Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

மூன்று நாட்டு விமானங்களை துரத்திய ரசியா போர் விமானங்கள் -பால்டி கடலில் நடந்த பர பரப்பு

மூன்று நாட்டு விமானங்களை துரத்திய ரசியா போர் விமானங்கள் -பால்டி கடலில் நடந்த பர பரப்பு

ரசியாவின் Sukhoi Su-27 fighter jet ரக அதிவேக தாக்குதல் விமானங்கள் பால்டி கடல் பகுதியில்


கூட்டு ரோந்தில் ஈடுபட்டு கொண்டிருந்த ஜெர்மன் ,நோர்வே அமெரிக்கா விமானங்களை வழிமறித்து மிரட்டி சென்றன

நோர்வேயின் விமானத்தய் தொடர்ந்து துரத்தி வந்த ரசிய விமானங்கள் அதனை மிரட்டி சென்றுள்ள செயல் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

ரசியாவின் இந்த அத்துமீறல் வழிமறிப்பு செயல் பாடுகள் நாடுகளுக்கு இடையில் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

Posted in உலக செய்திகள்

வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வனூர்தி – தீயில் எரிந்து இறந்த விமானி

வீழ்ந்து நொறுங்கிய உலங்கு வனூர்தி – தீயில் எரிந்து இறந்த விமானி

அமெரிக்கா Mount Hood தேசிய காட்டு பகுதியில் திடீரென தீ பற்றி கொண்டது இதனை அணைக்க உலங்கு வானூர்தியில் பொடிகளை

தூவி கொண்டிருந்த பொழுது வானூர்தி தீடிரென அதே தீ பரவிய பகுதிக்குள் வீழ்ந்து நொறுங்கியது

இதன் பொழுது விமானி பலியாகியுள்ளார்

இதனை அடுத்து தீயணைப்பு படையினர் தீயினை அனைத்து

விமானியை மீட்க சென்ற போராட்டத்தில் சிக்கி தீயணைப்பு வீரர்

ஒருவரும் பலியாகியுள்ளார்

தொடர்ந்து தீ பரவிய வண்ணம் உள்ளது, இதனை கட்டு அப்துத்த முடியாது

வீரர்கள் திணறி வருகின்றனர்
மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

வீழ்ந்து நொறுங்கிய உலங்கு
வீழ்ந்து நொறுங்கிய உலங்கு
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

மனைவியை காரில் அடைத்து வைத்து கொன்ற கணவன் -வெப்பத்தில் சிக்கி இறந்த மனைவி

மனைவியை காரில் அடைத்து வைத்து கொன்ற கணவன் -வெப்பத்தில் சிக்கி இறந்த மனைவி

அமெரிக்கா மியான்மி பகுதியில் காவல்துறை ஊழியராக பணிபுரியும் கணவரின் காரில் சிக்கிய மனைவி 33 பாகை வெப்பத்தில் சிக்கி இறந்துள்ளது அம்பலமாகியுள்ளது

ரோந்து பணியில் ஈடுபட்ட கணவரின் காரின் பின்புற ஆசனத்தில்

வீற்றிருந்த மனைவி கணவர் காரினை பூட்டி சென்ற நிலையில்

அந்த கார் கதவினை திறக்க முடியாது அதற்குள் சிக்கி இறந்துள்ள

செயல் இடம்பெற்றுள்ளது

மேற்படி சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட

வண்ணம் உள்ளனர் .இது திட்டமிடப்பட்ட கொலையா அல்லது விபத்தா என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை

கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று கருப்பினத்தவர் மீது போலீசார் நிகழ்த்திய துப்பாக்கிச்சூடு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அமெரிக்காவில் கருப்பினத்தவர் மீது போலீஸ் சரமாரி துப்பாக்கிச்சூடு

