Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
கனடா வடக்கு Ontario- கிரிமினல்கள் கூடாரமாக இடம்பிடித்து சாதனை
கனடா வடக்கு Ontario- கிரிமினல்கள் கூடாரமாக இடம்பிடித்து சாதனை
கனடா உலக நாடுகளில் மதிப்பு நாடுகளில் ஒன்றாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ள பொழுதும் ,அங்கும் வன்செயல்கள் உருவாகி வருகின்றன .
,கனடாவின் வடக்கு ஒன்ராறியோ பகுதி கிரிமினல் கூடாரமாமாக மாறியுள்ளது
,கற்பழிப்பு ,கொலை ,கொள்ளை என வன்செயல்கள் இங்கு அதிகரித்து கனடாவின் பாதுகாப்பற்ற பத்து பகுதிகளில் ஒன்றாக இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது .
,மேற்படி வன்செயல்களை தடுக்க பல நடவடிக்கை மேற்கொள்ள பட்டுள்ளதாக குற்ற தடுப்பு பிரிவினர் அறிவித்துள்ளனர் .
ரயிலை பிடிக்க ஓடி வாங்க கனடாவில் நடந்த சுவாரஸ்யம்
ரயிலை பிடிக்க ஓடி வாங்க கனடாவில் நடந்த சுவாரஸ்யம்
கனடா ரொராண்டோ பகுதியில் பெண் ஒருவர் தான செல்லும் ரயிலை தவற விட்டு விட்டார் ,உரிய நேரத்திற்கு செல்ல வேண்டியவர் தாமதமானதால் ரயில் புறப்பட்டு விட்டது ,
திகைத்து போன பெண் தனக்கு அவசர உதவி தேவை எனவும் உரிய இடத்திற்கு தன்னை அழைத்து செல்லும் படி அவசர உயிர் பாதுகாப்பு இலக்கத்திற்கு அழைத்து உதவி , கோரியுள்ளார் ,
அவர்களோ சாறி என கையை விரித்து விட்டனர் ,உரிய நேரத்திற்கு சென்றால் இந்த பிரச்னை ஏற்படாது என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேற்படி இலக்கத்திற்கு உயிர்பாதுகாப்பிற்கு மட்டும் அழைக்கும்படி மக்களை வேண்டியுள்ளது குறித்த சேவை மையம் . இது தாங்க பெண் புத்தி .
ஈரானில் அரசுக்கு எதிரான கலவரத்தில் 106 பேர் பலி
ஈரானில் அரசு திடீரென எரிபொருள் விலையினை இரு மடங்காக அதிகரித்த நிலையில் அரசுக்குக்கே திராக மக்கள் போராட்டம் வெடித்தது ,இதில் இதுவரை சுமார் 106 பேர் பலியாகியுள்ளதாகமனித உரிமை மையம் அறிவித்துள்ளது ,தொடர்ந்து போராட்டம் இடம்பெற்று வருகிறது பின்புலத்தில் அமெரிக்கா இஸ்ரேல் இயங்குவதாக அரசு குற்றம் சுமத்தியுளளது
நாம் ஆட்சிக்கு வந்தால் 150,000 கவுன்சில் வீடுகள் கட்டி கொடுப்போம் – முழங்கிய தொழில் கட்சி
நாம் ஆட்சிக்கு வந்தால் 150,000 கவுன்சில் வீடுகள் கட்டி கொடுப்போம் – முழங்கிய தொழில் கட்சி
பிரிட்டனில் பிரதமரை தெரிவு செய்யும் புதிய தேர்தல் இடம்பெறவுள்ளது ,இதில் தாம் அதிகாரத்தில் அமர்ந்தால் மக்களுக்கான வேலை வாய்ப்பு மற்றும் 150 ஆயிரம் கவுன்சில் வீடுகளை 2024 ஆம் ஆண்டுக்குள் சுமார் 75 பில்லியன் பவுண்டுகளில் கட்டி வழங்குவோம் என தொழில் கட்சி முழங்கியுள்ளது ,அது தவிர சம்பள உயர்வு தொடர்பாகவும் குறிப்பிட்டுள்ளனர் ,தேர்தல் நெருங்கும் வேளையில் இரு பிரதான கட்சிகளுக்கு இடையில் பெரும் சமர் வெடித்து பறக்கிறது .
