Author: நிருபர் காவலன்
கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை
கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை
கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை ,மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் 33 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி
ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி
ரயிலில் மோதி ரயில் கடவை மேற்பார்வையாளர் பலி ,கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயில் மோதியதில், ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து, இன்று சனிக்கிழமை (19) அதிகாலையில் இடம்பெற்றுள்ளதாக, பட்டிபொல பொலிஸார் தெரிவித்தனர்.
தியத்தலாவ பகுதியைச் சோர்ந்த 26 வயதுடைய சம்பத் சல்காடு என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற ரயிலில் பெரகும்புர – அம்பெவெல ரயில் நிலையங்களுக்கு இடையில், அதிகாலை 4:15 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் ரயில் நிலையத்தில் ரயில் கடவை மேற்பார்வையாளராக பணி புரிந்து வருவதாகவும் ரயில் செல்லும் போது அவர் தண்டவாளத்தில் படுத்து உறங்கியதாகவும், விசாரணையில் தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவரின் சடலம் அதே ரயிலில் ஏற்றி அம்பெவெல ரயில் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பட்டிபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது
பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது
பிள்ளையானின் சாரதி அதிரடியாக கைது முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானின் சாரதியை குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் இன்று கைது செய்துள்ளனர்.
கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்டமை
தொடர்பான விசாரணைகளுக்காக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் கடந்த 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பிலேயே பிள்ளையானின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் தற்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் 90 நாட்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ
பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ
பிள்ளையானின் பலநூறு கோடி சொத்துக்களின் விபரங்கள் இதோ ,பிள்ளையானின் பலநூறு கோடி மதிப்புள்ள சொத்துக்களின் விபரங்கள் இதோ..!
மனித உரிமை பாதுகாவலர் அமைப்புக்களான Amnesty International, Human Right Watch ஆகியன UNHRC ஊடாக இலங்கை அரசு முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களின் கொலைகள் மற்றும்
சொத்துக்குவிப்பு ஆகியவற்றை ஆராய்ந்து விசாரிக்க உடனடியாக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்றை நியமிக்கும் வண்ணம் வலியுறுத்தியுள்ளனர்.
அறிக்கையில் பின்வரும் தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சொத்துக்கள்:-
இலங்கையில் உள்ள சொத்துக்கள்.
- வீடு – 01, மட்டக்களப்பு பூம்புகார் என்ற இடத்தில் இந்த வீடு அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 2 கோடி.
- வீடு – 02, கொழும்பு இராஜகிரிய என்னும் இடத்தில் றோயல் அப்பார்ட்மென்டில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 6.5 கோடி.
- வீடு – 03, கொழும்பு கறுவாத்தோட்டம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 23 கோடி.
- வீடு – 04, மட்டக்களப்பு வாவிக்கரை வீதி – 01 என்ற இடத்தில் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 12 கோடி.
- சுற்றுலாவிடுதி – 01, திருகோணமலை உப்புவெளி என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 5 கோடி.
- சுற்றுலாவிடுதி – 02, நுவரெலியா, நுவரெலியா நகர் என்ற இடத்தில் இந்த சுற்றுலாவிடுதி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: 17 கோடி.
- 12 ஏக்கர் நிலம், மட்டக்களப்பு பாசிக்குடா என்ற இடத்தில் இந்த 12ஏக்கர் நிலம் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 25 கோடி.
- 50 ஏக்கர் நிலம், திருகோணமலை, கும்புறுப்பிட்டி என்ற இடத்தில் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 20 கோடி.
- நிலத்தொகுதி, மட்டக்களப்பு திராய்மடு என்னும் இடத்தில் இந்த நிலத்தொகுதி காணப்படுகிறது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
- 115ஏக்கர் வயற்காணி, மட்டக்களப்பு புளுட்டுமானோடை என்ற இடத்தில் இந்த வயற்காணி அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
- 10ஏக்கர் நிலம், மட்டக்களப்பு மாங்கேணி என்ற இடத்தில் இந்த நிலம் அமைந்துள்ளது. இதன் பெறுமதி: மதிப்பீடு செய்யப்படவில்லை.
- ஆழ்கடல் மீன்பிடி இழுவைப்படகுகள் 12, கொழும்பு டிக்கோவிட்ட என்னும் இடத்தில் இந்த இழுவைப்படகுகள் காணப்படுகின்றன. இதன் பெறுமதி: 20 கோடி.
வெளிநாட்டு சொத்துக்கள்:- - சிங்கப்பூர் Orchard Road இல் அமைந்துள்ள Alfred Tower என்ற இடத்தில் இருக்கும் தொடர்மாடி குடியிருப்பில் வீடு – 01. இதன் பெறுமதி: 7.5 கோடி.
- நகைக்கடையும் கட்டடமும், சுவிட்சர்லாந்து சூரிச் என்ற இடத்தில் இந்த நகைக்கடையும் கட்டடமும் காணப்படுகிறது. இதன் பெறுமதி: 150 கோடி.
- வெளிநாட்டு வங்கிகளிலுள்ள மொத்த பணத்தொகை 20 மில்லியன் அமெரிக்க டொலர்கள்.
அசத்திய லண்டன் விது அண்ணா |srilanka food food 23 |Vanni mainthan
அசத்திய லண்டன் விது அண்ணா |srilanka food food 23 |Vanni mainthan
அசத்திய லண்டன் விது அண்ணா |srilanka food food 23 |Vanni mainthan.லண்டனை சேர்ந்த விது அண்ணா அவர்கள் வவுனியாவில் வாசிக்கும் சில ஏழை மக்களுக்கு அன்னதானம் வழங்கி மகிழ்வித்துள்ளார் .
இந்த அன்னதானத்தை வழங்கிய விது அண்ணா அவர்களுக்கு வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையம் நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்து கொள்கிறது .
- ஓடும் நதியில் ஆடும் படகாய் |Odum Nathiyil Aadum padakaai |562 | VANNI MAINTHAN Song

- மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கிய Gowri German anu aka Australia

- ராகவி விது தம்பதிகள் மாணவர்களுக்கு வழங்கிய மிதிவண்டிகள் |Vanni mainthan

- கோபிகா வழங்கிய 5 மிதிவண்டி -| வவுனியா கோவில்குளம் வித்தியாலயம் |Vanni mainthan

- வவுனியா மாணவனுக்கு மிதிவண்டி வழங்கிய அமெரிக்கா பானு அக்கா |Vanni mainthan

வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல்
வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல்
வடக்கு ஈரானில் ஆயுதக் கடத்தல் வலையமைப்பை ஐ.ஆர்.ஜி.சி படைகள் அகற்றுகின்றன
கிலானின் வடக்கு மாகாணத்தில் ஆயுதக் கடத்தல் வலையமைப்பை இஸ்லாமிய புரட்சிகர காவல்படை (ஐ.ஆர்.ஜி.சி) புலனாய்வுப் பிரிவு கலைத்துள்ளது.
மேற்கு மாகாணங்களிலிருந்து நாட்டின் வடக்கே உள்ள கிலானுக்கு ஆயுதங்களைக் கொண்டு செல்ல முயன்ற ஆயுதக் கடத்தல்காரர்களின் வலையமைப்பை ஐ.ஆர்.ஜி.சி புலனாய்வுப் படைகள் அகற்றின.
நாட்டின் பாதுகாப்பைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் ஆயுதக் கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டதாக ஐ.ஆர்.ஜி.சி வெள்ளிக்கிழமை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
குற்றவாளிகளிடமிருந்து துப்பாக்கிகள், கைத்துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளின் ஏற்றுமதிகள் புலனாய்வுப் படைகளால் பறிமுதல் செய்யப்பட்டன என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம்
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம்
ஏமன் மீதான அமெரிக்க தாக்குதல்களில் 33 பேர் பலி 80 பேர் காயம் ,ஏமன் மீதான சமீபத்திய அமெரிக்க தாக்குதல்களில் குறைந்தது 33 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 80 பேர் காயமடைந்ததாக உள்ளூர் ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அல்மாசிராவின் கூற்றுப்படி, வெள்ளிக்கிழமை இரவு வரை எண்ணெய் முனையம் அமைந்துள்ள செங்கடலில் உள்ள ராஸ் இசா துறைமுகத்தை இந்த தாக்குதல் குறிவைத்தது. குறைந்தது 14 அமெரிக்க விமானத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்த தாக்குதல்கள் பெரும் தீயை ஏற்படுத்தின.
குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு மருத்துவ மற்றும் சிவில் பாதுகாப்பு குழுக்கள் வந்த பிறகும் தாக்குதல் தொடர்ந்தது.
“பொதுமக்கள் உள்கட்டமைப்பு மட்டுமே உள்ள ராஸ் இசா துறைமுகத்திற்கு எதிராக அமெரிக்காவின் குற்றவியல் ஆக்கிரமிப்பு இயக்கப்பட்டது,” என்று துறைமுகத்தை உள்ளடக்கிய ஹோடைடா பிராந்தியத்தின் ஆளுநர் அப்தல்லா ஓடிஃபி கூறினார் என்று அல் மசிரா தெரிவித்துள்ளது.
காசாவில் பாலஸ்தீனியர்களை ஆதரிப்பதை நிறுத்த அமெரிக்க நடவடிக்கைகள் ஏமன் மக்களை கட்டாயப்படுத்தாது என்று அவர் கூறினார்.
இஸ்ரேல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல்
இஸ்ரேல் மீது ஹவுதி ஏவுகணை தாக்குதல் ,இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள பாலஸ்தீனப் பகுதிகள் மீது ஏமன் வெள்ளிக்கிழமை காலை புதிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தியது.
வெள்ளிக்கிழமை காலை டெல் அவிவ் மீது ஏமன் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல் அவிவில் அமைந்துள்ள ஜாஃபா மீது யெர்மெனி ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை சமூக ஊடகங்களில் பரவும் காட்சிகள் காட்டுகின்றன.
ஏமனில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனம் முழுவதும் சைரன்கள் ஒலித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஏமன் இராணுவம் எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.
ஏவுகணையை காட்டி மிரட்டிய ஈரான்
ஏவுகணையை காட்டி மிரட்டிய ஈரான்
ஏவுகணையை காட்டி மிரட்டிய ஈரான் ஈரான் இஸ்லாமிய குடியரசு வெள்ளிக்கிழமை தனது தேசிய ராணுவ தினத்தை நாடு முழுவதும் பிரமாண்டமான ராணுவ அணிவகுப்புகளுடன் கொண்டாடுகிறது, நாட்டின் சமீபத்திய ராணுவ சாதனைகளை வெளிப்படுத்துகிறது.
தெஹ்ரானில் நடைபெற்று வரும் தேசிய ராணுவ தின விழாவில் உயர் பதவியில் உள்ள அரசு மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.
ஈரானிய ஃபர்வர்டின் மாதத்தின் 29 ஆம் தேதி இஸ்லாமிய புரட்சியின் மறைந்த நிறுவனர் இமாம் கோமெய்னி (RA) அவர்களால் தேசிய ராணுவ தினமாக பெயரிடப்பட்டது.
ஏப்ரல் 1979 இல் இஸ்லாமிய குடியரசின் மறைந்த நிறுவனர் இமாம் கோமெய்னியின் வரலாற்றுச் சிறப்புமிக்க கடிதத்திற்குப் பிறகு, தேசிய ராணுவ தினம் ஈரானிய நாட்காட்டியில் சேர்க்கப்பட்டது.
அவர் ராணுவத்திற்கு வலுவான ஆதரவைத் தெரிவித்தார், மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 18 அன்று நாடு முழுவதும் பாரிய அணிவகுப்புகளை நடத்த இராணுவத் துருப்புக்களுக்கு உத்தரவிட்டார்.
கலவரங்கள் மற்றும் பிரிவினைவாத நடவடிக்கைகளை அடக்குவதில் அதன் வெற்றிகரமான பணிகளுக்குப் பிறகு ராணுவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தியதற்காக விரோதமான பிரச்சாரத்திற்குப் பிறகு இமாம் கோமெய்னியின் வரலாற்று முடிவு வந்தது.
அனுரா சஜித் மோதல்
அனுரா சஜித் மோதல்
அனுரா சஜித் மோதல் ,உள்ளூராட்சி சபைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, எந்தக் கட்சி அவற்றைக் கட்டுப்படுத்துகிறது என்பதைப் பொறுத்தது என்ற ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் சமீபத்திய கருத்துக்களை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கடுமையாக விமர்சித்துள்ளார்.
இன்று முன்னதாக ஜனாதிபதி, “நிதி ஒதுக்குவதற்கு முன், யார் திட்டத்தை அனுப்புகிறார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். மன்னார் நகர சபை தேசிய மக்கள் சக்தியுடன் இருந்தால், நாங்கள் கண்களை மூடிக்கொண்டு நிதியை
ஒதுக்குவோம். இருப்பினும், அது வேறொரு கட்சியுடன் இருந்தால், நாங்கள் திட்டத்தை குறைந்தது 10 முறையாவது படிக்க வேண்டும். ஏனென்றால் அந்த நபர்கள் மீது எங்களுக்கு உறுதியான நம்பிக்கை இல்லை” என்று கூறினார்.
பிரேமதாச இந்தக் கருத்தைக் கண்டித்து, இது பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் மற்றொரு முயற்சி என்றும், இதுபோன்ற “மலிவான அரசியல் தந்திரங்களுக்கு” எதிர்காலம் இல்லை என்றும் கூறினார்.
“இந்த வகையான அரசியல் குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும். NPP இன் கட்டுப்பாட்டில் இல்லாத சபைகளுக்கு எந்த நிதியும் ஒதுக்கப்படாது என்று கூறி
ஜனாதிபதி மக்களை முட்டாளாக்க முயற்சிக்கிறார், இதுபோன்ற அற்பமான அரசியல் மிரட்டல்களால் சோர்வடைய வேண்டாம்.
ஜனாதிபதி என்பவர் இன,மத பேதங்களைக் கடந்து சேவையாற்ற வேண்டும். மக்களில் எத்தனை பேர் தேசிய மக்கள் சக்தி ஆதரவாளர்கள் எத்தனை பேர்
ஐக்கிய மக்கள் சக்தியினர் என்று பாரபட்சம் பார்த்து கடமையாற்றக் கூடாது” என்று அவர் கூறினார்.
பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு
பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு
பாடசாலை முன்னால் துப்பாக்கிச் சூடு ,அஹுங்கல்லவில் உள்ள பாடசாலை ஒன்றுக்கு முன்னால் அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு, முச்சக்கர வண்டியில் தப்பிச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
லக்ஷான் மதுஷங்க என்ற 28 வயதான இளைஞர் மீதே துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதுடன் அவரின் இடுப்புப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டு காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு பிஸ்டல் ரக துப்பாக்கியால் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி
வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி
வரணியில் நீரில்மூழ்கி ஒருவர் பலி ,யாழ். வரணி சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.
தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த சிவராசு சிலுசன் (வயது 23) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று வியாழக்கிழமை (17) புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்ட சுமார் எட்டுப் பேர் அடங்கிய நண்பர்கள் சிட்டிவேரம் பகுதியில் உள்ள குளம் ஒன்றில் நீராடிய போது குறித்த இளைஞர் தாமரைக் கொடியில் சிக்குண்ட நிலையில்
மீட்கப்பட்டு வரணி பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அவர் உயிரிழந்துள்ளார்.
சடலம் மரண விசாரணைக்காகவும் பிரேத பரிசோதனைக்காகவும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது
மோட்டார் சைக்கிள் எரிப்பு
மோட்டார் சைக்கிள் எரிப்பு
மோட்டார் சைக்கிள் எரிப்பு ,இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக 7 லட்சம் ரூபாய் பெறுமதியான மோட்டார் சைக்கிள் தீக்கிரையாகியுள்ளது.
இச்சம்பவம் நேற்று (17) மாலை 6 மணிக்கு ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை பகுதியில் உள்ள சுரங்கத்தை அன்டிய பகுதியில் இடம் பெற்றுள்ளது.
இது குறித்து திம்புள்ள பத்தனை பொலிஸார் கருத்து தெரிவிக்கையில், இருவருக்கு இடையே ஏற்பட்ட வாய் தர்க்கம் சண்டையில் முடிந்து இருவரும் படுகாயங்களுடன் கொட்டகலை பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றனர்
ஆயுதங்கள் மீட்பு நபர் கைது
ஆயுதங்கள் மீட்பு நபர் கைது
ஆயுதங்கள் மீட்பு நபர் கைது ,பொலிஸ் காவலில் உள்ள சந்தேகநபர் தெரிவித்த தகவலின்படி, T56 துப்பாக்கிக்குப் பயன்படுத்தப்படும் 50 தோட்டாக்களையும், ஒரு கூர்மையான ஆயுதத்தையும் அதுருகிரிய பொலிஸார் மீட்டுள்ளனர்.
கடந்த 12 ஆம் திகதி அதுருகிரிய பொலிஸ் அதிகாரிகள் குழுவால் குறித்த சந்தேகநபர் 11 கிராம் 100 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.
பின்னர் சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கப்பட்ட போது இந்த வெடிமருந்துகள் மற்றும் கூர்மையான ஆயுதங்கள் நேற்று (17) மீட்கப்பட்டன.
சந்தேக நபர் அதுருகிரிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் அதுருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது
பணம் நகைகளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது ,தெவுந்தர – ஹும்மன வீதியில் மூன்றரை கோடி ரூபாய் பணம் மற்றும் தங்க வளையல்கள், காதணிகள் உட்பட 150 கிராம் தங்கம் என்பவற்றுடன் மேல் மாகாண பொலிஸ்
புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் மேலும் ஐவரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்கிடமான வாகனத்தை நிறுத்தி சோதனை செய்யும் போது வாகனத்தின் பின்புறம் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
தெவுந்தர பொலிஸ் விசேட அதிரடிப்படை முகாமைச் சேர்ந்த அதிகாரிகள், ஹும்மான வீதியில் வேகமாகச் சென்ற வாகனத்தை நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளனர்.
இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்குரிய ஐந்து பேர் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் பணம் மற்றும் தங்க ஆபரணங்களுடன் கைது செய்யப்பட்டனர்.
மேல் மாகாண புலனாய்வுத் தலைமையகத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காரை ஓட்டிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
விசாரணையின் போது பொலிஸ் உத்தியோகத்தர் வழங்கிய வாக்குமூலங்களில் முரண்பாடுகள் காணப்படுவதாக விசேட அதிரடிப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போதைப்பொருள் விற்பனையில் கிடைத்த பணத்தை பகிர இவர்கள் எடுத்துச் சென்றார்களா என்பது குறித்து விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன
உக்ரைனில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உட்பட 3 பேர் பலி
உக்ரைனில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உட்பட 3 பேர் பலி
உக்ரைனில் ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் குழந்தை உட்பட 3 பேர் பலி ,உக்ரைனின் டினிப்ரோவில் இரவு முழுவதும் “பாரிய” ரஷ்ய ட்ரோன் தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் ஆளுநர் தெரிவித்தார்.
“முப்பது பேர் காயமடைந்தனர், அவர்களில் ஐந்து பேர் குழந்தைகள்” என்று உள்ளூர் நிர்வாகத்தை வழிநடத்தும் செர்ஹி லைசாக் டெலிகிராம் செய்தியிடல் பயன்பாட்டில் தெரிவித்தார்.
காயமடைந்தவர்களில் 9 மாத சிறுமியும், 6 மற்றும் 11 வயதுடைய இரண்டு சிறுவர்களும் அடங்குவர் என்று அவர் கூறினார்.
டினிப்ரோவில் மாணவர் விடுதிகள் மற்றும் பள்ளி கட்டிடங்கள் உட்பட குறைந்தது 15 கட்டிடங்களை ட்ரோன்கள் சேதப்படுத்தியதாக மேயர் போரிஸ் ஃபிலடோவ் சமூக ஊடகங்களில் தெரிவித்தார்.
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் பலர் பலி
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் பலர் பலி
காசா மீது இஸ்ரேல் தாக்குதல் பலர் பலி ,காசா மீது இஸ்ரேல் நடத்திய இடைவிடாத குண்டுவீச்சில் பெண் குழந்தைகள் கொல்லப்பட்டனர்
காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தீவிரப்படுத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்களில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக முற்றுகையிடப்பட்ட பிரதேசத்தின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதன்கிழமை காசா நகரத்தின் அல்-துஃபா பகுதியில் உள்ள ஒரு வீட்டை குறிவைத்து அதிகாலையில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டதாக பிரஸ் டிவி தெரிவித்துள்ளது.
“ஹசௌனே குடும்பத்தின் வீடு குறிவைக்கப்பட்ட பின்னர் எங்கள் குழுக்கள் 10 தியாகிகளையும் பல காயமடைந்தவர்களையும் அல்-ஷிஃபா
மருத்துவமனைக்கு மாற்றினர்” என்று சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் கூறினார்.
பாலஸ்தீன மான் செய்தி நிறுவனத்தின்படி, புதன்கிழமை அதிகாலையில் இஸ்ரேலிய தாக்குதல்கள் “பெரும்பாலும் காசா நகரத்தை மையமாகக் கொண்டிருந்தன”, இதில் குறைந்தது 21 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் டஜன் கணக்கானவர்கள் காயமடைந்தனர்.
காசா நகரத்தின் மையத்தில் உள்ள சரயா சந்திப்புக்கு அருகிலுள்ள ஒரு குடியிருப்பு அடுக்குமாடி குடியிருப்பை குறிவைத்து இஸ்ரேலிய வான்வழித்
தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர், அதே நேரத்தில் நகரின் மேற்கே அபு ஹசிரா தெரு அருகே இஸ்ரேலிய உளவு விமானத்தின் ஷெல் தாக்குதலின் விளைவாக மற்றொரு மரணம் பதிவாகியுள்ளது.
நகரின் மையத்தில் உள்ள யார்மூக் மைதானத்தில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்களுக்கு அடைக்கலம் கொடுத்த கூடாரம் மீது நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர்.
தெற்கு காசா பகுதியில் உள்ள கான் யூனிஸில், கூரையில் கூடாரம் அமைக்கப்பட்டிருந்த ஒரு வீட்டை குறிவைத்து நடத்தப்பட்ட ஷெல் தாக்குதலில்
ஒரு பெண் கொல்லப்பட்டார் மற்றும் இரண்டு பேர் காயமடைந்தனர் என்று மான் செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமில் புதன்கிழமை அதிகாலை இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் நான்கு பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
ஈரான் வெளியுறவு அமைச்சர் மே மாதம் இந்தியா வருகிறார் இந்திய ஊடகங்கள்
ஈரான் வெளியுறவு அமைச்சர் மே மாதம் இந்தியா வருகிறார் இந்திய ஊடகங்கள்
ஈரான் வெளியுறவு அமைச்சர் மே மாதம் இந்தியா வருகிறார் இந்திய ஊடகங்கள் ,ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி மே மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு வருகை தர திட்டமிட்டுள்ளதாக உள்ளூர் இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி அமெரிக்காவுடனான தீவிர பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில் மே மாத தொடக்கத்தில் இந்தியாவுக்கு
வருகை தர திட்டமிட்டுள்ளதாக எகனாமிக் டைம்ஸ் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
தனது தற்போதைய பதவிக்காலத்தில் இந்தியாவிற்கு தனது முதல் விஜயத்தில், அரக்சி சபாஹர் துறைமுகம் மற்றும் சர்வதேச வடக்கு-தெற்கு போக்குவரத்து வழித்தடத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும்,
தடைகள் காரணமாக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதார கூட்டாண்மையை மேம்படுத்துவதற்கான உறுதியான நடவடிக்கைகள் குறித்தும் விவாதிப்பார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்கள் தெரிவித்தனர்.
இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர்
இஸ்ரேலியர்கள் நடத்திய தாக்குதலில் 23 பேர் கொல்லப்பட்டனர் ,காசா மக்கள் வசிக்கும் தெற்கு கான் யூனிஸ் பகுதியில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் தங்கியிருந்த பல கூடாரங்களை இஸ்ரேலிய போர் விமானங்கள் இரவு
முழுவதும் தாக்கியதில் 23 பேர் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன ஊடகங்கள் வியாழக்கிழமை தெரிவித்தன.
தெற்கு காசா பகுதியில் கான் யூனிஸுக்கு மேற்கே உள்ள அல்-மவாசி நகரில் இடம்பெயர்ந்த மக்களின் கூடாரங்கள் மீது இஸ்ரேலிய வான்வழித் தாக்குதல்
வியாழக்கிழமை காலை நடத்தியதைத் தொடர்ந்து குறைந்தது 23 பேர் தியாகிகளாகக் கொல்லப்பட்டதாக பாலஸ்தீன சாமா செய்தி நிறுவனம் அறிவித்துள்ளது.
பாலஸ்தீன அறிக்கைகளின்படி, வான்வழித் தாக்குதல்களால் ஏற்பட்ட தீ விபத்தில் இந்த மக்கள் உயிருடன் எரிக்கப்பட்டனர்.
மருத்துவ வட்டாரங்கள் இந்தத் தாக்குதலை ஒரு கொடூரமான குற்றம் என்று விவரித்துள்ளன.
இதற்கிடையில், காசாவின் சிவில் பாதுகாப்பு நிறுவனம் AFP இடம்பெயர்ந்த குடும்பங்கள் வசிக்கும் கான் யூனிஸின் அல்-மவாசி பகுதியில் இடம்பெயர்ந்த பல கூடாரங்கள் மீது இரண்டு இஸ்ரேலிய ஏவுகணைகள் நேரடியாகத்
தாக்கியதைத் தொடர்ந்து குறைந்தது 16 பேர் தியாகிகள், அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் குழந்தைகள், மேலும் 23 பேர் காயமடைந்தனர் என்று கூறியது.
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர் ,பல விடயங்களை வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வருகை தந்து தெரிவித்தார் .
அர்ச்சுனா இராமநாதன் வழிநடத்தும் ஊசி கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட வனேஸ்வரி தம்மிடம் பணம் வணங்கி விட்டு அர்ச்சுனா ஏமாற்றிய விடயங்கள் தொடர்பாக பகிரங்க படுத்தினார் .
தங்களை நம்ப வைத்து அர்ச்சுனா ஏமாற்றி விட்டார் என வனேஸ்வரி தெரிவித்தார் .
தேர்தலில் போட்டியிடும் நோக்கமே அர்ச்சுனா இராமநாதனுக்கு இல்லை எனவும் ,அவர் திட்டமிட்டு மக்களை அவதூறு செய்து ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார் .



