அமெரிக்காவில் கடந்த மே மாதம் மினசோட்டா மாகாணத்தில் கறுப்பினத்தவரான ஜார்ஜ் பிளாய்ட்டின் கழுத்தில் ஒரு வெள்ளை இன போலீஸ் அதிகாரி தனது முழங்காலை வைத்து

நெரித்துக்கொன்ற சம்பவத்தால் மாபெரும் போராட்டம் வெடித்தது. அமெரிக்கா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஜார்ஜ் பிளாய்ட் கொலைக்கு நீதிகேட்டு போராட்டங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், அமெரிக்காவில் ஜார்ஜ் பிளாய்ட் சம்பவத்தை போன்று தற்போது மற்றொரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மினசோட்டாவின் அண்டை மாகாணமான விஸ்கான்சினில் நேற்று முன்தினம் ஜேக்கப் பிளேக் என்ற ஆப்பிரிக்க அமெரிக்கரை போலீசார் பலமுறை துப்பாக்கியால் சுட்டனர்.

இதுதொடர்பாக வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில், ஜேக்கப் பிளேக், வேனுக்குள் ஏற முயற்சிக்கும்போது,

அவரை ஆயுதங்கள் ஏந்தி பின்தொடர்ந்த 2 போலீஸ் அதிகாரிகளில் ஒருவர், அவரை நகரவிடாமல் சட்டையை பிடித்துக்கொண்டு,

பின்னாலிருந்து சுட முயற்சிக்கிறார். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

7 முறை சுடப்பட்டதாக உள்ளூர்வாசிகள் கூறியதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஜேக்கப் பிளேக் உயிருக்கு ஆபத்தான

நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அப்பகுதியில் மக்கள் போராட்டம் வெடித்துள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் திரண்டு போலீசாரை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் அங்கு அசாதாரண சூழ்நிலை நிலவுகிறது.

Posted in உலக செய்திகள்

பிலிப்பைன்சில் பாரிய குண்டு வெடிப்பு-7 ராணுவம் உள்பட 11 பேர் பலி

பிலிப்பைன்சில் பாரிய குண்டு வெடிப்பு-7 ராணுவம் உள்பட 11 பேர் பலி

பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலி

பிலிப்பைன்சில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலியாகினர்.

பிலிப்பைன்சில் தொடர் குண்டு வெடிப்புகளில் 7 ராணுவ வீரர்கள் உள்பட 11 பேர் பலி
பிலிப்பைன்ஸ் தொடர் குண்டு வெடிப்பு
மணிலா:

பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பிராந்தியத்தில் அபு சயாப் என்கிற பயங்கரவாத அமைப்பு ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இவர்கள் அங்கு மத அடிப்படையிலான ஒரு அரசை நிறுவ முயற்சித்து

வருகின்றனர். இதனால் அவர்கள் ராணுவ வீரர்கள் மற்றும் போலீசாரை குறிவைத்து தொடர் பயங்கரவாத தாக்குதல்களை அரங்கேற்றி வருகின்றனர். பயங்கரவாதிகளின் அட்டூழியம்

காரணமாக தெற்கு பிராந்தியத்தில் உள்ள அனைத்து மாகாணங்களிலும் கூடுதல் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு நிலைமை தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிலிப்பைன்சின் தெற்கு மாகாணமான சுலூவில் உள்ள ஜோலோ நகரில் ராணுவ வீரர்கள் வாகனங்களில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஒரு மளிகை கடை

முன்பு நிறுத்தப்பட்டிருந்த 2 ராணுவ வாகனங்களுக்கு இடையில் பயங்கரவாதிகள் வெடி குண்டுகள் பொருத்தப்பட்ட மோட்டார்

சைக்கிளை நிறுத்தி வெடிக்க செய்தனர். வெடிகுண்டுகள் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதில் அந்த பகுதியே அதிர்ந்தது. அங்கு

நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் அனைத்தும் தீக்கிரையாயின. இதனால் அங்கு கரும்புகை மண்டலம் உருவானது.

