Posted in இலங்கை செய்திகள்

புதிய அரசாங்கத்தில் முன்னர் எப்போதும் பதவி வகிக்காத 3 அமைச்சர்களும் 11 இராஜாங்க அமைச்சர்களும்

புதிய அரசாங்கத்தில் முன்னர் எப்போதும் பதவி வகிக்காத 3 அமைச்சர்களும் 11 இராஜாங்க அமைச்சர்களும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் தலைமையிலான புதிய அரசாங்கத்தின்

அமைச்சர்கள் 26 பேரும் இராஜாங்க அமைச்சர்கள் 39 பேரும் இன்று கண்டி தலதாமாளிகை மகுல்மடுவவில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டனர்.

இந்த வைபவம் இன்று காலை 9.00 மணியளவில் மத வழிபாடுகளுடன் ஆரம்பமானது. இதன்போது முதலாவதாக மாவட்ட இணைப்புக்குழுக்களின் தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்த

பட்டியலில் 11 இராஜாங்க அமைச்சர்களும் 3 அமைச்சர்களும் இதற்கு முன்னர் எந்தவித அமைச்சு பொறுப்புக்களையும் வகிக்கவில்லை என்பது விசேட அம்சமாகும்.

பதவிப் பிரமாணங்களுக்கு பின்னர் பிரதமர் தலைமையிலான புதிய அமைச்சரவை தலதாமாளிகையில் வழிபாடுகளில் ஈடுபட்டது.

Posted in இலங்கை செய்திகள்

கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி

கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி

கூட்டமைப்புக்கு டாட்டா காட்டிய மகிந்த குடும்பம் – வெட்டப்பட்ட புதைகுழி இலங்கையில் நடந்து முடிந்துள்ள ஒன்பதாவது பாராளுமன்ற இலங்கை வாழ் மக்களுக்கும் பெரும் செய்தியை சொல்லியுள்ளது

அது மட்டுமல்லாமல் மக்களை ஏமாற்றி பிழைப்பு நடத்தி வரும் அரசியல் கட்சிகளும் இந்த விடயம் பெரும் ஆபத்தாக மாறியுள்ளது.

,நாம் என்ன செய்தாலும் மக்கள் தொடர்ந்து தம்மை ஏற்று கொள்வார்கள் என்ற நிலையை இந்த தேர்தல் மாற்றி அமைத்துள்ளது.

பத்து ஆசனங்களுடன் சுருங்கி கொண்ட கூட்டமைப்பு

பத்து ஆசனங்களுடன் சுருங்கி கொண்ட கூட்டமைப்பு தற்பொழுது தமக்கு தேவை இல்லை என மகிந்தா அணியினர் தெரிவித்துள்ளனர்

வடக்கு கிழக்கில் கூட்டமைப்பு அல்லாதாவர்கள் வெற்றி பெற்றுள்ளனர்


இதனால் அவர்களை வைத்து தமது ஆ ட்டத்தை ஆட்டுவிக்க மகிந்த அரசு தயாராகி வருகிறது

கோட்டாபாயவின் புதிய திட்ட நகர்வுகளுக்கு ஏற்ப கூட்டமைப்பு உடைந்து காணாமல் போகும் நிலையை அது தோற்றுவித்துள்ளது

இந்த உடைவை ஏற்படுத்திய பெரும் சாதனை சுமந்திரன் ,சம்பந்தரை சாரும்

மயிரிழையில் தப்பித்த சம்பந்தர்

190 வாக்குகளுடன் மயிரிழையில் தப்பித்த சம்பந்தர் இபோது தான் சூப்பர் கீரோ போல பேசி வருகிறார் ,அடுத்து வரும் பாரளுமன்ற

தேர்தலில் இவர்கள் காணமல் போகும் மாற்று நேர்முக அரசியல் தமிழர் அரசியல் தளத்தில் உருவக போகிறது ,அதற்கான விதை இப்பொழுது தூவி விடப்பட்டுள்ளது

மாநகராட்சி தேர்தலில் இவர்கள் பலம் மீள நிர்ணயிக்க படும் என்பதை பறை சாற்றும் எனலாம்
கூட்டமைப்பு தனக்கு தானே புதைகுழி வெட்டி காத்துள்ளது

நோக்கர்கள் ,மக்கள் கருத்துக்களை உணர்வுகளை மதிக்க மறுத்து சுமந்திரன் போன்றவர்கள் சிங்கள அரசை காப்பாற்றும் நகர்வில் ஈடுபட்ட நிலையில் இந்த விடயங்கள் அரங்கேறியுள்ளது

மக்கள் தகுந்த படிப்பினையை கூத்தமைப்புக்கு வழங்கியுள்ளனர்

புலிகளும் இல்லை புலிகள் உருவாக்கிய கட்சியும் இல்லை என்ற நிலையே எதிர்காலத்தில் உருவாக போகிறது என்பதை நடந்து முடிந்த தேர்தல் புள்ளி விபரங்கள் கட்டியம் இட்டுள்ளன

      Posted in இலங்கை செய்திகள்

      மீன்பிடித் தொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

      மீன்பிடித் தொழில்துறை அமைச்சராக டக்ளஸ் தேவானந்தா நியமனம்

      திரு.டக்ளஸ் தேவானந்தா மீன்பிடி தொழில்துறை அமைச்சராக இன்று நியமிக்கப்பட்டுள்ளார்.

      கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய

      அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய

      ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

          Posted in இலங்கை செய்திகள்

          யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்

          யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவராக அங்கஜன் இராமநாதன் நியமனம்

          புதிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவியேற்கும் நிகழ்வு தற்போது ஆரம்பமாகியுள்ளது.

          கண்டி, மகுல்மடுவவில் இந்நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. நிகழ்வில் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர்களுக்கான

          நியமனங்கள் முதலில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் வழங்கி வைக்கப்படுகின்றன.

          யாழ். மாவட்டத்திற்கு அங்கஜன் ராமநாதனும், கிளிநொச்சி மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தாவும் வவுனியாவிற்கு

          கே.திலீபனும், வவுனியா மற்றும் முல்லைத்தீவிற்கு கே.காதர் மஸ்தானும், அம்பாறை மாவட்டத்திற்கு வீரசிங்கமும்,

          திருகோணமலை மாவட்டத்திற்கு கபில அத்துகோரலவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

          இதற்கமைய ஏனைய மாவட்டங்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு தலைவர்களாக

          கொழும்பு – பிரதீப் உதுகொட

          கம்பஹா மாவட்டம் – சமன் பிரதீப் விதான

          களுத்துறை – சஞ்சீவ எதிரிமான்ன

          கண்டி – வசந்த யாப்பா பண்டார

          மாத்தளை – எஸ். நாமக்க பண்டார

          நுவரெலியா – எஸ். பி. திசாநாயக்க

          காலி – சம்பத் அத்துகோரள

          மாத்தறை – நிபுண ரணவக்க

          ஹம்பாந்தோட்டை – உபுல் கலப்பத்தி

          யாழ்ப்பாணம் – அங்கஜன் இராமநாதன்

          கிளிநொச்சி – டக்ளஸ் தேவாநந்தா

          வவுனியா – கே. திலீபன்

          மன்னார் மற்றும் முல்லைத்தீவு – காதர் மஸ்தான்

          அம்பாறை – டி. வீரசிங்க

          திருகோணமலை – கபில அத்துகோரள

          குருநாகல் – குணபால ரத்னசேகர

          புத்தளம் – அசோக பிரியந்த

          அநுராதபுரம் – எச். நந்தசேன

          பொலன்னறுவை – அமரகீர்த்தி அத்துகோரள

          பதுளை – சுதர்ஷன தெனிபிட்டிய

          மொனராகலை – குமாரசிறி ரத்நாயக்க

          இரத்தினபுரி – அகில எல்லாவல

          கேகாலை – திருமதி ராஜிகா விக்ரமசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

          Posted in இலங்கை செய்திகள்

          இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் நியமனம்

          இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமனம்

          இளைஞர் விளையாட்டுத்துறை அமைச்சராக நாமல் ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

          இளம் வயதான அவர் முதல் முறையாக அமைச்சரவை பதவியை ஏற்கும் சந்தர்ப்பம் இதுவாகும்.

          கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்

          பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              நீதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நியமனம்

              நீதி அமைச்சராக பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி நியமனம்

              நீதி அமைச்சராக ஜனாதிபதி சட்டத்தரணியும் பாராளுமன்ற உறுப்பினருமான அலி சப்ரி நியமிக்கப்பட்டுள்ளார்.

