செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய எமன் படைகள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய எமன் படைகள்


செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய எமன் படைகள்

செங்கடலில் கப்பல்களை ஓட ஓட துரத்திய ஏமன் படைகள் .


தொடரும் கப்பல் நடவடிக்கையால் செங்கடல் கப்பல் போக்குவரத்து
நெருக்கடியை சந்தித்த வண்ணம் உள்ளது .

வீடியோ

இஸ்ரேல் நகரம் மீது ரொக்கட் தாக்குதல்|சிறைபிடிக்க பட்ட வானூர்தி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் நகரம் மீது ரொக்கட் தாக்குதல்|சிறைபிடிக்க பட்ட வானூர்தி


இஸ்ரேல் நகரம் மீது ரொக்கட் தாக்குதல்|சிறைபிடிக்க பட்ட வானூர்தி

இஸ்ரேல் நகரம் மீது காச அப்போர் படைகள் கடும்
ரொக்கட் தாக்குதல்.

அஸ்கொட் நகரம் பெரும் பாதிப்பு ,
சிறைபிடிக்க பட்ட உலங்கு வானூர்தி

வீடியோ

ரவிகரன்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் புரிவது இனப்படுகொலை ரவிகரன் முழக்கம்

இஸ்ரேல் புரிவது இனப்படுகொலை ரவிகரன் முழக்கம்

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசாவில் நடத்தி கொண்டிருப்பது திட்டமிடப்பட்ட இனப்படுகொலை என தமிழர்களுக்கு உரத்து குரல் வழங்கி வரும் அரசியல் பிரமுகர் ரவிகரன் அவர்கள் தெரிவித்துள்ளார் .


எமக்கு வழங்கிய செவ்வியின் பொழுது அவர் பாதிக்க பட்ட மக்கள் நிலையில் இருந்தும் ,ஈழ தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட அநீதி தொடர்பாக ஒப்பிட்டு உரத்து குரலை வழங்கியுள்ளார் .

இஸ்ரேல் புரிவது இனப்படுகொலை ரவிகரன் முழக்கம்

தனது ஆதரவு பாலஸ்தீனத்திற்கு உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்

இஸ்ரேல் அரசை தட்டி கேட்க ஒருவரும் இல்லை என்கின்ற நிலையில்
கோர தணடவம் ஆடிய இஸ்ரேலுக்கு இது ஒரு சிறந்த வலை வீச்சு என அவர் தெரிவித்துள்ளார் .

அவரது முழுமையான குரல் பதிவை காண கீழே உள்ள இணைப்பில் அழுத்தி பார்க்க முடியும்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி


கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி

கூண்டோடு சிக்கிய இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றம் கிடுக்கு பிடி ,
தங்கள் குற்றம் இழக்கவில்லை என இஸ்ரேல்;முழக்கம்

வீடியோ

ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்


ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல்

ஹவுதி மீது அமெரிக்கா பிரிட்டன் கடும் தாக்குதல் ,
மூன்றாம் உலக போர் வெடிக்கும் அபாயம்

வீடியோ

மகள் மருமகனை கொன்று ஆற்றில் வீசிய தந்தை
Posted in இலங்கை செய்திகள்

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் படுகொலை

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் படுகொலை

கொழும்பு, வாழைத்தோட்டம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி நபர் ஒருவர் நேற்று (11) இரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொழும்பு 12 இல் வசிக்கும் 48 வயதுடைய நபரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

வாழைத்தோட்டம் பகுதியில் நபரொருவர் படுகொலை

சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொலை இடம்பெற்ற இடத்திலேயே சடலம் பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேக நபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை வாழைத்தோட்டம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது
Posted in இலங்கை செய்திகள்

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது

யுக்திய நடவடிக்கையில் மேலும் பலர் கைது

யுக்திய விசேட போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் கீழ் இன்று (12) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியால நடவடிக்கைகளில் 863 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சோதனைகளின் போது 303 கிராம் ஹெரோயின், 141 கிராம் ஐஸ் மற்றும் 1250 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

வாகனத் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீடுகள் தருவதாக கூறி பணம் பறித்த நபர் கைது