இந்த குண்டுவெடிப்பில் 5 ராணுவ வீரர்கள் மற்றும் அப்பாவி பொதுமக்கள் 4 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி உயிரிழந்தனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ராணுவ வீரர்கள் அங்கு விரைந்து அந்த பகுதியை சுற்றிவளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இதனிடையே இந்த குண்டு வெடிப்பு நடந்த ஒரு மணி நேரத்துக்குள்ளாக ஜோலோ நகரில் உள்ள கத்தோலிக்க தேவாலயம் முன்பு பெண் தற்கொலை படை பயங்கரவாதி ஒருவர் தனது உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தார்.

இதில் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் இந்த 2 குண்டு வெடிப்புகளில் ராணுவ வீரர்கள் போலீசார் மற்றும் அப்பாவி பொதுமக்கள் என 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆம்புலன்சில் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இதனிடையே ஜோலோ நகரில் நடந்த மற்றொரு குண்டுவெடிப்பில் மேலும் ஒரு ராணுவ வீரர் பலியானார். எனினும் இந்த குண்டுவெடிப்பு எப்படி நிகழ்ந்தது என்பது குறித்த தகவல் வெளியாகவில்லை.

இந்த தொடர் குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் அபு சயாப் பயங்கரவாதிகளே இந்த கொடூர தாக்குதலை நடத்தியதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் குற்றம் சாட்டியுள்ளது.

இதனிடையே ஜோலோ நகர் முழுவதும் பாதுகாப்பு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை முடுக்கி விடப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ராணுவம் தெரிவித்துள்ளது.

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

போதையில் oneway யில் லொறியை ஒட்டி வந்த சாரதிகள் – துரத்தி பிடித்த போலீஸ்

போதையில் oneway யில் லொறியை ஒட்டி வந்த சாரதிகள் – துரத்தி பிடித்த போலீஸ்

பிரிட்டன் ஏ ஒன்பது வேக சாலையில் டிராக்கை ஒரு வழி சாலையின் ஊடு செலுத்தி வந்த இரு டிராக் சாரதிகள் காவல்துறையினரால் கைது

செய்ய பட்டுள்ளனர் ,மக்கள் மற்றும் வீதிகளில் பொருத்த பட்டிருந்த கமரா

ஊடாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து விரட்டி சென்ற காவல்துறை டிரக்கை மடக்கி நிறுத்தின

சம்பவ வேளை இரு சாரதிகளும் அதிக போதையில் இருந்துள்ளனர் ,அப்புறம்

என்ன அவர்களை தூக்கி சென்றது காவல்துறை ,இடம்பெற்று வந்த வழக்கில்

இருவருக்கும் ஒருவருட சிறை தண்டனை விதிக்க பட்டுள்ளதுடன்

நாட்டுக்குள் வாகன செலுத்த தடையும் விதிக்க பட்டுள்ளது,இபப்டியும் சாரதிகள்

Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் உடைந்து வீழ்ந்த வீடு ஒருவர் பலி – பலர் காயம்

பிரிட்டனில் உடைந்து வீழ்ந்த வீடு ஒருவர் பலி – பலர் காயம்

நேற்று பிரிட்டன் Bradford பகுதியில் வீடொன்றின் கூரை திடீரென இடிந்து வீழ்ந்ததில் அவ்வேளை அதற்குள், வசித்து வைத்த குடும்பஸ்தர் பலியானார் .


