழந்தையின் நிறத்தை தீர்மானிப்பது பெற்றோரின் மரபணுக்களும், மெலனில் சுரப்பியும் தான். சூரியனின் புற ஊதாக்கதிர்களில் இருந்து நம் சருமத்தை பாதுகாப்பது இந்த

                                  லெமனில் தான். யாருக்கு உடலில் லெமனில் அதிகமாக சுரக்கிறதோ அவர்களுக்கு கருப்பாகவும், மெலமனின் அளவு குறைவாக இருப்பவர்களுக்கு சிவப்பாகவும் குழந்தை பிறக்கும் என்கின்றனர்.

                                  ஆகவே நிறத்திற்கும், குங்குமப்பூவிற்கும் ஒரு துளி அளவு கூட சம்பந்தம் இல்லை என்பதே உண்மை.

                                  ஆனால் கர்ப்பிணிகளுக்கு பல வகைகளில் இந்த குங்குமப்பூ மருத்துவ ரீதியில்

                                  உதவியாக இருக்கிறது. பாலில் குங்குமப்பூவை கலந்து பருகினால் அதன் மணமும் சுவையும் வாந்தி எடுக்கும் உணர்வை கட்டுப்படுத்துகிறது.

                                  மேலும் பசியையும் தூண்டுகிறது. ஐந்தாம் மாதம் முதல் கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ சாப்பிட தொடங்கலாம்.

                                  குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை பிறக்குமா?

                                  உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த மசாலாப்பொருளாகவும் இது உள்ளது.

                                  குங்குமப்பூவின் சுவையும் மணமும் கவர்ந்து இழுக்கக்கூடியது. ஆகவே கர்ப்பிணிகளுக்கு இதன் மீது ஈர்ப்பு வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதில் சந்தேகமே இல்லை.

                                  குங்குமப்பூக்கும் குழந்தையின் நிறத்துக்கும் தான் தொடர்பில்லையே தவிர இவற்றில் பலவித நன்மைகள் அடங்கியுள்ளன.

                                  சிலர் தங்கள் குழந்தை நல்ல சிவப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக குங்குமப்பூவை அதிகளவில் சாப்பிடுகின்றனர். இது உடலுக்கு ஆபத்தானது. நாள் ஒன்றுக்கு பத்து கிராமுக்கு மேல்

                                  குங்குமப்பூ எடுத்துக்கொண்டால் அது ஆபத்துதான். பல பக்க விளைவுகளை ஏற்படுத்தும். மருத்துவரின் அறிவுரையின் படி உட்கொள்வதே சிறந்தது.

                                    Posted in மருத்துவம்

                                    இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

                                    இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

                                    இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்
                                    பெண்களால் எந்த வயதிலும் அழகாக உணர முடியும். உங்களால் முயற்சியில் ஈடுபட முடிந்தால்

                                    அதுவும் சாத்தியமே. 40 வயதுக்கு மேல் நீங்கள் சோர்வாக இல்லாமல் சில நல்ல வாழ்க்கை முறை பழக்க வழக்கங்களை மேற்கொள்வது என்றைக்கும் நன்மை அளிக்கும். பெண்களைப்

                                    பொருத்தவரை ஒருவருக்கு வயதாகும் போது அவர்களின் உடல்நலப் பிரச்சினைகளும் நோய்களின் அபாயங்களும் அதிகரிக்கிறது.

                                    நாள்பட்ட வலி மற்றும் நோய்களால் அவர்கள் அவதியுறுகின்றனர். வழக்கமான உடல் செயல்பாடு தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும், நோயைத் தடுக்கவும்

                                    உதவும் என்கிறார்கள் மருத்துவர்கள். 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு உடற்பயிற்சி உடலை வலிமையாகவும் ஆற்றலுடனும் வைத்திருக்க உதவும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

                                    இளமையாக இருக்க பெண்கள் செய்ய வேண்டிய பயிற்சிகள்

                                    நீங்கள் 40 வயதிற்கு மேற்பட்ட பெண்ணாக இருந்தால், உடற்பயிற்சியின் மூலம் உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த விரும்பினால், இங்கே சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டு உள்ளன.

