Author: நலன் விரும்பி
30 லட்சம் உக்கிரேன் மக்கள் அகதிகளாக தப்பி ஓட்டம்
30 லட்சம் உக்கிரேன் மக்கள் அகதிகளாக தப்பி ஓட்டம்
உக்கிரேன் மீது ரசியாபடைகள் தொடர்ந்து தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,இந்த தாக்குதல்களில் இருந்து உயிரை பாதுகாத்து
கொள்ள முப்பது லட்சம் மக்கள் உகிரேனை விட்டு அயல் நாடுகளுக்கு அகதிகளாக சென்றுள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது
தொடரும் சண்டையினால் மேலும் லட்சம் மக்கள் தஞ்சம் அடையக்கூடும் என எதிர் பார்க்க படுகிறது
பேஸ்புக்ல காதல் – முல்லைதீவில் 2 மாணவிகள் கற்பழிப்பு
பேஸ்புக்ல காதல் – முல்லைதீவில் 2 மாணவிகள் கற்பழிப்பு
முல்லைத்தீவு – புதுமாத்தளன் பகுதியில் இரண்டு சிறுமிகள் கடந்த 16ஆம் திகதி காணாமல் போன நிலையில் அவர்களை தேடும் நடவடிக்கையில் பெற்றோர்கள் கிராமத்தினர்கள் பொலிசார் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று மாலை புதுக்குடியிருப்பு நகர்பகுதியில் இருவரும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ளார்கள்.
சிறுமிகளிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது ஒருவர் பேஸ்புக் ஊடாக மட்டக்களப்பு – செங்கலடிப்பகுதி இளைஞர் ஒருவருடன் காதல் தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார்.
அந்த இளைஞன் சிறுமியினை மட்டக்களப்பு வருமாறு அழைத்துள்ளதை தொடர்ந்து சிறுமி தனது நண்பியுடன் வீட்டிற்கு தெரியாமல் மிதிவண்டியில் மாலைநேர கல்விக்கு
செல்வதாக சொல்லிவிட்டு மிதிவண்டியினை பற்றைக்காட்டிற்குள் போட்டுவிட்டு பேருந்தில் ஏறி மட்டக்களப்பு செங்கலடிக்கு சென்றுள்ளார்கள்.
செங்கலடி இளைஞன் இருவரையும் காரில் ஏற்றிச்சென்று, தான் பேசிய சிறுமியுடன் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளதை தொடர்ந்து, அவர்களை வீடுசெல்ல அழைத்துக்கொண்டுவந்து யாழ்ப்பாணத்திற்கு செல்லும் பேருந்தில் ஏற்றிவிட்டுள்ளான்.
இரண்டு சிறுமிகளும் யாழ்ப்பாணம் சென்று யாழ் நகரப்பகுதியில் சுற்றிதிரிந்த வேளையில் கடை ஒன்றில் பொருட்களை வாங்கிய போது நள்ளிரவாகியுள்ளது.
இரண்டு சிறமிகளுக்கும் உதவிசெய்வதாக கூறி இரண்டு இளைஞர்கள் சிறுமிகளை அழைத்துக்கொண்டுசென்று வீடு ஒன்றில் தங்கவைத்து மற்றைய சிறுமியுடன் பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
யாழ்ப்பாணத்தில் இருந்து முல்லைத்தீவு பேருந்தில் இரண்டு சிறுமிகளும் ஏற்றி அனுப்பப்பட்டுள்ளதுடன் இரண்டு சிறுமிகளும் புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வந்திறங்கியுள்ளார்கள்.
புதுக்குடியிருப்பில் இரண்டு சிறுமிகளின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு, இருவரும் கைதுசெய்யப்பட்டு முல்லைத்தீவு பொலிசில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் இருவரிடத்திலும் பெறப்பட்ட வாக்குமூலத்தினை தொடர்ந்து இரண்டு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனை அனுப்பிவைக்கப்பட்டுள்ளதுடன்.
