Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
ஆட்கடத்தல் விவகாரம் – விசாரிக்க ஓமான் பறந்த உளவுத்துறை
ஆட்கடத்தல் விவகாரம் – விசாரிக்க ஓமான் பறந்த உளவுத்துறை
இலங்கையர்கள் 90 க்கு மேற்பட்டவர்களை ஓமானுக்கு கடத்தி ,அங்கு சித்திரவதைகளிற்கு உள்ளான பெண்கள் தொடர்பான அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின .
இதனை அடுத்து இலங்கையில் 200 க்கு மேற்பட்ட வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அடித்து மூட பட்டன .
மேலும் இந்த மனித கடத்தலுடன் தொடர்புடையவர்களை கைது செய்யும் நோக்குடன் ,ஓமானுக்கு இலங்கை குற்ற புலனாய்வு துறையை சேர்ந்த குழு பயணித்துள்ளது .
இந்த குழு விசாரணை நடத்தி, இந்த மனித கடத்தலில் சம்பந்த பட்டவர்களை கைது செய்யும் என எதிர் பார்க்க படுகிறது .
பாடசாலை உணவகத்துக்குள் போதை மருந்து – சுற்றிவளைத்த பொலிஸ்
பாடசாலை உணவகத்துக்குள் போதை மருந்து – சுற்றிவளைத்த பொலிஸ்
இலங்கை கம்பாக பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் உணவகத்திற்குள் இருந்து போதை மருந்துகள் மீட்க பட்டுள்ளன .
காவல்துறையினருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இடம்பெற்ற சுற்றிவளைப்பில், ஆயூள்வேத மருத்துவர் ஒருவர் கைது செய்யப் பட்டார் .
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .
பாடசாலைக்குள் போதை பொருள் மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது
சாரத்தை தூக்கி பெண்ணுக்கு காட்டியவர் கைது
பெண்ணொருவருக்கு சாரத்தை தூக்கி காண்பித்த பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தேபான பொலிஸாரே, வலல்லாவிட்ட பிரதேச சபையின் உறுப்பினரை கைது செய்துள்ளனர்.
உடாமுல்லஹேன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் செய்த முறைப்பாட்டுக்கு அமையவே அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரான அந்த பிரதேச சபையின் உறுப்பினருக்கும் முறைப்பாட்டாளராக பெண்ணுக்கும் இடையில், தாங்கள் வசிக்கும் வீடுகளுக்கு அண்மையில் உள்ள காணியொன்று தொடர்பில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தை அடுத்தே, தூசன வார்த்தைகளால் ஏசிவிட்டு, சாரத்தை தூக்கி காண்பித்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.
பெண்ணொருவரை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயன்றார் என்றக் குற்றச்சாட்டின் கீழே, பிரதேச சபையின் உறுப்பினர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்த பொலிஸார்,
அந்த நபருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.
கடும் குளிரில் சிக்கி இரு குழந்தைகள் மரணம்
கடும் குளிரில் சிக்கி இரு குழந்தைகள் மரணம்
இலங்கையில் நிலவி வரும் கடும் குளிர் காரணமாக இரு குழந்தைகள் பலியாகியுள்ளன .
மூச்சு திணறல் சுவாச கோளாறு கரமானமாக இந்த சிசுக்கள் பலியாகியுள்ளன என்கிறது மருத்துவமனை தகவல் .
இந்த இரு சிறுவர்கள் மரணம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
மூச்சு திணறல் ஏற்பட்டே இந்த சிசுக்கள் பலியாகியுள்ள சம்பவம் கந்தளாய் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை
இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை
சமீபத்திய காலநிலை மாற்றத்தின் காரணமாக ,வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இறந்த பசுக்கள் , எருமை மாடுகள் மற்றும் ஆடுகள் தொடர்பில் ஆய்வுக்கூட பரிசோதனை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்காலநிலை மாற்றத்தினால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உயிரிழந்த பசுக்கள், எருமைகள் மற்றும் ஆடுகளின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக விவசாய அமைச்சின் கால்நடை வள பிரிவு தெரிவித்துள்ளது.