வீடுகள் தருவதாக கூறி பணம் பறித்த நபர் கைது

பேலியகொட வணிக வளாகம் மற்றும் கொம்பனித் தெரு பகுதியில் குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு வீடுகளை வழங்குவதாகக் கூறி மக்களிடம் பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையில், பல்வேறு நபர்களிடம் இருந்து 19,663,800 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாகின்ன, கஹவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது

மக்களின் வாழ்வாதாரம் வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது

கலபட தோட்டத்திற்கும் மவ்ஜூன் தோட்டத்திற்கும் காணிகள் இந்த அரசாங்கத்தின் மறுசீரமைப்பின் கீழ் வேறு திட்டத்திற்கு வழங்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

அவர் இது குறித்து மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இந்த மறுசீரமைப்பிற்கு அந்த தோட்டத்தில் வாழும் மக்களின் குடியிருப்புகள் அவ்வாறே இருக்கிறது. அவர்களின் EPF,ETF நிலுவைகளும் அவ்வாறே இருக்கிறது.

இவ்வாறு இருக்கின்ற நிலையில் தோட்டத்தின் பெரும் பகுதி வெளியாட்களுக்கு வழங்குவதால் அந்த மக்களின் வாழ்வாதாரம், வருமானம் முற்றாக ஒழிக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்

அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்

பிரதமர் பதவியை பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றிருந்தால் திருடர்களுடனயே காலம் கடத்த நேரிட்டிருக்கும்.வரும் தேர்தல்களில் கூட திருடர்களுடன் சேர்ந்தே வாக்கு கேட்க வேண்டியிருந்திருக்கும்.திருடர்களை சட்டத்தின் முன் பாதுகாத்திருந்திருக்க வேண்டியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திருடர்களை பிடிக்க அரச அதிகாரம் தேவையில்லை என்றும்,அரச அதிகாரம் இல்லாமலயே உயர் நீதிமன்றத்தால் நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வெளிக்கொண்டு வர முடிந்தது.தான்

ஜனாதிபதியாக பதவி ஏற்றிருந்தால் திருடர்கள் யார் என்று கண்டு பிடிக்க முடியாது போயிருக்கும் என்றும்,உயர் நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை

வழங்கினாலும் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியைப் போன்று கண்டும் காணாமலும் இருக்க நேரிட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்

இரண்டு நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் தரப்பு அமைச்சர்கள் துறைமுக அதிகா ரசபைக்கு சொந்தமான இரு கப்பல்களைப் பயன்படுத்தி கடல் நடுவில் விருந்துபசார கொண்டாட்டம் போட்டனர்.

வங்குரோத்தடைந்த நாட்டில் இவ்வாறானதொரு விடயம் இடம்பெற்றதாகவும்,தானும் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ இருந்திருந்தால், ரணில் விக்கிரமசிங்க போன்று இவ்வாறான சட்ட விரோத செயல்களை கண்டுகொள்ளாதது போன்று செயற்பட்டிருக்க நேரிட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 65 ஆவது கட்டமாக,மதுகம விதிய பண்டார வித்தியாலத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (11) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சோசலிசம் என்பது வார்த்தைக்கு மட்டுமே. எனவே அதற்கு ஏமாறாதீர்கள்,

சோசலிசம் என்ற பெயரில் வீதியில் இறங்கி போராடும் புரட்சியாளர்களின் பிள்ளைகள் கூட வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர்தர ஆடைகளை அணிந்து பயின்று வந்தாலும் அந்த வசதிகளை இந்நாட்டு மக்களுக்கு வழங்குதற்கு விருப்பம் இல்லாது செயற்பட்டு வருகின்றனர்.

சோசலிசம், சமத்துவம்,நீதி,நியாயம் என்று பேசினாலும் அவை வார்த்தைகளுடன் மாத்திரம் மட்டுப்பட்டவை என்றும், 2019 இல் கூட வெற்று கோஷங்களுக்கு செவி சாய்த்து ஏமாற்றியதாலும் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது.இம்முறையும் அதே போன்ற பரப்புரைகளை நம்பி ஏமாந்தால் நாடு இன்னும் ஆழமான பாதாளத்திற்குச் செல்லும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

தியகலவில் பஸ் விபத்து எவருக்கும் காயமில்லை
Posted in இலங்கை செய்திகள்

முறிகண்டியில் இடம் பெற்ற விபத்தில் மூவர்காயம்

முறிகண்டியில் இடம் பெற்ற விபத்தில் மூவர்காயம்

முல்லைத்தீவு – மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இடம் பெற்ற விபத்தில் மூவர் சிறுகாயங்களிற்குள்ளாகினர்.

குறித்த விபத்து நேற்று (11) இரவு 10 மணியளவில் முறிகண்டி பொலிஸ் காவலரணுக்கு அண்மித்து A9 வீதியில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பேருந்து பயணிகளை ஏற்றுவதற்காக பேருந்து தரிப்பிடத்தில் தரித்துள்ளது.

அதே திசையில் பயணித்த ரிப்பர் வாகனம் பேருந்தின் பின்னால் மோதியுள்ளது. சம்பவத்தில் சிறு காயங்களுக்குள்ளான பயணிகள் மூவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதை அடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார் சீர் செய்தனர்.

பெயரளவில் மாத்திரம் முறிகண்டி பொலிஸ் காவலரண் காணப்படுவதாகவும், அதனால் எப்பயனும் மக்களுக்கு இல்லை எனவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

முறிகண்டியில் இடம் பெற்ற விபத்தில் மூவர்காயம்

மாங்குளம் பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் குறித்த விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்க கால தாமதம் ஆனதால், பெரும் அசௌகரியங்களை மக்கள் எதிர்கொண்டனர்.

மாங்குளம் பொலிஸ் நிலைய தலைமை பொலிஸ் அதிகாரியின் அசமந்த போக்கு தொடர்பில் மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு பல முறை மக்களால் கொண்டு செல்லப்பட்ட போதிலும், எவ்வித மாற்றமும் இல்லை என பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்


அமெரிக்கா கப்பல் சிறை பிடிப்பு கடலில் நடந்த மோதல்

அமெரிக்கா ஒயில் கப்பல் சிறை பிடிப்பு ,
காத்திருந்து துரத்தி பிடித்த இரான் கடற்படை .


கடலில் நடந்த மோதல்

வீடியோ

கொழும்பின் பல பகுதிகளுக்கு 10 மணித்தியால நீர் வெட்டு
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

நீர் கட்டணத்தை குறைக்க தீர்மானம்

இடம்பெறவுள்ள மின் கட்டண குறைப்புக்கு இணைந்ததாக, நீர் கட்டணமும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கண்டியில் இன்று (11) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மக்களுக்கு அதிகபட்ச நிவாரணங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.

“எதிர்காலத்தில் நீர் கட்டணம் தொடர்பான விலைச்சூத்திரத்தை அறிமுகப்படுத்த உள்ளோம்.

இதனூடாக மக்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் நாங்கள் செயற்படபோவதில்லை. தண்ணீரை சுத்திகரிக்க தேவையான முக்கிய காரணிகளில் மின்சாரம் ஒன்று.

எனவே மின் கட்டணம் குறைக்கப்பட்டால் நிச்சயமாக நீர் கட்டணமும் குறைக்கப்படும்.

வீடியோ

மருமகள் கர்ப்பம் மாமா மாட்டினார்
Posted in இலங்கை செய்திகள் இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

சைபர் மோசடிகளில் ஏராளமானோர் பணத்தை இழப்பது குறித்து நாம் ஏற்கெனவே ஏராளமான செய்திகளைக் கேள்விப்பட்டிருக்கிறோம். அது போன்ற மோசடிகளில் இது மிகவும் விநோதமானது.

டிசம்பர் மாத தொடக்கத்தில் மங்கேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஃபேஸ்புக்கில் இருந்த தகவல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது, ​​”அனைத்திந்திய கர்ப்பிணி வேலை சேவை” என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு விளம்பர வீடியோவைக் கண்டார். அது அவரை ஈர்த்ததால், அதைப் பார்க்க முடிவு செய்தார்.

அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டிருந்த வேலை உண்மையிலுமே ஒரு அருமையான வேலையாகத் தோன்றியது. அதில் நிறைய பணம் மற்றும் பல்வேறு கவர்ச்சியான பொருட்கள் கிடைக்கும்.

அது என்ன வேலை? ஒரு பெண்ணை கர்ப்பமாக்குவது தான் அந்த வேலை. ஒரு பெண்ணைக் கர்ப்பமாக்கினால் ஏராளமான வசதி வாய்ப்புகள் வந்து சேரும் என அந்த விளம்பர வீடியோ கூறியது.

பெண்ணை கர்ப்பமாக்கினால் 13 இலட்சம் ரூபாய்

நிச்சயமாக, அது உண்மையாக இருக்கும் என்று அவர் நம்பினார். இதுவரை, ஒரு திருமண அலங்கார நிறுவனத்தில் வேலை செய்து மாதம் 15,000 ரூபாய் ($180; £142) சம்பாதிக்கும் 33 வயதான அவர், ஏற்கனவே இந்த மோசடி செய்பவர்களிடம் 16,000 ரூபாயை இழந்துள்ளார். மேலும் அவர்கள் தொடர்ந்து பணம் கேட்கிறார்கள்.

ஆனால் வட இந்திய மாநிலமான பீகாரைச் சேர்ந்த மங்கேஷ் என்பவர் மட்டும் இந்த மோசடியில் சிக்கவில்லை. இன்னும் ஏராளமானோர் சிக்கியிருக்கின்றனர்.

பிகாரின் நவாடா மாவட்டத்தில் உள்ள சைபர் செல் பிரிவின் காவல் துணைக் கண்காணிப்பாளர் கல்யாண் ஆனந்த் பிபிசியிடம் இது குறித்துப் பேசியபோது, பெரிய அளவிலான ஒரு மோசடியில் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அங்கு ஏமாந்தவர்கள் பெரிய அளவில் சம்பளம் கிடைக்கும் என்ற வாக்குறுதியின் பேரில் ஏமாற்றப்பட்டனர் என்றும் கூறினார்.

குழந்தை இல்லாத பெண்ணுடன் ஓட்டலில் இரவு நேரம் தங்கினால் பணம் தருவதாக அந்தக் கும்பல் ஏமாற்றியுள்ளது.

இதுவரை, அந்தக் குழுவைச் சேர்ந்த எட்டு பேரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மொபைல் போன்கள் மற்றும் ஒரு பிரிண்டரை பொலிசார் கைப்பற்றியுள்ளனர். மேலும் 18 பேரை தேடி வருகின்றனர்.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களைக் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான பணியாக இருக்கிறது.

“இந்தக் கும்பல் ஒரு வருடமாக செயல்பட்டு வருகிறது. அவர்கள் நூற்றுக்கணக்கான மக்களை ஏமாற்றியதாக நாங்கள் நினைக்கிறோம். ஆனால் இதுவரை யாரும் புகார் செய்ய முன்வரவில்லை. ஒருவேளை அவமானம் காரணமாக யாரும் புகாரளிக்காமல் இருக்கலாம்,” என்று கல்யாண் ஆனந்த் விளக்கினார்.

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்


இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல் சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல்

இஸ்ரேல் தளங்கள் மீது ஏவுகணை தாக்குதல்
நடத்தி கோடனிருக்கும் லெபனான் போராட்ட காரர்கள் .


சர்வதேச நீதிமன்றில் இஸ்ரேல் ,ஆப்பிரிக்கா ஆரம்பித்த சட்ட போராட்டம்

வீடியோ

செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்


செங்கடலில் ஒயில் கப்பல் மீது தாக்குதல்|எரியும் அமெரிக்கா போர் கப்பல்

செங்கடலில் பயணித்து கொண்டிருந்த ஒயில் கப்பல் மீது ஏமன்
தாக்குதல் .

ஆயுத படகுகள் சுற்றிவளைத்து தாக்குதல் ,அமெரிக்கா போர் கப்பல் மீது
தாக்குதல் எரியும் அமெரிக்கா போர் கப்பல் .

இஸ்ரேல் காசா போர் செங்கடலில் பதட்டம்

வீடியோ

எரியும் காட்சிகள் பார்க்க இதில் அழுத்துங்க

ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News

ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி தயராகும் புதிய தாக்குதல் திட்டம் |Ethiri Youtube Tamil News

இஸ்ரேல் பாலஸ்தீனம் காசா போரினை அடுத்து ஹவுதிகளுக்கு ஈரான் சிறப்பு பயிற்சி


தயராகும் புதிய தாக்குதல் திட்டம் ,உச்சம் பெற்றுள்ள செங்கடல் கப்பல் போக்குவரத்துநெருக்கடியை ஏற்படுத்தியுள்ள நிலையில்

தற்போது இரான்இராணுவம் ஹவுதியபடைகளுக்கு சிறப்பு பயிசிகளை வழங்கி வருகிறது .ஈரான் சிறப்பு முகாமில்
இந்த பயிற்சிகள் வழங்க படுவதாக தகவல் வெளியகிய பர பரப்பை ஏற்படுத்தியுளளது

வீடியோ

யாழில் வாள்வெட்டு ரவுடிகள் அட்டகாசம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

பஸ் சாரதி மீது வாள்வெட்டுத் தாக்குதல்

பருத்தித்துறை பஸ் நிலையத்தில் வைத்து தனியார் பஸ் உரிமையாளர் ஒருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் படுகாயமடைந்த பஸ் உரிமையாளரும் சாரதியுமான தேவகுமார் என்ற குடும்பஸ்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

முகமூடி அணிந்து மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் குறித்த சாரதி மீது சரமாரியான வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்

ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசி ஆன்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசி ஆன்

ஜனாதிபதியை சந்தித்தார் இளவரசி ஆன்

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரித்தானியாவின் இளவரசி ஆன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்துள்ளார்.

கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

கோட்டை ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இளவரசி ஆனி உள்ளிட்ட அரச தூதுக்குழுவினரை வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி அன்புடன் வரவேற்றார்.

அதன் பின்னர் இளவரசி ஆனி உள்ளிட்ட குழுவினர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க ஆகியோருடன் இணைந்து சிநேகபூர்வ உரையாடலில் ஈடுபட்டனர்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில், ஜனாதிபதி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர் நினைவுப் புத்தகத்தில் இளவரசி ஆனியும் பதிவைச் செய்துள்ளார்.

இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, சுகாதார இராஜாங்க அமைச்சர் சீதா அரம்பேபொல, ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா ஆகியோர் கலந்துகொண்டனர்.

இலங்கைக்கு IMF உதவி பெற உத்தரவாதம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி

மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி

இலங்கை துறைமுக அதிகார சபையினால் இரண்டு அகழ்வாராய்ச்சிக் கப்பல்களில் வரி செலுத்துவோரின் செலவில் ஆளும்கட்சி பாராளுமன்ற

உறுப்பினர்களுக்கு கடந்த செவ்வாய்க்கிழமை இலவசமாக சுற்றுப்பயணம் வழங்கப்பட்டுள்ளது.

25க்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் இந்த இலவச களிப்பு சவாரியில் இணைந்துள்ளனர், இது

இலங்கை துறைமுக அதிகாரசபைக்கு (SLPA) கிட்டத்தட்ட ரூ. 5 மில்லியன் செலவாகும் என அகில இலங்கை பொது துறைமுக ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் நிரோஷன் கோரகனகே தெரிவித்தார்.

மக்களின் பணத்தில் எம்.பிக்களுக்கு இலவச சவாரி

இருப்பினும், இரண்டு கப்பல்களுக்கான எரிபொருளுக்கான மொத்த செலவு சுமார் ரூ. 300, 000 எனவும் இந்த கப்பல்கள் வெளியில் இல்லாமல் துறைமுகப்

பகுதிக்குள் மட்டும் சவாரி சென்றதால் எரிபொருளுக்கான கட்டணத்தை மட்டுமே SLPA செலுத்தியது. எனவே செலவு குறைவாக இருந்தது, நம்பகமான SLPA வட்டாரங்கள் தெரிவித்தன.