Author: நலன் விரும்பி
அமெரிக்கா மகிந்தவுக்கு இடையில் பேச்சு
அமெரிக்கா மகிந்தவுக்கு இடையில் பேச்சு
இலங்கையின் புதிய அமெரிக்கா அத்தூதுவர் (Julie J. Chung க்கும் பிரதமர் மகிந்தாவுக்கும் ,இடையில் அலரி மாளிகையில், சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.
இவரது முதலாவது சந்திப்பு இதுவாக அமைய பெற்றுள்ளது .இலங்கையின் அபிவிருத்தி ,பொருளாதாரத்தில் உதவுவதாக தெரிவித்துள்ள அவர் ,தமிழ் இன படுகொலை தொடர்பில் பேசாவில்லை என்பது குறிப்பிட தக்கது.
அரச வங்கிகளுக்கு கோட்டா அதிரடி உத்தரவு
அரச வங்கிகளுக்கு கோட்டா அதிரடி உத்தரவு
நெல் கையிருப்பை பிணையாக வைத்து, நெல்லைக் கொள்வனவு செய்வதற்காக, நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு கடன் வசதிகளை வழங்குமாறு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கிக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ பணிப்புரை விடுத்தார்.
போட்டித் தன்மையுடன் நெல்லைக் கொள்வனவு செய்து, அரசாங்கத்திடம் போதியளவு நெல் கையிருப்பைப் பேணுவதை இலக்காகக் கொண்டு, இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு 02, சேர் சித்தம்பலம் ஏ. கார்டினர் மாவத்தையில் அமைந்துள்ள நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலகத்தை இன்று (04) முற்பகல் பார்வையிட்ட போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பெரும் போகத்தில் நெல்லைக் கொள்வனவு செய்தல், களஞ்சியப்படுத்தல், விற்பனை மற்றும் தட்டுப்பாடின்றி சந்தையில் நிலவுகின்ற அரிசிக்கான தேவையை தொடர்ந்து
பேணுவதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகளை ஆராய்வதே ஜனாதிபதி அவர்களின் இந்த திடீர் விஜயத்தின் நோக்கமாகும்.
1971ஆம் ஆண்டின் 14ஆம் இலக்க பாராளுமன்றச் சட்டத்தின் மூலம் ஸ்தாபிக்கப்பட்ட நெல் சந்தைப்படுத்தல் சபையின் நோக்கு, “நெல் மற்றும் அரிசி கொள்வனவு,
களஞ்சியப்படுத்தல், பதப்படுத்துதல் மற்றும் விற்பனை ஆகியவற்றில் முன்னணி அரச இடைத்தரகராகச் செயற்படுதல்” போன்றவையாகும். நெல் விவசாயிக்கு
இடைத்தரகர்கள் இன்றி நியாயமான விலையை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் போது நெல் கையிருப்புக்களை வழங்குவதும், நெல் சந்தைப்படுத்தல் சபையின் முதன்மையான பணிகளாகும்.
கடந்த அரசாங்கத்தில் 2017 மற்றும் 2019ஆம் ஆண்டுகளில் ஒரு நெல்லைக்கூட கொள்வனவு செய்யப்படாததாலும், பயன்படுத்தக்கூடிய நெல் கையிருப்புக்களை கால்நடை தீவனமாகக் கருதி தனியார்த்துறை வியாபாரிகள் ஒரு சிலருக்கு மிகக்
குறைந்த விலைக்கு வழங்கியதாலும் நிறுவனத்திற்கு பாரிய நட்டம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நெல்லுக்கு நியாயமான விலை கிடைக்காமை, இடைத்தரகர்களுக்கு கமிஷன் வழங்குவது, நெல் கொள்வனவுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகள்,
களஞ்சியசாலைகளை உரிய முறையில் பராமரிக்காமை போன்ற காரணங்களால் விவசாயிக்கும் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கும் இடையிலான உறவு தூரமாக்கப்பட்டுள்ளது.
2020ஆம் ஆண்டுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் நிலவிய 35 ரூபாவிற்கும் குறைவாக இருந்த கட்டுப்பாட்டு விலையை 2020ஆம் ஆண்டு பெரும் போகத்தில் குறைந்தபட்சம் 55 ரூபாவாக கொண்டு வருவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது.
