உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை
Posted in இலங்கை செய்திகள்

உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை

உயர் பாதுகாப்பு வலயத்தை வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை


உயர் பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்பட்டுள்ள தலதா மாளிகை வளாகத்தினை ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுத்த அமெரிக்க பிரஜை நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கண்டி சுற்றுலா பொலிஸ் பிரிவினர் கைது செய்ததுடன் குறித்தகேமராவில் பதிவான காட்சிகளை நீக்க பொலிஸ் தொழில்நுட்ப பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 25 வயதான அமெரிக்க பிரஜை என பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் கண்டி சுற்றுலா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்