மேலும் பெண் உள்ளிட்ட சிறார்கள் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

இந்த இடிபாடு எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்

மேற்படி சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

பிரிட்டனில் உடைந்து
பிரிட்டனில் உடைந்து
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 30 பேருக்கு மேல் கூடினால் 10 ஆயிரம் தண்டம் – அரசு அறிவிப்பு

பிரிட்டனில் 30 பேருக்கு மேல் கூடினால் 10 ஆயிரம் தண்டம் – அரசு அறிவிப்பு

பிரிட்டனில் புதிதாக கொண்டுவரப் பட்டுள்ள இடைக்கால புதிய சட்ட அமுலாக்கத்தின் பிரகாரம் முப்பது பேருக்கு மேல் ஒரு நிகழ்வில் கலந்து கொள்ள முடியாது

அவ்விதம் கலந்து கொண்டால் அதனை தலைமை ஏற்று நடத்தும் நபருக்கு பத்தாயிரம் பவுண்டுகள் தண்டம் அறவிட படுவதுடன்

அங்கு கலந்து கொள்ளும் நபர்கள் ஒருவருக்கும் ஆயிரம் பவுண்டுகள் தாண்டம் அறவிட படும்

மேலும் முகக்கவசம் அணிய மறுத்தால் நூறு பவுண்டுகள் தண்டம் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்

கடத்த தினம் முன்னூறுக்கு மேற்பட்டவர் ஒன்று கூடிய கூட்டம் ஒன்றை

கலைத்த போலீசார் அங்கு கூடியவர்களுக்கு இது போன்று தண்ட பணம் அறவிட்டுள்ளனர்
எனவே மக்களே எச்சரிக்கை


கோரனோ வைரஸ் பரவல் மீள பிரிட்டனில் அதிகரித்ஸ் எள்ளும் நிலையில் இந்த உத்தரவுகள் பிறப்பைக்க பட்டுள்ளன

பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப வேண்டும் என அரசு மீள மக்களிடம் வேண்டியுள்ளது குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் படகு விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பலி -பலருக்கு கைகள் இல்லை

பிரிட்டனில் படகு விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த ஒருவர் பலி -பலருக்கு கைகள் இல்லை

கடந்த சனிக்கிழமை பிரிட்டன் Southampton பகுதியில் வேகப்படகைள பயணித்த ஒரே குடும்பத்தய் சேர்ந்தவர் விபத்தில் சிக்கினார்

இதில் 12 காயது சிறுமி சம்பவ இடத்தில பலியானார் ,மேலும் அதே

குடும்பத்தை சேர்ந்த இருவர் கைகளை இழந்துள்ளனர்


மோசமான விபத்தாக பதிய பெற்றுள்ள இந்த வேக படகு சம்பவம் எதனால் இடம்பெற்றது என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

படுகாயமடைந்த 12 பேரும் தீவிர சிகிச்சைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

,இதில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

பிரிட்டனில் படகு விபத்து
பிரிட்டனில் படகு விபத்து
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா துறைமுகத்தில் வெடிப்பு இருவர் பலி – சிலரை காணவில்லை

அமெரிக்கா துறைமுகத்தில் வெடிப்பு இருவர் பலி – சிலரை காணவில்லை

அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டி துறைமுகத்தில் கப்பல் ஒன்று வெடித்து சிதறியதில் இருவர் பலியாகியுள்ளனர் .மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்

கடலோர அகழ்வாராய்ச்சில் ஈடுபடும் முக்கிய நபர்களே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்


காணாமல் போனவர்களை தாம் தொடர்ந்து தேடி வருவதாகவும்

அவர்கள் இறந்திருக்க கூடும் எனவே கடல் படையினர் தெரிவிக்கின்றனர்

கப்பலில் இருந்த எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியதால் இந்த

இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது

இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது விபத்தா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

அமெரிக்கா துறைமுகத்தில்
அமெரிக்கா துறைமுகத்தில்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

அமெரிக்கா காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை

அமெரிக்கா Louisiana பகுதியில் கடை ஒன்றுக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் சுட்டு கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது

கடைக்குள் கத்தியுடன் நுழைந்து பண கொள்ளையில் ஈடுபட இவர்

முயன்றதாகவும் அவ்வேளை மக்களை சக்தி முனையில் தாக்கிட

இவர் முயன்ற பொழுதே காவல்துறையினர் சூடு நடத்தி அவரை படுகொலை செய்துள்ளனர்

இவ்வாறு படுகொலை செய்ய பட்டவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,