2022ஆம் ஆண்டு பெரும் போகத்தில், ஒரு கிலோ நெல்லின் விலை 95 ரூபாவாக உயர்வடைந்துள்ளதால், அதிகமாக நெல்லைக் கொள்வனவு செய்து களஞ்சியப்படுத்த
முடிந்ததாக நெல் சந்தைப்படுத்தல் சபையின் உப தவிசாளர் துமிந்த பிரியதர்ஷன அவர்கள் தெரிவித்தார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையானது 315,000 மெற்றிக் தொன் கையிருப்பை பேணுவதற்குரிய இயலுமையைக் கொண்டுள்ளது. அதனை 04 இலட்சம் வரை
அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
கடந்த இரண்டு வருடங்களில் இலங்கை இராணுவத்தினரின் உதவியுடன் 315 களஞ்சியசாலைகள் புனரமைக்கப்பட்டன. எஞ்சிய 35 களஞ்சியசாலைகளும் விரைவில் புனரமைக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார்.
நெல் கொள்வனவை துரிதப்படுத்துவதற்காக 40 பட்டதாரிகள் உதவிப் பிரதேச முகாமையாளர்களாகவும், 200 பல்நோக்கு உத்தியோகத்தர்களை களஞ்சிய நடவடிக்கைகளுக்காகவும் உடனடியாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டது.
நெற் களஞ்சியசாலைகளை பாதுகாக்க யானை வேலிகளை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி அவர்கள் சுட்டிக்காட்டினார்.
நெல் சந்தைப்படுத்தல் சபையை இலாபம் ஈட்டும் நிறுவனமாக கட்டியெழுப்புவதோடு, எவ்வித முறைகேடுகளுக்கும் இடமளிக்க வேண்டாம் என்றும் ஜனாதிபதி அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார்.
கமத்தொழில் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க மற்றும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்
உல்லாச பயணிகளுக்காக விசேட ரயில்சேவைகள் ஆரம்பம்
உல்லாச பயணிகளுக்காக விசேட ரயில்சேவைகள் ஆரம்பம்
இலங்கை வருகை தந்துள்ள உல்லாச பயணிகள் போக்குவரத்தை கவனத்தில் கொண்டு, தற்பொழுது Kandy to Ella பகுதிக்கான ,ரயில்வே போக்குவரத்து ஒன்று விசேடமாக ஆரம்பிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.
நாட்டின் முக்கிய வளர்ச்சியில் ,உல்லாச பயணிகளின் வருகையே வருமானத்தை பெற்று கொடுக்கின்றது .
அதனால் இந்த அதிரடி நடவடிக்கை ஆரம்பிக்க பட்டுள்ளது ,இங்கே குறிப்பிட தக்கது.
யாழில் புகையிரதத்தில் மோதுண்டு வாலிபர் மரணம்
யாழில் புகையிரதத்தில் மோதுண்டு வாலிபர் மரணம்
இன்று மதியம் 1.50 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் கோவில் வீதி பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்த புகையிரதத்தில் பாய்ந்து குறித்த நபர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளதாக அததெரண செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
யாழில் அரசியல்வாதி வீட்டில் ரவுடிகள் அட்டகாசம்
யாழில் அரசியல்வாதி வீட்டில் ரவுடிகள் அட்டகாசம்
மானிப்பாய் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டிற்குள் மதுபோதையில் புகுந்த நபர்
ஒருவர் வெருடைய தந்தையை தாக்க முற்பட்டதுடன், வீட்டின் வேலிகளை சேதப்படுத்திச் சென்றுள்ளார்.
மானிப்பாய் பிரதேச சபையின் தமிழ் தேசிய கூட்ட்டமைப்பின் உறுப்பினரான அ.ஜோன் ஜிப்பிரிக்கோ என்பவரின் வீட்டின் மீதே தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பண்டத்தரிப்பில் உள்ள அவரது வீட்டினுள் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்த வேளை மதுபோதையில் நுழைந்த நபர் ஒருவர்,
பாராளுமன்றில் ஆளும் கட்சியை சேர்ந்த யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் பெயரை கூறி, அவரின் ஆதரவாளர் தான் என கூறி அட்டகாசத்தில் ஈடுபட்டுள்ளார்.
அதன் போது , பிரதேச சபை உறுப்பினரின் தந்தையார் அதனை தடுக்க முற்பட்ட
வேளை அவரை தள்ளி விழுத்திய பின்னர் வீட்டின் கேற்றை சேதப்படுத்தியதுடன் , வேலி தகரங்களையும் சேதப்படுத்திய பின்னர் அங்கிருந்து சென்றுள்ளார்.
