Author: நலன் விரும்பி
பொலிசாரால் 39 பேர் கைது
பொலிசாரால் 39 பேர் கைது
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறும் நபர்கள் தொடர்பில் அவதானத்துடன் உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்று (06) மாத்திரம் அவ்வாறான 39 நபர்களை கைது
செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
சாதாரண தர பரீட்சை ஆரம்பமாகும் திகதி அறிவிப்பு
ஒத்திவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையை 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1 ஆம் திகதி முதல் 11
ஆம் திகதி வரையில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல நெலும் மாவத்தையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் திருப்பி அனுப்பி வைப்பு
நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் பணிபுரிந்து வந்த ஆசிரியை ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து
நோர்வுட் பகுதில் உள்ள பாடசாலைகளுக்கு வருகை தந்த மாணவர்கள் மீண்டும் வீட்டுக்கு திருப்பி அனுப்பிவைக்கபட்டனர்.
நோர்வுட் தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்று வரும் மாணவர்களோடு தொடர்புகளை பேணிவந்திருக்கலாம் என்ற
சந்தேகத்தில் நோர்வுட் நிவ்வெளி தமிழ் வித்தியாலயம் மற்றும் அயரபி தமிழ் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு வருகை
தந்த மாணவர்கள் சிலர் வீட்டுக்கு திருப்பி அனுப்பபட்டதாக பாடசாலையின் அதிபர்கள் தெரிவித்தனர்.
இதேவேளை இன்றைய தினம் குறித்த பாடசாலைகளுக்கு குறைந்தளவிலான மாணவர்களே உள்வாங்கபட்டமை குறிப்பிடதக்கது
போதையில் போலீசாருடன் ரகளை பண்ணிய தமிழ் பெண்
போதையில் போலீசாருடன் ரகளை பண்ணிய தமிழ் பெண்
தமிழகத்தில் தமிழ் இளம் பெண் ஒருவர் அதிக போதையில் காரினை
செலுத்தி சென்றுள்ளார் அப்பொழுது நபர் ஒருவரை காரால் மோதினர் ,
தான் குற்றத்தை ஒப்பு கொள்ளாது போலீசாருடன் தகாத வார்த்தைகளை பேசி ரகளையில் ஈடுபட்டார் ,
எனினும் போலீசார் வழக்கு பதிவு செய்து சென்றதுடன் ,குறித்த குற்றம் தொடர்பில் வழக்கு விசாரணை நடத்த முடிவாகியுளளது

துருக்கி தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலி
துருக்கி தாக்குதலில் 40 அப்பாவி மக்கள் பலி
துருக்கிய அரச பயங்கரவாத இராணுவத்தினர் நடத்திய
தாக்குதலில் சிக்கி நாற்பது இராணுவத்தினர் பலியாகியுள்ளனர் ,
தொடர்ந்து தமது தாக்குதலை தீவிர படுத்தி வருகின்றனர் ,இந்த
படுகொலைகளுக்கு மனித உரிமை அமைப்பு
கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
பிரிட்டனில் 231 பேர் கொரனோவால் பலி
பிரிட்டனில் 231 பேர் கொரனோவால் பலி
பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
மட்டும் 231 பேர் பலியாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
மேலும் இதுவரை ,மொத்தம் 61,245 பேர் பலியாகியுள்ளனர் ,தற்போது தடுப்பூசி மக்கள் பாவனைக்கு விடுவிக்க பட்டுள்ள
நிலையில் குறித்த நோயானது எதிர்வரும் ஆறுமாதங்களுக்குள் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் வந்து விடும் என தெரிவிக்க படுகிறது
ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி
ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும், அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் வரும் வாரங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராணி எலிசபெத்துக்கு கொரோனா தடுப்பூசி – வரும் வாரங்களில் போட நடவடிக்கை
இரண்டாம் எலிசபெத் ராணி
இங்கிலாந்து நாட்டின் ராணி இரண்டாம் எலிசபெத்துக்கும் (வயது 94), அவரது கணவர் இளவரசர் பிலிப்புக்கும் (99) வரும் வாரங்களில் அமெரிக்காவின் பைசர், ஜெர்மனியின் பயோ என்டெக்
நிறுவனங்கள் கூட்டாக தயாரித்துள்ள தடுப்பூசி போடப்படும் என்று இங்கிலாந்து நாளிதழ் ‘டெய்லி மெயில்’ கூறுகிறது.
கடந்த புதன்கிழமை, இந்த தடுப்பூசியின் அவசர பயன்பாட்டுக்கான அனுமதியை இங்கிலாந்து வழங்கியது நினைவு கூரத்தக்கது.
இந்த தடுப்பூசியின் 8 லட்சம் ‘டோஸ்’, அடுத்த வாரம் இங்கிலாந்து வந்து சேரும் என அதன் மந்திரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த தடுப்பூசிகள் வந்ததும், நாளை (செவ்வாய்க்கிழமை) முதல்
அதிக முன்னுரிமை குழுக்களில் உள்ளவர்களுக்கு 50 ஆஸ்பத்திரி மையங்களில் தடுப்பூசி போடப்படும் என இங்கிலாந்து ஊடகங்கள் கூறுகின்றன
மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி
மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி
மணமகளுக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் பாதுகாப்பு உடை அணிந்து ஜோடி ஒன்று திருமணம் செய்துகொண்டது.
மணமகளுக்கு கொரோனா – பாதுகாப்பு உடையுடன் திருமணம் முடித்த ஜோடி
பாதுகாப்பு உடையுடன் திருமணம் செய்யும் ஜோடி
ராஜஸ்தான் மாநிலம் ஷாபாத் நகரில் பரா பகுதியில் ஜோடி ஒன்று திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தது. அதற்கு முன்னதாக,
மணமக்களுக்கு கொரோனா பாதிப்பு பற்றிய பரிசோதனை நடத்தப்பட்டது.
இதன் முடிவுகள் வெளியானதில், மணமகளுக்கு கொரோனா தொற்று
இருப்பது உறுதியானது. எனினும், திருமணம் செய்துகொள்வதில் இருவரும் உறுதியாக இருந்துள்ளனர்.
இதையடுத்து, மணமக்கள் இருவரும் கொரோனா தடுப்புக்கான தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டனர். அதன்பின்
இருவரும் சடங்குகளை முறையாகப் பின்பற்றி திருமணம் செய்துகொண்டனர்.
அவர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த நபரும் தனிநபர் பாதுகாப்பு உடைகளை அணிந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் மணமகன்
பாரம்பரிய தலைப்பாகை மற்றும் கையுறைகளை அணிந்து கொண்டார். இதேபோல் மணமகளும் முக கவசம் மற்றும் கையுறைகளை அணிந்தபடி காணப்பட்டார்.
கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைப்பிடித்து இந்த ஜோடி
திருமணம் செய்து கொண்டது. இவர்களின் இந்த திருமணம் பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 17 பேர் பலி-23 பேர் காயம்
பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்து – 17 பேர் பலி-23 பேர் காயம்
பிரேசிலில் 45 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து பேருந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் உயிரிழந்தனர்.
பிரேசிலில் சுற்றுலாப் பயணிகள் 40 பேருடன் ஒரு பஸ் சென்று கொண்டு இருந்தது. மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தில் ஜோவா
மோன்லேவாட் என்னுமிடத்தில் 45 அடி உயரப் பாலத்தில் சென்று கொண்டிருந்த போது பஸ் இயந்திரக் கோளாறு காரணமாக
பாலத்தில் இருந்து கீழே விழுந்தது. இந்த விபத்தில் 17 பேர் உயிரிழந்தனர் .
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் காயம் அடைந்தவர்களை
மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் 23 பேர் படுகாயம் அடைந்து உள்ளனர்.
விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
கடந்த புதன்கிழமை சாவோ பாலோவின் டாகுவாவில் ஒரு பஸ் மற்றும் டிரக் மோதிக்கொண்டதில் 42 பேர் பலியானார்கள்.
பிரேசிலில் ஒரு வாரத்தில் ஏற்பட்ட இரண்டாவது கொடிய விபத்து இது ஆகும்.
கொரனோ எதிரொலி -புதிய பிரதேசங்கள் பல முடக்கம்
கொரனோ எதிரொலி -புதிய பிரதேசங்கள் பல முடக்கம்
கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக மேல் மாகாணத்தில் மேலும் புதிய பிரதேசங்கள் நாளை (7) காலை 5 மணியிலிருந்து முடக்கப்படவுள்ளன.
இதற்கமைய, கொம்பனித்தெரு பொலிஸ் பிரிவின் ஹுனுப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, கருவாத்தோட்ட பொலிஸ் பிரிவின்
60ஆம் தோட்டம், வெள்ளவத்தை- கோகிலா வீதி என்பன தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் வத்தளை பொலிஸ் பிரிவில் கெரவலப்பிட்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு, ஹேகித்த, குருந்துஹேன,
அவரிவத்த,வெலிகடமுல்ல ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
அத்துடன் பேலியகொட பொலிஸ் பிரவின் பேலியகொடவத்த, கஹபட, மீகாஹவத்த,பட்டிய வடக்கு ஆகிய கிராம உத்தியோகத்தர்
பிரிவுகளும் கிரிபத்கொட பொலிஸ் பிரிவின் வெலேகொட வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளும் தனிமைப்படுத்தப்படவுள்ளன.
துப்பாக்கி சூட்டு சம்பவம் -116 பேரிடம் விசாரணை
துப்பாக்கி சூட்டு சம்பவம் -116 பேரிடம் விசாரணை
மஹர சிறைச்சாலையில் கடந்த வாரம் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில்,குற்றப் புலனாய்வு பிரிவினரால், 116 பேரிடம்
வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதென, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இதற்கமைய, நேற்றைய தினத்தில் மாத்திரம் 38 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை மொத்தமாக 116 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் இதில், சிறைச்சாலை அதிகாரிகள் 45பேர்,
வைத்தியர்கள் 11 பேர், தாதியர் 7 பேர், கைதிகள் 53 பேரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சூறாவளி நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது
சூறாவளி நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது
புரெவி (“BUREVI”) சூறாவளியானது ஒரு ஆழமான தாழமுக்கமாக வலுவிழந்து அது நாட்டை விட்டு மேலும் விலகிச் செல்கின்றது.
சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறைவடையும் என்று வளிமண்டலவியல்
திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுளள்து.
யாழ்ப்பாணம் ,முல்லைத்தீவு ,மன்னார் ,திருகோணமலை மற்றும் புத்தளம்
ஆகிய மாவட்டங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை செய்யக்கூடும்.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை
மாவட்டங்களிலும் பல இடங்களில் குறிப்பாக காலை வேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப்பின்னர் சில இடங்களில்
மழை அல்லது இடியுடன் கூடிய மழை செய்யக்கூடும் என்றும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவில் -காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு
வவுனியாவில் -காணாமல் போன மாணவன் சடலமாக மீட்பு
வவுனியா, பேராற்றில் காணாமல் போன மாணவனின் சடலம், இன்று (06) காலை மீட்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு தினங்களுக்கு முன் பேராறு நீர்த்தேக்கத்தை பார்வையிடுவதற்காக
வவுனியா விபுலானந்தாக் கல்லூரி மாணவன் தி.தனுசன் நண்பர்களுடன் சென்றிருந்தார்.
இந்நிலையில், நீரில் இழுத்துச்செல்லப்பட்ட தனுசன் பலத்த தேடுதலின்
போதும் கண்டு பிடிக்கப்படாத நிலையில், அவரது சடலம்
நீர்ப்பகுதியில் மிதந்துள்ளமையை அடுத்து நேற்றுக்காலை மீட்கப்பட்டுள்ளது.
ஈராக்கிற்கு சென்ற ஈரான் புரட்சி படை தளபதி
ஈராக்கிற்கு சென்ற ஈரான் புரட்சி படை தளபதி
ஈராக்கிற்கு வான்வழியாக சென்று பாதுகாப்பு வாகனத்தில் பயணித்த
பொழுது ஈரானிய இரண்டாம் நிலை தளபதி சோலைமானி படுகொலை செய்ய பட்டார்
அவர் அங்கம் வகித்த புரட்சி காவல் படையின் தற்கால தளபதியான Ismail Ghaani திடீர் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்
எனினும் இவர் பாது காப்பக நாடு திரும்பியுள்ளார் ,சொலைமானி விட்ட பணியை
இவர் ஆரம்பித்துள்ளார் ,இதனையே அடுத்து இஸ்ரேலின் இலக்கில் இவர் தற்போது இடம்பிடித்துள்ளார் ,
விரைவில் இவரும் கொலை செய்யப்படலாம் என எதிர்பார்க்க படுகிறது
சிரியா நிலைகள் மீது துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்
சிரியா நிலைகள் மீது துருக்கிய இராணுவம் கடும் தாக்குதல்
துருக்கிய இராணுவத்தினர் சிரியா இராணுவம் மற்றும் அவர் தம் ஆதரவு
படைகள் நிலைகள் மீது இலக்கு வைத்து கடும் எறிகணை தாக்குதலை மேற்கொண்டனர்
இந்த தாக்குதலில் சிரியா இராணுவத்தினர் மற்றும் ஆதரவு
படைகள் பலத்த இழப்பை சந்தித்துள்ளதாக துருக்கிய இராணுவம் தெரிவிக்கிறது
இவ்விதம் இரு தரப்பு இராணுவத்தினர் பரஸ்பர தாக்குதலில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்
திருமண வீடுகளில் திருடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்
திருமண வீடுகளில் திருடுவதற்காக குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்
திருமண வீடுகளில் திருடுவதற்காக ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து சிறுவர்களை குத்தகைக்கு எடுக்கப்பட்ட அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.
திருமண வீடுகளில் திருடுவதற்காக ரூ.12 லட்சம் வரை குத்தகைக்கு எடுக்கப்பட்ட சிறுவர்கள்
டெல்லி மற்றும் வடமாநிலங்களில் தற்போது திருமண காலம் ஆகும். சமீபத்தில் திருமணம் நடைபெற்ற சில மண்டபங்களில் விலையுயர்ந்த நகைகள் மற்றும் ரொக்கப்பணம் திருடு போனதாக
டெல்லி போலீசுக்கு புகார்கள் வந்தன. அவை தொடர்பாக விசாரித்ததில், ரூ.1 கோடி மதிப்புக்கு மேல் பணம், நகைகள் திருடப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து முக்கியமான
திருமணங்களை போலீசார் கண்காணிக்க தொடங்கினர். பின்னர் அங்கு பதிவான வீடியோ காட்சிகளை பார்வையிட்டனர்.
அப்போது ஒரே நபர்கள் பல திருமணங்களில் நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களில் 5 வாலிபர்கள் மற்றும் 2 சிறுவர்களை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் ரொக்கம் மற்றும் நகைகள், பரிசுப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. விசாரணையில், அவர்கள் அனைவரும் மத்தியபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது
தெரியவந்தது. இந்த கும்பலில் உள்ள சிறுவர்கள் ஆண்டுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை கொடுத்து குத்தகைக்கு எடுக்கப்பட்டவர்கள் என்ற அதிர்ச்சி தகவலும் கிடைத்தது.
குத்தகைக்கு எடுக்கப்பட்ட அவர்களுக்கு நூதன திருட்டுகள் பற்றி சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்பட்டு உள்ளன.
இந்த கும்பலில் இன்னும் பலபேர் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர்
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர்
இந்தியா கடுமையான எதிர்ப்பு தெரிவித்து இருந்த நிலையில், கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் கருத்து
வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதுபற்றி கருத்து தெரிவித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ருடோ, அமைதியான போராட்டம் நடத்தும் உரிமையை கனடா
எப்போதும் ஆதரிக்கும் என்று கூறினார். விவசாயிகள் நிலை குறித்து கவலை தெரிவித்தார். சில கனடா மந்திரிகள் மற்றும் எம்.பி.க்களும் இதுபோன்ற கருத்துக்களை தெரிவித்தனர்.
இதையடுத்து, இந்தியாவுக்கான கனடா தூதருக்கு மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நேற்று சம்மன் அனுப்பியது.
அவரை வெளியுறவுத்துறை அமைச்சக அலுவலகத்துக்கு நேரில் வரவழைத்தது. அவரிடம் கனடா பிரதமரின் கருத்துக்காக கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கனடா பிரதமரும், அந்நாட்டு அரசியல் தலைவர்களும் தெரிவித்த கருத்துகளை, இந்தியாவின் உள்விவகாரங்களில் ஏற்றுக்கொள்ள முடியாத தலையீடாக கருதுவதாக மத்திய வெளியுறவுத்துறை
அமைச்சகம் தெரிவித்தது. இதேநிலை நீடித்தால், இருதரப்பு உறவுகள் கடுமையாக பாதிக்கப்படும் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.
இந்நிலையில், இரு தரப்பு உறவு பாதிக்கப்படும் என இந்தியா எச்சரிக்கை விடுத்தது பற்றி செய்தியாளர்கள் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பினர்.
இக்கேள்விக்கு பதிலளித்த ஜஸ்டின் ட்ரூடோ, உலகின் எந்த மூலையிலும் நடைபெறும் அமைதியான போராட்டத்திற்கு கனடா
துணை நிற்கும். போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் நோக்கில் பேச்சுவார்த்தை தொடங்கியிருப்பது மகிழ்ச்சியை அளிக்கிறது என தெரிவித்தார்.
இந்தியா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்த நிலையில், கனடா பிரதமர் மீண்டும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாக பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருகோணமலையில் வெடிகுண்டுகள் மீட்பு
திருகோணமலையில் வெடிகுண்டுகள் மீட்பு
திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாப்பொல காட்டுப்பகுதியில் நிலத்தில் புதைத்து
வைக்கப்பட்டிருந்த 5 கைக்குண்டுகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
இராணுவப் புலனாய்வுத் துறைக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில், சேருநுவர பொலிஸார் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை. இதுத் தொடர்பில் மேலதிக விசாரணைகளை
சேருநுவர பொலிஸார் மேற்கொண்டு வருவதோடு, நீதிமன்ற அனுமதியை பெற்று மீட்கப்பட்டு கைக்குண்டுகள் செயழிலக்கச் செய்யப்படவுள்ளன
கண்டியில் நில நடுக்கம் – பீதியில் மக்கள்
கண்டியில் நிலநடுக்கம் – பீதியில் மக்கள்
இன்று கண்டி, திகனையில் மூன்று தடவைகள் நிலம் அதிர்வு ஏற்பட்டுள்ளது
. இதனால் விக்டோரியா நீர்த்தேக்கத்தின் அணிகள் பாதுகாப்பாக உள்ளத்தில் தெரிவிக்க பட்டுளள்து
எனினும் மக்கள் இந்த அணைக்கட்டுகள் உடைந்தால் தாழ்வான
பகுதிகள் பாதிக்க படும் அபாயம் ஏற்படும் என அச்சம் கொண்டுள்ளனர்
எனினும் முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை
இலங்கையில் கொரனோவால் 130 பேர் பலி
இலங்கையில் கொரனோவால் 130 பேர் பலி
கொவிட் 19 தொற்றுக்குள்ளான நோயாளர்களில் ஒருவரின் மரணம் இடம்
பெற்றிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் சற்று முன்னர் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அத்தோடு இதற்கமைவாக இலங்கையில் பதிவான மொத்த கொவிட் 19 தொற்றக்குள்ளான நோயாளர்களின் மரண எண்ணிக்கை 130 ஆகும்.
- பிலியந்தலை பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான ஆண் நபர். கொவிட் தொற்று நோயாளராக இனங்காணப்பட்ட பின்னர் தேசிய தொற்று நோயியல் பிரிவில் சிகிச்சைப்
- பெற்றுக்கொண்டிருந்த போது 2020 டிசம்பர் மாதம் 04ஆம் திகதி உயிரிழந்தார். மரணத்திற்கான காரணம் கொவிட் -19
- நிமோனியாவால் அதிகரித்த பாக்டீரியா தொற்று மற்றும் இதய நோய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.