                                    அதைப் பின்பற்றி நடப்பது நீங்கள் 40 வயதிலும் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்க உதவி செய்யும். 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் என்னென்ன என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

                                    ஒவ்வொரு நாளும் நீங்கள் மணிக்கணக்கில் உடற்பயிற்சி செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

                                    உங்களால் முடிந்த அளவு உடற்பயிற்சி செய்ய முயற்சிக்கலாம். உடற்பயிற்சியின் போது

                                    உடற்பயிற்சியின் தீவிரத்தை சரிபார்க்க நீங்கள் இதய துடிப்பு மானிட்டரைப் பயன்படுத்தலாம், அதேபோல் நீங்கள் தேர்வு செய்யும் உடற்பயிற்சிகளையும் சரியாக நிர்வகிக்கலாம். உங்களிடம்

                                    இதய துடிப்பு மானிட்டர் இல்லையென்றால், ஒரு எளிய துடிப்பு சோதனை உங்கள் இதய துடிப்பு வீதத்தைப் புரிந்துகொள்ள உதவும்.

                                    உங்கள் இதயத் துடிப்பை கணக்கிட ஒவ்வொரு துடிப்புகளை 6 விநாடிகளுக்கு எண்ணி அந்த எண்ணிக்கையை 10 ஆல் பெருக்கிக் கொள்ளுங்கள்.

                                    40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கு, இலக்கு இதய துடிப்பு 90-153 ஆகும், மேலும் அதிகபட்சம் 180 ஆக இருக்கலாம்.

                                    அதற்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் என வாரத்திற்கு 5

                                    நாட்கள் விறுவிறுப்பாக நடப்பது பொருத்தமானது மற்றும் பயனளிக்க கூடியது. உங்களுக்கு அதிக நேரம் கிடைத்தால் ஜாகிங் அல்லது ஓடுதல் போன்ற தீவிரமான பயிற்சிகளை ஒரு நாளைக்கு 15 முறை செய்யுங்கள்.

                                    நீங்கள் உடற்பயிற்சியை ஒரு வேலையாகப் பார்த்தால், அதன் பலன்களை நீங்கள் அனுபவிப்பது குறைவு.

                                    உங்களுக்கு மகிழ்ச்சியைத் தரும் ஒரு வகை உடற்பயிற்சியைக் கண்டுபிடிக்கும் வரை

                                    நீங்கள் பரிசோதனை செய்யலாம். ஏனெனில் நீங்கள் விரும்புகின்ற உடற்பயிற்சியை செய்யும் போது டோபமைன், நோர்பைன்ப்ரைன் மற்றும் செரோடோனின், வெகுமதி, விழிப்புணர்வு,

                                    மனநிறைவு மற்றும் நல்வாழ்வு உணர்வுகளை கையாளும் நரம்பியக்கடத்திகள் ஆகியவற்றை வெளியிட உதவுகிறது.

                                    வலிமை பயிற்சி செய்யுங்கள். இது உங்கள் வயதில் எலும்பு மற்றும் தசை இழப்பைக் குறைக்கிறது.

                                    படிக்கட்டுகள் ஏறுவது மற்றும் தோட்டக்கலை போன்ற அன்றாட நடவடிக்கைகளுக்கு உங்கள்

                                    உடலை வலிமையாக வைத்திருக்க உதவுகிறது. ஆஸ்டியோ போரோசிஸ் போன்ற எலும்பு முறிவு நோய்க்கு வலிமை பயிற்சி நன்மை பயக்கும். இந்த நோய் ஆண்களை விட பெண்களையே அதிகம் பாதிக்கிறது.

                                    வலிமை பயிற்சி இதய செயலிழப்பு மற்றும் புற்றுநோயின் அபாயத்தை குறைக்கிறது மற்றும் 55-66 வயதுடையவர்களுக்கு லேசான அறிவாற்றல் குறைபாடு உள்ளவர்களில்

                                    மூளையின் செயல்பாட்டை மேம்படுத்துகிறது என்றும் ஆய்வுகள் காட்டுகின்றன.