சம்பவம் தொடர்பில் பிரதேச சபை உறுப்பினரால் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி – அத்தனை இராணுவமும் மரணம்
வீழ்ந்து நொறுங்கிய இராணுவ உலங்குவானூர்தி – அத்தனை இராணுவமும் மரணம்
ரோமானிய அரச இராணுவத்தின் உலங்குவானூர்தி இன்று விபத்தில் சிக்கி வீழ்ந்து
நொறுங்கியதில் அதில் பயணித்த அந்த இராணுவ சிப்பாய்கள் மற்றும் விமானி உள்ளிட்டவர்கள் மரணமாகியுள்ளனர்
குடித்த விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன
மசூதி மீது குண்டுத்தாக்குதல் -30 பேர் பலி
மசூதி மீது குண்டுத்தாக்குதல் -30 பேர் பலி
இன்று வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் Kucha Risaldar பள்ளிவாசல் மீது குண்டு தாக்குதல்க் நடத்த பட்டுள்ளது
இவ்வேளை அங்கு தொழுகையில் ஈடுபாடிருந்த அப்பாவி மக்கள் முப்பது பேர் பலியாகியுள்ளனர்
மேலும் பல டசின் பேர் படுகாயமடைவந்துள்ளனர்
காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
குண்டு தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் இராணுவம் குவிக்க பட்டு சோதனைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன
இலங்கையில் நாளை 14 மணி நேரம் நீர் வெட்டு
இலங்கையில் நாளை 14 மணி நேரம் நீர் வெட்டு –
இலங்கையில் ஆளும் கோட்டா அரசினால் மக்கள் நாள்தோறும் பெரும் சுமைகளை சுமந்த வண்ணம் உள்ளனர் ,
நாளை கொழும்பின் பல பகுதிகள் 14 மணி நேரம் நீர் வீட்டுக்கு உள்ளாகும் என
அறிவிக்க பட்டுள்ளதால் மக்கள் அவதியில் சிக்கியுள்ளனர்
திடீரென உடைந்து விழுந்த பாலம்
திடீரென உடைந்து விழுந்த பாலம்
மாத்தறை புறா தீவிற்கு செல்லும் ´வெல் பாலம்´ சற்று முன்னர் உடைந்து வீழ்ந்துள்ளது.
பாலம் உடைந்து விழும் போது மக்கள் பாலத்தை கடந்து சென்று கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
ரசியாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இலங்கை இந்தியா சீனா வெளியேற்றம்
ரசியாவுக்கு எதிரான ஐநா தீர்மானத்தில் இலங்கை இந்தியா சீனா வெளியேற்றம்
உக்கிரேன் மீது ரசிய தொடர்ந்து வரும் போருக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்ள
வாக்களிக்கும் வாக்கெடுப்புக்கு விட பட்டது ,இதன் பொழுது அந்த வாக்கெடுப்பில்
கலந்து கொள்ளாது சீனா ,இந்தியா இலங்கை உள்ளிட்ட நாடுகள் வெளியேறின
இவை ரசியாவுக்கு ஆதரவு தருவிக்கும் வகையில் இந்த் செயல் பாட்டில் ஈடுபட்டதாக நோக்க படுகிறது
உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை
உக்கிரேனில் இந்திய மாணவன் சுட்டு கொலை
உக்கிரேனில் இடம்பெற்று வரும் போரில் சிக்கி இந்திய மாணவர் ஒருவர் பலியாகியுள்ளார்
ரசிய இராணுவம் போரை தொடர்ந்து வரும் நிலையில் அங்கு போர்வலய பகுதியில் சிக்கியுள்ள மக்களில் பலர் இறந்த வண்னம் உள்ளனர்
ஏனையவர்கள் அகதிகளாக ஓடிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
சேலையில் கவர்ச்சி காட்டும் திவ்ய பாரதி
சேலையில் கவர்ச்சி காட்டும் திவ்ய பாரதி
பேச்சுலர் படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட திவ்ய பாரதி சேலையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் வைரலாகி வருகிறது.
சேலையில் கவர்ச்சி காட்டும் திவ்ய பாரதி
திவ்ய பாரதி
இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘பேச்சிலர்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு பிரபலமானவர் திவ்ய பாரதி.
இப்படத்தில் இவரின் நடிப்பால் அனைவரையும் கவர்ந்தார். இவர் தற்போது பிக்பாஸில் பிரபலமான முகின் ராவ்வுக்கு ஜோடியாக ”மதில் மேல் காதல்” என்கிற படத்தில் நடித்து வருகிறார்.
அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வரும் திவ்ய பாரதி, தற்போது மெல்லிய புடவையில் கவர்ச்சி காட்டும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
சுந்தர்.சி அடித்து விட்டாரா குஷ்பு
சுந்தர்.சி அடித்து விட்டாராகுஷ்பு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு பதிவிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் கேள்வியை எழுப்பியுள்ளது.
சுந்தர்.சி அடித்து விட்டாரா?.. குஷ்பு வெளியிட்ட புகைப்படத்தால் பரபரப்பு
குஷ்பு
நடிகை குஷ்பு 90-களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர். இவர் பெயரில் கோவில் கட்டும் அளவிற்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர். வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் கொடிகட்டி பறந்ததை போல தற்போது
அரசியலிலும் படு பிசியாக செயல்பட்டு வருகிறார் குஷ்பு. சமீபத்தில் இவர் உடல் இடையை குறைத்து கதாநாயகிகளுக்கு சவால் விடும் அளவிற்கு இளமையான தோற்றத்திற்கு மாறியிருந்தார்.
இந்நிலையில் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர்ந்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அவர் சில ஹாஷ்டேக்குகளை பதிவிட்டு ஒரு
புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். கண்ணத்தில் யாரோ அடித்தது போன்று வீரிய கோவத்துடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சுந்தர்.சி அடித்து விட்டாரா? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டு வருகின்றனர்.
ஒரு வேளை இந்த புகைப்படம் பெண்களுக்கு எதிராக நடக்கின்ற வன்கொடுமைகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த பதிவிட்டிருக்களாம் என சில பதிவிட்டு வருகின்றனர்
. இந்த பதிவிற்கான விளக்கத்தை விரைவில் குஷ்பு அறிவிப்பார்கள் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்கிய உக்கிரேன்
ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்கிய உக்கிரேன்
ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்து வரும்
நிலையில், உக்ரைனில் வசிக்கும் ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்க அந்நாட்டு நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்க உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல்
உக்ரைன் நாடாளுமன்றம்
உக்ரைன் மீது ரஷியா கடந்த வியாழக்கிழமை தாக்குதலை தொடங்கியது, இன்று 8-வது நாளாக சண்டை நடைபெற்று வருகிறது. உக்ரைன் எளிதாக வீழ்ந்துவிடும் என ரஷியா
நினைத்தது. ஆனால், கடைசி வரை போராடுவோம் என உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அறிவித்த நிலையில் உக்ரைன் ராணுவம் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது.
மேற்கு நாடுகள் ஆயுத உதவிகள் வழங்கி வருவதால் உக்ரைன் எதிர் தாக்குதலை
அதிகரித்துள்ளது. ஊருக்குள் புகுந்த ரஷிய துருப்புகளை உக்ரைன் ராணுவம் வீழ்த்தி வருகிறது. இதனால் ரஷியாவுக்கு இழப்பு அதிகமாக இருந்து வருகிறது.
ரஷியாவுக்கு எதிராக பல்வேறு நாடுகளும் பொருளாதார தடை விதித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைனில் உள்ள ரஷிய குடிமக்களின் சொத்துக்களை முடக்கும் சட்டத்திற்கு உக்ரைன் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.
இலங்கையில் பரவும் மர்ம நோய் – செயல் இழக்கும் காதுகள்
இலங்கையில் பரவும் மர்ம நோய் – செயல் இழக்கும் காதுகள்
சமீப காலமாக இளைஞர்களிடையே காது கேளாமை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
செவித்திறன் கருவிகளின் பாவனை அதிகரித்துள்ளமையே இந்நிலைமைக்குக் காரணமாக அமைந்துள்ளதாக தொண்டை, காது, மூக்கு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் யசத் வீரக்கொடி இதனை தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளில் இந்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
உலக செவித்திறன் தினத்தை முன்னிட்டு நேற்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை
அமெரிக்க ராணுவத்தில் இணைந்த தமிழ் நடிகை
அமெரிக்க இராணுவத்தில்திரைத்துறை உள்ளிட்ட கலைத்துறையில் ஈடுபடுவதையே பலர் சாதனையாக கருதும் நிலையில், தமிழ் நடிகை ஒருவர் ராணுவத்தில் இணைந்து சாதித்திருக்கிறார்.
குடும்பத்தினருடன் அகிலா நாராயணன்
கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’காதம்பரி’. சமூக கருத்தை வலியுறுத்தி உருவான திகில் திரைப்படமான இப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானர் அகிலா நாராயணன். அமெரிக்கா வாழ் தமிழ் பெண்ணான இவர் கலை மீது இருந்த ஆர்வத்தின் காரணமாக தனது தனிப்பட்ட முயற்சியால் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். நடிப்போடு பிரபல பாடகியாகவும் வலம் வந்த அகிலா நாராயணன், கலைத்துறையோடு தனது சாதனை பயணத்தை நிறுத்திக்கொள்ளாமல், ராணுவத்தில் இணைய வேண்டும் என்று முடிவு செய்தார்.
