Author: நிருபர் காவலன்
கண்டி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
கண்டி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு
கண்டி மக்களுக்கான முக்கிய அறிவிப்பு ,கண்டி நகரில் தற்போதுள்ள நிலத்தடி சுரங்கப் பாதைகள் வழியாக வீதியைக் கடக்காத பாதசாரிகளுக்கு
எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை
எதிராக எதிர்காலத்தில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
பாதசாரிகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகள் அமைந்துள்ள
இடங்கள் குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
கண்டி நகருக்கு கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்ட போதே பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.
வீதியைக் கடக்க நிலத்தடி சுரங்கப்பாதை
இது தொடர்பில் அவர் கருத்து வௌியிடுகையில், கண்டி நகரில் குறைந்தளவான மக்களே வீதியைக் கடக்க நிலத்தடி சுரங்கப்பாதைகளை
பயன்படுத்துகின்றனர். மக்கள் இதை பயன்படுத்தாமல் இருப்பதற்கு நிலத்தடி சுரங்கப் பாதைக்குள் அமைக்கப்பட்டுள்ள மலர் விற்பனைக் கடைகளும்
காரணமாக அமைந்துள்ளதை அவதானிக்க முடிந்தது. மக்கள் பாதுகாப்பான முறையில் வீதியை கடக்க வேண்டியது அவசியம் என்பதோடு, மலர்
விற்பனையாளர்களின் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்காத வகையில் எமது தீர்வு பயனுள்ளதாக இருக்க வேண்டும் என்றார்.
ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை
ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை
ரயில்வே சங்கத்தின் எச்சரிக்கை ,தங்கள் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படாவிட்டால் 48 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை
தொடங்குவோம் என்று ரயில்வே லோகோமோட்டிவ் ஆப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களத்திற்கு
கடந்த 2025 ஜூலை 22ஆம் திகதி போக்குவரத்து அமைச்சு மற்றும் ரயில்வே திணைக்களத்திற்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பாக இன்று நியாயமான
பதில் கிடைக்கவில்லை எனில், எதிர்வரும் 30 மற்றும் 31 ஆம் திகதிகளில் வேலைநிறுத்தத்தை ஆரம்பிப்பதாக அந்த சங்கத்தின் தலைவர் கே.யு.கொந்தசிங்க தெரிவித்தார்.
ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினை
குறிப்பாக ரயில் சாரதிகள் எதிர்கொள்ளும் நிர்வாக மற்றும் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் தொடர்பாக, ஒரு தீர்க்கமான தீர்வு காணப்படாவிட்டால் இந்த
வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
73மில்லியன் சொத்து யோஷிதவின் வழக்கு
73மில்லியன் சொத்து யோஷிதவின் வழக்கு
73மில்லியன் சொத்து யோஷிதவின் வழக்கு ,சுமார் 73 மில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்களை சட்டவிரோதமாக கையாண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித
ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கு விசாரணைகளை செப்டம்பர் 22 ஆம்
திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு இன்று (28) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி சஹன் மாபா பண்டார முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
யோஷித ராஜபக்ஷ சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கும் போது இந்த
தடயவியல் கணக்காய்வு அறிக்கை
வழக்கில் தடயவியல் கணக்காய்வு அறிக்கையை ஆதாரமாக முன்வைத்ததோடு, கணக்காய்வு அறிக்கையை தயாரிப்பதற்காக பயன்படுத்தப்பட்ட மின்னஞ்சல் செய்திகள் அடங்கிய 26 இறுவெட்டுகள் (CD), 8
USB, வன்தட்டு (Hard Disk), 1 மடிக்கணினி மற்றும் ஒரு CPU ஆகியவற்றை அணுகி ஆய்வு செய்ய அனுமதி கோரினார்.
இந்தக் கோரிக்கைக்கு தாம் ஆட்சேபனைகளை தெரிவிக்க போவதில்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி குறிப்பிட்டார்.
அதன்படி, இந்த முறைப்பாடு செப்டம்பர் 22 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ச
சட்டவிரோத பணப் பரிமாற்ற குற்றச்சாட்டின் பேரில், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டி
டெய்சி ஃபாரெஸ்ட் ஆகியோருக்கு எதிராக சட்டமா அதிபரினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
யாழில் பெண் போராளி தற்கொலை
யாழில் பெண் போராளி தற்கொலை
யாழில் பெண் போராளி தற்கொலை ,யாழில் திருமணமாகாத முன்னாள் பெண் போராளி ஒருவர் தவறான முடிவெடுத்து இன்றையதினம் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
கொக்குவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய சிறீஸ்கந்தராசா தவரூபி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி
இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், இவர் தனது சகோதரியுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் மன விரக்தியில் இன்று மதியம்
உணவருந்திய பின்னர் தனக்குத்தானே மண்ணெண்ணெயை ஊற்றி தீமூட்டி உயிர்மாய்த்துள்ளார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டுள்ளார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
புதிய வர்த்தகஒப்பந்தம் அமெரிக்கா ஐரோப்பா இடையே
புதிய வர்த்தகஒப்பந்தம் அமெரிக்கா ஐரோப்பா இடையே
புதிய வர்த்தகஒப்பந்தம் அமெரிக்கா ஐரோப்பா இடையே,அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின்
ஸ்கொட்லாந்தில் முக்கிய கலந்துரையாடல்
தலைவர் இடையே ஸ்கொட்லாந்தில் முக்கிய கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்து, அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமொன்றும் வர்த்தக ஒப்பந்தமொன்றை
சர்வதேச ஊடகங்கள் செய்தி
எட்டியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
அதற்கமைய, ஓகஸ்ட் 1 முதல் பெரும்பாலான பொருட்களுக்கு முன்னர் முன்மொழியப்பட்ட 30 வீத பரஸ்பர வரி விகிதத்தை மாற்றும் வகையில்,
ஐரோப்பிய ஒன்றியம் ஏற்றுமதி செய்யும் அனைத்து பொருட்களுக்கும் 15 வீத வரி விதிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி
மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி
மாலைத்தீவு புறப்பட்டார் ஜனாதிபதி ,மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொஹமட் முய்சு அவர்களின் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார
திசாநாயக்க மாலைதீவுக்கான அரச விஜயத்திற்காக இன்று (28) முற்பகல் நாட்டில் இருந்து புறப்பட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க
ஜூலை 28ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையான அரச விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, மாலைதீவு ஜனாதிபதி உட்பட
அந்நாட்டின் உயர்மட்டப் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளதுடன், இலங்கை – மாலைதீவு பரஸ்பர ஒத்துழைப்பை
மேம்படுத்துவதற்காக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை பரிமாறிக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளன.
ஜனாதிபதி, மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு
மேலும், இந்த அரச விஜயத்தின் போது ஜனாதிபதி, மாலைதீவின் இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்யும் வர்த்தக மன்றத்தை சந்தித்து,
உரையாற்றவும் மற்றும் மாலைதீவில் வாழும் இலங்கையர்களைச் சந்திப்பதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த அரச விஜயத்தில் கலந்துகொண்டுள்ளனர்.
பொரளை பகுதியில் விபத்து
பொரளை பகுதியில் விபத்து
பொரளை பகுதியில் விபத்து ,பொரளை பகுதியில் இன்று (28) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐந்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம்
வேகக்கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனம் (Bucket truck) ஒன்று பல வாகனங்களுடன் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில்
காயமடைந்தவர்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு
NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு
NPP உறுப்பினர் வீட்டின்மீது துப்பாக்கிச்சூடு ,வெலிகம பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர் தாரக நாணயக்காரவின் வீட்டை இலக்கு
துப்பாக்கிச் சூடு
வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
33 வயதுடைய சந்தேக நபர் மாத்தறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 16ஆம் திகதி அதிகாலையில் மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவர் தாரக நாணயக்காரவின்
வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு
வீட்டை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றிருந்தனர்.
வீட்டின் வாயிலின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதன் காரணமாக சம்பவத்தில் எந்தவொரு நபருக்கும் காயம் ஏற்படவில்லை.
ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்
ஒரே மேடையில் முக்கிய திருடர்கள்
ஒரே மேடையில் முக்கிய திருடர்கள் ,கறுப்பு ஜூலை நினைவுக் கருத்தரங்கு ” நேற்று – இன்று- நாளை” எனும் தொனிப்பொருளில் யாழ்ப்பாணம் வை.எம்.சீ.ஏ மண்டபத்தில் ஒரே மேடையில் முக்கியதிருடர்கள் ஒன்று கூடினர் .
1983 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 23ஆம் திகதி முதல் ஒரு வார காலம் இலங்கையில் இடம்பெற்ற படுகொலைத்
தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக
தாக்குதல்களில் பலியான உறவுகளின் நினைவாக குறித்த கருத்தரங்கு இடம்பெற்றது.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி ந.ஸ்ரீகாந்தா தலைமையில் நடைபெற்ற இந்த பகிரங்க அரசியல் கருத்தரங்கில்,
பாராளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிவஞானம் சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன், வடக்கு
மாகாண சபையின் முன்னாள் அமைச்சர்
மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சட்டத்தரணி ப.குகனேஸ்வரன், சமூக அரசியல் செயற்பாட்டாளர் சி.சிவமோகன் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
ஒரே மேடையில் முக்கிய திருடர்கள் யாவரும் ஒன்று கூடி இருந்தமை குறிப்பிட தக்கது .
தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்
தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்
தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல் ,தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா பிரான்ஸ் செல்வன் |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா |வெளியீடு -எதிரி இணையம்
செல்வன் அவர்கள் எழுதிய முதலாவது .14 வது பாடலாசிரியராக செல்வன் அறிமுகம் ஆகிறார் .
வாழ்த்துக்கள் அண்ணா ,tholankukku tholanaai iruppendaa selvan new songa vanni mainthan
வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற நூறு பாடல்
வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற நூறு பாடல் ஆசிரியர் உருவாக்கத்தில் 14வது ஆசிரியராக வன்னி மைந்தன் டிக் டாக்
தளத்தின் நிர்வாகிகளில் ஒருவராக விளங்கும் செல்வம் அவர்கள் எழுதிய பாடல் இப்பொழுது வெளியாகியுள்ளது .
பர பரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இந்த பாடல் மிகச்சிறந்த இசையமைப்புடன் சிறந்த ஆளுமை உள்ள வரிகளுடன் வெளியாகியுள்ளது .
கடந்த தினம் இந்தப் பாடல் வரிகள் தளத்தில் வெளியிடப்பட்டு அனைத்து சமூகவளர் தலங்களிலும் பதிவேற்றும் செய்யப்பட்டது.
பலமுறை மக்கள் விரும்பி கேட்கப்பட்ட ஒரு பாடலாக இது காண படுகிறது.
உலகப் பரப்பெங்கும் பரந்து விரிந்து சிதறி கிடக்கிற ஆளுமைகளை தேடி கண்டுபிடித்து ,அவர்களை பாடல் ஆசிரியராக உருமாற்றும் பணியில் வன்னி மைந்தன் தளம் ஈடுபட்டுள்ளது.
பாசறை பாணர் தேனிசை செல்லப்பா
இதற்கு துணையாக பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோ செல்லப்பா அவரது மகன் பாவேந்தன் ஆகியோர் சிறந்த முறையில் அதனை தயாரித்து வழங்கி வருகிறார்கள்.
மதுர குரலோன் பாவேந்தன் குரலிலும் ,சிறந்த இசைஞானியாக விளங்கும் இளங்கோ செல்லப்பாவின் இசையிலும், இந்த பாடல்கள் உயிர் ஊட்டி மெருகூட்டப்பட்டு தயாரிக்க பட்டு வருகின்றன.
இவர்களுடன் ஒன்றிணைத்து இந்த பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்டு இருக்கிற வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மேலும் வளர வேண்டுமென மக்கள் தெரிவிக்கிறார்கள்.
செல்வன் அவர்கள் எழுதிய முதலாவது பாடல் இதோ கீழே காணொளியில் நன்றி அனைவருக்கும்.
- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

- பொறும கடந்தாச்சு எரும எழுந்தாச்சு

- வீர தமிழன் அண்ணன் ஆண்ட மண்ண வணங்கடா |VEERQA THAMILAN ANAN AANDA MANNA VANANGADAA|598|

- என் மேல உனக்கு வெறுப்பா En Mela Unakku Veruppaa597VANNI MAINTHAN SonG

- டேய் டேய் இவன் யாரடா |DEI DEI IVAN YAARADAA |596| | VANNI MAINTHAN Song

- உங்க வீரம் இது தானா பொண்டாட்டியா பிள்ளையா எல்லாம் இங்க வஞ்சமா

அமெரிக்காவில் கத்திக்குத்து 11பேர் பலி
அமெரிக்காவில் கத்திக்குத்து 11பேர் பலி
அமெரிக்காவில் கத்திக்குத்து 11பேர் பலி ,அமெரிக்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது பதினொரு பேர் காயமடைந்தனர்
அமெரிக்காவில் நடந்த கத்திக்குத்து
அமெரிக்காவில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது பதினொரு பேர் காயமடைந்தனர்.
மிச்சிகனில் உள்ள டிராவர்ஸ் நகரில் உள்ள வால்-மார்ட் கடையில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் குறைந்தது
பதினொரு பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அசோசியேட்டட் பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காவல்துறை அதிகாரிகள்
சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். “டிராவர்ஸ் நகரில் உள்ள வால்-மார்ட்டில் நடந்த பல
கத்திக்குத்து சம்பவங்கள் குறித்து கிராண்ட் டிராவர்ஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகம் விசாரணை நடத்தி வருகிறது.
சந்தேக நபர் காவலில் உள்ளார், தற்போது விவரங்கள் குறைவாகவே உள்ளன,” என்று உள்ளூர் சட்ட அமலாக்க நிறுவனங்கள் X இல் தெரிவித்தன.
சம்பவம் குறித்த விசாரணை நடந்து வருகிறது.
15பேர் பலி ஆயுதமேந்திய தாக்குதல்களில்
15பேர் பலி ஆயுதமேந்திய தாக்குதல்களில்
15பேர் பலி ஆயுதமேந்திய தாக்குதல்களில் ,நைஜீரியாவின் பிளேட்டோ மாநிலத்தில் ஆயுதமேந்திய தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்
நைஜீரியாவின் பிளேட்டோ மாநிலத்தில்
நைஜீரியாவின் பிளேட்டோ மாநிலத்தில் அடையாளம் தெரியாத நபர்களால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி தாக்குதல்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்.
தாக்குதல்களில் ஒரு போலீஸ்காரரும் கொல்லப்பட்டார், மேலும் பலர் காயமடைந்தனர்.
கால்நடை வளர்ப்பு
சமீபத்திய மாதங்களில் பிளேட்டோ மாநிலத்தில் விவசாய மற்றும் கால்நடை வளர்ப்பு பழங்குடியினருக்கு இடையே பதட்டங்களும் ஆயுத மோதல்களும் அதிகரித்துள்ளன.
ஜூலை 16 அன்று நடந்த மற்றொரு ஆயுதமேந்திய தாக்குதலில், 27 விவசாயிகள் கொல்லப்பட்டனர்.
துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி
துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி
துருக்கியில் காட்டுத்தீ மக்கள் அவதி ,துருக்கியின் பர்சாவிற்கு காட்டுத்தீ வேகமாக பரவியதால் நூற்றுக்கணக்கானோர் வெளியேறினர்
ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நாட்டின் நான்காவது பெரிய நகரமான பர்சாவை பல வாரங்களாக சூழ்ந்து வரும்
காட்டுத்தீ, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வழி
காட்டுத்தீ, நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற வழிவகுத்தது.
வடமேற்கு துருக்கியில் பர்சாவைச் சுற்றியுள்ள காடுகள் நிறைந்த மலைகளில் இரவு நேர தீ வேகமாகப் பரவி, நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதிகளில் இரவு
வானத்தில் சிவப்பு ஒளியைக் கொண்டு வந்ததாக தி இன்டிபென்டன்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
பர்சா ஆளுநர் அலுவலகம் ஞாயிற்றுக்கிழமை ஒரு அறிக்கையில், 1,100 க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டதால், வடகிழக்கில் உள்ள கிராமங்களில் இருந்து 1,765 பேர் பாதுகாப்பாக
சுற்றியுள்ள காடுகள் எரிந்தன
வெளியேற்றப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. சுற்றியுள்ள காடுகள் எரிந்ததால் பர்சாவை தலைநகர் அங்காராவுடன் இணைக்கும் நெடுஞ்சாலை மூடப்பட்டது.
ஜூன் மாத இறுதியில் இருந்து துருக்கியில் தினமும் டஜன் கணக்கான காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் தீயணைப்பு வீரர்கள் சனிக்கிழமை
76 தனித்தனி தீப்பிழம்புகளை எதிர்கொண்டதாக வனத்துறை அமைச்சர் இப்ராஹிம் யமுக்லி தெரிவித்தார்.
பருவகாலமற்ற அதிக வெப்பநிலை, வறண்ட நிலைமைகள் மற்றும் பலத்த காற்று ஆகியவற்றால் தீ பரவுகிறது.
துருக்கியின் தென்கிழக்கு சிர்னாக் மாகாணத்தில் வெள்ளிக்கிழமை அதிகபட்ச வெப்பநிலையான 50.5C (122.9F) பதிவாகியுள்ளதாக வானிலை
ஆய்வு பொது இயக்குநரகம் தெரிவித்துள்ளது. ஜூலை மாதத்திற்கான அதிகபட்ச வெப்பநிலை 132 இடங்களில் பதிவாகியுள்ளதாக அது மேலும் தெரிவித்துள்ளது.
ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி
ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி
ஆற்றுக்குள் கவிழ்ந்து முச்சக்கரவண்டி ,திம்புள்ள பத்தனை பிரதேசத்தில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி டெவோன் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
விபத்தில் முச்சக்கர வண்டி
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதி காயமடைந்துள்ளார்.
அதிக வேகத்தில் பயணித்த முச்சக்கர வண்டியின் முன்பக்க சக்கரத்தில் ஏற்பட்ட திடீர்
கோளாறு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டதாக திம்புள்ள பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் முச்சக்கர வண்டி பலத்த சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பெண்ணின் கையை பிடித்தவர் கைது
பெண்ணின் கையை பிடித்தவர் கைது
பெண்ணின் கையை பிடித்தவர் கைது ,காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசத்தில் வீடு ஒன்றில் அத்துமீறி உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையைப்பிடித்து இழுக்க முற்பட்ட குற்றச்சாட்டில் கைது
திருமணச் சேவை
செய்யப்பட்ட திருமணச் சேவை தரகரை எதிர்வரும் 12 ம் திகதிவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் நேற்று (25) உத்தரவிட்டார்.
குறித்த பிரதேசத்தில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் திருமண தரகர், ஒரு பெண் ஒருவரை ஆண் ஒருவருக்கு திருமணம் பேசி திருமணம் முடித்துவைத்து
அதற்கான தரகு பணத்தை பெண் மற்றும் மாப்பிள்ளை வீட்டாரிடம் பெற்றுக் கொண்டார்.
இந்த நிலையில் அண்மையில் திருமணம் முடித்த பெண்ணின் கணவர் வேலைக்குச் சென்ற பின்னர் வீட்டில் பெண் தனிமையில் இருந்து வந்துள்ள
நிலையில், வீட்டின் வாசல் கதவை திறந்து சட்டவிரோதமாக நுழைந்து வாசல் கதவில் அவரது தொலைபேசி இலக்கத்தை பெறித்துவிட்டு சென்றுள்ளார்.
திருமண தரகரின் இந்த செயற்பாடு தொடர்பாக கணவனிடம் மனைவி தெரிவித்ததையடுத்து அவரை கணவர் தொலைபேசி ஊடாக எச்சரித்த நிலையில், குறித்த திருமண தரகர் சம்பவதினமான வியாழக்கிழமை (24) பகல்
தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்த ஆசாமி
பெண்ணின் வீட்டிற்குள் உள்நுழைந்து தனிமையில் இருந்த பெண்ணின் கையை பிடித்து இழுக்க முற்கட்டதையடுத்து அவர் அலறியடித்துக் கொண்டு ஓடி வீட்டை விட்டு வெளியேறி அயலவர் வீட்டிற்குள் புகுந்துள்ளதையடுத்து,
அவர் அங்கிருந்து தப்பி ஒடியுள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இதனையடுத்து குறித்த பெண் பொலிஸ் நிலைய பெண்கள் பிரிவில் செய்த முறைப்பாட்டுக்கமைய 2 பிள்ளைகளின் தந்தையான 40 வயதுடைய திருமண தரகரை கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலையில்
நேற்று (25) ஆஜர்படுத்தியதையடுத்து அவரை எதிர்வரும் 12 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது
போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது
போலி வெளிநாட்டுவேலைவாய்ப்பு நிறுவனம் சிக்கியது ,உரிமம் இல்லாமல் இயங்கி வந்த மற்றொரு வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தை சட்டத்தின் முன் நிறுத்தியது “அத தெரண உகுஸ்ஸா”.
மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாகக் கூறி போலி கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் நிறுவனங்கள் குறித்து
பல சந்தர்ப்பங்களில் நாட்டுக்கு அம்பலப்படுத்தியுள்ளது.
நம் நாட்டில் அப்பாவி மக்கள்
ஆனால், நம் நாட்டில் அப்பாவி மக்கள் இன்னும் இந்த மோசடியால் ஏமாற்றப்படுகிறார்கள் என்பது சோகமான விடயம்.
இதேபோன்று பொரளை பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட போலி கடவுச்சீட்டு தயாரிக்கும் நிறுவனம் தொடர்பில் ஆராய,
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சோதனை
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் சோதனைப் பிரிவின் அதிகாரிகள் குழுவுடன் அந்த இடத்திற்குச் சென்றது.
நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, வெளிநாட்டு கடவுச்சீட்டுக்களை பெற ஏற்கனவே ஒரு குழு அங்கு இருந்ததுடன், அந்த இடம் மிகவும் பரபரப்பாக இருப்பதை நாங்கள் அவதானித்தோம்.
இருப்பினும், நாங்கள் சந்தேகித்தபடி, நிறுவனத்தை நடத்துவதற்கு அங்கிருந்தவர்களிடம் எந்த உரிமமும் இல்லை என்பது தெரியவந்தது.
ஜா-எல பகுதியில் வசிக்கும் மற்றொரு நபரின் பெயரில் இடைநிறுத்தப்பட்ட உரிமத்தைப் பயன்படுத்தி நீண்ட காலமாக இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளது.
போலந்து, ரஷ்யா போன்ற நாடுகளுக்கு மக்களை வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக உறுதியளித்து பெரும் தொகையை அவர்கள் பெற்றுள்ளனர்.
அதன்படி, இந்த போலி நிறுவனத்தை நடத்திய நபர்கள் கைது செய்யப்பட்டதுடன், இதுபோன்ற பிற சட்டவிரோத நடவடிக்கைகளை சட்டத்தின் முன் நிறுத்த அத தெரண உகுஸ்ஸா மிகுந்த விழிப்புடன் உள்ளது.
திடீரென தீப்பிடித்த விமானம்
திடீரென தீப்பிடித்த விமானம்
திடீரென தீப்பிடித்த விமானம் அமெரிக்காவின் டென்வரில் இருந்து மியாமிக்கு பயணிக்கவிருந்த விமானத்தில் திடீரென தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
விமானத்தின் பயணம் இரத்து
இதனால் விமானத்தின் பயணம் இரத்து செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தரையிறங்கும் கியரில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் விமானத்தின் டயரில் தீ மற்றும் புகை ஏற்பட்டது.
173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்
பின்னர் விமானம் ஓடுபாதையில் இருந்து வெளியேற்றப்பட்டு, அதில் இருந்த 173 பயணிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
இந்த சம்பவத்தில் 6 பயணிகள் காயமடைந்ததாகவும், ஒரு பயணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க விமான சேவைக்கு சொந்தமான போயிங் MAX 8 விமானத்திலேயே இவ்வாறு தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்
சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள்
சிறைச்சாலையில் சிக்கிய கையடக்க தொலைபேசிகள் ,வெலிக்கடை சிறைச்சாலையின் வார்டு ஒன்றில் ஆறு கையடக்கத் தொலைபேசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழு

கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைய சிறைச்சாலை அவசரகால பதிலளிப்பு குழுவினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் ஆறு
கையடக்கத் தொலைபேசிகளுக்கு மேலதிகமாக, சாதனங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை
வெலிக்கடை சிறைச்சாலையின் ‘கே’ வார்டில் கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், சிறைத்தண்டனை
விதிக்கப்பட்ட பல முன்னாள் அமைச்சர்கள் அந்த வார்டில் உள்ள கைதிகளில் அடங்குவதாகக் கூறப்படுகிறது.
மஹிந்தானந்த அளுத்கமகே, நளின் பெர்னாண்டோ, எம்.எஸ். ரஞ்சித் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கைதிகள் அந்த சிறைச்சாலை வார்டில் தங்கியுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இளம்பெண் உட்பட 21பேர் கைது
இளம்பெண் உட்பட 21பேர் கைது
இளம்பெண் உட்பட 21பேர் கைது ,கடுவலை – வெலிவிட்ட பகுதியில் நடைபெற்ற விருந்துபசாரம் ஒன்று சுற்றிவளைக்கப்பட்டு, இளம்
போதைப்பொருட்களுடன் கைது
பெண்ணொருவர் உட்பட 21 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக ஊடகங்கள் மூலம் ஏற்பாடு செய்யப்பட்ட விருந்துபசாரம் ஒன்றை சுற்றிவளைத்த போதே இந்தக் குழு
கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் போதை
அவர்களிடம் கஞ்சா, வெளிநாட்டு தயாரிப்பு சிகரெட்டுகள் மற்றும் போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 22 முதல் 27 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
அவர்கள் இன்று (27) கடுவலை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
விசேட சோதனை 13பெண்கள் கைது
விசேட சோதனை 13பெண்கள் கைது
விசேட சோதனை 13பெண்கள் கைது ,காலி நகரின் பல பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 24 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதன்போது மஹாமோதர பகுதியில் சட்டவிரோத சூதாட்ட நிலையத்தை சுற்றிவளைத்த பொலிஸார், அங்கிருந்த 13 பெண்களையும் கைது செய்துள்ளனர்.
முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனை
நேற்று (26) முன்னெடுக்கப்பட்ட இந்த விசோட சோதனை நடவடிக்கையின் போது முச்சக்கர வண்டிகளும் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
போக்குவரத்து விதி மீறல்
இதன்போது போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவருக்கும், போக்குவரத்து விதி மீறல் தொடர்பில் சில சாரதிகளுக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுக்கும் நோக்கில் காலிக்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது









