                                      Posted in மருத்துவம்

                                      பிளீச்சிங்’ செய்வதால் வெளுக்கும் முகமும்

                                      பிளீச்சிங்’ செய்வதால் வெளுக்கும் முகமும்

                                      சரும நிறத்தை மெருகேற்றுவதற்காக நிறைய பெண்கள் முகத்தில் ‘பிளீச்சிங்’ செய்துகொள்கிறார்கள்

                                      . ஆனால் பிளீச்சிங்குக்கு பயன்படுத்தும் பெரும்பாலான பொருட்களில்

                                      ஹைட்ரஜன் பெராக்சைடு என்னும் ரசாயனம் உள்ளது. இது சருமத்தில் உள்ள முடியை ஒழிக்கும்தன்மை கொண்டது.

                                      அதனால் பார்ப்பதற்கு சருமம் பளபளப்பாகவும் பிரகாசமாகவும் இருப்பதுபோல் தோன்றும். ஆனால் அது நிரந்தரமானதல்ல.

                                      மேலும் சருமத்தை பிளீச்சிங் செய்யும்போது மெலனின் உற்பத்தி குறையும். மெலனின் என்பது மெலனோசைட்டுகள் என்று அழைக்கப்படும் செல்களால் உற்பத்தி செய்யப்படும் முக்கிய

                                      நிறமியாகும். சருமத்தில் மெலனின் எவ்வளவு அதிகமாக உற்பத்திசெய்யப்படுகிறதோ அந்த அளவுக்கு சருமத்தின் வெளிப்புற அடுக்கு கருமையாக இருக்கும். மெலனின் உற்பத்தி

                                      பெரும்பாலும் மரபியலுடன் தொடர்புடையது. கருமையான சருமம் கொண்டவர்களிடம் மெலனின் உற்பத்தி அதிகமாக இருக்கும்.

                                      பிளீச்சிங்’ செய்வதால் வெளுக்கும் முகமும்

                                      ஹைட்ரஜன் பெராக்சைடு, ஹைட்ரோ குயினோன் போன்ற சருமத்திற்கு பிரகாசம் கொடுக்கும் பிளீச்சிங் பொருட்களை உபயோகிக்கும்போது சருமத்தில் உள்ள மெலனோசைட்டுகளின் அளவு

                                      குறையும். அதன் காரணமாக மெலனின் உற்பத்தியும் குறைந்துவிடும். அதனால் காலப்போக்கில் சருமத்தின் நிறம் மங்கத் தொடங்கும்.

                                      பிளீச்சிங் செய்யும்பொது சருமத்திற்கு சில நன்மைகள் கிடைக்கின்றன. பக்கவிளைவுகளும் உண்டாகின்றன. அதுபற்றி பார்ப்போம்.

                                      நன்மைகள்: பிளீச்சிங், சருமத்தில் உள்ள கருமையான புள்ளிகளை ஓரளவு கட்டுப்படுத்தும். முகத்தில் உள்ள கறைகள், அழுக்குகளை போக்கவும் உதவும். முகத்திற்கு தற்காலிக

                                      பொலிவையும் கொடுக்கும். நிறமாற்றம் மற்றும் வயது காரணமாக ஏற்படும் சரும மாற்றங்களையும் தற்காலிகமாக போக்கும்.

                                      சில பெண்கள் சரும பராமரிப்பில் போதிய கவனம் செலுத்தமாட்டார்கள். அதனால் அவர்கள் முகம் சோர்வாக காணப்படும். சருமத்தில் முடிகளும் ஆங்காங்கே தென்படும்.

                                      அப்படிப்பட்டவர்கள் பிளீச்சிங் செய்வதன் மூலம் பிரகாசமான சருமத்தை பெறலாம். ‘பேஸ் ப்ளீச் கிரீம்’களில் உள்ள ரசாயனங்கள் சருமத்தை ஒளிரச்செய்து 10 நிமிடங்களுக்குள் முகத்திற்கு உடனடி பிரகாசத்தை அளிக்கும்.

