வவுனியாவில் கோர விபத்து பேரூந்து மோட்டார் சைக்கிள் மோதல்
Posted in இலங்கை செய்திகள்

பேருந்து மோதி பாடசாலை மாணவன் பலி

பேருந்து மோதி பாடசாலை மாணவன் பலி

யாழ்.சாவகச்சோி – ஐயாகடை சந்தியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இ.போ.ச பேருந்து மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த மாணவன் சாவக்சோி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிாிழந்துள்ளார்.

18 வயதுடைய பரணிதரன் என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனே உயிரிழந்தவராவார்.

சம்பவம் தொடா்பாக சாவகச்சோி பொலிஸாா் மேற்கொண்டுள்ளனா்

நிறப்பூச்சு தொழிற்சாலையில் தீ விபத்து
Posted in இலங்கை செய்திகள்

நிறப்பூச்சு தொழிற்சாலையில் தீ விபத்து

நிறப்பூச்சு தொழிற்சாலையில் தீ விபத்து

பாணந்துறை சமகி மாவத்தை பகுதியில் நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (29) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ளனர்.

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்பதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

காத்தான்குடியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சஹ்ரான் ஹசீமின் சகோதரியின் கணவர் உட்பட 30 பேரே சந்தேகத்தின் பேரில் இன்று (01) அதிகாலை கைது செய்யப்பட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பாலமுனை பகுதியிலுள்ள பள்ளிவாசல் ஒன்றிற்கு அருகாமையிலுள்ள வீடு ஒன்றில் சம்பவ தினமான நேற்று (29) இரவு சட்டவிரோதமாக உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி

வீடு ஒன்றில் சட்டவிரோதமாக ஒன்று கூடியிருந்த 30 பேர் கைது

எனப்படும் சஹ்ரான் ஹசீமின் சாகோதரியின் கணவர் மற்றும் காத்தான்குடியில் 2017-3-10 திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு பிணையில் வெளிவந்த சஹ்ரானின்

ழுவைச் சேர்ந்த 3 பேர் உட்பட 30 பேர் ஒன்று கூடிய நிலையில் இன்று அதிகாலை 2 மணிக்கு பொலிஸார் சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்கள் சஹ்ரானின் கொள்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஒன்று கூடினார்களா? என்ற சந்தேகத்தின் அடிப்படையில் தேசிய புலனாய்வு பிரிவினர் மற்றும் பொலிசார்

விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றதுடன் விசாரணையின் பின்னர் அவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை

புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை

மாணவர்களுக்காக தயாரிக்கப்பட்ட “பயிற்சி புத்தகம்” தவிர மற்ற பாடப்புத்தகங்களை பாடசாலைக்கு கொண்டு வருவதை குறைக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.

இதன்படி அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கல்விச் செயலாளர் வசந்தா பெரேரா வழிகாட்டுதல்கள் சிலவற்றை வௌியிட்டுள்ளார்.

புத்தகப் பைகளின் எடையை குறைக்க நடவடிக்கை

பாடசாலை புத்தகப் பையின் எடை அதிகரிப்பினால் பாடசாலை மாணவர்களுக்கு முதுகுத்தண்டு பாதிப்புகள் போன்ற பல்வேறு உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

எனவே மாணவர்களின் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பது தொடர்பில் கல்வி அமைச்சின் கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அதன் ஒரு நடவடிக்கையாக தெரிவு செய்யப்பட்ட பாடப்புத்தகங்களை தொகுதிகளாக அச்சிடுவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி

இந்தியாவில் சாலை விபத்தில் 15 பேர் பலி

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலமான மத்தியப் பிரதேசத்தில் வியாழன் அன்று அவர்கள் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஐந்து பெண்கள் உட்பட குறைந்தது 15 பேர் இறந்தனர் மற்றும் சுமார் 20 பேர் காயமடைந்தனர்.

மத்தியப் பிரதேச மாநிலம், மாண்ட்லா மாவட்டத்தில் அமைந்துள்ள பிச்சியா பகுதியில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்தவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது என போலீசார் தெரிவித்தனர்.

வீடியோ

பிரிட்டனில் Sainsbury s 74 1500 பேர் வேலை இழப்பு
Posted in உக்ரைன்

பிரிட்டனில் Sainsbury s 74 1500 பேர் வேலை இழப்பு

பிரிட்டனில் Sainsbury s 74 1500 பேர் வேலை இழப்பு

பிரிட்டனில் Sainsbury s பல்பொருள் அங்காடி கடையானது 74 அடித்து மூடப்படவுள்ளது ,இதனால் 1500 பேர் வேலை இழப்பு ஏற்படுகிறது .

