Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
செலவிட்ட பணம் திரும்பிக் கிடைக்காது
செலவிட்ட பணம் திரும்பிக் கிடைக்காது
உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக கோரப்பட்டிருந்த வேட்புமனுக்களை நீக்குவதற்கான பிரேரணை ஒன்றை சட்ட ரீதியில் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க அரசாங்கத்துக்கு முடியுமானாலும் தேர்தலுக்காக இதுவரை
செலவிட்ட மக்களின் பணத்தை மீள பெற்றுக்கொடுக்கவோ மக்களுக்கு ஜனநாயகத்தை பாதுகாத்துக்கொடுக்கவோ அரசாங்கத்துக்கு முடியாமல்
இருக்கிறது என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாரச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்ற வேட்புமனுக்களை நிராகரிப்பதற்கு அரசாங்கம் எடுத்திருக்கும் தீர்மானம் தொடர்பாக குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை
மருத்துவத்தில் இலங்கை இராணுவம் சாதனை
உலகின் மிகப்பெரிய மற்றும் சிறுநீரகக் கல்லை பாரிய சத்திரசிகிச்சை மூலம் அகற்றும் நடவடிக்கையை வெற்றிகரமாக மேற்கொண்டு கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்துள்ளதாக இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது.
2023 ஜூன் முதலாம் திகதியன்று கொழும்பு இராணுவ மருத்துவமனையில் அந்த சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
சிறுநீரக மருத்துவர், லெப்டினன்ட் கேணல் கே. சுதர்ஷன் தலைமையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது
நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை
நிலச்சரிவு காரணமாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் சில பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, கேகாலை மாவட்டத்தில் தெஹியோவிட்ட மற்றும் தெரணியகல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு சிவப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது தவிர கேகாலை மாவட்டத்தில் யட்டியந்தோட்டை பிரதேச செயலாளர் பிரிவுக்கும் எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
மேலும், இரத்தினபுரி மாவட்டத்தின் அலபத, நிவித்திகல, கல்வான, அஹெலியகொட மற்றும் இரத்தினபுரி ஆகிய பிரதேசங்களுக்கு அம்பர் நிறத்துடன் கூடிய மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், கொழும்பு மாவட்டத்தில் சீதாவக்க பிரதேச செயலகம், கிரியெல்ல, அயகம, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி மாவட்டத்தில் பெல்மதுல்ல ஆகிய இடங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாகவும் இதற்கு நெளுக்குளம் பொலசம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று கலந்துரையாடப்பட்டதுடன் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன்,
குறித்த பகுதியில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே அவரை இடமாற்றி ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
அதற்கு பதில் அளித்த மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாடுகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றையதினம் (12.06) கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றில் ஆயர்படுத்தியுள்ளோம்.
அத்துடன், இச்சம்பங்கள் தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால், அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்தார்.
ஈரான் ஒயிலை வாங்கும் ஜெரம்னா நேட்டோவுக்குள் குழப்பம்
ஈரான் ஒயிலை வாங்கும் ஜெரம்னா நேட்டோவுக்குள் குழப்பம்
ஈரான் நாட்டிடம் இருந்து எரிபொருள் மற்றும் ஒயிலை,
கொள்வனவு செய்திட ஜெர்மன் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளது .
நேட்டோ நாடுகளின் முக்கிய பங்காளியாக விளங்கும் ,
ஜெராமன் ,அமெரிக்கா கூட்டு நாடுக்ளின் தடைகளின் பின்னால் ,
ஈரானிடம் இருந்து இவற்றை கொள்வனவு செய்ய உள்ள செயல்,
நேட்டோ நாடுகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் ஒயிலை வாங்கும் ஜெரம்னா நேட்டோவுக்குள் குழப்பம்
அமெரிக்கா,இஸ்ரேலின் கண்மூடித்தனமான பொருளாதார தடை ,
அறிவிப்புகளினால்,தமது நாட்டின் பொருளாதரம் ,மக்கள்
கொந்தளிப்பை தடுக்க வேண்டும் என்றால் ,மலிந்த விலையில் ,
எரிபொருளை பெற்று கொள்ள வேண்டிய தேவை இவர்களுக்கு உள்ளது .
ஈராக்,சிரியாவில் இருந்து அமெரிக்கா எரிபொருளை கொள்ளையடித்து,
செல்கிறது என ,இரு நாடுகளும் கூறி வரும் நிலையில் ,
ஜெர்மன் இந்த டீலில் களம் குதித்துள்ளது குறிப்பிட தக்கது .
முன்னாள் இராணுவ வீரர் கைது
முன்னாள் இராணுவ வீரர் கைது
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் தெய்யந்தர பிரதேசத்தில் வைத்து இராணுவ விசேட அதிரடிப்படையின் முன்னாள் வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.