                                      பக்கவிளைவுகள்: பிளீச்சிங் செய்தபிறகு தோல் அழற்சி ஏற்படுவது பொதுவான அறிகுறியாகும். சிலருக்கு சருமம் சிவத்தல், கொப்புளம், படை, வீக்கம், அரிப்பு, எரிச்சல் போன்ற அறிகுறிகள்

                                      தென்படும். மார்பு, அக்குள் மற்றும் இடுப்பு பகுதிகளிலும் பாதிப்பு உருவாகலாம். சில பேஸ் பிளீச்சிங் கிரீம்களில் நச்சுத்தன்மை கொண்ட பாதரச திரவம் இருப்பதாக கூறப்படுகிறது. அது

                                      உண்மையாக இருக்கும் பட்சத்தில் உணர்வின்மை, சோர்வு, உயர் ரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக செயலிழப்பு

                                      உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. சிலர் பாதரசம் ஏற்படுத்தும் பக்க விளைவுகளில் இருந்து மீள நீண்ட காலமாகும். சிலருக்கு மார்பு பகுதியில் பரு உண்டாகும்

                                        Posted in மருத்துவம்

                                        மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

                                        மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

                                        வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது இந்த நோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது

                                        . பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம் இந்த நோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம்.


                                        உலகளவில் அதிகமாக உயிரிழப்பை ஏற்படுத்தும் முக்கிய நோய்களுள் ஒன்றாக புற்றுநோய் அமைந்திருக்கிறது.

                                        அதனை ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை பெறுவதும் சவாலான

                                        விஷயமாக இருக்கிறது. ஒருசில உணவு வகைகளை தவறாமல் சாப்பிட்டு வருவதன் மூலம் புற்றுநோயை தடுக்க முடியும். பூண்டிற்கு புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும் சக்தி

                                        இருக்கிறது. மார்பகம், மூளை, நுரையீரல், கணையம், வயிறு போன்ற பகுதிகளில் புற்றுநோய் ஏற்படுவதை இது தடுக்கும்

                                        பிரோக்கோலிக்கும் புற்றுநோயை தடுக்கும் ஆற்றல் இருக்கிறது. அதை நீராவியில் வேகவைத்து சாப்பிடுவது சிறந்தது.

                                        மீன் சாப்பிட்டால் இந்த நோய் வராது

                                        அதில் சூப், சாலட் தயாரித்தும் சாப்பிடலாம்.

                                        சிட்ரஸ் பழ வகைகளை தினமும் சாப்பிட்டு வருவது வாய், தொண்டை, வயிற்று புற்றுநோய் வராமல் தடுக்கும் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. குறிப்பாக எலுமிச்சம் பழத்தை

                                        தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும். காலை உணவுடன் அரை கப் புளூபெர்ரி பழம் சாப்பிட்டும் வரலாம். அது புற்றுநோய் செல்களை கட்டுப்படுத்தி சேதமடைந்த செல்களின் வளர்ச்சிக்கு துணைபுரியும்.

                                        வாரத்திற்கு நான்கு முறை மீன் வகை உணவுகளை சாப்பிடுவது ரத்த புற்றுநோயை கட்டுப்படுத்தும் என்பதும் ஆய்வில்தெரியவந்துள்ளது. பெண்கள் மீன் சாப்பிடுவதன் மூலம்

                                        கருப்பை புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்துக்கொள்ளலாம். தினமும் இரண்டு கப் கருப்பு டீ பருகுவதும் நல்லது.

                                        கிவி பழத்திலும் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டிஆக்சிடெண்ட் நிரம்பியுள்ளது. அதில் கொழுப்பும் குறைவாகவே இருக்கிறது.

                                        வெங்காயத்தை தவறாமல் உணவில் சேர்ப்பதன் மூலம் 50 சதவீத புற்றுநோய் பாதிப்பில் இருந்து விடுபட்டுவிடலாம். ஆப்பிளுக்கும் புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை இருக்கிறது.

                                        அவகோடா, முளைகட்டிய தானியங்கள், முட்டைக்கோஸ், தக்காளி, கேரட், செர்ரி பழம்,

                                        மக்காச்சோளம், பேரீச்சம்பழம், முட்டை, இஞ்சி, திராட்சை, காளான், பட்டாணி, மாதுளை போன்றவற்றை சாப்பிட்டு வருவதும் புற்றுநோயை தடுக்க உதவும்.