Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் கொரனோ தொற்று – திடீர் அதிகரிப்பு

இலங்கையில் கொரனோ தொற்று – திடீர் அதிகரிப்பு

இன்று (13) நண்பகல் வரையில் திவுலப்பிட்டிய COVID 19 கொவிட்

கொத்தணியில் பதிவாகியுள்ள தொற்றுக்குள்ளானோரின்

எண்ணிக்கை 1446 என்று தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம்

வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று புதிதாக 49 பேர் தொற்றுக்குள்ளானவர்களாக அடையாளங் காணப்பட்டுள்ளனர்.

COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-10-13 13:46:11

4893
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்

1552
சிகிச்சை பெறும் நோயாளிகள்

49
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்

3328
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை

13
இறப்பு எண்ணிக்கை.

Posted in இலங்கை செய்திகள்

பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ,அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்

பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ,அத்தியாவசிய பொருட்களின் வரி நீக்கம்

தற்போதைய வாழ்க்கைச் செலவு மற்றும் கொவிட் 19 நோய்த்தொற்றுடன் கூடிய கஷ்டங்களை கவனத்திற் கொண்டு

அரசாங்கத்தினால் பருப்பு, டின் மீன், பெரிய வெங்காயம் மற்றும் சீனி ஆகிய அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி நீக்கப்பட்டுள்ளது.

வரி நீக்கப்பட்டுள்ள காரணத்தினால் இன்று இரவு முதல் டின் மீன் (பெரியது) 200 ரூபாவுக்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 100

ரூபாவுக்கும் சீனி ஒரு கிலோ 85 ரூபாவுக்கும் கொள்வனவு செய்ய முடியும்.

இந்த அத்தியாவசிய பொருட்கள் உட்பட 500 ரூபாவுக்கு மேல் பெறுமதியான பொருட்களை சதொச நிறுவனத்தில் கொள்வனவு

செய்யும் போது ஒரு கிலோ பருப்பை 150 ரூபாவுக்கு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தெங்கு அபிவிருத்தி சபை, குருணாகல் பெருந்தோட்ட கம்பனி மற்றும் சிலாபம் பெருந்தோட்ட கம்பனி என்பன கொழும்பு

நகரத்திற்கான தேங்காய் வழங்களை அதிகரித்துள்ளன. எனவே நுகர்வோருக்கு சதோச விற்பனை நிலையங்களில் நியாயமான

விலைக்கு தேங்காய்களை கொள்வனவு செய்யும் சந்தர்ப்பம் ஏற்படுத்தப்பட்டுள்ளது

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ நோயாளர்கள் வருகை -பொரளையில் 6 கடைகள் அடித்து பூட்டு

கொரனோ நோயாளர்கள் வருகை -பொரளையில் 6 கடைகள்

அடித்து பூட்டு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான நபர்கள் சிலர்

வந்துசென்றமையால் பொரளையில் உள்ள 06 வர்த்தக

நிலையங்கள் தற்காலிகமான பூட்டப்பட்டுள்ளதாக பொலிஸார்

தெரிவித்துள்ளனர்.

Posted in இலங்கை செய்திகள்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்-கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மூடப்படாது’

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்-கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மூடப்படாது’

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் நிலைமைகள் காணப்பட்டாலும், கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயம் மூடப்படாதென,

தொழிற்சாலைகள் உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்மிக்க பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள தொழிற்சாலைகள் மூன்றில், கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனினும், இந்தத் தொழிற்சாலைகளில்

ஒரு கொரோனா தொற்றாளர் மாத்திரம் இனங்காணப்பட்ட தொழிற்சாலை, இன்று மீள திறக்கப்படுமெனத் தெரிவித்த அவர்,

ஏனைய இரு தொழிற்சாலைகளும், இன்னும் சில தினங்களுக்குள் மீளத் திறக்கப்படுமெனத் தெரிவித்தார்.

சுதந்திர வர்த்தக வலையத்தில் உள்ள 87 தொழிற்சாலைகளில், 36 ஆயிரம் ஊழியர்கள் பணிப்புரிவதாகவும் நாட்டில் ஏற்பட்டிருக்கும்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்கள் காரணமாக, தற்போது வெறும் 8 ஆயிரம் ஊழியர்களே அங்கு வருகை தருவதாகவும் அவர் கூறினார்.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள பல பிரதேசங்களுக்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், பெரும்பாலான ஊழியர்கள்,

சேவைக்கு வரமுடியாமல் இருப்பதாகவும் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்களைப் பின்பற்றி, தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கி வருகின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Posted in இலங்கை செய்திகள்

இந்திய உயர் ஸ்தானிகர் நீர் வழங்கல் அமைச்சருடன் சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகர் நீர் வழங்கல் அமைச்சருடன் சந்திப்பு

இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவை நேற்று சந்தித்து கலந்துரையாடினார்.