              கண்டி மகுல்மடுவ மண்டபத்தில் தற்பொழுது நடைபெறும் புதிய அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின்

              பதவிப்பிரமாண நிகழ்வின் போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இவர் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

              இவர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

                  உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது

                  கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

                  எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகள் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.

                  உயர்தர புதிய, பழைய பாடத்திட்ட பரீட்சைகளுக்கான நேர அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கான அட்டவணைகளை கல்வித் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தில் பார்ரவையிட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                  Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                  பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை

                  பிரிட்டனில் கடலுக்கு குளிக்க சென்ற ஆறு பேர் பலி – சிலர் உடல்களை காணவில்லை

                  பிரிட்டனில் நிலவி வரும் கடும் வெப்பம் காரணமாக மக்கள் கடற்கரை பகுதிக்கு படை எடுத்தனர்


                  இவ்வாறு Brighton கடல் கரைக்கு சென்று குளித்து கொண்டிருந்த ஆறுபேர் மரணமாகியுள்ளனர்

                  இதில் அலையில் இழுத்து செல்ல பட்ட ஆண்,மற்றும் பெண் ஒருவர்

                  ஐந்து மணியளவில் சடலமாக மீட்க பட்டுள்ள்ளார் , மேலும் சிலரது சடலங்கள் இதுவரை மீட்க படவில்லை

                  சுழியோடிகள் உதவியுடன் தேடுதல்கள் இடம் பெற்ற வண்ணம் உள்ளன

                  ஆண்டு தோறும் இவ்வாறு கடலுக்கு குளிக்க செல்பவர்களில்

                  தமிழர்கள் உள்ளிட்டவர்கள் பலியாகிவருகின்றமை குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      குற்றச்செயல் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட விசேட இலக்கத்திற்கு 1527 முறைப்பாடுகள்

                      குற்றச்செயல் தெரிவிக்க அறிமுகப்படுத்தப்பட்ட விசேட இலக்கத்திற்கு 1527 முறைப்பாடுகள்

                      குற்றச்செயல்கள் தொடர்பான தகவல்களை தெரிவிப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட விசேட தொலைபேசி இலக்கத்திற்கு கடந்த 2

                      வார காலப்பகுதியில் 1527 க்கும் 1263 க்கும் இடைப்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளமை விசேட அம்சமாகும் என்று

                      பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஸ்ட பொலிஸ் அத்தியகட்சகருமாக ஜாலிய சேனாரத்ன தெரிவித்தார்.

                      நேற்று பொலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். 1997

                      என்ற தெலைபேசி இலக்கத்துக்கு பாரிய அளவிலான திட்டமிட்ட ஊழல் குற்றச்செயல் குழுக்களின் செயற்பாடுகள் மற்றும் கப்பம்

                      பெறுதல் போன்ற தகவல்கள் கிடைத்திருப்பதாகவும் அவர் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடிய

                      செயற்பாடுகள் குறித்தும் தெரிவிக்க முடியும் என்றும் பொலிஸ் ஊடக பேச்சாளர் கூறினார்.

                      இதேவேளை அங்கொட லொக்கா உயிரிழந்துள்ளாரா என்பதை உறுதிப்படுத்துவதற்கான மரபணு பரிசோதனைக்கு தேவையான

                      மாதிரி மற்றும் கைவிரல் அடையாளங்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

                      இலங்கையின் பாதாளக் குழுக்களுடன் தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவரான அங்கொட லொக்கா என

                      சந்தேகிக்கப்படுபவரின் மரணம் உடலில் விஷம் பரவியதால் ஏற்பட்டிருக்கக் கூடும் என தமிழக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது

                          Posted in இலங்கை செய்திகள்

                          மாலைதீவில் இருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

                          மாலைதீவில் இருந்து 178 இலங்கையர்கள் நாடு திரும்பினர்

                          மாலே விமானநிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின்

                          விடேச விமானத்தின் மூலம் இவர்கள் இன்று நண்பகல் மத்தளை விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

                          இவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர்

                          தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

                          Posted in இலங்கை செய்திகள்

                          புலி கட்சி உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல்

                          புலி கட்சி உறுப்பினர் மீது கொலை வெறி தாக்குதல்

                          வவுனியாவில் இனந்தெரியாத நபர்கள் நேற்று (10) இரவு தாக்குதல் நடத்தியதில்

                          முன்னாள் போராளியொருவர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்திசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                          முன்னாள் போராளியும், சமூக சேவகரும், தமிழ் நிலம் மக்கள் அமைப்பின்

                          தலைவருமான வி.விநோதரன் என்பவர் மீதே இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

                          வவுனியா கரப்பன்காட்டு பகுதியில் அமைந்துள்ள தமிழர் நிலம் மக்கள் அமைப்பின் அலுவலகத்திற்குள் நேற்று (10) இரவு உட்புகுந்த

                          மர்மநபர்கள் முன்னாள் போராளி மீது சராமரியாக தாக்குதல் நடத்தியுடன்

                          அலுவலகத்தில் இருந்த ஐம்பதாயிரம் ரூபா பணத்தையும் கொள்ளையிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

                          முன்னாள் போராளி மீதான தாக்குதல் தொடர்பாக அயலவர்களால் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், நோயாளர் காவுவண்டி

                          மூலம் படுகாயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

                          வவுனியாவில் தாக்குதலுக்குள்ளான முன்னாள் போராளி வன்னி பகுதி மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் முன்னாள் போராளிகள்,

                          மாவீரர் குடும்பங்கள், பல்கலைக்கழக மாணவர்களுக்கு தமிழ் நிலம் மக்கள் அமைப்பின் ஊடாக மனிதாபிமான சேவைகள் செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                          இத்தாக்குதல் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் முன்னெடுத்துள்ளனர்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              பணம் கேட்டு மிரட்டிய மேர்வின் சில்வா மகன் கைது

                              பணம் கேட்டு மிரட்டிய மேர்வின் சில்வா மகன் கைது

                              மகிந்தா ஆட்சி காலத்தில் அரச அதிகாரியை மரத்தில் கட்டி வைத்து

                              அடித்த சண்டியர் மேர்வின் சில்வாவின் மகன் பணம் கேட்டு நபர் ஒருவரை

                              மிரட்டிய குற்றச் சாட்டில் அவர் காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளார்

                              அரசியல்வாதிகளின் பிள்ளைகள் தறிகெட்டு இவ்வாறான அடாவடியில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

                                  Posted in உலக செய்திகள்

                                  மனைவியை கத்தியால் குத்திய கணவன் – தானும் தன்னை குத்தி தற்கொலை முயற்சி

                                  மனைவியை கத்தியால் குத்திய கணவன் – தானும் தன்னை குத்தி தற்கொலை முயற்சி

                                  அவுஸ்ரேலியா Castle Hill, in Sydney’s north-west, பகுதியில் கணவர் ஒருவர் தனது ஆசை மனைவி மீது திடீர் கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளார்

                                  இதில் அவர் பலத்த காயமடைந்துள்ளார் ,அதேபோல கணவன் தன்னை தானும் குற்றி தற்கொலை முயற்சிக்கு
                                  முயன்றார்

                                  எனினும் இருவரும் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் அவசர தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்

                                  கணவர் மன நலன் பாதிக்க பட்ட நிலையில் மேற்படி செயலை புரிந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                  மனைவியை கத்தியால்
                                  மனைவியை கத்தியால்
                                      Posted in உலக செய்திகள்

                                      துருக்கி எல்லையில் 62 அகதிகள் மடக்கி பிடிப்பு

                                      துருக்கி எல்லையில் 62 அகதிகள் மடக்கி பிடிப்பு

                                      ஐரோப்பிய நாடுகளிற்குள் நுழையும் முகமாக ஆப்கானிஸ்தான்

                                      நாட்டில் இருந்து


                                      துருக்கிக்குள் நுழைய முயன்ற அறுபத்தி இரண்டு சட்டவிரோத குடியேற்ற

                                      வாசிகளை தாம் கைது செய்துள்ளதாக துருக்கி எல்லை காப்பு

                                      படையினர் தெரிவித்துள்ளனர்

                                      கைதானவர்கள் சிறப்பு முகாமில் அடைக்க பட்டு விசாரணைகளுக்கு

                                      உட்படுத்த பட்டு வருகின்றனர்


                                      இவ்வாறு நுழைந்தனவர்களில் எட்டு முதல் 42 வயதுடையவர்கள்

                                      என தெரிவிக்க பட்டுளள்து

                                      துருக்கி எல்லையில்
                                      துருக்கி எல்லையில்
                                          Posted in உலக செய்திகள்

                                          அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியே துப்பாக்கி சூடு – பலர் காயம் – தப்பிய டிரம்ப்

                                          அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியே துப்பாக்கி சூடு – பலர் காயம் – தப்பிய டிரம்ப்

                                          அமெரிக்கா வெள்ளை மாளிகை வெளியே நபர் ஒருவர் திடீர்

                                          துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் பாதுகாப்பு

                                          அதிகாரி ஒருவர் ,மற்றும் பொதுமகன் ஒருவர் உள்ளிட்ட மூவர் படுகாயமடை ந்துள்ளனர்

                                          பாதிக்க பட்ட அனைவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் ,

                                          மேற்படி சூட்டு சம்பவத்தினால் ஊடக வியளாளர்களை சந்தித்து கொண்டிருந்த

                                          டிரம்புக்கு எதுவித பாதிப்பும் இல்லாது தப்பித்து கொண்டதாக தெரிவிக்க படுகிறது

                                          இந்த சூட்டு சம்பவத்திற்கான உடனடி காரணம் தெரியவரவில்லை

                                          அமெரிக்கா வெள்ளை மாளிகை
                                          அமெரிக்கா வெள்ளை மாளிகை
                                              Posted in இலங்கை செய்திகள்

                                              தீயில் எரிந்த 24 வீடுகள் – கண்ணீரில் குடும்பம்

                                              தீயில் எரிந்த 24 வீடுகள் – கண்ணீரில் குடும்பம்

                                              லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பம்பரக்கலை மத்திய பிரிவில் நேற்று (10)

                                              இரவு 10 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 24 தொழிலாளர் குடியிருப்புகள் முற்றாக தீக்கிரையாகியுள்ளன.

                                              தீ விபத்து காரணமாக லயன் தொகுதியில் அமைந்திருந்த வீடுகள் முற்றாக

                                              சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

                                              வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை

                                              அணைக்க முற்பட்ட போதும் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியவில்லை.

                                              அதனையடுத்து லிந்துலை பொலிஸார் மற்றும் பொது மக்கள் இணைந்து

                                              தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்ததுடன், சுமார் 3

                                              மணித்தியாலயத்தின் பிறகு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

                                              இத்தீவிபத்தில் எவ்வித உயிர் ஆபத்தோ, காயங்களோ ஏற்படாத போதிலும் உடைமைகளுக்கு தேதம் ஏற்பட்டுள்ளன.

                                              இத் தீவிபத்து காரணமாக பலரது அத்தியவசிய ஆவணங்கள்

                                              உடுதுனிகள், தளபாடங்கள் போன்றன சேதத்திற்கு உள்ளாகியுள்ளன.

                                              இந்த தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட 24 குடும்பங்களை சேர்ந்த 70 பேர்

                                              தற்காலிகமாக தோட்ட சிறுவர் பராமரிப்பு நிலையம், உறவினர் மற்றும் அயலவர்களின் வீடுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

                                              இவர்களுக்கான நிவாரண உதவிகளை தோட்ட நிர்வாகமும், அக்கரப்பத்தனை பிரதேச சபை ஊடாகவும் வழங்கப்பட்டுள்ளது.

                                              இத் தீ விபத்து மின்சார ஒழுக்கு காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவிப்பதுடன் இது தொடர்பான

                                              விசாரணைகளையும் சேதவிபரங்கள் தொடர்பாகவும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கும் லிந்துலை பொலிஸார், நுவரெலியா பொலிஸ் கைரேகை

                                              அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.

                                                  Posted in இலங்கை செய்திகள்

                                                  பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தை விட்டு மேலும் 27 பேர் வீடு திரும்பியுள்ளனர்

                                                  பூஸ்ஸ தனிமைப்படுத்தல் நிலையத்தை விட்டு மேலும் 27 பேர் வீடு திரும்பியுள்ளனர்

                                                  பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்களது

                                                  தனிமைப்படுத்தலை முடித்த மேலும் 27 நபர்கள் கடந்த தினங்களில் மத்திய நிலையத்தை விட்டு வெளியேறினர்.

                                                  அதன்படி, 2020 ஆகஸ்ட் 08 ஆம் திகதி 08 நபர்களும், ஆகஸ்ட் 09 ஆம் திகதி 09

                                                  நபர்களும், நேற்றைய தினம் 10 நபர்களும் (2020 ஆகஸ்ட் 10) இவ்வாரு

                                                  பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்து வெளியேறியுள்ளனர்.

                                                  இவர்கள் அனைவரும் அரசாங்கத்தின் சுகாதார வழிகாட்டுதல்களை

                                                  ப் பின்பற்றி வீடுகளுக்கு அனுப்பப்பட்டதுடன் தனிமைப்படுத்தலை

                                                  வெற்றிகரமாக முடித்ததற்கான சான்றிதழ்களும் கடற்படையால் வழங்கப்பட்டன.

                                                  தற்போதைய நிலவரப்படி, 70 நபர்கள் பூஸ்ஸ கடற்படை தனிமைப்படுத்தல்

                                                  மையத்தில் தனிமைப்படுத்தலை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

                                                  பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
                                                  பூஸ்ஸ தனிமைப்படுத்தல்
                                                      Posted in இலங்கை செய்திகள்

                                                      பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்

                                                      பிரதமர் சுப வேளையில் கடமைகளை ஆரம்பித்தார்

                                                      புதிய அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பை ஏற்றுள்ள மஹிந்த

                                                      ராஜபக்ஷ அலரி மாளிகையில் மகா சங்கத்தினரின் நல்லாசியுடன்

                                                      தனது கடைமைகளை சற்றுமுன்னர் ஆரம்பித்தார்.

                                                      இந்த நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

                                                          Posted in இலங்கை செய்திகள்

                                                          இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ – 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்

                                                          இலங்கையில் வேகமாக பரவும் கொரனோ – 27 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டனர்

                                                          கொவிட் தொற்று நோயாளர்கள் 27 பேர் இன்று காலை வரையில் அடையாளம்

                                                          காணப்பட்டிருப்பதாக கொவிட் 19 தொற்றைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

                                                          இந்த 27 பேரில் 23 பேர் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில்

                                                          தங்கியிருந்தவர்கள் ஆவர். ஏனைய 4 பேர் ஐக்கிய அரபு எமிரேட்டில் இருந்து நாட்டுக்கு வருகை தந்த பின்னர் தியத்தலாவ இராணுவ

                                                          வைத்தியசாலை, முதலாவது கெமுணு படையணி மற்றும் ஈடன் றிசோட் ஆகிய தினிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்தவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                                                          இதற்கமைவாக இன்று (11) காலை அளவில் கந்தக்காடு மற்றும் சேனபுர போதைப்பொருள் நிவாரண சிகிச்சை மற்றும் புனர்வாழ்வு

                                                          மத்திய நிலையத்துடன் தொடர்புபட்ட நோயாளர்களின் எண்ணிக்கை 629 ஆகும்.

                                                          புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்கள் – 508

                                                          பணியாளர்கள் எண்ணிக்கை – 67

                                                          அழைப்பின் பேரில் வரும் பணியாளர்கள் – 05

                                                          குடும்பம் மற்றும் தொடர்புபட்டவர்கள் – 48

                                                          வெலிக்கடை சிறைச்சாலை கொவிட் 19 தொற்று கைதியுடன் தொடர்புட்ட நபர் – 1

                                                          மொத்தம் – 629

                                                              Posted in இலங்கை செய்திகள்

                                                              கைதிகளை பார்வையிட வர விதிதக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

                                                              கைதிகளை பார்வையிட வர விதிதக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

                                                              சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளை பார்வையிட வருவதற்கு விதிக்கப்பட்டிருந்த

                                                              தடை எதிர்வரும் சனிக்கிழமை முதல் நீக்கப்பட உள்ளதாக சிறைச்சாலைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

                                                              சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க எமது செய்திப்பிரிவிடம் இது தொடர்பில் தெரிவித்துள்ளார்.

                                                              உரிய பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி கைதிகளை பார்வையிட

                                                              வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

                                                              ஒரு கைதியை சந்திக்க ஒருவருக்கு வாரத்தில் ஒருமுறை மா்திரமே அனுமதி

                                                              வழங்கப்படும் எனவும் உணவுப் பொருட்களை எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.