Posted in இலங்கை செய்திகள்

தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது-சிறிதரன்

தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக உள்ளது-சிறிதரன்

தமிழர்கள் இன விடுதலைக்காக சேர்ந்து பயணிக்கக் கூடாது என்பதில் அரசாங்கம் கவனமாக உள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேட்ப்பாளருமான சி. சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி, தர்மபுரம் பகுதியில் நேற்று (19) இடம்பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், நாங்கள் இந்த நாட்டிலே மிக முக்கியமான தருணத்திலே நிற்கின்றோம். மிக நெருக்கடியான தருணத்திலே நிற்கின்றோம். காரணம் தேர்தல் வருகின்ற போது தான் அந்த தேர்தல் காலத்திலே எங்கள் கட்சியின் உடைய கடந்த கால செயற்பாடுகள் இந்த அடுத்த 5 ஆண்டுகளிலே என்ன விடயங்களை கையாளப் போகின்றது என்ற முக்கிய விடயங்களை தேர்தல் களத்திலே நாங்கள் சொல்லுகின்றோம்.

60 வருடங்களுக்கு முதல் இந்த மண் எவ்வளவு காடாக இருந்திருக்கும் இந்த பிரதேசம். எவ்வாறு இருந்தது இந்த பிரதேசத்தில் நாங்கள் குடியேறி எவ்வாறு மாற்றி அமைத்தோம் இன்றைக்கு 60 ஆண்டுகள் கடந்து இந்த இடம் எப்படி மாறி இருக்கிறது ஏன் நாங்கள் இந்த இடத்திலே குடியேறினோம் அதற்கான காரணம் என்ன?

58 க்களில் அல்லைக் கந்தளாயிலே முதன் முதலில் 156 விவசாயிகள் காடையர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்கள். அதே ஆண்டுகளில் தான் அநுராதபுரம் பகுதியில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் திருகோணமலையில் பெரும்பாண்மையாக வாழ்ந்த எங்கள் மக்களும் மலையக பகுதியில் வாழ்ந்த எங்கள் மக்கள் இனம் என்பதனை மையமாக வைத்து பலி எடுக்கப்பட்டார்கள். இவ்வாறு எல்லாம் கடந்து வந்த இனப் படுகொலைகளைத் தாண்டி நாங்கள் எங்களுடைய ஈழதேசத்திலே குடியேறி நில அடையாளங்களோடு எங்களை நாங்கள் அடையாளப்படுத்திக் கொண்டோம்.

அடையாளப்படுத்தி வாழுகின்ற காலத்தில் தான் ஒரு பெரும் தலைவருக்கு கீழே ஒரு தேசிய விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தோம். தந்தை செல்வாவின் வழிகாட்டலிலே அறவழிப் போராட்டங்களைத் தொடர்ந்து ஒரு ஆயுதப் போராட்டத்தின் முக்கியத்துவம் இந்த மன்ணிலே முதன்மை பெற்றிருந்தது.

அதற்காக பல ஆயிரக் கணக்கானவர்களை இந்த மண்ணிலே விதைத்திருக்கின்றோம். பல லட்சக் கணக்கான மக்களை இழந்திருக்கின்றோம். கோடிக் கணக்கான சொத்துக்களை இழந்திருக்கின்றோம். இவற்றை எல்லாம் இழந்து தான் இந்த மன்ணிலே ஒரு தேர்தல் மூலமாக அடுத்த வாழ்வைப் பற்றி சிந்திக்கின்றோம். இந்தக் காலத்திலே எங்களை இழந்து போனால் அல்லது நாங்கள் தமிழினம் என்பதனை சொல்ல மறந்து போனால் எமது வாழ்க்கையும் இல்லாமல் போகும் என்பதனை பலர் விளக்கமாக சொன்னார்கள்.

33 கட்சிகள் இருக்கின்றன பல நூற்றுக் கணக்கானவர்கள் இங்கு போட்டியிடுகிறார்கள். காரணம் இலங்கையில் இருக்கின்ற அரசியல் எங்களை கொஞ்சம் கொஞ்சமாக கூறுபோட்டு எங்களிடம் இருக்கின்ற அரசியல் பலத்தை எங்களிடம் அடிப்படையாக உள்ள கொள்கையை சிதைப்பதற்கான முழு முயற்சிகளையும் அவர்கள் மேற்கொள்கிறார்கள். அந்த முயற்சிகளில் இருந்து விடுபட வேண்டுமா அல்லது நாங்கள் எங்களுடைய வாக்குக்களை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு சிதறடித்து யாரும் இல்லாத இனமாக அழிந்து போகப் போகின்றோமா?என அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

மோதி சிதறிய இராணுவ வண்டி – இராணுவம் பலி

மோதி சிதறிய இராணுவ வண்டி – இராணுவம் பலி

நுகேகொட மேம்பாலத்தில் தனியார் பேருந்து ஒன்றும் இராணுவ

கெப் ரக வாகனம் ஒன்றும் இன்று (20) காலை நேருக்கு நேர் மோதி

விபத்துக்கு உள்ளானதில் இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் மேலும் இரு இராணுவ வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு நோக்கி பயணித்த பேருந்தை முந்திச்செல்ல முற்பட்ட மற்றுமொரு

பஸ் வண்டி எதிரே வந்த இராணுவ கெப் வாகனத்துடன் நேருக்கு நேர் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இராணுவ கெப் வண்டியின் சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ்

ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

விபத்தில் காயமடைந்த இராணுவ வீரர்கள் இருவரும் கொழும்பு தேசிய

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடல்

தெற்கு நெடுஞ்சாலையில் ஒரு பகுதி தற்காலிகமாக மூடல்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் பின்னதூவ மற்றும் இம்மதுவ