மொரட்டுவ விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படியில் சந்தேகத்தின் பேரில் 44 வயதான முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
மாத்தறை – தெமட்டபிட்டிய, திக்வெல்ல பகுதியில் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதுவரை யாரும் கைது செய்யப்படாத நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
பிரபாகரனை புகழ்ந்த தமிழ் நடிகை
பிரபாகரனை புகழ்ந்த தமிழ் நடிகை
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களை இந்திய தமிழ்
நடிகையை புகழ்ந்து பேசியுள்ளார் .
கனடாவில் இடம்பெற்ற Easy Entertaining Night -2023 நிகழ்வில் ,
கலந்து சிறப்பித்து உரையாற்றும் பொழுதே இவ்வாறு குறிப்பிட்டார் .
பிரபாகரன் விட்ட இடத்தில இருந்து விடுதலை பயணத்தை ,
தமிழர்கள் தொட்டு நகர்த்த வேண்டும் என்கின்ற விடயத்தை அங்கே முன்வைத்தார் .
பிரபாகரனை புகழ்ந்த தமிழ் நடிகை
நாம் தமிழர் கட்சியில் இணைந்த பின்னர் ,ஈழ தமிழர்கள் மத்தியில் ,
நம்பிக்க மிகுந்த ஒருவராக கஸ்தூரி விளங்கி வருகிறார் .
தமிழ் நடிகைகள் அரசியலுக்காக மாற்றி பேசும் இவ்வேளையில் ,
நாம் தமிழர் கட்சியின் வருகையின் பின்னர் ,அதில் சற்று மாற்றங்கள்,
இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது .
இந்த நிகழ்வில் செந்தமிழன் சீமான் அவர்களும்,
காணொளி வாயிலாக உரை நிகழ்த்தினார் .
வெள்ளவத்தையில் வெடிகுண்டு மீட்பு
வெள்ளவத்தையில் வெடிகுண்டு மீட்பு
இலங்கை தலைநகர் கொழும்பின் அருகே உள்ள வெள்ளவத்தை ,
பகுதியில் வெடிகுண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து ,
மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின் பொழுது ,
வெளிநாட்டு தயரிப்பிலான கைக்குண்டு ஒன்று கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இந்த குண்டு எவ்வாறு அங்கு வந்தது என்பது தொடர்பில் ,
குற்ற தடுப்பு பிரிவினர் ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ள நிலையில் ,மாதம் தோறும் பலர்
கொலை செய்யப்பட்டு வருகின்றமை .குறிப்பிட தக்கது
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்தனர்.
குறித்த பகுதியில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் திருடப்படுகின்றமை அதிகரித்த வண்ணமே காணப்பட்டதுடன், கால்நடைகளை களவாடுபவர்கள் பொதுமக்களினால் கையும் களவுமாக பிடிபட்டு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும் கையளித்துள்ளனர். எனினும் அப்பகுதியில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயிருந்தது.

வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
இந்நிலையில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் சமயபுரம் விநாயகர் வித்தியாலய வீதியில் மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களை பொதுமக்கள், பிடித்து நையப்புடைத்து வாகனம் ஒன்றில் கட்டி வைத்தமையுடன் அவர்களை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் வழங்குவதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததுடன், மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களையும் வாகனத்தில் ஏற்றி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைத்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள்,
எமது கிராமத்தில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளமையுடன் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு கூட முடியவில்லை. பல தடவைகள் கால்நடைகளை களவாடுபவர்களை பிடித்துக்கொடுத்தும் நெளுக்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பதினால் நாங்கள் தற்போது திருடர்களை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்துள்ளோம் என தெரிவித்தனர்.
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
பிரான்ஸ் பிரித்தானியாவுக்கு பறக்கும் ரணில் விக்கிரமசிங்க
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா பிரிட்டன் பிரித்தானியாவுக்கு
அரசமுறை உத்தியோக பூர்வ பயணத்தை மேற்கொள்கிறார் .
அவரது இந்த பயணத்தில் ,நாட்டுக்கு வழங்க படும் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் பேச பட உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
பொருளாதாரத்தில் வீழ்ச்சி நிலையில் காணப்படும்
,இலங்கை ,உலக நாடுகளிடம் கடனை வாங்கியுள்ளது ,
அந்த கடனை மீள் செலுத்த முடியா நிலையில் சிக்கி தவித்து வருகிறது .
இதனால் ,இலங்கை வரும் நான்கு வருடங்களில் சோமாலியாவாக,
மாற்றம் பெறும் நிலை காணப்படுகிறது .
திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்
திருமலையில் இரு குழுக்கள் மோதல் 9 பேர் காயம்
திருகோணமலை நிலாவெளி ஏழாம் கட்டை பகுதியில்,
இரு குழுக்களுக்கு இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது .
இந்த குழு மோதல் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் ,
மேலதிக போலீஸ் பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது .
மதுபோதையில் காணப்பட்ட நிலையில் ,
இரு குழுக்கள் மோதி கொண்டதாக தெரிவிக்க படுகிது .
காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில்
அனுமதிக்க பட்டுள்ளனர் .
இலங்கையில் இவ்வாறான குழு மோதல் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது
கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது
ஏறாவூ பொலிஸ் பிரிவு புன்னக்குடா கடலில் நேற்று (11) காலை 09.45க்கு கரையொதுங்கிய சடலம், சவுக்கடி கடலில் மீன்பிடியில் ஈடுபடும் தளவாயை பகுதியைச் சேர்ந்த தங்கராசா விஜயன் (வயது 45) என மீனவர்களால் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வேண்டுகோளை ஏற்று, சம்பவ இடத்துக்குச் சென்ற பிரதேச திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.எம். நஸீர், சடலத்தை பார்வையிட்டு, உடற்கூற்று பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு சடலத்தை அனுப்பிவைத்தார்.
பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.
கரையொதுங்கிய சடலம் அடையாளம் காணப்பட்டது
நேற்று முன்தினம் (10) காலை 06 மணியளவில் சவுக்கடி கடலுக்கு மீன்பிடித் தொழிலுக்காக சென்ற இவர் வீடு திரும்பாத நிலையில் உறவினர்கள் தேடிய போது, சவுக்கடி கடலில் தொழிலுக்கு சென்று அன்று மதியம் 12 மணிக்கு
கரைக்கு வந்துவிட்டதாவும், அதன் பின்னர் பிற்பகல் 01 மணியளவில் புன்னக்குடாவில் இவரை கண்டதாகவும் பலரும் தெரிவித்திருந்த நிலையிலேயே அவர் சடலமாக மீட்கப்பட்டிருக்கிறார்.
மது போதைக்கு அடிமையான இவர், இரு திருமணம் முடித்திருந்தும் இரு மனைவிகளையும் விட்டுப் பிரிந்து தாய் வீட்டிலேயே பல வருடமாக வசித்து வந்திருக்கிறார்
இராணுவம் அதிரடி நடவடிக்கை; 35 பேர் சிக்கினர்
இராணுவம் அதிரடி நடவடிக்கை; 35 பேர் சிக்கினர்
பொரளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 35 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினர் இணைந்து நேற்று (11) இந்த சோதனை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது, 05 கிராம் 350 மில்லிகிராம் ஹெரோயினுடன் இரண்டு சந்தேகநபர்களும், 03 கிராம் 15 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன்
நான்கு சந்தேகநபர்களும், 03 கிராம் 35 மில்லிகிராம் கஞ்சாவுடன் 5 சந்தேகநபர்களும், 91 கஞ்சா கலந்த மதனமோதகங்களுடன் ஒரு சந்தேகநபரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவம் அதிரடி நடவடிக்கை; 35 பேர் சிக்கினர்
மேலும், 02 வாள்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்கள், திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட இருவர் மற்றும் 19 சந்தேக நபர்கள் சந்தேகத்தின் பேரில் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, ஹெரோயினுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 26,75,440 ரூபாவும், ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மூலம் சம்பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 2,15,000 ரூபாவும் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபர்கள் இன்று (12) புதுக்கடை மற்றும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொரளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ரஷ்யா தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்தார்
ரஷ்யா தூதுவர் கிழக்கு ஆளுநரை சந்தித்தார்
இலங்கைக்கான ரஷ்யா தூதுவர் Levan S. Dzhagaryan (லெவன் எஸ். ட்ஜகார்யன் (11) ம் திகதி திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்திற்கு வருகை தந்து, கிழக்கு மாகாணத்தின் சமீபத்திய அபிவிருத்திகள் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுடன் கலந்துரையாடினார்.
இதன்போது கிழக்கு மாகாணத்திற்கு வருகைதரும் ரஷ்ய சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரித்துத் தருவதாக ரஷ்யா தூதுவர், கிழக்கு மாகாண ஆளுநருக்கு உறுதியளித்தார்.
இலங்கை வீரர் ஜெனீவாவில் மாயம்
இலங்கை வீரர் ஜெனீவாவில் மாயம்
ஜெனீவாவில் நடைபெற்ற மெய்வல்லுனர் போட்டிகளில் கலந்து கொள்ளச் சென்ற இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர் ஒருவர் சுவிட்சர்லாந்து நாட்டில் காணாமல் போயுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காணாமல் போனதாக கூறப்படும் தடகள வீரர் கிரஷன் தனஞ்சய, தடகளம் தாண்டுதல் (ஆண்கள்) மற்றும் நீளம் தாண்டுதல் போட்டியில் தேசிய சாம்பியனான என தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கருத்து தெரிவித்த இலங்கை மெய்வல்லுனர் சங்க செயலாளர் சமன் குமார , காணாமல் போன வீரர் தனிப்பட்ட அமைப்பிதழ் மூலம் சென்றதால் நாம் பொறுப்பேற்க மாட்டோம் என தெரிவித்துள்ளார்.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி
துல்ஹிரிய பிரதேசத்தில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் ரம்புக்கணை பிரதேசத்தை சேர்ந்த தந்தை (40), தாய் (39), மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.
அம்பேபுஸ்ஸவிலிருந்து அலவ்வ நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று துல்ஹிரிய பிரதேசத்தில் எதிர்திசையில் பயணித்த டிப்பர் ரக வாகனத்துடன் மோதி இவ்வாறு விபத்துக்குள்ளானதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
விபத்து தொடர்பில் டிப்பர் வாகனத்தின் சாரதியை வரகாபொல பொலிஸார் கைது செய்துள்ளதுடன், உயிரிழந்த மூவரின் சடலங்களும் வரகாபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் போலி பாலியல் சாமியார் கைது
பிரிட்டனில் போலி பாலியல் சாமியார் கைது
பிரிட்டன் பகுதியில் ஆலயம் ஒன்றை நிறுவி Barnet பகுதியில்,
சாமியாராக வலம் வந்த போலி சாமியார் ,
காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
மக்களுக்கு உதவி புரிவதாக கூறி பல லட்சம் பணம் ,
மற்றும் ,பெண்களுடன் பாலியல் இச்சையில்
செயல் பட்டு வந்துள்ளார்
இவர் மீது தொடராக முன் வைக்க பட்ட பல குற்ற சாட்டுக்களின் ,
அடிப்படையில் இவர் போலீசாரால் கைது செய்ய பட்டுள்ளார் .
இவரது பாலியல் காணொளிகள் பல சமூக வலைத்தளங்களில்,
வைரலாகிய நிலையில் ,இந்த கைது இடம்பெற்றுள்ளது .
நீதிமன்றில் பாரப்படுத்த பட்டதால்,
இவருக்கு பல்லாண்டு சிறை தண்டனை கிடைக்க பெறும் என்பதாக நம்ப படுகிறது .
பிரிட்டனில் போலி சாமியார் கைது
பாதிக்க பட்ட பெண்கள் உள்ளிட்ட மக்கள் சாட்சிகளாக மாறிய நிலையில் ,
வழக்கு நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக தெரிவிக்க படுகிறது .
சாமிகளை நம்பி மோசம் போகும், நம்ம தமிழர்கள் என்று விழித்து கொள்ள போகிறர்கள் ,
பிரிட்டனில் ஜோதிடம் ,கூறவும் ,மாந்திரிகம் செய்திடவும் ,
தடை உள்ளது ,மதம் சார்ந்து மக்களை ஏமாற்றும் இவ்வாறானவர்கள்,
கைது செய்ய பட்டு தண்டிக்க பட வேண்டும் என ஒரு சாரர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் .
கைதை அடுத்து மேலும் பல முக்கிய திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர் பார்க்க படுகிறது
நம்ம சாமியார் இப்டி பன்னிட்டாரு என்ற கடுப்பில் பக்த கோடிகள் உறைந்துள்ளனர் .
இவரால் நீங்க பாதிக்க பட்டவரா தெரிய படுங்கள் ,
வவுனியாவில் காரில் பயணித்த இருவர் கைது: விசேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் நடவடிக்கை
வவுனியாவில் காரில் பயணித்த இருவர் கைது: விசேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் நடவடிக்கை
வவுனியா நகரில் நேற்று (10.06) முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனையின் போது கஜமுத்து ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாங்குளம் விசேட அதிரடி படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே இந்த திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் போது கார் ஒன்று சோதனைக்கு உட்படுத்தபட்ட போது அதில் விற்பனைச் செய்வதற்கு தயாரான நிலையில் வைக்கப்பட்டிருந்த கஜமுத்து மீட்க்கப்பட்டது.
வவுனியாவில் காரில் பயணித்த இருவர் கைது: விசேட அதிரடிப் படை மற்றும் பொலிசார் நடவடிக்கை
இதனையடுத்து காரில் இருந்த 26 மற்றும் 23 வயதைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் தெஹியந்தர, ஹக்மன பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் ஆவார்.
மேலதிக விசாரணைகளுக்காக இவ்விருவரும் வவுனியா வனஜீவராசிகள் பாதுகாப்பு அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர் என்றும் பொலிசார் மேலும் தெரிவித்தனர்.








