இந்திய உயர் ஸ்தானிகராலயம் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. சகல

துறைகளிலும் இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை மேலும் வலுவாக்குவதற்கு இந்தியா அதிக முக்கியத்துவம்

கொடுத்திருப்பதாக உயர் ஸ்தானிகர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இரு நாடுகளினதும் பிரதமர்களுக்கிடையில் அண்மையில் இடம்பெற்ற மெய்நிகர் இருதரப்பு மாநாட்டின்போது இந்த விடயம்

தொடர்பாக வலியுறுத்தப்பட்டிருந்ததாக உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்தார்.

  1. நீர் மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட விடயங்களின் முக்கியத்துவம் தொடர்பாக இந்தச் சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டியிருந்த உயர்
  2. ஸ்தானிகர், தேசிய இலக்குகளின் அடிப்படையில் கடந்த ஆறு வருடங்களில் இந்திய அரசாங்கத்தின் அனுபவங்கள் மற்றும் சாதனைகளையும் குறிப்பிட்டிருந்தார்.

சமூக ரீதியிலான பங்களிப்புடன் இந்தியாவில் நீர் அடிப்படையிலான நிகழ்ச்சித்திட்டங்கள் மற்றும் தேசிய அளவிலான சுகாதார திட்டங்கள் ஆகியவற்றின் கருத்தாக்கம்

மற்றும் நடைமுறைப்படுத்துதல் தொடர்பாகவும் அமைச்சருக்கு உயர் ஸ்தானிகர் பரந்தளவிலான தகவல்களை இந்த சந்தர்ப்பத்தில் வழங்கியிருந்தார்.

  1. இதேவேளை நீர் பற்றாக்குறை காணப்படும் பிரதேசங்கள் மற்றும் பாடசாலைகளில் நீர் தேவைகள் தொடர்பாக இலங்கை
  2. அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ள விடயங்கள் குறித்து அமைச்சர் இந்த சந்தர்ப்பத்தில் தெளிவுபடுத்தியிருந்தார்.

ஆளுமை விருத்தி மற்றும் சமூக உட்கட்டமைப்பு ஆகியவற்றினை ஸ்தாபித்தல் உள்ளிட்ட கருதுகோள்கள் குறித்து இந்தியாவுடன் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை அமைச்சர் வரவேற்றிருந்தார்.

4.சாதாரண மக்களின் வாழ்க்கையுடன் தொடர்புடைய இந்த விடயங்களில் இலங்கையின் தேவைக்கேற்ப ஒத்துழைப்பு வழங்கி

செயற்படுவதற்கு இந்தியா தயார் நிலையில் இருப்பதாக உயர் ஸ்தானிகர் இந்த சந்தர்ப்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.

Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல் – விசாரணைகள் ஆரம்பம்

முல்லைத்தீவில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும்

சம்பவம் தொடர்பாக பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்று வெகுஜன

ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாவட்ட காட்டுப் பகுதியில் வைத்து ஊடகவியலாளர்கள்

தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக அமைச்சரவையில் தீர்மானங்களை

அறிவிக்கும் ஊடகவிலயாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் கேள்வியெழுப்பினார்.jkjl

இதற்கு பதிலளித்த அமைச்சர் இது தொடர்பான அறிக்கையை நாம் கோரியுள்ளோம்.

அறிக்கை கிடைத்த பின்னர் பக்கசார்பற்ற விசாரணை நடத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு

இன்று (13.10.2020) அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம்

மட்டக்களப்பில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு நோயினால் மேலும் ஒரு மரணம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் நிகழ்ந்துள்ளது.

இவ்வருடத்தில் டெங்கு நோய்த் தாக்கத்தினால் இம்மாவட்டத்தில் இடம்பெற்ற மூன்றாவது மரணமாக இது பதிவாகியுள்ளது. கடந்த

செப்டம்பர் 26 ஆந் திகதி தொடக்கம் ஒக்டோபர் 02 ஆந் திகதி வரையும் 16 பேர் டெங்குநோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த வாரம் டெங்கு தாக்கத்தினால் பாதிப்புக்குள்ளான ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 9 நோயாளர்களும்,

வாழைச்சேனை, மட்டக்களப்பு மற்றும் ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா 02 டெங்கு நோயாளர்களும்,

கோரளைப்பற்று மத்தி வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருநோயாளருமாக மொத்தம் 16 பேர் மாவட்டத்தில் இனங் காணப்பட்;டுள்ளனர்.