சிறுமிகள் இருவருடனும் பாலியல் துஸ்பிரயோகத்தினை மேற்கொண்டவர்கள் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
கொழும்பில் நீர் வெட்டு – மக்கள் அவதி
கொழும்பில் நீர் வெட்டு – மக்கள் அவதி
இலங்கை தெஹிவளை – கல்கிசை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள், இரத்மலானை,
கொழும்பு – 5, கொழும்பு – 6, பத்தரமுல்லை, பெலவத்தை, ஹிம்புட்டான பகுதிகளுக்கு 24 மணித்தியாலம் நீர் வெட்டு இடம்பெறவுள்ளது
அத்தியாவசிய திருத்த வேலை காரணமாக இந்த நீர் வெட்டு இடம்பெறவுள்ளதாக தெரிவிக்க படுகிறது
காய்ச்சல் தொற்றுக்கு குழந்தை மரணம் – யாழில் நடந்த சோகம்
காய்ச்சல் தொற்றுக்கு குழந்தை மரணம் – யாழில் நடந்த சோகம்
யாழ்ப்பாணம் நெடுந்தீவு – 11ஆம் வட்டார பகுதியைச் சேர்ந்த குழந்தை ஒன்று
கைச்சால் மற்றும் வயிற்றோட்டம் காரணமாக பலியாகியுள்ளது
இந்த சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது
இலங்கைக்கு வேறுவழியில்லை என்கிறார் மனோ கணேசன்
உணவு, மருந்து, எண்ணெய்க்கு இந்தியா..! கடன்சுமை மறுசீரமைப்புக்கு ஐஎம்எப்..!
- இலங்கைக்கு வேறுவழியில்லை என்கிறார் மனோ கணேசன்
இந்தியாவிடம் நூறுகோடி அமெரிக்க டொலர் புதிய கடன் பெற்று அதன் மூலம் அங்கிருந்து உணவு, மருந்து, எண்ணெய் ஆகிய அத்தியாவசிய பொருட்களையும் இலங்கை பெறுகிறது. கடந்த காலங்களில் இந்தியாவை திட்டி தீர்த்து, கரித்து கொட்டிய, இவர்கள், இன்று, புதுடெல்லிக்கு போய் கைகட்டி நிற்கிறார்கள். இந்த இந்திய கடனுதவி கிடைத்திராவிட்டால், இந்த சித்திரை சிங்கள-தமிழ் புது வருடம், ராஜபக்ச அரசுக்கு கடைசி வருடமாகி இருக்கும். புத்தாண்டின் போது இலங்கை அரசின் நிலைமையும் சிரிப்பாய் சிரித்திருக்கும்.
அதேபோல் சர்வதேச நாணய நிதியுடன் உரையாடி பழைய கடன்களை மறுசீரமைக்க முயல்கிறார்கள். அதைதான் செய்ய வேண்டும். வேறு வழியில்லை. இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள் கண்மூடித்தனமாக கடன் வாங்கி,
பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து, வீணடித்து ஏற்றி வைத்துள்ள கடன் சுமையை, திருப்பி செலுத்த, கால அவகாசம் பெற்று, மறு சீரமைக்காவிட்டால், இலங்கை அதோகதிதான்.
நாட்டை இந்த நிலைமைக்கு கொண்டு வந்துள்ள இந்த ராஜபக்ச மூளைகளை கொழும்பு நூதனசாலையில் வைத்து நாம் பாதுகாக்க வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்
மனோ கணேசன் எம்பி மேலும் கூறியுள்ளதாவது,
இந்தியாவின் தேசிய பாதுகாப்பை கரிசனையில் எடுக்காமல் இலங்கையின் இன்றைய அரசு அராஜகமாக செயற்பட்டது. இந்நிலைமை நீடித்து இருந்தால், இங்கும் ஒரு
உக்ரைன் நிலைமை ஏற்பட்டு இருந்தாலும், ஆச்சரியப்படுவதற்கில்லை. இன்று இலங்கை – இலங்கை உறவுகள் ஒப்பீட்டளவில் சீரமைக்கப்பட்ட காரணத்தால் இந்நிலைமை தவிர்க்கப்பட்டுள்ளது என நினைக்கிறேன்.
பொருளாதார சீரழிவு மற்றும் அரசியல் ஸ்திரமின்மை ஆகியவற்றை இந்தியாவின் உதவியுடன் பாதுகாக்க முயலும் அரசாங்கம், இந்தியாவுடன் செய்து கொண்டுள்ள பரஸ்பர ஒப்பந்தங்களையும் நேர்மையுடன் அனுசரிக்க வேண்டும். 1964ன் சிறிமா-
சாஸ்திரி ஒப்பந்தம், 1974 சிறிமா-இந்திரா ஒப்பந்தம்,1987ன் ராஜீவ்-ஜேஆர் ஒப்பந்தம் ஆகியவற்றின் அமுலாக்கல்கள் தொடர்பில் இலங்கை அரசு பதில் கூற வேண்டியுள்ளது. இவற்றை கண்காணிக்கும் கடப்பாடு இந்திய அரசுக்கும் இருக்கிறது.
அதேவேளை, இதற்கு முன் நடைபெற்ற ராஜபக்ச அரசாங்கங்கள் வாங்கி, பிரயோஜனமற்ற விஷயங்களில் முதலீடு செய்து வீணடித்த கடன் சுமையை, திருப்பி
செலுத்த, கால அவகாசம் பெற்று, மறு சீரமைக்க, சர்வதேச நாணய நிதியை நமது அரசாங்கம் நாடுகிறது.
சர்வதேச நாணய நிதியை பற்றி இலங்கையில் பாரம்பரியமாக நல்லெண்ணம் கிடையாது. எனினும் இன்று கடன் சுமையை மறு சீரமைக்க வேறு வழி இருப்பதாக தெரியவில்லை.
இந்தியாவிடம் புதிய கடன் வாங்கி அத்தியாவசிய பொருட்களை மக்களுக்கு வழங்குவதை போன்று சர்வதேச நாணய நிதியிடம், பொருள் வாங்க கடன் பெற முடியாது. இதுபற்றி இன்று இலங்கை அரசுக்கு உள்ளேயே தெளிவில்லை. சர்வதேச
நாணய நிதியை நாடுவது ஏற்கனவே வாங்கிய கடன்களை, கால அவகாசம் பெற்று எப்போது, எப்படி திருப்பி செலுத்துவது என்ற மறுசீரமைப்புக்காக என்பதை மறக்க கூடாது.
அதேவேளை சர்வதேச நாணய நிதி, ஐரோப்பிய யூனியனின் ஜிஎஸ்பி ப்ளஸ் போன்ற நிறுவன செயற்பாடுகளுக்கு பின் நிற்கும் மேற்கத்தைய நாடுகள், இந்நாட்டில் இன்றுள்ள 20ம் திருத்தம் அகற்றப்பட்டு, அதை பழைய அசல் ஷரத்துகளுடன் 19ம்
திருத்தம் பிரதியீடு செய்ய வேண்டும் என இலங்கை அரசை நிர்பந்திக்க வேண்டும். ஒரு காலத்தில் 20ம் திருத்தம் மூலம் உருவான சர்வதிகார ஜனாதிபதியை வரவேற்ற
இலங்கை மக்கள், இன்று 20 போய் 19 மீண்டும் வருமானால் அதை வாழ்த்தி வரவேற்பார்கள். ஆகவே அதற்கான நிபந்தனை விதிக்கப்பட வேண்டும்.
கிளிநொச்சியில் புயல் -5 வீடுகள் சேதம் – மரம் விழுந்து ஆட்டோ நாசம்
கிளிநொச்சியில் புயல் -5 வீடுகள் சேதம் – மரம் விழுந்து ஆட்டோ நாசம்
கிளிநொச்சி மாவட்டத்தில் திடீர் என பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட செல்வாநகர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் வீடுகள் சேதம் அடைந்துள்ளன.
மாலை 5 மணி நிலவரத்தின் படி செல்வா நகரில் மூன்று வீடுகளும் கிருஷ்ணாபுரத்தில் 5 வீடுகளும் பாதிப்படைந்துள்ளதாக மாவட்ட இடர் முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
இதேவேளை மரம் முறிந்து விழுந்ததில் வீடு சேதமடைந்துள்ளதுடன், முச்சக்கரவண்டி ஒன்றும் சேதமடைந்துள்ளது.
பிற்பகல் 3 மணியளவில் வானிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக ஏற்பட்ட
பாதிப்புக்கள் தொடர்பில் மாவட்ட இடர் முகாமைத்துவப் பிரிவு தகவல்களை திரட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை
ரசியா தொலைக்காட்சி பிரிட்டனில் ஒளிபரப்ப தடை
ரசியா நாட்டின் ஆதரவு ஊடகமாக விளங்கி வரும் rt ஊடகம் பிரிட்டனில் ஒளிபரப்ப
மற்றும் இயங்க தடை விதிக்க பட்டுள்ளது
இந்த ஊடகம் பிரிட்டனில் அதன் ஒளிபரப்பை மேற்கொள்ள உரிய அனுமதி பத்திரம்
பெற்று இருக்கவில்லை என ஆப்காம் தெரிவித்து இந்த தடையினை வழங்கியுள்ளது
உக்கிரேன் நாட்டில் ரசிய இராணுவம் ,இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வரும்
நிலையில் அதன் செய்திகளை முக்கியத்துவம் வாய்ந்த நிலையில் ஒளி பர பரப்பை
வந்த நிலையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்று இருப்பதாக கருத படுகிறது
4000 கார்களுடன் எரியும் கப்பல் – மூழ்கும் அபாயம்
4000 கார்களுடன் எரியும் கப்பல் – மூழ்கும் அபாயம்
அட்லாந்திக் கடல் பகுதியில் 4000 கார்களை ஏற்றிய படி பயணித்து கொண்டிருந்த
பெரும் சரக்கு கப்பல் ஒன்று திடீரென தீ பற்றி கொண்டது ,இதன் போது அதில் பணியாற்றிய 27 மாலுமிகள் போர்த்துக்கல் கடற்படையினரால் மீட்க பட்டுள்ளனர்
இந்த கப்பலில் உலகில் அதிக விலை உயந்த Lamborghinis including Urus SUVs as well as Aventador and Huraca
கார்கள் என்பன உள்ளடக்க பட்டுள்ளன
வாடிக்கையாளர்களுக்கு வினியோகிக்கும் முகமாக ஆடர் செய்ய பட்டு கப்பல் மூலம் எடுத்துவரப்பட்ட கப்பலே இந்த தி விபத்தில் சிக்கியது
இந்த தி விபத்துக்குரிய கரணம் இதுவரை வெளியிட படவில்லை,தீயினை அணைக்கும் முயற்சியில் தொடர்ந்து கடற்படையினர் ஈடுபட்டுள்ளனர்
பிரிட்டனில் போலீசாரை வேட்டை – 249 ரவுடிகள் கைது
பிரிட்டனில் போலீசாரை வேட்டை – 249 ரவுடிகள் கைது
பிரிட்டனில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகை தாக்குதலில் சிக்கி 249 தெரு ரவுடிகள் கைது செய்துள்ளனர்
லண்டன் புறநகர் பகுதியான பேர்மிங்கம் பகுதியில் இடம்பெற்ற கத்தி வெட்டு தாக்குதலை அடுத்து இந்த முற்றுகை நடவடிக்கை மேற்கொள்ள பட்டது
தொடர்ந்து தேடுதல்கள் பலமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்
ரசியா இராணுவ தாக்குதலில் உக்கிரேன் பிரபல நடிகை மரணம்
உக்கிரேன் கீவ் நகரை சுற்றிவளைத்து ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,
இந்த முற்றுகை தாக்குதலில் சிக்கி பிரபல நடிகைOksana Shvets’ பலியாகியுள்ளார்
இவரது மரணம் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ரஷியா ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்
ரஷியா ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்
உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிரஷியா ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்வித்துள்ளது.
உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய ராணுவம் முன்னேற முடியாமல் திணறல்- இங்கிலாந்து தகவல்
ரஷிய ராணுவம்
உக்ரைன் மீது ரஷியா தொடங்கியுள்ள போர் 4-வது வாரத்துக்குள் சென்றுள்ளது. உக்ரைனின் சில நகரங்களை ரஷிய படைகள் கைப்பற்றி உள்ளன.
ஆனால் பெரிய நகரங்கள் எதையும் இதுவரை ரஷியா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரவில்லை. குறிப்பாக தலைநகர் கிவ்வையும், 2-வது பெரிய நகரமான கார்கிவையும் பிடிப்பதில் ரஷிய ராணுவம் திணறி வருகிறது.
கீவ் நகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ள போதிலும் நகருக்குள் இன்னும் நுழையவில்லை. ரஷிய படைகளுக்கு எதிராக உக்ரைன் ராணுவ வீரர்கள் கடும் சவால் அளித்து வருகிறார்கள்.
இந்தநிலையில் உக்ரைனின் அனைத்து நகரங்களிலும் ரஷிய படைகள் திணறி வருவதாக இங்கிலாந்து உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து உளவுத்துறை கூறும் போது, ‘‘ரஷிய படைகளுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில் ரஷியாவின் படையெடுப்பு உக்ரைன் நகரங்களில் சமீப
நாட்களில் ஸ்தம்பித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
இந்த தகவலை உக்ரைன் ராணுவம் உறுதி செய்துள்ளது.
ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற மாணவன்
ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற மாணவன்
7 வயதில் தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை 30 ஆண்டுகளுக்கு பிறகு வாலிபர் 101 முறை கத்தியால் குத்தி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவமானப்படுத்தியதால் ஆத்திரம்: ஆசிரியையை 101 முறை கத்தியால் குத்தி கொன்ற முன்னாள் மாணவர்
பெல்ஜியம் நாட்டின் ஆண்ட்வெர்ப் அருகே ஹெரெண்டல்ஸ் பகுதியில் வசித்தவர் மரியா வெர்லிண்டன் (57). ஆசிரியையான இவர் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் கொலை செய்யப்பட்டு வீட்டில் பிணமாக கிடந்தார்.
அவரது உடலில் பல இடங்களில் கத்தியால் குத்திய காயங்கள் இருந்தன. அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அனுப்பினர். அதில் அவரது உடலில் 101 முறை கத்தியால் குத்தி இருப்பது தெரியவந்தது.
அவரை கொடூரமாக கொலை செய்தது யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். தீவிர விசாரணை நூற்றுக்கணக்கான டி.என்.ஏ. மாதிரிகள் என
பல்வேறு கோணங்களில் கொலையாளியை கண்டுபிடிக்க போலீசார் முயற்சித்த போதும் பலன் கிடைக்காமல் இருந்தது.
இந்த நிலையில் கொலை நடந்த 16 மாதங்களுக்கு பிறகு துப்பு துலங்கியது. ஆசிரியை மரியா வெர்லிண்டனை கொன்றது முன்னாள் மாணவர் என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
37 வயதான கன்டர் உவென்ட்ஸ் என்பவர் தனது 7 வயதில் ஆரம்ப பள்ளியில் படித்தபோது அவருக்கு ஆசிரியையாக மரியா வெர்லிண்டன் இருந்தார்.
அப்போது கன்டர் உவென்ட்ஸ் பற்றி ஆசிரியை மரியா சில கருத்துக்களை தெரிவித்தார்.
இது தன்னை அவமானப்படுத்தியதாக கருதிய கன்டர் உவென்டஸ் ஆத்திரம் அடைந்தார். அதை மனதில் வைத்து கொண்டே இருந்து அவர் 30 ஆண்டுகளுக்கு பிறகு
தன்னை அவமானப்படுத்திய ஆசிரியையை கத்தியால் பலமுறை குத்தி கொடூரமாக கொலை செய்துள்ளார். இதை அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார்.
இந்த கொலை வழக்கு விசாரணையின் போது கன்டர் உவென்ட்ஸ் தனது டி.என்.ஏ. மாதிரியை வழங்கி இருந்தார்
. இதனால் தான் சிக்கி கொள்வோம் என்பதால் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்
.மனைவி ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்
தனுஷ்-ஐஸ்வர்யா இருவரின் திருமண வாழ்க்கை பிரிவிற்கு பிறகு தனுஷ், ஐஸ்வர்யாவை வாழ்த்திய விதத்தால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ஐஸ்வர்யாவை வாழ்த்திய தனுஷ்… ரசிகர்கள் அதிர்ச்சி
தனுஷ் – ஐஸ்வர்யா
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா தற்போது ‘பயணி’ என்ற இசை ஆல்பம் ஒன்றை இயக்கியுள்ளார். இந்த இசை ஆல்பம் தமிழில் ‘பயணி’, தெலுங்கில் ‘சஞ்சாரி’, மலையாளத்தில் ‘யாத்ரக்காரன்’, இந்தியில் ‘முசாபிர்’ என்ற பெயரில் தயாராகி உள்ளது.
இந்த ‘பயணி’ இசை ஆல்பத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். விவேகா பாடல் வரிகள் எழுதியுள்ளார். இந்த பாடலை நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தமிழ் சினிமாவின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த
தனுஷ்- ஐஸ்வர்யா, கடந்த மாதம் பிரிய போவதாக அறிவித்து சினிமா உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தினர். இதன் மூலம் அவர்களது 18 வருட திருமண வாழ்க்கை
முறிந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் அவரவர் வேலைகளில் கவனம் செலுத்த தொடங்கினர்.
இந்த நிலையில் நடிகர் தனுஷ் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பயணி இசை ஆல்பத்தை பகிர்ந்து, ஐஸ்வர்யாவை தோழி என குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்து
தெரிவித்தார். இந்நிலையில், தனது இசை ஆல்பத்தை பகிர்ந்து வாழ்த்து தெரிவித்த தனுஷுக்கு,
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்
இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்
சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகை ஷெரின் இடுப்பழகை காட்டி எடுத்த புகைப்படம் வைரலாகியுள்ளது.
இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைத்த ஷெரின்
ஷெரின்
செல்வராகவன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரின். தெலுங்கு, கன்னடம்,
மலையாளம் ஆகிய மொழி படங்களிலும் நடித்துள்ளார். கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3வது சீசனில் கலந்துக் கொண்டு மிகவும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது குண்டாக இருந்த ஷெரின் அதன்பின் 10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாக மாறினார். அவ்வப்போது சமூக
வலைத்தளத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஷெரின் தற்போது மஞ்சள் நிற சேலையில் இடுப்பழகை காட்டி ரசிகர்களை கிறங்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
கணவன் மனைவியை தாக்கிய யானை
கணவன் மனைவியை தாக்கிய யானை
அடம்பன் – முருங்கன், மன்னார் பகுதியில் யானை தாக்கிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குடும்பப் பெண் சிகிச்சை பலனின்
றி நேற்று உயிரிழந்ததாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
சம்பவத்தில் உயிரிழந்தவர் மூன்று பிள்ளைகளின் தாயான சதானந்தன் சுஜாதா வயது 46 என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் வீடு அடம்பன் பகுதியில் உள்ள காட்டுன் அண்மித்தே காணப்படுகின்றது.
தினந்தோறும் குறித்த பெண்ணின் வீட்டுக்கருகில் யானை வருவது வழமை. இவர்கள் யானைக்கு வெடி வைத்து மிரட்டுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி நள்ளிரவு ஒரு மணியளவில் இவர்களின் வளவுக்குள் யானை வந்துள்ளது.
வழியில் சென்று பார்த்த பொழுது வீட்டை விட மிக உயரமான யானை வந்துள்ளது. இவர்கள் டார்ச் லைட் அடித்து பார்த்தபொழுது யானை வீட்டுக்கு அருகில் நின்றுள்ளது.
கணவனை தும்பிக்கையால் இழுத்து தாக்கியுள்ளது. மனைவி யானைக்கு அஞ்சி அருகிலுள்ள வளவுக்குள் ஒளிந்து கொண்டுள்ளார். மனித வாடையை நுகர்ந்து கொண்ட யானை அடுத்த வளவுக்குள் ஒளிந்து கொண்ட மனைவியை தாக்கியுள்ளது.
இதனிடையே கணவன் சிறு காயங்களுக்கு உள்ளான நிலையில் வீட்டுக்குள் ஒளிந்து கொண்டுள்ளார்.
ஆவேசமடைந்த யானை வீட்டிற்குள் புகுந்து கொள்ள முற்பட்ட போதும் அதன் உயரம் காரணமாக உள்ளே செல்ல முடியவில்லை என தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளான மனைவியை அயலவர்களின் உதவியுடன் காப்பாற்றிக்கொண்டு மன்னார் மாவட்ட வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்ட பின்னர், பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றலாகி மானைவி சிகிச்சை பெற்று வந்தார்.
நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த குடும்பப்பெண் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இறப்பு விசாரணை அலுவலர் நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று
பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
- காசாவின் ஸெய்தூன் பகுதியில் இடிபாடுகளிலிருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐம்பத்தைந்து உடல்கள் மீட்கப்பட்டன
- 7ஐரோப்பா நாடுகளில் வெளிநாட்டவரை அனுப்ப திட்டம்
- குளத்தில் கவிழ்ந்த டிராக்டர் விபத்தில் 17 வயது இளைஞர் பலி
- டி-56 ரக துப்பாக்கியும் தோட்டா கண்டு பிடிப்பு
- சீனாவின் ஜியாங்சி மாகாணத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் ஒருவர் பலி, 11 பேர் காணாமல் போயினர்
- பொரலஸ்கமுவ துப்பாக்கிச் சூடு
- பால் தேநீர் மற்றும் சாதாரண தேநீர் விலைகள் ரூ. 5 குறைக்கப்பட்டன
- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
- தெஹிவலாவில் ஒருவர் தீ வைத்துக் கொளுத்தப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேக நபர் கைது
- ஈரானின் கார்க் தீவுக்கு அருகே அமெரிக்கத் தாக்குதலில் ஈரானிய எண்ணெய்க் கப்பல் தாக்கப்பட்டது
- நேபால் வெள்ளத்தில் 3 பேர் உயிருடன் மீட்பு
- இலங்கையின் ஏழு மாவட்டங்களில் நிலவும் வறண்ட வானிலையால் 1,15,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசை
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டுவர எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
இதன் அடிப்படையில் ,கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் மற்றும் டீசல் ஒரு பௌசர் வீதம் விநியோகிக்குமாறு அமைச்சர் காமினி லொக்குகே உத்தரவிட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலவும் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் அமைச்சர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உலக சந்தையில் எரிபொருள் விலைக்கு அமைய இலங்கையிலும் எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா? என்று வினவியபோது அது தொடர்பாக பேச்சுவார்த்தை இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
அதேநேரம் நாட்டில் எரிபொருள் விநியோகத்தை துரிதப்படுத்துவதற்காக விசேட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியிருப்பதாகவும் அமைச்சர் காமினி லொக்குகே மேலும் தெரிவித்தார்
இலங்கைக்கு 1 பில்லியன் கடன் வழங்கும் இந்தியா
இந்தியா இலங்கைக்கு ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்களை குறுகிய கால சலுகைக் கடனாக வழங்கவுள்ளது.
இதற்கான உடன்படிக்கை புது டெல்லியில் உள்ள இந்திய நிதி அமைச்சில் நேற்று (17) கைச்சாத்திடப்பட்டது.
இந்திய அரச வங்கியை பிரதிநிதித்துவப்படுத்தி, அதன் பிரதி பொது முகாமையாளர் ஷிரி புஷ்கார் மற்றும் இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி அமைச்சின் செயலாளர் .ஆட்டிகல ஆகியோர் இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.
இந்நிகழ்வில் நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ,இந்தியய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன், இந்திய வெளி நாட்டலுவல்கள் அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் கலந்துகொண்டனர்.
உணவு, மருந்துப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்காக இந்த ஒரு பில்லியன் டொலர் கடன் வசதி வழங்கப்பட்டுள்ளதாக இந்திய நிதியமைச்சு தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெயசங்கர், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோருடன் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான
பொருளாதார ஒத்துழைப்புகள் தொடர்பில் இங்கு நீண்ட நேரம் ஆராயப்பட்டுள்ள
தீயில் எரிந்த பேரூந்து
தீயில் எரிந்த பேரூந்து
தம்புள்ளை – அனுராதபுரம் வீதியின் புலகல பிரதேசத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளது.
நேற்றிரவு பயணிகளை ஏற்றிச் சென்ற போது குறித்த பேருந்து தீப்பிடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அப்போது பேருந்தில் பயணிகள் இருந்த போதிலும் யாருக்கும் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசேட விசாரணை ஆரம்பித்துள்ளனர்.
மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்
மரத்தில் நிர்வாணமாக தொங்கிய சடலம்
ஹோர்டன் சமவெளி அமைந்துள்ள காட்டுப் பகுதியில் உள்ள மரமொன்றில்
நிர்வாணமாக தொங்கிய சடலமொன்று நேற்று (16) பட்டிபொல பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த காட்டுப் பகுதிக்கு விறகு சேகரிக்கச் சென்ற நபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த நபர் யார் என்பது குறித்து இதுவரை உறுதிப்படுத்தவில்லை என தெரிவித்த பொலிஸார், குறித்த நபர் தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முதல் மதுபானம்
அருந்தியுள்ளதுடன், தான் அணிந்திருந்த சகல ஆடைகளையும் கழற்றி தீவைத்துக் கொளுத்தியுள்ளமை தெரியவந்துள்ளது என்றனர்.
மேலும் அவ்வாறு தீ வைத்து எரியூட்டப்பட்ட ஆடைகளுக்கு மத்தியில் இராணுவத்தினரின் இலட்சினை பொறிக்கப்பட்ட ஆடையொன்றும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
10 அடி உயரமான குறித்த மரத்தில் வயர் ஒன்றைப் பயன்படுத்தி தன்னுயிரை குறித்த நபர் மாய்த்துக்கொண்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக தெரிவித்துள்ள பொலிஸார், சடலத்தை பிரேத
பரிசோதனைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக தெரிவித்தனர்.
பசில் மோடி சந்திப்பு
பசில் மோடி சந்திப்பு
இந்தியா சென்றுள்ள நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சற்று முன்னர் சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு புதுடில்லியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, இந்திய வௌியுறவுத்துறை செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லாவையும் பசில் இன்று சந்தித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.




