இறந்த கால்நடைகள் தொடர்பான விரிவான அறிக்கையை உடனடியாக வழங்குமாறு விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர, அமைச்சின் செயலாளர் திரு.குணதாச சமரசிங்கவுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்..
யாழ் மாவட்டத்தில் 49 பசுக்களும் 58 ஆடுகளும் இறந்துள்ளதுடன் 17 பசுக்களும் 50 ஆடுகளும் மோசமாக பாதிக்கப்பட்டிருப்பதாக விவசாய வனஜீவராசிகள் மற்றும் வன வள பாகாப்பு அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கபட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டதில் இறந்த பசுக்களின் எண்ணிக்கை 168. மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 159. இறந்த ஆடுகளின் எண்ணிக்கை ஆறு. பாதிக்கப்பட்ட ஆடுகளின் எண்ணிக்கை மூன்று.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 120 பசுக்கள் இறந்துள்ளன. மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 159.இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 42.
இதேபோன்று வவுனியா மாவட்டத்தில் 21 பசுக்கள் இறந்துள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 17. இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 85.
இறந்த ஆடு மாடுகள் இறைச்சியை பயன்படுத தடை
கிழக்கு மாகாணத்தில் இறந்த பசுக்கள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கை 478 என பதிவாகியுள்ளதுடன் மோசமாக பாதிக்கப்பட்ட பசுக்களின் எண்ணிக்கை 352. இதேபோன்று இறந்த ஆடுகளின் எண்ணிக்கை 65.
இந்தியாவை பாதித்த சூறாவளியையடுத்து கிழக்கு மற்றும் வடக்கு கடற்கரையோரங்களில் ஏற்பட்ட கடுமையான குளிர் காலநிலையினால் கால் நடைகள் இறந்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது,.
ஆனால் இந்த விலங்குகள் மற்றொரு தொற்றுநோய் காரணமாக இறந்ததா? அதை உறுதி செய்யும் வகையில், இறந்த அனைத்து கால்நடைகளின் மாதிரிகளையும் கால்நடை அதிகாரிகள் எடுத்து பரிசோதனைக்காக ஆய்வகங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த கால் நடைகளின் இறைச்சியை பயன்படுத்தல், எடுத்துச்செல்லல் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்த வேண்டாம் என்பதை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தும் வேலைத்திட்டங்கள் அந்தந்த மாகாண கால்நடைப் பணிப்பாளர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தற்போது குளிர் காலநிலை குறைந்துள்ளதால் ஆபத்தான நிலையில் உள்ள விலங்குகள் குணமடைந்து வருவது தெரியவந்துள்ளது.
எவ்வாறாயினும், விவசாய அமைச்சின் செயலாளர் திரு.குணதாச
சமரசிங்க இந்த விலங்குகளின் இறைச்சியை நுகர்வு
அல்லது போக்குவரத்து மற்றும் விற்பனைக்கு அனுமதிக்க வேண்டாம் என்று சம்பந்தப்பட்ட
அனைத்து திணைக்களங்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.
சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி
சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி
சீனா அதிகாரிகளுடனான கலந்துரையாடல் வெற்றியடைந்ததாக சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜீவா தெரிவித்துள்ளார்.
இலங்கை உட்பட கடன் தொடர்பான நாடுகளின் கடன் மறுசீரமைப்பு பற்றிய பேச்சுவார்த்தை நடத்த சீன வெளிவிவகார அமைச்சு சர்வதேச நாணய
நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை சீனா வருமாறு அழைத்திருந்தது. இதையடுத்து கிறிஸ்டலினா ஜார்ஜீவா அங்கு சென்றிருந்தார்.
சீனப் பிரதமர் லி வியாழன் அன்று சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாக இயக்குநர் கிறிஸ்டலினா ஜார்ஜீவாவை அன்ஹுய் மாகாணத்தின்
ஹுவாங்ஷான் நகரில் சந்தித்து மேக்ரோ-கொள்கை ஒருங்கிணைப்பை வலுப்படுத்த உறுதிமொழி அளித்தார்.
