ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவேன் மைத்திரிபால சிறிசேன
Posted in இலங்கை செய்திகள்

15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால

15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால

ஈஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக 100 மில்லியன் ரூபாய் நட்டஈடு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்த நிலையில், இதுவரை 15 மில்லியன் ரூபாயை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கியுள்ளார் என உயர் நீதிமன்றில் பிரேரணை ஊடாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எஞ்சிய தொகையான 85 மில்லியன் ரூபாயை 2024 ஜூன் 30 ஆம் திகதி முதல் வருடத்துக்கு 8.5 மில்லியன் ரூபாய் வீதம் 10 தவணைகளாக செலுத்தப்படும் என அவர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.

15 மில்லியன் ரூபாய் நட்டஈடு செலுத்தியுள்ள மைத்திரிபால

அதனடிப்படையில், எஞ்சியுள்ள இழப்பீட்டை 2024 ஆம் ஆண்டு ஜூன் 30 முதல் 2033 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 வரை வருடாந்தம் வழங்குவதற்கு அனுமதிக்குமாறும் முன்னாள் ஜனாதிபதி தனது பிரேரணையில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, மைத்திரிபால சிறிசேன தனது சட்டத்தரணிகள் ஊடாக உயர் நீதிமன்றில் சமர்ப்பித்த பிரேரணையில், முன்னாள் ஜனாதிபதி என்ற ரீதியில் மாதாந்தம் 97,500 ரூபாய் ஓய்வூதியம் பெறுவதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் 54,285 ரூபாயையும் பெறுவதாக குறிப்பிட்டுள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

இலங்கைத் தமிழர்கள் தீண்ட தகாதவர்களா என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கேள்வி

இலங்கைத் தமிழர்கள் தீண்ட தகாதவர்களா என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கேள்வி

இந்தியாவிடம் 13 திருத்தங்களைக் கேட்கும் தமிழர்கள் ஏன் இலங்கைத் தமிழர்களுக்கு இந்தியாவின் நடைமுறையில் உள்ள அரசியலமைப்பைக் கேட்கவில்லை? நாம் தீண்டத்தகாத தமிழர்களா? என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் சங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளினால் 2332வது நாளாக சுழற்சி முறை போராட்டத்தில் ஈடுபட்டுவரும் கொட்டகையில் இன்று (11.07) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,

காணாமல் ஆக்கப்பட்ட தமிழ் குழந்தைகளை கண்டுபிடிக்கவும், எதிர்காலத்தில் தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுக்கவும், தமிழ் இறையாண்மைக்காகவும் அமெரிக்க ஐரோப்பிய ஒன்றிய நாடுகளை அழைக்கும் எமது தொடர்போராட்டத்தின் 2332வது நாள்.

தமிழ் தாய்மார்களாகிய எமக்கு கூடிய விரைவில் அரசியல் தீர்வு வேண்டும். தமிழர்களின் இறையாண்மை கடந்த காலத்தில் வலிநது காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களை கண்டறிய உதவும், தற்போதைய தமிழர்கள் காணாமல் ஆக்கப்படுவதை தடுத்து நிறுத்தும். எதிர்காலத்தில் அனைத்து காணாமல் ஆக்கப்படுவதை கண்டிப்பாக நிறுத்தும்.

இலங்கைத் தமிழர்கள் தீண்ட தகாதவர்களா என தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கேள்வி

13வது திருத்தச் சட்டத்தை முன்வைக்கும் இந்த அரசியல் வாதிகள், இலங்கையில் இந்திய பாணி அரசியலமைப்பை அமுல்படுத்த ஒருபோதும் குரல் கொடுக்காதது ஆச்சரியமாக உள்ளது. இதற்குக் காரணம், ஒருவேளை அவர்கள் இந்திய அரசியல்வாதிகளை விடத் தாழ்ந்தவர்கள் என்று நினைக்கலாம் அல்லது தமிழர்களாகிய நாம் தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கலாம்.

இந்த 13வது திருத்தத்தில் மோசமான எண் 13 உள்ளது. சந்திரனுக்கு அனுப்பிய அப்பல்லோ 13க்கு என்ன நடந்தது என்பது எங்களுக்குத் தெரியும். 13ம் தேதி வெள்ளிக்கிழமையென்றால் நாங்களும் பயப்படுகிறோம். அமெரிக்காவில், பல இடங்களில், அவர்களின் உயரமான கட்டிடங்களில் 13 வது தளம் இல்லை.