மிக கடினமான பயிற்சிகளை கொண்ட அமெரிக்க ராணுவத்தில் பட்டம் பெறுவது என்பது மிக சவாலானது என்றாலும், தனது மகளின் விருப்பத்துக்கு அகிலாவின் குடும்பத்தாரும் சம்மதம் தெரிவிக்க, கடுமையான பல மாத பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து பட்டம் பெற்ற அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தில் வழக்கறிஞராக இணைந்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்க ராணுவத்தில் இணைந்த முதல் தமிழ் நடிகை என்ற பெருமையை பெற்றிருக்கும் அகிலா நாராயணன், அமெரிக்க ராணுவத்தின்
பலவிதமான கடின பயிற்சிகளை வெற்றிகரமாக முடித்து வீரமும், விவேகமும், பலமும் கொண்ட பெண்மணியாக தன்னை நிரூபித்துள்ளார்.
அகிலா நாராயணன்
அமெரிக்க ராணுவ வீரர்களுக்கான சட்ட ஆலோசகராக செயலாற்ற இருக்கும் அகிலா நாராயணன், தான் வாழும் நாட்டுக்காக சேவை செய்வதற்காகவே இத்துறையில்
இணைந்துள்ளார். அவரது இத்தகைய சேவை மனப்பான்மைக்கு பலர் பாராட்டு தெரிவித்து வருவதோடு, அவரது குடும்பத்தாரையும் வாழ்த்தி வருகிறார்கள்
கோட்டா மீது சிறிதரன் பாய்ச்சல்
கோட்டா மீது சிறிதரன் பாய்ச்சல்
எரிபொருள் தட்டுப்பாடு என்பது இந்த அரசாங்கத்தின் இயலாமையையும், வலுக்குன்றிய நிலையையும், திட்டமிடப்படாத பொருளாதார சிந்தனைகளையும்
இராணுவ சிந்தனைகளோடு மட்டுமிருக்கின்ற கோட்டபாயவின் தோற்றுப்போன மனநிலையை இந்த உலகில் காட்டி நிற்கின்றது என பாராளுமன்ற உறுப்பினர் எஸ் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சியில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (2) ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தொடர்ந்து தெரிவித்த அவர்,
அரசாங்கத்திடமிருந்து எரிபொருள் கிடைக்காத காரணத்தால் கிளிநொச்சியில் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நிற்பதை நாங்கள் பார்க்கின்றோம்.
இது அவர்களைப் பொறுத்தவரையில் பொருளாதாரத்தில் மற்றுமொரு அடியாக உள்ளது.
எனவே,இந்த அரசாங்கம் தோல்வியடைந்த அரசாங்கமாகும். அவர்கள் தமிழ், சிங்கள மக்களை வதைத்து அதன் ஊடாக தமது குடும்ப நலனை கொண்டிருக்கின்ற ஒரு அரசாங்கமாக உள்ளது.
தனியார் ஊடாக உரத்தினை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளதாக அரசாங்கம் சொல்கின்றபொழுதிலும், வடக்கில் தமிழ் மக்கள் உரத்தினை பெற்றுக்கொள்ளவோ
அல்லது காணவோ முடியாத நிலையிலேயே உள்ளனர். ஆகவே இது மிகப்பெரிய பின்னடைவையும், இந்த மக்களுக்கு ஏமாற்றத்தையும் கொடுத்திருக்கின்றது என்றார்
காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
இலங்கை நாவுல, எலஹெர பகுதியில் வீதி சோதனையில் ஈடுபட்ட போலீசாருக்கும்
நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகளை அடுத்து 32 வயதுடைய நபர் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார்
மேற்படி படுகொலை சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது
இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்
இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்
இலங்கைக்கு எரிபொருளை ஏற்றிய வண்ண கப்பல் ஒன்று வந்தடைந்துள்ளது
இந்த கப்பலில் சுமார் 37500 மெட்ரிக் தொன் டீசல் உள்ளதாகவும் விரைவில்
இவை நாடெங்கும் உள்ள எரிபொருள் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்க பட்டுள்ளது
நீர் இன்றி தவிக்கும் கொழும்பின் பல பகுதிகள்
.நீர் இன்றி தவிக்கும் கொழும்பின் பல பகுதிகள்
இலங்கை கொழும்பின் பல கிராம பகுதிகள் நீர் ஒன்றி துவைத்து அவருகிறது ,14
மணித்தியாலம் நீர் வெட்டு இடம்பெறும் என அறிவிக்க பட்ட நிலையில் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது
மின்சாரம் இன்றி மக்கள் தவித்து அவரும் நிலையில் தற்பொழுது நீரும் இன்றி மக்கள் தவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது








