வீடுகள் தருவதாக கூறி பணம் பறித்த நபர் கைது
பேலியகொட வணிக வளாகம் மற்றும் கொம்பனித் தெரு பகுதியில் குறைந்த வருமானம் பெறும் நபர்களுக்கு வீடுகளை வழங்குவதாகக் கூறி மக்களிடம் பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு முறைப்பாடுகள் கிடைத்திருந்த நிலையில், பல்வேறு நபர்களிடம் இருந்து 19,663,800 ரூபா மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் யாகின்ன, கஹவத்த பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது
- மத்திய கிழக்கு மோதல்களுக்குப் பிறகு முதல் கச்சா எண்ணெய் கப்பல் இன்று வருகை
- 1 ஆம் வகுப்பு கல்வி சீர்திருத்தங்களைச் செயல்படுத்துவது குறித்து அமைச்சு அறிவிப்பு
- அஹுங்கல்லாவில் துப்பாக்கிச் சூடு
- புத்தாண்டுக்குப் பிறகு கொழும்பு திரும்பும் பயணிகளுக்காக சிறப்புப் பேருந்து சேவை
- தெதுரு ஓயா நீரில் மூழ்கி 8பேர் பலி