இடையிலான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அப்பகுதியில் ஏற்பட்ட சிறிய மண் சரிவு காரணமாக இப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இன்று (20) காலை முதல் நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற வானிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

நட்டத்தில் ஓடும் இலங்கை பேரூந்து – நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் இழப்பு

நட்டத்தில் ஓடும் இலங்கை பேரூந்து – நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் இழப்பு

கொவிட்-19 தொற்றுக ;காரணமாக இலங்கை போக்குவரத்துச் சபைக்கு

நாளாந்தம் சுமார் பத்து மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுவதாக

அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

பொதுப் போக்கு வரத்துச் சேவையின் ஊடாக பயணம் மேற்கொள்ளும்

பயணிகளின் எண்ணிக்கை குறைவடைந்ததன் காரணத்தினால் போக்கு

வரத்துத் துறை வீழ்சி அடையும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை போக்கு வரத்துச் சபைக்கு சொந்தமான ஐயாயிரத்து 300 பஸ்கள்

நாளாந்தம் குறைந்த வருமானத்திலேயே சேவையில் ஈடுபடுவதாகவும் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இலங்கை பேரூந்து
இலங்கை பேரூந்து
      Posted in இலங்கை செய்திகள்

      முகக்கவசம் அணியாத 3061 பேருக்கு போலிஸ் எச்சரிக்கை

      முகக்கவசம் அணியாத 3061 பேருக்கு போலிஸ் எச்சரிக்கை

      முகக்கவசம் அணியாத மற்றும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 3061 பேருக்கு மேல் மாகாணத்தில் கடந்த 24

      மணித்தியாள காலப்பகுதியல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்தனர்.

      முகக்கவசம் அணியாமை தொடர்பில் 2093பேரும் சமூக இடைவெளியைப் முன்னெடுக்காத 968 பேரும் இவ்வாறு

      எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக மேல்மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

      இதேவேளை , இன்று அதிகாலை 5 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை

      நடவடிக்கைகளின் போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 349 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பெலிஸார் தெரிவித்துள்ளனர்.

      இதன்போது கஞ்சா போதைப்பொருளை வைத்திருந்த 158 பேரும், ஐய்ஸ் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த 14 பேரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      சட்டவிரோத மதுபானங்களை தம்வசம் வைத்திருந்த 206 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

      அத்துடன் பிடியாணைப் பிறப்பிக்கப்பட்ட 771 பேரும் இந்த விசேட சோதனையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்

          Posted in இலங்கை செய்திகள்

          3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம். அரசியல் இலாபம் கருதி அதை நீங்கள் செய்யவில்லை.

          3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம். அரசியல் இலாபம் கருதி அதை நீங்கள் செய்யவில்லை.

          அரசின் மீது மனோ குற்றச்சாட்டு
          வெளிநாட்டு கதை வேண்டாம். இந்த நாடு ஒரு தீவு என்பதால் எமக்கு இயற்கை பாதுகாப்பு கிடைத்தது. அதனால்தான், நோயாளர்

          தொகை 3,000 க்குள் நிற்கிறது. ஆனால், நாட்டை முன்கூட்டியே மூடி “லொக் டவுன்” செய்து 3,000 கொரோனா நோயாளர்களை 300 க்குள் நிறுத்தி இருக்கலாம். நீங்கள் மார்ச் 19, தேர்தல் வேட்பு இறுதி தினம்

          வரை, அதாவது பிரதான எதிர்க்கட்சி உடைவது உறுதியாகும்வரை, அரசியல் இலாபத்தை மனதில் கொண்டு, நாட்டை திறந்து

          வைத்தீர்கள். இதனால்தான் முழு நாடும் இன்று பாடுபடுகிறது என முன்னாள் தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக

          மேம்பாடு, இந்து சமய விவகார அமைச்சரும், கொழும்பு மாவட்ட எம்பியுமான மனோ கணேசன் கூறியுள்ளார்.

          தனியார் தொலைகாட்சியில் நேற்றிரவு பிரபல சிங்கள மொழி அரசியல் விவாத நிகழ்வு நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சக்தி

          சார்பில் மனோ கணேசன், அளவதுவள, அரசு தரப்பில் அருந்திக பெர்னாண்டோ, காஞ்சன விஜயசேகர ஆகிய முன்னாள் எம்பீக்கள்

          கலந்துக்கொண்டு கடும் காரசாரமாக விவாதித்த இந்நிகழ்வில் முன்னாள் எம்பி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

          ஜனாதிபதி, மார்ச் 2 ம் திகதியன்று பாராளுமன்றத்தை கலைத்து, வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்தார். இதற்கு பதில் அவர் பாராளுமன்றத்தை ஒத்தி வைத்து விட்டு, முழு நாட்டையும்

          கொரோனாவை எதிர்த்து போராடும் தயார் நிலைக்கு கொண்டு சென்று இருக்கலாம். இதை அவர் செய்யவில்லை.

          பொறுப்பற்ற நிலையில் வேட்பு மனு மற்றும் தேர்தல் திகதிகளை அறிவித்ததால், நாடு திறந்த நிலையில் இருந்தது. கட்சிகளின் இலட்சக்கணக்கான ஆதரவாளர்கள் நாடு முழுக்க ஆங்காங்கே

          கட்சி அலுவலகங்களில் கூடினார்கள். அதற்கிடையில் கொழும்பில் பல்லாயிரகணக்கானோர் கூடும் ரோயல்-தோமியன், ஆனந்த-

          நாலந்த கல்லூரிகளின் இறுதிப்போட்டிகளையும் நடத்த விட்டு, அதில் ஜனாதிபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் கலந்துக்கொண்டு கொரோனானவை வளர விட்டீர்கள். வேட்பு மனு முடிந்த மறுநாளே,

          அதாவது 20ம் திகதியே நாட்டை “லொக்டவுன்” செய்தீர்கள். அதாவது வரும் ஆபத்து பற்றி தெரிந்துக்கொண்டே, அரசியல் இலாபம் கருதி செயற்பட்டீர்கள்.