இருப்பினும் வாகரை, செங்கலடி, ஏறாவூர், வவுனதீவு, காத்தான்குடி, பட்டிப்பளை, வெல்லாவெளி, களுவாஞ்சிக்குடி மற்றும் கிரான்

ஆகிய சுகாதார வைத்திய அதிகாரிப் பிரிவுகளில் டெங்கு நோயாளர்கள் எவரும் இனங்காணப்படவில்லை.

மேலும் கடந்த 09 மாதங்களில் இம்மாவட்டத்தில் 2,248 போர் டெங்கு நோய்த் தாக்கத்திற்குட்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதார சேவை பணிப்பாளர் அலுவலகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை எதிர்வரும் மழைகாலத்தில் பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் செயல்பட்டு வீடுகளில் தேங்கியுள்ள குப்பைகள் மற்றும்

நீர் தங்கியுள்ள இடங்கள் போன்றவற்றை அகற்றி டெங்கு நுளம்புகள் பரவுவதற்கு இடம் கொடுக்காத வகையில் சூழலை

துப்பரவாக வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் கொரனோவால் அரைவாசி மக்கள் பலியாவார்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் கொரனோவால் அரைவாசி மக்கள் பலியாவார்கள் – வெளியான அதிர்ச்சி தகவல்

அமெரிக்காவில் மிக கோரமாக பரவி வரும் கொரனோ வைரஸ்

தாக்குதலில் சிக்கி அந்த நாட்டின் மக்கள் தொகையில் அரைவாசி

பேர் பலியானார்கள் என ரீசேர்ச் பிரிவினர் திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளனர்

உலகில் முதலாவது அதிக மக்கள் பாதிப்பாக அமெரிக்காவில்

உள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனில் 3 மாகாணங்கள் சிவப்பு எச்சரிக்கை – முற்றாக முடக்கம்

பிரிட்டனில் 3 மாகாணங்கள் சிவப்பு எச்சரிக்கை – முற்றாக முடக்கம்

பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் தாக்குதலில் சிக்கி தவித்து வருகிறது


இவ்விதம் லீவர்போல் மாகாணம் சிவப்பு எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது ,இங்கு மக்கள் வெளியில் நடமாட முடியாத தடை விதிக்க பட்டுள்ளது

மேலும் Liverpool was immediately put in Tier 3 – the highest level – with Manchester and Newcastle என்பன அதிக நோயாளர்கள் தொற்று

கொண்ட மாகாணமாக மாற்றமடைந்துள்ளது ,இங்கு அரசின் இன்று அறிவித்த தடைகள் உடனடி அமுலுக்கு வருகின்றன

இந்த இடங்களை தவிர அனைத்து பகுதிகளும் பாடசாலைகள் ,பல்கலைக்கழகங்கள் திறக்க படும் என பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்

இது மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ,அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது ,

நத்தார் தினத்திற்கு பின்னர் முழு லொக் டவுனுக்கு பிரிட்டன் செல்லும் என எதிர் பார்க்கக் படுகிறது ,

அதற்கு அடித்து பூட்டும் நிகழ்வை அரசு அறிவித்து வருகிறது ,நோயினால்

அடித்து பூட்ட பட்ட பகுதியில் தொழிலார்கள் ,மற்றும் வியாபாரிகளுக்கு அரசு சலுகை அறிவித்துள்ளது ,பண உதவி வழங்க படுகிறது

மேலும் அரசின் இந்த வியாபார முடக்க நிகழ்வுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யும் நடவடிகை மேற்கொள்ள பட்டு வருகிறது குறிப்பிட தக்கது

பிரிட்டனில் 3 மாணாக்கள்
பிரிட்டனில் 3 மாணாக்கள்
Posted in இலங்கை செய்திகள்

யாழ் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை

யாழ் மாவட்டத்தில் சுகாதார நடைமுறைகளுடன் உயர்தரப் பரீட்சை

யாழ் மாவட்டத்தில் இன்று ஆரம்பமாகிய கல்வி பொது தராதர உயர்தர பரீட்சைக்கு 10,940 மாணவர்கள் சுகாதார

