Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் நினைவாக வவுனியாவில் நடந்த சம்பவம்
யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் நினைவாக வவுனியாவில் நடந்த சம்பவம்
யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்ட சங்கிலிய மன்னனின் 404 ஆவது நினைவு தினம் இன்று (11.06) வவுனியா கற்குளத்தில் அனுஸ்டிக்கப்பட்டது.
சிவசேனை மற்றும் கற்குளம் மகாவிஷணு ஆலயம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இந் நிகழ்வு மகாவிஸ்ணு ஆலய நீர் தடாகத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாணத்து மன்னன் சங்கிலியன் நினைவாக வவுனியாவில் நடந்த சம்பவம்
தமிழில் மந்திரமோதி மோட்ச அர்ச்சனை செய்யப்பட்ட இவ் அஞ்சலி நிகழ்வில் சிவசேனை அமைப்பின் வவுனியா அமைப்பாளர் தமிழ்திரு அ. மாதவன் உட்பட கிராமத்தவர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
நவீன் திஸாநாயக்க ஆளுநராக நியமிக்க நடவடிக்கை
நவீன் திஸாநாயக்க ஆளுநராக நியமிக்க நடவடிக்கை
இலங்கையின் முன்னாள் அமைச்சர் நவீன் திஸாநாயக்க ஆளுநராக நியமிக்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன .
இவர் பதவி ஏற்க முன்னதாக, சப்ரகமுவ மாகாண ஆளுநர் டிக்கிரி கொப்பேகடுவ தனது பதவியை இராஜினாமா செய்ய உத்தரவுகள் பணிக்க பட்டுள்ளது .
திஸாநாயக்கவுக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளதாகவும், அதற்கான நியமனம் செவ்வாய்கிழமை இடம்பெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது ..
காணாமல் போனவர்கள் எங்கே
காணாமல் போனவர்கள் எங்கே
காணாமல்போனோரின் குடும்பத்தினர் நீண்டகாலமாக அனுபவித்து வரும் துன்பத்துக்கு உடனடியாகத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து
சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர், வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியிடம் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்த சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியத்துக்கான பணிப்பாளர்
கிறிஸ்டின் சிபோல்லா மற்றும் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று கடந்த வார இறுதியில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது இலங்கையில் வாழும் அனைத்துச் சமூகங்களையும் சேர்ந்த காணாமல்போனோரின் குடும்பத்தினர் அனுபத்துவரும் துன்பத்துக்குத் தீர்வை வழங்கவேண்டியதன் அவசியம் குறித்து கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்
வீடு புகுந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் அதிகாரி
வீடு புகுந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் அதிகாரி
களுத்துறை பகுதியில் உள்ள வீடு ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த யுவதி ஒருவரைத் தாக்கி காயப்படுத்தி வீட்டின் சொத்துக்களுக்கு சேதம்
விளைவித்த குற்றச்சாட்டில் மொரந்துடுவ பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வீடு புகுந்து யுவதியை தாக்கி காயப்படுத்திய பொலிஸ் அதிகாரி
வஸ்கடுவ பகுதியில் வசிக்கும் யுவதி ஒருவர் செய்த முறைப்பாட்டுக்கமைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த மே மாதம் 18 ஆம் திகதி இரவு சந்தேக நபர்களான சார்ஜன்டும் அவரது மனைவியும் குறித்த யுவதியின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து இந்த தாக்குதலை நடத்தியிருந்ததாக குறித்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது
பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
பஸ் விபத்தில் பாடசாலை மாணவன் பலி
கெலின்கந்தயில் இருந்து மத்துகம நோக்கிச் சென்று கொண்டிருந்த பஸ் ஒன்று மாகெலி எல்ல பிரதேசத்தில் வீதியில் வழுக்கிச் சென்று மண்மேட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்போது, பஸ்ஸின் சாரதி உட்பட 9 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், பாடசாலை மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
புளத்சிங்கள பிரதேசத்தை சேர்ந்த 17 வயதுடைய மாணவனே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
அனுராதபுரம் நகருக்கு அருகில் உள்ள ஹால்பானு கால்வாயில் பெண் ஒருவரின் சடலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அநுராதபுரம் கொஹொம்பகஸ் சந்தி பகுதியினூடாக பாயும் ஹால்பானு கால்வாயில் மீட்கப்பட்ட குறித்த பெண் உயிரிழந்து சுமார் 5 நாட்கள் இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பெண்ணின் சடலம் உருக்குலைந்து வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிப்பு
பெண்ணின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படாத நிலையில், பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.
ஹால்பானு கால்வாய் பகுதியில் விவசாயம் செய்து கொண்டிருந்த விவசாயி ஒருவர், குறித்த பகுதியில் துர்நாற்றம் வீசியதால் அப்பகுதியில் தேடிய போது சடலத்தை கண்டுள்ளார்.
பின்னர் அப்பகுதி மக்களுக்கு தகவல் கொடுத்த விவசாயி இது குறித்து அநுராதபுரம் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவருக்கு எச்.ஐ.வி
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவருக்கு எச்.ஐ.வி
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவர் வவுனியாவில் எச்.ஐ.வி தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் இருவர் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர். இவ்வாறு இனங்காணப்பட்ட இருவரும் ஆண்களாவர்.
வெளிநாட்டில் இருந்து வருகை தந்த இருவருக்கு எச்.ஐ.வி
வவுனியா மாவட்டத்தில் எச்.ஐ.வி சிகிச்சைப் பிரிவு 2003 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கடந்த டிசம்பர் வரை 30 பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டிருந்தனர். அவர்களில் சிகிச்சைக்கு பிந்திய நிலையில் வந்தவர்கள் மற்றும் சீராக சிகிச்சை பெறாத 7 ஆண்களும் 5 பெண்களுமாக 12 பேர் இறந்துள்ளனர்.
ஏனையவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தற்போது அடையாளம் காணப்பட்டவர்களுக்கும் அதற்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
காலி, கராபிட்டிய பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் நபரொருவர் படுகாயமடைந்துள்ளார்.
நடமாடும் பொலிஸ் சோதனையின் போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பொலிஸார் மீது வௌிநாட்டில் தயாரித்த கைக்குண்டு ஒன்றை வீசி தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் படுகாயம்
இதில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் மற்றைய நபர் பொலிஸாரார் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து, 105 T-56 ரக தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள கோவில்
33 வருடங்களின் பின் விடுவிக்கப்படவுள்ள கோவில்
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை மாங்கொல்லை வைரவர் கோவில் மற்றும் அதனை சூழவுள்ள சில பகுதிகள் 33 வருடங்களின் பின்னர் மீள கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 33 வருட காலமாக உயர் பாதுகாப்பு வலயமாக J/ 233 கிராம சேவையாளர் பகுதியில் உள்ள மாங்கொல்லை வைரவர் கோவிலும் அதனை சூழவுள்ள தனியார் காணிகளில் இருந்து இராணுவத்தினர் வெளியேறியுள்ளனர்.
மிக விரைவில் , அவை மக்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளது.
ரயில் மோதி நபர் மரணம் வெள்ளவத்தையில் துயரம்
ரயில் மோதி நபர் மரணம் வெள்ளவத்தையில் துயரம்
இலங்கை வெள்ளவத்தை பகுதியில் ஆன் ஒருவர் சடலமாக மேடேக பட்டுள்ளார் .
கோட்டையில் இருந்து தெஹிவளை நோக்கி பயணித்த பேரூந்தில் பயணித்த ,ரயிலில் ,மோதுண்ட ஏ இவர் இருந்துள்ளதாக டெஹ்ரிவிக்க படுகிறது .சாலமீட்க மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது .
மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
மோசடியில் ஈடுபட்ட பெண் கைது
ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்ட பெண் ஒருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஜப்பானில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக தெரிவித்து, 10 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாவைப் பெற்றுக்கொண்டு, வேலைவாய்ப்பை பெற்றுத்தரவில்லை என, பாதிக்கப்பட்ட இருவர் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இதற்கமைய, பணியக அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில், மினுவாங்கொடை பகுதியைச் சேர்ந்த 65 வயதான பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்கள்
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்கள்
கவா்ச்சிகரமான வட்டி தருவதாக கூறி ஒரு கோடியே பதினேழு இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கெஸ்பேவ நகரசபையின் முன்னாள் பெண் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரின் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானவா்கள், பெண்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் இந்த மோசடி இடம்பெற்றுவருவதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த பெண்ணுக்கு எதிராக பிலியந்தலை பொலிஸ் நிலையத்தில் 11 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை இழந்த பெண்கள்
பல்வேறு திட்டங்களுக்கு பணம் முதலீடு செய்யப்படுவதாகவும், பல்வேறு பாராளுமன்ற உறுப்பினர்களின் பெயர்களை பயன்படுத்தியும் 3 லட்சம் முதல் 25 இலட்சம் ரூபா வரையில் மோசடி செய்துள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோசடி செய்த பணத்தைக் கோரும் போது அதனை வழங்க மறுத்து, மிரட்டுவதாகவும் முறைப்பாடுகளில் தொிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள குறித்த சந்தேக நபர் பிலியந்தலை – மகுலுதுவ பிரதேசத்தை சேர்ந்த 54 வயதுடையவர் என தொியவந்துள்ளது.
சந்தேகநபரான பெண், கெஸ்பேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
தேர்தலுக்கு நாம் தயார் மகிந்தா அறிவிப்பு
தேர்தலுக்கு நாம் தயார் மகிந்தா அறிவிப்பு
இலங்கையில் தேர்தலை எதிர்கொள்ள நாம் தயார் என ,
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார் .
இலங்கையில் பணம் இல்லை தேர்தலை நடத்த முடியவில்லை ,
என ரணில் விக்கிரமசிங்கா தெரிவித்திருந்த வெளியில் ,மகிந்த ராஜபக்ச இவர் இவ்வு தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .
பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா
பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா
பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, யோசனையை முன்மொழிந்தார்.
“இன்றைய குழந்தைகளுக்கு செக்ஸ் பற்றிய உண்மையான உண்மைகள் தெரியாது. இதனால் பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆளாகின்றனர். பாடசாலை மாணவர்கள் சிலருக்கு சமூக நோய் என்றால் என்னவென தெரியாது.
பாலியல் கல்வியைச் சேர்க்கவும் டயானா
இந்த நோய்களைப் பற்றி சில பிள்ளைகள் அறியாததால் அவர்களுக்குத் தெரியாமல் பல்வேறு சமூக நோய்களால் பாதிக்கப்படலாம். இந்த நோய்களின் அறிகுறிகள் கூட அவர்களுக்குத் தெரியாது என்றார்.
“பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், மேலும் அவர்களுடன் அதிக நேரத்தை செலவிடுமாறு பெற்றோரிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்
யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றத்தின் போது பூசகர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் கொடியேற்றம் தடைப்பட்டதுடன், பொலிசார் தலையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக நேற்று(09) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது.
குறித்த ஆலயத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் முன்நின்று நடத்துவதென இரண்டு பூசர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.
யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
இந்நிலையில் இவ் வருட மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் நடத்துமாறு கடந்த 6ஆம் திகதி யாழ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எனினும் நேற்று முன்தினம்(08) மகோற்சவ முன்னேற்பாட்டினை மேற்கொள்ள முயன்றபோது மற்றைய பூசகர் ஆலயத் திறப்பினை கையளிக்காத்தால் முரண்பாடு நிலவியுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் நேற்று(09) வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீண்டநேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் கருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முற்படும்துமாறும் நீதவானால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதனடிப்படையில் நேற்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
ரீலங்கா ரெலிகொம் நிறுவனத்தை தனியார்மயப்படுத்துவது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என தேசிய பாதுகாப்பு தொடர்பான துறைசார் கண்காணிப்புக் குழு இன்று (09) பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.
இந்த அறிக்கை, பல்வேறு விடயங்களை உள்ளடக்கியிருந்தாலும், அவதானம் செலுத்தப்பட்ட துறைகள் தொடர்பில் தர்க்க ரீதியான அல்லது அறிவியல் பூர்வமான தரவுப் பகுப்பாய்வின் அடிப்படையில் இல்லாமை, கடுமையான குறைபாட்டைக் காட்டுகிறது என்று அரசாங்கம் கருதுகிறது.
குறிப்பாக, இந்நாட்டில் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் நிறுவனங்களின் செயற்பாடு, அந்த நிறுவனங்கள் தற்போது எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகின்றன, தகவல் மற்றும் தொடர்பாடல்
துறை தொடர்பான நிதித் தரவுகள், இத்துறை தொடர்பில் இலங்கையின் தேசிய இலட்சியம், அதனை அடைவதற்கான மூலதனத் திறன், அத்துடன் உலகப் போக்குகள் பற்றிய முறையான ஆய்வு மற்றும் பகுப்பாய்வும் அவசியம்.
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது
மேலும், அரசாங்கம் எடுத்துள்ள இந்த கொள்கை ரீதியிலான முடிவின் காரணமாக, இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளபடி, தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை அரசாங்கம் உறுதி செய்துள்ளது.
எனவே, இந்த அறிக்கை மற்றும் தகவல் தொடர்பாடல் துறையின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அரசாங்கம் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடாது, தனியார் துறையினருக்கு அந்த வாய்ப்பை வழங்குவதே தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை எனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
வவுனியாவில் விபச்சாரத் தொழில் ஈடுபட்ட 7 பேருக்கு கொனோறியா மற்றும் ஷர்ப்பீஸ் நோய் தொற்றுக்கள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் அவர்களுடன் தொடர்பை பேணியவர்களை உடனடியாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுமாறு சுகாதாரப் பிரிவினர் கோரியுள்ளனர்.
இந் நோயானது பாலியல் உறவின் மூலம் தொற்றாளரிடம் இருந்து பிறருக்கு பரவக் கூடியது ஆகும். குறித்த 7 விபச்சாரிகளும் வவுனியா நகரம் மற்றும் தேக்கவத்தை ஆகிய பகுதியில் விபச்சாரத் தொழில் ஈடுபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
வவுனியாவில் 7 விபச்சாரிகளுக்கு தொற்று நோய்: தொடர்பை பேணியவர்களுக்கு விடப்பட்ட கோரிக்கை
எனவே, அவர்களுடன் தொடர்புகளைப் பேணியோர் உடனடியாக வவுனியா வைத்தியசாலையில் எச்.ஐ.வி தடுப்பு பிரிவுக்கு சென்று தம்மை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திக் கொள்ளுமாறும் சுகாதாரப் பிரிவினரால் கோரப்பட்டுள்ளது.
பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்
பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்
நீதிமன்ற பிடியாணை எதுவுமின்றி தன்னைக் கைது செய்த பொலிஸார் தன்னைக் கைது
செய்ததற்கான ரசீதையும் தனது குடும்பத்துக்கு வழங்க மறுத்து விட்டனர் என்றும் பொலிஸ்
பேச்சாளர் தான் குறித்து ஊடகங்களுக்கு பல தவறான அறிக்கைகளை அளித்து வருகிறார் என்றும்
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட எம்.பி.யுமான கஜேந்திரகுமார்
பொன்னம்பலம் வலியுறுத்தினார்.
தனது பாதுகாப்புக்கு ஏற்றதாக கருதும் அனைத்து நடவடிக்கைகளையும் சபாநாயகர் முன்னெடுக்க
வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) எழுப்பிய சிறப்புரிமை மீறல் பிரச்சினையிலேயே
மேற்கண் விடயத்தை தெரிவித்த அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்
“ஜூன் 2ஆம் திகதி நடந்த சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்வதற்கு எனது
ஒத்துழைப்பை வழங்குமாறு மருதங்கேணி சம்பவத்தை தொடர்ந்து ஜூன் 5ஆம் திகதி மாலை
சுமார் 3.30 மணியளவில் மருதங்கேணி பொலிஸ் பொறுப்பதிகாரி என்னைத் தொடர்பு கொண்டார்
கோரினார்.
அப்போது நான் பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதற்காக கொழும்பு செல்லும் வழியில்
இருந்தேன். இதனால் ஜூன் 12 ஆம் திகதி யாழ்ப்பாணம் திரும்பி அதனை செய்வதாக கூறினேன்.
இதன்படி ஜூன் 12 ஆம் திகதி மீண்டும் யாழ்ப்பாணம் வந்து வாக்குமூலம் வழங்குவதாக
கூறியிருந்தேன். இந்த உறுதிமொழிகள் இருந்த போதிலும் மருதங்கேணி பொலிஸார்
கொள்ளுப்பிட்டி பொலிஸாரின் ஊடாக ஜூன் 6 ஆம் திகதி மதியம் 1 மணியளவில் என்னிடம்
எழுத்து பூர்வ அறிவித்தலை அனுப்பினர்.
ஜூன் 8 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் என்னை ஆஜராக
வேண்டும் என்றனர். குறித்த தகவல் சிங்களத்தில் இருந்ததால் அதனை ஏற்கவில்லை. பின்னர்
ஜூன் 6 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் கொள்ளுப்பிட்டி பொலிஸார் எனது கொழும்பு
வீட்டுக்கு வந்தனர். குறித்த அறிவித்தலை தமிழ் மற்றும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் வழங்கினர்.
இவ்வாறான நிலைமையில் ஜூன் 7 ஆம் திகதி காலை என்னை கைது செய்ய வந்தனர்.
பிடியாணை எதுவும் இல்லை. இவ்வாறான நிலைமையில் கைது செய்வது எனது பாராளுமன்ற
சிறப்புரிமையை மீறுவதாகும். பாராளுமன்ற கூட்டத்தில் கலந்துகொள்ள அனுமதிக்காது
என்னைக் கைது செய்தனர். இது தொடர்பில் சபாநாயகரிடம் பேசி தொலைபேசியை
வைத்தவுடன், என்னைக் கைது செய்தனர்.
அப்போது அவர்களிடம் பிடியாணை உள்ளதா என்று கேட்டேன். ஏதும் இல்லை என்றே கூறினர்.
மேலும் என்னை கைது செய்ததற்கான காரணம் உள்ளிட்டவை அடங்கிய ரசீ தை எனது
குடும்பத்தினரிடம் வழங்குமாறு கேட்டேன். அதனையும் வழங்கவில்லை. ரசீது பின்னர்
கொள்ளுப்பட்டி பொலிஸில் தனிப்பட்ட முறையில் என்னிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிடியாணை இன்றியே பிடித்துச் சென்றனர்
பின்னர் நான் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன், அங்கு எனது
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது. பின்னர் கிளிநொச்சி நீதவான் முன்னிலையில்
ஆஜர்படுத்தப்பட்டு எனக்கு வெளிநாட்டு பயண தடை விதிக்கப்பட்டது.
இவ்வாறான நிலைமையில் பொலிஸ் பேச்சாளர் இது தொடர்பாக ஊடகங்களுக்கு பல தவறான
அறிக்கைகளை அளித்து வருகிறார். இந்த அறிக்கைகள் அனைத்தும் பொலிஸ் விசாரணையின்
உத்தியோகபூர்வ நிலைப்பாடாக வெளியிடப்பட்டுள்ளன ” என்றார்.
கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்
கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி குறித்த வாதப் பிரதிவாதங்களை அடுத்து, அரச தரப்பு
உறுப்பினர்கள் சபையில் எழுந்து நின்று கூச்சலிட்ட நிலையில், சபைக்கு வருகை தந்த சபாநாயகர்
இந்த சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் சட்ட
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்ததுடன், ஆகவே அதற்கு இடமளியுங்கள் என
அறிவுறுத்தினார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (08) இடம்பெற்ற நிதி,பொருளாதார உறுதிப்படுத்துகை
மற்றும் தேசிய கொள்கைகள் ஒதுக்கீட்டுச் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில்
உரையாற்றிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் எம்.பி. செல்வராசா கஜேந்திரன்
குற்றஞ்சாட்டினார்.
கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்
மருதங்கேணி சம்பவம், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. கைது தொடர்பான கஜேந்திரன்
எம்.பி.யின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ்,
“அந்த சம்பவம் தொடர்பில் நான் முதல் நாளே அறிக்கை கோரினேன். அது தொடர்பில்
நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வீடியோக்களையும் பார்த்தேன். அதில் கஜேந்திரகுமார்
எம்.பி ஒரு கௌரவ உறுப்பினராக நடந்து கொள்ள வில்லை. பொலிஸ் அதிகாரிகளை ”வாயை
மூடு”என தரக்குறைவாக பேசியதை அவதானித்தேன்” என்றார்.
இதன்போது ஒழுங்குப் பிரச்சினை எழுப்பிய கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி. “சிவில்
உடையில் வந்தவர்கள் பொலிஸ் என குறிப்பிட்டார்கள். நான் அதற்கான அடையாளத்தை
உறுதிப்படுத்துமாறு கேட்டேன். ஆனால் அவர்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தவில்லை.
பொலிஸ் என்று குறிப்பிட்டுக் கொண்டு சிவிலுடையில் படுகொலையில் ஈடுபட்ட சம்பவங்கள்
நாட்டில் பல உள்ளன” என்றார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், “அந்த காணியின் வேலிக்கு பின்னால்
இருந்த பொலிஸ் அதிகாரியிடம் நீங்கள் முறையற்ற வகையில் கதைத்துள்ளீர்கள் என்பதை
ஏற்றுக்கொள்கின்றீர்களா?” எனக்கேட்டார். “இதற்கு பதிலளித்த கஜேந்திரகுமார் எம்.பி
சீருடையில் ஆயுதமேந்திய நிலையில் இருந்த பொலிஸ் அதிகாரியுடன் நான் அப்படிப்
பேசவில்லை” என்றார்.
தொடர்ந்து கூறிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், “பொலிஸாரை ”வாயை
மூடு” எனக்கூறும் உரிமை எவருக்கும் கிடையாது. பாராளுமன்ற உறுப்பினர் அல்ல எவர்
கூறினாலும் நான் சகித்துக்கொண்டிருக்க மாட்டேன். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி.
விடயத்தில் பொலிஸாரின் பக்கம் எந்தத் தவறும் கிடையாது” என்றார்.
கஜேந்திரகுமார் விவகாரத்தால் அரச எம்.பிக்கள் கூச்சல்
எம்.ஏ.சுமந்திரன் எம்.பி., சம்பவம் இடம்பெற்ற தினத்தில் மாலை 3.30 மணிக்கு பரீட்சை
முடிவடைந்து விட்டது. சிவில் உடையில் வந்தவர்கள் தமது அடையாளத்தை உறுதிப்படுத்தாமல்
தங்களை பொலிஸ் என குறிப்பிட்டுக் கொள்வதை ஏற்றுக்கொள்ள முடியுமா ? பாராளுமன்ற
கூட்டத்தொடர் இடம்பெறும் வாரத்தில் கஜேந்திரகுமார் கொழும்புக்கு வருகை தந்துள்ளார்
ஆகவே அவரை அவசரமாக ஏன் கைது செய்ய வேண்டும்“ என பொது மக்கள் பாதுகாப்பு
அமைச்சரிடம் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர், பரீட்சை தொடர்பில் வீடியோவை
பார்த்து அறிவிக்கலாம்.இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் கடந்த 5 ஆம் திகதி முதல்
பாராளுமன்ற உறுப்பினரை கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை தொடர்பு கொண்டார்கள்.
இறுதியில் சபாநாயகருக்கு அறிவித்ததன் பின்னரே கைது செய்யப்பட்டார் இவ்விடத்தில்
அவசரப்படவில்லை” என்றார்.
இதன்போது எழுந்த கஜேந்திரகுமார் எம்.பி இந்த சம்பவத்தில் பொது மக்கள் பாதுகாப்பு
அமைச்சர் என்னை குற்றவாளியாக்கி பொலிஸாரை பாதுகாப்பது தெளிவாக விளங்குகிறது”
என்றார்.
ஒரே வாரத்தில் 2 479 பேருக்கு டெங்கு
ஒரே வாரத்தில் 2 479 பேருக்கு டெங்கு
இந்த மாதத்தின் முதல் வாரத்தில் 2,479 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக
தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளதுடன், கம்பஹா மாவட்டத்திலேயே அதிக டெங்கு
நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
ஒரே வாரத்தில் 2 479 பேருக்கு டெங்கு
அதற்கமைய, இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் அடையாளம் காணப்பட்டுள்ள
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 41, 883 ஆக உயர்வடைந்துள்ளது.
இவர்களில் 22.1 வீதமான டெங்கு நோயாளர்கள் கம்பஹா மாவட்டத்திலும் கொழும்பு
மாவட்டத்திலும் 21 வீதமான டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
நாடளாவிய ரீதியில் தற்போது 67 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக பெயரிடப்பட்டுள்ளதுடன், வருடத்தின் இதுவரையான காலப்பதிக்குள் 25 பேர்
டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.




