          பெப்ரவரி 25ம் திகதியும், மார்ச் 5ம் திகதியும் என இரண்டு முறை அன்றைய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச

          பாராளுமன்றத்தில், கொரோனா ஆபத்து பற்றி கேள்வி எழுப்பி, உரை நிகழ்த்தினார். அப்போது நாடு கொரோனா பற்றி

          அறிந்திருக்கவில்லை. ஆனால், சஜித் சபையில் பிரதமரையும், சுகாதார அமைச்சரையும் இதுபற்றி எச்சரிக்கை செய்தார். நாட்டை

          மூடி, விமான நிலையங்களை மூடி நாட்டை தயார் நிலையில் வைக்க சொன்னார். நீங்கள் சபையில் அவரை கிண்டல் செய்தீர்கள். அவர் சொன்னதை கணக்கில் எடுக்கவில்லை.

          இன்று கொரோனா ஒரு சுகாதார பிரச்சினை மட்டும் இல்லை. அது வீட்டு பொருளாதாரத்தையும், நாட்டு பொருளாதாரத்தையும்

          நாசமாக்கி விட்டது. நோயில் இறந்து, நோயால் சுகவீனமடைந்து, வருமானம் இழந்து, தொழில்கள் நலிவடைந்து, குடும்ப நிகழ்வுகள்கூட வடத்த முடியாமல் தவிக்கும் அனைவருக்கும் நீங்கள்

          பொறுப்பு கூற வேண்டும். இனி கொரோனா இரண்டாம் அலை வந்தால் நிலைமை மோசமடையும். அதற்கும் நீங்கள் பொறுப்பு கூற வேண்டும்.

          இங்கே நான் அர்ப்பணிப்புடன் செயற்படும் சுகாதார துறையினரை குறை கூற வில்லை. இந்நிலையிலும் பொறுப்புடனும், தியாக உணர்வுடனும் செயற்படும் சுகாதார, இராணுவ, போலிஸ்

          அதிகாரிகளை நாம் மனதார பாராட்டுகிறோம். அவர்களுக்கு வேண்டிய தேவைகளை கூட நீங்கள் ஒழுங்காக

          நிறைவேற்றவில்லை. மார்ச் முதலாம் திகதியன்றே நாட்டை “லொக் டவுன்” செய்யாமல் திறந்து வைத்து, அரசியல் இலாபத்தை மனதில்

          கொண்டு இங்கே பொறுப்பற்று செயற்பட்டது, உங்கள் அரசாங்கம்தான். இதை வரலாறு பதிவு செய்யும்.

              Posted in இலங்கை செய்திகள்

              திருமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது

              திருமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது

              திருகோணமலைக்கு வெளியே உள்ள ஃபவுல்துடுவ கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது கடற்படையால் செய்யப்பட்டுள்ளனர்.

              கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு, கடந்த 17 ஆம் திகதி திருகோணமலைக்கு வெளியே

              உள்ள ஃபவுல்துடுவ கடலில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப்

              பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

              இதன்போது 8 டிங்கி படகுகளும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

              படகுகளில் இருந்து 557 கிலோகிராம் மீன் மற்றும் பல மீன்பிடி கியர்களையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

              சந்தேக நபர்கள் 28 முதல் 56 வயதுக்குட்பட்ட கின்னியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

              மேலும் டிங்கிகள், தடைசெய்யப்பட்ட வலைகள், மீன் தொகை மற்றும் பிற மீன்பிடி சாதனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக

              திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநர்க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  மாடியில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை

                  மாடியில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை

                  மத்தேகொட, சமகி உயன பிரதேசத்தில் மூன்று மாடி

                  கட்டிடமொன்றில் இருந்து குதித்து நபரொருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

                  குறித்த நபர் அவரது உறவினர் ஒருவரின் வீடொன்றுக்கு சென்று அங்கு

                  உறவினர்களுடன் மேல் மாடியில் வைத்து பேசிக் கொண்டிருந்த போது

                  திடீரென குதித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

                  34 வயதுடைய மத்தேகொட பிரதேசத்தை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

                  குறித்த நபர் மன நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர் என தெரியவந்துள்ளது.

                  மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் மற்றும் பிரேத பரிசோதனை இன்று இடம்பெறவுள்ள நிலையில், மத்தேகொட

                  பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      புலிகளினால் ஏராளமான சொத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன

                      புலிகளினால் ஏராளமான சொத்துக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன

                      பயங்கரவாதிகளான விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீளக்கட்டி எழுப்பி

                      வருவதாக தெரிவித்துள்ள இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா, விடுதலைப்புலிப் பயங்கரவாதிகளால்

                      ஏராளமான சொத்து இழப்புக்களும் உயிர் இழப்புக்களும் ஏற்பட்டன என்றும் தெரிவித்தார்.