நடைமுறையினை பேணி தேற்றியுள்ளனர் என்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

86 பரீட்சை நிலையங்கள் மற்றும் 18 பரீட்சை இணைப்பு நிலையங்களில் யாழ் மாவட்ட மாணவர்கள் சுகாதார

நடைமுறைகளுடன் சமூக இடைவெளியினை பேணி பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களுள் புங்குடுதீவு பிரதேசத்தில் இரண்டு மாணவர்கள் உயர்தர

பரீட்சாத்திகளாவர். இவர்கள் இருவருக்கும் வேலணை மத்திய கல்லூரி பரீட்சை நிலையத்தில் பரீட்சை எழுதுவதற்குரிய

ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன, குறித்த இரண்டு மாணவர்களும் தனித்தனி வகுப்பறைகளில் தமது பரீட்சையினை எழுதுவதற்கான

ஏற்பாடுகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அவர்கள் இருவரும் வேலணை மத்திய கல்லூரி மாணவர் விடுதியில் தனியான இடத்தில் தங்க வைக்கப்பட்டு பரீட்சை எழுதுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை உயர்தரப் பரீட்சையிலே வடக்கு மாகாணத்தில் 166 பரீட்சை நிலையங்களில் இருந்து 20,325 மாணவர்கள்

தோற்றவுள்ளதாக வடக்கு மாகாண கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு

யாழ் தேசிய கல்வியியற் கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு

யாழ்ப்பாணம் தேசிய கல்வியற் கல்லூரி விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வந்த 375 மாணவர்கள் (71 ஆண் 304 பெண்) தமது வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

கோப்பாய் தேசிய கல்வியற் கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றப்படவு ள்ளதன் காரணமாக மாணவர்களை தமது

வீடுகளுக்கு அனுப்பும் நடவடிக்கையினை இன்றைய தினம் பாடசாலை நிர்வாகம் மேற்கொண்டுள்ளது.

அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களுக்கு உரியவர்கள் தனித்தனியான பேருந்து வண்டிகளில் ஏற்றப்பட்டு அவர்களது

சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கையினை கல்லூரி நிர்வாகம் இராணுவத்துடன் இணைந்து முன்னெடுத்துள்ளது.

சுமார் எட்டு பேருந்துகளில் மாணவர்கள் அனைவரும் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்கள்.

அத்தோடு குறித்த கல்லூரியானது தனிமைப்படுத்தல் முகாமாக மாற்றும் முகமாக ராணுவத்தினரால் முன்னேற்பாட்டு

நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. நேற்றைய தினம் வவுனியா

தேசிய கல்லூரி மாணவர்கள் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டமையம் குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

மன்னார் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

மன்னார் மாவட்டத்தில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிப்பு

மன்னார் மாட்டத்தில் 2 கிராமங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் பட்டித்தோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய கிராமங்கள்

மறு அறிவித்தல் வரை தனிமைப்படுத்தப்பட்ட கிராமமாக பெரிடப்பட்டிருப்பதாக

Covid19 தொற்று பரவலை தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின்

பிரதானியும் படை அதிகாரிகளின் பதில் தலைமை அதிகாரியும்

இராணுவத் தளபதியுமான லெப்டினென் ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.

Posted in உலக செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியில் இணைந்தார் குஷ்பூ

காங்கிரஸ் கட்சியில் இருந்த குஷ்பு பெயர்ச்சியாகி பாரதிய ஜனதா கட்சி (பாஜக)யில் இணைய ​போகிறார்.

காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து

பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக சோனியா காந்திக்கு குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்

பாஜகவில் இணைய முடிவு எடுக்கும் முன்பு நீண்ட யோசனை செய்திருப்பதாக

தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். குஷ்பு தனது கணவர் சுந்தர் சி உடன்

விமான நிலையத்திற்கு வந்த போது அவரை சூழ்ந்த செய்தியாளர்கள்,

நீங்க பாஜகவில் சேரப்போவதாக சொல்கிறார்களே என்று கேட்க அதற்கு நோ கமெண்ட் என்று சொன்னார்.

இப்போதும் காங்கிரஸ் கட்சியில்தான் இருக்கிறீர்களா என்று கேட்டதற்கும்

இப்போதைக்கு எதுவும் சொல்ல விரும்பவில்லை என்று சொல்லி விட்டு கணவர் சுந்தர் சி உடன் விமானத்தில் பறந்தார் குஷ்பு.