அமெரிக்கா அதிரடி நடவடிகை -ஹாங்காங் மீது பாய்ந்தது பொருளாதார தடை
அமெரிக்கா அதிரடி நடவடிகை -ஹாங்காங் மீது பாய்ந்தது பொருளாதார தடை
ஹாங்காங் போராட்டத்தில் தொடர் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், இந்த விவகாரத்தில் ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதிக்கும் வகையில் நாடாளுமன்றத்தில் சட்ட மசோதாவை நிறைவேற்றி உள்ளது.
ஹாங்காங் மீது அமெரிக்கா பொருளாதார தடை
அமெரிக்கா பொருளாதார தடை
பீஜிங்:
இங்கிலாந்தின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த ஹாங்காங் 1997-ம் ஆண்டு, ஜூலை 1-ந் தேதி, சீனாவிடம் ஒப்படைக்கப்பட்டது. ஒரே நாடு, இரண்டு அமைப்புகள் என்ற வகையில் சீனாவின் நேரடி கட்டுப்பாட்டில் ஹாங்காங் உள்ளது.
ஆனால் சீனாவில் உள்ள சுதந்திரம், ஹாங்காங்கில் கிடையாது. கட்டுப்பாட்டுக்கு உட்பட்ட சுதந்திரத்தைத்தான் ஹாங்காங் மக்கள் அனுபவிக்கின்றனர். அதுமட்டுமின்றி, நீதித்துறை சுதந்திரத்திலும் சீனாவின் தலையீடு இருக்கிறது.
இந்த நிலையில் கடந்த மே மாதம், கிரிமினல் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்தி, அங்கு வழக்கு விசாரணையை எதிர்கொள்ள வைக்கும் வகையில் ஒரு சட்ட திருத்தம் செய்வதற்கு முடிவு செய்து, அதற்கான மசோதா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
இந்த மசோதா ஹாங்காங் மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி பெரும் போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜனநாயக ஆர்வலர்களின் போராட்டத்துக்கு அடிபணிந்த அரசு சர்ச்சைக்குரிய மசோதாவை திரும்பப்பெற்றது. ஆனாலும் போராட்டம் ஓயவில்லை.
ஹாங்காங் போராட்டம்
சீனாவிடம் இருந்து கூடுதல் ஜனநாயக உரிமைகள், ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்குபவர்கள் மீது வெளிப்படையான விசாரணை உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனநாயக ஆர்வலர்கள் போராட்டத்தை விரிவுபடுத்தி உள்ளனர்.
தொடர்ந்து 6 மாதங்களாக நடந்து வரும் இந்த போராட்டத்தில் வன்முறை தாண்டவமாடி வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.
இந்த போராட்டம் தொடங்கிய நாள் முதலே அமெரிக்கா, ஹாங்காங் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பி வருகிறது. போராட்டத்தை இரும்பு கரம் கொண்டு ஒடுக்குவதாக சீனா மற்றும் ஹாங்காங் அரசை அமெரிக்கா ஏற்கனவே கண்டித்துள்ளது.
இந்த நிலையில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் செனட் சபையில் ஹாங்காங் போராட்டம் தொடர்பாக 2 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.
இதில் முதல் மசோதா ஹாங்காங் மீது தூதரக ரீதியில் நடவடிக்கை எடுக்கவும், பொருளாதார தடைகளை விதிக்கவும் வழிவகுக்கும்.
அதே போல் “ஹாங்காங் மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் 2019” என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றொரு சட்ட மசோதா ஹாங்காங் போலீஸ் படையினருக்கு அமெரிக்க நிறுவனங்கள் சில ஆயுதங்களை வணிக ரீதியாக ஏற்றுமதி செய்வதை தடைசெய்யும்.
அத்துடன் இந்த மசோதா, ஹாங்காங்கில் மனித உரிமை மீறல்களுக்கு காரணமான அதிகாரிகளுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்கும்.
இதற்கிடையே ஹாங்காங் விவகாரம் தொடர்பாக அமெரிக்க செனட் சபையில் சட்டமசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு சீனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சீனாவுக்கான அமெரிக்கா தூதருக்கு சீன வெளியுறவு அமைச்சகம் சம்மன் அனுப்பி உள்ளது.
பிரிட்டனில் -£105 மில்லியனை அள்ளி சென்ற நபர்
பிரிட்டனில் இன்று செவவாய்க்கிழமை இடம்பெற்ற யூரோ மில்லியன் குழுக்களில் பிரிட்டனை சேர்ந்த நபர் ஒருவர் சுமார் 105 மில்லியன் பவுண்டுகளை தட்டி சென்றுள்ளார் ,மிகவும் பரபரப்பாக இடம்பெற்ற இந்த குழுக்களில் குறித்த நபர் வெற்றியை தட்டி சென்றுள்ளமை குறிப்பிட தக்கது .
The winning numbers this time were 08, 10, 15, 30 and 42 – and the Lucky Star numbers were 04 and 06.

கொலண்டில் இருந்து -லண்டனுக்கு லொறி மூலம் கடல்வழியாக கடத்தப்பட இருந்த 25 பேர் மடக்கி பிடிப்பு
கொலண்டில் இருந்து -லண்டனுக்கு லொறி மூலம் கடல்வழியாக கடத்தப்பட இருந்த 25 பேர் மடக்கி பிடிப்பு
கொலண்டில் இருந்து -லண்டனுக்கு லொறி மூலம் கடல்வழியாக கடத்தப்பட இருந்த 25 பேர் மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் ,இவர்கள் கொலண்டில் இருந்து கப்பல் ஊடாக லண்டணுக்குள் நுழைய முயன்ற லொறிக்குள் சுமார் 25 பேர் அடைத்து ஏற்றி வரப்பட்டனர் .அங்கு இடம்பெற்ற சோதனையின் பொழுது இவர்கள் சிக்கினர் .
Rotterdam. டாமுக்கு அருகில் உள்ள , Vlaardingen என்ற பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது ,சம்பவ இடத்திற்கு 20 அம்புலன்ஸ் அனுப்பி வைக்க பட்டது எனினும் எவருக்கும் உயிர் சேதம் ஏற்படவில்லை .லண்டனுக்கு லொறியில் கடத்தி வரைபட்டவர்கள் இறந்த நிலையில் 39 மனித சடலங்கள் கண்டு பிடிக்க பட்ட நிலையில் இந்த மனித கடத்தல் கண்டு பிடிக்க பட்டு தடுக்க பட்டுளள்து குறிப்பிடதக்கது
பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்
பாகிஸ்தானில் 50 ஆயிரம் பேருக்கு டெங்கு காய்ச்சல்
பாகிஸ்தானில் டெங்கு காய்ச்சல் வரலாறு காணாத வகையில் வேகமாக பரவி வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் ஒரு வருடத்தில் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட இரு மடங்காக உயர்ந்துள்ளது.
அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் பாகிஸ்தானில் 49 ஆயிரத்து 587 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களில் மட்டும் 5 ஆயிரம் பேருக்கு டெங்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படும் காட்சி
இது குறித்து தேசிய சுகாதார சேவைகள் அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் ஷாஜித் ஷா கூறியதாவது:-
பாகிஸ்தானில் கடந்த 2011-ம் ஆண்டு டெங்கு பாதிப்பு அதிகமாக இருந்தது. சுமார் 27,000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டனர். சுமார் 8 ஆண்டுகளுக்கு பின்னர் அதிகப்படியான டெங்கு காய்ச்சல் பரவலை பாகிஸ்தான் தற்போது எதிர் கொண்டுள்ளது.