Sainsbury s கடையானது பிரிட்டனில் நிறுவனமாக உள்ளது .

ஆண்டு ஒன்றுக்கு ஒரு பில்லியன் பவுண்டுகளை படுத்த செலவுகளை குறைக்க இந்த கடைகள் அடித்து மூடப்படவுள்ளதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது .

இந்த அறிவிப்பால் ஊழியர்கள் அதிர்ச்சியில் ஊழியர்கள்

வீடியோ

செங்கடலில் எதிரி கப்பல்களை தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் |அலறும் செங்கடல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

செங்கடலில் எதிரி கப்பல்களை தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் |அலறும் செங்கடல்


செங்கடலில் எதிரி கப்பல்களை தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் |அலறும் செங்கடல்

செங்கடலில் எதிரி கப்பல்களை துரத்தி தாக்கிய ஏமன் ஹவுதி போர் படைகள் ,
ஹவுதிகள் இடைவிடாத தாக்குதலினால் அலறும் செங்கடல் .


முடங்கிய கப்பல் போக்குவரத்து .

வீடியோ

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு
Posted in கவிதைகள் பிறேமா(எழில்)

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

பாரதமே இவர்களையாவது பறக்கவிடு

பாரதமே!
இருப்பவர்களையாவது
இறக்கவிடாமல் பறக்கவிடு!
விழிமேல் விழிவைத்து
வேண்டாத நேர்த்தி வைத்து
வழியெங்கும் காத்திருந்த
வயதான தாய்மைக்கு
பழிதீர்த்த பாரதமே
பாரினில் உன்செயல் பாதகமே!

சத்துமா வாங்கிவைத்து
சாந்தன் மகனுக்கொரு
முத்தம் கொடுக்கும்வரை
முகம்காணும் மகிழ்வுவர
சுத்துமாத்து செய்து எப்படியே
செத்துப்போக விட்டுட்டியே!

இளமை கருக கருக
இளகாத உன்குணம்
வழமைக்கு மாறுமென்று
வாசல்வழி பார்த்திருக்க
தனிமைக்கும் முதுமைக்கும்
தண்டனையை கொடுத்திட்டியே!

தப்புச் செய்யாதவரையும்
தண்டனையால் வதைத்து
எப்படித்தான் மனம்வருகுது
எங்கள் வலியில் விளையாட
இப்படித்தான் இனியும் நடக்கும்
இருப்பவர்களையாவது பறக்கவிடு!

-பிறேமா(எழில்)-

பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் பரசூட் படை களத்தில் இருந்து தப்பி ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் பரசூட் படை களத்தில் இருந்து தப்பி ஓட்டம்


பாலஸ்தீன ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் பரசூட் படை களத்தில் இருந்து தப்பி ஓட்டம்

பாலஸ்தீனம் ஹமாஸ் போர் படைகள் தாக்குதல் உச்சம் ,
இஸ்ரேல் பரசூட் படை களத்தில் இருந்து தப்பி ஓட்டம் .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட மூன்று மாத்தில் இரண்டாவது படை விலகல்

வீடியோ

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

சுமந்திரனினுக்கு நெத்தியடி வழங்கிய உயர் நீதிமன்றம்

சுமந்திரனினுக்கு நெத்தியடி வழங்கிய உயர் நீதிமன்றம்

நிகழ்நிலை காப்பு சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட விதம் சட்டத்திற்கு முரணானது என தீர்ப்பளிக்குமாறு கோரி பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி

சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அடிப்படை உரிமை மனுவை விசாரணையின்றி நிராகரிக்க உயர் நீதிமன்றம் இன்று (29) தீர்மானித்துள்ளது.

பிரியந்த ஜயவர்தன, ஷிரான் குணரத்ன மற்றும் அச்சல வெங்கப்புலி ஆகிய மூவரடங்கிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் ஆயத்தால் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றம் முன்வைத்த திருத்தங்கள் அதில் உள்ளடக்கப்படாமை காரணத்தினால் குறித்த சட்டமூலம், சட்டப்பூர்வமாக நிறைவேற்றப்படவில்லை என தீர்ப்பளிக்குமாறு கோரி எம்.ஏ.சுமந்திரன் இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

வீடியோ

விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை|HMS Prince of Wales aircraft carrier
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

செங்கடல் தாக்குதல் பணம் இல்லை விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை|HMS Prince of Wales aircraft carrier


செங்கடல் தாக்குதல் பணம் இல்லை விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை|HMS Prince of Wales aircraft carrier

பணம் இல்லா காரணத்தால் விமான தாங்கி கப்பலை விற்கும் பிரிட்டன் கடற்படை.


பிரிட்டன் ராயல் கடற்படையின் HMS Prince of Wales aircraft carrier ரை விற்பனை செய்யும் நடவடிக்கைக்கு பிரிட்டன் கடற்படை தள்ள பட்டுள்ளது .

செங்கடல் தாக்குதல் எதிரொலியாக இது பார்க்க படுகிறது .

வீடியோ

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை
Posted in இலங்கை செய்திகள்

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் காலி மற்றும் கொழும்பு துறைமுகங்களுக்கு சுற்றுலா மேற்கொள்வதற்காக வந்துள்ளன.

இந்தியாவின் கரையோர பாதுகாப்பு படைப்பிரிவிற்கு சொந்தமான சமர்த் எனும் கடல்சார் கண்காணிப்பு கப்பலும், அபினவ் எனப்படும் அதிவேக கண்காணிப்பு கப்பலும் வந்துள்ளன.

இந்தியாவின் இரண்டு கரையோர பாதுகாப்பு கப்பல்கள் கொழும்பு வருகை

இந்த கப்பல்கள் நேற்று முன்தினம் காலி துறைமுகத்தை வந்தடைந்துள்ளன. இவை மார்ச் முதலாம் திகதி வரை காலியில் தரித்திருக்கவுள்ளன என இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

குறித்த கப்பல்கள் நாட்டிலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, மார்ச் 2 ஆம் திகதி முதல் 5 ஆம் திகதி வரை கொழும்பு துறைமுகத்திற்கு வருகை தரவுள்ளன.

இந்திய கரையோர பாதுகாப்பு கப்பல்கள் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் தீயணைப்பு, சேதங்களைக் கட்டுப்படுத்துதல், சமுத்திர பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பான பயிற்சிகளை வழங்குதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளன

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்
Posted in இலங்கை செய்திகள்

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்

யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர தனியார் பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அத்தோடு யாழ்ப்பாணத்தில் இருந்து வேறு மாவட்டங்களுக்கு சேவையில் ஈடுபடும் பேரூந்துகள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சேவையில் ஈடுபடும் தனியார் பேரூந்து சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் உள்ளூர் தனியார் பேரூந்து சேவைகள் சேவையை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் நொடுந்தூர பேரூந்து சேவைகள் முற்றாக நிறுத்தப்பட்டிருந்தன.

யாழில் தனியார் பேரூந்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தம்

ஆனால் இன்றைய தினம் உள்ளூர் மற்றும் நெடுந்தூர பேரூந்து சேவைகள் அனைத்தும் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிவதாக எமது செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

முறையான பேருந்து தரிப்பிடம் இல்லாததால் நேற்று (28) முதல் தனியார் போக்குவரத்து சேவைகள் இடம்பெறாது என வட இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கம் தலைவர் சி.சிவபரன் நேற்று முன்தினம்(27) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து தெரிவித்திருந்தார்.

இதன் அடிப்படையில் இரண்டாவது நாளாகவும் தனியார் போக்குவரத்து சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.​ை

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை
Posted in இலங்கை செய்திகள்

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

வெலிபென்ன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெலகடியாகொட ஹொரவல, பிரதேசத்தில் கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலைசெய்ய பட்டுள்ளார்.

பலகட்டியகொட பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்தார்.

உயிரிழந்த நபர் பெலகடியாகொட பிரதேசத்தில் பிரதான வீதிக்கு அருகில் நின்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அப்போது இருவரில் ஒருவர் குறித்த நபர் மீது திடீரென கத்தியால் குத்தியுள்ளார்.

பின்னர் கத்தி குத்துக்கு இலக்கான நபர் படுகாயத்துடன் அருகில் உள்ள வீட்டுக்கு ஓடியுள்ளார்.

கத்தியால் குத்தி ஒருவர் வெட்டிக் கொலை

அதன்பின், வீட்டின் முற்றத்தில் விழுந்தவுடன், இருவரும் இறந்தவரின் வயிறு மற்றும் மார்புப் பகுதியில் பலமுறை கத்தியால் குத்தியுள்ளனர்.

இந்த கத்திக்குத்து தாக்குதலில் படுகாயமடைந்தவர் மத்துகம வெத்தவே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

எனினும் குறித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

தாக்குதலுக்கு வந்த இருவர் மோட்டார் சைக்கிளை அப்பகுதியின் பிரதான வீதிக்கு அருகில் கைவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

சம்பவத்தின் பின்னர் கோபமடைந்த பிரதேசவாசிகள் மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வெலிபென்ன பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து
Posted in இலங்கை செய்திகள்

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து கவிழ்ந்து விபத்து

பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தே விபத்திற்கு உள்ளானதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பாடசாலை மாணவர்கள் 24 பேர் உள்ளிட்ட 36 பேர் காயமடைந்துள்ளனர்.

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு
Posted in இலங்கை செய்திகள்

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு

இரண்டு ஆண் இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் பிக்கு ஒருவரை ஹோமாகம தலைமையக பொலிஸார் கைது செய்தனர்

பின்னர் ஹோமாகம நீதவான் நீதிமன்றில் நேற்று (28) ஆஜர்படுத்தப்பட்ட சந்தேகநபரான பிக்கு 05 இலட்சம் ரூபா பெறுமதியான சரீர பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

13 வயதுடைய இரண்டு ஆண் இரட்டையர்களை குறித்த பிக்கு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குற்றம் சாட்டப்பட்ட பிக்கு யந்திரம் மந்திரம் மூலம் நோய்களைக் குணப்படுத்துவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இரட்டையர்களை பாலியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்த பிக்கு

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் இரண்டு சிறுவர்களில் ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுகவீனமடைந்ததையடுத்து பெற்றோர்கள் அவரை பிக்குவிடம் அழைத்து சென்றுள்ளனர்.

பின்னர் பிக்கு, சிறுவனை சில நாட்கள் அங்கேயே வைத்து பூஜை நடத்த வேண்டும் என பெற்றோரிடம் கூறியதாகவும், அதன்படி சிறுவனை அங்கேயே தங்க வைத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பின்னர், இரட்டைர்களில் மற்றையவர் தனது சகோதரர் இல்லாமலேயே நோய்வாய்ப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபர் காரில் வீட்டுக்கு சென்று அந்த சிறுவனையும் அழைத்துச் சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேகநபரான பிக்கு சிறுவர்கள் இருவரையும் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

பின்னர் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேகநபரான பிக்கு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறுவர்கள் தற்போது சிகிச்சைக்களுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in இலங்கை செய்திகள்

கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது

கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை இரகசியமாக கொண்டு வந்த மனைவி ஒருவர் நேற்றைய தினம் (28) கைது செய்யப்பட்டுள்ளார்.

கணவனுக்கு கொடுப்பதற்காக கோழி இறைச்சி பொதி ஒன்று கொண்டு வரப்பட்டிருந்த நிலையில் அதனை சோதனை செய்த போது அதனுள் ஹெரோயின் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை தெரியவந்துள்ளது.

கணவருக்கு ஹெரோயின் போதைப்பொருளை வழங்கிய மனைவி கைது

அதனை அவதானித்த சிறைச்சாலை அதிகாரிகளினால் குறித்த பெண், களுத்துறை வடக்கு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பயாகல முலட்டியன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்திற்கிடமான பெண் தனது 6 வயது மகளுடன் அங்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது 550 மில்லி கிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டதாக சிறைச்சாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்திய அதே இராணுவம்

இஸ்ரேல் மக்கள் மீது தாக்குதல் நடத்திய அதே இராணுவம்

இஸ்ரேல் மக்கள் மீது அதே இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்திய சம்பவம் பதிவாகியுள்ளது .


இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட காலத்தின் முதல் இதுவரை இஸ்ரேலிய மக்கள் மீது அதே இஸ்ரேல் இராணுவம் ஐந்து முறை தாக்குதல் நடத்தியுள்ளதாக நேரடி சாட்சிகள் தெரிவித்துள்ளன .

இந்த தாக்குதலை இஸ்ரேலியா இராணுவம் ஏற்று கொண்டு
அது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருவதாக அறிவித்துள்ளது .

சொந்த மக்களையே தாக்கும் கொடிய இராணுவமாக
இஸ்ரேலிய இராணுவம் வரலாற்றில் பதிவாகியுள்ளது குறிப்பிட தக்கது .

ஹவுதி அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 ஆமி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 ஆமி


ஹவுதி அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 ஆமி

ஹவுதி போர் படைகள் அடியில் மத்திய கிழக்கில் இருந்து தப்பி ஓடும் அமெரிக்காவின் 4000 இராணுவத்தினர் .


செங்கடலில் கப்பல்கள் மீது ஏமன் ஹவுதி படைகள் தாக்குதல் அச்சம் காரணமாக தப்பி ஓட தயாராகி வருகிறது அமெரிக்கா ஆமி ,

வீடியோ

மாணவன் மரணம் குற்றவாளிகள் கைது
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது

லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது

லண்டனில் ரஷ்யா உளவாளிகள் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிட்டன் உளவுத்துறை தெரிவித்துள்ளது .

பால்கெரியா நாட்டை சேர்ந்த ஆறு பேர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

கைதானவர்கள் சிலர் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆயர் படுத்த பட்டுள்ளனர் .

பிரிட்டன் உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து இந்த கைது வேட்டை இடம்பெற்றுள்ளது .

வீடியோ