அமெரிக்கா காவல்துறையினர் இன வெறியில் இவ்விதம் பலரை கொன்று

குவித்து வருகின்றமை நாள் தோறும் வெளியாகும் செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது

Posted in உலக செய்திகள்

கொரோனா வைரஸ் தடுக்க இரண்டு வருடங்கள் ஆகும் என அறிவிப்பு

கொரோனா வைரஸ் தடுக்க இரண்டு வருடங்கள் ஆகும் என அறிவிப்பு

கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் இரு வருடங்கள்

செல்லுமென எதிர்பார்ப்தாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார்.

1918 காலப்பகுதியில் ஸ்பானிய வைரஸ் என்ற பேரில் உலக முழுவதுமாக

பரவிய வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சுமார் 2 வருட காலம் தேவைப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும் தற்போது உலக நாடுகளிலிடமிருக்கும் மருத்து

வசதிகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை 2

வருடங்களுக்கு முன்பாகவே கட்டுப்படுத்தும் இயலுமை உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

Posted in உலக செய்திகள்

கொரோனாவுக்கு 8 இலட்சம் பேர் பலி

கொரோனாவுக்கு 8 இலட்சம் பேர் பலி

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த

வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கம் பணி இறுதி கட்டத்தை

எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால்

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது.

தற்போதைய நிலவரப்படி 23,098,181 பேருக்கு வைரஸ் தொற்று

உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் 6,601,622 பேர் சிகிச்சை பெற்று

வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

கொரோனாவில் இருந்து 15,701,892 அதிகமானோர் சிகிச்சைக்கு பின்

குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 802,365 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-

அமெரிக்கா – 179,200
பிரேசில் – 113,454
மெக்சிகோ – 59,610
இந்தியா – 55,928
இங்கிலாந்து – 41,405
இத்தாலி – 35,427
பிரான்ஸ் – 30,503
ஸ்பெயின் – 28,838
பெரு – 27,034
ஈரான் – 20,376
கொலம்பியா – 16,568
ரஷ்யா – 16,189
தென்னாபிரிக்கா – 12,843

Posted in உலக செய்திகள்

கோமா நிலையில் ரஷிய எதிர்கட்சி தலைவரை – ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி

கோமா நிலையில் ரஷிய எதிர்கட்சி தலைவரை – ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி

விஷம் கலந்த டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்ற ரஷிய எதிர்க்கட்சி தலைவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்ல புதின் அரசு அனுமதி வழங்கியுள்ளது.

கோமா நிலையில் உள்ள ரஷிய எதிர்கட்சி தலைவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி
அலெக்ஸி நவல்னி
மாஸ்கோ:

ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டங்களில் போது இவர் கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார்.

நவல்னி நேற்று முன்தினம் ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது
நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளத்திலேயே ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் கோமா நிலைக்கு
சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

நவல்னி கட்சியின் செய்தித்தொடர்பாளர் கிரா யார்ம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

நவல்னி காலை முதல் எந்த உணவும் சாப்பிடவில்லை. விமான நிலையத்தில் வைத்து டீ (தேனீர்) மட்டுமே குடித்தார். அவர் குடித்த டீ-யில் தான் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது என கிரா தெரிவித்தார்.

நவல்னி குடித்த டீ-யில் விஷம் கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிபர் விளாடிமிர் புதின் தான் காரணம் என ரஷிய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.

இதற்கிடையில், நவல்னியின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. மேலும், அவரது உடல்நிலை தொடர்பான தகவல்களை தர மருத்துவமனை மறுப்பு தெரிவித்து வந்தது.

இந்த சம்பவங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றதையடுத்து நவல்னிக்கு மேல் சிகிச்சை அளிக்க ஜெர்மனியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் முன்வந்தது. இதற்காக கோமா சிகிச்சை அளிக்கும் அடங்கிய மருத்துவக்குழு ஒன்று தனி விமானம் மூலம் ரஷியா அனுப்பப்பட்டது.