அதே சமயம் இறப்பு விகிதம் வெகுவாக குறைந்துள்ளது. 2011-ம் ஆண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் 370 பேர் உயிரிழந்தனர். ஆனால் நடப்பாண்டில் இதுவரை 79 பேர் மட்டுமே உயிரிழந்துள்ளனர்.
டெங்குவை கட்டுப்படுத்த பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது பாகிஸ்தான்
காஷ்மீரை கைப்பற்றுவது முதல் பல்வேறு விஷயங்களில் இந்தியா, பாகிஸ்தான் இடையே பல ஆண்டுகளாக பிரச்சனை தொடர்ந்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டு பயங்கரவாதிகள் பலமுறை இந்தியாவிற்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தியாவும் அதற்கு பதிலடி கொடுத்துள்ளது. கார்கில் போர் போன்ற மிகப்பெரிய யுத்தங்களும் நிகழ்ந்து பெருமளவில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.
சமீபத்தில், ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கிடையிலான பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
அணு ஆயுதத்தைத் தாங்கியபடி கண்டம் விட்டு கண்டம் சென்று 2,000 கி.மீ. தூரம் உள்ள இலக்கை தாக்கி அழிக்கக் கூடிய அக்னி 2 ஏவுகணையை இந்தியா கடந்த சனிக்கிழமை பரிசோதனை செய்தது. இந்த ஏவுகணை வெற்றிகரமாக இலக்கையும் தாக்கியது.
இந்த சோதனை நடந்து இரண்டு தினங்கள் ஆகி உள்ள நிலையில், பாகிஸ்தான் ராணுவம், ‘ஷகீன் -1’ என்ற கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை இன்று சோதனை செய்துள்ளது. இந்த ஏவுகணை இலக்கை துல்லியமாக தாக்கியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
ராணுவ கட்டளை படைப்பிரிவின் செயல்பாட்டு தயார்நிலையை சோதிக்கும் நோக்கில், ஷகீன்-1 ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை 650 கி.மீ. வரை அனைத்து வகையான ஆயுதங்களையும் தாங்கிச்செல்லக்கூடியது என பாகிஸ்தான் ராணுவ ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
வடகொரியா திடீர் ராணுவ பயிற்சி
வடகொரியா திடீர் ராணுவ பயிற்சி
கொரியா எல்லையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியாவின் விமானப்படைகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட திட்டமிடப்பட்டிருந்த நிலையில், அது தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.
அமெரிக்கா மற்றும் வடகொரியா இடையிலான அணு ஆயுத பேச்சுவார்த்தையை விரைந்து நடத்திட நல்லெண்ண அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி வடகொரியாவின் விமானப்படை திடீர் ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளது. இந்த ராணுவ பயிற்சி கடந்த 3 நாட்களாக நடந்து வருகிறது.
நேற்று விமானப்படை மற்றும் விமான எதிர்ப்பு படையை சேர்ந்த பாராசூட் வீரர்களின் ராணுவ பயிற்சி நடைபெற்றது. இதை அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது பேசிய அவர், “வடகொரியாவின் ராணுவத்தை வெல்ல முடியாத ராணுவமாக உருவாக்குவதற்கும், போருக்கு தயார் நிலையில் இருப்பதற்கும் இப்படி அறிவிப்பு இல்லாமல் ஒரு பயிற்சியை மேற்கொள்வது அவசியம்” என கூறினார்.
முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியா விவகாரம் தொடர்பாக டுவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர் “கிம் ஜாங் அன், நீங்கள் விரைந்து செயல்பட வேண்டும். கொரிய தீபகற்பத்தை அணுஆயுதமற்ற பிரதேசமாக மாற்றுவதற்கான ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்துங்கள். விரைவில் உங்களை சந்திக்கிறேன்” என குறிப்பிட்டார்.