கடந்த 36 ஆண்டுகளாக 13வது திருத்தம் தமிழர்களுக்கு என்ன செய்தது என்பதை நாம் அறிவோம். 1987ல் 13வது திருத்தம் வந்ததில் இருந்து பல வீரத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டனர். 1,46,000 அப்பாவித் தமிழர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். 50,000 தமிழ் குழந்தைகள் அனாதைகளானார்கள். 90,000 தமிழர்கள் விதவைகள் ஆனார்கள். 35,000க்கும் மேற்பட்ட தமிழர்கள் காணாமல் ஆக்கப்பட்டனர். பல தமிழ் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டனர். கற்பழிக்கப்பட்டனர். பின்னர் கொலை செய்யப்பட்டனர்.

இந்த 13வது திருத்தம் பற்றிய பேச்சு இன்னும் தமிழர்களுக்கு சேதம் விளைவித்து வருகிறது. தமிழர்களின் கோவில்கள் சிங்கள பௌத்த சின்னங்களாக மாற்றப்பட்டுள்ளன.

13வது திருத்தம் கேரள அரசியல்வாதிகளான நாராயணன் மற்றும் சிவசங்கர் மேனன் ஆகியோரால் பரிந்துரைக்கப்பட்டது. சேர ஆட்சியாளர்களை சோழர்கள் தோற்கடித்ததால் கேரள அரசியல்வாதிகள் தமிழகத்தில் தமிழர்கள் மீது இன்னும் கோபத்தில் உள்ளனர். அதே போல இந்த கேரள அரசியல்வாதிக்கு தமிழர் தாயகத்தில் உள்ள தமிழர்கள் மீது பைத்தியம். ஏனென்றால் நாமும் தமிழர்கள் என்பதால். 13 தமிழர்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்த உருவாக்கப்பட்டது. எனவே, 13வது திருத்தம் போதும் 13வது திருத்தம் பற்றிய பேச்சும் போதும்.

உலகில் பெரும்பான்மை அடக்கு முறையாளர்களின் கீழ் நில அதிகாரம் மற்றும் பொலிஸ் அதிகாரம் கொண்ட நாடு இல்லை. இந்த 13வது திருத்தம் ஒரு தனித்துவமான கருத்தாகும். இது தமிழர்களை முட்டாளாக்கவே உருவாக்கப்பட்டது.

13வது திருத்தத்தை அமுல்படுத்த முடியாது ஏனெனில் ஒற்றையாட்சியில் சிங்கள பெரும்பான்மையினரால் மட்டுமே அமுல்படுத்தப்பட வேண்டும். இந்த ஒற்றையாட்சி நாட்டில் சுதந்திரம் பெற்று கடந்த 75 வருடங்களாக தமிழர்களுக்கு என்ன நடந்தது என்பதை நாம் அறிவோம்.

வெறுமனே, ஒற்றையாட்சி அரசின் கீழ் எந்த அரசியல் தீர்வும் இயங்காது. குறிப்பாக சிங்களவர்கள் பெரும்பான்மையாக இருக்கும் போது எந்த அரசியல்வாதியும் இதை இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்றால், அவர்கள் இனி மேலும் புரிந்து கொள்ள மாட்டார்கள்.

சிங்களவர்கள் இந்த முழுத் தீவிழும் பௌத்த மயமாக்கலையும் சிங்கள மயமாக்கலையும் விரும்புகிறார்கள் என்பதை தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டும். தொடர்ச்சியான ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறை முழு உலகிற்கும் சிங்கள சிந்தனையை காட்டுகிறது.

எனவே, தமிழர்களின் அரசியல், நிலம், பொருளாதாரம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் தமிழ் இறையாண்மையே சிறந்த தீர்வாகும். அதனால் தான் தமிழர்களின் தலைவிதியைத் தீர்மானிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்களாகிய நாங்கள் கோருகிறோம். எஸ்டோனியா, குரோஷியா, ஸ்லோவேனியா, எரித்திரியா, மாசிடோனியா, கிழக்கு திமோர், மாண்டினீக்ரோ, கொசாவா, தெற்கு சூடான் மற்றும் பல இடங்களில் சுதந்திரம் பெற பொதுவாக்கெடுப்புகள் பயன்படுத்தப்பட்டன.

