திருமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது

Spread the love

திருமலையில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது

திருகோணமலைக்கு வெளியே உள்ள ஃபவுல்துடுவ கடலில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 47 பேர் கைது கடற்படையால் செய்யப்பட்டுள்ளனர்.

கிழக்கு கடற்படை கட்டளைக்கு இணைக்கப்பட்ட கடற்படை வீரர்கள் குழு, கடந்த 17 ஆம் திகதி திருகோணமலைக்கு வெளியே

உள்ள ஃபவுல்துடுவ கடலில் மேற்கொண்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது தடைசெய்யப்பட்ட வலைகளைப்

பயன்படுத்தி மீன்பிடிக்கச் சென்ற 47 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது 8 டிங்கி படகுகளும் கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது.

படகுகளில் இருந்து 557 கிலோகிராம் மீன் மற்றும் பல மீன்பிடி கியர்களையும் கடற்படை பறிமுதல் செய்துள்ளது.

சந்தேக நபர்கள் 28 முதல் 56 வயதுக்குட்பட்ட கின்னியாவில் வசிப்பவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் டிங்கிகள், தடைசெய்யப்பட்ட வலைகள், மீன் தொகை மற்றும் பிற மீன்பிடி சாதனங்கள் மேலதிக விசாரணைகளுக்காக

திருகோணமலை மீன்வளத்துறை உதவி இயக்குநர்க்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

      Leave a Reply

      Your email address will not be published. Required fields are marked *