Posted in இலங்கை செய்திகள்

கொரனோ மேலும் அதிகரிக்கலாம் – இராணுவ தளபதி எச்சரிக்கை

பல்வேறு பிரதேசங்களிலிருந்தும் எதிர்வரும் 5 நாட்களுக்குள் கொரோனா தொற்றாளர்கள், அடையாளம் காணப்படலாம் என

இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இன்று காலை தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய பணியாளர்கள்

பலர், நாட்டின் பல்வேறு இடங்களுக்கும் சென்றுள்ளதாகவும், இதன்மூலம்

கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தற்போது பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட பிரதேசங்களில்

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளதால்,

இன்னும் 2,3 நாட்களில் அந்த பிரதேசங்களில் ஊரடங்கு உத்தரவை நீக்க நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

குண்டு வெடித்தது எப்படி – மைத்திரியிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்

விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று (05) ஆஜராகியுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில்

விசாரணைகளை முன்னெடுக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த 05ஆம் திகதி முன்னிலையாகினார்.

அன்றைய தினம் வாக்குமூலமளிக்க வருமாறு அவருக்கு கடந்த மாதம் 22ஆம் திகதி ஆணைக்குழுவால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அவரிடம் 7 மணித்தியாலம் வாக்குமூலம் பெற்றுக்

கொள்ளப்பட்டுள்ளதுடன், இன்று (12) மீண்டும் ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதற்கமைய அவர் அங்கு முன்னிலையாகியுள்ளார்.

இதேவேளை, குறித்த ஆணைக்குழுவில் கடந்த 06ஆம் திகதி ஆஜரான

முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஒன்றரை மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கினார்..

இதனையடுத்து, நாளை (13) ஆணைக்குழுவில் மீண்டும்ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

Posted in இலங்கை செய்திகள்

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கு

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கான மருந்துகள் வீடுகளுக்கு

அரச வைத்தியசாலைகளில் கிளினிக் சிகிச்சைகளை மேற்கொள்ளும்

நோயாளர்களுக்கான மருந்து வகைகளை அவர்களது வீடுகளுக்கே வழங்கும் வேலைத்திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டில் தற்பொழுது நிலவும் கொரோனா வைரஸ் தொற்று நிலைமையை கவனத்தில் கொண்டு கிளினிக் மருந்துகளை நாளை

முதல் வீடுகளுக்கு விநியோகிப்பதற்கான வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கம்பஹா மற்றும் கொழும்பு ஆகிய மாவட்டங்களில் முதல் கட்டமாக

இந்த வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படுவதுடன், பின்னர் இதனை விரிவுபடுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வைத்தியசாலைகளுக்கு

சிகிச்சைக்காக வருவது பொருத்தமானது அல்ல என்று சுகாதார அமைச்சு பொது மக்களுக்கு அறிவித்துள்ளது.

வைத்தியசாலைகளில் சிகிச்சையை பெறுவதில் எதிர்நோக்கப்படும் நெருக்கடி காரமணமாக நோயாளர்களுக்கு

கொரோனா வைரஸ் தொற்று ஏற்படக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் என்றும் எஸ். ஸ்ரீதரன் தெரிவித்துள்ளார்.

Posted in இலங்கை செய்திகள்

அஞ்சல், தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம்

அஞ்சல், தொலைபேசி ஊடாக ஜனாதிபதி அலுவலகத்துடன் தொடர்புகொள்ள சந்தர்ப்பம்

கொவிட் 19 நோய்த்தொற்றை ஒழிப்பதற்காக சுகாதாரத் துறை வழங்கியுள்ள

பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளுக்கு ஏற்ப பொது மக்களுக்கு ஜனாதிபதி

அலுவலகத்திற்கு வருகைதருதல் மற்றும் அலுவலகத்தில் குறைந்தளவான

அலுவலர்கள் சேவையை வழங்குதல் என்பவற்றின் மூலம் ஏற்படும் அசௌகரியங்களை

கவனத்திற் கொண்டு, அஞ்சல் மற்றும் தொலைபேசி ஊடாக முன்வைக்கப்படும்

பொது மக்கள் கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில் ஜனாதிபதி அலுவலகத்தின் பொதுமக்கள் தொடர்பாடல்

பிரிவு, ஒம்புட்ஸ்மன் அலுவலகம் மற்றும் ஜனாதிபதி நிதியத்துடன் பின்வரும் இலக்கங்களின் ஊடாக தொடர்புகொள்ள முடியும்.