இந்த வாக்கெடுப்பு ஒடுக்குமுறைக்கு உள்ளான மக்கள் தங்கள் தலைவிதியை தீர்மானிக்கும் ஜனநாயக கருவியாகும். 13வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தக் கோரும் இந்த தமிழ் அரசியல் வாதிகள் சர்வஜன வாக்கெடுப்பு கேட்பதற்கு வெட்கப்பட வேண்டிய அவசியமில்லை.

13வது திருத்தம் வேண்டும் என்று மோடிக்கு கடிதத்தில் கையெழுத்திட்ட தமிழர்கள், தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அமுல்படுத்த மோடியிடம் ஏன் கேட்கவில்லை. அரசியல் அதிகாரம் இல்லாத ஒன்றை ஏன் கேட்கிறார்கள்? 13ஐ இந்திய அரசியலமைப்புச் சட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்த்தால் அதில் ஒன்றுமில்லை.

இந்த தமிழர்கள் தங்களை இந்திய அரசியல்வாதிகளுக்கு நிகராக பார்க்க விரும்பாததால், தங்களை தீண்டத்தகாதவர்கள் என்று நினைக்கும் வகையில் 13வது சட்டத் திருத்தத்திற்கு அழைப்பு விடுப்பது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

தற்போதைய இந்திய அரசியலமைப்புச் சட்டம் கூட சரியான தீர்வு அல்ல. இது ஒரு பாராளுமன்ற அரசாங்க வடிவமாகும். இது ஒற்றையாட்சி அம்சங்களுடன் கூட்டாட்சி கட்டமைப்பாகும். இந்தியாவில் 25க்கும் மேற்பட்ட அதிகாரப்பூர்வ மொழிகள் மற்றும் 28 மாநிலங்கள் மற்றும் 9 யூனியன் பிரதேசங்கள் இருப்பதால் இது செயல்படுகிறது. இந்தி பேசும் மக்கள் பெரும்பான்மையினர் அல்ல, 43மூ மட்டுமே. இந்தியாவில் எந்த இனத்திற்கும், மொழிக்கும் பெரும்பான்மை இல்லை. இந்திய ஒற்றையாட்சி நிலைத்திருக்க அதுவே காரணம். தமிழ் அரசியல்வாதிகள் பொதுவாக்கெடுப்பு நடத்த கோரா வேண்டும் எனத் தெரிவித்தார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

தம்மை இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கேவுக்கு ராஜீவ் கொலை வழக்கில் இருந்து விடுதலையான சாந்தன் கடிதம் எழுதியுள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 7 பேரில் இலங்கையை சேர்ந்த சுதந்திரராஜா என்ற சாந்தனும் ஒருவர். இவர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

ஆனால் இவர், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ் மற்றும் ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்தநிலையில் சாந்தன் திருச்சி சிறப்பு முகாமில் இருந்தபடி கடந்த சில நாட்களுக்கு முன்பு இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில், இலங்கை குடிமகனான நான், முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டேன். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டேன்.

தற்போது நான் திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளேன். கடந்த 32 வருடங்களாக எனது தாயாரை பார்க்கவில்லை.

அவருடைய இந்த முதுமையான காலத்தில் அவருடன் வாழ விரும்புகிறேன். ஒரு மகனாக அவருக்கு உதவிகரமாக இருக்க ஆசைப்படுகிறேன்.

ஜனாதிபதி ரணிலுக்கு ராஜீவ் கொலையாளி கடிதம்

தயவுசெய்து நான் இலங்கைக்கு வர அனுமதி அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறப்பு முகாமில் அடைக்கப்பட்ட பிறகு, கடவுச்சீட்டு, அடையாள அட்டையை புதுப்பிப்பது சம்பந்தமாகவும், இலங்கைக்கு திரும்புவது சம்பந்தமாகவும் ஆலோசனை

பெற வேண்டி இலங்கை துணை தூதருக்கும், இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சருக்கும் ஏற்கனவே மனு அனுப்பினேன்.

இலங்கையில் என் மீது வழக்கு இல்லை. தயவு செய்து எனது சிரமத்தை கருத்தில் கொண்டு இலங்கைக்கு நான் வர உதவ வேண்டும் இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு
Posted in இலங்கை செய்திகள்

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பு

வட மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணிகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.

