Posted in Uncategorized

வைரஸ் வேகமாக பரவி வருவதனால் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள்

வைரஸ் வேகமாக பரவி வருவதனால் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள்

தற்போது கொவிட் வேகமாக பரவி வருவதனால், முடிந்தால் பொதுமக்கள் இரண்டு முகக் கவசங்களை அணியுங்கள்.

அத்துடன் வீட்டிலிருந்து வெளியே செல்கின்ற சந்தர்ப்பத்தில் பேஸ் ஷீல்ட் கவசம் ஒன்றை

அணிவதும் மிக முக்கியம் என்று ஆரம்ப சுகாதார மற்றும் கொவிட் கட்டுப்பாட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார்.

இதேவேளை, பொதுமக்கள் தடுப்பூசியின் வகையை பொருட்படுத்தாமல், நாட்டில் கிடைக்கின்ற

ஏதாவது ஒரு வகையான தடுப்பூசியை, அருகிலுள்ள தடுப்பூசி நிலையம் ஒன்றிற்கு சென்று மிகவும் விரைவாக பெற்றுக்கொள்ளுமாறும் அவர் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டார்.

    Posted in Uncategorized

    ஆதிவாசி தலைவரின் மனைவி மரணம்

    ஆதிவாசி தலைவரின் மனைவி மரணம்

    கொரோனாவைரஸ் தொற்றுக்கு உள்ளான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆதிவாசி தலைவரின் மனைவி “கீத் மெனிக்கே” மரணமடைந்தார்.

      Posted in சினிமா

      காதலி மடியில் கடைசி மூச்சு – சித்தார்த் சுக்லாவின் மரணமும்

      காதலி மடியில் கடைசி மூச்சு – சித்தார்த் சுக்லாவின் மரணமும்

      சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர்.

      காதலி மடியில் கடைசி மூச்சு – சித்தார்த் சுக்லாவின் மரணமும்… தொடரும் மர்மங்களும்
      சித்தார்த் சுக்லா, ஷேனாஸ் கில்


      பாலிவுட்டில் பிரபலமான நடிகராக திகழ்ந்து வந்தவர் சித்தார்த் சுக்லா. 40 வயதே ஆன இவர் நேற்று முன்தினம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இவரது மரணம் திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

      நடிகர் சித்தார்த் சுக்லா இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியின் 13-வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலை வென்றார். அதே சீசனில் சக போட்டியாளராக பங்கேற்ற ஷேனாஸ் கில்லை, நடிகர் சித்தார்த்

      காதலித்து வந்துள்ளார். காதலன் சித்தார்த்தின் திடீர் மரணத்தால் ஷேனாஸ் பேரதிர்ச்சியில் இருக்கிறாராம்.

      இந்நிலையில் சித்தார்த் இறப்பதற்கு முந்தைய நாள் (செப் 1-ந் தேதி) இரவு என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது. அன்றைய தினம் இரவு 9.30 மணி அளவில் வீட்டிற்கு வந்திருக்கிறார் சித்தார்த். வீட்டிற்குள் நுழைந்ததும் தனக்கு ஏதோ மாதிரி இருப்பதாக குடும்பத்தினரிடம் கூறியுள்ளார்.

      சித்தார்த் சுக்லா, ஷேனாஸ் கில்
      சித்தார்த் சுக்லா, ஷேனாஸ் கில்

      அந்த சமயத்தில் வீட்டில் இருந்த சித்தார்த்தின் அம்மாவும், காதலி ஷேனாஸும் சேர்ந்து லெமன் ஜூஸும், ஐஸ்கிரீமும் கொடுத்திருக்கிறார்கள். அதை சாப்பிட்ட பின்னரும், தனக்கு ஒரு மாதிரியாக இருப்பதாக தெரிவித்துள்ளார் சித்தார்த். இதையடுத்து ஓய்வெடுக்குமாறு அம்மாவும், ஷேனாஸும் அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

      பின்னர் படுக்கைக்கு சென்ற சித்தார்த்தால் தூங்கவும் முடியவில்லையாம். இதையடுத்து தன் அருகிலேயே இருக்குமாறு காதலி ஷேனாஸிடம் கூறியிருக்கிறார். நள்ளிரவு 1.30 மணி அளவில் ஷேனாஸின் மடியில் தலை வைத்து தூங்கியிருக்கிறார் சித்தார்த். இதையடுத்து ஷேனாஸும் தூங்கிவிட்டார்.

      காலை 7 மணிக்கு எழுந்து பார்த்தபோது சித்தார்த் எந்தவித அசைவுமின்றி இருந்திருக்கிறார். பலமுறை எழுப்ப முயன்றும் கண்ணை திறக்கவில்லையாம். இதனால் பதற்றமடைந்த ஷேனாஸ் பயந்துபோய் அவரின் குடும்பத்தாரை அழைத்திருக்கிறார். அவர்கள் தங்கள் குடும்ப மருத்துவரை வரவழைத்தனர். சித்தார்த்தை பரிசோதனை செய்த மருத்துவரோ அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்திருக்கிறார்.

      சித்தார்த் சுக்லா, ஷேனாஸ் கில்
      சித்தார்த் சுக்லா, ஷேனாஸ் கில்

      சித்தார்த்தும் – ஷேனாஸும் வருகிற டிசம்பர் மாதம் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தார்களாம். அதற்குள் சித்தார்த் மரணமடைந்திருப்பது ஷேனாஸை துயரத்தில் ஆழ்த்தி உள்ளது. சித்தார்த்தின் மறைவை ஏற்க முடியாமல் ஷேனாஸ் தவிப்பதாக அவருக்கு நெருக்கமானவர்கள் கூறுகிறார்கள்.

      சித்தார்த் சுக்லா மாரடைப்பால் மரணமடைந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டாலும், அவரது மரணத்தில் பலரும் சந்தேகம் எழுப்பி வருகின்றனர். இதனிடையே சித்தார்த்தின் உள் உறுப்பு மாதிரிகள் பரிசோதனைக்காக மும்பையில் உள்ள கலினா தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. இதன் பரிசோதனை அறிக்கை வந்த பின்பே அவரின் மரணத்திற்கான மர்மம் நீங்கும் எனத் தெரிகிறது.

      Posted in சினிமா

      திரிஷாவையும், மணிரத்னத்தையும் கைது செய்யக்கோரி போலீசில் புகார்

      திரிஷாவையும், மணிரத்னத்தையும் கைது செய்யக்கோரி போலீசில் புகார்

      ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் நடிகை திரிஷா மற்றும் இயக்குனர் மணிரத்னம் மீது இந்து அமைப்புகள் புகார் தெரிவித்துள்ளன.

      திரிஷாவையும், மணிரத்னத்தையும் கைது செய்யக்கோரி போலீசில் புகார்
      திரிஷா, மணிரத்னம்
      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

      கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. இந்த படத்தை மணிரத்னம் இயக்குகிறார். இப்படம் 2 பாகங்களாக

      தயாராகிறது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு மத்தியபிரதேச மாநிலம் ஹரிகேஷ்வரில் நடைபெற்று வருகிறது.

      அங்குள்ள ராணி அகில்யாபாய் கோட்டை, அரண்மனை மற்றும் அவரால் அமைக்கப்பட்ட சிவன் கோவில்களில், கடந்த 5 நாட்களாக படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு நடிகர்கள் கார்த்தி, ரகுமானுடன் நடிகை திரிஷா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.

      ஹரிகேஷ்வரில் நர்மதா நதியின் கரைகளில் பல சிவலிங்கங்கள் நந்தியுடன் அமைந்துள்ளன. கடந்த 1767-ம் ஆண்டு இந்த பகுதியை ஆண்ட ராணி அகில்யாபாயால் அமைக்கப்பட்ட

      சிவலிங்கங்கள் மற்றும் நந்தி ஆகியவை இந்துக்களால் புனிதமாக கருதப்படுகிறது. நேற்று அக்கரை பகுதியில் நடிகை திரிஷா ஒரு படகில் வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது.

      கரையில் வந்து இறங்கிய நடிகை திரிஷா கரையில் இருந்த ஒரு நந்தி மற்றும் சிவலிங்கத்துக்கு இடையே நடந்து வரும் காட்சியும் படமாக்கப்பட்டது. அப்போது நடிகை திரிஷா சிவலிங்கம், நந்தி சிலைகளுக்கு இடையே காலணியுடன் நடந்து வந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

      நடிகை திரிஷா காலணியுடன் நடந்து வந்ததால் அந்த சிவலிங்கம் அவமதிக்கப்பட்டதாகவும், இதற்காக நடிகை திரிஷாவையும், இயக்குனர் மணிரத்னத்தையும் கைது செய்ய வேண்டும்

      என்றும் ஹரிகேஷ்வர் பகுதியை சேர்ந்த இந்து அமைப்புகள் போர்க்கொடி தூக்கி உள்ளன. இது தொடர்பாக ஹரிகேஷ்வர் போலீஸ் நிலையத்தில் இந்து அமைப்புகள் புகாரும் தெரிவித்துள்ளன.

      இந்த பகுதியில் ஏற்கனவே சல்மான்கான் நடித்த ‘தபாங்-3’ படப்பிடிப்பின் போதும் சிவலிங்கத்தின் மேற்புறம் பலகை அமைத்து, அதில் காலணிகளுடன் நடந்ததாக புகார் எழுந்தது. அதன்பிறகு

      ‘யமுனா பக்லா தீவானா’ படத்தின் படப்பிடிப்பின் போதும் சர்ச்சை எழுந்தது. அதன்பிறகு தற்போது ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

        Posted in சினிமா

        பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை கண்கலங்க வைத்த சூர்யா

        பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை கண்கலங்க வைத்த சூர்யா

        பாலிவுட் திரையுலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அமிதாப் பச்சன், நடிகர் சூர்யாவை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் என புகழாரம் சூட்டி உள்ளார்.

        பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனை கண்கலங்க வைத்த சூர்யா
        சூர்யா, அமிதாப் பச்சன்
        இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

        சூர்யா நடிப்பில் கடந்தாண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘சூரரைப்போற்று’.

        சுதா கொங்கரா இயக்கி இருந்த இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சில சுவாரஸ்யமான நிகழ்வுகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டிருந்தது.

        குறிப்பாக சூர்யா, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி ஆகியோரின் நடிப்புக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. சமீபத்தில் நடந்த மெல்பெர்ன் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு இரண்டு விருதுகள் கிடைத்தன.

        இந்நிலையில், சூரரைப்போற்று படத்தின் கிளைமேக்ஸில் இடம்பெறும் ‘கையிலே ஆகாசம்’ பாடல் வீடியோவை பார்த்தபோது தன்னால் உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும், தன்னை மீறி கண்ணீர் விட்டதாகவும் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் தெரிவித்துள்ளார்.

        மேலும் அவர் நடிகர் சூர்யாவை தென்னிந்திய சூப்பர் ஸ்டார் எனவும் புகழாரம் சூட்டி உள்ளார். ‘கையிலே ஆகாசம்’ பாடல் பார்த்து பாராட்டிய நடிகர் அமிதாப் பச்சனுக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டுவிட்டர் வாயிலாக நன்றி தெரிவித்துள்ளார்.

        Posted in Uncategorized

        கொரானாவுக்கு மருத்துவர் பலி

        கொரானாவுக்கு மருத்துவர் பலி


        ஆனமடுவ சுகாதார திணைக்களத்தின் மேலதிக மருத்துவ அதிகாரியான வைத்தியர் வசந்த

        ஜயசூரிய கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

        இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர் கடவத்தையை வசிப்பிடமாக கொண்டவர்.

        நீர்கொழும்பு பொது மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சில காலம் பணியாற்றி வந்த ஜெயசூர்ய, பின்னர் ஆனமடு சுகாதார அலுவலர் திணைக்களத்திற்கு மாற்றப்பட்டார்.

        மேலும், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு சுமார் 10 நாட்கள் அங்கொட கொரோனா சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

          Posted in Uncategorized

          போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்

          போதைப்பொருளுடன் சிக்கிய வெளிநாட்டு கப்பல்

          இலங்கையின் தெற்கு கடல் பகுதியில் பாரியளவான போதைப்பொருளுடன் வெளிநாட்டு கப்பலொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

          7 மாலுமிகளுடன் பயணித்த மீன்பிடி கப்பலொன்றிலிருந்தே இந்த போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

          இந்த நிலையில், கப்பலில் பயணித்த 7 பேரும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

            செட்டிநாடு மீன் குழம்பு இப்படி செய்ங்க உடனே காலியாகும்
            Posted in Uncategorized

            நித்திரையில் சடலங்களாக மீட்க பட்ட அக்கா தம்பி

            நித்திரையில் சடலங்களாக மீட்க பட்ட அக்கா தம்பி

            பூகொட – யகம்பே பிரதேசத்தில் நித்திரைக்குச் சென்ற அக்கா மற்றும் தம்பி இருவரும் காலையில் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

            43 வயதுடைய திருமணமாகாத சகோதரியும், 38 வயதுடைய சகோதரரும் ஒரே வீட்டில் வசித்து வந்துள்ளார்.

            இந்த நிலையில், அவர்கள் இருவரும் வயிற்று வலிக்கு சிகிச்சை பெற்று நித்திரைக்கு சென்றிருந்ததாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

            பின்னர் நேற்று காலை அவரது உறவினர் ஒருவர் குறித்த வீட்டிற்கு சென்ற போது அவர்கள் இருவரும் கீழே விழுந்து உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

            இதனையடுத்து சுகாதார பிரிவிற்கு குறித்த நபர் அறிவித்துள்ளார்.

            பின்னர் சடலங்கள் வத்துபிடிவல ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு மேற்கொள்ளப்பட்ட என்டிஜன் பரிசோதனையில் குறித்த இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

              Posted in Uncategorized

              செக்ஸ் இணையத்தளங்களுக்கு பொலிசார் விசேட அறிவுறுத்தல்

              செக்ஸ் இணையத்தளங்களுக்கு பொலிசார் விசேட அறிவுறுத்தல்

              பலாங்கொடை பஹந்துடாவ நீர்வீழ்ச்சிக்கு அருகில் பதிவு செய்யப்பட்ட ஆபாச வீடியோவை

              பதிவேற்றிய இணையதளங்கள் மற்றும் இணைய பக்கங்களில் இருந்து அவற்றை நீக்குமாறு இலங்கை பொலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

              குறித்த வீடியோ தொடர்பாக கணினி குற்றப்பிரிவு விசாரணைககளை ஆரம்பித்திருப்பதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

              இதுபோன்ற வீடியோக்களை வைத்திருப்பதும் மற்றும் ஏனையவர்களுக்கிடையே பகிர்ந்து கொள்வதும் இலங்கை சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் அவர் கூறினார்.

                Posted in Uncategorized

                மாணவர்களுக்கு பைசர் ஊசி -செலுத்த கோட்டா உத்தரவு

                மாணவர்களுக்கு பைசர் ஊசி -செலுத்த கோட்டா உத்தரவு

                சுகாதார அதிகாரிகள் ஒப்புதல் அளித்தவுடன் பாடசாலை மாணவர்கள் ஃபைசர் தடுப்பூசி பெற

                வாய்ப்புள்ளது என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது,

                  Posted in சினிமா

                  சிறையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் மீரா மிதுன்

                  சிறையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் மீரா மிதுன்

                  போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு தற்கொலைக்கு தூண்டுவதாக நடிகை மீரா மிதுன் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்தார்.

                  ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து வெளிவர முடியாமல் தவிக்கும் மீரா மிதுன்
                  மீரா மிதுன்


                  பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுன், மத்திய குற்றப்பிரிவு போலீசாரால், கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே அவர்

                  மீது எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஊழியரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, நடிகை மீரா மிதுன் மீது நீதிமன்றத்தில், போலீசார் நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

                  இந்நிலையில், இந்த வழக்கில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார். அப்போது அவர் மாஜிஸ்திரேட்டிடம், போலீசார் தன் மீது வழக்குகள் போட்டு

                  தற்கொலைக்கு தூண்டுவதாக புகார் தெரிவித்தார். மேலும் எழும்பூர் போலீசார், இந்த வழக்குகள் குறித்து தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தன் சார்பாக வாதாட வழக்கறிஞர் வரவில்லை எனவும் குற்றம் சாட்டினார்.

                  மீரா மிதுன்

                  பின்னர், இந்த வழக்கில் நீதிபதி அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மீரா மிதுன் மீது மொத்தமுள்ள நான்கு வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

                  பட்டியலினத்தவர்களை அவதூறாகப் பேசிய வழக்கில் மட்டும் அவருக்குஜாமீன் வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

                    Posted in சினிமா

                    கீர்த்தி சுரேஷ் மகனுக்கு 3வது பிறந்தநாள்

                    கீர்த்தி சுரேஷ் மகனுக்கு 3வது பிறந்தநாள்

                    ரஜினியுடன் அண்ணாத்த, செல்வராகவனுடன் சாணிக்காயிதம் படத்தில் நடித்துள்ள கீர்த்தி சுரேஷ், தனது மகனுக்கு 3வது பிறந்தநாள் என்று கூறியிருக்கிறார்.

                    கீர்த்தி சுரேஷ் மகனுக்கு 3வது பிறந்தநாள்…. வாழ்த்தும் ரசிகர்கள்
                    கீர்த்தி சுரேஷ்
                    இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                    தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவர் தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் ‘அண்ணாத்த’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

                    மேலும் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் சாணிக்காயிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

                    இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், “எனது ஆண் குழந்தைக்கு 3 வயதாகிவிட்டது. இதை என்னால் நம்பவே முடியவில்லை. நான் முதல்நாளில் பார்த்த மாதிரியே இருக்கிறது. எனது சிறந்த அல்லது இருண்ட நாட்களில் நீங்கள் என்னை நிரப்பும் மகிழ்ச்சி

                    கற்பனை செய்ய முடியாதது. என்மீது அளவுகடந்த அன்பு செலுத்தும் உன்னை நான் நேசிக்கிறேன் அன்பே Nyke“ என்று தன்னுடைய செல்ல நாய்க்குட்டியின் பிறந்தநாளை மகிழ்ச்சியோடு பகிர்ந்துள்ளார்.

                    கீர்த்தி சுரேஷ்
                    நாய்க்குட்டியுடன் கீர்த்தி சுரேஷ்

                    இந்தப் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. மேலும் நாய்க்குட்டி ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

                      Posted in சினிமா

                      ஹீரோவாக நடிக்கும் செந்தில்

                      ஹீரோவாக நடிக்கும் செந்தில்

                      சுரேஷ் சங்கையா இயக்கும் படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளதாகவும், படத்தில் அவருக்கு ஜோடி யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது.

                      செந்தில் ஹீரோவாக நடிக்கும் படத்தின் முக்கிய அப்டேட்டை வெளியிட்ட படக்குழு
                      செந்தில்
                      இந்த செய்தியை ஆடியோ வடிவில் கேட்க “Play” பட்டனை கிளிக் செய்யவும்.

                      தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர் செந்தில். இவர் கவுண்டமணி உடன் சேர்ந்து நடித்த காமெடிக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இதுவரை நகைச்சுவை வேடங்களில் மட்டுமே நடித்து வந்த செந்தில், தற்போது முதன்முறையாக ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து முடித்துள்ளார்.

                      கிடாயின் கருணை மனு படத்தை இயக்கிய சுரேஷ் சங்கையா இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் நடிகர் செந்தில் ஆயுள் தண்டனை கைதியாக நடித்துள்ளதாகவும், படத்தில் அவருக்கு

                      ஜோடி யாரும் இல்லை எனவும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

                      தயாரிப்பாளர் சமீர், நடிகர் செந்தில், இயக்குனர் சுரேஷ் சங்கையா
                      தயாரிப்பாளர் சமீர், நடிகர் செந்தில், இயக்குனர் சுரேஷ் சங்கையா

                      இந்நிலையில், நடிகர் செந்தில் இப்படத்திற்கு டப்பிங் பேசி முடித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இப்படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை விரைவில் வெளியிட உள்ளார்களாம்.

                        Posted in இலங்கை செய்திகள்

                        ஊரடங்கு 13 வரை நீடிப்பு – தினறும் கோட்டா அரசு

                        ஊரடங்கு 13 வரை நீடிப்பு – தினறும் கோட்டா அரசு

                        இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது
                        ஊரடங்கு சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

                        இந்த சட்டமானது எதிர்வரும் 13 ஆம் திகதிவரை நீடிக்க பட்டுள்ளது என ஆளும் அரசு தெரிவித்துள்ளது

                          Posted in Uncategorized

                          முல்லைத்தீவில் கொரனோ சுடலை – அதிகரிக்கும் மரணம்

                          முல்லைத்தீவில் கொரனோ சுடலை – அதிகரிக்கும் மரணம்

                          முல்லைத்தீவு மாவட்டத்தில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை தகனம் செய்வதற்கான இடம் ஒன்று நேற்றைய தினம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது.

                          சடலங்களை தகனம் செய்வதற்கான ஒரு இடம் அமையவேண்டுமென்ற மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதனின் திட்டமிடலின் கீழ் அவரது தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர்

                          ம.உமாமகள், கரைதுறைப்பற்று பிரதேச சபை தவிசாளர் க.விஜிந்தன், பிராந்திய சுகாதார பணிமனை வைத்திய அதிகாரிகள், வன வளத்திணைக்கள அதிகாரிகள் ஆகியோர்

                          முதற்கட்டமாக கூட்டு கள ஆய்வினை மேற்கொண்டு இடத்தினை அடையாளப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

                          கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து செல்லும் நிலையில் வவுனியாவில் உள்ள எரிவாயு தகனமேடை பழுதடைந்து காணப்படுவதால்

                          முல்லைத்தீவு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் சடலங்கள் மாவட்ட மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளன.

                          தண்ணீரூற்று நெடுங்கேணி வீதியில் கயட்டை காட்டிற்கு அருகில் வனவளத்திணைக்களத்திற்கு சொந்தமான காட்டுப்பகுதியில் 06 ஏக்கர் காணியை ஒதுக்கீடு செய்வதாகவும் முதற்கட்டமாக

                          ஒன்றரை ஏக்கர் வன வளத்திணைக்களத்திடம் இருந்து விடுவித்து தருவதாக வனவளத்திணைக்கள அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

                          குறித்த பகுதிக்கு அருகில் மின்சார வசதி உள்ளமையினால் சடலங்களை தகனம் செய்வதற்கு ஏற்றவகையில் மின்சார எரிவாயு தகனமேடை அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

                            Posted in சினிமா

                            பிகினி உடையில் ஊஞ்சல் ஆட அழைக்கும் சன்னி லியோன்

                            பிகினி உடையில் ஊஞ்சல் ஆட அழைக்கும் சன்னி லியோன்

                            பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தனது சமூக வலைத்தள பக்கத்தில் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்திருக்கிறார்.

                            பிகினி உடையில் ஊஞ்சல் ஆட அழைக்கும் சன்னி லியோன்
                            சன்னி லியோன்


                            பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் பல படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழில் ஜெய் நடிப்பில் வெளியான வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பார்.

                            மேலும் வீரமாதேவி என்ற படத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆனார்.

                            வரலாற்று பின்னணியில் உருவாகும் ஹாரர் காமெடி படத்தில் சன்னி லியோன் கதாநாயகியாக நடித்து வரும் ‘ஓ மை கோஸ்ட்’ ‘OMG’ என்ற படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது.

                            சன்னி லியோன்

                            தற்போது சன்னி லியோன் மாலத்தீவில் விடுமுறையை கொண்டாடி வருகிறார். நீச்சல் உடையில் ஊஞ்சல் மேல் நின்று கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில்

                            பகிர்ந்து இருக்கும் சன்னி லியோன், ‘எனக்கு பக்கத்தில் உள்ள ஊஞ்சல் காலியாக உள்ளது, என்னுடன் ஊஞ்சலாட யார் வருகிறீர்கள்? என்ற கேள்வியையும் அவர் கேப்ஷனாக பதிவு

                            செய்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பலரும் லைக்குகளை குவித்து, கமெண்ட் செய்து வருகிறார்கள்.

                            Posted in சினிமா

                            கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – கடுப்பான சித்தார்த்

                            கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – கடுப்பான சித்தார்த்
                            சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

                            கண்ணீர் அஞ்சலி போஸ்டர் – கடுப்பான சித்தார்த்
                            சித்தார்த்


                            திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சித்தார்த், சமூக வலைத்தள பக்கத்தில் அரசியல் ரீதியாக பல கருத்துக்களை கூறி அவ்வப்போது சிக்கலில் சிக்கிக்கொள்கிறார்.

                            அதனால் அவர் மீது கடும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் ஏராளம். இந்நிலையில் சித்தார்த் இறந்துவிட்டதாக வைரலான புகைப்படம் ஒன்றை அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

                            சித்தார்த்

                            அத்துடன் குறிப்பிட்டவர்களின் வெறுப்பு மற்றும் தொல்லை. இதில் நாம் எதற்கு குறைக்கப்பட்டுள்ளோம் என பதிவிட்டுள்ளார். சிலரோ இது தவறுதலாக நடத்திருக்கும் என

                            தெரிவித்து வருகின்றனர். அதாவது பிக்பாஸ் 13 வெற்றியாளர் சித்தார்த் சுக்லா, தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர். 40 வயதே ஆகும் இவர் நேற்று காலை மாரடைப்பால் மும்பையில்

                            காலமானார். அவருக்கு பதிலாக நடிகர் சித்தார்த்தின் படத்தை வைத்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

                            Posted in சினிமா

                            படப்பிடிப்பில் உயிரிழப்பு…. இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு

                            .

                            படப்பிடிப்பில் உயிரிழப்பு…. இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு

                            தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வரும் மணிரத்னம் மீது காவல்துறையினர் வழக்கு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

                            படப்பிடிப்பில் உயிரிழப்பு…. இயக்குனர் மணிரத்னம் மீது வழக்கு பதிவு?
                            மணிரத்னம்


                            இயக்குனர் மணிரத்னம் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் முன்னணி நடிகர்கள் விக்ரம், கார்த்தி, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம்

                            ரவி, விக்ரம் பிரபு, பிரபு உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடந்து முடிந்து, பின்னர் புதுச்சேரியில் முடித்துவிட்டு, தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

                            இந்த நிலையில் கடந்த மாதம் ஐதராபாத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படப்பிடிப்பு நடந்தபோது சிறு விபத்து ஏற்பட்டதாகவும் இந்த விபத்தில் குதிரை ஒன்று உயிரிழந்ததாகவும் தகவல்

                            வெளிவந்துள்ளது. மேலும் இதன் காரணமாக இயக்குனர் மணிரத்னம் மீதும், குதிரை உரிமையாளர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

                            மணிரத்னம்

                            இது குறித்து விலங்குகள் நல வாரியம் விசாரணை செய்யுமாறு மாவட்ட ஆட்சித் தலைவருக்கு தெலுங்கானா விலங்குகள் நல வாரியம் கடிதம் எழுதியதாகவும் கூறப்படுகிறது.

                            Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                            இலங்கையில் 11,700 பொலிஸாருக்கு கொரனோ

                            இலங்கையில் 11,700 பொலிஸாருக்கு கொரனோ

                            கொரோனா ஒழிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கும் போது நாட்டின் உள்ளக பாதுகாப்பு குறித்து விழிப்புடன் இருக்குமாறு பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் (ஓய்வு) சரத் வீரசேகர பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

                            அத்துடன், 11,700 பொலிஸ் அதிகாரிகள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாகவும், அவர்களில் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் வீரசேகர கூறியுள்ளார்.

                            கொரோனா காலத்தில் கூட போதைப்பொருள் மற்றும் பாதாள உலக நடவடிக்கைகள் தலைதூக்க அனுமதிக்கக்கூடாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

                            Posted in Uncategorized

                            லண்டனில் புலிகளுக்கு தொடர்ந்து தடை – மகிழ்ச்சியில் இலங்கை

                            லண்டனில் புலிகளுக்கு தொடர்ந்து தடை – மகிழ்ச்சியில் இலங்கை

                            தமிழீழ விடுதலை புலிகளிற்கு பிரிட்டனில் தொடர்ந்து தடை விதிக்க பட்டுள்ளதாக
                            இலங்கை வெளியுறவு துறை தெரிவித்துள்ளது

                            பிரிட்டன் வெளிநாட்டு அமைச்சு தமக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளதாக தெரிவித்து மேற்படி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

                            புலிகள் மீதான தடையை நீக்கும் படி வழக்க தொடரப்பட்டு நீதிமன்றம் தடை தளர்வை அறிவித்திருந்த நிலையிழும் இந்த தடையை பிரிட்டன் தொடர்வது குறிப்பிட தக்கது

                            The Government of Sri Lanka has been made aware that the UK Home Secretary has decided to maintain the proscription of the Liberation Tigers of Tamil Eelam (LTTE) as a terrorist organization under the UK Terrorism Act No. 7 of 2000.

                            The Home Secretary’s decision, which has been taken following the judgement of the Proscribed Organizations Appeals Commission (POAC), rejects the application of a LTTE front organization to de-proscribe the LTTE in the UK.

                            The LTTE, therefore, remains a proscribed organization in the UK, as in over 30 other countries worldwide, including in the EU region.

                            LTTE was initially proscribed in these countries due to the group’s brutality and atrocities targeting civilians and democratically elected leaders, involvement in organized crime and other criminal activities that impacted global and regional security. The continued retention of the LTTE’s proscription worldwide, is a recognition of the continued threat posed by the remnants of the group working through its international network, which continue to finance terrorist activities, radicalize youth towards violent extremism and cause ethnic disharmony and disrupt cohesive living in every country in which they are active.

                            The Government of Sri Lanka is appreciative of the partnership with the UK, and all governments, in the global fight against terrorism, and remain committed to working with the UK in all efforts to mitigate terrorism and violent extremism, that threaten the lives of citizens, and endanger global and regional peace and security.