ஜனாதிபதி பொதுமக்கள் தொடர்பாடல் பிரிவு – 0114354550/0112354550
தொலைநகல் 0112348855

ஒம்புட்ஸ்மன் அலுலவகம் – 0112338073

ஜனாதிபதி நிதியம் – 0112354354
கிளை எண் (4800/4814/4815/4818)
தொலைநகல் – 0112331243

Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

காரோடு திருட பட்ட சிறுவன் மீட்பு – காரை காணவில்லை – தேடும் போலீஸ்

காரோடு திருட பட்ட சிறுவன் மீட்பு – காரை காணவில்லை – தேடும் போலீஸ்

அவுஸ்ரேலிய வட கிழக்கு பகுதியில் இருந்து ஏழுவயது சிறுவனுடன் கடத்த

பட்டது ,அவ்விதம் திருட பட்ட காரில் சிக்கிய சிறுவன் தற்போது உயிருடன்

மீட்க பட்டுள்ளான் ,ஆனால் அந்த அழகிய காரை காணவில்லை

,தொடர்ந்து போலீசார் தேடி வருகின்றனர்

சிறுவனை காருக்குள் விட்டு கார் இயந்திரத்தை அணைக்காது பெற்றவர்கள்

வெளியில் சென்று காருக்கு திரும்பிய பொழுது காரை திருடன் திருடி சென்றுள்ளான் ,

இதுவே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுளளது

காரோடு திருட பட்ட சிறுவன்
காரோடு திருட பட்ட சிறுவன்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

கடலுக்குள் இருந்து பாரிய வெடிகுண்டுகள் மீட்பு – தப்பிய மனிதர்கள்

கடலுக்குள் இருந்து பாரிய வெடிகுண்டுகள் மீட்பு – தப்பிய மனிதர்கள்

அவுஸ்ரேலியா Elizabeth Reef in Lord Howe Island Marine Park

பகுதிக்குள் இருந்து பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்க பட்டுள்ளது

கடற்படையினருக்கு தகவல் வழங்க பட்ட நிலையில் விரைந்து வந்த குண்டு

செயல் இழக்க வைக்கும் பிரிவினர் கடலடியில் இருந்து பத்திரமாக குண்டை மீட்டு செயல் இழக்க வைத்தனர்

இதனால் அப் பகுதியில் உலவிய மீன் பிடி படகுகள்

தப்பித்துள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது

தொடர்ந்து அப்பகுதியில் குண்டுகள் இருக்கலாம் என்ற

சந்தேகத்தில் தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன

கடலுக்குள் இருந்து பாரிய
கடலுக்குள் இருந்து பாரிய
Posted in இலங்கை செய்திகள்

சுகாதார பாதுகாப்புகளுடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை

சுகாதார பாதுகாப்புகளுடன் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை

சுகாதார பாதுகாப்பிற்கு மத்தியில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை இன்று (11) சற்று நேரத்தில் ஆரம்பதாகவுள்ளது..

இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

நாடு பூராகவும் அமைக்கப்பட்டுள்ள இரண்டாயிரத்து தொள்ளாயிரத்து 36 மத்திய நிலையங்களில் இந்த பரீட்சை

நடைபெறவிருக்கிறது. 3 இலட்சத்து 31 ஆயிரத்து 694 பேர் பரீட்சைக்கு தோற்றவிருக்கிறார்கள். தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் பிரதேசங்களைச் சேர்ந்த மாணவர்கள்

தமது அனுமதி அட்டையினை ஊரடங்கு சட்டத்துக்கான அனுமதி அட்டையாக பயன்படுத்த முடியும். அதன் புகைப்பட பிரதி ஒன்றை

மாணவர்கள் தம்வசம் வைத்துக் கொள்ள வேண்டும் எனவும் கோரப்பட்டுள்ளது.

பரீட்சை இன்று 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆரம்பதாகவுள்ளது. பகுதி 1 மு.ப. 09.30 – 10.30 மணிவரையும், பகுதி 2 11.00 – 12.15மணி வரையும் இடம்பெறும்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்கள், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்கள்

தோற்றுகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு

தேர்வுக்கு அமர தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார்.

சகல பரீட்சை நிலையங்களிலும் கொவிட்-19 வைரஸ் பரவலை தடுக்கும்இ நடமாடும் சேவைக்கான ஏற்பாடுகளும்

மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா கூறினார். சகல பரீட்சார்த்திகளும்

பரீட்சை ஆரம்பமாவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னர் பரீட்சை நிலையத்திற்கு சமூகமளிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.