Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
இந்தியாவில் 8 இலங்கையர்கள் கொரனோவுக்கு பலி
இந்தியாவில் 8 இலங்கையர்கள் கொரனோவுக்கு பலி
இந்தியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் சிக்கி எட்டு இலங்கையர்கள்
பலியாகியுள்ளதாக இலங்கை அமைச்சர் தெரிவித்துள்ளார்
இந்தியாவில் அதி வேகமாக பரவி வருவதுடன் நாள் தோறும் பலர் பலியாகிய வண்ணம் உள்ளனர்
என்பது குறிப்பிட தக்கது
இலங்கையர்கள் குவைத்துக்கு செல்ல தடை
இலங்கையர்கள் குவைத்துக்கு செல்ல தடை
இலங்கை மக்கள் குவைத் நாட்டுக்கு செல்ல குவைத் அரசு தடை விதித்துள்ளது .இலங்கையில்
பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால பயண தடை விதிக்க பட்டுள்ளது
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
சாராய கடைகள் 6 மணியுடன் பூட்ட உத்தரவு – கொதிக்கும் குடிமகன்கள்
சாராய கடைகள் 6 மணியுடன் பூட்ட உத்தரவு – கொதிக்கும் குடிமகன்கள்
இலங்கையில் வேகமாக பரவி வரும் கொரனோ அலையின் தாக்குதல் காரணமாக சாராய கடைகள்
,தவறணைகள் உள்ளிட்டவை மாலை ஆறுமணியுடன் அடித்து பூட்டு மாறு இராணுவ தளபதி அறிவுறுத்தல் விடுத்துள்ளார்
இந்த உத்தரவை அடுத்து குடிமகன்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்
துரத்தும் கொரனோ – ஆறு கிராமங்கள் மேலும் தனிமை படுத்தல்
துரத்தும் கொரனோ – ஆறு கிராமங்கள் மேலும் தனிமை படுத்தல்
இலங்கையில் பரவி வரும் கொரனோ தாக்குதலை அடுத்து தற்போது ஆறு கிராமங்கள் தனிமை
படுத்த பட்டுள்ளன
இவ்வாறு தனிமை படுத்த பட்ட பகுதிகளில் போலீசார் இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பலப்படுத்த பட்டுள்ளது
காவல்துறை வேட்டை -548 பேர் கைது
காவல்துறை வேட்டை -548 பேர் கைது
இலங்கையில் தனிமை படுத்திகள் சட்டத்தை மீறிய 548 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டுள்ளதுடன் பலர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்
அனைவரும் முகக்கவசம் அணியாது வெளியில் உலாவிய நிலையில் இந்த கைது
இடம்பெற்றுள்ளது
நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்
நாட்டை மூன்று வாரம் மூடி, குறை வருமான குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்குங்கள்
அரசாங்கத்துக்கு மனோ கணேசன்
நாட்டை மூன்று வாரம் மூடி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்குங்கள். இதுவரை, ஆறு நாடுகளில் உள்ள கொரோனா கிருமிகள் இங்கே வந்து சேர்ந்துள்ளன. ஆகவே இன்று கர்ப்பிணி
தாய்மார்களும், பச்சை பாலகர்களும் சாகிறார்கள். வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் ஐஎச்எம்ஈ நிறுவனத்தின் இலங்கை பற்றிய ஆய்வில், இப்படியே போனால், இலங்கையில் செப்டம்பர்
மாதமளவில் 20,000 பேர் வரை மரணிக்கவும், தினசரி மரணம் 200 ஐ கடக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆகவே துறைமுக நகருக்கு தரும் முன்னுரிமையை கொரோனா அழிப்புக்கு
கொடுங்கள். இல்லாவிட்டால் உங்கள் தேரர் முருத்தெடுகல ஆனந்த பிக்கு சொல்வதை போன்று,
நாட்டில் மக்கள் தெருக்களில் செத்து மடியும் நிலைமை ஏற்படலாம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி கூறியுள்ளார்.
எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மனோ எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்த முன்னணி பிக்கு முருத்தெடுகல ஆனந்த தேரர், “நாட்டில் வீதியில் விழுந்து மரணிக்க மட்டுமே மக்களுக்கு இன்று உரிமை உள்ளது” என கூறுகிறார். இந்த
அரசை ஆட்சிக்கு கொண்டு வந்ததால் இவரும் இந்நிலைமைக்கு பொறுப்பு கூற வேண்டும். எனினும், இதைவிட இந்த ஆட்சியின் இலட்சணத்துக்கு சான்றிதழ் வேண்டுமா?
ஆரம்பத்தில் கொரோனாவால், வயதானவர்கள் மட்டுமே சாவார்கள் என கூறப்பட்டது. இன்று
கர்ப்பிணிகள் சாகிறார்கள். குழந்தைகள் சாகிறார்கள். ஏனென்றால், இன்று நாட்டில் உள்ள கொரோனா கிருமியின் வீரியம் அதிகரித்து விட்டது.
இன்று எம் நாட்டில் சீனா, தென்னாபிரிக்கா, நைஜீரியா, டென்மார்க், இந்தியா, இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வளர்ச்சியடைந்த கொரோனா கிருமிகள் உள்ளன. இவை எப்படி இலங்கைக்கு வந்தன
? அரசின் கையாள் உதயாங்க வீரதுங்க கூட்டி வந்த உக்ரைன் நாட்டு சுற்றுலா பயணிகள்தான்
தம்முடன் இங்கிலாந்து கிருமிகளையும் கொண்டு வந்தார்கள். இப்படிதான் எல்லாம் வந்தன. நீங்கள் உரிய வேளையில் விமான நிலையங்களை மூட மறுக்கிறீர்கள்.
இன்று நாட்டில் ஒரு நாளைக்கு 2600 நோயாளிகள். நேற்று 22 பேர் செத்தார்கள். இவை கணக்கில் எடுக்கப்பட்டவை மட்டுமே. இவற்றை தவிர இன்னமும் உள்ளனவா என் தேடிப்பார்க்க வேண்டும்.
நாட்டை மூட நீங்கள் மறுப்பது ஏன்? இரண்டு காரணங்கள் உள்ளன. ஒன்று, துறைமுக நகர சட்டமூலத்தை சபையில் “பாஸ்” செய்துக்கொள்ள பார்க்கிறீர்கள். அதுதான் தேவை என்றால், நாட்டை மூடி, பாராளுமன்றத்தை மாத்திரம் திறந்து வையுங்கள்.
அடுத்தது, உங்களால், நாட்டை மூடி விட்டு, மக்களுக்கு நிவாரணம் தொகை வழங்க முடியவில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ. 20,000 வழங்க வேண்டும். பணம் இல்லை. ஆனால், சீனி வரி
குறைப்பால் திறைசேரிக்கு வராத நிதி உண்மையில் எங்கே போனது? அந்த தொகை ரூ. 1600கோடி. அதில் எத்தனை குடும்பங்களுக்கு ரூ. 20,000 வழங்கலாம்?
நாட்டை மூடினால், நாளாந்த சம்பளம் பெறுவோர், சுய தொழில் செய்வோர் என எத்தனை குடும்பங்களுக்கு பணம் கொடுக்க வேண்டும் என கணக்கெடுங்கள். எப்படியோ எல்லா
அபிவிருத்தி திட்டங்கள், புதிய வீதிகள், புதிய உடற்பயிற்சி ஜிம்கள் ஆகியவற்றை இடை நிறுத்தி வைத்து விட்டு, ஒரு குடும்பத்துக்கு ரூ. 20,000 வழங்குங்கள்.
கோதாபய ராஜபக்ச, ஜனாதிபதி பதவிக்கு வந்த உடன், அவர் இந்திய பிரதமர் மோடியின் வழியில் போகிறார் என்று சொல்லப்பட்டது. இப்போது பார்த்தால் அது சரிபோல் தெரிகிறது. பிரதமர் மோ
டி, அவரது குஜராத் ஊரில் ஸ்டேடியம் கட்டி, அங்கே 125,000 பேரை கூட்டி, இந்திய-இங்கிலாந்து கிரிகட் மேளா நடத்தினார். பின், உத்தரகாண்டில் 90 இலட்சம் பேரை கூட்டி கும்பமேளா என்ற
மதவிழாவை நடத்தினார். பின் ஐந்து மாநிலங்களில் தேர்தல் மேளா நடத்தினார். அப்போது ஒரு நாளைக்கு இந்தியாவில், 20,000 பேர்தான் கொரோனா நோயாளிகளாக இருந்தார்கள். இவருக்கு
பிறகு இப்போது அது ஒரு நாளைக்கு நான்கு இலட்சத்தை தாண்டி விட்டது. இறப்பும் கூடி விட்டது.
அதுபோல் நம்ம ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச, இப்போது குட்டி மோடி ஆகி விட்டார். கோதாபய
ராஜபக்ச, நரேந்திர மோடியின் பெரிய தம்பி என்றால், கோதாவின் சிஷ்ய பிள்ளை கெஸ்பாவையின் காமினி லொகுகே, சின்ன தம்பி ஆகியுள்ளார்.
இலங்கையில் ஒரேநாளில் 2,573. கொரனோவால் பாதிப்பு
இலங்கையில் ஒரேநாளில் 2,573. கொரனோவால் பாதிப்பு
நடந்து முடிந்த நாளில் இலங்கையில் சுமார் 2,573. பேர் கொரனோ நோயினால் பாதிக்க
பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
தொடர்ந்து அதிகரித்து வரும் நோயின் தாக்குதல் ; இவ்விதம் செல்லும் எனின் உயிர்பலிகள் பல
ஆயிரமாக அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது
சீனாவில் இருந்து இலங்கை பறந்து வரும் 2 மில்லியன் கொரனோ ஊசிகள்
சீனாவில் இருந்து இலங்கை பறந்து வரும் 2 மில்லியன் கொரனோ ஊசிகள்
சீனாவில் இருந்து இலங்கை இரண்டு மில்லியன் கொரனோ தடுப்பூசிகளை கோரியுள்ளது
இவை எதிர் வரும் சில வாரங்களில் இலங்கைக்கு வந்தடைந்து விடும் என தெரிவிக்க படுகிறது
சீனாவின் ஊசிகளில் பல கலர்படம் உள்ளதான குற்ற சாட்டுக்கள் உள்ள நிலையிலும் ,இலங்கை
க்கு இந்த ஊசிகள் வருகின்றமை குறிப்பிட தக்கது
மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்
மக்கள் பயணங்கள் முடக்கம் நடவடிக்கை ஆரம்பம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து மாகாணங்களுக்கு இடையில்
மக்கள் போக்குவரத்தை கட்டு படுத்தும் ,தடை நடவடிக்கை மேற்கொள்ள படவுள்ளது
இவை விரைவில் விரைந்த்து ஆரம்பிக்க படவுள்ளது என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்
- ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் சரக்குக் கப்பல்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது
- ஈரான் மீதான போரின் மத்தியில் துருப்புக்கள் மீது ஏற்படும் பாதிப்புகள் குறித்து விசாரணை நடத்த அமெரிக்க செனட்டர்கள் கோரிக்கை
- பாதாள உலக பிரமுகர் ‘பஸ் லலித்’ துபாயிலிருந்து கொண்டுவரப்பட்டார்
- அமெரிக்கா தடைகளை விரிவுபடுத்தியதை அடுத்து பதிலடி கொடுப்பதாக ஈரான் உறுதி
- டெத் வேலியில் சேற்றில் கார் சிக்கியதால் பிரெஞ்சு சுற்றுலாப் பயணி உயிரிழந்தார்
முகக்கவசம் அணியாத மேலும் 351 பேர் கைது
முகக்கவசம் அணியாத மேலும் 351 பேர் கைது
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில் காவல்துறையினரால் 351 பேர் கைது
செய்ய பட்டுள்ளனர்
கைதான அனைவரும் முக கவசம் அணியாது வீதியில் சென்றவேளை பொலிஸாரினால் கைது
செய்ய பட்டுள்ளனர் ,இவ்வாறு கைதானவர்களுக்கு தண்டம் அறவிட பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
ஒரே நாளில் 2500 பேர் கொரானாவால் பாதிப்பு
ஒரே நாளில் 2500 பேர் கொரானாவால் பாதிப்பு
இலங்கையில் ஒரே நாளில் சுமார் 2500பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்
இதுவே இலங்கையில் இதுவரை பதிவான அதிக தொகையிலான் பாதிப்பு என தெரிவிக்க படுகிறது
மருத்துவ மனைகள் நிரம்பி வழிகின்றன ,மக்கள் வீடுகளில் வைத்தும் சிகிச்சை வழங்க பட்டு
வருவதாக தனிமை படுத்த பட்ட கிராம மக்கள் விசனம் தெரிவித்து வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது
இலங்கை பெண் குவைத்தில் கடத்தி கொலை
இலங்கை பெண் குவைத்தில் கடத்தி கொலை
இலங்கையில் இருந்து வீட்டு பணிப்பெண்ணாக குவைத்துக்கு சென்ற பெண் ஒருவர் கடத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு படுகொலை செய்ய பட்ட பெண்ணின்சடலம் இலங்கைக்கு எடுத்துவரும்
நடவடிக்கையில் இலங்கைத் தூதரகம் நடவடிக்கை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளது
குறித்த பெண்ணின் படுகொலை தொடர்பான விசாரணைகளை இலங்கை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
வேலை தேடி சென்ற பெண் ,பிணமாக வந்த துயரம் மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது
இலங்கையில் கொரனோ பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு
இலங்கையில் கொரனோ பலி எண்ணிக்கை 800 ஆக அதிகரிப்பு
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி இதுவரை
800 பேர் பலியாகியுள்ளனர்
இந்த இறப்பு எண்ணிக்கை எதிர்வரும் நாட்களில் இரட்டிப்பாக அதிகரிக்க கூடும் என தெரிவிக்க
படுகிறது
லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்
லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்
லண்டன் கிங்ஸ்பரி நகர் பகுதியில் அவசர அழைப்பை பெற்று விரைந்து வந்த இரண்டு
காவல்துறை உத்தியோகஸ்தர்கள் மீது தேவேந்திரன் பாலகுமார் என்ற 58 வயதுடைய நபர் திடீர் தாக்குதலை நடாத்தியுள்ளார்
இதில் இரண்டு காவல்துறை ஊழியர்களும் பாதிக்க பட்டனர் .கீழே வீழ்ந்து கிடந்த பாலகுமார்
திடிரென சுதாகரித்து போலீசார் கால்களில் தாக்கியுள்ளார் ,பின்னர் அவர்களது முகத்தில் துப்பியுள்ளார்
லண்டனில் இரு போலீசாரை தாக்கி முகத்தில் துப்பிய தமிழர்
அதிக போதையில் இருந்த நிலையில் இந்த தாக்குதல் மேற்கொள்ள பட்டுள்ளது .,தற்போது அவர் கைது செய்ய பட்டு நீதிமன்றில்
முன்னிலை படுத்த பட்ட நிலையில், இவர் புரிந்த குற்றத்திற்கு ஆறுமாதம் சிறை தண்டனை வழங்க பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
North West Command Unit were called to Princes Avenue, NW9 following reports of a man collapsed at the rear of a property.
The officers attended and found Balakumar lying on the ground, apparently intoxicated. The officers informed him he had to get up but he became abusive and kicked one of them in the leg.
A second officer approached with a view to detaining him for the assault but Balakumar spat in the officer’s face.
He was arrested and taken into custody but denied the offences. However, he was subsequently charged and convicted of the two assaults.
இலங்கையில் செப்டம்பர் கொரனோவால் 20,000 பலியாவார்கள் எச்சரிக்கை
இலங்கையில் செப்டம்பர் கொரனோவால் 20,000 பலியாவார்கள் எச்சரிக்கை
இலங்கையில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி
எதிர்வரும் செப்டம்பர் மாதம் இருபதாயிரம் பேர் பலியாவார்கள் என மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்
ஆளும் அரசு மனித உயிரிழைப்பை மறைத்து வருவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
நாடெங்கு நடத்த படும் அடித்து பூட்டும் நிகழ்வுகள் இவரது கூற்றை மெய் படுத்துவதாக உள்ளது எனலாம்
இலங்கையில் புதிய கொரனோ மருத்துவமனை – photo
இலங்கையில் புதிய கொரனோ மருத்துவமனை – photo
இலங்கையில் இரண்டாம் அலையாக வேகமாக பரவி வரும் கொரனோ பாதிப்பை அடுத்து
தற்போது சீடுவள பகுதியில் புதிய கொரனோ மருத்துவமனை அமைக்க பட்டு வருகிறது
இந்த மருத்துவமனையினை இராணுவ தளபதி சவேந்திர சில்வா மற்றும் முதுநிலை தளபதிகள்
நேரில் சென்று பார்வை இட்டுள்ளனர்
நோயாளர்கள் பாவனைக்கு தற்போது தயாராகியுள்ளது இந்த தற்காலிக மருத்துவமனை

கொரனோ மருத்துவமனை


இடி மின்னல் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இடி மின்னல் மக்களுக்கு அவசர எச்சரிக்கை
இலங்கையினுள் பரவலாக இடி மின்னல் தாக்குதல் இடம்பெறலாம் எனவும் இவ்வேளை மக்களை
விழிப்பாக இருக்கும்படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது
இவ்வாறான அறிவிப்பு விடுக்க பட்டிருந்த பொழுதும் மன்னாரில் மின்னல் தககி சிலர்
மரணமானது இங்கே குறிப்பிட தக்கது
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம்!
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலினுக்கு பிரதமர் வி.உருத்திரகுமாரன் கடிதம்!
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் பெருவெற்றி பெற்று இன்று தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றிருக்கும் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ள நாடுகடந்த
தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள், இலங்கைத்தீவின் தமிழர்தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத்தமிழ் மக்களுக்குச் சாதகமான
மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம் என கோரியுள்ளார்.
இது தொடர்பில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு அனுப்பிய கடித்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தோழர் ஸ்டாலின் அவர்கட்கு,
இன்றைய நாள் (07.05.2021) தமிழ்நாடு மாநிலத்தின் முதலமைச்சராகப் பதவியேற்றிருக்கும் தங்களுக்கு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் சார்பிலும், ஈழத் தமிழ் மக்கள் சார்பிலும் வாழ்த்தினைத் தெரிவித்துக் கொள்வதில் நான் பெருமகிழ்வடைகிறேன்.
நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் கூட்டணிக் கட்சிகளை ஒருங்கிணைத்து வழிகாட்டி, அனைந்திந்தியாவினையுமே
தமி;ழ்நாட்டையும் தங்களையும் நோக்கித் திரும்பிப் பார்க்க வைக்கக் கூடிய அளவுக்குப் பெருவெற்றியைப் பெற்றிருக்கிறீர்கள். ஐந்து தசாப்த கால அரசியற்பட்டறிவின் வழிநின்று
செயற்பட்டு, மத்திய அரசின் எதிர்ப்பையும் எதிர் கொண்டு தாங்கள் அடைந்துள்ள இப் பெரும் வெற்றி தங்கள் ஆளுமைக்கும் அயராத உழைப்புக்கும் கட்டியம் கூறுவதாக அமைந்திருக்கிறது.
தமிழகத்திலும், ஈழத்திலும் தமிழ்த் தேசிய மாண்பினையும், தமிழர் மரபுரிமையினையும், சமூகநீதியினையும் நிலைநிறுத்தி, பண்பாட்டுச் செழுமை மிக்க வாழ்வை வாழ்வதற்குத்
தொடர்ச்சியாகப் போராடி வருகின்ற மக்களாகத் தமிழ் மக்கள் இருக்கிறார்கள். ஈழத்தில், தமிழ் மக்கள் சிங்கள இனவாதப்பூதத்தின் இனஅழிப்பை எதிர்கொண்டு தமது சுதந்திரத்துக்காகத்
தொடர்ச்சி;யாகப் போராடி வரும் மக்களாக இருக்கிறார்கள். ஈழத்தில் வாழும் தமிழ் மக்களின் பாதுகாப்பு தமிழகத் தமிழ் உறவுகளால் உறுதி செய்யப்பட வேண்டியதொரு சூழலே இலங்கைத் தீவில் தற்போதும் நிலவுகிறது.
2009 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் கலைஞர் முதலமைச்சராக இருந்த காலத்தில் இடம் பெற்ற முள்ளிவாய்க்கால் ஈழத் தமிழின அழிப்பைத் தடுத்து நிறுத்த முடியவில்லையே என்ற வேதனை எம்மைப்போல் தங்களுக்கும் இருப்பதனை நாம் அறிவோம். தாங்கள் தற்போது தமிழ்நாட்டில்
முதலமைச்சராக வந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் ஈழத் தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காக தங்களால் இயன்ற முயற்சிகளை எடுப்பீர்கள் என நாம் நம்புகிறோம்.
தமிழக அரசின் அமைச்சகத் துறைகளில் ஒன்றாக இதுவரைகாலமும் அமைந்திருந்த ‘வெளிநாடு வாழ் இந்தியர்கள்’ எனும் துறையை ‘வெளிநாடு வாழ் தமிழர் நலன் துறை’ எனத் தாங்கள் மாற்றியமைத்திருப்பது எமக்கு நம்பிக்கை தருவதாக அமைந்திருக்கிறது.
ஈழத்தமிழ் மக்களையும் மனதிருத்தியே தாங்கள் இம் மாற்றத்தைச் செய்ததாக எமது மக்கள் கருதுகிறார்கள். இவ் அமைச்சின் பணிகளாக உலகத் தமிழர்களை ஒன்றிணைப்பதும் இந்துப் பெருங்கடல் புவிசார் அரசியலில் தமிழர் காத்திரமான பங்காளர்களாக விளங்க வைப்பதும்
அமைய வேண்டும், அதற்கான தங்களது அரசின் செயற்பாடுகளில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கமும் இணைந்து பணியாற்ற ஆயத்தமாக உள்ளது என்பதையும் இவ்விடத்தில் பதிவுசெய்து கொள்கிறேன்.
இலங்கைத்தீவின் தேசிய இனப்பிரச்சனையில் இந்திய மத்திய அரசின் கொள்கையில் ஈழத் தமிழ் மக்களுக்குச் சாதகமான மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு தங்களின் பங்களிப்பை நாம் எதிர்பார்க்கிறோம். தமிழ் நாடு; சட்டசபையில் அனைத்துக் கட்சிகளாலும் நிறைவேற்றப்பட்ட
தேசிய இனப்பிரச்சனை தொடர்பாக ஈழத் தமிழ் மக்கள் மத்தியிலான வாக்களிப்பு, தமிழின அழிப்புத் தொடர்பாக அனைத்துலக குற்றவியல் நீதிமன்ற விசாரணை போன்ற விடயங்கள்
தற்போது கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. தாங்கள் இவற்றை மீளக் கையில் எடுத்து, இவ் இலக்குகளை எட்டுவதற்கு உதவக்கூடிய தோழமைச் செயற்பாடுகளை மேற்கொள்வீர்கள் என்ற எதிர்பார்ப்பும் எமக்கு உண்டு.
ஈழத்திலும், தமிழகத்திலும் வாழும் ஈழத் தமிழ் மக்களின் வாழ்வியல் மேம்பாட்டுக்கு உறுதுணையான திட்டங்களைத் தாங்கள் முன்னெடுக்க வேண்டும் எனவும் விரும்புகிறோம்.
தாங்கள் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் விடுதலை அடைந்தார்கள் என்பதனை வரலாறு பதிவு செய்வதாக அமையட்டும்.
கனவு மெய்ப்பட வேண்டும். தமிழர் வாழ்வு தளைத்தோங்க வேண்டும்.
தமிழரின் தலைவிதி தமிழரின் கையில்
தமிழரின் தாகம் தமிழீழத் தயாகம்
இவ்வாறு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரனோ கொலை வெறிக்கு 764 பேர் மரணம்
கொரனோ கொலை வெறிக்கு 764 பேர் மரணம்
இலங்கையில் இதுவரை கொரனோ தாக்குதலுக்கு உள்ளாகி சுமார் 764 பேர் மரணமாகியுள்ளதாக
இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
தொடர்ந்து வேகமாக நோயானது பரவி வருவதால் இதன் பாதிப்பு மேலும் அதிகரிக்க கூடும் என
அஞ்ச படுகிறது
தாண்டவம் ஆடும் கொரனோ – மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்தல்
தாண்டவம் ஆடும் கொரனோ – மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் கோர தாண்டவம் ஆடி வரும் கொரனோ பரவலை அடுத்து ஐந்து மாவட்டங்களில்
உள்ள மேலும் பல கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளன
இவ்வாறு தனிமை படுத்த பட்ட கிராமங்களுக்குள் மக்கள் உட் செல்லவோ ,வெளியேறவோ
முடியாதபடி இராணுவம் காவல்துறையினர் காவல் புரிகின்ற்னர்
இந்த செயல் பாட்டால் மக்கள் பெரிதும் அவதியுற்று வருகின்றனர் என அங்கிருந்து வரும் தகவல் தெரிவிக்கின்றன