                      இன்றையதினம் புங்குடுதீவில் இராணுவத்தினரால் அமைக்கப்பட்ட வீட்டு திட்டத்தினை திறந்து வைத்தபின் உரையாற்றும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                      அவர் மேலும் தெரிவிக்கையில், தற்பொழுது இலங்கையில் கொரோனா நோய் முற்றாக நீங்கி விடவில்லை நான் வடக்கு

                      மக்களுக்கு ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன். நீங்கள் சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார நடைமுறைகளை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

                      அதிலும் குறிப்பாக நீங்கள் மாஸ்க் அணிந்து கட்டாயம் வீதிகளில் பயணிக்க வேண்டும். அதேபோல் நீங்கள் கைகளை நன்றாக கழுவி

                      உங்களுடைய சுகாதார நடைமுறைகளை பேணுவது அவசியமாகும் ஏனெனில் இலங்கையில் இருந்து இன்னும் கொரோனா முற்றாக நீங்கவில்லை என்றார்.

                      30 வருடகாலமாக பயங்கரவாதிகளான விடுதலைப் புலிகள் மேற்கொண்ட யுத்தத்தின் காரணமாக அழிவடைந்த வடக்கினை முப்படையினரின் அர்ப்பணிப்புடன் மீள கட்டி எழுப்பி

                      வருவதாகவும் யுத்தம் முடிந்த பின்னர் வடக்கில் ராணுவத்தினரால் பல்வேறுபட்ட வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

                      குறிப்பாக கல்வி சுகாதாரம் நீர்ப்பாசனம் போன்ற வேலைத்திட்டங்கள் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்டு

                      வருகின்றன. அதேபோல் இராணுவம் மட்டுமல்ல முப்படையினரும் இணைந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கான வேலைத் திட்டங்களை

                      மேற்கொண்டு வருகின்றோம். வடக்கில் உள்ள அப்பாவி தமிழ் மக்களுக்காக இராணுவத்தினர் தற்போது வீதிகளில் இறங்கி வேலைகள் செய்வதை நீங்கள் பார்க்க கூடியதாக இருக்கும்.

                      அதே போல் தான் ஒரு பெரிய சவாலாக அமைந்தது. இந்த கொரோனா வைரஸ் அதைக் கூட நாம் முற்றுமுழுதாக

                      இல்லாதொழிக்விட்டாலும் பூரண கட்டுப்பாட்டுக்குள் முப்படையினர் இணைந்து வைத்திருக்கின்றோ

                          Posted in இலங்கை செய்திகள்

                          என்னை மக்கள் வெல்ல வைப்பார்கள் – சிங்கள பால் குடி சுமந்திரன் முழக்கம்

                          என்னை மக்கள் வெல்ல வைப்பார்கள் – சிங்கள பால் குடி சுமந்திரன் முழக்கம்

                          இலங்கையில் தமிழீழ விடுதலை புலிகளினால் உருவாக்க பட்டு இன்றுவரை பயணித்து வரும் தமிழ் தேசிய கூட்டமைப்பில் கடந்த

                          பத்து ஆண்டுகளாக மிகவும் சர்ச்சைக்குரிய நபராக விளங்கி வரும் சிங்களது பால்குடி சுமந்திரன் பெரும் இடர்களை விளைவித்து வருகிறார்

                          தொடர்ந்து தமிழீழ,விடுதலை போராட்டம் ,மற்றும் மக்கள் மீதான அடக்குமுறை அனைத்தயும் பிரோயோகித்து
                          இலங்கையில் இடம் பெற்ற முள்ளி வாய்க்கள் தமிழின

                          படுகொலையினை மூடி மறைத்து சர்வதேச ரீதியில் சிங்களத்தை காப்பாற்றிய வண்ணம் நகர்ந்து செல்கின்றார்

                          அண்மையில் விடுதலை புலிகளது ஆயுத போராட்டத்தை கொச்சை படுத்திய சுமந்திரன் கருத்து உலக தமிழர்கள் மத்தியில் கடும் கொதிப்பி கிளப்பியது

                          தற்போது அதை எல்லாம் மறந்து புலிகளினால் உருவாக்க பட்ட கூட்டமைப்பு எதை செய்தாலும் தமிழர்கள் அதனை வெல்ல வைப்பாராகள் என இறுமாப்பாக பேசியுள்ளார்

                          மேலும் மக்கள் வாக்கு கிடைக்காவிடினும் போனஸ் ஆசனங்கள் ஊடாக தன பாரளுமன்றம் செல்லலாம் என்ற நிலையில் இவரது திமிர் பேச்சு உள்ளது

                          எனவே மக்கள் இம்முறை சம்பந்தர் மற்றும் சுமந்திரனை தோற்கடிக்கும் தீவிர முயற்சியில் உள்ளனர்

                          இரண்டு நபர்களும் கூட்டமைப்பின் எதிர்காலத்திற்கு விரோதமானவர்கள் என்பது அண்மைய சம்பவங்கள் மீளவும் இடித்து உரைக்கின்றன

                          நாம் எது செய்தாலும் எம்மை மக்கள் வெல்ல வைப்பார்கள் என்ற இவர்களது

                          இந்த கண்மூடித்தனமான பேச்சுக்கு மக்கள் இம்முறை தகுந்த பதிலடி

                          கொடுக்க வேண்டும் என்பதே உலக தமிழர்கள் அவாவாக உள்ளது குறிப்பிட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பம் – கல்வி அமைச்சு

                              பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாவதை ஒருவாரத்திற்கு ஒத்தி வைப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

                              அதற்கமைவாக பாடசாலைகளை மீண்டும் எதிர்வரும் 27 ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு எதிர்பார்ப்பதாக கல்வி அமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

                              இருப்பினும் எதிர்வரும் 27 ஆம் திகதி தரம் 11, 12 மற்றும் 13 ஆம் வகுப்பு மாணவர்களுக்கே கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என கல்வி அமைச்சு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

                              ஏனைய அனைத்து மாணவர்களுக்கும் பொதுத் தேர்தலுக்குப் பின்னர் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

                              இராஜாங்கனை மற்றும் வெலிகந்த ஆகிய கல்வி வலையங்களுக்கு உட்பட்ட அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

                              சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க வழங்கிய பரிந்துரைகளுக்கு அமைய இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

                              நாட்டின் ஐந்து (05) மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களிள் PCR முடிவுகள் அடுத்த

                              சில நாட்களில் வெளிவரவுள்ளது , மூன்று மாணவர்களுக்கு மாத்திரமே தொற்று ஏற்பட்டுள்ளது என்பதையம் கருத்திற்கொண்டு, பாடசாலை கல்வி நடவடிக்கைகளை

                              முன்னெடுப்பது எனும் முடிவின் அடிப்படையில், பாடசாலை மாணவர்களை மேலும் ஒரு வாரத்திற்கு சமூகத்திலிருந்து

                              தனிமைப்படுத்துவது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கக்கூடிய மிகவும் அர்த்தமுள்ள நடவடிக்கை என்று கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

                              அதற்கமைய, பாடசாலைகள் எதிர்வரும் ஜூலை 27 இல் ஆரம்பிப்பது மிகவும் பொருத்தமான திகதியாக இருக்கும் என கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.

                              குறித்த வாரத்தில் தரம் 11, 12 , 13 ஆகிய மாணவர்கள் மட்டுமே பாடசாலைக்கு சமூகமளிக்க வேண்டும்.


                              ஏனைய தரங்களில் உள்ள மாணவர்களுக்கு தேர்தலுக்குப் பின்னர் வருகின்ற முதலாவது திங்கட்கிழமையான ஓகஸ்ட் 10 ஆம் திகதி

                              கல்வி நடவடிக்கைகளை ஆரம்பிக்க சிறந்த தினமாக இருக்கும் என, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பரிந்துரைத்துள்ளார்.

                              இருந்த போதிலும், ஓகஸ்ட் 10 ஆம் திகதிக்கு முன்னர் இராஜங்கனை மற்றும் வெலிக்கந்த கல்வி பிரிவுகளில் எந்த பாடசாலைகளையும்

                              திறக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட மாகாண அதிகாரிகளுக்கு கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று கல்வி

                              அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  நிர்வாணமாக ஆற்றுக்குள் குளித்த ஏழு தேர்தல் அதிகாரிகள் – விரட்டி தாக்கிய மக்கள்

                                  நிர்வாணமாக ஆற்றுக்குள் குளித்த ஏழு தேர்தல் அதிகாரிகள் – விரட்டி தாக்கிய மக்கள்

                                  இலங்கை பொலநறுவை பகுதியில் உள்ள ஆறு ஒன்றுக்குள் ஏழு பேர் நிர்வாணமாக குளித்த வண்ணம் இருந்தனர்


                                  இவர்களை கண்ணுற்ற கிராம வாசிகள் அவர்களும் தர்க்கம் புரிந்தனர்

                                  அதுவே கைகலப்பாக மாறியது

                                  இதில் மக்கள் அந்த ஏழுபேர் மீது சரமாரியாக தாக்குதலை நடத்தினர் ,.

                                  இதில் ஒருவர் பலத்த காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்

                                  ஏனையவர்கள் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  இவர்கள் ஏழுபேரும் தேர்தலை கண்காணிக்க நியமிக்க பட்ட அதிகாரிகள்

                                  என தெரிய வந்துள்ளது ,இதனை அடுத்து மேற்படி ஏழு பேரினது பதவிகள் பிடுங்க பட்டு கடமையில் இருந்து துரத்தியடிக்க பட்டுள்ளனர்

                                  அதிகார மமதை எதை எல்லாம் செய்ய வைக்கிறது பாருங்கள்

                                      Posted in இலங்கை செய்திகள்

                                      தனி பெரும்பான்மையுடன் கோட்டா அரசை அமைக்கவேண்டும் – பிக்குகள் வேண்டுதல்

                                      தனி பெரும்பான்மையுடன் கோட்டா அரசை அமைக்கவேண்டும் – பிக்குகள் வேண்டுதல்

                                      நவம்பர் 16 தேசிய இயக்கத்தினால் தயாரிக்கப்பட்ட வலுவான அரசாங்கத்தை ஸ்தாபிக்கும் சமூக ஒப்பந்த யோசனை நேற்று

                                      (2020.07.17) அலரி மாளிகையில் பிரதமரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

                                      ஐபெரும் யோசனைகள் அடங்கிய இந்த ஒப்பந்தம் தொடர்பில் கருத்து வெளியிட்ட கலாநிதி குணதாச அமரசேகரஇ ஐந்து

                                      வருடங்களின் பின்னர் முழுமையான நாட்டு மக்களுக்காக யோசனை

                                      ஒன்றை சமர்ப்பிப்பதற்கான சூழல் ஒன்று ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

                                      அத்துடன்இ இந்த யோசனை செயற்படுத்தப்படும் என்ற பாரிய நம்பிக்கையிலேயே ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம்

                                      கையளிக்கப்பட்டதாக கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்.

                                      இவ்வாறான ஒப்பந்தம் சமர்ப்பிப்பது தொடர்பில் நவம்பர் 16 தேசிய இயக்கத்திற்கு பிரதமர் தனது பாராட்டினை தெரிவித்துள்ளார்.

                                      இந்த சந்தர்ப்பத்தில் கலாநிதி மெதகொட அபயதிஸ்ஸ தேரர் உட்பட

                                      மகா சங்கத்தினர் மற்றும் நவம்பர் 16 தேசிய அமைப்பை பிரதிநிதித்துவப்படுத்திய வல்லுனர்கள் சிலரும் இணைந்திருந்தனர்.

                                          Posted in இலங்கை செய்திகள்

                                          யாழில் வீட்டின் மீது குண்டு தாக்குதல் – கார் சேதம்

                                          யாழில் வீட்டின் மீது குண்டு தாக்குதல் – கார் சேதம்

                                          யாழ்ப்பாணம் நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (17)

                                          மாலை பெட்றோல் குண்டு தாக்குதல் வீச்சு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

                                          இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, யாழ்ப்பாணம்

                                          நாவலர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் மீது இனம் தெரியாத மர்ம கும்பல்

                                          ஒன்று பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டு விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

                                          இந்த தாக்குதலில் வீட்டில் தரித்து நின்ற காரிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதுடன் வீட்டின் சில பகுதிகளும் சேதமடைந்துள்ளன.

                                          இந்த சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்

                                          யாழில் வீட்டின் மீது குண்டு
                                          யாழில் வீட்டின் மீது குண்டு
                                              Posted in இலங்கை செய்திகள்

                                              ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – கோட்டா அறிவிப்பு

                                              ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு – கோட்டா அறிவிப்பு

                                              ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் பொதுத் தேர்தலில் போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும்

                                              வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (17) அம்பாறை மாவட்டத்திற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

                                              பயணத்தை ஆரம்பித்து பதியதலாவைக்கு வருகை தந்த ஜனாதிபதியிடம் பிரதேச மக்கள் கேட்டுகொண்டதற்கு அமைய,

                                              பதியதலாவ நகர மத்திய வீதியை நான்கு வழிப் பாதைகளாக விரிவுப்படுத்துமாறு ஜனாதிபதி வீதி அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு பணிப்புரை விடுத்தார்.

                                              கிரமான, சேரங்கட மற்றும் மரங்கல கிராமங்களின் நீர்ப் பிரச்சினைக்கு தீர்வாக அம்பகென்ஒய திட்டத்தின் கீழ் நீரை

                                              வழங்குவதற்கு உடனடி நடவடிக்கை எடுப்பதாக, ஜனாதிபதி வழங்கிய உத்தரவிற்கு பதிலளிக்கும்போது நீர் வழங்கல்

                                              அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத்பந்து விக்கிரம குறிப்பிட்டார்.

                                              சேனா புழுவினால் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்திற்கான நட்ட ஈட்டை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி முன்னாள்

                                              இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவுக்கு ஆலோசனை வழங்கினார்.

                                              மகாவலி காணி தொடர்பாக மக்கள் முன்வைத்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுவொன்றை நியமிக்கவும் தீர்மானிக்கப்பட்டது.

                                              பிரதேசத்தின் குளங்கள் மற்றும் சிறிய நீர்ப்பாசன கால்வாய்களை புனர்நிர்மாணம் செய்வதற்கும் காட்டு யானைகள் கிராமத்தினுள் வருவதை தடுப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

                                              தொழில் வாய்ப்பின்மை தொடர்பாக மக்கள் முன் வைத்த கருத்துக்களுக்கு பதிலளித்த ஜனாதிபதி, சுபீட்சத்தின் நோக்கு

                                              சம் வேலை வாய்ப்புகளை பெற்றுத் தருவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பயிற்சிபெற்ற தொழில்வள அபிவிருத்தியின் முக்கியத்துவம் தொடர்பாகவும் ஜனாதிபதி வருகை தந்திருந்தவர்களுக்கு தெளிவூட்டினார்.

                                              எலுமிச்சை மற்றும் தானியங்கள் உள்ளிட்ட தமது அறுவடைகளை விற்பனை செய்வதற்கு பொருளாதார மத்திய நிலையமொன்றை

                                              ஸ்தாபித்து தருமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு ஜனாதிபதி பதிலளித்தார்.

                                              கிராமங்களில் தொழிநுட்ப பயிற்சிகள் இல்லாத காரணத்தால் இளைஞர்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஜனாதிபதி அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கான தீர்வை

                                              பெற்றுக்கொடுப்பதற்கான வேலைத் திட்டங்களை வகுக்குமாறு ஜனாதிபதி குறித்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

                                              பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிக்குமாறு கூடியிருந்த மாணவர்கள் விடுத்த வேண்டுகோளை கல்வி அமைச்சரிடம்

                                              தெரிவிப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். வைத்தியர் திலக் ராஜபக்ஷ இந்நிகழ்வில் கலந்துகொண்டார்.

                                              கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க மகஓய, 69 சந்தியில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்த ஜனாதிபதி, அங்கு வருகை தந்திருந்த மக்களிடம் சுமூகமாக கலந்துரையாடினார்.

                                              பாரம்பரியமாக மற்றும் வன ஒதுக்கீடுகளுக்கு அருகில் பயிர்ச் செய்கைக்காக பயன்படுத்தப்படும் உறுதிபத்திரம் அற்ற

                                              காணிகளுக்கு உறுதிப்பத்திரம் வழங்குவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். பிரதேச மக்கள் முகங்கொடுக்கும் குடிநீர் பிரச்சினை தொடர்பாகவும் ஜனாதிபதியிடம் தெரிவிக்கப்பட்டது.

                                              மகஓய சந்தையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புக்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி மகாசங்கத்தினர் ஆசிர்வதித்தனர். கொவிட் வைரஸை கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பதற்கு

                                              ஜனாதிபதி முன்னெடுத்த வேலைத்திட்டங்களை மகாசங்கத்தினர் பாராட்டினர்.

                                              கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் பழங்குடியினர் பலரும் கலந்துகொண்டனர்.

                                              விமலவீர திசாநாயக்க உகன, பிரதேச சபைக்கு முன்னால் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பிலும் ஜனாதிபதி பங்கேற்றார்.

                                              பிரதேசத்தில் கைவிடப்பட்டுள்ள 300 ஏக்கருக்கும் அதிகமான பயிர் நிலங்களை மீண்டும் பயிர்ச் செய்கைக்கு உட்படுத்துவதற்கு தேவையான நீரை வழங்குவதற்கும் வன ஜீவராசிகள் திணைக்களம் கைப்பற்றியுள்ள காணிகளை மக்களுக்க வழங்கவும்

                                              திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி, வருகை தந்திருந்தவர்களிடம் குறிப்பிட்டார். பல பிரதேசங்களில் வாழும் மக்கள் முகங்கொடுக்கின்ற குடிநீர், பயிர்ச் செய்கைக்குரிய நீரை

                                              பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினைகள் பற்றி குறித்த நிறுவனங்களுடன் கலந்துரையாடி உடனடியாக தீர்வை பெற்றுத் தருவது அரசாங்கத்தின் மிக முக்கிய பணியாகுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

                                              நெல் அறுவடைக்கு உத்தரவாத விலையின்றி விற்பனை செய்ய வேண்டாமென்று ஜனாதிபதி விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.

                                              பல பிரதேசங்களில் முன்பள்ளி ஆசிரியர்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஏற்கனவே ஆலோசனை வழங்கியுள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீயாணி விஜேவிக்கிரம நாமல்ஒய, சல்கஸ் சந்தி சந்தையில் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்பில் கலந்துகொண்ட ஜனாதிபதி குறிப்பிட்டார்.

                                              பிரதேசத்தில் தொழிலற்ற பெண்களுக்கு சுயதொழில் வாய்ப்புகளை வழங்குவதற்கான பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறு கூடியிருந்த மக்கள் ஜனாதிபதியிடம் கேட்டுக்கொண்டனர்.

                                              அம்பாறை, நாமல்ஒய குளத்தை புனர்நிர்மாணம் செய்வதன் அவசியம் பற்றியும் மக்கள் சுட்டிக்காட்டினர். விமலவீர திசாநாயக்க, அம்பாறை நகர சபை பசுமை பூங்காவிலும் டப்ளியு.டி.வீரசிங்க ஹிங்குரான சந்தையிலும் ஏற்பாடு செய்திருந்த மக்கள் சந்திப்புகளிலும் ஜனாதிபதி கலந்துகொண்டார்.

                                              சேனா புழுவினால் பயிர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நட்ட ஈடு வழங்கவும் அனுமதியின்றி எத்தநோல் இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் ஜனாதிபதி வருகை தந்திருந்தவர்களிடம் தெரிவித்தார்.

                                              ஹிங்குரான சீனித் தொழிற்சாலையை மீண்டும் ஆரம்பித்தல் தொடர்பாக கூடியிருந்த மக்கள் ஜனாதிபதிக்கு தமது பாராட்டை தெரிவித்தனர்

                                              ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
                                              ஒரு லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு
                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  புங்குடுதீவில் வீட்டு திட்டம் – மக்களிடம் கையளிப்பு

                                                  புங்குடுதீவில் வீட்டு திட்டம் – மக்களிடம் கையளிப்பு

                                                  தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் 14.8 மில்லியன் ரூபா நிதியில்

                                                  புதிதாக நிர்மாணிக்கப்பட்ட ” புங்குடுதீவு வீட்டுத்திட்டம்” இன்று (18) பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது.

                                                  வடமாகாண ஆளுநர் எஸ்.எம் சார்ள்ஸ் மற்றும் இராணுவ தளபதி லெப்டினன்

                                                  ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை

                                                  மகேசன், யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதி ரூவான் வணிகசூரிய உள்ளிட்டோர்

                                                  பெயர்ப் பலகை திரைநீக்கம் செய்ததுடன், வீட்டுத்திட்ட வீடுகளை பயனாளிகளிடம் கையளித்தார்.

                                                  புங்குடுத்தீவு 1 ஆம் வட்டாரத்தில் காணி அற்ற வறிய குடும்பங்கள் தெரிவு

                                                  செய்யப்பட்டு, 25 குடும்பங்களிற்கு 25 வீடுகள் புதிதாக அமைத்துக் கொடுக்கப்பட்டது.

                                                  கடந்த 2017 ஆம் ஆண்டு நிர்மாணிக்க ஆரம்பிக்கப்பட்ட இந்த வீட்டுத்திட்டம்,

                                                  பல தடைகளின் மத்தியில், இராணுவத்தினரின் பங்களிப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு -376 பேர் கைது

                                                      பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு -376 பேர் கைது

                                                      மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் பல்வேறு குற்றம் சம்பவங்களுடன் தொடர்புடைய 376 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                                      நேற்று காலை 6 மணி முதல் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இந்த சந்தேக நபர்கள் கைது

                                                      செய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண சிரேஷ்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது.

                                                      இதன்போது ஹெரோயின் போதைப் பொருளை வைத்திருந்த 171 பேரும், கஞ்சா வைத்திருந்த 78 பேரும், சட்டவிரோத மதுபானம்

                                                      மற்றும் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருளுடன் 127 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

                                                      கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

                                                      இதேவேளை, மேல் மாகாணத்தினுள் முகக்கவசம் அணியாமல் இருந்த 2164 பேர் பொலிஸாரினால் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

                                                      மேலும் சமூக இடைவெளி பேணப்படாமை தொடர்பில் 1765 பெயர் எச்சரிக்கப்பட்டு உள்ளதாக மேல் மாகாண சிரேஸ்ட பொலிஸ் மா அதிபர் காரியாலயம் குறிப்பிட்டுள்ளது

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          கட்சி தாவும் அரசியல்வாதிகள் -சூடு பிடிக்கும் தேர்தல்

                                                          கட்சி தாவும் அரசியல்வாதிகள் -சூடு பிடிக்கும் தேர்தல்

                                                          அமைச்சு பதவி இல்லாமல் சிலருக்கு இயற்கை கடனை முடிப்பது கூட கஷ்டம்தான். கட்சி தாவும் தவளைகள் எமது பக்கமும் உள்ளன. அவை எந்நேரத்திலும் பாயக்கூடும். அத்துடன், சுற்றுலாப்

                                                          பறவைகளும் வருகின்றன. ஆகஸ்ட் 5 ஆம் திகதிக்கு பிறகு அவை பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவிதான் உங்களுடன்

                                                          இருக்கப்போகின்றேன்.” – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட வேட்பாளர் சீ.பி. ரத்னாயக்க தெரிவித்தார்.

                                                          பத்தனை பகுதியில் நேற்றிரவு (17) இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

                                                          அவர் மேலும் தெரிவித்ததாவது,

                                                          ” வாக்கு என்பது உங்கள் உரிமை. அந்த வாக்குதான் ஆட்சியை தீர்மானிக்கப் போகின்றது. மக்களின் இறைமையே நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும். எனவே, அந்த உரிமையை எவரும்

                                                          களவாடமுடியாது. முன்னர் கள்ள வாக்கு போட்டவர்கள் இருந்தனர், சாராயத்துக்கும், சாப்பாட்டுக்கும் வாக்குகள் அளித்தவர்களும் இருந்தனர். இந்த காலம் தற்போது மலையேறிவிட்டது.

                                                          கள்வர்கள் மற்றும் கொள்ளையர்களும் பாராளுமன்றம் தெரிவானதால் நல்லவர்களையும் மக்கள் திட்டினர். 225 பேருக்கும் இடிவிழ வேண்டும் எனவும் விமர்சித்தனர்.

                                                          சிலருக்கு அமைச்சு பதவி இல்லாவிட்டால் காலைக்கடனைகூட நிறைவேற்ற மனம்வராது. அவர்கள்தான் அந்தபக்கம், இந்த பக்கம் என தாவுகின்றனர். நாளை எந்த பக்கம் தாவுவார்கள் எனவும்

                                                          தெரியாது. எமது பக்கத்திலும் இருக்கின்றனர். உங்கள் புள்ளடி மூலம் சிறந்த பதிலடியை கொடுக்கவேண்டும். இதனால்தான்

                                                          மஹிந்தவை விட்டுச்சென்றவர்களுக்கு வாக்களிக்ககூடாது என பிரசன்ன ரணதுங்ககூட கூறுகின்றார். சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு முடிவுகட்ட வேண்டும்.

                                                          தற்போது பருவகால குருவிகள் வருகின்றன. அழகாக இருக்கின்றன. ஆனால், எதிர்வரும் 5 ஆம் திகதி பறந்துவிடும். ஆனால், இந்த வீட்டுக்குருவி உங்களுடன்தான் இருக்கும். வாக்குகளை

                                                          வாங்கிக்கொண்டு தவளைகள்போல் தாவவில்லை. பதவிகள் பறிக்கப்பட்டபோதுகூட மஹிந்தவுடனேயே இருந்தேன்.” – என்றார்.

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ்

                                                              12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ்

                                                              ராஜாங்கணை பிரதேசத்தில் இடம்பெற்ற தான நிகழ்வு ஒன்றில் பங்கேற்றவர்களில்

                                                              12 வயது பிள்ளைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக

                                                              சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

                                                              நிகழ்வில் பங்கேற்ற 139 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளா்கள்.

                                                              இன்று இதுவரை ஒருவர் மாத்திரமே நோய்த்தொற்றுக்கு உள்ளாகி இருக்கிறார்.

                                                              கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் 174 பேருக்கு பிசீஆர்

                                                              பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதோடு எவருக்கும் நோய்த் தொற்று

                                                              ஏற்படவில்லை என்பது இதன்போது உறுதிப்படுத்தப்பட்டது. கந்தக்காடு புனர்வாழ்வு மத்திய வளாகத்தில் ஏற்பட்ட

                                                              நோய்த்தொற்றும் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அனில் ஜாசிங்க மேலும் கூறினார்

                                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                                  பஸ்களில் ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை

                                                                  பஸ்களில் ஆசனத்திற்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை

                                                                  பஸ் ஆசன எண்ணிக்கைக்கு மேலதிகமாக பயணிகளை ஏற்றிச் செல்வது தடை செய்யப்பட்டிருப்பதாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரித்துள்ளார்.

                                                                  ஆசனங்களின் எண்ணிக்கையை விட அதிகளவிலான பயணிகளை ஏற்றிச்

                                                                  செல்வதை தவிர்க்குமாறு பஸ் உரிமையாளர்களுக்கும், நடத்துனர்களுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

                                                                  இருப்பினும், இவற்றை கருத்திற் கொள்ளாமல் சில தனியார் பஸ்கள் தொடர்ந்தும் அதிகளவிலான பயணிகளை ஏற்றிச் செல்வதாக முறையிடப்படுகிறது.

                                                                  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள

                                                                  நடவடிக்கைகளை முழுமையாக பின்பற்றுமாறு இவர்களுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.


                                                                  இதனை மீறும்பட்சத்தில் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் பிரதி பொலிஸ்மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.