தமிழ் நீதிபதிகள் தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர அண்மையில் சபையில் தெரிவித்த கருத்தை கண்டித்து இந்த பணிப்புறக்கணிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அதேநேரம் இன்று இடம்பெறும் கண்டன போராட்டத்தில் வட மாகாணத்தின் அனைத்து சட்டத்தரணிகள் சங்க உறுப்பினர்களும் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது

இராணுவ முகாமின் முன் கார் விபத்து | இலங்கை செய்திகள்
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்

சாரதிகளின் கவனயீனமே விபத்துகளுக்கு காரணம்

இவ்வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் ஜூலை 09 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 1126 வாகன விபத்துகள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்துகளில் 1190 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்துள்ளார்.

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

தமிழ் நாட்டின் நாகப்பட்டின துறைமுகத்தில் உள்ள விடுதலைப் புலிகளின் கப்பல்களைப் பயன்படுத்தி இலங்கை இந்திய படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தென்னிந்தியாவுக்கும் (பாண்டிச்சேரி) காங்கேசன்துறைக்கும் எந்த நேரத்திலும் படகுச் சேவையைத் தொடங்க இலங்கை தயாராக இருப்பதாகவும் ஆனால் இந்தியா அனுமதி வழங்காததால்தான் இந்தச் சேவையைத் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2011 ஆம் ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி ஒரு கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

“இதுவரை எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால் எங்களுக்கு படகு சேவை வேண்டும். காங்கேசன்துறை துறைமுகத்தில் பயணிகள் முனையம் மற்றும் பிற வசதிகளை நாங்கள் அமைத்துள்ளோம்.

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

இந்தியாவுடன் எங்களுக்கு கிடைத்த சமீபத்திய தகவல்களின்படி, அவர்கள் படகு சேவையை மாத்திரமே ஆரம்பிக்க முடியும் என கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினத்திலிருந்து மாத்திரம் இந்த சேவையை தொடங்க முடியும் எனவும் இந்தியா குறிப்பிட்டுள்ளது” என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்தியாவுடனான பாதுகாப்பு மதிப்பீட்டின்படி இலங்கைக்கு எந்த பிரச்சினையும் இல்லை. இந்த திட்டத்துக்கு யார் ஒப்புதல் அளித்தாலும், நாங்கள் அதை ஏற்றுக்கொள்வோம் என்றார்.

படகு நடத்துநர்கள் இந்திய அரசாங்கத்தை தொடர்புகொண்டு, தங்களின் நற்சான்றிதழ்கள் மற்றும் அவர்களின் உண்மையான தன்மையை நிரூபித்து, நாகப்பட்டினத்திலிருந்து படகு தொடங்குவதற்கு இந்தியாவிடம் அனுமதி பெற வேண்டும்.

இந்திய அரசாங்கம் பச்சை கொடி காட்டிய தருணத்திலிருந்து, எந்தவொரு கப்பலையும் பெறுவதற்கு நாங்கள் அனுமதி வழங்குவோம் என்றார்.

படகு நடத்துனர்களை இந்தியாவுக்கு வந்து அங்கு படகு நடத்துனர்களாக அங்கீகரிக்குமாறு அமைச்சர் கேட்டுக் கொண்டார்.

இலங்கை இந்திய படகுச் சேவைக்கு புலிகளின் கப்பல்

படகு நடத்துனர்களிடம் இருந்து பதினைந்து விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகர் கூறினார்.

இந்தியாவில் சில தெரிவு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் படகு நடத்துனர்களிடமிருந்து பதினைந்து விண்ணப்பங்களைப் பெற்றதாக தெரியவருகிறது.

இந்தியாவில் சில தேர்வு நடைமுறைகள் இருக்கும். படகு நடத்துனர்களுக்கான 15 விண்ணப்பங்களையும் இந்திய அரசாங்கம் அங்கீகரித்தால் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

2023 – 2024 ஆண்டுகளில் மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நிதி பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராக ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டின் 15வது மக்கள்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2021 ஆம் ஆண்டில் நடத்த திட்டமிடப்பட்டது.

இலங்​கையில் மக்கள் தொகை மற்றும் வீட்டுக் கணக்கெடுப்பு

ஆனால் கொவிட் -19 தொற்றுநோய் காரணமாக அதை ஒத்திவைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.

இலங்கையில் முதலாவது சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 1871 ஆம் ஆண்டு நடத்தப்பட்டதுடன் இறுதியாக சனத்தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு 2012 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டது.