லண்டன் கீத்திரோ வான்நிலையத்தில் – தீவிரவாதி கைது
லண்டன் கீத்திரோ வான்நிலையத்தில் – தீவிரவாதி கைது
லண்டன் கீத்திரோ வான் நிலையத்தில் வைத்து 26 வயதுடைய பிரிட்டன் நாட்டை சேர்ந்த இளம் வாலிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் ,இவர் துருக்கி ஊடாக சிரியா சென்று அங்கு ஐ எஸ் படையில் இணைந்து பயிற்சி பெற்ற தீவிரவாதி என்பதாள் கைது செய்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்
9 வயதில் என்ஜினீயரிங் பட்டம் – உலகிலேயே இளம் பட்டதாரியாகும் பெல்ஜியம் சிறுவன்
பெல்ஜியத்தை சேர்ந்த 9 வயது சிறுவன் லாரன்ட் சைமன்ஸ். தனது 8 வயதிலேயே உயர்கல்வியை முடித்ததற்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் உலகம் முழுவதும் புகழ்பெற்ற லாரன்ட், தற்போது என்ஜினீயரிங் படிப்பையும் முடிக்கும் நிலையில் உள்ளார். இந்த ஆண்டு தொடக்கத்தில்தான் என்ஜினீயரிங் படிப்பில் அவர் சேர்ந்திருந்தார்.
ஆலந்து நாட்டின் ஐந்தோவன் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் எலக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் பிரிவில் அடுத்த மாதம் (டிசம்பர்) பட்டம் பெற இருக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் வயது பட்டதாரி என்ற சிறப்பை பெற உள்ளார். இவரது நுண்ணறிவு திறன் அளவு (ஐ.கியூ.) 145 அளவுக்கு இருப்பதாக கணிக்கப்பட்டு உள்ளது.
என்ஜினீயரிங் முடித்த பிறகு இதே பாடப்பிரிவில் ஆய்வு பட்டப்படிப்பில் (பி.எச்.டி.) லாரன்ட் சேர இருப்பதாக கூறிய அவரது தந்தை அலெக்சாண்டர் சைமன்ஸ், அதே நேரம் மருத்துவ பட்டப்படிப்பு ஒன்றையும் அவர் தொடர்வார் என்றும் தெரிவித்தார். லாரன்டின் இந்த அபார திறமையை அவரது தாத்தா-பாட்டிதான் கண்டறிந்ததாக அவரது தாய் லிடியா கூறியுள்ளார்.
ஐந்தோவன் பல்கலைக்கழகம் இதுவரை பார்த்த மாணவர்களிலேயே மிகவும் புத்திசாலியான நபர் லாரன்ட்தான் என பல்கலைக்கழக இயக்குனர் தெரிவித்து உள்ளார்.
அடுத்த மாதம் தனது என்ஜினீயரிங் பட்டப்படிப்பை முடிக்கும் லாரன்ட், உலகிலேயே இளம் பட்டதாரி என்ற பட்டத்தை மைக்கேல் கியார்னியிடம் இருந்து பெற உள்ளார். அமெரிக்காவின் அலபாமா பல்கலைக்கழகத்தில் இருந்து 10 வயதில் பட்டம் பெற்றவர்தான் இந்த மைக்கேல் கியார்னி என்பது குறிப்பிடத்தக்கது.

முகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி
முகத்தில் வால் உடைய நார்வால் நாய்க்குட்டி
இந்த உலகில் எத்தனையோ வினோத சம்பவங்கள் தினம் தினம் நடக்கின்றன. அவற்றில் சில மக்களின் கவனத்தை ஈர்த்து இணையத்தில் வைரலாகின்றன.
இந்நிலையில், முகத்தில் வால் உடைய நாய்க்குட்டி ஒன்று அமெரிக்காவின் மிசோரி மாநிலத்தின் கான்சாஸ் நகர தெருவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மிசோரியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தன்னார்வ கால்நடை பராமரிப்பு அமைப்பான ‘மாக்’ அமைப்பு இந்த நாயை மீட்டு பராமரித்து வருகிறது.
இது தொடர்பாக, இந்த அமைப்பின் நிறுவனர் ஸ்டெபான் கூறுகையில், ‘7 ஆண்டுகளாக இந்த அமைப்பு, சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் செல்லப் பிராணிகளுக்கு சிகிச்சை அளித்து பராமரித்து வருகிறது. குறிப்பாக ஐந்து கால்கள் உடைய நாய்கள், பிறப்பிலேயே உடலுறுப்பு வளர்ச்சி இல்லாத பல நாய்களை கவனத்தில் எடுத்து பராமரித்துள்ளோம். ஆனால் இம்மாதிரி முகத்தில் வால் உள்ள நாய்க்குட்டியை நான் பார்த்ததே இல்லை. கான்சாஸ் நகர தெருவில் சென்று கொண்டிருந்த போது தெருவோரத்தில் பனியில் இந்த குட்டி உறைந்து கிடந்தது. உடனே அதை மீட்டேன். அதற்கு நார்வால் என பெயரிட்டுள்ளேன்’ என்றார்.
நார்வால் என்பது ஆர்க்டிக் கடலில் வாழும் ஒருவகை திமிங்கலம். இந்த திமிங்கலத்தின் தலையில் முன்புறம் தந்தம் போன்ற நீளமான கூர்மையான உறுப்பு இருக்கும்.
நார்வால் திமிங்கலங்கள்
மீட்கப்பட்ட நார்வால் நாய்க்குட்டி கால்நடை மருத்துவரிடம் ஆய்வுக்காக கொண்டு செல்லப்பட்டது. எக்ஸ்ரே எடுத்து சோதனை செய்ததில் அந்த வால், நாய்க்குட்டியின் உள் உறுப்புகளோடு எந்த தொடர்பிலும் இல்லை என தெரிய வந்தது. ஆனால் நெற்றியின் நடுவே அமைந்துள்ளது. அந்த வாலை மேலும் கீழும் அசைக்க முடியாது, அதாவது வாலாட்ட இயலாது. இந்த வால் இருப்பதால் அதற்கு எந்த பாதிப்பும் இல்லை. மற்ற நாய்களை போலவே நார்வால் சாதாரணமாகவே இருக்கும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த நாய்க்குட்டி யூனிகார்ன் பப்பி என இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. யூனிகார்ன் என்பது ஒற்றைக் கொம்பு கொண்டு குதிரை போன்ற வடிவில் இருக்கும் புராண கதைகளில் வரும் ஒரு விலங்கு ஆகும்.
இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
இந்து கோவில்கள் உள்ள 3000 ஆண்டுகள் பழமையான நகரம் பாகிஸ்தானில் கண்டுபிடிப்பு
வடமேற்கு பாகிஸ்தானில் கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் பாரிகோட் தெஹ்ஸிலில், பாகிஸ்தான் மற்றும் இத்தாலியை சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூட்டு அகழ்வாராய்ச்சியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அவர்கள் 3000 ஆண்டுகள் பழமையான நகரத்தை கண்டுபிடித்து உள்ளனர். அந்த நகரத்தின் பெயர் பஜீரா. இது 5,000 ஆண்டுகள் பழமையான நாகரீகத்திற்கும், கலைப்பொருட்களுக்கும் புகழ் பெற்றது ஆகும்.
இந்த கண்டுபிடிப்பில் இந்து கோவில்கள், நாணயங்கள், ஸ்தூபம், பானைகள் மற்றும் அந்தக் காலத்தின் ஆயுதங்கள் உள்ளன.
கிமு 326ல் அலெக்சாண்டர் தனது படையுடன் பாகிஸ்தானின் ஸ்வாட்டுக்கு வந்து ஓடிகிராம் பகுதியில் நடந்த போரில் எதிரிகளை தோற்கடித்து பஜீரா என்ற சுவர் நகரத்தையும், ஒரு கோட்டையையும் கட்டினார் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.
அலெக்சாண்டரின் காலத்திற்கு முன்பே அந்த நகரத்தில் மனித வாழ்க்கையின் தடயங்களையும் நிபுணர்கள் கண்டறிந்து உள்ளனர். அலெக்சாண்டருக்கு முன்பு, இந்தோ-கிரேக்கம், புத்மத், இந்து ஷாஹி மற்றும் இஸ்லாமை பின்பற்றுபவர்கள் அந்த நகரத்தில் வசித்து வந்து உள்ளனர்.
மின்னல் தாக்கி 25 பேர் பலி
மின்னல் தாக்கி 25 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டின் சிந்து மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. பாலைவனப்பகுதியான அம்மாகாணத்தின் தார்பார்கர், சங்ஹர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்நிலையில், கனமழையின் போது மின்னல் தாக்கி இதுவரை 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
மின்னல் தாக்கி உயிரிழந்தோர்
மேலும், 16-க்கும் அதிகாமானோர் படுகாயமடைந்துள்ளனர். காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
இதற்கிடையில், மின்னல் தாக்கி உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.
பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிசூடு – இருவர் பலி – பலர்காயம்
பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிசூடு – இருவர் பலி – பலர்காயம்
அமெரிக்காவில் பிறந்தநாள்நிகழ்வு ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி தாக்குதலில் சிக்கி 14 வயது சிறுமி மற்றும் 16 வயது சிறுவன் ஆகியோர் பலியாகியுள்ளனர் மேலும் பலர் காயமடைந்த நிலையில் -Henry Mayo Newhall மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

Denmark நாட்டில் எல்லை சோதனைகள் ஆரம்பம்
Denmark நாட்டில் எல்லை சோதனைகள் ஆரம்பம்
சுவீடன் எல்லை பகுதியில் குண்டு வெடித்த நிலையில் தற்போது டென்மார்க் எல்லை பகுதியில் 1950 ஆண்டுக்கு பின்னர் மீள எல்லை சோதனை சாவடிகள் ஆரம்பிக்க பட்டு சோதனைகள் தீவிர அப்டுத்த பட்டுள்ளன .இதனால் மக்கள் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது
இத்தாலியில் வெள்ளம் – இருவர் பலி – மக்கள் அவதி
இத்தாலியில் வெள்ளம் – இருவர் பலி – மக்கள் அவதி
இத்தாலி Mark’s Square, பகுதியில் வரலாறு காணாத அளவுக்கு ஆறு அடிக்கு மேல் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது ,இதனால் அந்த பகுதி வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்துள்ளதுடன் மக்கள் பெரும் இன்னலை சந்தித்து வருகின்றனர் ,பாதிக்க பட்ட மக்களுக்கு எவ்விதம் உதவலாம் என்பது தொடர்பில் ஆராயப்பட்டு வருவதுடன் அவசர மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்னம் உள்ளது ,குறித்த பகுதிக்கு அந்த நாட்டு அதிபர் திடீர் பயணத்தை மேற்கொண்டு சென்றுள்ளார்


இறைச்சிக்குள் மறைத்து எடுத்துவர பட்ட 20 மில்லியன் பவுண்டு cocaine மீட்பு
இறைச்சிக்குள் மறைத்து எடுத்துவர பட்ட 20 மில்லியன் பவுண்டு cocaine மீட்பு
பிரிட்டனுக்கும் இறைச்சிக்குள் சுற்றி மறைத்து எடுத்துவரப்பட்ட இருப்பது மில்லியயன் பவுண்டுகள் பெறுமதியான cocaine போதைவஸ்து மீட்க பட்டுள்ளதாக குற்ற தடுப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர் ,கடத்தல் காரர்கள் பல புதியவழிகளை பின்பற்றுவதாகவும் அதனை கண்டுபிடித்து முறியடிப்பதில் சுங்க பிரிவினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

சிம்பாவேயில் 200 யானைகள் பலி
சிம்பாவேயில் 200 யானைகள் பலி
சிம்பாவே நாட்டில் திடீரென 200 யானைகள்பலியாகியுள்ளனர் ,அங்கு நிலவு வறட்சி காரணமாக இந்த உயிர் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,மேலும் காட்டு யானைகளை காப்பாற்றும் நகர்வில் வனவிலங்கு பாதுகாப்பு துறையினர் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்