சீனாவுடனான கலந்துரையாடல் வெற்றி
இலங்கை, சாம்பியா போன்ற நாடுகளுக்கு வழங்கப்பட்ட கடன்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்களுடன் கலந்துரையாடியதாக கிறிஸ்டலினா ஜார்ஜீவாவா குறிப்பிட்டுள்ளார்.
உலகப் பொருளாதார நிர்வாகத்தில் சீனா ஒரு பங்கேற்பாளராகவும், ஆதரவாளராகவும், பங்களிப்பாளராகவும் இருந்து வருவதாகக் குறிப்பிட்ட
பிரதமர் லீ கெகியாங், சீனா பல ஆண்டுகளாக IMF உடன் ஒரு நல்ல கூட்டுறவு உறவைப் பேணி வருகிறது என்றார். கடன், காலநிலை மாற்றம் மற்றும் பிற
உலகளாவிய சவால்களைச் சமாளிக்க சர்வதேச நாணய நிதியம் உட்பட அனைத்து தரப்பினருடனும் மேக்ரோ-
கொள்கை ஒருங்கிணைப்பை சீனா தொடர்ந்து வலுப்படுத்தும் என்று அவர் கூறினார்
தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022
தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022
ஆண்டுதோறும் தமிழர் ஓருங்கிணைப்புக் குழுவினால் கேணல் கிட்டு உட்பட 10 மாவீரர்களின் நினைவாக நடாத்தப்படும் “தமிழர் விளையாட்டு விழா 2023”
எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 8மணி முதல் இரவு 8மணி வரை East Burwood Reserve, East Burwood என்ற மைதானத்தில் நடைபெற ஏற்படாகியுள்ளது.
இடம்: East Burwood Reserve, Burwood HWY, East Burwood, Vic 3151 (Melway Ref: 62 B7).
காலம்: January 8th Sunday 2023, From 8.00 AM onwards.
இந்நிகழ்வில் வழமைபோல் துடுப்பெடுத்தாட்டம், கரப்பந்தாட்டம் மற்றும் சிறுவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள், கிளித்தட்டு, கயிறிழுத்தல் உட்பட தாயக விளையாட்டுப் போட்டிகள் இடம்பெற இருக்கின்றன.
இத்துடன் நாள் முழுவதும் ஒடியற்கூழ் உட்பட சுவையான தாயக உணவு வகைகளும், தேசிய வெளியீடுகளும் விற்பனைக்கு உள்ளன.
தமிழர் விளையாட்டு விழா -மெல்பேர்ன் – 2022
அனைத்துத் தமிழ் உறவுகளையும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்து இத்தமிழ் ஒன்றுகூடல் நிகழ்வுகளிலும், விளையாட்டுப் போட்டி-களிலும் பங்கெடுத்து தாயக உணவுகளையும் உண்டு சுவைத்து ஆதரவு வழங்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளுகின்றோம்.
மேலதிக விபரங்களிற்கும், பதிவுகளுக்கும் 0423 577 071 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்பு கொள்ளவும்.
குறிப்பு: நிகழ்விடத்தில் தாரளமான வாகன தரிப்பிட வசதிகள் உள்ளன.
நன்றி
தமிழர் ஓருங்கிணைப்புக் குழு (விக்ரோரியா)
Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது
Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது
தமிழக மக்களை அச்சுறுத்தி வந்த மாண்டஸ் புயலின் மையப்பகுதி இன்று அதிகாலை 2.30 மணி அளவில் கரையை கடந்ததாக சென்னை வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
“Mandous” புயல் நேற்று (09) காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்து தமிழக வட கடலோர பகுதியை நோக்கி வந்தது. இந்த சூழலில் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்கத் துவங்கியது.
மணிக்கு 12 கி.மீ. வேகத்தில் புயல் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்திருந்தது. மேலும் புயல் கரையை கடந்து வருவதால் 70
முதல் 80 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசி வருகிறது. மாண்டஸ் புயல் கரையை கடக்கத் தொடங்கி உள்ளதால் சென்னை முழுவதும் பலத்து சூறைக்காற்று வீசி வருகிறது.