மக்கள் தொகை மற்றும் வீட்டுமனை கணக்கெடுப்பு பொதுவாக பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி
Posted in இலங்கை செய்திகள்

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி

இத்தாலியில் 2 இலங்கையர்கள் பலி

வென்னப்புவ பகுதியில் வசித்து வந்த ஒருவரும் அவரது மகனும் தங்களது உறவினர்களுடன் இத்தாலியின் மிலன் அருகே உள்ள ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.

இதன்போது தனது 25 வயது மகன் நீரில் மூழ்குவதை பார்த்த 60 வயது தந்தை, மகனை காப்பாற்றுவதற்காக ஆற்றில் குதித்துள்ளார். எனினும், இருவரும் நீரோட்டத்தில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து, அங்கு சென்ற அந்நாட்டு பாதுகாப்புப் படையினரால் இருவரின் சடலங்களும் மீட்கப்பட்டன.

கவிழ்ந்த பேரூந்து 8 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கவிழ்ந்த பேரூந்து 8 பேர் காயம்

கவிழ்ந்த பேரூந்து 8 பேர் காயம்

நுவரெலியாவில் இருந்து கம்பளை நோக்கி பயணித்த மினிபஸ் ஒன்று ,கட்டு பாட்டை இழந்தது மலை சுவர்களில் மோதி விபத்தில் சிக்கியது .

இதன் பொழுது அதில் பயணித்த எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள் மீட்க பட்டு ,அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

48 மணித்தியாலங்களில் இடம்பெற்ற, மூன்றாவது மக்கள் பயணிகள் பேரூந்து விபத்தாக இது பதிய பெற்றுள்ளது .

Posted in இலங்கை செய்திகள்

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

வவுனியா, கல்மடு, ஈஸ்வரபுரம் பகுதியில் தனது நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை செய்த சம்பவம் தொடர்பில் ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா, ஈச்சங்குளம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

நண்பர்கள் இருவர் நேற்றைய தினம் (09.07) மதுபானம் அருந்திய போது ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா கல்மடு ஈஸ்வரிபுரத்தைச் சேர்ந்த வேலுசாமி நிஷாந்தன் என்ற 32 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். போதையின் உச்சத்தில் பழைய தகராறு தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சந்தேக நபர் மண்வெட்டியால் உயிரிழந்த நபரை தாக்கியதாகவும், பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

தமிழர் பகுதியில் மதுபோதையில் நண்பரை மண்வெட்டியால் தாக்கி படுகொலை

தாக்குதல் நடந்த இடத்தை சோதனை செய்ததில், மதுப் போத்தல்கள், தாக்குதலுக்கு பயன்படுத்திய மண்வெட்டி மற்றும் இறந்தவரின் சில பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொலையின் பின்னர் சந்தேகநபர் அப்பகுதியிலிருந்து தலைமறைவானவர் அதிகாலை ஈச்சங்குளம் பொலிஸில் சரணடைந்துள்ளார்.

ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்
Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து தத்தளிக்கும் மக்கள்

https://www.youtube.com/watch?v=sl25RFhNVYs
மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

மன்னம்பிட்டியில் நேற்றிரவு இடம் பெற்ற பஸ் விபத்துச் சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 10 பேர் பலியாகியுள்ளதுடன் 42 பேர் காயமடைந்து பொலன்னறுவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு 8 மணியளவில் தனியார் பஸ் வண்டி மன்னம்பிட்ட கொட்டடி பாலத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் பஸ்ஸில் பயணித்த 10 பேர் ஸ்தலத்திலேயே மரணித்துள்ளதுடன் 42 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மன்னம்பிட்டி விபத்தில் சாரதி கைது தேடுதல் நடவடிக்கை ஆரம்பம்

குறித்த விபத்துச் சம்பவத்தில் சிலர் காணாமல் போயிருக்கலாமென நம்பப்படும் நிலையில், காணாமல் போனோரைத் தேடும் பணிகள் இன்று காலை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

மேலும், குறித்த பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

முன்பள்ளியில் கத்திக்குத்து; 6 பேர் உயிரிழப்பு

முன்பள்ளியில் கத்திக்குத்து; 6 பேர் உயிரிழப்பு

சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள முன்பள்ளியில் இன்று (10) காலை இடம்பெற்ற கத்திக் குத்து தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்டனர்.

அத்துடன், ஒருவர் காயமடைந்துள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

25 வயது இளைஞனே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர்.

லியான்ஜியாங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலின் லியான்ஜியாங்கைச் சேர்ந்த சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

அவரிடம் விசாரணை நடத்தி வருவதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு

மற்றுமொரு துப்பாக்கிச்சூடு

மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலிநகர் பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் புகுந்து துப்பாக்கிச்சூடு நடத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பாலிநகர் மல்லாவி பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

நீதவான் விசாரணைக்காக சடலம் சம்பவம் இடம்பெற்ற இடத்தில் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

13 இற்கு நான் எதிரானவன்
Posted in இலங்கை செய்திகள்

13 இற்கு நான் எதிரானவன்

13 இற்கு நான் எதிரானவன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் சில கருத்துகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்து எமக்கு சிறு அதிருப்திகள் காணப்படுகின்றன. அவ்வகையில் அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்துக்கு நான் எதிரானவன். இது தொடர்பில் நாம் கலந்துரையாடல்களை முன்னெடுத்துள்ளோம்.

எனினும் ஜனாதிபதி இது குறித்து இறுதி தீர்மானம் எதையும் எடுக்கவில்லை என ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்ட பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.

நான் இது பற்றி தனிப்பட்ட ரீதியில் ஜனாதிபதியிடம் வினவிய போது ”13 ஆவது திருத்தச் சட்டத்தை சமர்பிப்பதை மாத்திரமே நான் செய்யப்போகிறேன். அதனை நிறைவேற்றுவது தொடர்பிலான தீர்மானம் பாராளுமன்ற

உறுப்பினர்களின் கைகளிலேயே உள்ளது. 13 தொடர்பில் சாதகமான நிலைப்பாட்டை நான் கொண்டிருந்தாலும், நீங்கள் தான் நிறைவேற்றுபவர்கள்” என ஜனாதிபதி என்னிடம் குறிப்பிட்டிருக்கின்றார்.

13 இற்கு நான் எதிரானவன்

அதற்கமைய வடக்கு மற்றும் கிழக்கிற்கு பொலிஸ், காணி அதிகாரங்களை வழங்குவதாயின் பாராளுமன்றமே அதனை தீர்மானிக்க வேண்டும். பாராளுமன்றம் என்பது நாமே.

எனவே, இவ்விவகாரத்தில் ஜனாதிபதி மீது குற்றஞ்சுமத்துவது அவசியமற்றது. 13ஐ முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றுவது எமது கைகளிலேயே உள்ளது. அதற்கான சந்தர்ப்பம் வரும் போது பாராளுமன்றத்திலுள்ள சகல கட்சிகளுடனும் கலந்துரையாடி இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

ரணிலுக்கு எதிராக யாழில் தமிழ் மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

இந்திய விஜயத்தின் பின் சீன விஜயம்

இந்திய விஜயத்தின் பின் சீன விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, எதிர்வரும் 20 ஆம் திகதி புதுடெல்லி செல்லவுள்ளார். அவர், இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர

மோடி, வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியை, எதிர்வரும் 21 ஆம் திகதி சந்திக்கவுள்ளார். ஜனாதிபதியாக பதியேற்று சரியாக ஒரு வருடத்தின் பின்னர் இந்தியாவுக்குச் செல்வது விசேட அம்சமாகும்.

அந்த விஜயத்தின் பின்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை ஒக்டோபரில் மேற்கொள்ளவுள்ளார்.

சீனப் பயணத்தின் போது, ​​புதிய முதலீடுகளைத் தேடுவது, வர்த்தக உடன்படிக்கைகளை எட்டுவது மற்றும் தடைப்பட்ட திட்டங்களுக்கான நிதியை மீண்டும் தொடங்குவது ஆகியவை தொடர்பில் கலந்துரையாடுவது ஜனாதிபதிகளின் முக்கியப் பணியாகும்.

இந்திய விஜயத்தின் பின் சீன விஜயம்

கொழும்பு துறைமுக நிதி நகரத்திற்கான முதலீடுகளை விரைவுபடுத்துதல் மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலை-கடவத்தை-மீரிகம பகுதிக்கான நிதியை மீள ஆரம்பிப்பது குறித்து எக்ஸிம் வங்கியுடன் கலந்துரையாடல் முன்னெடுக்கப்படும்.

அதேவேளை ஹம்பாந்தோட்டை பகுதியைச் சுற்றி புதிய முதலீடுகளைத் தேடுதல் கலந்துரையாடல் பட்டியலில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.

ஹம்பாந்தோட்டையில் நான்கு பில்லியன் அமெரிக்க டொலர்கள் நிதியைப் பெறுவதற்கு எதிர்பார்க்கப்பட்ட ஒரு சுத்திகரிப்புத் திட்டத்தில் சீனா முதலீடு செய்வதும் இந்த விஜயத்தின் போது கலந்துரையாடப்பட்டு இறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

தலவாக்கலை, வட்டகொடையில் இருந்து மடக்கும்புர வரையிலும் பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ், துனுக்கே தெனிய, கிரிதியெட்டி பிரதேசத்தில் வீதியை விட்டு விலகி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

இதனால் அந்த பஸ்ஸில் பயணித்த 26 பேர் காயமடைந்துள்ளனர் என பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

தலவாக்கலை பஸ் விபத்தில் 26 பேர் காயம்

விபத்து இடம்பெற்ற போது, அந்த பஸ்ஸில் 26 க்கும் மேற்பட்டோர் பயணித்துள்ளனர் என்றும் காயமடைந்தவர்கள் கொத்மலை பி​ரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அறியமுடிகின்றது.

அத்துடன், காயமடைந்த பெண் தொழிலாளர்கள் சிலர், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வட்டகொடை தோட்டத்தில் வேலைச் செய்வதற்காக வேவஹேன பிரதே்தில் இருந்து ஒருதொகுதி தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு அவர்களுடைய

வீடுகளுக்கு மீண்டும் அழைத்து வந்துக்கொண்டிருந்த போதே இவ்வனர்த்தம் ஏற்பட்டுள்ளது என்றும் விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

75 கால இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்
Posted in இலங்கை செய்திகள்

75 கால இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

75 கால இனப்பிரச்சினைக்கு தீர்வு வேண்டும்

75 கால இனப்பிரச்சினை தீர்வு விடயத்தில் இந்திய அரசு சரியான முடிவொன்றை எடுத்து இலங்கை அரசின் மீது அழுத்தங்களை பிரயோகிக்க

வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியால் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜந்திரன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி இந்தியாவிற்கு விஜயமொன்றை மேற்கொள்ள உள்ள நிலையில், யாழ்ப்பாண இந்திய துணை துாரகத்தின் பொறுப்பதிகாரியிடம் அந்த கடிதம் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

75 கால இனப்பிரச்சினை தீர்வு, ஒற்றை ஆட்சிக்கு பொருத்தமானது அல்ல, அதற்கு ஒரு தீர்வு வேண்டும் என அக்கடித்தில் வலுயுறுத்தி உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜந்திரன் தெரிவித்துள்ளார்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்

ஆற்றில் பாய்ந்த பேரூந்து 10 பேர் பலி 40 பேர் காயம்

இலங்கையில் தனியார் பேரூந்து ஒன்று ஆற்றில் பாய்ந்ததில் ,
அதில் பயணித்த பத்து பேர் பலியாகியும் நாற்பதுர் காயமடைந்துள்ளனர்

பொலநறுவையில் இருந்து காத்தான் குடிக்கு,
பயணித்து கொண்டிருந்த பேருந்தே ,சாரதியின் கட்டு பாட்டை இழந்து ஆற்றில் கவிழ்ந்தது .

இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு,
அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர் .

விபத்து தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்
Posted in இலங்கை செய்திகள்

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்

யாழ்பாணத்தில் தடியால் வண்டியை இழுத்து யாழ்பாணத்து ,
தமிழர் ஒருவர் உலக சாதனை நிலை நாட்டியுள்ளார் .

1500 கிலோ எடையுள்ள ஊர்தியை .ஐம்பத்தி ஒன்பது வயதுடைய,
செல்லையா திருச்செலவாம் என்கின்ற முதியவர் ,
இழுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளார் .

தாடியால் வண்டியை இழுத்து உலக சாதனை படைத்த தமிழன்

நானூறு மீட்டர் தூரத்தை ஏழு நிமிடம் 48 வினாடிகளில் இழுத்து ,
மகத்தான சாதனையை நிலை நாட்டியுள்ளார் .

இவர் இதற்கு முன்னரும் நீண்ட பல சாதனைகளை ,
நிலை நாட்டி தமிழருக்கு பெருமை சேர்த்துள்ளார் .
இவரது இந்த சாதனைகள் ,தற்போது வைரலாகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .