Author: நலன் விரும்பி
கால்களை வெட்டி நபரை கொலை செய்த கொடூரம்
கால்களை வெட்டி நபரை கொலை செய்த கொடூரம்
மரம் வெட்டுவதற்காக பயன்படுத்தப்படும் இயந்திரத்தைப் பயன்படுத்தி, நபர்
ஒருவரின் கால்களைத் துண்டாக்கி, அவரைக் கொலை செய்த சம்பவமானது கட்டுகஸ்தோட்டைப் பகுதியில் பதிவாகியுள்ளது.
நேற்று (30) இருவருக்கிடையில் வேலி எல்லைப் பிரச்சினை தொடர்பில் ஏற்பட்ட
வாய்த்தர்க்கம் முற்றியதால், ஒருவர் மற்றையவரின் கால்களை மரம் வெட்டும் இயந்திரத்தைக் கொண்டு துண்டுகளாக்கியுள்ளார்.
இதனையடுத்து கால்கள் துண்டாக்கப்பட்ட நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் 28 வயதான திருமணமாகாதவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இவ்வாறு கைது
செய்யப்பட்டவர் உயிரிழந்தவரின் சித்தப்பா என்பதுடன், இவர் தொழில் ரீதியாக மரம் வெட்டும் தொழிலில் ஈடுபட்டு வருபவர் என்றும் தெரியவந்துள்ளது.
கொழும்பு கால்வாயில் ஆணின் சடலம் – மிரட்டும் கொலைகள்
கொழும்பு கால்வாயில் ஆணின் சடலம் – மிரட்டும் கொலைகள்
இலங்கை கொழும்பு பொரளை, லேக் ட்ரைவ் வீதியிலுள்ள கால்வாய் ஒன்றில் இருந்து
ஆண் ஒருவரது சடலம் மீட்க பட்டுள்ளது
இவர் கொலை செய்ய பட்டு கணவாயில் வீச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன ,
இவ்வாறான சடலங்கள் சமீப காலங்காக மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
ஆறு மாணவர்கள் கொரானாவுக்கு மரணம்
ஆறு மாணவர்கள் கொரானாவுக்கு மரணம்
இலங்கையில் மூன்றாம் அலையாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு சிக்கி
Dhammissara National school லாய் சேர்ந்த ஆறு மாணவர்கள்
அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டிருந்த பொழுதும் சிகிச்சை பலனின்றி
இறந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை மாணவர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது
ஐக்கிய நாடுகள் சபைக்கு மகயர் அனுப்பும் கூத்தமைப்பு
ஐக்கிய நாடுகள் சபைக்கு மகயர் அனுப்பும் கூத்தமைப்பு
தற்போதைய நிலைமைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்துக்கு தெளிவுபடுத்தும் முகமாக அறிக்கையொன்று
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தயார் செய்யப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
தமிழரசுக் கட்சியின் மத்தயிகுழுக் கூட்டம் வவுனியாவில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இடம்பெற்ற நிலையில் அதன் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த சுமந்திரன்,
“வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் காணிகள் சுவீகரிக்கப்படும் பிரச்சினை தற்போது பூதாகாரமாக மாறியிருந்கின்றது. இது தொடர்பாக சில பொது அமைப்புகள் ஏனைய கட்சிகளுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தை உடனடியாக
அமுல்ப்படுத்தவேண்டும் என கலந்துரையாடடியுள்ளோம். இந்நிலையில் அனைவரும் ஒன்றிணைந்து எமது நிலங்கள் அபகரிக்கப்படுவதை தடுப்பது எமது பிரதான கடமையாக கருதுகின்றோம்.
எதிர்வரும் மார்ச் மாதம் இடம்பெறும் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் எழுத்துமூலான அறிக்கையை உயர்ஸ்தானிகர் அலுவலகம் வெளியிடும். மார்ச் 3ஆம் திகதி இலங்கை தொடர்பாக ஒரு ஆய்வு இடம்பெறும். அதற்கு உதவியாக இன்றைய
சூழலை அவர்கள் அறியும் முகமாக தமிழரசுக் கட்சி, தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுடனும் ஏனைய பங்காளி கட்சிகளுடனும் இணைந்து ஆவணமொன்றை தயார் செய்கின்றோம். ஏற்கனவே தயார் செய்யப்பட்ட ஆவணமும்
இரா. சம்பந்தனிடம் உள்ளது. அது நாளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு பகிரப்படும். மிக விரைவில் அதற்கு இணக்கம் காணப்பட்டு தமிழ்த்
தேசியக்கூட்டமைப்பின் கடிதமாக இரா. சம்பந்தனின் ஒப்பத்தோடு அனுப்பி வைக்கப்படும்.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் நீதி அமைச்சரையும், வெளிவிவகார அமைச்சரையும் சந்திக்க கூடிய சந்தர்ப்பம் கிடைத்தது. இதன்போது சிங்கள பத்திரிகையில் வெளிவந்துள்ள செய்தியான மாகாண சபை முறைமை புதிய அரசியல் அமைப்பில்
இல்லை என்கின்ற விடயம் தொடர்பாக கேட்டேன். அவர்கள் அதனை அடியோடு மறுக்கின்றார்கள். அவ்வாறான பிரேரணை வரவில்லை எனவும் தெரிவித்தனர்.
அத்துடன் அந்த செய்தி தவறானது என அமைச்சர்கள் எனக்கு கூறினார்கள். இதில் பத்திரிகை சொல்வது உண்மையா அமைச்சர்கள் சொல்வது உண்மையாக என்பது எனக்கு தெரியாது.
அத்துடன் வெள்ளிக்கிழமை காலையில் பயங்கரவாத தடைச்சட்டம் மறுசீரமைக்கப்படுகின்றது என ஒரு திருத்தம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. அது கண்துடைப்பு நாடகம் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் அதில் எதுவுமே
இல்லை. அதில் உள்ள ஒவ்வொரு விடயத்தையும் எடுத்துப் பார்த்தால் அதில் ஒரு மாற்றமும் கிடையாது. ஆகவே வெளிவிவகார அமைச்சர் பீரிஸிடம் ‘ரிபோம்’ (Reform) என்ற ஆங்கில வார்த்தைக்கு அகராதியில் புதிய விளக்கம்
கொடுக்கப்படவேண்டியுள்ளது என தெரிவித்திருந்தேன். அவர் சிரித்து விட்டு எங்கோ ஒரு இடத்தில் ஆரம்பிக்க வேண்டும் என என்னிடம் தெரிவித்தார். எனினும் இது தொடர்பில் ஏற்கனவே ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்துக்கு
நான் அறிவித்துள்ளேன் என்பதை அவருக்கு தெரிவித்தேன். இது தொடர்பாக உயர்ஸ்தானிகரின் அறிக்கையிலும் வரும் என நான் எதிர்பார்க்கின்றேன். இலங்கை
அரசாங்கம் இவ்வாறான மோசமான செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது என்பதனையும் அவருக்கு தெரிவித்தபோது அவர் அதற்கு மறுப்பு தெரிவிக்கவில்லை” எனத் தெரிவித்தார்,
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு பெண் சிப்பாய்கள்
லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கு செல்லும் 13 வது பாதுகாப்பு குழுவின் விடுகை அணிவகுப்பு, ஞாயிற்றுக்கிழமை (30) திகதி பனாகொடை இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தலைமையகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் இலங்கை இராணுவ மகளிர் படையணி பெண் சிப்பாய்களும் பாதுகாப்பு பதவி நிலைப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அவர்களுக்கு இராணுவ சம்பிரதாயங்களுக்கமைய இராணுவ மரியாதை வழங்கினர்.
6லெபனானுக்குச் செல்லும் இலங்கையின் பாதுகாப்புப் படை 10 அதிகாரிகள் மற்றும் 115 சிப்பாய்களைக் கொண்டுள்ளது. இதில் இலங்கை காலாட் படையணி ,இலங்கை பொறியியலாளர் படையணி, இலங்கை சமிக்ஞைப் படையணி, இயந்திரவியல் காலாட்
படையணி ,கமாண்டோ படையணி, விஷேட படையணி ,பொறியாளர் சேவை படையணி, இலங்கை இராணுவ சேவை படையணி, இலங்கை இராணுவ மருத்துவப்
படையணி, இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணி, இலங்கை இராணுவ போர் கருவிகள் படையணி, இலங்கை இராணுவ பொலிஸ் படையணி,
இலங்கை இராணுவ மகளிர் படையணி மற்றும் இலங்கை இராணுவ பொது சேவைப் படையணி என்பவற்றின் படையினர் அடங்குவர்.
ஐக்கிய நாடுகளின் அதிகாரிகள், ஜெனரல் ஷவேந்திர சில்வா மற்றும் வெளிநாட்டு நடவடிக்கைகளுக்கான இராணுவ பணிப்பகம் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் விளைவாக லெபனானின் பாதுகாப்புப் பணிகளை
மேற்கொள்வதற்காக, இரண்டு பெண் அதிகாரிகள் மற்றும் இலங்கை மகளிர் படையணியின் ஏழு பெண் சிப்பாய்களை உள்ளடக்கிய லெபனான் ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படைக்கான முதல் பெண் படைக் குழு இதுவாகும்.
நுழைவாயிலில் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களால் பாதுகாப்பு அறிக்கையிடல் மரியாதை, அன்றைய பிரதம அதிதிக்கு வழங்கப்பட்டு வரவேற்கப்பட்டார்.
சில நிமிடங்களுக்குப் பின்னர், இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் தளபதியும் பிரதி பதவி நிலைப் பிரதானியுமான மேஜர் ஜெனரல் ஜகத் கொடிதுவாக்கு, அன்றைய பிரதம அதிதியை வரவேற்றதுடன் அணிவகுப்பு மைதானத்திற்கு அழைத்துச்
சென்றதுடன்இ அணிவகுப்பின் தளபதியின் வேண்டுகோளுக்கமைவாக, அன்றைய பிரதம அதிதியிடம் அணிவகுப்பு மீளாய்வு செய்யுமாறு அழைக்கப்பட்டனர்.
ஐக்கிய நாடுகளின் பணிக்கு அடையாளத்தின் முக்கியத்துவத்தைச் சேர்க்கும் வகையில், அன்றைய பிரதம அதிதியினால் தேசியக் கொடிஇ இராணுவக் கொடி,
ஐக்கிய நாடுகளின் கொடி மற்றும் இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் கொடி ஆகியவற்றை சம்பிரதாயங்களின் ஒரு பகுதியாக கையளித்தனர், இவை
அவர்களின் பணிகளுக்கான முன்னேற்றத்தினை குறிக்கிறது. மேலும் முழுமையான பாதுகாப்புப் பொறுப்புகளை ஏற்கவும் இவர்கள் தயாராக உள்ளனர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்ற வகையிலும் அமைந்தது.
இராணுவத்தின் அணிவகுப்பு முடிந்தவுடன் இராணுவத் தளபதி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், நாட்டிற்கு பெருமையையும் கௌரவத்தையும் பெற்றுத்தருமாறும்
அவர்களின் வெளிநாட்டு பணிகளுக்கான மதிப்பையும் எடுத்துரைத்தார. லெபனானில் நமது படைகள் ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றதால்,
பணியாற்றும் போது மிக உயர்ந்த ஒழுக்கத்தைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும், லெபனானில் அவர்களின் பணிகளுக்கான அர்ப்பணிப்பையும் அவர்களுக்கு நினைவூட்டினார்.
“1881 இல் ஆரம்பிக்கப்பட்ட இலங்கை இலேசாயுத காலாட் படையணியானது, 1900 ல் ஆபிரிக்காவின் போயர் போருக்கு இலேசாயுத காலாட் படையணியின் சிப்பாய்களை அனுப்பிய பின்னர் அதன் அனுபவங்களுக்காக புகழ்பெற்றது மற்றும் 2004 இல் ஐக்கிய
நாடுகளின் அமைதி காக்கும் நடவடிக்கைகளுக்காக ஹைட்டிக்கு செல்லும் முதல் குழுவை அனுப்பியது இலங்கை இலேசாயுத காலாட் படையணியாகும். ஐக்கிய நாடுகளுக்கான இலங்கைத் தூதுவராகவும், இலங்கையின் துணை நிரந்தரப்
பிரதிநிதியாகவும் நான் கடமையாற்றிய காலத்தில், 2010ஆம் ஆண்டு முதல் குழுவை லெபனானுக்கு அனுப்ப முடிந்தமையையிட்டு ஐக்கிய நாடுகளின் தூதுவராகவும் நிரந்தரப் பிரதிநிதியாகவும் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் நியூயோர்க்கில் ஐக்கிய
நாடுகளில் பணியாற்றிய போது இதுபோன்ற பல வெளிநாட்டு வாய்ப்புகளைப் பெற முடிந்தது. லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படை குழுவில் முதன்முறையாக பெண் சிப்பாய்கள் இணைந்ததைக் கண்டு நான் சமமான
மகிழ்ச்சியடைகிறேன். இதற்காக முயற்சி செய்த அனைவருக்கும் நான் நன்றி கூறுகிறேன் தொற்றுநோயால் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளைப் பொருட்படுத்தாமல், நீங்கள் அனைவரும் மிக உயர்ந்த ஒழுக்கம், கடமைகளில் அர்ப்பணிப்பு ஆகியவற்றைப்
பேணுவீர்கள் என்று நம் நாடும் நானும் எதிர்பார்க்கிறோம். என்று பிரதம அதிதியான இராணுவத் தளபதி படையினரிடம் கூறினார்.
ஏற்கனவே ஐக்கிய நாடுகளில் இடைக்காலப் பணியில் சேவை செய்து வரும் 12 வது இலங்கைக் குழு, ஐக்கிய நாடுகளின் விதிகளுக்கு இணங்க லெபனானில் தங்கள் சேவைக் காலம் முடிந்தவுடன் விரைவில் நாடு திரும்புவர் என எதிர்பார்க்கப்படுகிறது
. அன்றைய பிரதம அதிதி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகளுடனான குழு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டதை அடுத்து இலங்கை இலேசாயுத காலாட் படையணியின்
தலைமையகத்தின் பிரதம அதிதியினால் பார்வையாளர் பதிவேட்டுப் புத்தகத்தில் தனது கையொப்பமிட்டதுடன், அன்றைய நிகழ்ச்சி நிரல் முடிவுக்கு வந்தது.
நிகழ்வில் இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் விக்கும் லியனகே, , பிரதி இராணுவ பதவி நிலைப் பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் கொடித்துவக்கு, முதன்மை
பணிநிலை அதிகாரிகள், பணிப்பாளர்கள் பிரதான, இலங்கை இலேசாயுத காலாட் படையணியின் சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள், சிப்பாய்கள் மற்றும் அழைப்பாளர்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
2010 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையின் வேண்டுகோளுக்கு இணங்க, இலங்கை இராணுவம் லெபனானில்
சேவையாற்றுவதற்காக இது போன்ற 11 குழுக்களை இன்றுவரை அனுப்பியுள்ளது. இந்த பணி 1978 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது மற்றும் 2010 ஆம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் முதலாவது பெரிய குழு அங்கு அனுப்பப்பட்டது.
தப்பி ஓடிய சிங்கம் சுட்டு கொலை
தப்பி ஓடிய சிங்கம் சுட்டு கொலை
ஈரான் ஆராக் சிட்டி பகுதியில் உள்ள மிருக காட்சி சாலையில் வளர்க்க பட்டு வந்த சிங்கம் ஒன்று அங்கிருந்து தப்பி ஓடியுள்ளது
குறித்த பூங்காவின் ஊழியர்கள் சிங்கத்திற்கு இறைச்சிகளை உண்ண கொடுக்க
வாயிலை திறந்த பொழுது இவர்களை மிரட்டி விட்டு சிங்கம் தப்பி ஓடியுள்ளது
இவ்வாறு ஓடிய சிங்கத்தை போலீசார் துரத்தி சென்றனர் எனினும் அது தப்பி தொடராக
மக்களை வேட்டையாட ஓடிய வேளை சுட்டு கொலை செய்ய பட்டுள்ளது
பற்றி எரிந்த வான் – கருகி இறந்த 13 உயிர்கள்
பற்றி எரிந்த வான் – கருகி இறந்த 13 உயிர்கள்
மெஸ்சிக்கோவில் பயணித்து கொண்டிருந்த வான் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது.இதன் பொழுது அதில் பயணித்த 13 பேர் தீயில் எரிந்து பலியாகினர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த வான் தலைகீழாக வீழ்ந்து நொறுங்கிய போது ஏற்பட்ட தீ பற்றலில் இந்த
சோகம் இடம்பெற்றுள்ளது
நடிகை கஜோலுக்கு கொரோனா
நடிகை கஜோலுக்கு கொரோனா
இந்தி சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் கஜோலுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
நடிகை கஜோலுக்கு கொரோனா தொற்று உறுதி
கஜோல்
கொரோனா தொற்றின் மூன்றாவது அலை நாட்டை கடுமையாக பாதித்துள்ளது. சமீப காலங்களில் பல பிரபலங்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்துள்ளனர்.
தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு
தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு
23 ஆண்டுக்கு பின் கடல் கடந்து தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை இன்று குமரியாகி தாய் முன் நின்றால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்… ஆம்…இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
பிறந்த 40 நாளில் தத்து கொடுக்கப்பட்ட பெண் நெதர்லாந்தில் இருந்து வந்து தாயுடன் சந்திப்பு
23 ஆண்டுக்கு பின் தாயை கண்ட மகிழ்ச்சியில் அமுதவல்லி.
தாய்…
முதன் முதலாக நாம் பார்த்த தெய்வம்…பிறந்ததும் முதன் முதலாய் பார்த்த முகம்…ஆண்டுகள் கடந்தாலும் காட்டும் அளவற்ற பாசம்…நம் கண் கலங்கினால் துடிக்கும் ஒரே இதயம்…அன்பின் ஒட்டுமொத்த பிறப்பிடம்…
எத்தனையோ உறவுகள் இருந்தாலும் தாய்க்கு நிகர் யாரும் இல்லை எனலாம். அந்த தாய்க்கு உலகமே தன் குழந்தைதான். மகளோ, மகனோ யாராக இருந்தாலும் அவர்களுக்காக தன்னையே உருக்கிக்கொள்வாள் தாய்.
23 ஆண்டுக்கு பின் கடல் கடந்து தத்து கொடுக்கப்பட்ட ஒரு குழந்தை இன்று குமரியாகி தாய் முன் நின்றால் அந்த தாயின் மனநிலை எப்படி இருக்கும்…
ஆம்…இப்படி ஒரு நெகிழ்ச்சி சம்பவம் சேலத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி தாலுகா, பூசாரிப்பட்டி கிராமத்தில் உள்ள தாசசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் அமுதா (வயது 50). இவர் தர்மபுரி மாவட்டம் ஜகுரு பகுதியில் கணவர் ரங்கநாதனுடன் வசித்து வந்தார். இவர்களுக்கு ஜெனிபர், அமுதவல்லி ஆகிய 2 மகள்கள் பிறந்தனர்.
ரங்கநாதனின் முதல் மனைவிக்கும் குழந்தைகள் உள்ளனர். ரங்கநாதனுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் அமுதா குடும்பம் வறுமையில் வாடியது. இதையடுத்து காடையாம்பட்டி தாசசமுத்திரத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிட்டார்.
அமுதவல்லி பிறந்ததும் அவரை வளர்க்க முடியாமல் அமுதா தவித்தார். இதனால் அந்த குழந்தையை தத்து கொடுக்க முன்வந்தார். இதையடுத்து அமுதவல்லி பிறந்த 11-வது நாளில் சேலத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ மிஷனரியில் தத்து கொடுத்தார்.
அங்கு ஒப்படைக்கப்பட்ட அமுதவல்லியை 40-வது நாளில் நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த தம்பதியினர் தத்தெடுத்தனர். பின்பு அந்த குழந்தையை தங்கள் நாட்டிற்கு கொண்டு சென்று வளர்த்து வந்தனர். நெதர்லாந்து பிரஜையாக அமுதவல்லி வளர்ந்தாள்.
அங்கேயே பள்ளிப்படிப்பை முடித்தாள். நாட்கள் ஓடின… 23 ஆண்டுகள் ஆன நிலையில் அமுதவல்லி வளர்ந்து பெரியவள் ஆனாள். தற்போது அமுதவல்லி நெதர்லாந்தில் அலங்கார பூச்செண்டு விற்பனை மையம் (பிளவர் ஷாப்) நடத்தி வருகிறார்.
நெதர்லாந்தில் பெற்றோரிடம் அளவற்ற பாசம் காட்டி வளர்ந்த அமுதவல்லிக்கு ஒரு சந்தர்ப்பத்தில் தனது பிறப்பின் ரகசியம் தெரிந்தது. தனது தாயகம் இந்தியா என்றும், குழந்தையாக இருக்கும்போதே தான் தத்து கொடுக்கப்பட்ட விவரத்தையும் அறிந்தார்.
இதை தொடர்ந்து அமுதவல்லி, பெற்றெடுத்த தாய் மற்றும் குடும்பத்தை பார்க்க விரும்பினார். கடந்த 2 ஆண்டுகளாக முகநூல், இன்டர்நெட் மூலம் தேடியும் பலன் கிடைக்கவில்லை.
அதனை அறிந்த வளர்ப்பு பெற்றோர்களே அவருக்கு உதவ முன் வந்தனர். பின்னர் அவரது தாயாரின் இருப்பிடத்தை தெரிவித்து நேரில் பார்த்து விட்டு வருமாறு வாழ்த்தி அனுப்பி வைத்தனர்.
அதன்படி தனியொரு பெண்ணாக நெதர்லாந்தில் இருந்து விமானத்தில் சென்னைக்கு வந்த அமுதவல்லிக்கு மொழிப் பிரச்சினை ஏற்பட்டது. இதனால் சென்னையில் உள்ள மொழிப்பெயர்ப்பாளர் ஒருவரது உதவியுடன் சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள தாசசமுத்திரம் பகுதிக்கு வந்தார்.
அங்கு தனது வீட்டிற்கு சென்றார். அங்கு பாசத்தின் உருவமான தனது தாயை பார்த்தார். அந்த தாய்க்கு முதலில் தன் மகள் என்பதை அறியமுடியவில்லை. பின்பு அமுதவல்லி மொழிபெயர்ப்பாளர் மூலம் விவரத்தை கூறியதும் உணர்ச்சி பெருக்கில் கட்டியணைத்து முத்தம் கொடுத்தார். ஆனந்த கண்ணீர் வடித்தார்.
தனது தாயை நேரில் பார்த்த அமுதவல்லிக்கு கடவுளே நேரில் காட்சி கொடுத்தது போன்ற உணர்வு…அந்த சில நிமிடங்களில் பாசப்பெருக்கால் பனித்துளி போல கண்களில் கண்ணீர் கொட்டியது.
இதுகுறித்து அமுதவல்லி கூறும்போது, என்னை பெற்ற தாயை பார்த்தபோது ஏற்பட்ட சந்தோசத்திற்கு அளவே இல்லை. இவர்கள் காட்டும் அன்பும், பாசமும் நெகிழ வைக்கிறது என்றார்.
அவரது தாய் அமுதா கூறும்போது, 23 ஆண்டுகளுக்கு முன்பு எனது கணவரின் குடிப்பழக்கத்தால் என்னை கைவிட்டுவிட்டார். வறுமையில் இருந்ததால் எனது குழந்தை வேறு எங்காவது நல்ல முறையில் வாழ வேண்டும் என்ற தத்து கொடுத்தேன்.
அதன்பிறகு எனது குழந்தையை நினைத்து அடிக்கடி வருந்துவதுண்டு. 23 ஆண்டுகளுக்கு பிறகு மகள் என்னை பார்க்க வருவாள் என நான் கனவிலும் நினைக்கவில்லை என்று தெரிவித்தார்.
ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை
ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை
ஐ.நா அதிகாரிகளைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 20-க்கும் மேற்பட்டோரை தலைமறைவானவர்கள் என தீர்ப்பு வழங்கியது காங்கோ நாட்டு ராணுவ நீதிமன்றம்.
ஐ.நா. அதிகாரிகள் கொலை வழக்கு – 51 பேருக்கு மரண தண்டனை விதித்தது காங்கோ நீதிமன்றம்
கொலை செய்யப்பட்ட ஐ.நா.அதிகாரிகள்
ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அதிகாரிகளான மைக்கேல் ஷார்ப் என்ற அமெரிக்கரும், சைடா கேட்டலான் என்ற ஸ்வீடன் நாட்டவரும் கடந்த 2017ம் ஆண்டு திடீரென மாயமாகினர்.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் ஆயுதம் ஏந்திய நபர்களால் சாலையில் தடுத்து நிறுத்தப்பட்டு, வயலுக்கு அழைத்துச் சென்று கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்த சம்பவம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. இதுதொடர்பான வழக்கு நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், ஐ.நா. அதிகாரிகளைக் கொன்ற வழக்கில் தொடர்புடைய 51 பேருக்கு காங்கோ நாட்டு ராணுவ நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்துள்ளது
விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ்
விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ்.
நடிகர் விஜய் சேதுபதி நடித்து வெளிவர காத்திருக்கும் கடைசி விவசாயி திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை விஜய் சேதுபதி அவருடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் அறிவித்துள்ளார்.
விஜய் சேதுபதியின் கடைசி விவசாயி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் சேதுபதி
காக்கா முட்டை, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை போன்ற படங்களை இயக்கிய மணிகண்டன் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் ‘கடைசி விவசாயி’.
விவசாயம், விவசாயிகளை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் நல்லாண்டி என்பவர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க, விஜய் சேதுபதி, யோகிபாபு ஆகியோர்
முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். விவசாயத்தின் அவசியத்தை உணர்த்தும் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் படங்களில் கடைசி விவசாயி படமும் சேரும். இந்த படம் நீண்ட இடைவேளைக்கு பிறகு வெளியாக தயாராகிவிட்டது.
தமிழகத்தில் தற்போது ஊரடங்கு உத்தரவு மற்றும் இரவு நேர ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் திரைப்படங்களின் ரிலீஸ் அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
யாழில் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் உதயம் – குஷியில் மக்கள் video
யாழில் சிறுநீரக அறுவை சிகிச்சை மையம் உதயம் – குஷியில் மக்கள்
யாழ்ப்பாண மருத்துவமனையில் இதுவரை சிறுநீராக மாற்று சிகிச்சை மையம் இல்லாமை இருந்தது ,இதனை அடுத்துசிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் மற்றும்
குத்திக்கலன் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை நிபுணர்களின் முயற்சியால் தற்போது புதிய சிறுநீரக மாற்று சிகிச்சை மையம் ஒன்று புதிதாக ஆரம்பிக்க படுகிறது
இந்த சிகிச்சையை மேற்கொள்ள மக்கள் கண்டி ,மற்றும் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு செல்லும் நிலையே இதுவரை இருந்து வந்தது
மேற்படி நிலையம் இங்கு புதிதாக அமைய பெறுவதால் ,வடக்கு மக்கள் இங்கே இதே
சிகிச்சையை, கொரனோ காலத்திலும் மேற்கொள்ள முடியும் என மருத்துவர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்
செய்தி காட்சி – யாழவன்
விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்
விமானத்தை சுட்டு வீழ்த்திய ஏமன் இராணுவ படைகள்
ஏமன் நாட்டின் Ma’rib பகுதியில் பறந்து கொண்டிருந்த ஆள் இல்லா அமெரிக்கா
இராணுவத்தின் கழுகு ரக உளவு விமானத்தை எமனிய கவுதிய படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளனர்
ஏமன் பகுதிகளை இலக்கு வைத்து சவுதி விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும்
நிலையில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
அமெரிக்கா இராணுவ தளம் மீது ரொக்கட் தாக்குதல்
கிழக்கு சிரியாவின் al-Hasakah பகுதியில் அமைந்துள்ள அமெரிக்கா இராணுவத்தின் முகம் மீது ஆறு ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டுள்ளது
தொடராக இலக்கு வைத்து தாக்க பட்டு வரும், இந்த முகாம் மீதான தாக்குதல் அதிகரிப்பை அடுத்து அமெரிக்கா படைகள் அங்கிருந்து வெளியேற கூடும் என எதிர் பார்க்க படுகிறது
இதே முகாமில் 22 பல் நாட்டு படைகள் காயமடைந்து இருந்தமை குறிப்பிட தக்கது
எமது கோரிக்கை நிராகரிப்பு – இதுவே பதட்டம் ரசியா
எமது கோரிக்கை நிராகரிப்பு – இதுவே பதட்டம் ரசியா
எமது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் நேட்டோ படைகள் அலட்சியம் செய்ததன்
விளைவ இந்த பதட்டத்திற்கு காரணம் என ரசியா தெரிவித்துள்ளது
உக்கிரேன் அருகில் ஆயிரக்கணக்கில் இராணுவத்தை குவித்துள்ள நிலையில்
அமெரிக்கா நேட்டோ படைகளும் இராணுவத்தை குவித்து வருகின்றனர் ,இதனால் இந்த விளைவு ஏற்பட்டுள்ளதாக ரசியா அதிபர் புட்டீன் தெரிவித்துள்ளார்
ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் போவதில்லை-சரத் பொன்சேகா
ஆட்சியை கைப்பற்றுவதால் மாத்திரம் நாடு முன்னேறப் போவதில்லை-சரத் பொன்சேகா
தற்போதைய நிலையில் தமது கட்சி ஆட்சியைப் பிடித்தாலும் நாட்டை அபிவிருத்தி
செய்ய முடியாது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு பல மாற்றங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா சுட்டிக்காட்டியுள்ளார்.
நாம் நிச்சயமாக நமக்கு என்ற ஒரு பயணத்தை மேற்கொள்ள வேண்டும் எனவும் நமது தலைவர்கள் திருந்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கேட் உடைந்து விழுந்தமையால், 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
கேட் உடைந்து விழுந்தமையால், 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகம பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் பிரதான கேட் உடைந்து விழுந்தமையால், 6 வயது சிறுமியொருவர் உயிரிழந்துள்ளார்.
தம்புத்தேகம- ஆரம்ப பாடசாலையில் இரண்டாம் தரத்தில் கல்வி பயிலும் அபேகோன் பிரியதர்சினி என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி தனது தாயுடன் தனது பாடசாலை ஆசிரியை ஒருவரின் வீட்டுக்குச் சென்ற போது, தாய் கேட்டை திறந்துள்ளதாகவும் இதன்போதே கேட் உடைந்து சிறுமியின் மீது விழுந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்தில் காயமடைந்த சிறுமி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படும் போதே, உயிரிழந்திருந்தார் என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை
கொரனோ பரவல் – நாட்டை முடக்க கோரிக்கை
நாட்டை முடக்குமாறு பல்வேறு தரப்பினர் விடுத்து வரும் கோரிக்கை தொடர்பில், எவ்விதத் தீர்மானங்களும் எடுக்கப்படவில்லை என சுகாதார சேவைகள் பயணிப்பாளர்
நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனினும், இத்தருணத்தில் நாட்டை முடக்குவது பிரச்சினைக்குத் தீர்வாகாது என்றும் அவர் தெரிவித்தார்.
நாடு திறந்திருக்கும் போதே, கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்துவதே அரசாங்கத்தின் நோக்கமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றுவதன் வேகம் அதிகரித்துள்ளமையால், சகலரும் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
துருக்கி வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்
துருக்கி வெளியுறவு அமைச்சர் இலங்கை வந்தார்
துருக்கி குடியரசின் வெளியுறவு அமைச்சர் மெவ்லட் சாவுசோக்லுவுடன் 2022 ஜனவரி 28, வெள்ளிக்கிழமை கொழும்பில் நடைபெற்ற இருதரப்பு சந்திப்பில், இலங்கைக்கும்
துருக்கிக்கும் இடையில் நிலவும் ‘மிதமான, சுமூகமான மற்றும் பரஸ்பர ஆதரவான பங்காளித்துவத்தை’ வெளிநாட்டு அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் சுட்டிக் காட்டினார்.
இந்த வகையில், துருக்கி தனது ‘ஆசியா புதிய முயற்சி’ என்ற கட்டமைப்பில் இலங்கையுடன் இன்னும் நெருக்கமான ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கு
வெளிப்படுத்திய விருப்பத்தை அமைச்சர் பீரிஸ் வரவேற்றார். துருக்கியுடனான இருதரப்பு உறவுகளில் பரஸ்பர ‘நண்பர், நட்பு நாடு மற்றும் மதிப்புமிக்க பங்காளி என்ற
வகையில்’ இலங்கையின் முக்கியத்துவத்தை துருக்கிய வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லு எடுத்துரைத்தார்.
இலங்கையில் நல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாக துருக்கியினால் பேணப்படும் கொள்கை ரீதியான நிலைப்பாட்டையும், பிராந்திய மற்றும் பலதரப்பு மன்றங்களில் வெளிப்படுத்தப்பட்ட ஒற்றுமையையும் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர்
பாராட்டி, ஒப்புக்கொண்டார். மேலும் விளக்கமளித்த அமைச்சர், இலங்கையில் வாழும் அனைத்து சமூகங்கள் மற்றும் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் அதே
வேளையில், நம்பகமான, அனைத்தையும் உள்ளடங்கிய உள்நாட்டு செயன்முறையின் மூலம் நல்லிணக்கத்தின் எஞ்சிய பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதன் அவசியத்தை வலியுறுத்தினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார உறவுகளை மேம்படுத்துவது குறித்து இரு வெளிநாட்டு அமைச்சர்களும் கலந்துரையாடினர். பொருளாதார ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டி,
ஜூன் 2021 இல் நடைபெற்ற இலங்கை – துருக்கி பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்புக்கான துருக்கி கூட்டுக் குழுவின் இரண்டாவது அமர்வில் அடையாளம் காணப்பட்டவாறு, வர்த்தகத்தை மேலும் பன்முகப்படுத்தி, ஆண்டுக்கு 500 மில்லியன்
அமெரிக்க டொலர் வர்த்தக இலக்கை அடைந்து கொள்வதற்காக சீராக செயற்பட வேண்டியதன் அவசியத்தை அவர்கள் அடையாளம் கண்டனர். முதலீடு மற்றும் வணிக இணைப்புக்களை மேம்படுத்துதல், சுற்றுலா மற்றும் இணைப்பை மேம்படுத்துதல்
மற்றும் ஒத்துழைப்பின் சாத்தியமான புதிய பகுதிகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான தொடர்பை மேம்படுத்துவதில் துருக்கிய விமான சேவையின் பங்களிப்பை அமைச்சர் பீரிஸ் பாராட்டினார்.
எல்லை தாண்டிய வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாக, இரு அமைச்சர்களும் இந்த விஜயத்தின் போது இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
இரு அமைச்சர்களும் பாதுகாப்பு, காவல் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஒத்துழைப்பு உள்ளிட்ட பரஸ்பர ஆர்வமுள்ள ஏனைய பகுதிகள் குறித்தும் ஆலோசித்ததுடன், எதிர்காலத்தில் உயர்மட்ட விஜயங்களைப் பரிமாறிக்கொள்வதற்கும் எதிர்பார்த்தனர்.
கோவிட்-19 தொற்றின் தாக்கத்தை குறைப்பதற்காக 2021 ஆம் ஆண்டு துருக்கிய ஒத்துழைப்பு மற்றும் ஒருங்கிணைப்பு முகவரமைப்பின் ஊடாக வழங்கப்பட்ட மருத்துவ உதவிகள் மற்றும் 2004 சுனாமிக்குப் பின்னர் தென்னிலங்கையில் வீட்டுக்
கட்டுமானத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட மனிதாபிமான உதவிகளுக்காக துருக்கி அரசாங்கத்திற்கு இலங்கையின் பாராட்டுக்களை அமைச்சர் பீரிஸ் தெரிவித்தார்.
பிராந்திய ஒத்துழைப்புக்கான இராஜாங்க அமைச்சர் தாரக்க பாலசூரிய, வெளியுறவுச் செயலாளர் அட்மிரல் பேராசிரியர் ஜயநாத் கொலம்பகே மற்றும் வெளிநாட்டு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த இருதரப்பு சந்திப்பில் கலந்துகொண்டனர்.
வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லுவுடன் இலங்கைக்கான துருக்கித் தூதுவர் டிமெட் செகெர்சியோகுலு மற்றும் வெளிவிவகார அமைச்சரின் ஆலோசகர்களும்
இணைந்திருந்தனர். இந்த விஜயத்தின் போது துருக்கிய வெளிவிவகார அமைச்சர் இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்தார்.
இதற்கு முன்னர் ஜூன் 2016 இல் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த வெளிவிவகார அமைச்சர் சாவுசோக்லு இலங்கைக்கு மேற்கொண்ட இரண்டாவது விஜயம் இதுவாகும்.
வெளிநாட்டு அமைச்சு
முதலாம் திகதி முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை
முதலாம் திகதி முதல் புதிய சொகுசு போக்குவரத்து சேவை
புதிய சொகுசு போக்குவரத்து சேவை பெப்ரவரி முதலாம் திகதி முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா இதுதொடர்பாக தெரிவிக்கையில்,
புதிய சொகுசு போக்குவரத்து சேவையின் அடிப்படையில் 24 பிரதேசங்களை
உள்ளடக்கியவகையில் சுமார் 72 சொகுசு ,அதி சொகுசு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார்.



