மாண்டஸ் புயலின் மையப் பகுதி இன்னும் கடலில் உள்ளதால் கரையை கடக்கும் நிகழ்வு அடுத்த 2 அல்லது 3 மணிநேரத்தில் நடக்கும் என்றும் புயலின் மையப்பகுதி கடலில் உள்ளது என்றும் சென்னை வானிலை நிலைய பணிப்பாளர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
Mandous மாண்டஸ் புயலின் மையப்பகுதி தமிழக கரையை கடந்தது
மாண்டஸ் புயல் இன்று அதிகாலை கரையை கடந்துள்ள நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலைஇ கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, கள்ளக்குறிச்சி,
திருப்பத்தூர், பெரம்பலூர், அரியலூர், கோயம்புத்தூர், நீலகிரி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் ஈரோடு உள்ளிட்ட 20 மாவட்டங்களில் பெய்ய வாய்ப்பு உள்ளது என இந்திய தென்மண்டல வானிலை நிலையம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மழை காரணமாக 15 மாவட்டங்களில் பாடசாலைகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை,
திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, சேலம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி,கடலூர், நீலகிரி ஆகிய 15 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இதேபோல் நாகை மாவட்டத்தில் பாடசாலைகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல்,
சிறுமலை பகுதியில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இலங்கை பிரஜைகளுக்கு மீண்டும் இந்திய E-visas
இலங்கை பிரஜைகளுக்கு மீண்டும் இந்திய E-visas
இலங்கை பிரஜைகளுக்கான இ-விசாக்களைE-visas வழங்கும் நடவடிக்கைகளை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளது.
வசதியான பயணத்தை செயல்படுத்துவதன் மூலம், ஓய்வு, வணிகம், மாநாடு மற்றும் பலவற்றிற்காக இந்தியாவிற்கு வருகை தர விரும்பும் இலங்கையர்களுக்காக இந்த இணைய தள இ-விசாக்களை நடைமுறையை இந்தியா மீண்டும் ஆரம்பித்துள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
indianvisaonline.gov.in/evisa/tvoa.htm என்ற இணைய தள முகவரி மூலம் இதற்காக விண்ணப்பிக்க முடியும்
புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டோடலர்கள் வருமானம்
புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டோடலர்கள் வருமானம்
இலங்கை புலம்பெயர் தொழிலாளர்களினால் 2022 ஆம் ஆண்டில் ,இலங்கைக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் மேற்பட்ட தொகை அனுப்பப்பட்டுள்ளது.
கடந்த நவம்பர் மாதத்தில் இவர்கள் நாட்டுக்கு அனுப்பிய தொகை 384.4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.
அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் இத்தொகை 30 மில்லியன் அமெரிக்க டோலருக்கும் அதிகமாகும்.
ஒக்டோபர் மாதத்தில் புலம்பெயர் தொழிலாளர்களினால் இலங்கைக்கு 355.4 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளன.
2021 ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் இத்தொகையை ஒப்பிடுகையில் இது 42 வீதம் அல்லது 113 மில்லியன் அமெரிக்க டொலர் அதிகரிப்பாகும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
இந்த ஆண்டு ஜனவரி முதல் நவம்பர் வரையிலான காலப்பகுதியில் நாட்டுக்கு
அனுப்பப்பட்ட மொத்த தொகை 3,313.8 மில்லியன் அமெரிக்க டோலர்களாகும்.
சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு
சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு
தற்போது நிலவி வருகின்ற சீரற்ற கால நிலை காரணமாக ஏற்பட்டுள்ள கடும்குளிருடன் கூடிய மழை மற்றும் வேகமான காற்று காரணமாக
கிளிநொச்சியில் பலகிராமங்களில் 165 க்கு மேற்பட்ட மாடுகள் மற்றும் 3 ஆடுகள் என்பன இறந்துள்ளன.
இந்த இறப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க கூடும் என கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது
கிளிநொச்சி கௌதாரிமுனை வெட்டுக்காடு கிராமத்தில் 60 மாடுகளும், நல்லூர் சாமிபுலத்தில் கிராமத்தில் 75 மாடுகளும், பொன்னகர் கிராமத்தில் 13 மாடுகளும், புன்னை நீராவியில் 07 மாடுகளும், நாகேந்திரபுரத்தில் 05
மாடுகளும், பூநகரியில் 05 மாடுகளுமாக 130 க்கு மேற்பட்ட மாடுகள் இறந்துள்ளதாக கிளிநொச்சி பிராந்திய கால்நடை திணைக்களம் தெரிவித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் 165 மாடுகள் இறப்பு
அத்தோடு திருவையாறு கிராமத்தில் கடும் காற்று காரணமாக மரம் முறிந்து வீழ்ந்ததில் மூன்று ஆடுகள் இறந்துள்ளதோடு, மேலும் பல ஆடுகள் மற்றும் மாடுகள் என்பன காயங்களுக்குள்ளாகியுள்ளன.
கடும் குளிருடன் கூடிய மழை மற்றும் காற்று காரணமாக மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாகவும் இவ்வாறு கால்நடைகள் இறந்துள்ளதாகவும்.
இன்றுமதியம்(09) வரை மேற்படி எண்ணிக்கையை உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது என்றும் தெரிவிததுள்ள கால்நடை திணைக்களம்
இந்த சீரற்ற காலநிலை காரணமாக இறந்த கால்நடைகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது.
அடித்து கொலை
வீட்டுக்கு வெளியில் நபர் அடித்து கொலை
இலங்கை உடுகம பகுதியில் தமது வீட்டுக்கு வெளியில் நின்ற நபரை அடித்து கொலைசெய்து விட்டு கும்பல் ஒன்று தப்பி சென்றுள்ளது .
எனினும் இந்த கொலை வெறி தாக்குதலை நடத்தியவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,அவர்களை கைது செய்யும் வேட்டையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர் .
இந்த கொலைக்கான கரணம் உடனடியாக தெரியவரவில்லை .
பால் மா மாவிலை அதிகரிப்பு மக்கள் கொதிப்பு
பால் மா மாவிலை அதிகரிப்பு மக்கள் கொதிப்பு
பல் மா விலை அதிகரிக்க பட்டுள்ளது .400 கிராம் மாவின் விலை 1,250 ரூபாவாக அதிகரிக்க பட்டுள்ளது .
இந்த திடீர் விலை அதிகரிப்பினால் மக்கள் பெரிதும் பாதிக்க பட்டுள்ளனர்.
தொடர்ந்து அதிகரித்து செல்லும் விலை அதிகரிப்பால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .
பாடசாலைகள் யாவும் இன்று விடுமுறை
பாடசாலைகள் யாவும் இன்று விடுமுறை
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை அளிக்க பட்டுள்ளது .
இந்த விடுமுறை யானது காலநிலை செயல்பாட்டை அடுத்து மாற்றம் பெறும் என காவல்துறை அறிவித்துள்ளது .
மக்களை மிக பாதுகாப்பக இருக்கும் படி வேண்ட பட்டுள்ளது .
யாழ்ப்பாணம் கல்முனை புத்தளம் மாவட்டங்களில் டெங்கு
யாழ்ப்பாணம் கல்முனை புத்தளம் மாவட்டங்களில் டெங்கு
நாட்டில் மீண்டும் டெங்கு நோய் வேகமாக பரவி வருவதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 1,602 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் (390) நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கொழும்பு மாவட்டத்தில் 272 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதுமட்டுமன்றி, கடந்த வாரத்தில் கல்முனை, புத்தளம் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, இலங்கையில் தற்போது 68,928 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த வருடம் இந்த காலப்பகுதியில் 27,844 டெங்கு நோயாளர்கள் மாத்திரமே அடையாளம் காணப்பட்டனர்.
எனவே, டெங்கு நோயின் பரவலைக் கருத்தில் கொண்டு 41 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அனர்த வலயங்களாக
பெயரிடப்பட்டுள்ளன என்றும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது
புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் உருவான ‘மாண்டஸ்’ புயல் தீவிரம் அடைந்து, வட தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகருகிறது.