இதையடுத்து, நவல்னியை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளிக்க மருத்துவமனையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், நவல்னியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி வெளிநாட்டிற்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.

இதனால், வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க அனுமதி தரும்படி அதிபர் விளாமிர் புதின் அரசு நிர்வாகத்திடம் நவல்னி குடும்பம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கைக்கு புதின் நிர்வாகம்
அனுமதி வழங்கியது.

இதையடுத்து, தற்போது நவல்னியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை தனி விமானம் மூலம் ஜெர்மனிக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகமும் அனுமதி வழங்கியது.

இந்த அனுமதியையடுத்து விஷம் கலக்கப்பட்ட டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்றுள்ள ரஷிய எதிர்கட்சி தலைவர் நவல்னி கூடிய விரைவில் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு உரிய மேல்சிகிச்சை அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ரஷியாவில் நவல்னியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அவரை ஜெர்மனிக்கு கொண்டு செல்வதாக நவல்னியின் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி

அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி

கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி
கலிபோர்னியா காட்டுத்தீ
கலிபோர்னியா:

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.

மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்கள் காரணமாக 367 இடங்களில் காட்டுத்தீப்பற்றி எரிந்து வருகிறது.
காட்டுத்தீயால் வடக்கு கலிபோர்னியா மாகாணம் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளது.

சான் பிரான்சிஸ்கோ பகுதியை சுற்றியுள்ள பாலோ, ஆல்டோ போன்ற இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.

இந்த காட்டுத்தீயால் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகி உள்ளன.

காட்டுத்தீ காரணமாக 480 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.

மேலும், 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 375-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவிடம் இருந்து 24 F-16 விமானங்களை வாங்கிய மொராக்கோ

அமெரிக்காவிடம் இருந்து 24 F-16 விமானங்களை வாங்கிய மொராக்கோ

மொராக்கோ நாட்டு விமான படை பயன்பாட்டிற்கு அமெரிக்கா இராணுவத்திடம் இருந்து F-16 fighter jets
போர் விமானங்கள் இருபத்தி நான்கு வாங்கி குவிக்க பட்டுள்ளது

கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் டொலர் பெறுமதியான இந்த விமான

கொள்வனவு திடீரென வாங்கியுள்ளது ஏன் என்ற சந்தேகத்தை

ஏற்படுத்தியுள்ளது

போரில்லாத பொழுதும் தமது இராணுவத்தை நவீன மயமாக்களுக்கு

உள்ளாக்கி வருகிறது மொராக்கோ
,குறித்த

நாட்டின் இந்த ஆயுத தளபாட கொள்வனவு பிராந்திய நாடுகளில்

சீரற்ற நிலையை உருவாக்கும் என அஞ்ச படுகிறது

    Posted in உலக செய்திகள்

    சிரியாவில் -நீர் இன்றி தவிக்கும் 10 லட்சம் மக்கள் – துருக்கி ஆதரவு படைகள் ஆட்டூழியம்

    சிரியாவில் -நீர் இன்றி தவிக்கும் 10 லட்சம் மக்கள் – துருக்கி ஆதரவு படைகள் ஆட்டூழியம்

    வடகிழக்கு சிரியாவின் எல்லையில் உள்ள நீர் வழங்கும் குழாய்களை துருக்கிய ஆதரவு கிளர்ச்சி படையினர் நிறுத்தியுள்ளனர்

    இதனால் வடகிழக்கு சிரியா பகுதியில் வசித்து வந்த சுமார் பத்து

    லட்சம் மக்கள் நீர் இன்றி தவித்து வருகின்ற்னர்

    போரில் நீரை ஆயுதமாக பாவித்து வரும் இந்த் கிளர்ச்சி படைகள் செயல்களுக்கு

    கடும் கண்டம் தெரிவிக்க பட்டுள்ளது
    எனினும்

    அவற்றை எல்லாம் செவிமடுக்காது குறித்த கிளர்ச்சை படைகள்

    மக்களை சொல்லென்ன துயருக்கு உட்படுத்தி வருகின்றனர்

    இந்த பகுதியில் ஐந்தாவது முறையாக இவ்விதம் நீர் நிறுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது

    Posted in உலக செய்திகள்

    முக கவசம் அணிய மறுத்துவர்களை விமானத்தில் இருந்து துரத்திய விமான நிறுவனம்

    முக கவசம் அணிய மறுத்துவர்களை விமானத்தில் இருந்து துரத்திய விமான நிறுவனம்

    அமெரிக்காவின் JetBlue Airways விமானத்தில் ஆறு குழந்தைகளுடன் விமானத்தில் புறப்பட்ட
    குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது

    அதில் பயணித்த இரண்டு வயது சிசு ஒன்று முக கவசம் அணிய மறுத்துள்ளது

    இதனால் New York from Orlando நோக்கி புறப்பட இருந்த குறித்த விமானத்தில் மொத்த குடும்பமும் தரை இறக்க பட்டு துரத்தியடிக்க பட்டனர்

    தற்போது மேற்படி விடயம் சட்ட அமூலாக்க பட்டுள்ளது ,தாம் விமான

    டிக்கட் விண்ணப்பிக்கும் பொழுது இது தொடர்பாக அறிய தரவில்லை

    என கூறிய பயணிகள் கருத்துக்கு இவ்விதம் விமான நிறுவனம் பதில் அளித்துள்ளது

    மக்கள் உயிர் காப்பு நடவடிக்கையின் ஒன்றாக இது பார்க்க படுகிறது எனவும் சுட்டி காட்ட பட்டுள்ளது


    மேற்படி சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

    சாப்டான இட்லி 10 நிமிடத்தில் சட்டுனு இப்படி செய்து அசத்துங்க - சூப்பரான இட்லிரெடி
    Posted in உலக செய்திகள்

    பிரிட்டனில் – இன்று இரவு 70mph வேகத்தில் புயலடிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

    பிரிட்டனில் – இன்று இரவு 70mph வேகத்தில் புயலடிக்கும் மக்களுக்கு எச்சரிக்கை

    இன்று இரவு முதல் பிரிட்டன் வேல்ஸ் ,ஐயர்லாந்த் மற்றும் பிரிட்டன் தெற்கு பகுதிகளை மையமாக வைத்து எழுபது மைல் வேகத்தில்

    கடும் புயல் வீசும் ,இதன் பொழுது இடியுடன் மழையும் பொழியும் எனவும்


    இவ்வேளை மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

    வெள்ள பெருக்கு ,மின்சாரம் ,மற்றும் தொலை தொடர்புகள் துண்டிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

    Posted in உலக செய்திகள்

    அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி

    அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி

    அமெரிக்கா கலிபோனியா Coalinga. பகுதியில் கட்டு தீ பரவலாக பற்றி எரிகிறது


    மேற்படி தீயினை கட்டு படுத்த உலங்கு வானூர்தி மூலம்

    பொடிகளை தூவிய வானூர்தியே திடீரென அதே தீக்குள் வீழ்ந்து நொறுங்கியது

    இதன் பொழுது விமானி உயிரிழந்துள்ளார் என அரசு அறிவித்துளளது .


    இந்த காட்டு தீயில் நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமமாகியுள்ளன

    அந்த சுற்றாடலை அண்மித்து வசித்து வந்த ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட

    மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்துள்ளனர்,தொடர்ந்து தீ பரவிய வண்ணம் உள்ளது

    அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி
    அமெரிக்காவில் வீழ்ந்து நொறுங்கிய உலங்குவானூர்தி -விமானி பலி