இன்று (வெள்ளிக்கிழமை) இரவு முதல் கரையை கடக்க வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் கடந்த 5 ஆம்திகதி உருவான இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று முன்தினம் காலையில் தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலைக்கொண்டிருந்தது. பின்னர், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து,
நேற்று அதிகாலையில் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘மாண்டஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
தொடர்ந்து இந்த மாண்டஸ் புயல் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று இரவுக்கு பிறகு தீவிர புயலாக வலுப்பெற்றது.
இன்று (வெள்ளிக்கிழமை) காலை வரை தீவிர புயலாக இருந்து, பின்னர் மீண்டும் புயலாக வலுவிழந்து, வட தமிழகம், புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதியை நெருங்கும் என்றும், அதனை தொடர்ந்து நள்ளிரவு முதல்
நாளை (சனிக்கிழமை) அதிகாலை வரையிலான இடைப்பட்ட காலத்தில் புதுச்சேரிக்கும், ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே, மாமல்லபுரம் அருகில்
கரையை கடக்க வாய்ப்பு இருக்கிறது என்றும் வானிலை ஆய்வு நிலையம் கணித்து இருக்கிறது.
புயலின் மையப்பகுதி என்று அழைக்கப்படும் கண் பகுதி சென்னைக்கு அருகே மாமல்லபுரத்தை சுற்றிய பகுதிகளில் கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
கரையை கடக்கும் போது குறைந்தபட்சம் மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலும், அதிகபட்சமாக 85 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாமல்லபுரத்தில் புயல் கரையை கடந்தாலும், கரையை கடக்கும் இடத்துக்கு வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளிலும் புயலின் தாக்கம் இருக்கும்.
இந்த புயல் காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்காலில் இன்று முதல் 3 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழைக்கான வாய்ப்பு இருக்கிறது.
சில இடங்களில் கன முதல் மிக கன மழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ரெட் அலர்ட்’ அதன்படி, இன்று காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கன மழையும் பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், சென்னை,
ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழையும், தர்மபுரி, சேலம், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், மயிலாடுதுறை,
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, கரூர், திண்டுக்கல், மதுரை, சிவகங்கை மாவட்டங்கள், காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த காற்றுடன் விடிய விடிய கனமழை இந்த மாவட்டங்களில் அதி கனமழை மற்றும் சூறாவளி காற்று வீசக்கூடிய காஞ்சீபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் ஆகிய 3 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரிக்கு நிர்வாக ரீதியாக ‘ரெட்
அலர்ட்’டும், கன முதல் மிக கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’டும் விடுக்கப்பட்டுள்ளது. மிக கனமழை நாளை திருவள்ளூர்,
சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில்
ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்.
புயல் தீவிர புயலாக வலுப்பெற்றது
நாளை மறுதினம் (ஞாயிற்றுக்கிழமை) தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் இன்று காலை முதல் மாலை வரை 50 கி.மீ. முதல் 60 கி.மீ. வரையிலான வேகத்திலும், இடையிடையே 70 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
அதேபோல், இன்று மாலை முதல் நாளை காலை வரை மணிக்கு 65 கி.மீ. முதல் 75 கி.மீ. வரையிலான வேகத்திலும், இடையிடையே 85 கி.மீ. வேகத்திலும் பலத்த காற்று வீசக்கூடும்.
அதன் பின்னர் காற்றின் வேகம் குறைந்து நாளை இரவு வரை 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசும்..
மன்னார் வளைகுடா பகுதிகளில் இன்று மாலை முதல் நாளை காலை வரை அதிகபட்சமாக 70 கி.மீ. வேகத்திலும், அதன் பின்னர் வேகம் குறைந்து 60 கி.மீ. வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும்.
புயல் கரையை கடக்கக்கூடிய நேரமான இன்று (வெள்ளிக்கிழமை) இரவு பொது மக்கள் தேவையற்ற பயணங்களை தவிர்க்க வேண்டும் என்றும்,
தேவையான காய்கறி, பால் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்கி வைத்து கொள்ள வேண்டும் என்றும் .
இந்நிலையில் சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ. தொலைவில் ‘மாண்டஸ்’ புயல் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று காலை தீவிர புயலில் இருந்து புயலாக வலுவிலக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று நள்ளிரவு முதல் புதுச்சேரி, ஸ்ரீஹரிக்கோட்டா
இடையே 65 -85 கி.மீ. வேகத்தில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
விற்கும் முயற்சியில் அரசாங்கம் சரத்பொன்சேகா
விற்கும் முயற்சியில் அரசாங்கம் சரத்பொன்சேகா
மறுசீரமைப்பு என்ற பெயரில் அரச நிறுவனங்களை விற்கும் முயற்சியில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது என்று எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்
பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.
அரச நிறுவனங்களை மறுசீரமைப்பு செய்வதாக கூறிக்கொண்டு அவற்றை விற்கும் செயற்பாடுகளையே முன்னெடுக்க முயற்சிக்கின்றனர். நிறுவனங்கள நஷ்டமடைவதாகவே அரசாங்கம் கூறுகின்றது. அவ்வாறு நஷ்டமடைவதை தடுக்க வீண் செலவுக கட்டுப்படுத்த வேண்டும் என்றார்.
அத்துடன் ஊழல்களை நிறுத்த வேண்டும். இதனை செய்யாவிட்டால் நாட்டை எந்த வழியிலும் முன்னேற்ற முடியாது.
அரச நிறுவனங்களை விற்று டொலர் தேடுவதற்கு முயற்சிக்கின்றனர். இது பிரச்சினைகளுக்குரியது என்றார்.
பொலிஸ் அதிகாரி ஆற்றுக்குள் சடலமாக மீட்பு
பொலிஸ் அதிகாரி ஆற்றுக்குள் சடலமாக மீட்பு
இலங்கை பொலிஸ் சார்யன் தர அதிகாரி ஒருவர் பொலனறு மாதூறு ஓயா ஆற்றுக்குள் இருந்து சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இவர்கள் பயணித்த உழவு இயந்திரம் , சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் வீழ்ந்துள்ளது .
இதன் போது உழவு இயந்திரத்தில் நசியுண்டு அவர் பலியாகியுள்ளார் .
இவருடன் கூட பயணித்த இருவர் காப்பாற்ற பட்டுள்ளனர் ..
எனினும் இது குறித்த விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இறந்த பொலிஸ் அதிகாரி சடலம் சுழியோடிகள் துணையுடன் மீட்க பட்டுள்ளது .
கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
கடும் புயல் மழை மக்களுக்கு எச்சரிக்கை
இலங்கையில் நாடு தழுவிய ரீதியில் கடும் புயல் மற்றும் மழை பொழிந்த வண்ணம் உள்ளது .
வங்களா விரிகுடாவில் ஏற்பட்ட காற்றழுத்தம் காரணமாக ,இந்த சீரற்ற காலநிலை தொடர்கிறது .
இவ்வேளை மக்களை விழிப்பாக இருக்கும்படி வேண்ட படுகிறது .
நிர்வாண நிலையில் மனித சடலம் மீட்பு
நிர்வாண நிலையில் மனித சடலம் மீட்பு
நிர்வாண நிலையில் ஆண் ஒருவரது சடலம் ஒன்று எஹெலியகொட காவல்துறை பகுதியில் உள்ள நீரோடை ஒன்றில் இருந்து மீட்க பட்டுள்ளது .
சில நாட்களுக்கு முன்னர் காணாம போன ஆண் ஒருவரே இவ்வாறு சடலமாக கண்டுபிடிக்க பட்டுள்ளார் .
இவர் கொலை செய்யப் பட்ட பின்னர் இந்த நீரோடை பகுதியில் வீச பட்டு இருக்கலாம் என சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
இது குறித்த விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
இலங்கையில் இவ்வாறு நாள் தோறும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .




























